Jump to content

புனித் மறைவு: தலைவர்கள், நடிகர்கள் இரங்கல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புனித் ராஜ்குமார் மறைவு: தலைவர்கள், நடிகர்கள் இரங்கல்!

spacer.png
 

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் 46 வயதிலேயே அகால மரணமடைந்தது இந்தியத் திரையுலகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

புனித் ராஜ்குமார் கன்னட நடிகர் என்றாலும் அவரது அப்பா மறைந்த ராஜ்குமார் காலத்திலிருந்தே பல மொழி திரைக்கலைஞர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள்.

அதனால், புனித்தின் திடீர் மறைவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியில் இருந்து, கன்னடத் திரையுலகத்தை மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரையுலகத்தினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பலரும் புனித் மறைவுக்கு அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ்த் திரையுலகில் நடிகர்கள் சரத்குமார், விஷால், ஆர்யா, தனுஷ், நாசர், சித்தார்த், விக்ரம் பிரபு, ஆதி, கௌதம் கார்த்திக், சாந்தனு,

மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், நிவின்பாலி, வினீத் சீனிவாசன், டொவினோ தாமஸ், சுரேஷ் கோபி,

தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, மகேஷ் பாபு, ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ரவி தேஜா, அல்லரி நரேஷ், ஜெகபதி பாபு, மனோஜ் மஞ்சு, நாக சௌரியா, ராம் பொத்தினேனி, சாய்குமார்,

ஹிந்தி நடிகர்கள் அபிஷேக் பச்சன், அஜய் தேவகன், சோனு சூட், அர்மான் மாலிக், சுனில் ஷெட்டி,

நடிகைகள் ராதிகா, ரோஜா, சிம்ரன், த்ரிஷா, ஹன்சிகா, காஜல் அகர்வால், லட்சுமி மஞ்சு, ரகூல் ப்ரீத் சிங், நிக்கி கல்ரானி, ராஷி கண்ணா, ஆத்மிகா, அதிதி ராவ் ஹைதரி,

கிரிக்கெட் வீரர்கள் அனில் கும்ப்ளே, வெங்கடேஷ் பிரசாத், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, விவிஎஸ் லட்சுமண், இன்னும் பல அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

புனித் ராஜ்குமார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தியில்,

மறைந்த பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனான பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மறைவை அறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

எங்கள் இருவரது குடும்பங்களும் பல்லாண்டுகளாக நல்ல உறவைப் பேணி வந்துள்ளோம். அந்த வகையில், தனிப்பட்ட முறையிலும் இது எனக்கு இழப்பு ஆகும். பெரும்புகழ் கொண்ட நட்சத்திரமாக விளங்கியபோதும் எளிமையான மனிதராகவே புனித் ராஜ்குமார் இருந்தார்.

தலைவர் கருணாநிதியின் மறைவுக்குத் தமது குடும்பத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவிக்க எங்கள் கோபாலபுரம் இல்லம் தேடி அவர் வந்தது இன்னும் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகிறது. புனித் ராஜ்குமாரின் மறைவால் கன்னடத் திரையுலகம் தன் மிகச் சிறந்த சமகால அடையாளங்களுள் ஒருவரை இழந்துள்ளது. இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பால் தவிக்கும் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கும் கர்நாடக மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் டிவிட்டரில், அன்புத் தம்பி புனித் ராஜ்குமாரின் மரணச் செய்தி வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கன்னடத் திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் அஜித் - ஷாலினி தம்பதியர் சார்பில் அவர்களது மக்கள் தொடர்பாளர் டிவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், புனித் ராஜ்குமாரின் துரதிர்ஷ்டமான மறைவு செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் இந்த துயரத்தில் இருந்து மீள வலிமை கிடைக்க வேண்டுகிறோம்'' என தெரிவித்துள்ளனர்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் டிவிட்டர் மூலம் வெளியிட்ட இரங்கல் செய்தியில், கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது என்னை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த கன்னட சினிமா சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்கள் என் மீது மிகுந்த அன்பும் பாசமும் காட்டியவர். அந்த வகையில் அவர்களின் குடும்பத்தினர் அனைவருடன் எனது நட்பு தற்போதும் தொடர்ந்து வருகிறது. புனித் ராஜ்குமார் மரணம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, உற்றார் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, கன்னட திரையுலகினருக்கு, ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்

