Jump to content

திருமணத்திற்கு பிறகு பெண்களின் காதல் தற்கொலைகள்


Recommended Posts

திருமணத்திற்கு பிறகுபெண்களின் வாழ்வில் குறுக்கிடும் முகநூல் காதல் அதனால் ஏற்படும் ஏமாற்றம் ... முறிந்த காதலை முகநூலில் புதுப்பித்தலால் வரும் சிக்கல்கள்.இடையில் ஏற்பட்ட காதலில் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் பெண்கள் பற்றிய கலந்துரையாடல். மெய்வெளி தொலைக்காட்சியில் ரஜிதாவும் நானும் பேசியிருக்கிறோம்.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, shanthy said:

திருமணத்திற்கு பிறகுபெண்களின் வாழ்வில் குறுக்கிடும் முகநூல் காதல் அதனால் ஏற்படும் ஏமாற்றம் ... முறிந்த காதலை முகநூலில் புதுப்பித்தலால் வரும் சிக்கல்கள்.இடையில் ஏற்பட்ட காதலில் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் பெண்கள் பற்றிய கலந்துரையாடல். மெய்வெளி தொலைக்காட்சியில் ரஜிதாவும் நானும் பேசியிருக்கிறோம்.
 

 

சாந்தி அக்கா! எனக்கு இதனைப்பற்றி சில கேள்விகள் உண்டு ஒன்று

இன்னொன்று இந்த உரையாடலில் நீங்கள் இன்னமும் சில விடயங்களை அழுத்தி கூறியிருக்கலாம் என நினைக்கிறேன்..

இந்த வாரம் முழுவதும் வேலை அதிகம் என்பதால் நான் நினைப்பதை எழுத முடியுமா தெரியவில்லை, ஆனாலும் இந்த மாதிரியான சம்பவங்களில் அதிகம் பாதிப்படைவது பெண்கள் என்றாலும் கூட இந்த மாதிரியான நிலைக்கு கணவனை தூண்டுவதும் பெண்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

 

Link to comment
Share on other sites

6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

சாந்தி அக்கா! எனக்கு இதனைப்பற்றி சில கேள்விகள் உண்டு ஒன்று

இன்னொன்று இந்த உரையாடலில் நீங்கள் இன்னமும் சில விடயங்களை அழுத்தி கூறியிருக்கலாம் என நினைக்கிறேன்.

இவ்விடயம் பற்றி தொடர்ந்து பேச இருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் குழப்பம் தரும் தலைப்பும்..... நடந்த கலந்துரையாடலும்....

திருமணத்துக்கு பின்னான காதல் என்பதே தவறானது.

அதை செய்யக்கூடாது.... அதனை எப்படி தவிர்ப்பது..... தவிர்க்க, சமுக வளைத்தளங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்.... நடந்து கொள்ளக் கூடாது என்றல்லவா அறிவுரை சொல்ல வேண்டும்.

அது சரியானது போலவும்..... அதற்காக தற்கொலை செய்யப் போகவேண்டியதில்லை என்பதாக அறிவுரை சொல்லவது போலவே எனது சிற்றறிவுக்கு படுகிறது.

வேலையில் இருக்கும் கணவர், வேலை தானே செய்ய முடியும். வீட்டில் கதைக்க முடியாத விடயத்தை வேலையில் எப்படி கதைக்க முடியும்? புரியவில்லையே.....

தவறான விடயம் தொடர்பில், கணவருடன் அல்லது மணைவியுடன் அல்லது பிள்ளைகள் உடன், என்ன, எப்படி பேசுவது?

பழைய காதலன் அல்லது காதலி பயமுறுத்தினால், முதலில் பிளக் பண்ணணும். அந்த சமுகவலை ஊடகத்தில் முறையிட்டாலே, அவர்கள் கணக்கை, முடக்குவர்.  அதையும் மீறீனால்.... சட்டபூர்வமான உதவி பெறலாம்.

முதலில் இதையல்லாவா விளங்கப்படுத்த வேண்டும். 

இருவரும் சேர்ந்தே...... என்ன செய்கிறார்கள் என புரிந்து, சமூக வளைத்தளத்தில் நல்ல காதல் தொடர்பில் இருந்தால், பிறகென்ன, இரண்டு பக்கமும் விவாகரத்து பிரக்கிராசியாரை பார்த்து பிரிந்து, கலியாணம் பணண வேண்டியது தானே.

இதுக்கு தற்கொலை தீர்வல்ல என்று சொல்லாமல்.... குழப்பம் தரும் கருத்தாடல் போலவே தோன்றியது.

குடும்பத்தில் வரும் நாளாந்த பிரச்சணைக்கு தீர்வா அல்லது திருமணத்துக்கு பின்னான, முறறிலும் தவறான, காதலால் விளையும் பிரச்சணைகளுக்கு தீர்வா என்று கடைசி வரை புரியவில்லை.

இது எனது அபிப்பிராயம்.  தவறாகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Nathamuni said:

மிகவும் குழப்பம் தரும் தலைப்பும்..... நடந்த கலந்துரையாடலும்....

திருமணத்துக்கு பின்னான காதல் என்பதே தவறானது.

அதை செய்யக்கூடாது.... அதனை எப்படி தவிர்ப்பது..... தவிர்க்க, சமுக வளைத்தளங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்.... நடந்து கொள்ளக் கூடாது என்றல்லவா அறிவுரை சொல்ல வேண்டும்.

அது சரியானது போலவும்..... அதற்காக தற்கொலை செய்யப் போகவேண்டியதில்லை என்பதாக அறிவுரை சொல்லவது போலவே எனது சிற்றறிவுக்கு படுகிறது.

