Jump to content

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இணைக்கப்படவில்லை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு!

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இணைக்கப்படவில்லை!

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலணியின் உறுப்பினர்களாக, பேராசிரியர் தயானந்த பண்டார, பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க, பேராசிரியர் சுமேத சிறிவர்த்தன, என். ஜி.சுஜீவ பண்டிதரத்ன, சட்டத்தரணி இரேஷ் செனெவிரத்ன, சட்டத்தரணி சஞ்ஜய மாரம்பே, எரந்த நவரத்ன, பாணி வேவல, மௌலவி மொஹொமட், விரிவுரையாளர் மொஹொமட் இந்திகாப், கலீல் ரஹமான், அஸீஸ் நிசார்தீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த செயலணியின் செயலாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலணி உறுப்பினர்கள் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒருமுறை அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும், இறுதி அறிக்கையை 2022 பெப்ரவரி 28 அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி பணித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் இந்த செயலணியில் தமிழர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1-10.jpg

https://athavannews.com/2021/1246916

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது வேற நாட்டு செயலணி..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஒரே நாடு ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதி செயலணி தலைவராக பொதுமன்னிப்பு பெற்ற ஞானசார தேரர்; தமிழர்களுக்கு இடமில்லை

27 அக்டோபர் 2021, 10:56 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
கோட்டாபாய

பட மூலாதாரம்,PRESIDENT MEDIA UNIT

இலங்கையில் ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. 10 சிங்களவர்களும், நான்கு முஸ்லிம்களும் இந்த செயலணியில் உள்வாங்கப்பட்டுள்ள பின்னணியில், ஒரு தமிழ் பிரதிநிதி கூட இதில் இல்லை.

ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இடம் அளிக்கப்படாதது மற்றும் அதன் தலைவராக கலகொடஅத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு நவம்பர் 1ஆம் தேதி பதில் அளிக்கப்படும் என்று இலங்கை அரசு தரப்பில் பிபிசி தமிழிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளரின் கையெழுத்துடன், ''ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான வர்த்தமானி'' வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செயலணியின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

''ஒரே நாடு ஒரே சட்டம்'' என்ற விடயதானத்தை ஆராய்ந்து, அதற்கான சட்டங்களை மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகளை முன்வைப்பதே இந்த செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும்.

இலங்கையில் பல்வேறு வகையிலும் சர்ச்சைக்குள்ளான பௌத்த தேரராக விளங்கும் கலகொடஅத்தே ஞானசார தேரர், இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டமை, சிறுபான்மை மக்கள் மத்தியில் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

தேரர்

பட மூலாதாரம்,FACEBOOK

 
படக்குறிப்பு,

கலகொடஅத்தே ஞானசார தேரர்

குறித்த ஜனாதிபதி செயலணியில் 13 அங்கத்தவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம்:

1. கலகொடஅத்தே ஞானசார தேரர் (தலைவர்)

2. பேராசிரியர் தயானந்த பண்டார

3. பேராசிரியர் ஷாந்தினந்தன விஜேசிங்க

4. பேராசிரியர் சுமேத சிறிவர்தன

5. என்.ஜி.சுஜீவ பண்டித்தரத்ன

6. சட்டத்தரணி இரேஷ் சேனெவிரத்ன

7. சட்டத்தரணி சஞ்ஜய மாரபே

8. எரந்த நவரத்ன

9. பானி வெவல

10. மௌலவி மொஹமட் (காலி உலமா சபை)

11. மொஹமட் இன்திகாப்

12. கலீல் ரஹ{மான்

13. அயிஸ் நிஷார்தீன்

யார் இந்த கலகொடஅத்தே ஞானசார தேரர்?

கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கும் பௌத்த அமைப்பான பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளராக கலகொடஅத்தே ஞானசார தேரர் கடமையாற்றி வருகின்றார்;.

இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டு வரும் கலகொடஅத்தே ஞானசார தேரர், ஓர் இனவாத செயற்பாட்டில் ஈடுபடுபவர் என்பதே இலங்கையிலுள்ள பெரும்பாலானோரது கருத்தாக காணப்படுகின்றது.

