Jump to content

சிங்கள இளைஞனை காதல் திருமணம் செய்த தமிழ் யுவதி; பெற்றோரின் அதிரடி நடவடிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் பெரும்பான்மை இன இளைஞனை காதல் திருமணம் செய்த மல்லாவியைச் சேர்ந்த 18 வயது இளம் யுவதியை பெற்றோர் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா தேக்கவத்தையை சேர்ந்த 19 வயதான குறித்த இளைஞனும், மல்லாவியைச் சேர்ந்த 18 வயதான தமிழ் யுவதியும் காதலித்து, கடந்த யூலை மாதம் வவுனியாவில் பதிவுத் திருமணம் செய்துள்ளனர்.

அவர்கள் இருவரும் திருமணத்தின் பின் தேக்கவத்தையிலுள்ள கணவன் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (22) வாகனமொன்றில் அங்கு சென்ற பெண்ணின் பெற்றோர்கள், யுவதியை பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகின்றது.

அதன்போது யுவதியை கூட்டிச்செல்வதை தடுக்க முயன்ற கணவனின் தந்தையையும் அவர்கள் தாக்கியுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் மல்லாவிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மல்லாவி பொலிஸார் பெண்ணின் வீட்டிற்கு சென்ற போது, வீடு பூட்டப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

https://www.tamilarul.net/2021/10/Wedding _0287054434.html

 

மல்லாவியை சேர்ந்த காதல் மனைவியை மீட்டுத் தாருங்கள்: வவுனியாவில் 200 அடி கோபுரத்தில் ஏறி காதலன் போராட்டம்; வவுனியா தேக்கவத்தை பகுதியில் 200 அடி உயரமான தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.தான் காதலித்த பெண்ணை பதிவு திருமணம் செய்த நிலையில், யுவதியின் பெற்றோர் அவரை கடத்தில் சென்று விட்டதாகவும், காதல் மனைவியை மீட்டுத்தரக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு்ள்ளார்.

தேக்கவத்தையை சேர்ந்த 19 வயதான உபாலி வீரசேகரகே நிசாந்த வீரசேகர என்ற  இளைஞர் மல்லாவி பகுதியை சேர்ந்த 18 வயதான சதுஜா என்பவரை காதலித்து பதிவுத்திருமணம் செய்துள்ளார்.பின்னர் அவரை அழைத்துக்கொண்டு வவுனியா தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் சிலகாலம் வாழ்ந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி பெண்ணின் உறவினர்கள் குறித்த வீட்டிற்கு வந்து பெண்ணை வாகனம் ஒன்றில் ஏற்றி அவர்களது வீட்டிற்கு ஏற்றிச் சென்றனர்.

தன்னை தாக்கிவிட்டு தனது மனைவியை அவர்கள் கடத்திச்சென்றதாக குறித்த இளைஞர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.எனினும் பொலிசார் குறித்த விடயத்தில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என தெரிவித்து வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் குறித்த இளைஞர் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியதுடன்,கூரிய ஆயுதத்தால் தனது கையினையும் அறுத்திருந்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகைதந்திருந்தனர். எனினும் பொலிசார் குறித்த விடயத்தில் உரிய நடவடிக்கையினை எடுக்கவில்லை என கோபுரத்தில் ஏறிய இளைஞரின் உறவினர்கள் பொலிசாருடன் முரண்பட்டதுடன் நீண்டநேரமாகியும், இளைஞரை மீட்பதற்கான நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

காதலியை அழைத்து வருவதாக தீயணைப்பு துறையினர் கூறியதையடுத்து கீழே இறங்கிய இளைஞன், பின்னர் மீண்டும் ஏறிக் கொண்டு விட்டார். 200 அடி உயரத்தில் அவர் ஏறி நிற்கிறார்.இளைஞனிற்கு துணையாக மைத்துனனும் கோபுரத்தில் ஏறினார். பின்னர் அவர் கீழே இறக்கப்பட்டார்.

காதலனை மீட்பதற்காக மற்றும் இரு இளைஞர்கள் கோபுரத்தின் மீது ஏறியநிலையில் அவர்களது முயற்சியும் பலனிளிக்கவில்லை.பொலிசார் உரிய நடவடிக்கையெடுக்கவில்லையென கூறி, காதலனின் உறவினர்கள் வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக ஏ9வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

https://www.ujirppu.com/breaking-news/மல்லாவியை-சேர்ந்த-காதல்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெடிக்கு 19, பெட்டைககு 18!!!

