Jump to content

சிங்கள இளைஞனை காதல் திருமணம் செய்த தமிழ் யுவதி; பெற்றோரின் அதிரடி நடவடிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் பெரும்பான்மை இன இளைஞனை காதல் திருமணம் செய்த மல்லாவியைச் சேர்ந்த 18 வயது இளம் யுவதியை பெற்றோர் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா தேக்கவத்தையை சேர்ந்த 19 வயதான குறித்த இளைஞனும், மல்லாவியைச் சேர்ந்த 18 வயதான தமிழ் யுவதியும் காதலித்து, கடந்த யூலை மாதம் வவுனியாவில் பதிவுத் திருமணம் செய்துள்ளனர்.

அவர்கள் இருவரும் திருமணத்தின் பின் தேக்கவத்தையிலுள்ள கணவன் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (22) வாகனமொன்றில் அங்கு சென்ற பெண்ணின் பெற்றோர்கள், யுவதியை பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகின்றது.

அதன்போது யுவதியை கூட்டிச்செல்வதை தடுக்க முயன்ற கணவனின் தந்தையையும் அவர்கள் தாக்கியுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் மல்லாவிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மல்லாவி பொலிஸார் பெண்ணின் வீட்டிற்கு சென்ற போது, வீடு பூட்டப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

https://www.tamilarul.net/2021/10/Wedding _0287054434.html

 

மல்லாவியை சேர்ந்த காதல் மனைவியை மீட்டுத் தாருங்கள்: வவுனியாவில் 200 அடி கோபுரத்தில் ஏறி காதலன் போராட்டம்; வவுனியா தேக்கவத்தை பகுதியில் 200 அடி உயரமான தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.தான் காதலித்த பெண்ணை பதிவு திருமணம் செய்த நிலையில், யுவதியின் பெற்றோர் அவரை கடத்தில் சென்று விட்டதாகவும், காதல் மனைவியை மீட்டுத்தரக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு்ள்ளார்.

தேக்கவத்தையை சேர்ந்த 19 வயதான உபாலி வீரசேகரகே நிசாந்த வீரசேகர என்ற  இளைஞர் மல்லாவி பகுதியை சேர்ந்த 18 வயதான சதுஜா என்பவரை காதலித்து பதிவுத்திருமணம் செய்துள்ளார்.பின்னர் அவரை அழைத்துக்கொண்டு வவுனியா தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் சிலகாலம் வாழ்ந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி பெண்ணின் உறவினர்கள் குறித்த வீட்டிற்கு வந்து பெண்ணை வாகனம் ஒன்றில் ஏற்றி அவர்களது வீட்டிற்கு ஏற்றிச் சென்றனர்.

தன்னை தாக்கிவிட்டு தனது மனைவியை அவர்கள் கடத்திச்சென்றதாக குறித்த இளைஞர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.எனினும் பொலிசார் குறித்த விடயத்தில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என தெரிவித்து வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் குறித்த இளைஞர் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியதுடன்,கூரிய ஆயுதத்தால் தனது கையினையும் அறுத்திருந்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகைதந்திருந்தனர். எனினும் பொலிசார் குறித்த விடயத்தில் உரிய நடவடிக்கையினை எடுக்கவில்லை என கோபுரத்தில் ஏறிய இளைஞரின் உறவினர்கள் பொலிசாருடன் முரண்பட்டதுடன் நீண்டநேரமாகியும், இளைஞரை மீட்பதற்கான நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

காதலியை அழைத்து வருவதாக தீயணைப்பு துறையினர் கூறியதையடுத்து கீழே இறங்கிய இளைஞன், பின்னர் மீண்டும் ஏறிக் கொண்டு விட்டார். 200 அடி உயரத்தில் அவர் ஏறி நிற்கிறார்.இளைஞனிற்கு துணையாக மைத்துனனும் கோபுரத்தில் ஏறினார். பின்னர் அவர் கீழே இறக்கப்பட்டார்.

காதலனை மீட்பதற்காக மற்றும் இரு இளைஞர்கள் கோபுரத்தின் மீது ஏறியநிலையில் அவர்களது முயற்சியும் பலனிளிக்கவில்லை.பொலிசார் உரிய நடவடிக்கையெடுக்கவில்லையென கூறி, காதலனின் உறவினர்கள் வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக ஏ9வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

https://www.ujirppu.com/breaking-news/மல்லாவியை-சேர்ந்த-காதல்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெடிக்கு 19, பெட்டைககு 18!!!