வேலையில் இருக்கும் கணவர், வேலை தானே செய்ய முடியும். வீட்டில் கதைக்க முடியாத விடயத்தை வேலையில் எப்படி கதைக்க முடியும்? புரியவில்லையே.....

தவறான விடயம் தொடர்பில், கணவருடன் அல்லது மணைவியுடன் அல்லது பிள்ளைகள் உடன், என்ன, எப்படி பேசுவது?

பழைய காதலன் அல்லது காதலி பயமுறுத்தினால், முதலில் பிளக் பண்ணணும். அந்த சமுகவலை ஊடகத்தில் முறையிட்டாலே, அவர்கள் கணக்கை, முடக்குவர்.  அதையும் மீறீனால்.... சட்டபூர்வமான உதவி பெறலாம்.

முதலில் இதையல்லாவா விளங்கப்படுத்த வேண்டும். 

இருவரும் சேர்ந்தே...... என்ன செய்கிறார்கள் என புரிந்து, சமூக வளைத்தளத்தில் நல்ல காதல் தொடர்பில் இருந்தால், பிறகென்ன, இரண்டு பக்கமும் விவாகரத்து பிரக்கிராசியாரை பார்த்து பிரிந்து, கலியாணம் பணண வேண்டியது தானே.

இதுக்கு தற்கொலை தீர்வல்ல என்று சொல்லாமல்.... குழப்பம் தரும் கருத்தாடல் போலவே தோன்றியது.

குடும்பத்தில் வரும் நாளாந்த பிரச்சணைக்கு தீர்வா அல்லது திருமணத்துக்கு பின்னான, முறறிலும் தவறான, காதலால் விளையும் பிரச்சணைகளுக்கு தீர்வா என்று கடைசி வரை புரியவில்லை.

இது எனது அபிப்பிராயம்.  தவறாகவும் இருக்கலாம்.

வெல் சேய்ட்.. இன்னொரு காதல் செய்ய விருப்பம் இருந்தால் யாரையும் ஏமாற்றாமல் கெளரவமாக விவாகரத்து செய்துவிட்டு தமக்கு பிடித்த வாழ்க்கையை வாழலாம்.. அதுதான் நேர்மையானது.. அதைத்தான் சொல்லிக்கொடுக்கவேணும்.. இல்லை இரண்டுகால் தோணி என்றால் பிள்ளைகள் உட்பட அந்தகுடும்பத்தோடு சம்பந்தப்பட்ட எல்லோர் நிம்மதியும் போய்விடும்..

Link to comment
Share on other sites

6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆனாலும் இந்த மாதிரியான சம்பவங்களில் அதிகம் பாதிப்படைவது பெண்கள் என்றாலும் கூட இந்த மாதிரியான நிலைக்கு கணவனை தூண்டுவதும் பெண்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

கணவனை இந்த மாதிரி நிலைக்கு தூண்டுவது என்பது பற்றி விளக்கமாக சொல்லுவீங்களோ?

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

திருமணத்துக்கு பின்னான காதல் என்பதே தவறானது.

அதை செய்யக்கூடாது.... அதனை எப்படி தவிர்ப்பது..... தவிர்க்க, சமுக வளைத்தளங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்.... நடந்து கொள்ளக் கூடாது என்றல்லவா அறிவுரை சொல்ல வேண்டும்.

அது சரியானது போலவும்..... அதற்காக தற்கொலை செய்யப் போகவேண்டியதில்லை என்பதாக அறிவுரை சொல்லவது போலவே எனது சிற்றறிவுக்கு படுகிறது.

தவறு அல்ல அது ஒரு தடுமாற்றம். அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு உறவு வந்து அதிலிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாக்க வேண்டும். அவர்களை குற்றவாளிகள் என்று நாம் ஒதுக்காமல் அவர்களை வாழ விட வேண்டும். 

இப்படி ஒருவர் தடுமாறினால் அதை பெரும் குற்றமாக நான் கருதமாட்டேன். 

இவ்விடயம் பற்றி கருத்தாடுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில்.

இந்த வீடியோவை நான் விளங்கி கொண்ட விதத்துக்கும், நாதமும் ஓணாண்டியாரும் விளங்கி கொண்ட விதத்துக்கும் வேறுபாடு உண்டென நினைக்கிறேன்.

ஆனால் இதை நெறியாளரும் சாந்தி அக்காவும் இன்னும் கொஞ்சம் தெளிவாக விளங்கபடுத்தி இருக்கலாம்.

திருமணத்துக்கு பின்னான காதல்(?) இல்லை தடுமாற்றம் என்பதே சரி, தவறானதுதான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. திருமண பந்தத்தில் இருந்தபடி வேறு உறவை வளர்ப்பது நம்பிக்கை சம்பந்தபட்ட விடயம்.

ஒரு குடும்பத்தில் எந்த உறவும் பரஸ்பரம் நம்பிக்கை கேடு வராமல் இருக்க வேண்டும் என்பது அடிப்படை.

ஆனால் முறைதவறிய காதலை செய்யுங்கோ ஆனால் பாதுகாப்பாக செய்யுங்கோ என இங்கே சாந்தி அக்காவோ நெறியாளரோ சொல்லவில்லை.

என் பார்வையில், இப்படியான தடுமாற்றம் எமது சமுகத்தில் நிகழாமல் தடுக்க இது தவறு (நாதமுனி சொன்னது போல்) என்பதை மட்டும் சொல்லுவதை விட, ஓணாண்டி சொல்வது போல் கண்ணியமாக பிரிந்து போங்கள் என மட்டும் சொல்வதைவிட, இவற்றோடு சேர்த்து இந்த “தற்காலிக தடுமாற்றத்தில்” இருந்து மீள்வது எப்படி, என்ன வகையில் ஆபத்துக்களை எதிர்கொள்ளலாம் என்பதை சொல்வதும் உதவிகளுக்கு signpost பண்ணுவதும் வினைதிறனா இருக்கும்.

