Jump to content

MC Sai குழுமத்தின்.. கடலே என் கடலே கரிகாலா எங்க மறைஞ்சே.. பாடல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🙏🏽

கடலே என் கடலே...
காக்கவன்னியன்  காட்டி தந்தவன் திராவிட பலி தீர்க்க வந்தவன் ஆரியனுக்கு கொடி பிடித்தவன் திராவிட அடிவருடி
இங்க நீயும் நானும் தமிழன் நடுவில் வேண்டாம் ஒருவன் 

நாம் தமிழர் போடு போடு 
நாம் தமிழர் 
தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்பினோம் தூய தமிழனை  தமிழ் கொண்டு எழுப்புவோம் சொல்லிசை கொண்டு எழுப்புவோம்..... 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

இணைப்புக்கு நன்றி.

வருகைக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வதற்கு நன்றிகள்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் இளம்தலைமுறையின் ஆகச்சிறந்த படைப்பு. 
வரிகளை உள்வாங்கிக்கொள்வோம்.. மக்களிடையே கொண்டுசெல்வோம்..
படையொன் ஆல்பம் கூடிய சீக்கிரம் வெளிவரும் 14 பாடல்கள் கொண்ட இந்த இசை வெளியீட்டில் அனைத்தும் நம்  போராட்டம் பற்றி  பேசக்கூடியவையாக அமைத்துள்ளார்கள். பாடியவர்கள்ளே எழுதிய படைப்பு இரத்தி ஆதித்தன் மற்றும் எம்.சி சாய்

காக்கை வன்னியன் காட்டி தந்தவன் திராவிட பலி தீர்க்க வந்தவன்

ஆரியனுக்கு கொடி பிடித்தவன் திராவிட அடிவருடி

இங்க நீயும் நானும் தமிழன் நடுவில் வேண்டாம் ஒருவன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல துள்ளிசைப்பாடல்.

பகிர்வுக்கு நன்றி.

கருத்தியல் - பல தேவையான ஆணிகளும், சில தேவையில்லாத ஆணிகளும் பாடலில் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. ஆனாலும் அடுத்த தலைமுறை இதில் ஈடுபடுவதே ஒரு பெரிய விசயம் என்ற அளவில் வரவேற்க்கலாம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல்.. ஆனால் இந்த தம்பிகளுக்கு ஒருகாலத்துக்கு முந்திய வரலாறு தெரியாது போல் உள்ளது.. இதன் பின்னால் பெரியவர்கள் யாரும் இருந்திருந்தால் வழிகாட்டி இருக்கலாம்.. தலைவர் இன்று இருந்திருந்தால் அவர் கவனத்துக்கு இந்த பாடல் போயிருந்தால் கண்டிப்பாக இதில் திராவிடம் தொடர்பான தேவைய்ற்ற சீண்டும் வரிகளை எடுக்க சொல்லி இருப்பார்.. நாலு ஜந்துபேரோடு தலைவர் போராட்ட வாழ்வின் ஆரம்பகாலங்களும் திராவிட இயக்கங்களும் பிரிக்கமுடியாதவை.. கோழி தன் குஞ்சுகளை இறகில் பொத்தி அடைகாப்பதுபோல் புலிகள் இயக்கத்தை ஒருகாலத்தில் பொத்திபொத்தி காத்து வளர்த்தவர்கள் திராவிட இயக்கத்து தோழர்கள்.. எவனாவது ஏறிய ஏணியை தட்டி உதைப்பானா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தலைவர் இன்று இருந்திருந்தால் அவர் கவனத்துக்கு இந்த பாடல் போயிருந்தால் கண்டிப்பாக இதில் திராவிடம் தொடர்பான தேவைய்ற்ற சீண்டும் வரிகளை எடுக்க சொல்லி இருப்பார்.. நாலு ஜந்துபேரோடு தலைவர் போராட்ட வாழ்வின் ஆரம்பகாலங்களும் திராவிட இயக்கங்களும் பிரிக்கமுடியாதவை.. கோழி தன் குஞ்சுகளை இறகில் பொத்தி அடைகாப்பதுபோல் புலிகள் இயக்கத்தை ஒருகாலத்தில் பொத்திபொத்தி காத்து வளர்த்தவர்கள் திராவிட இயக்கத்து தோழர்கள்.. எவனாவது ஏறிய ஏணியை தட்டி உதைப்பானா??

நான் எழுத நினைத்து எழுதாமல் விட்ட வரிகள் 👏🏾👏🏾👏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

நான் எழுத நினைத்து எழுதாமல் விட்ட வரிகள் 👏🏾👏🏾👏🏾.