மகளை கடத்தியவர்கள் என்று, பெற்றோர் செய்தது சரியானது தானே. இதில் என்ன, சிங்களம், தமிழ்?

கிறுக்குக் பயல் போலுல்லது. கையை வேற அறுத்திருக்கிறாப்போல...

🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Nathamuni said:

பெடிக்கு 19, பெட்டைககு 18!!!

மகளை கடத்தியவர்கள் என்று, பெற்றோர் செய்தது சரியானது தானே. இதில் என்ன, சிங்களம், தமிழ்?

கிறுக்குக் பயல் போலுல்லது. கையை வேற அறுத்திருக்கிறாப்போல...

🤔

18 வயதுக்கு மேல் என்றால் மேஜர். இலங்கையில் சட்டபடி திருமணம் செய்ய, தன் வாழ்கை துணையை தேர்ந்தெடுக்க முடியும். வவுனியா திருமண பதிவாளர் சட்டபடி திருமணமும் செய்து வைத்தபின் கணவனிடம் இருந்து மனைவியை குண்டுகட்டா தூக்கி போகும் பெற்றார்தான் மகளை கடத்தியதாக கருதப்படும்.

 

 

13 minutes ago, Kapithan said:

லவ் ஜிகாத்...😂

ஐயோ இப்பதான் எல்லாரும் ஒரு மாதிரி மறந்திருக்க….மறுபடியும் அங்கயே இழுத்துட்டு போறீங்களே…..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரானா வைரஸ் இடம் மாறி இதயத்துக்க பூந்திட்டு பிள்ளைகளுக்கு. ஒன்று ஒன்றரை வருடமாக சனங்கள் முகமூடியோட. வெளியில் திரியவும் ஏலாது. கில்லாடிகள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழகிவிட்டு கழட்டிவிடவில்லை. சட்டப்படி பதிவு திருமணம் செய்திருக்கிறார். காதலி கையை விட்டு போனதும் உயிரையே மாய்த்துக்கொள்ள தயாராகிவிட்டார்.

கொஞ்சம் சீரியசான காதல்போல்தான் தெரிகிறது, எனது இனம் கலப்பினமாவதை நிச்சயமாக மனசு ஏற்காது  அதே நேரம் ஒரு உள் நோக்கமில்லாத உண்மை காதலாக  அது இருந்து  காதலர்கள் பிரிக்கப்பட்டு அவர்களை அழ வைத்தால்  அது மனசுக்கு கவலையான ஒன்றுதான்.

பாதிக்கப்பட்ட சிங்கள குடும்பம் ஏழை அல்லது பெரும் அந்தஸ்து செல்வாக்கு இல்லாத குடும்பம் போலிருக்கும் என்று நினைக்கிறேன், இல்லையெனின்  வடபகுதியில் ராணுவ ஆட்சி அதிகாரம் உள்ள நிலையில் கடத்தி சென்றவர்களை யாழ்ப்பாணம் வரை பின்னால் கலைச்சுகொண்டு போய் பொலிஸ் ஆதரவுடன் அவர்களை தாக்கி பெண்ணை இழுத்துக்கொண்டு வந்திருப்பார்கள்.

இப்படி ரெலிபோன் கம்பத்தில் ஏறி நின்று ஒப்பாரி வைத்திருக்கமாட்டார்கள்.

பெண்ணின் பெற்றோர் பணம், செல்வாக்கு உள்ளவர்களாயிருக்கவேண்டும், இல்லையெனில் ஒரு சிங்களவனை வவுனியாவில் வைச்சு தாக்கி  பெண்ணை மீட்டு செல்வது அத்தனை சுலபமான ஒன்றல்ல.

எல்லாம் ஒரு அனுமானம்தான், எது எப்படியோ வேறு இனத்தவனை காதலிப்பது என்று முடிவெடுத்தாகிவிட்டது அது அவர்கள் பிரச்சனை, 

காதலிச்சதுதான் காதலிச்சீர்கள், ஒரு முஸ்லீமை காதலிக்காது சிங்களவனை காதலிச்சது மனசுக்கு சிறு ஆறுதல்.

