Jump to content

ஒரு நாடு ஒரு சட்டம்-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

இரு மொழி ஒரு நாடு 
ஒரு மொழி இரண்டு தேசம் 

-கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா 


இலங்கையில் ஏற்பட்டு வரும் பெரும் பொருளாதார சரிவுகளுக்கு பின் ராஜபக்சர்களின் மக்கள் செல்வாக்கு பெரும் சரிவை ஏற்பட்ட பின் மீண்டும் பேரினவாத பெரும் அரசியலை முன் எடுத்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று அரசியல் அமைப்பொன்றை உருவாக்கும் வகையில் ஏனைய இந்த நாட்டில் வாழும் தேசிய இனங்களை இரண்டாம் தரப் பிரஜைகள் ஆக்கி மீண்டும் மீண்டும் அமைதியும்  ஐக்கியமும் சமாதானமும் இல்லாததோர் தேசமாகவே இருண்ட யுகத்தை நோக்கி பயணிக்கவிருக்கிறது.

 ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லுவதன் மூலம் இந்த நாட்டில் வாழும் ஏனைய  இனங்களுக்கு நீங்கள் எல்லாம் மரத்தில் படரும் கொடிகள் மாத்திரமே என்று அந்த மக்களின் கன்னத்தில் அடித்து சொல்லியிருக்கிறார் ஜனாதிபதி. இந்த சிங்கள பௌத்த சித்தாந்தக் கொள்கையானது( Buddhist ideology ) இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களின் மனங்களை வெல்லுவதை விட இவர்களை இரண்டாம் தரப் பிரஜைகள் ஆக்குவதாகவே அமைவதோடு மாத்திரம் இன்றி இந்த நாட்டை ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு(Authoritarian rule ) வழி சமைப்பதாகவும் அமைந்து விடும் ஒரு அச்ச நிலைமையே இன்று காணப்படுகிறது.

 ஒரே நாடு ஒரே சட்டம் என்று இலங்கையில் எல்லா மக்களுக்கும் சமத்துவமான சட்டத்தை வழங்க அந்த நாட்டின் தலைவர் நல்ல சிந்தனை கொண்டு அமுல் நடத்துவதாக இருந்தால் இன்று அவர் ஏன் பெரும் குற்றம் செய்த பெரும் பான்மை சிங்கள இனத்தை சேர்ந்த குற்றவாளிகளுக்கு மட்டும் மன்னிப்பு வழங்கி அப்பாவி அரசியல் தமிழ்க் கைதிகளுக்கு இன்னும் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யாமல் இருக்கிறார்.இப்படி மனப்பான்மை கொண்ட ஒரு தலைவரால் எப்படி எல்லோருக்கும் ஒரே சமத்துவமான சட்டத்தை அமுல் படுத்த முடியும்.

பௌத்த பேரினவாத தேசிய சித்தாந்தக் கொள்கையைக் பின் பற்றி ஏனைய  மத மக்கள் மீது இனவாதத்தை விதைக்கும் ஒரு துறவி தலைமையில் கூடும் குழுவால் எல்லா இனங்களுக்கும் சமத்துவமான சட்டம் பரிந்துரைக்கப்படும் என்று எதிர் பார்க முடியுமா. இந்த நாட்டில் வாழும் ஏனைய சிறு பான்பை தேசிய இனங்களின் கருத்துக்களை உள்வாங்காமல் நடை முறைப்படுத்தப்படும் எந்தச் சட்டமும் ஒரு வகையில் தனி மனித சர்வாதிகாரம் தான்.நாட்டின் சட்டங்களை துஸ்ப்பிரயோகம் செய்வதாகவே அமையும். 

மதத்தை அடிப்படையாகக் கொண்டே இலங்கையின் அரசியல் வரலாறு தொடர்ந்து கொண்டே போகிறது மதமும் அரசியலும் சட்டமும் பிரிந்து பயணிக்காத வரையில் இந்த நாட்டின் எதிர் காலம் மாற்றத்துக்கு வருவது கடினமே. சர்வதேசதுக்கு தாங்கள் சமாதான தூதராகவும் காட்டி அதே வேளை புலம் பெயர் தமிழ் மக்களுடனும் பேசுவதாக அறிவித்து விட்டு முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளை ஏனைய தேசிய இனங்களுக்கு எதிராக நடை முறைப்படுத்தவுள்ளது . இதனால் தான் இன்று பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட புலம் பெயர் அமைப்புகளுடன் தாங்கள் பேசத் தயார் இல்லை என்றும் அறிவித்திருக்கின்றனர். இது பலருக்கு ஆச்சரிக்கமாக இல்லாத போதும் இலங்கை அரசோடு பேசத் தயாராக இருந்தவர்களும் அபிவிருத்தி பொருளாதாரம் என்று கதைத்தவர்களுக்கும் இது கொஞ்சம் ஏமாற்றமாகத் தான் இருக்கும். 

