Jump to content

கொரோனா வைரஸ்: இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கூட வைரஸை பரப்பலாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • மிஷெல் ராபர்ட்ஸ்
  • சுகாதார செய்தியாளர், பிபிசி இணைய செய்திகள்

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்குக்கூட கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர்களுடன் இருப்பவர்களுக்கு பரவுவதாக பிரிட்டன் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எப்படி கொரோனாவை பரப்புகிறார்களோ, அதே போல இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் பரப்புகிறார்கள்.

அவர்களுக்கு எந்தவித கொரோனா அறிகுறிகளும் இல்லை என்றாலும் அல்லது குறைவான கொரோனா அறிகுறிகள் இருந்தாலும், அவர்களுடன் வீட்டில் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாக இருந்தால், அவர்களில் ஐந்தில் இரு பகுதியினருக்கு அல்லது 38 சதவீதத்தினருக்கு வைரஸை பரப்புகிறார்கள்.

ஒருவேளை வீட்டில் உள்ள அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருந்தால், இந்த எண்ணிக்கை நான்கில் ஒரு பங்காக அல்லது 25 சதவீதமாக குறைகிறது.

ஏன் நிறைய மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமென 'தி லேன்செட்' என்கிற மருத்துவ சஞ்சிகை தன் கட்டுரையில் கூறியுள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், தங்களைச் சுற்றியுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள் என்பதாலேயே அவர்கள் தொற்றை பரப்பமாட்டார்கள் என்று நம்ப முடியாது என அந்தக் கட்டுரை எச்சரிக்கிறது.

கொரோனா தடுப்பூசிகள் கொரோனா தொற்றின் தீவிரத்தன்மை மற்றும் மரணங்களைத் வெகு சிறப்பாக தவிர்த்துள்ளன. ஆனால் கொரோனா நோய் பரவலைத் தடுப்பதில், குறிப்பாக அதிகம் பரவக் கூடிய கொரோனாவின் டெல்டா திரிபுக்குப் பிறகு அத்தனை சிறப்பாக செயல்படவில்லை.

கொரோனா தடுப்பூசி வழங்கும் பாதுகாக்கும் குறையும் தரவு விவரம்
 
படக்குறிப்பு,

கொரோனா தடுப்பூசி வழங்கும் பாதுகாக்கும் குறையும் தரவு விவரம்

மேலும் காலப் போக்கில் கொரோனா தடுப்பூசிகளால் கிடைக்கும் பதுகாப்பும் குறைகிறது, புதிய பூஸ்டர் டோஸ்கள் தேவைப்படுகின்றன.

வீட்டில் குடும்பங்கள் வழியாகத்தான் பெரும்பாலும் கொரோனா தொற்று பரவுகிறது. எனவே, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியான,

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சரியாக தடுப்பூசி செலுத்திக் கொள்வது அர்த்தமுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

செப்டம்பர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரை ஆய்வு நடத்தப்பட்டது. அதில் லண்டன் மற்றும் போல்டன் பகுதியில் உள்ள 440 குடும்பங்களும் சேர்க்கப்பட்டு பி சி ஆர் கொரோனா பரிசோதனை செய்தபோது:

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களோடு ஒப்பிடும் போது, இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு டெல்டா திரிபு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவு என்றாலும், குறிப்பிடும் வகையில் உள்ளது. அது வெறுமனே ஒருதொற்று போலத்தான் தெரிகிறது.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், தொற்றிலிருந்து விரைவாக குணமடைகிறார்கள், ஆனால் அவர்களின் வைரல் லோட், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு இணையாகவே உள்ளது.

எனவே, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கூட, வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனாவை பரப்ப முடியும் என்பதை இது விளக்குகிறது.

"தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களால் கொரோனா பரவுவதைக் காணும் போது, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொண்டு தங்களைத் தாங்களே தொற்றிலிருந்தும், நோயின் தீவிரத்தன்மையிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குளிர் காலத்தில் பலரும் வீட்டுக்குள் நிறைய நேரத்தை நெருக்கமாக செலவழிக்க இருக்கும் போது இது அவசியமாகிறது" என ஆய்வை இணைந்து தலைமை தாங்கி நடத்திய லண்டனின் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் அஜீத் லால்வானி கூறுகிறார்.