தமிழ் திரையுலகில் பலர் புனித்திற்கு நெருக்கமானவர்கள். அவர்களுள் முக்கியமானவர் இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி. இவர் இயக்கிய 'போராளி' படத்தின் கன்னட ரீமேக்கில் புனித் ராஜ்குமார்தான் கதாநாயகன். இவருடன் இருந்த நினைவுகள் குறித்து சமுத்திரக்கனி கூறியிருப்பதாவது, ரொம்ப அற்புதமான மனிதர். அத்தனை பள்ளிக்கூடங்கள், ஆதரவற்றவர்களுக்கான ஆசிரமங்கள்னு அவர் செஞ்சதெல்லாம் அளவேயில்லை. 'போராளி' கன்னட ரீமேக் 'யாரே கூகடளி' படத்துல அவர்கூட வேலை பார்த்தது எப்பவும் நீங்கா நினைவுகளா எனக்குள்ள இருக்கும். அவருடைய இறப்பு செய்தி எப்படி எடுத்துக்கிறதுனு தெரியலை. ஷூட்டிங்காக ரொம்ப தூரத்துல இருக்கேன். அப்படியே அவர்கூட இருந்த நேரத்தை நினைச்சு பார்த்துட்டு உட்கார்ந்திருக்கேன்.போராளி ஷூட்டிங் போய்க்கிட்டிருந்தது. தமிழ்நாட்டுல இருந்து ஒருத்தன் வந்து இங்க படம் எடுத்துக்கிட்டு இருக்கான்னு 100 பேர் கிளம்பி ஷூட்டிங் நடக்கிற இடத்துக்கு வந்துட்டாங்க. அவங்களை பார்த்து, கை நீட்டி நிற்க சொன்னார், நின்னாங்க. என் தோள் மேல கை போட்டு என் ப்ரதர் எல்லோரும் திரும்பி போங்கனு சொன்னதும் அத்தனை பேரும் மறுவார்த்தை பேசாமல் திரும்பி போய்ட்டாங்க. அவர் மேல அவ்வளவு மரியாதையும் பாசமும் வெச்சிருக்காங்க.

கன்னட சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு. அவர் பண்ணாத வொர்க் அவுட்டே கிடையாது. அவ்வளவு ஃபிட்டா இருப்பார். அவர் ஊர்ல அவர் ராஜா. 'நாடோடிகள்' கன்னட ரீமேக்கை இயக்க சொல்லி கேட்டாங்க. நான் அப்போ தெலுங்கு நாடோடிகள் ஷூட்டிங்ல இருந்ததனால என்னால பண்ண முடியலை. வேறொரு இயக்குநர் இயக்கினார். அப்புறம், போராளி ரீமேக் பண்ணணும். இந்த முறை நீங்கதான் டைரக்ட் பண்ணணும்னு கூப்பிட்டார். நான் போய் வொர்க் பண்ணினேன். அந்த 75 நாள்கள் பொக்கிஷம். புனித் எங்கேயோ ஒரு இடத்துல இருக்கார்னுதான் தோணுது. இந்த மாதிரியான இழப்புகள் பல விஷயங்களை நமக்கு கத்துக்கொடுக்குது.

விநோதய சித்தம் பார்த்துட்டு அவருடைய மேனேஜர் குமார் பேசினார். சார்படம் பார்க்கணும்னு சொன்னார்னு சொன்னாங்க. நான் அவர்கிட்ட பேசி ஆறு மாசம் இருக்கும். நான் நடிச்ச ஒரு தெலுங்கு படத்தை பார்த்துட்டு எனக்கு கூப்பிட்டு, நல்லாயிருக்கு சார் உங்களுடைய இந்த முகத்தை எதிர்பார்க்கலை'னு சொன்னார். அடுத்து ஒரு படம் பண்ணுவோம்னு சொன்னேன். நிச்சயமா பண்ணலாம் எப்போனு சொல்லுங்கனு சொன்னார். இனி அது நடக்காது. எப்போ என்னவேணாலும் எதுவும் நடக்கும்னு இயற்கை நமக்கு சொல்லிக்கிட்டே இருக்கு. அவரது குடும்பத்துக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் "என்று தெரிவித்துள்ளார்.