சட்டவாளர்களும் சட்ட அறிஞர்களும் இருக்கும் போது சட்டம் நீதியை மதிக்காதவர்களும் குற்றவாளிகளும் நாட்டின் சட்டங்களை அமுலாக்கும் பொறுப்பில் அமர்த்துவது இலங்கையைப் பெறுத்த வரையில் ஆச்சரியம் அளிப்பதாகவில்லை ஏனெலில் இங்கு சரியான நீதி இருப்பதாகவில்லை. இங்கு நீதி வழங்கிய தீர்ப்புகளில் இருந்து பலர் தப்பிப் கொள்கின்றனர். பல்லின சமுகங்கள் வாழும் இந்த நாட்டிலே இந்த சமூகங்களை புறக்கணித்து ஒரு நாடு ஒரு சட்டம் என்பது மேலும் மேலும் இந்த நாட்டில் பெரும் குழப்பங்களை உண்டு பண்ணி வளமை போலவே அமைதியும் சமாதானம் இன்றி தொடர்ந்து வாழ வேண்டிய நிலை தான் ஏற்படும். 

காலம் காலமாக இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூகத்தவர்களால் கடைபிடிக்கப் பட்டு வந்த பல தேசவழமைச் சட்டங்களை எல்லாம் இல்லாமல் செய்து சிங்கள பௌத்த பெரும் பான்மை இனத்தின் ஆதிக்கத்தின் கீழ் இந்த நாட்டை அவர்களுக்கு மட்டுமே உரித்தானதாக்கி பௌத்த சிந்தாந்தங்களோடும் பேரினவாத சிந்தனையோடும் மட்டும் பயணிக்க விரும்புகிறது. எப்படி தாங்கள் ஆட்சிக்கு வருவதற்காக யுத்த வெற்றியையும் பேரினவாதத்தையும் முன் எடுத்தார்களோ அதே ஆயுதத்தைய் மீணடும் கையில் எடுத்து ஆட்சிக்கு வரும் நோக்கில் காய் நகர்த்தப் பார்க்கின்றனர். மீண்டும் இந்த மக்கள் ஏமாற்றப்படு வார்களா இன்னும் இந்த நாட்டை சூழ்ந்திருக்கும் இருள் விலகுமா காலம் பதில் சொல்லட்டும்.
 
பா.உதயன் ✍️
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, uthayakumar said:


 

இரு மொழி ஒரு நாடு 
ஒரு மொழி இரண்டு தேசம் 

-கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா 


இலங்கையில் ஏற்பட்டு வரும் பெரும் பொருளாதார சரிவுகளுக்கு பின் ராஜபக்சர்களின் மக்கள் செல்வாக்கு பெரும் சரிவை ஏற்பட்ட பின் மீண்டும் பேரினவாத பெரும் அரசியலை முன் எடுத்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று அரசியல் அமைப்பொன்றை உருவாக்கும் வகையில் ஏனைய இந்த நாட்டில் வாழும் தேசிய இனங்களை இரண்டாம் தரப் பிரஜைகள் ஆக்கி மீண்டும் மீண்டும் அமைதியும்  ஐக்கியமும் சமாதானமும் இல்லாததோர் தேசமாகவே இருண்ட யுகத்தை நோக்கி பயணிக்கவிருக்கிறது.

 ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லுவதன் மூலம் இந்த நாட்டில் வாழும் ஏனைய  இனங்களுக்கு நீங்கள் எல்லாம் மரத்தில் படரும் கொடிகள் மாத்திரமே என்று அந்த மக்களின் கன்னத்தில் அடித்து சொல்லியிருக்கிறார் ஜனாதிபதி. இந்த சிங்கள பௌத்த சித்தாந்தக் கொள்கையானது( Buddhist ideology ) இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களின் மனங்களை வெல்லுவதை விட இவர்களை இரண்டாம் தரப் பிரஜைகள் ஆக்குவதாகவே அமைவதோடு மாத்திரம் இன்றி இந்த நாட்டை ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு(Authoritarian rule ) வழி சமைப்பதாகவும் அமைந்து விடும் ஒரு அச்ச நிலைமையே இன்று காணப்படுகிறது.