ஒரு உதாரணம் - எயிட்சை கட்டுப்படுத்த ஒருவரோடு மட்டும் உறவு வையுங்கள் என்பதே மிக சரியான ஆலோசனை. ஆனாலும் அடுத்த வழியால் (alternative) அட்லீஸ்ட் பாதுகாப்பு சாதனங்களையாவது பாவியுங்கள் என கூறி அதை இலவசமாகவும் கொடுப்பது போலவே இதுவும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, shanthy said:

தவறு அல்ல அது ஒரு தடுமாற்றம். அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு உறவு வந்து அதிலிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாக்க வேண்டும். அவர்களை குற்றவாளிகள் என்று நாம் ஒதுக்காமல் அவர்களை வாழ விட வேண்டும். 

இப்படி ஒருவர் தடுமாறினால் அதை பெரும் குற்றமாக நான் கருதமாட்டேன். 

இவ்விடயம் பற்றி கருத்தாடுவோம்.

நீஙகள் என்ன கருதுகிறீர்கள் என்பதல்ல இங்கே முக்கியமான விடயம்.

எது சரி, எது பிழை என்பதனை புரிந்த நிலையிலே சரியான ஆலோசணை தர முடியும்.

இங்கே, சிற்றிசன் அட்வைஸ் பீரோ எனும் அமைப்புக்கு முதலில் செல்ல வேண்டும். அவர்கள் சரியான ஆலோசணை தரக்கூடியவர்களை காட்டுவார்கள்.

ஆலோசணை தரக்கூடியவர், அதற்கான பயிற்சி மட்டுமல்ல, காப்புறுதியும், தேவையான அனுமதிப்பத்திரமும் வைத்திருப்பர்.

ஏனெனில், இந்த கலந்துரையாடல், குழப்பம் தந்தது.

தனிப்பட்ட ரீதியில் யாரையும் விமரசிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான ஒரு பிரச்சினையைப் பேசியிருக்கிறார் சாந்தி. மேலே ஓணாண்டியும், நாதமும் "சம்பவத்தில்" தங்கி நின்று விட்டார்களென நினைக்கிறேன் - அதனால் அந்தக் கருத்துக்கள். ஆனால் சாந்தி கலந்துரையாடியிருப்பது பெரும்பாலும் சம்பவம் நடந்த பின்னர் உயிரிழப்பு அவலங்கள் ஏற்படாமல் என்ன செய்வதென்பதைப் பற்றியதாக இருக்கிறது! மொழிப் பரிச்சயம் இருக்கும் நாடுகளிலேயே இப்படியானவர்கள் உதவிகள் பெற முடியாத நிலை இருக்கும் போது, ஜேர்மன், ஸ்கண்டினேவிய நாடுகளில் வாழ்வோரின் நிலை இன்னும் மோசமாகத் தான் இருக்குமென நினைக்கிறேன். உங்கள் பணி இன்றியமையாதது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

திருமணத்துக்கு பின்னான காதல் என்பதே தவறானது.

அதை செய்யக்கூடாது.... அதனை எப்படி தவிர்ப்பது..... தவிர்க்க, சமுக வளைத்தளங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்.... நடந்து கொள்ளக் கூடாது என்றல்லவா அறிவுரை சொல்ல வேண்டும்.

மிகச்சரியான கருத்து. 👍🏽

Link to comment
Share on other sites

14 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வெல் சேய்ட்.. இன்னொரு காதல் செய்ய விருப்பம் இருந்தால் யாரையும் ஏமாற்றாமல் கெளரவமாக விவாகரத்து செய்துவிட்டு தமக்கு பிடித்த வாழ்க்கையை வாழலாம்.. அதுதான் நேர்மையானது.. அதைத்தான் சொல்லிக்கொடுக்கவேணும்.. இல்லை இரண்டுகால் தோணி என்றால் பிள்ளைகள் உட்பட அந்தகுடும்பத்தோடு சம்பந்தப்பட்ட எல்லோர் நிம்மதியும் போய்விடும்..

இன்னொரு காதலை யாரும் திட்டமிட்டு செய்வதில்லை. சூழ்நிலை மனங்களில் இன்னொரு ஈர்ப்பினுள் வீழ்த்திவிடுகிறது. 

பலர் ஒளித்து நடிப்பதை சிலர் வெளிப்படையாக செய்கிறார்கள். வெளிப்படையாக இருப்பவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவது. 

இதற்கு நிரந்தர தீர்வு வராது. ஆனால் goshan_che சொன்ன எய்ட்ஸ் சிறந்த உதாரணம். 

நாம் இதுபற்றி பேசுவதால் யாரோ ஒருவரேனும் பயனடைவார். 

Link to comment
Share on other sites

இவ்வாறான வெளிப்படையான உரையாடலே சந்தர்பப சூழ்நிலைகளால் தவறிழைப்பவர்களுக்கான ஒரு விழிப்புணர்வுதான்.ஆகவே வரவேற்கப்பட வேண்டிய ஒரு சமூக விழிப்புணர்வு உரையாடல் இது. 

எமது விருப்பங்களுக்கப்பால் இவ்வாறான விடயங்கள் நாம் வாழும் சமுதாயத்தில் இன்று மட்டுமல்ல எல்லா காலங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்பத்தில் நடைபெற்ற   ஓரு சிறிய தவறுக்காக அவர்களது வாழ்க்கை பலியாக கூடாது. அதிலிருந்து அவர்கள் மீண்டுவந்து சமூகத்தில் இணைந்து இயல்பான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதையே இந்த உரையாடல் வலியுறுத்துகிறது. ஆகவே இவ்வாறாற உரையாடல்கள் சமுகத்திற்கு தேவையானது.