இஸ்லாமியர்களை காதலித்தால் மறுகணம் முட்டாக்கு போட்டுக்கொண்டு குரான் ஓதி முழு இஸ்லாமியராக மாறியே ஆகவேண்டும், அது ஒரு உள்நோக்கம் கொண்ட காதல்.

ஒரு சிங்களவனை காதலித்தால் திருமணம் செய்தால் எந்தகாலமும் இனமாற்றம் நிகழபோவதில்லை, அவர்களது சந்ததிகூட அப்பா சிங்களம், அம்மா தமிழ் என்றே சொல்லி வாழும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

18 வயதுக்கு மேல் என்றால் மேஜர். இலங்கையில் சட்டபடி திருமணம் செய்ய, தன் வாழ்கை துணையை தேர்ந்தெடுக்க முடியும். வவுனியா திருமண பதிவாளர் சட்டபடி திருமணமும் செய்து வைத்தபின் கணவனிடம் இருந்து மனைவியை குண்டுகட்டா தூக்கி போகும் பெற்றார்தான் மகளை கடத்தியதாக கருதப்படும்.

நன்றி.

பெட்டைக்கு 18 வயது இல்லையாம் எண்டு வேற எங்கையோ வாசிச்ச நிணைவு. சரி விடுங்க....

இந்தியாவி்ல் ஆணுக்கு 21 , பெண்ணுக்கு 18

எனக்கெண்டா, 18 முடியவேணுமா, 17 முடியவேணுமா எண்டதை ஒருக்கா விளக்கேலுமே. 😁

நான் பிழை விடப்படாது, கண்டியளே.... 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, valavan said:

பழகிவிட்டு கழட்டிவிடவில்லை. சட்டப்படி பதிவு திருமணம் செய்திருக்கிறார். காதலி கையை விட்டு போனதும் உயிரையே மாய்த்துக்கொள்ள தயாராகிவிட்டார்.

கொஞ்சம் சீரியசான காதல்போல்தான் தெரிகிறது, எனது இனம் கலப்பினமாவதை நிச்சயமாக மனசு ஏற்காது  அதே நேரம் ஒரு உள் நோக்கமில்லாத உண்மை காதலாக  அது இருந்து  காதலர்கள் பிரிக்கப்பட்டு அவர்களை அழ வைத்தால்  அது மனசுக்கு கவலையான ஒன்றுதான்.

பாதிக்கப்பட்ட சிங்கள குடும்பம் ஏழை அல்லது பெரும் அந்தஸ்து செல்வாக்கு இல்லாத குடும்பம் போலிருக்கும் என்று நினைக்கிறேன், இல்லையெனின்  வடபகுதியில் ராணுவ ஆட்சி அதிகாரம் உள்ள நிலையில் கடத்தி சென்றவர்களை யாழ்ப்பாணம் வரை பின்னால் கலைச்சுகொண்டு போய் பொலிஸ் ஆதரவுடன் அவர்களை தாக்கி பெண்ணை இழுத்துக்கொண்டு வந்திருப்பார்கள்.

இப்படி ரெலிபோன் கம்பத்தில் ஏறி நின்று ஒப்பாரி வைத்திருக்கமாட்டார்கள்.

பெண்ணின் பெற்றோர் பணம், செல்வாக்கு உள்ளவர்களாயிருக்கவேண்டும், இல்லையெனில் ஒரு சிங்களவனை வவுனியாவில் வைச்சு தாக்கி  பெண்ணை மீட்டு செல்வது அத்தனை சுலபமான ஒன்றல்ல.

எல்லாம் ஒரு அனுமானம்தான், எது எப்படியோ வேறு இனத்தவனை காதலிப்பது என்று முடிவெடுத்தாகிவிட்டது அது அவர்கள் பிரச்சனை, 

காதலிச்சதுதான் காதலிச்சீர்கள், ஒரு முஸ்லீமை காதலிக்காது சிங்களவனை காதலிச்சது மனசுக்கு சிறு ஆறுதல்.

இஸ்லாமியர்களை காதலித்தால் மறுகணம் முட்டாக்கு போட்டுக்கொண்டு குரான் ஓதி முழு இஸ்லாமியராக மாறியே ஆகவேண்டும், அது ஒரு உள்நோக்கம் கொண்ட காதல்.