இலங்கையில் இனம் சார்ந்து கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் பிரச்னைகளில் கலகொடஅத்தே ஞானசார தேரரும் முன்னின்று செயற்பட்டவராக கருதப்படுகின்றார்.

தேரர்

பட மூலாதாரம்,PMD

அத்துடன், நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்ட ஒரு தேரராக அவர் காணப்படுகின்றார்.

2017ம் ஆண்டு போலீஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ், கலகொடஅத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

எனினும், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரரின் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, ஆறு வருட சிறைத் தண்டனையை நீதிமன்றம் விதித்திருந்தது.

ஆறு வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், 2019ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.

இவ்வாறான ஒருவர் ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தவைராக நியமிக்கப்பட்டுள்ளமை, பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

பேஸ்புக் பதிவு

தற்போதுள்ள சட்டத்தை சரியாக செயல்படுத்த முடியாவிட்டால், ஒரு குழுவை அமைப்பதற்கான நோக்கம் என்ன? இந்த குழுவை வழிநடத்த ஒரு குற்றவாளியை நியமித்தது கிட்டத்தட்ட ஒரு நகைச்சுவையாகவே உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் தனது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, சட்டமற்ற ஒருவரை மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியான ஒருவரை இந்த குழுவிற்கு இணைக்க வேண்டாம் என சட்டத்தரணி ஹரித்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இடம் அளிக்கப்படாதது மற்றும் அதன் தலைவராக கலகொடஅத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசி தமிழ், ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்கவிடம் வினவியது.

எதிர்வரும் முதலாம் திகதி ஜனாதிபதி ஊடக மையத்தில், கலகொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்டவர்களின் பங்குப்பற்றுதலுடன் நடைபெறும் ஊடக சந்திப்பில் இதற்கான பதில் வழங்கப்படும் என அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-59063886

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இருந்து தெரிகிறது ஞானசார தேரர்.. பொதுபல சேன இவற்றை யார் திரைமறைவில் இருந்து இயக்கியது என்பது. முன்னர் திரைமறைவில் செய்ததை.. இப்போ நேரடியாக செய்கிறார் கோத்தா.

இந்த நிலையை உருவாக்கியது சம் சும் மாவை கும்பலுக்கும் கணிசமான பங்குண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

’இன மோதல்களுக்கு அரசாங்கம் தூபமிடுகிறது’

ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராக சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் நியமிக்கப்பட்டிருப்பதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இந்த நியமனத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது, எவருக்குமே அறவே புரியாத, எந்தவிதமான தெளிவுமற்ற ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற விவகாரம் பற்றி பல்லின சமூகத்தவர் வாழும் இலங்கை நாட்டில் மக்கள் மத்தியிலும் பொது வெளியிலும் தாறுமாறான கருத்துக்கள் பரவலாக நிலவிவருகின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான நோக்கம் ஆட்சிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டதா?  முஸ்லிம்களையும், அல்லாஹ்வையும் பகிரங்கமாகவே நிந்தித்து வருபவரும், பொதுவாக பௌத்தம் தவிர்ந்த ஏனைய சமயங்கள் மீது பகிரங்கமாகத் தமது வெறுப்புணர்வை கொட்டித் தீர்த்து வரும் ஞானசார தேரரை தலைவராக நியமித்திருப்பது நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்ற இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தலை மேலும் மோசமான நிலைமைக்கே  இட்டுச்செல்லும் எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இச்செயல்பாடானது நாட்டில் அமைதியின்மை தொடர்வதற்கும் இனங்களுக்கிடையிலான மோதல்கள் அடிக்கடி நிகழ்வதற்கும் தூபமிடும் செயலாகவே அமைந்துள்ளதாகதாகவும் தெரிவித்துள்ளார்.

Tamilmirror Online || ’இன மோதல்களுக்கு அரசாங்கம் தூபமிடுகிறது’

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.