கொரோனா வைரஸ் - கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கொரோனா வைரஸ் - கோப்புப் படம்

"தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்ட சில மாதங்களுக்குப் பிறகு, கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகரித்திருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். எனவே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள் முறையாக செலுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

இந்த ஆய்வை இணைந்து நடத்திய இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த அனிகா சிங்கநாயகம் "புதிய கொரோனா திரிபுகளை எதிர்கொண்டு வரும் இந்த நேரத்தில் எங்கள் கண்டுபிடிப்புகள் தடுப்பூசியின் தாக்கம் குறித்த முக்கிய விவரங்களை வழங்குகிறது, அதிகம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நாடுகளில்கூட, குறிப்பாக உலக அளவில் ஏன் டெல்டா திரிபால் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்கிற விவரங்களை வழங்குகிறது.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கூட, கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, பரிசோதனைகளை மேற்கொள்வது போன்ற பொது சுகாதார மற்றும் சமூக நடவடிக்கைகளை கடைபிடிப்பது தொடர்ந்து அவசியமாகிறது" என அவர் கூறினார்.

கொரோனா வைரஸ்: இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கூட வைரஸை பரப்பலாம் - ஆய்வு சொல்வதென்ன? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தான் இன்னொரு திரியில் ஐஸ்டினுக்கு சொல்ல வந்தேன் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைரஸ், தடுப்பூசி போட்டுக் கொண்டருடன் மல்லகட்டாது, அவருக்கு நெருக்கமான, போடமாட்டேன் என்று அடம் பிடிப்பவர் மேல் தாவும்.

இதில் பிரச்சணை, ஊசி போட்டவருக்கு வைரஸ் இருப்பதே தெரியாமல் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இதைத் தான் இன்னொரு திரியில் ஐஸ்டினுக்கு சொல்ல வந்தேன் 
 

ஆம், ஜஸ்ரினுக்கு விளங்கியது - ஆனால் ஊசி போடாதவர்கள் போல ஊசி எடுத்துக் கொண்டவர்களால் பரப்ப இயலாது!

ஊசி போடும் வயதில்லாத மகளுக்கு கொரனா வந்து போனது - பிரச்சினைகள் இல்லை: ஊசி போட்ட நானும் மனைவியும் பொசிரிவாக வரவில்லை!

இது தான் சொல்லியிருந்தேன், ஊசி போட்டுக் கொண்டோர் சமூகப் பரவலில் செலுத்தும் பங்களிப்பு மிகக் குறைவு! எனவே, இது ஊசி போட்டுக் கொள்ளாமலிருக்க ஒரு சாட்டு அல்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய நண்பி பைசர் இரு ஊசிகளும் போட்டு கொண்டார்...ஊசி போட்டு இரு மாதத்திற்கு பிறகு குடும்பத்தோட கொரோனா வந்திட்டுது ...என்னை பொறுத்த வரை நோய் எதிர்த்து சக்தியை ஒவ்வொருவரும் தங்களுக்குள் வளர்த்து கொண்டால் இப்படியான நோய்களில் இருந்து தப்பிக்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  

  

On 17/1/2021 at 18:38, ரதி said:

நெடுக்ஸ் , இந்த ஊசி போட்டவர்கள் அதற்கு பிறகு மாஸ்க் போடாமல் பயமில்லாமல்  வெளியே போகலாமா ?

 

On 17/1/2021 at 19:05, nedukkalapoovan said:

இல்லை. அரசாங்கம் அதன் மருத்துவ.. விஞ்ஞான நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு அமைய..  அறிவிக்கும் வரை தொடர்ந்து அணிய வேண்டும்.

மேலும்.. புதிய மாறல் கொவிட்-19 வைரசுக்களின் தாக்கமும் இந்தத் தடுப்பூசியின் விளைவுகளும் பொறுத்து சரியான உறுதிப்படுத்தல்கள் வரும் வரை.. எல்லா தனிநபர் பாதுகாப்பு பொறிமுறைகளும் பின்பற்றப்பட்டே ஆக வேண்டும். 

தொற்றுக் கண்டவரோடு.. தொற்றற்றவர்கள் நெருங்கிப் பழகினால் அவர்கள்.. அந்த வைரசின் பெளதீகக் காவிகளாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே.. எல்லா சுகாதார நடைமுறைகளும்.. எந்த அரசாங்க அறிவித்தலும் இன்றி கைவிடப்பட முடியாது. அது தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். 