மகளை கடத்தியவர்கள் என்று, பெற்றோர் செய்தது சரியானது தானே. இதில் என்ன, சிங்களம், தமிழ்?

கிறுக்குக் பயல் போலுல்லது. கையை வேற அறுத்திருக்கிறாப்போல...

🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Nathamuni said:

பெடிக்கு 19, பெட்டைககு 18!!!

மகளை கடத்தியவர்கள் என்று, பெற்றோர் செய்தது சரியானது தானே. இதில் என்ன, சிங்களம், தமிழ்?

கிறுக்குக் பயல் போலுல்லது. கையை வேற அறுத்திருக்கிறாப்போல...

🤔

18 வயதுக்கு மேல் என்றால் மேஜர். இலங்கையில் சட்டபடி திருமணம் செய்ய, தன் வாழ்கை துணையை தேர்ந்தெடுக்க முடியும். வவுனியா திருமண பதிவாளர் சட்டபடி திருமணமும் செய்து வைத்தபின் கணவனிடம் இருந்து மனைவியை குண்டுகட்டா தூக்கி போகும் பெற்றார்தான் மகளை கடத்தியதாக கருதப்படும்.

 

 

13 minutes ago, Kapithan said:

லவ் ஜிகாத்...😂

ஐயோ இப்பதான் எல்லாரும் ஒரு மாதிரி மறந்திருக்க….மறுபடியும் அங்கயே இழுத்துட்டு போறீங்களே…..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரானா வைரஸ் இடம் மாறி இதயத்துக்க பூந்திட்டு பிள்ளைகளுக்கு. ஒன்று ஒன்றரை வருடமாக சனங்கள் முகமூடியோட. வெளியில் திரியவும் ஏலாது. கில்லாடிகள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழகிவிட்டு கழட்டிவிடவில்லை. சட்டப்படி பதிவு திருமணம் செய்திருக்கிறார். காதலி கையை விட்டு போனதும் உயிரையே மாய்த்துக்கொள்ள தயாராகிவிட்டார்.

கொஞ்சம் சீரியசான காதல்போல்தான் தெரிகிறது, எனது இனம் கலப்பினமாவதை நிச்சயமாக மனசு ஏற்காது  அதே நேரம் ஒரு உள் நோக்கமில்லாத உண்மை காதலாக  அது இருந்து  காதலர்கள் பிரிக்கப்பட்டு அவர்களை அழ வைத்தால்  அது மனசுக்கு கவலையான ஒன்றுதான்.

பாதிக்கப்பட்ட சிங்கள குடும்பம் ஏழை அல்லது பெரும் அந்தஸ்து செல்வாக்கு இல்லாத குடும்பம் போலிருக்கும் என்று நினைக்கிறேன், இல்லையெனின்  வடபகுதியில் ராணுவ ஆட்சி அதிகாரம் உள்ள நிலையில் கடத்தி சென்றவர்களை யாழ்ப்பாணம் வரை பின்னால் கலைச்சுகொண்டு போய் பொலிஸ் ஆதரவுடன் அவர்களை தாக்கி பெண்ணை இழுத்துக்கொண்டு வந்திருப்பார்கள்.

இப்படி ரெலிபோன் கம்பத்தில் ஏறி நின்று ஒப்பாரி வைத்திருக்கமாட்டார்கள்.

பெண்ணின் பெற்றோர் பணம், செல்வாக்கு உள்ளவர்களாயிருக்கவேண்டும், இல்லையெனில் ஒரு சிங்களவனை வவுனியாவில் வைச்சு தாக்கி  பெண்ணை மீட்டு செல்வது அத்தனை சுலபமான ஒன்றல்ல.

எல்லாம் ஒரு அனுமானம்தான், எது எப்படியோ வேறு இனத்தவனை காதலிப்பது என்று முடிவெடுத்தாகிவிட்டது அது அவர்கள் பிரச்சனை, 

காதலிச்சதுதான் காதலிச்சீர்கள், ஒரு முஸ்லீமை காதலிக்காது சிங்களவனை காதலிச்சது மனசுக்கு சிறு ஆறுதல்.