 ஒரே நாடு ஒரே சட்டம் என்று இலங்கையில் எல்லா மக்களுக்கும் சமத்துவமான சட்டத்தை வழங்க அந்த நாட்டின் தலைவர் நல்ல சிந்தனை கொண்டு அமுல் நடத்துவதாக இருந்தால் இன்று அவர் ஏன் பெரும் குற்றம் செய்த பெரும் பான்மை சிங்கள இனத்தை சேர்ந்த குற்றவாளிகளுக்கு மட்டும் மன்னிப்பு வழங்கி அப்பாவி அரசியல் தமிழ்க் கைதிகளுக்கு இன்னும் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யாமல் இருக்கிறார்.இப்படி மனப்பான்மை கொண்ட ஒரு தலைவரால் எப்படி எல்லோருக்கும் ஒரே சமத்துவமான சட்டத்தை அமுல் படுத்த முடியும்.

பௌத்த பேரினவாத தேசிய சித்தாந்தக் கொள்கையைக் பின் பற்றி ஏனைய  மத மக்கள் மீது இனவாதத்தை விதைக்கும் ஒரு துறவி தலைமையில் கூடும் குழுவால் எல்லா இனங்களுக்கும் சமத்துவமான சட்டம் பரிந்துரைக்கப்படும் என்று எதிர் பார்க முடியுமா. இந்த நாட்டில் வாழும் ஏனைய சிறு பான்பை தேசிய இனங்களின் கருத்துக்களை உள்வாங்காமல் நடை முறைப்படுத்தப்படும் எந்தச் சட்டமும் ஒரு வகையில் தனி மனித சர்வாதிகாரம் தான்.நாட்டின் சட்டங்களை துஸ்ப்பிரயோகம் செய்வதாகவே அமையும். 

மதத்தை அடிப்படையாகக் கொண்டே இலங்கையின் அரசியல் வரலாறு தொடர்ந்து கொண்டே போகிறது மதமும் அரசியலும் சட்டமும் பிரிந்து பயணிக்காத வரையில் இந்த நாட்டின் எதிர் காலம் மாற்றத்துக்கு வருவது கடினமே. சர்வதேசதுக்கு தாங்கள் சமாதான தூதராகவும் காட்டி அதே வேளை புலம் பெயர் தமிழ் மக்களுடனும் பேசுவதாக அறிவித்து விட்டு முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளை ஏனைய தேசிய இனங்களுக்கு எதிராக நடை முறைப்படுத்தவுள்ளது . இதனால் தான் இன்று பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட புலம் பெயர் அமைப்புகளுடன் தாங்கள் பேசத் தயார் இல்லை என்றும் அறிவித்திருக்கின்றனர். இது பலருக்கு ஆச்சரிக்கமாக இல்லாத போதும் இலங்கை அரசோடு பேசத் தயாராக இருந்தவர்களும் அபிவிருத்தி பொருளாதாரம் என்று கதைத்தவர்களுக்கும் இது கொஞ்சம் ஏமாற்றமாகத் தான் இருக்கும். 

சட்டவாளர்களும் சட்ட அறிஞர்களும் இருக்கும் போது சட்டம் நீதியை மதிக்காதவர்களும் குற்றவாளிகளும் நாட்டின் சட்டங்களை அமுலாக்கும் பொறுப்பில் அமர்த்துவது இலங்கையைப் பெறுத்த வரையில் ஆச்சரியம் அளிப்பதாகவில்லை ஏனெலில் இங்கு சரியான நீதி இருப்பதாகவில்லை. இங்கு நீதி வழங்கிய தீர்ப்புகளில் இருந்து பலர் தப்பிப் கொள்கின்றனர். பல்லின சமுகங்கள் வாழும் இந்த நாட்டிலே இந்த சமூகங்களை புறக்கணித்து ஒரு நாடு ஒரு சட்டம் என்பது மேலும் மேலும் இந்த நாட்டில் பெரும் குழப்பங்களை உண்டு பண்ணி வளமை போலவே அமைதியும் சமாதானம் இன்றி தொடர்ந்து வாழ வேண்டிய நிலை தான் ஏற்படும். 