இது பற்றி கடந்த ஜனவரியில் இன்னொரு தலைப்பில் எங்கள் கருத்துப்பரிமாற்றமும்.. இந்த தலைப்புக்கு சாலப் பொருந்திச் செல்கிறது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎31‎-‎10‎-‎2021 at 19:17, nedukkalapoovan said:

  

  

 

இது பற்றி கடந்த ஜனவரியில் இன்னொரு தலைப்பில் எங்கள் கருத்துப்பரிமாற்றமும்.. இந்த தலைப்புக்கு சாலப் பொருந்திச் செல்கிறது. 

 

நன்றி ...என்னுடைய சந்தேகம் இரு ஊசிகள் போட்டவர்களுக்கும் கொரோனா வரக் கூடிய சந்தர்ப்பம் இருக்கு ...அவர்களும் நோய் காவிகளாய் இருக்க கூடும் ...அப்படி இருக்கும் போது எப்படி சில பொது இடங்களில் ஊசி போட்டதை மட்டும் அடிப்படையாய் வைத்து அனுமதி கொடுக்கிறார்கள்?...அது பிழை அல்லவா ?...அதை விட  டெம்ப்ரேய்ச்சர் செக் பண்ணி உள்ளே விடுவது நல்ல முறை அல்லவா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

நன்றி ...என்னுடைய சந்தேகம் இரு ஊசிகள் போட்டவர்களுக்கும் கொரோனா வரக் கூடிய சந்தர்ப்பம் இருக்கு ...அவர்களும் நோய் காவிகளாய் இருக்க கூடும் ...அப்படி இருக்கும் போது எப்படி சில பொது இடங்களில் ஊசி போட்டதை மட்டும் அடிப்படையாய் வைத்து அனுமதி கொடுக்கிறார்கள்?...அது பிழை அல்லவா ?...அதை விட  டெம்ப்ரேய்ச்சர் செக் பண்ணி உள்ளே விடுவது நல்ல முறை அல்லவா 

தடுப்பூசி அதன் இயல்பூக்க திறன் குறையாத வரை.. அது தூண்டு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் வரை குறித்த நபர்களுக்கு நோய் தொற்று வந்தாலும் ஆபத்தான சூழலுக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு வெகு குறைவு. ஆனால்.. அவர்கள் தனிச்சுகாதாரப் பழக்க வழக்கங்களை துறப்பின்... பெளதீகக் காவிகளாக இருந்து நோய் தொற்றுக்கு கணிசமான பங்களிப்பை செய்து கொண்டே இருப்பர். அது தடுப்பூசி போடாதவர்கள்.. போட்டு அதன் இயல்பூக்கச் செயற்பாடு குறைந்தோரில்.. நோய் பாதிப்பை அதிகப்படுத்தும்.

பைசர்.. அன்ராசெனிக்கா போட்டவர்களில் கூட 6 மாதம் கடந்தால்.. அதன் இயல்பூக்க நோய் எதிர்ப்பு சக்தி.. வெகுவாகக் குறைந்து நோய் தொற்றுக்கு இலக்காகவும்.. நோய் பரப்புகையை கூட்டவும் வகை செய்வார்கள்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில்.. உடல்வெப்பநிலை பரிசோதனை.. தனிமனித சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றக் கோருவது.. ஓரளவுக்கு புதிய தொற்றுக்களை மட்டுப்படுத்த உதவலாம். தடுப்பூசி போட்டுக் கொள்வதோடு இணைந்ததாக. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஜஸ்ரின் , நெடுக்காலபோவான் எனக்கு ஒரு சந்தேகம் தடுப்பூசி உற்பத்தியில் தற்ப்போது பயன்படுத்தும் கண்ணாடி குப்பிக்குப்பதிலாக (Vials) பிளாஸ்ரிக்கில் (Polyethylene) உற்பத்தி செய்யலாமா? 