இஸ்லாமியர்களை காதலித்தால் மறுகணம் முட்டாக்கு போட்டுக்கொண்டு குரான் ஓதி முழு இஸ்லாமியராக மாறியே ஆகவேண்டும், அது ஒரு உள்நோக்கம் கொண்ட காதல்.

ஒரு சிங்களவனை காதலித்தால் திருமணம் செய்தால் எந்தகாலமும் இனமாற்றம் நிகழபோவதில்லை, அவர்களது சந்ததிகூட அப்பா சிங்களம், அம்மா தமிழ் என்றே சொல்லி வாழும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

18 வயதுக்கு மேல் என்றால் மேஜர். இலங்கையில் சட்டபடி திருமணம் செய்ய, தன் வாழ்கை துணையை தேர்ந்தெடுக்க முடியும். வவுனியா திருமண பதிவாளர் சட்டபடி திருமணமும் செய்து வைத்தபின் கணவனிடம் இருந்து மனைவியை குண்டுகட்டா தூக்கி போகும் பெற்றார்தான் மகளை கடத்தியதாக கருதப்படும்.

நன்றி.

பெட்டைக்கு 18 வயது இல்லையாம் எண்டு வேற எங்கையோ வாசிச்ச நிணைவு. சரி விடுங்க....

இந்தியாவி்ல் ஆணுக்கு 21 , பெண்ணுக்கு 18

எனக்கெண்டா, 18 முடியவேணுமா, 17 முடியவேணுமா எண்டதை ஒருக்கா விளக்கேலுமே. 😁

நான் பிழை விடப்படாது, கண்டியளே.... 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, valavan said:

பழகிவிட்டு கழட்டிவிடவில்லை. சட்டப்படி பதிவு திருமணம் செய்திருக்கிறார். காதலி கையை விட்டு போனதும் உயிரையே மாய்த்துக்கொள்ள தயாராகிவிட்டார்.

கொஞ்சம் சீரியசான காதல்போல்தான் தெரிகிறது, எனது இனம் கலப்பினமாவதை நிச்சயமாக மனசு ஏற்காது  அதே நேரம் ஒரு உள் நோக்கமில்லாத உண்மை காதலாக  அது இருந்து  காதலர்கள் பிரிக்கப்பட்டு அவர்களை அழ வைத்தால்  அது மனசுக்கு கவலையான ஒன்றுதான்.

பாதிக்கப்பட்ட சிங்கள குடும்பம் ஏழை அல்லது பெரும் அந்தஸ்து செல்வாக்கு இல்லாத குடும்பம் போலிருக்கும் என்று நினைக்கிறேன், இல்லையெனின்  வடபகுதியில் ராணுவ ஆட்சி அதிகாரம் உள்ள நிலையில் கடத்தி சென்றவர்களை யாழ்ப்பாணம் வரை பின்னால் கலைச்சுகொண்டு போய் பொலிஸ் ஆதரவுடன் அவர்களை தாக்கி பெண்ணை இழுத்துக்கொண்டு வந்திருப்பார்கள்.

இப்படி ரெலிபோன் கம்பத்தில் ஏறி நின்று ஒப்பாரி வைத்திருக்கமாட்டார்கள்.

பெண்ணின் பெற்றோர் பணம், செல்வாக்கு உள்ளவர்களாயிருக்கவேண்டும், இல்லையெனில் ஒரு சிங்களவனை வவுனியாவில் வைச்சு தாக்கி  பெண்ணை மீட்டு செல்வது அத்தனை சுலபமான ஒன்றல்ல.

எல்லாம் ஒரு அனுமானம்தான், எது எப்படியோ வேறு இனத்தவனை காதலிப்பது என்று முடிவெடுத்தாகிவிட்டது அது அவர்கள் பிரச்சனை, 

காதலிச்சதுதான் காதலிச்சீர்கள், ஒரு முஸ்லீமை காதலிக்காது சிங்களவனை காதலிச்சது மனசுக்கு சிறு ஆறுதல்.

இஸ்லாமியர்களை காதலித்தால் மறுகணம் முட்டாக்கு போட்டுக்கொண்டு குரான் ஓதி முழு இஸ்லாமியராக மாறியே ஆகவேண்டும், அது ஒரு உள்நோக்கம் கொண்ட காதல்.