 

https://minnambalam.com/entertainment/2021/10/30/9/puneeth-passes-away-leaders-condolence

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

புனித் ராஜ்குமார் வாழ்வும் வழியனுப்புதலும்!

 
spacer.png

இந்திய சினிமாவில் ஒரு நடிகரின் மரணத்திற்கு மொழி கடந்து, இனம் கடந்து திரையுலகினர் மட்டுமல்லாது அரசியல் அரங்கிலும் அதிர்ச்சி, சோகம், வருத்தத்தை ஏற்படுத்தியது, கன்னடத் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் புனித் ராஜ்குமார்(46) நேற்று முன்தினம் பெங்களூருவில் மாரடைப்பால் மரணம் அடைந்தது. இதற்கு காரணம் பிரபலமான நடிகர் என்பதற்காக இல்லை, கர்நாடக மாநிலத்தை தாண்டி புனித் ராஜ்குமார் நடித்த படங்கள் வெற்றிபெற்றதும் இல்லை. கன்னட மொழி பேசுபவர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இவர் நடித்தபடங்கள் திரையிடப்படுவது உண்டு, கன்னட சூப்பர் ஸ்டார் என கன்னட மக்களால் கொண்டாடப்பட்ட ராஜ்குமார் மகனாக சினிமா நடிகராக அறிமுகமாகி வெற்றிபெற்று பிரபலமானவர் என்பதற்காக அவர் கொண்டாடப்படவில்லை. அவரது திடீர் மரணத்துக்காக கலங்கவில்லை.

சினிமா நடிகராக கோடிகளை குவித்தாலும் அதன்மூலம் வருங்கால சந்ததியினருக்காக கல்விக்கூடங்கள், வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் முதியோர் மகிழ்வுடன் வாழ்வை கழிக்க ஏற்படுத்திய முதியோர் இல்லங்கள், மருத்துவ வசதிகள் என பல்வேறு சமூக நலத்திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தியதுதான் முதன்மை காரணமாக இருக்கிறது. என் ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்ககாசு கொடுத்தது தமிழல்லவா என் உடல்பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா என திரைப்படங்களில் பாடலுக்கு வாயசைத்ததுடன் தன் வேலை முடிந்தது என வணிக நோக்கில் மட்டும் செயல்படும் நடிகர்கள் இருக்கும் இந்திய சினிமாவில் இப்படி எதையும் பாடாமல், பஞ்ச் அரசியல் வசனங்கள் பேசி பரபரப்பை ஏற்படுத்தாமல் சினிமா மூலம் கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதியை மாநிலத்தில் 45 கட்டணமில்லா இலவச பள்ளிகள், 36 அனாதை இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், வருடந்தோறும் 1800க்கும் மேலான குழந்தைகளின் கல்வி செலவு என தன் சினிமா வருமானத்தை பயன்படுத்தியவர். அதனால்தான் இந்திய பிரதமர் தொடங்கி கர்நாடகத்தின் கடைகோடி எளிய மனிதனையும் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் கலங்க வைத்திருக்கிறது.

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான அமிதாப்பச்சன் முதல் அந்தந்த மாநில மொழி திரை நட்சத்திரங்கள் புனித் ராஜ்குமார் அகால மரணத்திற்கு நேரிலும், சமூக வலைத்தளங்கள் மூலமும் புகழ் அஞ்சலி செலுத்த செய்தது. புனித் ராஜ்குமார் போன்று சமூகநல திட்டங்களை தமிழ் நடிகர்களில் விஜயகாந்த் தற்போது சிவகுமார் நட்சத்திர குடும்பம், மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, தெலுங்கில் சிரஞ்சீவி இந்தியில் நானா படேகர், சோனு, அமீர்கான், அக்க்ஷய்குமார்ஆகியோர் செய்து வருகின்றனர். இருந்தபோதிலும் சிறிய மாநிலம், குறிப்பிட்ட எல்லையை தாண்டாத கன்னட சினிமாவில் ஒரு நடிகன் 46 வயதில் செய்தது இமாலய சாதனையாக போற்றப்பட்டதால்தான் கர்நாடக மக்கள் கலங்கி பெங்களூரில் கடும் குளிரும், மழையும் இருந்தபோதும் அலை கடல் என மக்கள் குவிந்து புனித் ராஜ்குமாருக்கு கடந்த இரண்டு நாட்களாக இறுதி அஞ்சலி செலுத்தி வந்தனர். இதனை கட்டுப்படுத்துவது எளிதான செயல் அல்ல என்பதை உணர்ந்த மாநில அரசு ஏற்கனவே திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே புனித் ராஜ்குமார் நல்லடக்கத்தை அதிகாலையில் அரசு மரியாதையுடன் நடத்தி முடித்துள்ளது.