இதன் போது ஏற்படும் வெப்பத்தை குளிர்வூட்டலில் ஏறத்தாழ 40 - 50 பாகை செல்சியல் வரை குறைத்து அதனுள்  Viral Vector Vaccines மற்றும் mRNA Vaccines தயாரிக்கமுடியுமா? அப்படி தயாரிக்கும்போது வெப்பம் Vaccines தரத்தை பாதிக்காதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/11/2021 at 05:04, vasee said:

 ஜஸ்ரின் , நெடுக்காலபோவான் எனக்கு ஒரு சந்தேகம் தடுப்பூசி உற்பத்தியில் தற்ப்போது பயன்படுத்தும் கண்ணாடி குப்பிக்குப்பதிலாக (Vials) பிளாஸ்ரிக்கில் (Polyethylene) உற்பத்தி செய்யலாமா? 

இதன் போது ஏற்படும் வெப்பத்தை குளிர்வூட்டலில் ஏறத்தாழ 40 - 50 பாகை செல்சியல் வரை குறைத்து அதனுள்  Viral Vector Vaccines மற்றும் mRNA Vaccines தயாரிக்கமுடியுமா? அப்படி தயாரிக்கும்போது வெப்பம் Vaccines தரத்தை பாதிக்காதா?

வசி, 

GMP உற்பத்தி முறையில் மனித உடலில் செலுத்தப் படும் மருந்துகளை உருவாக்கும் போது அனேகம் கண்ணாடி தான் பயன்படுத்தப் படுகிறது. கண்ணாடி இலகுவாக தூய்மைப் படுத்தக் கூடியது, மாசுக்களை மருந்தில் கலக்காது என்பதால் இருக்கலாம். அதே நேரம் பொலிஎதிலீன், பொலிப்ரொபைலின் போன்றவையோடு  சில மருந்துப் பொருட்கள் ஒட்டிக் கொள்ளக் கூடியவை - எனவே பிளாஸ்ரிக் தவிர்க்கப் படுகின்றது என நினைக்கிறேன்.

உங்கள் வெப்ப நிலைக் கேள்வி விளங்கவில்லை: வெப்பம் அதிகரித்தால் வக்சீன் பாதிக்கப் படாதா என்கிறீர்களா அல்லது வெப்பம் அதிகுளிர் நிலைக்குக் குறைந்தால் வக்சீன் பாதிக்கப் படாதா என்கிறீர்களா? விளக்கம் தேவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

வசி, 

GMP உற்பத்தி முறையில் மனித உடலில் செலுத்தப் படும் மருந்துகளை உருவாக்கும் போது அனேகம் கண்ணாடி தான் பயன்படுத்தப் படுகிறது. கண்ணாடி இலகுவாக தூய்மைப் படுத்தக் கூடியது, மாசுக்களை மருந்தில் கலக்காது என்பதால் இருக்கலாம். அதே நேரம் பொலிஎதிலீன், பொலிப்ரொபைலின் போன்றவையோடு  சில மருந்துப் பொருட்கள் ஒட்டிக் கொள்ளக் கூடியவை - எனவே பிளாஸ்ரிக் தவிர்க்கப் படுகின்றது என நினைக்கிறேன்.

உங்கள் வெப்ப நிலைக் கேள்வி விளங்கவில்லை: வெப்பம் அதிகரித்தால் வக்சீன் பாதிக்கப் படாதா என்கிறீர்களா அல்லது வெப்பம் அதிகுளிர் நிலைக்குக் குறைந்தால் வக்சீன் பாதிக்கப் படாதா என்கிறீர்களா? விளக்கம் தேவை. 

வெப்பம் அதிகரித்தால் வக்சீன் பாதிப்படையாதா? என்பது எனது கேள்வியாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/11/2021 at 01:06, Justin said:

வசி, 

GMP உற்பத்தி முறையில் மனித உடலில் செலுத்தப் படும் மருந்துகளை உருவாக்கும் போது அனேகம் கண்ணாடி தான் பயன்படுத்தப் படுகிறது. கண்ணாடி இலகுவாக தூய்மைப் படுத்தக் கூடியது, மாசுக்களை மருந்தில் கலக்காது என்பதால் இருக்கலாம். அதே நேரம் பொலிஎதிலீன், பொலிப்ரொபைலின் போன்றவையோடு  சில மருந்துப் பொருட்கள் ஒட்டிக் கொள்ளக் கூடியவை - எனவே பிளாஸ்ரிக் தவிர்க்கப் படுகின்றது என நினைக்கிறேன்.

உங்கள் வெப்ப நிலைக் கேள்வி விளங்கவில்லை: வெப்பம் அதிகரித்தால் வக்சீன் பாதிக்கப் படாதா என்கிறீர்களா அல்லது வெப்பம் அதிகுளிர் நிலைக்குக் குறைந்தால் வக்சீன் பாதிக்கப் படாதா என்கிறீர்களா? விளக்கம் தேவை. 