ஒரு சிங்களவனை காதலித்தால் திருமணம் செய்தால் எந்தகாலமும் இனமாற்றம் நிகழபோவதில்லை, அவர்களது சந்ததிகூட அப்பா சிங்களம், அம்மா தமிழ் என்றே சொல்லி வாழும்.

உண்மைதான் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்பில் நாம் “இனம் பெருக்கிறம் பேர்வழி” எண்டு தலையிட முடியாது.

இல்லாவிட்டால் தனது சாதி வெறியை மறைக்க “நாடக காதல்” என்று ஒன்றை கற்பித்து, அதன் வழி ஆணவ கொலைகளை ஊக்குவிக்கும் இராமதாஸ் போல நாமும் ஆகிவிடுவோம்.

நடந்ததை பார்க்க உண்மை காதல் போலவே தெரிகிறது.

31 minutes ago, valavan said:

ஒரு சிங்களவனை காதலித்தால் திருமணம் செய்தால் எந்தகாலமும் இனமாற்றம் நிகழபோவதில்லை, அவர்களது சந்ததிகூட அப்பா சிங்களம், அம்மா தமிழ் என்றே சொல்லி வாழும்.

இது எவ்வளவுதூரம் சரி என தெரியவில்லை. வவுனியா தெற்கில் வளரும் இவர்களின் குழந்தையும், தாயும் சிங்களவர்களாகவே மாறிவிடுவார்கள். இரெண்டு சந்ததிக்குள், அம்மாம்மாவின் பெற்றோர் தமிழர் என்ற நிலை வரும். 

இதுதான் சிங்கள இனத்தின் வட்டத்தை பெருபிக்கும் உத்தி.

எம்மை விட காலத்தால் மிக இளைய இனம், அருகில் தமிழ்நாடு போல ஒரு நிலப்பரப்பு இல்லை. ஆனாலும் இலங்கையில் 75% எப்படி சிங்களவர்கள்?

இந்த அணுகுமுறைதான் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

பெட்டைக்கு 18 வயது இல்லையாம் எண்டு வேற எங்கையோ வாசிச்ச நிணைவு. சரி விடுங்க....

சரி விடுவம், எங்கயோ வாசிச்சதுதானே? 🤣.

14 minutes ago, Nathamuni said:

இந்தியாவி்ல் ஆணுக்கு 21 , பெண்ணுக்கு 18

ஓம் ஆனால் வவுனியா சிறிலங்காவிலதானே இருக்கு🤣.

16 minutes ago, Nathamuni said:

எனக்கெண்டா, 18 முடியவேணுமா, 17 முடியவேணுமா எண்டதை ஒருக்கா விளக்கேலுமே. 😁

இது பழைய போத்துகீசர் இலங்கைக்கு எந்த நூற்றாண்டு வந்தனர் என்ற பிரச்சனையின் தொடர்சியோ?🤣. பகிடிதான்.

உங்களுக்கு உங்கட 1st birthday முடிஞ்ச அடுத்த நாள் எத்தனை வயசு எண்டு யோசிச்சா….பதில் டபக்கெண்டு வந்திடும்.

19 minutes ago, Nathamuni said:

நான் பிழை விடப்படாது, கண்டியளே.... 😜

லேட்டாகவேணும் இந்த நிலைப்பாட்டுக்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள். இனி ஏறுமுகம்தான்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

உண்மைதான் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்பில் நாம் “இனம் பெருக்கிறம் பேர்வழி” எண்டு தலையிட முடியாது.

இல்லாவிட்டால் தனது சாதி வெறியை மறைக்க “நாடக காதல்” என்று ஒன்றை கற்பித்து, அதன் வழி ஆணவ கொலைகளை ஊக்குவிக்கும் இராமதாஸ் போல நாமும் ஆகிவிடுவோம்.

நடந்ததை பார்க்க உண்மை காதல் போலவே தெரிகிறது.

இது எவ்வளவுதூரம் சரி என தெரியவில்லை. வவுனியா தெற்கில் வளரும் இவர்களின் குழந்தையும், தாயும் சிங்களவர்களாகவே மாறிவிடுவார்கள். இரெண்டு சந்ததிக்குள், அம்மாம்மாவின் பெற்றோர் தமிழர் என்ற நிலை வரும். 