காலம் காலமாக இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூகத்தவர்களால் கடைபிடிக்கப் பட்டு வந்த பல தேசவழமைச் சட்டங்களை எல்லாம் இல்லாமல் செய்து சிங்கள பௌத்த பெரும் பான்மை இனத்தின் ஆதிக்கத்தின் கீழ் இந்த நாட்டை அவர்களுக்கு மட்டுமே உரித்தானதாக்கி பௌத்த சிந்தாந்தங்களோடும் பேரினவாத சிந்தனையோடும் மட்டும் பயணிக்க விரும்புகிறது. எப்படி தாங்கள் ஆட்சிக்கு வருவதற்காக யுத்த வெற்றியையும் பேரினவாதத்தையும் முன் எடுத்தார்களோ அதே ஆயுதத்தைய் மீணடும் கையில் எடுத்து ஆட்சிக்கு வரும் நோக்கில் காய் நகர்த்தப் பார்க்கின்றனர். மீண்டும் இந்த மக்கள் ஏமாற்றப்படு வார்களா இன்னும் இந்த நாட்டை சூழ்ந்திருக்கும் இருள் விலகுமா காலம் பதில் சொல்லட்டும்.
 
பா.உதயன் ✍️
 

நல்லதொரு ஆய்வு பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.👍

Link to comment
Share on other sites

On 30/10/2021 at 08:45, uthayakumar said:

இரு மொழி ஒரு நாடு 
ஒரு மொழி இரண்டு தேசம் 

-கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா

இவ்வாறு கூறி, அனைத்து இனமக்களுக்கும் சம உரிமையை சிங்கள இன மக்கள் மத்தியில் வலியுறுத்திய, திரு கொல்வின் ஆர் டி சில்வா போன்ற வர்களுடன் இணைந்து வேலை செய்து, எமக்கான உரிமையை உரிய காலத்தில் பெற்று அதை பலப்படுத்த கிடைத்த வாய்பபை  தமது சுயநலத்துக்காக புறம் தள்ளி  இடது சாரிகளை சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்து பலவீனப்படுத்தியதன் மூலம் அவர்களையும் இனவாத சேற்றுக்குள் விழ செய்தவர்கள் எமது தமிழ்த் தலைவர்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/10/2021 at 03:40, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதொரு ஆய்வு பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.👍

 

On 31/10/2021 at 09:25, tulpen said:

இவ்வாறு கூறி, அனைத்து இனமக்களுக்கும் சம உரிமையை சிங்கள இன மக்கள் மத்தியில் வலியுறுத்திய, திரு கொல்வின் ஆர் டி சில்வா போன்ற வர்களுடன் இணைந்து வேலை செய்து, எமக்கான உரிமையை உரிய காலத்தில் பெற்று அதை பலப்படுத்த கிடைத்த வாய்பபை  தமது சுயநலத்துக்காக புறம் தள்ளி  இடது சாரிகளை சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்து பலவீனப்படுத்தியதன் மூலம் அவர்களையும் இனவாத சேற்றுக்குள் விழ செய்தவர்கள் எமது தமிழ்த் தலைவர்கள்.  

தமிழ்த்தேசியன் துல்பின் உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.துல்பின் உங்கள் கருத்துக்களில் பல உண்மைகள் இருகின்றன நம் தலைவர்கள் கொடுத்த அமைச்சு பதவிகளோடு அன்றும் தான் இன்றும் தான் அடங்கி விட்டனர்.சர்வதேச போக்குக்கு இணங்க சரியான சர்வதேச அணுகு முறையையோ இல்லை உள் நாட்டு இராஜதந்திர காய் நகர்த்தல்களையோ சரியாக நகர்த்தவில்லை.இது ஒரு புறம் இருக்க சிங்கள பெரும் தேசிய இன வாதமும் தமிழருக்கான உரிமையையும் கொடுத்து இந்த நாட்டை சமாதான பாதையில் நகர்த்தத் தவறியமையும் தான் இந்த பெரும் அழிவுகளுக்கே காரணமாகியது.அதன் பலனை இந்த தேசம் இன்று அனுபவிக்கின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.