இப்படியான சம்பவங்கள் நடைபெற்று அவை குடும்பங்களில் கொலை, தற்கொலை போன்ற விடயங்கள் நடக்கும் போது அதை பரிகசிக்கும் வசன நடையுடன் கொசிப் செய்தியாக  இங்கு  பல முறை இணைக்கப்பட்டுள்ளது. அதை வாசித்து நக்கல் நளினங்களும் பகிரப்பட்ட சம்பவங்களும் அவை நிர்வாகத்தால் நீக்கப்படவேண்டிய நிலையும் ஏற்பட்டது.  ஆனால் இது அப்படியானதல்ல.

 பாதிக்கப்பட்ட மனிதர்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர விரும்பும் சமூக பார்வையுடனான உரையாடல்.  

அத்துடன் இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிடவேண்டும் இப்படியான தவறுகள் சமூகத்தில் நடைபெறும் போது ஆண்/ பெண் என்ற இரு சாராரும் சம அளவில் இதுல் பங்கு பெற்றாலும் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லை. மிக விரைவாக அவர்களது துணையால்  மன்னிக்கப்பட்டு எதுவும் நடக்காதது போல் இயல்பு வாழ்ககையை தமது குடும்பத்துடன் நடத்துவதை கண்டிருக்கிறேன். அதற்கு சமூகமும் உதவி செய்கிறது. தவறில் சம பங்காளியான ஒருவர் அதை மறந்து குற்றமனப்பான்மையற்று வாழும் போது மற்றவர் அத்தவறுக்காக தனது வாழ்ககையை பலியாக்கவேண்ட நிலையை சமூகம் தான் உருவாக்கி உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்துக்கு முன்பான காதலும் பின்பான காதலும் ஒன்றே என்பது எனது கருத்து காரணம் எதிர்பாலினம் அன்பான விசாரிப்புகளாலேயே மற்றவரை வசீகரித்துவிடலாம்.

 அண்மையில் ஒரு பெண் சமூக ஊடகமொன்றில் கூறியிருந்தார் எந்தப்பெண்ணையும் பார்த்து (அவர் திருமணமாகியிருக்கிறார இல்லையா என்பது வேறுவிடையம்) நீங்கள் அழகாக இருக்கிறேர்கள் எனக்கூறினாலே  அப்பெண் மறுபடியும் அந்த ஆண்மகனைப் ஓரக்கண்ணாலேயோ அல்லது தூரப்பார்வையிலோ பார்ப்பாள் அல்லது அவதானிப்பாள் என.

தமிழ் சமூகத்தில் "கிணத்துத் தண்ணியை வெள்ளமா கொண்டுபோய்விடப்போகிறது" எனும் மனப்பாண்மை ஆண்களிடம் உண்டு என்னதான் கஸ்டப்பட்டுக் காதலித்து மனம் உருகி மன்றாடித் திருமணம் முடித்தாலும் திருமணத்தின் பின்பான வாழ்கை என்பது பெண்களுக்கு நரகம்தான் இந்தச்சந்தர்ப்பத்தைத்தான் பிற ஆண்மகன் தனதாக்கிக்கொள்கிறான். இதில் அவன் திருமணமானவனாக இருந்தாலும் அவனது மனைவியும் அவனுக்கு நெருக்கமானவளாக அவன் கருதமாட்டான். இதுவே தப்புக்கு வழிவகுக்கிறது.

Link to comment
Share on other sites

3 hours ago, tulpen said:

 

அத்துடன் இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிடவேண்டும் இப்படியான தவறுகள் சமூகத்தில் நடைபெறும் போது ஆண்/ பெண் என்ற இரு சாராரும் சம அளவில் இதுல் பங்கு பெற்றாலும் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லை. மிக விரைவாக அவர்களது துணையால்  மன்னிக்கப்பட்டு எதுவும் நடக்காதது போல் இயல்பு வாழ்ககையை தமது குடும்பத்துடன் நடத்துவதை கண்டிருக்கிறேன். அதற்கு சமூகமும் உதவி செய்கிறது. தவறில் சம பங்காளியான ஒருவர் அதை மறந்து குற்றமனப்பான்மையற்று வாழும் போது மற்றவர் அத்தவறுக்காக தனது வாழ்ககையை பலியாக்கவேண்ட நிலையை சமூகம் தான் உருவாக்கி உள்ளது. 

இந்த திரியில் இக் கருத்தைத் தான் நான் எழுத இருந்தேன், நீங்கள் எழுதி விட்டீர்கள். 

எம் சமூகத்தில் ஆண் ஒருவர் திருமணத்துக்கு அப்பால் இவ்வாறான உறவில் ஈடுபட்டு அது தெரிய வந்தால் மிக சிறிய அளவில் மட்டுமே ஆணுக்கு பாதிப்பு வருகின்றது. எந்த ஆணும் இதனால் தற்கொலை செய்வதோ வாழ்க்கையை தொலைப்பதோ கிடையாது. அத்துடன் அந்த ஆணை ஏதோ பெரிய காரியம் ஒன்றை செய்த வீரன் போல போற்றுவதற்கும் அவ் ஆணிற்கு சில நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் அதே ஆணுடன் திருமணத்துக்கு அப்பால் உறவு வைத்த பெண்ணுக்குத்தான் எல்லாப் பிரச்சனைகளும் எல்லா மட்டத்தில் இருந்தும் வந்து மன அழுத்தத்தை அதிகரிக்க வைக்கும்.