இதுதான் சிங்கள இனத்தின் வட்டத்தை பெருபிக்கும் உத்தி.

எம்மை விட காலத்தால் மிக இளைய இனம், அருகில் தமிழ்நாடு போல ஒரு நிலப்பரப்பு இல்லை. ஆனாலும் இலங்கையில் 75% எப்படி சிங்களவர்கள்?

இந்த அணுகுமுறைதான் காரணம்.

இதனால் தான் தமிழர்கள் இனத்தூய்மை என்ற மாயமானைத் தலையில் தூக்கி வைத்து, இருக்கும் சனத்தொகையையும் குறைத்துக் கொள்ளக் கூடாது என நினைக்கிறேன்.

சிங்களவர்கள் இப்படி ஒதுக்காமல் உள்வாங்கி 75% ஆகி விட்டார்கள் - நாம் ஒதுக்கி, வெட்டி, பொலிஷ் போட்டு 10% இற்குக் கீழ் போய் விடுவோம்! 😂

21 minutes ago, Nathamuni said:

நன்றி.

பெட்டைக்கு 18 வயது இல்லையாம் எண்டு வேற எங்கையோ வாசிச்ச நிணைவு. சரி விடுங்க....

இந்தியாவி்ல் ஆணுக்கு 21 , பெண்ணுக்கு 18

எனக்கெண்டா, 18 முடியவேணுமா, 17 முடியவேணுமா எண்டதை ஒருக்கா விளக்கேலுமே. 😁

நான் பிழை விடப்படாது, கண்டியளே.... 😜

17.9 இற்கும் 18.0 இற்கும் வேறுபாடு தெரியாமல் கத்தி முனையில நடந்திருக்கிறீங்கள் போலிருக்கே? கவனம் நாதம், இருப்பது யு.கே!😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இது எவ்வளவுதூரம் சரி என தெரியவில்லை. வவுனியா தெற்கில் வளரும் இவர்களின் குழந்தையும், தாயும் சிங்களவர்களாகவே மாறிவிடுவார்கள். இரெண்டு சந்ததிக்குள், அம்மாம்மாவின் பெற்றோர் தமிழர் என்ற நிலை வரும். 

எனக்கு தெரிந்த நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த தமிழர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு தமிழ் பேச தெரியும் ஆனால் எழுத வராது, சிங்களத்தில் சரளமாக பேசவும் எழுதவும் அவரால் முடியும்.

அவர் சொன்னார் தமது பகுதியில் பல தமிழ் குடும்பங்கள் சில தலைமுறைக்கு முன்னரே சிங்கள வழி கல்வி என்றும் பெளத்த மதத்திற்கு மாறியும் கலப்பு திருமணங்கள் செய்தும் முழு சிங்களவர்களாகவே மாறிவிட்ட பின்பும் பெரும்பான்மை கடும்போக்கு சிங்கள வாதிகள் அவர்களை இன்றும் சிங்களவர்கள் என்றே ஏற்றுக்கொள்ளவில்லை என்று.

தமிழர் தரப்பிலும் சரி சிங்களவர்கள் தரப்பிலும் சரி கலப்பு ரீதியாக குடும்பமானவர்களை காலம் காலமாக முழுமையாக  எமது இனம் என்று ஏற்றுகொள்பவர்கள் குறைவு, எப்போதும் ஒரு தூர பார்வையுடனேயே இருபக்கமும் பார்க்கும் என்பதை இலங்கையில் வாழ்ந்த காலங்களில்  சில இடங்களில் இரு பக்கமும் அவதானித்திருக்கிறேன்.

நாங்கள் மனதளவில் மலையக தமிழர்களை எமது தமிழ் மக்கள் என்று இன்றும் ஏற்றுக்கொள்ளாததுபோல்தான் இந்த கலப்பு திருமண தம்பதிகள் தலைமுறைகளின் வாழ்வும் தொடரும் என்றே நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

லேட்டாகவேணும் இந்த நிலைப்பாட்டுக்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள். இனி ஏறுமுகம்தான்🤣.

ஆறுமுகத்தாரை நம்பிறதால, ஏறுமுகம் தான்.