ஒரு சிங்களவனை காதலித்தால் திருமணம் செய்தால் எந்தகாலமும் இனமாற்றம் நிகழபோவதில்லை, அவர்களது சந்ததிகூட அப்பா சிங்களம், அம்மா தமிழ் என்றே சொல்லி வாழும்.

உண்மைதான் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்பில் நாம் “இனம் பெருக்கிறம் பேர்வழி” எண்டு தலையிட முடியாது.

இல்லாவிட்டால் தனது சாதி வெறியை மறைக்க “நாடக காதல்” என்று ஒன்றை கற்பித்து, அதன் வழி ஆணவ கொலைகளை ஊக்குவிக்கும் இராமதாஸ் போல நாமும் ஆகிவிடுவோம்.

நடந்ததை பார்க்க உண்மை காதல் போலவே தெரிகிறது.

31 minutes ago, valavan said:

ஒரு சிங்களவனை காதலித்தால் திருமணம் செய்தால் எந்தகாலமும் இனமாற்றம் நிகழபோவதில்லை, அவர்களது சந்ததிகூட அப்பா சிங்களம், அம்மா தமிழ் என்றே சொல்லி வாழும்.

இது எவ்வளவுதூரம் சரி என தெரியவில்லை. வவுனியா தெற்கில் வளரும் இவர்களின் குழந்தையும், தாயும் சிங்களவர்களாகவே மாறிவிடுவார்கள். இரெண்டு சந்ததிக்குள், அம்மாம்மாவின் பெற்றோர் தமிழர் என்ற நிலை வரும். 

இதுதான் சிங்கள இனத்தின் வட்டத்தை பெருபிக்கும் உத்தி.

எம்மை விட காலத்தால் மிக இளைய இனம், அருகில் தமிழ்நாடு போல ஒரு நிலப்பரப்பு இல்லை. ஆனாலும் இலங்கையில் 75% எப்படி சிங்களவர்கள்?

இந்த அணுகுமுறைதான் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

பெட்டைக்கு 18 வயது இல்லையாம் எண்டு வேற எங்கையோ வாசிச்ச நிணைவு. சரி விடுங்க....

சரி விடுவம், எங்கயோ வாசிச்சதுதானே? 🤣.

14 minutes ago, Nathamuni said:

இந்தியாவி்ல் ஆணுக்கு 21 , பெண்ணுக்கு 18

ஓம் ஆனால் வவுனியா சிறிலங்காவிலதானே இருக்கு🤣.

16 minutes ago, Nathamuni said:

எனக்கெண்டா, 18 முடியவேணுமா, 17 முடியவேணுமா எண்டதை ஒருக்கா விளக்கேலுமே. 😁

இது பழைய போத்துகீசர் இலங்கைக்கு எந்த நூற்றாண்டு வந்தனர் என்ற பிரச்சனையின் தொடர்சியோ?🤣. பகிடிதான்.

உங்களுக்கு உங்கட 1st birthday முடிஞ்ச அடுத்த நாள் எத்தனை வயசு எண்டு யோசிச்சா….பதில் டபக்கெண்டு வந்திடும்.

19 minutes ago, Nathamuni said:

நான் பிழை விடப்படாது, கண்டியளே.... 😜

லேட்டாகவேணும் இந்த நிலைப்பாட்டுக்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள். இனி ஏறுமுகம்தான்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

உண்மைதான் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்பில் நாம் “இனம் பெருக்கிறம் பேர்வழி” எண்டு தலையிட முடியாது.

இல்லாவிட்டால் தனது சாதி வெறியை மறைக்க “நாடக காதல்” என்று ஒன்றை கற்பித்து, அதன் வழி ஆணவ கொலைகளை ஊக்குவிக்கும் இராமதாஸ் போல நாமும் ஆகிவிடுவோம்.

நடந்ததை பார்க்க உண்மை காதல் போலவே தெரிகிறது.

இது எவ்வளவுதூரம் சரி என தெரியவில்லை. வவுனியா தெற்கில் வளரும் இவர்களின் குழந்தையும், தாயும் சிங்களவர்களாகவே மாறிவிடுவார்கள். இரெண்டு சந்ததிக்குள், அம்மாம்மாவின் பெற்றோர் தமிழர் என்ற நிலை வரும். 