புனித் ராஜ்குமார் மரணம் அடைந்ததாக நேற்று முன்தினம் மதியம் 2.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து விக்ரம் மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு புனித் ராஜ்குமாரின் உடலைப் பார்த்து குடும்பத்தினர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். சுமார் 4 மணி நேரம் அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் இரவு 7 மணியளவில் புனித் ராஜ்குமாரின் உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கன்டீரவா மைதானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அவரது உடல் பொதுமக்கள், ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்பட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து ரசிகர்கள் நீண்ட வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள குக்கிராமங்களில் இருந்தும் ரசிகர்களும், பொதுமக்களும் பெங்களூருவை நோக்கி சாரை சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் புனித் ராஜ்குமாரின் உடல் வைக்கப்பட்டு இருந்த கன்டீரவா மைதானம் முன்பு மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் முண்டியடித்துக்கொண்டு மைதானத்திற்குள் செல்ல முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் கூட்டத்தினரை ஒழுங்குப்படுத்த அவ்வப்போது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இருப்பினும் பெங்களூரின் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மாநிலத்தின் மூலைமுடுக்குகளில் இருந்து வந்த சிறுவர்கள், வாலிபர்கள், பெரியவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் விடிய விடிய வரிசையில் நின்று புனித் ராஜ்குமார் உடலுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அங்கு குவிந்திருந்தவர்கள் அப்பு…. அண்ணா… என்று கண்ணீர்விட்டு கதறினர். பலர் புனித் ராஜ்குமாரின் உருவப்படங்களை கைகளில் ஏந்தியபடி வந்து அஞ்சலி செலுத்தினர். பெங்களூரு மட்டுமின்றி சாம்ராஜ்நகர் முதல் பீதர் வரை மாநிலம் முழுவதும் ரசிகர்கள் வாகனங்களில் பெங்களூரு கன்டீரவா மைதானத்தை நோக்கி வந்தனர். இதனால் கன்டீரவா மைதானத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. இதனால் வாகனங்களை நிறுத்த செயிண்ட் ஜான்ஸ் கல்லூரி வளாகத்தில் காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர்.

ரசிகர்கள் அங்கு தங்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு நடைப்பயணமாக மைதானத்திற்கு வந்தனர். ரசிகர்கள் வரிசையில் வந்தபடியே இருந்தனர். கூட்டம் குறையவே இல்லை. நேற்று காலையும் மக்கள் புனித் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த தொடர்ந்து வந்து கொண்டே இருந்தனர். அவ்வப்போது லேசான மழையும் பெய்தபடி இருந்தது. மழையைப் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று அவர்கள், புனித் ராஜ்குமார் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் 1,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டனர். 2 கூடுதல் காவல் ஆணையர்கள், 19 துணை ஆணையர்கள், 50-க்கும் மேற்பட்ட உதவி ஆணையர்கள், 100-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் இந்த பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர்.

அமெரிக்காவில் இருந்து அவரது மகள் துருதி, விமானம் மூலம் டெல்லி வந்து அங்கிருந்து தனி விமானத்தில் பெங்களூரு வந்து சேர்ந்தார். .

கண்டீவரா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த

தனது தந்தையின் உடலைப் பார்த்து அவர் கதறி அழுதார். இது அங்கிருந்த குடும்பத்தினர் மற்றும் தொலைக்காட்சி நேரலையில் பார்த்து கொண்டிருந்தவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இந்நிலையில் நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 அளவில் பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் அடக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முழுஅரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்திருந்தது.

ஆனால், அதிகாலை ஐந்து மணிக்கே அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்து கொண்டே இருப்பதால் பத்தரை மணி வரை காத்திருக்கவேண்டாம் என முடிவு செய்து அதிகாலையில் அடக்கம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

https://minnambalam.com/entertainment/2021/10/31/17/puneeth-rajkumar-life-and-send-off

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

 

சினிமா நடிகராக கோடிகளை குவித்தாலும் அதன்மூலம் வருங்கால சந்ததியினருக்காக கல்விக்கூடங்கள், வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் முதியோர் மகிழ்வுடன் வாழ்வை கழிக்க ஏற்படுத்திய முதியோர் இல்லங்கள், மருத்துவ வசதிகள் என பல்வேறு சமூக நலத்திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தியதுதான் முதன்மை காரணமாக இருக்கிறது.

அவரின் வாழ்வு உணர்த்தும் பாடம் இது தான் என நான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.