அந்த கிரிப்டோ கரண்சி விசயம் தான், கோசன் அண்ணரை நம்பேலுமா எண்டு யோசணை.... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, valavan said:

எனக்கு தெரிந்த நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த தமிழர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு தமிழ் பேச தெரியும் ஆனால் எழுத வராது, சிங்களத்தில் சரளமாக பேசவும் எழுதவும் அவரால் முடியும்.

அவர் சொன்னார் தமது பகுதியில் பல தமிழ் குடும்பங்கள் சில தலைமுறைக்கு முன்னரே சிங்கள வழி கல்வி என்றும் பெளத்த மதத்திற்கு மாறியும் கலப்பு திருமணங்கள் செய்தும் முழு சிங்களவர்களாகவே மாறிவிட்ட பின்பும் பெரும்பான்மை கடும்போக்கு சிங்கள வாதிகள் அவர்களை இன்றும் சிங்களவர்கள் என்றே ஏற்றுக்கொள்ளவில்லை என்று.

தமிழர் தரப்பிலும் சரி சிங்களவர்கள் தரப்பிலும் சரி கலப்பு ரீதியாக குடும்பமானவர்களை காலம் காலமாக முழுமையாக  எமது இனம் என்று ஏற்றுகொள்பவர்கள் குறைவு, எப்போதும் ஒரு தூர பார்வையுடனேயே இருபக்கமும் பார்க்கும் என்பதை இலங்கையில் வாழ்ந்த காலங்களில்  சில இடங்களில் இரு பக்கமும் அவதானித்திருக்கிறேன்.

நாங்கள் மனதளவில் மலையக தமிழர்களை எமது தமிழ் மக்கள் என்று இன்றும் ஏற்றுக்கொள்ளாததுபோல்தான் இந்த கலப்பு திருமண தம்பதிகள் தலைமுறைகளின் வாழ்வும் தொடரும் என்றே நினைக்கிறேன்.

மேலோட்டமாக இப்படி தெரிந்தாலும்  இதில் சில நுணுக்கமான வேறுபாடுகள் உள்ளன.

நீர்கொழும்பு சிங்களவர்களை மேல் நாட்டு சிங்களவர்கள் தமக்கு சமமாக ஏற்காவிடினும், அவர்களும் சிங்களவரே என அடையாளப்படுத்துவதில் மிக தீவிரமாக இருப்பார்கள்.

அதே போல் அவர்களுக்கு இன வெறியை திணிப்பதிலும் முன்னுக்கு நிற்பார்கள்.

அவர்களும் தமது “சிங்களதன்மையை நிரூபிக்க” முடிந்தளவு இனவாதத்தை கக்குவார்கள்.

கிட்டதட்ட ஐந்தாம் வேததுக்கு மாறியவர்கள் போல.

பண்டாரநாயக்க, ஜே ஆர், இப்படி பல இனவாதிகள் தமது “அடி” கேள்விக்கு உள்ளாகும் என பயந்தமையும் அவர்கள் இனவாதத்தை இறுக்கி பிடிக்க ஒரு காரணம். 

ஆகவே இது வட்டத்தை பெருபிக்கும் உத்திதான். 

நீ ஒரு போதும் மலைநாட்டு சிங்களவன் ஆக முடியாது ஆனால் நீ கீழ்நாட்டு சிங்களவன் என்பதை நாம் தொடர்ந்தும் ஏற்க நீ உனது “சிங்களதுவத்தை” தொடர்ந்தும் (தமிழனை அடிப்பதன் மூலம்) நிருபிக்க வேண்டும்.

ஆனால் குடிசன மதிபீட்டில், கலவரத்துக்கு ஆள் சேர்க்க, ஆமியில் சேர, நவீன துட்டு காமினியே நாட்டை காக்க வா என்று உசுப்பேத்த உன்னை சிங்களவனாக ஏற்றுகொள்வோம். 

இந்த ஜோடிக்கு பிறக்கும் பிள்ளை தனது பதிவுகளில் தன்னை சிங்களம் என்றே அடையாளம்படுத்தும். குடும்ப, சமூக, வாய்ப்பு என ஒவ்வொரு மட்டத்திலும் அப்படி செய்வதே இலாபம் என அழுத்தம் கொடுத்து, அப்படி செய்ய வைக்கும் தந்திரம் அவர்களுக்கு இருக்கிறது. 