இதுதான் சிங்கள இனத்தின் வட்டத்தை பெருபிக்கும் உத்தி.

எம்மை விட காலத்தால் மிக இளைய இனம், அருகில் தமிழ்நாடு போல ஒரு நிலப்பரப்பு இல்லை. ஆனாலும் இலங்கையில் 75% எப்படி சிங்களவர்கள்?

இந்த அணுகுமுறைதான் காரணம்.

இதனால் தான் தமிழர்கள் இனத்தூய்மை என்ற மாயமானைத் தலையில் தூக்கி வைத்து, இருக்கும் சனத்தொகையையும் குறைத்துக் கொள்ளக் கூடாது என நினைக்கிறேன்.

சிங்களவர்கள் இப்படி ஒதுக்காமல் உள்வாங்கி 75% ஆகி விட்டார்கள் - நாம் ஒதுக்கி, வெட்டி, பொலிஷ் போட்டு 10% இற்குக் கீழ் போய் விடுவோம்! 😂

21 minutes ago, Nathamuni said:

நன்றி.

பெட்டைக்கு 18 வயது இல்லையாம் எண்டு வேற எங்கையோ வாசிச்ச நிணைவு. சரி விடுங்க....

இந்தியாவி்ல் ஆணுக்கு 21 , பெண்ணுக்கு 18

எனக்கெண்டா, 18 முடியவேணுமா, 17 முடியவேணுமா எண்டதை ஒருக்கா விளக்கேலுமே. 😁

நான் பிழை விடப்படாது, கண்டியளே.... 😜

17.9 இற்கும் 18.0 இற்கும் வேறுபாடு தெரியாமல் கத்தி முனையில நடந்திருக்கிறீங்கள் போலிருக்கே? கவனம் நாதம், இருப்பது யு.கே!😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இது எவ்வளவுதூரம் சரி என தெரியவில்லை. வவுனியா தெற்கில் வளரும் இவர்களின் குழந்தையும், தாயும் சிங்களவர்களாகவே மாறிவிடுவார்கள். இரெண்டு சந்ததிக்குள், அம்மாம்மாவின் பெற்றோர் தமிழர் என்ற நிலை வரும். 

எனக்கு தெரிந்த நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த தமிழர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு தமிழ் பேச தெரியும் ஆனால் எழுத வராது, சிங்களத்தில் சரளமாக பேசவும் எழுதவும் அவரால் முடியும்.

அவர் சொன்னார் தமது பகுதியில் பல தமிழ் குடும்பங்கள் சில தலைமுறைக்கு முன்னரே சிங்கள வழி கல்வி என்றும் பெளத்த மதத்திற்கு மாறியும் கலப்பு திருமணங்கள் செய்தும் முழு சிங்களவர்களாகவே மாறிவிட்ட பின்பும் பெரும்பான்மை கடும்போக்கு சிங்கள வாதிகள் அவர்களை இன்றும் சிங்களவர்கள் என்றே ஏற்றுக்கொள்ளவில்லை என்று.

தமிழர் தரப்பிலும் சரி சிங்களவர்கள் தரப்பிலும் சரி கலப்பு ரீதியாக குடும்பமானவர்களை காலம் காலமாக முழுமையாக  எமது இனம் என்று ஏற்றுகொள்பவர்கள் குறைவு, எப்போதும் ஒரு தூர பார்வையுடனேயே இருபக்கமும் பார்க்கும் என்பதை இலங்கையில் வாழ்ந்த காலங்களில்  சில இடங்களில் இரு பக்கமும் அவதானித்திருக்கிறேன்.

நாங்கள் மனதளவில் மலையக தமிழர்களை எமது தமிழ் மக்கள் என்று இன்றும் ஏற்றுக்கொள்ளாததுபோல்தான் இந்த கலப்பு திருமண தம்பதிகள் தலைமுறைகளின் வாழ்வும் தொடரும் என்றே நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

லேட்டாகவேணும் இந்த நிலைப்பாட்டுக்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள். இனி ஏறுமுகம்தான்🤣.

ஆறுமுகத்தாரை நம்பிறதால, ஏறுமுகம் தான்.