திருமணத்துக்கு அப்பாலான காதல் / உறவு கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஓணாண்டி சொல்லியது போல, பிரிந்து போய் தனக்கான ஒன்றை தேடிக் கொள்வதே சரியான வழி. ஆனால் திருமணம் செய்த பின் பிரிவது என்பது எந்தளவுக்கு வலியானது என்பதை என் நண்பர்கள் சிலரது வாழ்வில் நான் கண்டுள்ளேன். சிலர் அந்த வலியை சந்திக்க விருப்பின்றி குறுக்கு வழியில் இவ்வாறான திருமணத்துக்கு அப்பாலான உறவுகளை வைத்துக் கொள்ள முயல்கின்றார்கள்.

திருமணத்துக்கு அப்பாலான உறவு தவறானது என்று வெறும் தட்டையாக சொல்லிவிட்டு அகலாமல். அவ்வாறான உறவில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைப்பவர்கள் அதில் இருந்து மீள்வதற்கான முறைகளை உரையாடும் சமூக பிரக்ஞை உள்ள ஒரு உரையாடலாகவே இதை பார்க்கின்றேன். 

நல்ல முயற்சி இது சாந்தி.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிகரட் பெட்டியில் புகைப்பதால் புற்றுநோய் வரும் என்று பெரிய எழுத்துக்களில் போட்டிருந்தும் அதையும் பார்த்துவிட்டு புகைக்காதே என்று சொல்லும் டாக்ரரில் இருந்து கூடுதலானோர் 

பெட்டியில் எழுதியதை ஒரு பொருட்டாக எடுப்பதில்லை.

இந்திய சினிமாபாணியில் குடிக்கும் போது குடி உடல் நலத்துக்கு கேடு என்று போட்டுடுட்டு குடிப்பது போல இருக்கு.

திருடனா பார்த்து திருந்தாவிட்டா திருட்டை ஒழிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, shanthy said:

கணவனை இந்த மாதிரி நிலைக்கு தூண்டுவது என்பது பற்றி விளக்கமாக சொல்லுவீங்களோ?

57-D9-BE30-A066-47-C1-9475-9304-EBB78-FC
 

Insecure Women.

ஒரு insecure பெண் தன்மீதும் தன் எண்ணங்கள்/பண்புகள் மீதும் நம்பிக்கை இல்லாத ஒரு பெண், அவள் தன் வாழ்க்கையின் மற்ற அம்சங்களைக் கட்டுப்படுத்த ஆசைப்படுவாள். அவளுடைய வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சம் அவளுடைய துணையாக இருக்கும். பெரும்பாலும் இந்த மாதிரியான பெண்கள் தங்களது துணை கொண்டு பிள்ளைகள் வரை அதீத கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். இவர்களுடைய துணைக்கு தனிமனித சுதந்திரமே இருக்காது..தனித்த விருப்பு வெறுப்புகள் தொடக்கம் சம்பளம் வரை இந்த மாதிரியான பெண்களின் கட்டுப்பாட்டிலேதான் இருக்கும். இவற்றை மீறும் பட்சத்தில் குடும்பத்தில் உள்ளவர்களை குற்றவாளிகளாக காட்டியும் தன்னை பாதிக்கப்பட்டவளாக காட்டியும் மற்றவர்களின் அனுதாபத்தை பெறுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். 

ஆரம்பத்தில் இவர்களது துணை இவர்களை அனுசரித்தாலும் உறவில் விரிசல் வந்துவிடும், நாளடைவில் இவர்களது துணை ஒன்றில் தற்கொலை
செய்வார்கள் அல்லது வீட்டை விட்டு வெளியேறியோ அல்லது ஒரு affairலோ தங்களது வாழ்க்கையை கழிப்பார்கள்.. 

இந்த மாதிரியான பெண்களைப்பற்றி அதிகம் கேள்விப்படமாட்டோம் காரணம், இவர்களால் பாதிக்கப்படும் ஆண்கள் தங்கள் கவலைகளை வெளியே கூறுவதில்லை ஏனெனில் அதற்கு அவர்களது சுய கெளரவம் இடம் கொடுக்காது. 

இந்த insecure மனநிலை உடைய பெண்களை கவனிப்பீர்களேயானால் பெரும்பாலும் பணம், சமூக அந்தஸ்து போன்ற விடயங்களே மனிதர்களை அளவிடும் அளவுகோலாக இருக்கும். பணம், சமூக அந்தஸ்து இவற்றை எப்பாடுபட்டாவது அடைய நினைப்பார்கள், அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை குடும்பத்தின் சந்தோஷம், நிம்மதி. இவர்களது துணையும் தன் நிம்மதி சந்தோஷத்திற்காக வெளியே ஒரு உறவை நாடும்.. இவர்களை மனதில் வைத்தே நான் உங்களுக்கு எழுதினேன். 

ஆகையால் இந்த மாதிரியான பெண்களின் நிலையை ஆரம்பத்திலேயே உளவியல் ஆலோசகர்களின் உதவியுடன் குணப்படுத்தினால், அவர்களது குடும்பமும் மற்றவர்களும் பாதிக்கப்படமாட்டார்கள்.. 

மேலே நான் கூறிய உதாரணம் தனித்து insecure மனநிலை உடைய பெண்களின் துணைக்கு மட்டுமே.. 