30 minutes ago, Nathamuni said:

கோசான்  அண்ணரை நம்பேலுமா எண்டு யோசணை.... 😁

யோசனை வேண்டாம். ஜெயலலிதா கடாட்சம் கிட்டும். தளரவிடாதேங்கோ ,மனசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த ஒரு இளம் குடும்பம் வன்னியில் உள்ளது.கணவன் சிங்களம் மனைவி தமிழ்.இருவரும் இரன்டு மொழியும் கதைப்பார்கள்.ஆனால் இருவரும் மற்ற மொழி எழுத மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, சுவைப்பிரியன் said:

எனக்கு தெரிந்த ஒரு இளம் குடும்பம் வன்னியில் உள்ளது.கணவன் சிங்களம் மனைவி தமிழ்.இருவரும் இரன்டு மொழியும் கதைப்பார்கள்.ஆனால் இருவரும் மற்ற மொழி எழுத மாட்டார்கள்.

அவர்களுக்கு பிள்ளை உண்டா? இருந்தால் என்ன மொழியில் (போதனை மொழி) படிக்கிறது?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அவர்களுக்கு பிள்ளை உண்டா? இருந்தால் என்ன மொழியில் (போதனை மொழி) படிக்கிறது?

 

இது ஒருவர் வேதத்திலும் மற்ரவர் சைவத்திலும் திருமணம் முடிக்கும்போது வரும் பரிதாப நிலை கண்டியளோ.. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

இது ஒருவர் வேதத்திலும் மற்ரவர் சைவத்திலும் திருமணம் முடிக்கும்போது வரும் பரிதாப நிலை கண்டியளோ.. 🤣

ஆனால் இருவரும் தமிழாக இருந்தால் - பொதுவாக மீனாட்சி எந்த மதமோ அந்த மதத்தில் பிள்ளை வளரும் என்பது சம்பிரதாயம்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அவர்களுக்கு பிள்ளை உண்டா? இருந்தால் என்ன மொழியில் (போதனை மொழி) படிக்கிறது?

 

 

3 hours ago, சுவைப்பிரியன் said:

எனக்கு தெரிந்த ஒரு இளம் குடும்பம் வன்னியில் உள்ளது.கணவன் சிங்களம் மனைவி தமிழ்.இருவரும் இரன்டு மொழியும் கதைப்பார்கள்.ஆனால் இருவரும் மற்ற மொழி எழுத மாட்டார்கள்.

நீங்கள் இதுக்கே கனக்க யோசிக்கிறியள்.. இங்க வெளிநாட்டில தாய்தேப்பன் தமிழ் தாய்மொழி பிள்ளையள் இன்னொரு மொழி தாய்மொழி.. இரெண்டுபேரும் ரெண்டுபேரிண்ட தாய்மொழியும் கதைப்பினம் ஆனால் ரெண்டு பேரும் மற்றவையின்ர தாய்மொழிய எழுதமாட்டினம்.. ஜரோப்பா வாழ் தமிழர்குடும்பங்களில் இது இன்னும் மோசம்.. பிள்ளையள் தாய்தேப்பன்ர தாய்மொழி கதைப்பினம் ஆனால் தாய்தேப்பன் பிள்ளையளின்ர தாய்மொழி கதைக்கமாட்டினம்.. இந்த மொழி சம்பந்தமா அண்மையில் ஒரு திரி ஓடினது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

நீங்கள் இதுக்கே கனக்க யோசிக்கிறியள்.. இங்க வெளிநாட்டில தாய்தேப்பன் தமிழ் தாய்மொழி பிள்ளையள் இன்னொரு மொழி தாய்மொழி.. இரெண்டுபேரும் ரெண்டுபேரிண்ட தாய்மொழியும் கதைப்பினம் ஆனால் ரெண்டு பேரும் மற்றவையின்ர தாய்மொழிய எழுதமாட்டினம்.. ஜரோப்பா வாழ் தமிழர்குடும்பங்களில் இது இன்னும் மோசம்.. பிள்ளையள் தாய்தேப்பன்ர தாய்மொழி கதைப்பினம் ஆனால் தாய்தேப்பன் பிள்ளையளின்ர தாய்மொழி கதைக்கமாட்டினம்.. இந்த மொழி சம்பந்தமா அண்மையில் ஒரு திரி ஓடினது..