அந்த கிரிப்டோ கரண்சி விசயம் தான், கோசன் அண்ணரை நம்பேலுமா எண்டு யோசணை.... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, valavan said:

எனக்கு தெரிந்த நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த தமிழர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு தமிழ் பேச தெரியும் ஆனால் எழுத வராது, சிங்களத்தில் சரளமாக பேசவும் எழுதவும் அவரால் முடியும்.

அவர் சொன்னார் தமது பகுதியில் பல தமிழ் குடும்பங்கள் சில தலைமுறைக்கு முன்னரே சிங்கள வழி கல்வி என்றும் பெளத்த மதத்திற்கு மாறியும் கலப்பு திருமணங்கள் செய்தும் முழு சிங்களவர்களாகவே மாறிவிட்ட பின்பும் பெரும்பான்மை கடும்போக்கு சிங்கள வாதிகள் அவர்களை இன்றும் சிங்களவர்கள் என்றே ஏற்றுக்கொள்ளவில்லை என்று.

தமிழர் தரப்பிலும் சரி சிங்களவர்கள் தரப்பிலும் சரி கலப்பு ரீதியாக குடும்பமானவர்களை காலம் காலமாக முழுமையாக  எமது இனம் என்று ஏற்றுகொள்பவர்கள் குறைவு, எப்போதும் ஒரு தூர பார்வையுடனேயே இருபக்கமும் பார்க்கும் என்பதை இலங்கையில் வாழ்ந்த காலங்களில்  சில இடங்களில் இரு பக்கமும் அவதானித்திருக்கிறேன்.

நாங்கள் மனதளவில் மலையக தமிழர்களை எமது தமிழ் மக்கள் என்று இன்றும் ஏற்றுக்கொள்ளாததுபோல்தான் இந்த கலப்பு திருமண தம்பதிகள் தலைமுறைகளின் வாழ்வும் தொடரும் என்றே நினைக்கிறேன்.

மேலோட்டமாக இப்படி தெரிந்தாலும்  இதில் சில நுணுக்கமான வேறுபாடுகள் உள்ளன.

நீர்கொழும்பு சிங்களவர்களை மேல் நாட்டு சிங்களவர்கள் தமக்கு சமமாக ஏற்காவிடினும், அவர்களும் சிங்களவரே என அடையாளப்படுத்துவதில் மிக தீவிரமாக இருப்பார்கள்.

அதே போல் அவர்களுக்கு இன வெறியை திணிப்பதிலும் முன்னுக்கு நிற்பார்கள்.

அவர்களும் தமது “சிங்களதன்மையை நிரூபிக்க” முடிந்தளவு இனவாதத்தை கக்குவார்கள்.

கிட்டதட்ட ஐந்தாம் வேததுக்கு மாறியவர்கள் போல.

பண்டாரநாயக்க, ஜே ஆர், இப்படி பல இனவாதிகள் தமது “அடி” கேள்விக்கு உள்ளாகும் என பயந்தமையும் அவர்கள் இனவாதத்தை இறுக்கி பிடிக்க ஒரு காரணம். 

ஆகவே இது வட்டத்தை பெருபிக்கும் உத்திதான். 

நீ ஒரு போதும் மலைநாட்டு சிங்களவன் ஆக முடியாது ஆனால் நீ கீழ்நாட்டு சிங்களவன் என்பதை நாம் தொடர்ந்தும் ஏற்க நீ உனது “சிங்களதுவத்தை” தொடர்ந்தும் (தமிழனை அடிப்பதன் மூலம்) நிருபிக்க வேண்டும்.

ஆனால் குடிசன மதிபீட்டில், கலவரத்துக்கு ஆள் சேர்க்க, ஆமியில் சேர, நவீன துட்டு காமினியே நாட்டை காக்க வா என்று உசுப்பேத்த உன்னை சிங்களவனாக ஏற்றுகொள்வோம். 

இந்த ஜோடிக்கு பிறக்கும் பிள்ளை தனது பதிவுகளில் தன்னை சிங்களம் என்றே அடையாளம்படுத்தும். குடும்ப, சமூக, வாய்ப்பு என ஒவ்வொரு மட்டத்திலும் அப்படி செய்வதே இலாபம் என அழுத்தம் கொடுத்து, அப்படி செய்ய வைக்கும் தந்திரம் அவர்களுக்கு இருக்கிறது. 