இரண்டாவது வகை பெண்கள், 
சில பெண்கள் திருமணம் முடிந்து குழந்தை பெற்றவுடன் தன்னையும் கவனிப்பதில்லை, தன் துணையையும் கவனிப்பதில்லை. இது பொதுவாக ஆண்கள் வைக்கும் குற்றச்சாட்டு. இந்த நிலையிலும் ஆண் இன்னொரு உறவை தற்காலிகமாக தேட முனையலாம். இந்த ஆண்களைப்பற்றி மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.. ஏனெனில் இவர்களைப்போன்றவர்களுக்கு பெண்கள் தனியே சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி.. வேறு எந்த valueம் இருக்காது.. 

இதனால்தான் பெண்கள் குழந்தை பெற்றபின்பும் தங்களது ஆரோக்கியத்திலும் மற்றைய விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.. 

மூன்றாவது, என்னைப்பொறுத்தவரை, பெண்கள் எல்லாவற்றிற்கும் ஆண்களின் முகவாயை பார்ப்பதை குறைக்கவேண்டும்.. எதிர்பார்ப்புகள் அதிகமானால் விட்டுக்கொடுப்புகளும்/sacrificeம் அதிகரிக்கும். பின்பு குறை கூறுவதால் பயனில்லை. 

அதேசமயம் ஒரு கணவன் தன் மனைவி, குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்காமல் முழு நேரமும் தன் வேலை, தன்னைப்பற்றி மட்டும் சிந்திக்கும் இடங்களில்.. மனைவி சில நேரங்களில் தன்னிடம் அன்பாக கதைக்கும் ஒருவருடன் உறவை நாடலாம்.. பணம் வாழ்க்கைக்கு முக்கியம் ஆனால் தன்னை நம்பி ஊர்விட்டு தேசவிட்டு வந்த துணைக்கு சிறிதளவு நேரத்தை ஒதுக்காமல் பணம் மட்டுமே முக்கியம் என 24/7 வேலை செய்துவிட்டு வந்து மனைவிக்கு என்ன தேவை என்பதை அறியாமல் தன் தேவையை மட்டும் பார்த்துவிட்டு உறங்கும் கணவனிடம் இருந்து நாளடைவில் மனைவி ஒதுங்கலாம்.. அப்பொழுது தன்னிடம் அன்பாக பேசும் நபரிடம் உறவை ஏற்படுத்துகிறார்கள்.. இதில் தவறு யாருடையது!

சில கணவர் இருக்கிறார்கள் “ நான் வளர்ந்த விதம் இப்படி, எனது வட்டம் இப்படி, இதை மீறி நான் வரமாட்டேன்” என்பவர்கள், நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க விருப்பமில்லாமல் தானும் வாழாமல் தன் மனைவி, பிள்ளைகளையும் வாழவிடாமல்.. இவர்களின் துனையும் விவாகரத்தும் எடுக்க முடியாமல் சில சமயங்களில் இன்னொரு உறவை நாடலாம்.. 

இயல்பாகவே மனைவி இருக்கும் பொழுதே மற்றைய பெண்களை நோட்டம் விட்டு கைகூடினால் காரியம் நடத்தும் கணவர்மார்.. sex drive அதிகம் உள்ள துணைகள் கூட திருப்தி ஏற்படாதவிடத்து ஒருவருக்கொருவர்  ஏமாற்றலாம்..ஏனெனில் ஆணோ பெண்ணோ இருவரும் உணர்வுகளை கொண்டவர்கள்.. 

எந்த உறவிற்கும் அடிப்படை பரஸ்பர நம்பிக்கை, அன்னியோன்யம், இது கலையும் இடத்து போலியான வாழ்க்கை வாழ்வதில் அர்த்தமில்லை. சமூகத்தின் மீதான பயம், பிள்ளைகளின் எதிர்காலம் என்பதற்காக இன்னொருவரின் வாழ்க்கையை கலைப்பது சரியல்ல. 

அதே போல காதல் என்ற உணர்வு எந்த வயதிலும் வரலாம், கட்டாயம் அது காமம் சார்ந்துதான் இருக்கவேண்டும் என்பதுமில்லை..அந்த உணர்வு உண்மையானது என்றால் அவரவர் பாதையில் போவதே சிறந்தது.. 


ஆனால் இதில் துல்பன் அண்ணா கூறியது போல கணவனின் பிழைகளை மன்னித்து ஏற்கும் மனைவி, இந்த குற்றத்திற்கு முதல் காரணம் எனக்கூறுவது  தனது கணவன் தேடிப் போன பெண்னைத்தான்.. 
அதே சமயம் மனைவியை கணவனால் ஏற்கமுடியாதவாறு சமூத்தின் வாய்கள் தடுக்கிறது.. அதனால்தான் வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியால் பெண்ணை சார்ந்த குடும்பம் கலைகிறது.. பெண்களையும் கற்பு அவர்களுக்கு மட்டும்தான் என்ற எண்ணத்தை ஊட்டி தன்னைத்தானே நொந்து உருக்குலைந்து போகவும் தற்கொலையை நாடவும் இந்த சமூகமே தூண்டுகிறது.. 

இதில் மாற்றம் வரவேண்டும், இந்த உறவில் இருவருக்குமே சம பங்கு உண்டு என்பதால் இருவரையும் ஒரே விதமாகத்தான் நடத்த வேண்டும் என நான் நினைப்பதுண்டு. 

ஆகையால் பிரச்சனைகள், விரிசல்கள் வருமிடத்து உரிய ஆலோசனைகளை நாடினால் இரு குடும்பங்களின் வாழ்க்கை தடங்கலில்லாமல் பயணிக்கும். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

80ம் காலப்பகுதிகளுக்கு பின்னரான நம்வர் வாழ்க்கையில்....