இல்லை நான் கேட்ட காரணம். எனக்கு தெரிய பெற்றாரில் ஒருவர் சிங்களம், ஒருவர் தமிழர் என்றால் பிள்ளைகள் தமிழ் மொழி மூலம் படிப்பது வெகு அரிது. சிலநேரம் வன்னியில் என்றபடியால் மாறி நடந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

3 minutes ago, goshan_che said:

இல்லை நான் கேட்ட காரணம். எனக்கு தெரிய பெற்றாரில் ஒருவர் சிங்களம், ஒருவர் தமிழர் என்றால் பிள்ளைகள் தமிழ் மொழி மூலம் படிப்பது வெகு அரிது. சிலநேரம் வன்னியில் என்றபடியால் மாறி நடந்திருக்கலாம்.

சென்னைக்கு அனுப்புங்கோ - புள்ளைகள் எல்லாம் இங்கிலிசை தாய்மொழி ஆக்கிடும் - பிரச்சினை தீர்ந்துது. 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, goshan_che said:

ஆனால் இருவரும் தமிழாக இருந்தால் - பொதுவாக மீனாட்சி எந்த மதமோ அந்த மதத்தில் பிள்ளை வளரும் என்பது சம்பிரதாயம்🤣.

என்னுடைய உறவினர்களிருவர் மணந்தது சைவ சமயத்தில். ஆண் பிள்ளைகள் சைவம், பெண் பிள்ளைகள் கிறீஸ்தவம். 

காரணம், தகப்பனுக்கு இறுதிச் சடங்கு(கொள்ளி வைக்க) செய்ய ஆண் வாரிசு வேண்டும். 

இதுவும் லவ் ஜிகாத் தானோ ..🤣

13 minutes ago, கற்பகதரு said:

சென்னைக்கு அனுப்புங்கோ - புள்ளைகள் எல்லாம் இங்கிலிசை தாய்மொழி ஆக்கிடும் - பிரச்சினை தீர்ந்துது. 😃

இது எப்பிடி இருக்கு 🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kapithan said:

இது எப்பிடி இருக்கு 🤣🤣

 

57 minutes ago, கற்பகதரு said:

சென்னைக்கு அனுப்புங்கோ - புள்ளைகள் எல்லாம் இங்கிலிசை தாய்மொழி ஆக்கிடும் - பிரச்சினை தீர்ந்துது. 

🤣 ஜூட் அண்ணா ஆகவும் பெட்டிக்கு வெளியால திங்க் பண்ண வேண்டாம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட விடயம் அதே நேரம் உண்மையில் இந்த பெற்றோரைத்தான் கைது செய்திருக்கவேண்டும்..ஆனால் ஒரு ஆதங்கம்.  ஏற்கனவே குறைந்து கொண்டு வருகிறோம்(அதற்காக  தன் பொருளாதார நிலையை மீறி பல பிள்ளைகளை பெறவேண்டும் என கூறமாட்டேன்).. ஆனால் இவை அதிகரிப்பதற்கான காரணங்கள்? 

- சீதனம்?

- சாதி?

- தமிழ் இளைஞர்களின் பழக்கவழக்கங்கள்?

- வேலைவாய்ப்பு, கல்வியறிவு வீதத்தில் ஆண்களை விட பெண்கள் படித்து முன்னேறி வருவதும், அவர்களுக்கு சம மான ஆண்கள் இல்லாமை? 

- ஊர், பிரதேச பிரிவினைகள்? 

- இல்லை ஓரிரண்டு சம்பவங்களை ஊடகங்கள் பெரிதுபடுத்தி ஒரு trend உருவாக்கி திட்டமிட்ட முறையில் ஊக்குவிக்கப்படுகிறதா? 

ஒன்றில் இனம் மாறி திருமணம் செய்கிறார்கள் இல்லை திருமணம் செய்யாமல் தனித்து வாழ்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மையில் இந்த பெற்றோரைத்தான் கைது செய்திருக்கவேண்டும்.

💯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கற்பகதரு said:

சென்னைக்கு அனுப்புங்கோ - புள்ளைகள் எல்லாம் இங்கிலிசை தாய்மொழி ஆக்கிடும் - பிரச்சினை தீர்ந்துது. 😃

சென்னையிலும் இனி ஹிந்தி தானாக்கும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.