30 minutes ago, Nathamuni said:

கோசான்  அண்ணரை நம்பேலுமா எண்டு யோசணை.... 😁

யோசனை வேண்டாம். ஜெயலலிதா கடாட்சம் கிட்டும். தளரவிடாதேங்கோ ,மனசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த ஒரு இளம் குடும்பம் வன்னியில் உள்ளது.கணவன் சிங்களம் மனைவி தமிழ்.இருவரும் இரன்டு மொழியும் கதைப்பார்கள்.ஆனால் இருவரும் மற்ற மொழி எழுத மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, சுவைப்பிரியன் said:

எனக்கு தெரிந்த ஒரு இளம் குடும்பம் வன்னியில் உள்ளது.கணவன் சிங்களம் மனைவி தமிழ்.இருவரும் இரன்டு மொழியும் கதைப்பார்கள்.ஆனால் இருவரும் மற்ற மொழி எழுத மாட்டார்கள்.

அவர்களுக்கு பிள்ளை உண்டா? இருந்தால் என்ன மொழியில் (போதனை மொழி) படிக்கிறது?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அவர்களுக்கு பிள்ளை உண்டா? இருந்தால் என்ன மொழியில் (போதனை மொழி) படிக்கிறது?

 

இது ஒருவர் வேதத்திலும் மற்ரவர் சைவத்திலும் திருமணம் முடிக்கும்போது வரும் பரிதாப நிலை கண்டியளோ.. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

இது ஒருவர் வேதத்திலும் மற்ரவர் சைவத்திலும் திருமணம் முடிக்கும்போது வரும் பரிதாப நிலை கண்டியளோ.. 🤣

ஆனால் இருவரும் தமிழாக இருந்தால் - பொதுவாக மீனாட்சி எந்த மதமோ அந்த மதத்தில் பிள்ளை வளரும் என்பது சம்பிரதாயம்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அவர்களுக்கு பிள்ளை உண்டா? இருந்தால் என்ன மொழியில் (போதனை மொழி) படிக்கிறது?

 

 

3 hours ago, சுவைப்பிரியன் said:

எனக்கு தெரிந்த ஒரு இளம் குடும்பம் வன்னியில் உள்ளது.கணவன் சிங்களம் மனைவி தமிழ்.இருவரும் இரன்டு மொழியும் கதைப்பார்கள்.ஆனால் இருவரும் மற்ற மொழி எழுத மாட்டார்கள்.

நீங்கள் இதுக்கே கனக்க யோசிக்கிறியள்.. இங்க வெளிநாட்டில தாய்தேப்பன் தமிழ் தாய்மொழி பிள்ளையள் இன்னொரு மொழி தாய்மொழி.. இரெண்டுபேரும் ரெண்டுபேரிண்ட தாய்மொழியும் கதைப்பினம் ஆனால் ரெண்டு பேரும் மற்றவையின்ர தாய்மொழிய எழுதமாட்டினம்.. ஜரோப்பா வாழ் தமிழர்குடும்பங்களில் இது இன்னும் மோசம்.. பிள்ளையள் தாய்தேப்பன்ர தாய்மொழி கதைப்பினம் ஆனால் தாய்தேப்பன் பிள்ளையளின்ர தாய்மொழி கதைக்கமாட்டினம்.. இந்த மொழி சம்பந்தமா அண்மையில் ஒரு திரி ஓடினது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

நீங்கள் இதுக்கே கனக்க யோசிக்கிறியள்.. இங்க வெளிநாட்டில தாய்தேப்பன் தமிழ் தாய்மொழி பிள்ளையள் இன்னொரு மொழி தாய்மொழி.. இரெண்டுபேரும் ரெண்டுபேரிண்ட தாய்மொழியும் கதைப்பினம் ஆனால் ரெண்டு பேரும் மற்றவையின்ர தாய்மொழிய எழுதமாட்டினம்.. ஜரோப்பா வாழ் தமிழர்குடும்பங்களில் இது இன்னும் மோசம்.. பிள்ளையள் தாய்தேப்பன்ர தாய்மொழி கதைப்பினம் ஆனால் தாய்தேப்பன் பிள்ளையளின்ர தாய்மொழி கதைக்கமாட்டினம்.. இந்த மொழி சம்பந்தமா அண்மையில் ஒரு திரி ஓடினது..