ஐந்து வருடம்  தனித்தனியே வாழ்ந்து காதல் வாழ்க்கை.....
பின்னர்..
மூன்று வருடம் சேர்ந்திருந்து பரீட்சார்த்த/புரிந்துணர்வு வாழ்க்கை
அடுத்தது...
திருமண வாழ்க்கை இரு வருடம்...அந்த இரு வருடத்தில் ஒரு பிள்ளை இல்லையேல் பல கடினத்தின் பின்(இஞ்சைதான் சலிப்புத்தன்மை முளைக்குது)இரண்டாவது பிள்ளை பிரசன்னம்.இங்கே தளிர் விடுகின்றது திருமணத்திற்கு பின்னரான இன்னொரு காதல்.மன்னிக்கவும் அது காதல் அல்ல மேலைத்தேய சிஸ்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்திற்கு பின்னான காதலை அலசுவதைகாட்டிலும், அந்த காதலுக்கான காரணங்களை ஆராய்வது பொருத்தமாயிருக்குமென்று நினைக்கிறேன்.

புலம்பெயர் சமூக சிக்கல் பற்றி மட்டுமே பிரதானமாக பார்க்க நினைக்கிறேன், தாயகத்திலேற்படும் குடும்ப பாதிப்புக்களுக்கும் இதில் பல பொருந்தும் .

பல காரணங்கள் முறையற்ற உறவுக்கு வழி வகுக்கின்றன அதில் பிரதானமானவை 

* 24 மணிநேரமும் வேலை வேலை என்று அலைவது

* நீண்ட நாட்களாக உடல் உளவியல் ரீதியாக மனைவியுடன் நெருங்கியிருக்காதது

* எதுக்கெடுத்தாலும் எரிந்து விழுவது, தான் மட்டும் ஊர் சுற்றிக்கொண்டு துணையை தனிமை சிறையில் விட்டுவிடுவது

* ஏற்கனவே ஒருவரிடம் மனசை கொடுத்த ஒரு பெண்ணை பெற்றோர்கள் வற்புறுத்தி இன்னொருவனுக்கு கட்டி வைப்பது

* பொருத்தம் உடலிலும் வேண்டும் என்று கண்ணதாசன் சொன்னதுபோல ,பணம் விசா திமிரில் வழுக்கை விழுந்த தலையுடன் பியர் அடிச்சு வீங்கிய வண்டியை தள்ளிக்கொண்டு  வயசு வித்தியாசம் பார்க்காமல் தோற்றத்திற்கு எந்தவகையிலும் பொருத்தமில்லாத பெண்களை ஊருக்கு போய் திருமணம் செய்து கூட்டி வருவது,

இப்படி பல உண்டு.

எனக்கு தெரிந்த பலர் வெளிப்படையாகவே மனைவியுடன் தாம்பத்திய உறவு வைத்து மூன்று மாசம் ஆகுது ஒரே பிஸி என்று பேசுவதை கேட்டிருக்கிறேன்.

வேலை முடிந்து வந்தால் ஆசையாய் சில வார்த்தை பேசுவதில்லை காரை எடுத்துக்கொண்டு ஓடிபோய் நண்பர்கள் வட்டத்துடன் சேர்ந்து தண்ணியடித்து காட்ஸ் விளையாடி ஜாலியாக பொழுதை கழிக்க , எப்போதும் சமைத்து வைத்துவிட்டு டிவியை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு ஒரு மாறுதலாக சமூக வலைதளங்களில் இறங்க தூண்டுகிறது, குழப்பங்களின் ஆரம்பமே அங்குதான் விதைக்கபடுகிறது.

புறதோற்றத்தில் வசீகரமான குலுங்க குலுங்க சிரிக்க வைக்க பேசும் நகைச்சுவை உணர்வுள்ள ஆண்கள் மிக எளிதாக திருமணம் ஆன ஆகாத பெண்களை ஈர்த்துவிடுகிறார்கள், அது காலபோக்கில் அவர்கள் மீது தீரா காதலாகிவிடுகிறது.

விவாகரத்து பெறாமலே காதலை வளர்ப்பதற்கு பிரதான காரணமே அவர்களின் பிள்ளைகள்தான் , பிள்ளைகளை விட்டு பிரிய விருப்பமின்றியும், காதலில் விழுத்திய ஆண்கள் பிள்ளைகளுடன் இவர்களை ஏற்க தயாராக இல்லாமையும் காரணமாகிறது.

பெரும்பாலும் முறையற்ற காதலில் குடும்ப பெண்களை விழுத்தும் ஆண்களில் பலரும் ஏற்கனவே கல்யாணமாகி மனைவி பிள்ளைகளுடன் வாழ்பவர்கள்தான், அவர்கள் இவர்களை விவாகரத்து செய்ய சொல்லி கேட்கமுடியாது ஏனென்றால் அவர்களும் விவாகரத்து செய்து மனைவி பிள்ளைகளை பிரிந்து வரவேண்டும்.

இந்த முறையற்ற காதலில் ஈடுபடும் ஆண்களில் பலருக்கு தங்களின் குடும்பத்தை பத்திரமாக வைத்துக்கொண்டு அடுத்தவன் குடும்பத்தை நாசமாக்கவேண்டும் என்பதே இலக்கு.

குடும்ப பெண்களை காதலில் விழுத்தும் திருமணமாகாத ஆண்களில் பலர் குழந்தைகளுடன் கூட்டிபோய் ஒரு பெண்ணுடன் வாழ தயாகாரவில்லை , கிடைத்தவரை லாபம் என்று திருமண பந்தத்திற்கு புறம்பான முறையில் உறவை ஏற்படுத்தவே விரும்பிகிறார்கள், .