பொலிஎதிலீன் குப்பிகளில் உடலினுள் செலுத்தும் மருந்துகளை உற்பட்த்தி செய்யும் ஒரு நிறுவனம் அவர்களது BFS Technology (ஊதி , நிரப்பி, அடைத்தல்) மூலம் ஒரு vector viral vaccine trials செய்துள்ளது

இதன் போது பொலிஎதிலீனை உருக்குவதற்கு குறைந்த பட்சமாக 175 பாகை C பயன்படுத்துகிறது

அனால் அச்சில் பொலிஎதிலினுள் மருந்தினை செலுத்தும் போது பொலிஎத்திலீன் வெப்பம் குறைந்த பட்சம் 40 C ஆக உள்ளது.

இந்த தொழில்னுட்பத்தினடிப்படையில் (BFS) vector viral vaccine and mRNA vaccine தயாரிக்க முயற்சிக்கிறது இது சாத்தியப்படுமா?

அதாவது பொலிஎதிலீன் வெப்பம் (40C) மருந்தினை பாதிகாதா?

மத்திய மானில அரசுகளிடம் பணம் பெறுவதற்காக வெறுமனே போலியான முயற்சிகளில் ஈடுபடுகிறார்களா?

அவுஸ்ரேலிய அரசிடமிருந்து கடந்த ஆண்டு ஆவணி மாதமளவில் 1 பில்லியனுக்கும் அதிகமான பணம் ஏற்கனவே பெற்றிருந்தது இந்த நிறுவனம், தற்போது இந்த ஆண்டு புதிய மானியத்திற்காக விண்ணப்பித்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/11/2021 at 19:10, vasee said:

பொலிஎதிலீன் குப்பிகளில் உடலினுள் செலுத்தும் மருந்துகளை உற்பட்த்தி செய்யும் ஒரு நிறுவனம் அவர்களது BFS Technology (ஊதி , நிரப்பி, அடைத்தல்) மூலம் ஒரு vector viral vaccine trials செய்துள்ளது

இதன் போது பொலிஎதிலீனை உருக்குவதற்கு குறைந்த பட்சமாக 175 பாகை C பயன்படுத்துகிறது

அனால் அச்சில் பொலிஎதிலினுள் மருந்தினை செலுத்தும் போது பொலிஎத்திலீன் வெப்பம் குறைந்த பட்சம் 40 C ஆக உள்ளது.

இந்த தொழில்னுட்பத்தினடிப்படையில் (BFS) vector viral vaccine and mRNA vaccine தயாரிக்க முயற்சிக்கிறது இது சாத்தியப்படுமா?

அதாவது பொலிஎதிலீன் வெப்பம் (40C) மருந்தினை பாதிகாதா?

மத்திய மானில அரசுகளிடம் பணம் பெறுவதற்காக வெறுமனே போலியான முயற்சிகளில் ஈடுபடுகிறார்களா?

அவுஸ்ரேலிய அரசிடமிருந்து கடந்த ஆண்டு ஆவணி மாதமளவில் 1 பில்லியனுக்கும் அதிகமான பணம் ஏற்கனவே பெற்றிருந்தது இந்த நிறுவனம், தற்போது இந்த ஆண்டு புதிய மானியத்திற்காக விண்ணப்பித்துள்ளது.

இந்த உற்பத்தி முறையின் தகவல்கள் பற்றி மேலதிகமாகத் தெரியாமல் பதில் சொல்வது கடினம். ஆனால், இது வரை மேற்கில் வெளிவந்த கோவிட் தடுப்பூசிகள் lyophilized powder எனப்படும் திண்மமாகத் தான் பொதி செய்யப் பட்டு , செலுத்தப் படும் இடத்தில் திரவமாகக் கரைக்கப் படுகின்றன. அப்படிக் கரைக்கப் பட்ட மருந்து குளிரூட்டியில் சில மணிநேரங்கள் அழியாமல் இருக்கும். எனவே, சேமித்து வைக்க (<-20 C) அதி குளிரூட்டல் தேவை - ஆனால் சிறிது நேர உயர் வெப்ப நிலை தடுப்பூசியை அழிக்காது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.