இல்லை நான் கேட்ட காரணம். எனக்கு தெரிய பெற்றாரில் ஒருவர் சிங்களம், ஒருவர் தமிழர் என்றால் பிள்ளைகள் தமிழ் மொழி மூலம் படிப்பது வெகு அரிது. சிலநேரம் வன்னியில் என்றபடியால் மாறி நடந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

3 minutes ago, goshan_che said:

இல்லை நான் கேட்ட காரணம். எனக்கு தெரிய பெற்றாரில் ஒருவர் சிங்களம், ஒருவர் தமிழர் என்றால் பிள்ளைகள் தமிழ் மொழி மூலம் படிப்பது வெகு அரிது. சிலநேரம் வன்னியில் என்றபடியால் மாறி நடந்திருக்கலாம்.

சென்னைக்கு அனுப்புங்கோ - புள்ளைகள் எல்லாம் இங்கிலிசை தாய்மொழி ஆக்கிடும் - பிரச்சினை தீர்ந்துது. 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, goshan_che said:

ஆனால் இருவரும் தமிழாக இருந்தால் - பொதுவாக மீனாட்சி எந்த மதமோ அந்த மதத்தில் பிள்ளை வளரும் என்பது சம்பிரதாயம்🤣.

என்னுடைய உறவினர்களிருவர் மணந்தது சைவ சமயத்தில். ஆண் பிள்ளைகள் சைவம், பெண் பிள்ளைகள் கிறீஸ்தவம். 

காரணம், தகப்பனுக்கு இறுதிச் சடங்கு(கொள்ளி வைக்க) செய்ய ஆண் வாரிசு வேண்டும். 

இதுவும் லவ் ஜிகாத் தானோ ..🤣

13 minutes ago, கற்பகதரு said:

சென்னைக்கு அனுப்புங்கோ - புள்ளைகள் எல்லாம் இங்கிலிசை தாய்மொழி ஆக்கிடும் - பிரச்சினை தீர்ந்துது. 😃

இது எப்பிடி இருக்கு 🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kapithan said:

இது எப்பிடி இருக்கு 🤣🤣

 

57 minutes ago, கற்பகதரு said:

சென்னைக்கு அனுப்புங்கோ - புள்ளைகள் எல்லாம் இங்கிலிசை தாய்மொழி ஆக்கிடும் - பிரச்சினை தீர்ந்துது. 

🤣 ஜூட் அண்ணா ஆகவும் பெட்டிக்கு வெளியால திங்க் பண்ண வேண்டாம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட விடயம் அதே நேரம் உண்மையில் இந்த பெற்றோரைத்தான் கைது செய்திருக்கவேண்டும்..ஆனால் ஒரு ஆதங்கம்.  ஏற்கனவே குறைந்து கொண்டு வருகிறோம்(அதற்காக  தன் பொருளாதார நிலையை மீறி பல பிள்ளைகளை பெறவேண்டும் என கூறமாட்டேன்).. ஆனால் இவை அதிகரிப்பதற்கான காரணங்கள்? 

- சீதனம்?

- சாதி?

- தமிழ் இளைஞர்களின் பழக்கவழக்கங்கள்?

- வேலைவாய்ப்பு, கல்வியறிவு வீதத்தில் ஆண்களை விட பெண்கள் படித்து முன்னேறி வருவதும், அவர்களுக்கு சம மான ஆண்கள் இல்லாமை? 

- ஊர், பிரதேச பிரிவினைகள்? 

- இல்லை ஓரிரண்டு சம்பவங்களை ஊடகங்கள் பெரிதுபடுத்தி ஒரு trend உருவாக்கி திட்டமிட்ட முறையில் ஊக்குவிக்கப்படுகிறதா? 

ஒன்றில் இனம் மாறி திருமணம் செய்கிறார்கள் இல்லை திருமணம் செய்யாமல் தனித்து வாழ்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மையில் இந்த பெற்றோரைத்தான் கைது செய்திருக்கவேண்டும்.

💯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கற்பகதரு said:

சென்னைக்கு அனுப்புங்கோ - புள்ளைகள் எல்லாம் இங்கிலிசை தாய்மொழி ஆக்கிடும் - பிரச்சினை தீர்ந்துது. 😃

சென்னையிலும் இனி ஹிந்தி தானாக்கும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.