அதை பெருமையாக நண்பர்களிடம் சொல்லிக்கொள்ளவும் செய்கிறார்கள், சிக்கல் என்று வரும்போது காய் வெட்டிவிட்டு சிறிலங்காவில் போய்  எவரையும் காதலிக்காத பெண்ணை நன்றாக விசாரித்து கல்யாணம் செய்து கம்பீரமாக நடமாடுகிறார்கள். அவரால் பாதிக்கபட்ட பெண்கள் மட்டும் கணவன் குழந்தைகள் அனைத்தையும் இழந்து கையறு நிலையில் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்.

சிலர் இந்த பக்கமும் போக முடியாமல் அந்த பக்கமும் போகமுடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.அதுவும் குடும்ப பெண்கள் விவாகரத்து பெறாமல் முறையற்ற காதலை தொடர காரணம்

சமூக வலைதளங்கள் ஆரம்பிக்காத அந்தநாட்களில் பொது விழாக்களில் வெறும் பார்வையுடன் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்பட்ட முறையற்ற காதல் தூதுகள் இந்நாட்களில் ஒரு நாளிலேயே நேரடி உறவை ஏற்படுத்திக்கொள்ள உறுதுணையாகிவிட்டது.

 குடும்ப உறவில் உடலியல் உணர்வியல் உளவியல் ரீதியில் நெருக்கத்தை பேணாமல் விடுவது,பொருத்தமற்ற துணை ஜோடி பொருத்தங்கள்கூட  முறையற்ற காதலை தேட பிரதான வடிகாலாகிறது பல பெண்கள் விழாக்களுக்கு குடும்பமாய் போகும்போது பிற ஜோடிகள் முன்னர் கூனி குறுகுவதை பார்த்திருக்கிறேன்.

காரியங்கள் நடப்பதற்கு காரணங்கள் கட்டாயம் இருக்கும் காரணங்களுக்கு தீர்வு கண்டால் காரியங்களின் அளவு குறைந்து கொண்டு போகும் என்றே கருதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

திருமணத்திற்கு பின்னரான இன்னொரு காதல்.மன்னிக்கவும் அது காதல் அல்ல மேலைத்தேய சிஸ்டம்.

அவர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல், துரோகம் செய்யாமல் கெளரவமாக விவாகரத்து பெற்று பிரிந்து தமக்கு பிடித்தமான வாழ்கையை வாழுகின்றனர்.

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

80ம் காலப்பகுதிகளுக்கு பின்னரான நம்வர் வாழ்க்கையில்....

ஐந்து வருடம்  தனித்தனியே வாழ்ந்து காதல் வாழ்க்கை.....
பின்னர்..
மூன்று வருடம் சேர்ந்திருந்து பரீட்சார்த்த/புரிந்துணர்வு வாழ்க்கை
அடுத்தது...
திருமண வாழ்க்கை இரு வருடம்...அந்த இரு வருடத்தில் ஒரு பிள்ளை இல்லையேல் பல கடினத்தின் பின்(இஞ்சைதான் சலிப்புத்தன்மை முளைக்குது)இரண்டாவது பிள்ளை பிரசன்னம்.இங்கே தளிர் விடுகின்றது திருமணத்திற்கு பின்னரான இன்னொரு காதல்.மன்னிக்கவும் அது காதல் அல்ல மேலைத்தேய சிஸ்டம்.

தமிழ் மன்னன் என்று தூக்கி வைத்து  கொண்டாடப்படும் ராஜராஜ சோழனும் பல மனைவியருடன் வாழ்ந்தவன் தான். அது தமிழ் சிஸ்ரமா?

அந்த காலத்தில் காந்தர்வ மணம் என்று ஒரு சிஸ்ரம் இருந்தது. அது same like living together தான். 

Link to comment
Share on other sites

ஏன் தமிழ் கடவுள் என்று வணக்கப்படும் முருகனே திருமணத்தின் பின்னர் காதல் கொண்டவர் தான் 

அவருக்கு வருடா வருடம் திருமணமும் நடத்தி வைக்கப்படுகிறது. 😂😂😂

இது தமிழ் சிஸ்ரமா அல்லது மேலைத்தேய சிஸ்ரமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அவர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல், துரோகம் செய்யாமல் கெளரவமாக விவாகரத்து பெற்று பிரிந்து தமக்கு பிடித்தமான வாழ்கையை வாழுகின்றனர்.

எந்த விசயத்திலை ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றாமல்,எந்த விசயத்திலை துரோகம் செய்யாமல் எண்டதை விளக்கமாய் சொல்லுங்கோ......உந்த பிரச்சனையிலை நானும் விளங்க நினைப்பவன் தான் கண்டியளோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

தமிழ் மன்னன் என்று தூக்கி வைத்து  கொண்டாடப்படும் ராஜராஜ சோழனும் பல மனைவியருடன் வாழ்ந்தவன் தான். அது தமிழ் சிஸ்ரமா?

ராஜராஜ சோழன் கரைச்சல் குடுத்து கலைச்சு விடேல்லை.கன்னியரை கரயவும் விடேல்லை.ஒவ்வொருவருக்கும் வாழ்வாதாரம் கொடுத்து கண்கலங்காமல் வைத்திருந்தான்.

Link to comment
Share on other sites

1 minute ago, குமாரசாமி said:

ராஜராஜ சோழன் கரைச்சல் குடுத்து கலைச்சு விடேல்லை.கன்னியரை கரயவும் விடேல்லை.ஒவ்வொருவருக்கும் வாழ்வாதாரம் கொடுத்து கண்கலங்காமல் வைத்திருந்தான்.

நீங்கள் முதலில் கூறியது திருமணத்துக்கு பிறகு காதல் என்பது மேற்கத்தைய சிஸ்ரம் என்ற விடயத்தை பற்றி மட்டுமே.  இப்போது கதையை மாற்றுவது ஏன்? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.