நீங்கள் இந்த பாட்டுக்கு கீழ வரும் கனெண்டுகளை படீச்சங்க எண்டா அது வேறமாரிபோகுது.. ஏதோ திராவிடக்கட்சிகளுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் சண்டைபோல கதை போகுது.. அப்போ சிங்களவன் எங்கடா..? அட பைத்தியங்களா இந்தியாவில் இருக்கும் ஆறுகோடி தமிழர்களும் இரண்டு திராவிட கட்சிகளையும் சேர்ந்தவர்கள்தான் பைத்தியங்களா.. தமிழன் விரலை கொண்டு தமிழன் கண்ணை குத்துறீங்க.. வெளிநாட்டில இருக்குற லூசுவள்தான் சிங்களத்தை விட்டிட்டு இப்பிடி புதுசா திராவிடத்துக்கு எதிரா பொக்ஸ் அடிக்கிறது.. விசர்க்கதை கதைச்சுகொண்டு திரியிறது.. பாவம் ஊரில் இருக்கும் ஈழத்தமிழன்.. அவனுக்கு சோத்துக்கு போராடவே நேரமில்லை.. நாம் தமிழர் திராவிடர்த்தை எதிர்ப்பதை வேறு.. அது அவர்கள் ஊர் அரசியல்.. ஈழத்தமிழர் இவங்கள் யாரை எதிர்க்கிறோம் என்று ஏதாவது தெரிந்துதான் செய்கிறார்களா இல்லை காசடிச்ச தமிழ்தேசியவாதிகள் வழியிலபோகிறார்களா எண்டு விளங்குதில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்கள் இந்த பாட்டுக்கு கீழ வரும் கனெண்டுகளை படீச்சங்க எண்டா அது வேறமாரிபோகுது.. ஏதோ திராவிடக்கட்சிகளுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் சண்டைபோல கதை போகுது.. அப்போ சிங்களவன் எங்கடா..? அட பைத்தியங்களா இந்தியாவில் இருக்கும் ஆறுகோடி தமிழர்களும் இரண்டு திராவிட கட்சிகளையும் சேர்ந்தவர்கள்தான் பைத்தியங்களா.. தமிழன் விரலை கொண்டு தமிழன் கண்ணை குத்துறீங்க.. வெளிநாட்டில இருக்குற லூசுவள்தான் சிங்களத்தை விட்டிட்டு இப்பிடி புதுசா திராவிடத்துக்கு எதிரா பொக்ஸ் அடிக்கிறது.. விசர்க்கதை கதைச்சுகொண்டு திரியிறது.. பாவம் ஊரில் இருக்கும் ஈழத்தமிழன்.. அவனுக்கு சோத்துக்கு போராடவே நேரமில்லை.. நாம் தமிழர் திராவிடர்த்தை எதிர்ப்பதை வேறு.. அது அவர்கள் ஊர் அரசியல்.. ஈழத்தமிழர் இவங்கள் யாரை எதிர்க்கிறோம் என்று ஏதாவது தெரிந்துதான் செய்கிறார்களா இல்லை காசடிச்ச தமிழ்தேசியவாதிகள் வழியிலபோகிறார்களா எண்டு விளங்குதில்லை..

நீங்கள் சொன்ன கண்டெண்டுகள் - இந்த திரியிலும் உள்ளதை காணலாம்.

அந்த இரு உறவுகளையும் குறிக்கும் நோக்கம் இல்லை - ஆனால் இந்த பாடலில் எத்தனையோ வரிகள் இருக்க அந்த ஒற்றை வரியைத்தான் ஹைலைட் பண்ண வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றும் அளவுக்குத்தான் இருக்கிறது இப்போ புலம்பெயர் அரசியல்.

கருணாநிதி என்ற ஒத்தை மனிதனின், அவரின் குடும்பத்தின், கட்சியின் பச்சை துரோகத்துக்காக, தமிழ்நாட்டில் வேரூன்றியுள்ள ஒரு அரசியல் சித்தாந்தத்தை, பெரும் பலமுள்ள சாதிகளை, பல கோடி மக்களை வலிந்து எதிரியாக்குகிறோம்.

இந்த போக்கினால் அதிகம் நன்மை அடையபோவது, இந்தியாவும், இலங்கையுமே. முழு தீமையும் இலங்கையில் அல்லது இந்தியாவில் வாழும் எமது மக்களையே சாரும்.

புலம் பெயர் மக்களுக்கு இது சும்மா பொழுதுபோக்கு அல்லது, கருணாநிதி மீதான பழி தீர்ப்பு. 

ஆனால் கருணாநிதி அளவுக்கு இன அழிப்புக்கு உதவியவர்கள் ஜேர்மனியும், பிரான்சும், பிரிட்டனும், அமெரிக்காவும், கனடாவும். ஆனால் மறந்தும் திராவிட அரசியலை சாடுவது போல் இந்த நாட்டில் உள்ள கட்சிகளை இந்த புலம்பெயர் தமிழர்கள் சாட மாட்டார்கள். மேர்கலையோ, சார்கோசியையோ, பிரவுணையோ, ஒபாமாவையோ யுத்த குற்றவாளிகள் என பொதுவெளியில் முகம் காட்டி சொல்ல மாட்டார்கள்.

இவர்கள் சார்ந்த கட்சிகளுக்கு எதிராக ஒரு துரும்பைதானும் கிள்ளி போட மாட்டார்கள்.

இவ்வளவு ஏன் சொல்கைமுக்கு கூட ஒரு காத்திரமான எதிர்ப்பை காட்ட வக்கற்வர்கள், ஆனால் என்றைக்கோ செத்து போன பெரியாரை போட்டு மிதிப்பார்கள்🤣.

Rebels without a cause என்பார்கள். இவர்கள் அப்படித்தான்.

தமது இருப்புக்கு குந்தகம் வராதவரையில் எவனையாவது எதிர்த்து புரட்சி செய்ய வேண்டும்.

சிங்களவனை எதிர்த்தால் கொலிடே போக முடியாது.

இருக்கும் நாட்டில் எதிர்க்க தைரியம் இல்லை.

தமிழ் நாட்டில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து virtual revolution ( மெய்நிகர் புரட்சி 🤣) செய்தால் போராடியது போலவும் இருக்கும், பாதிப்பும் இராது 🤣.

இதை சொன்னால், எதிர்வினையாறினால் - நீங்கள் ஏன் தமிழ் நாட்டு அரசியலை பற்றி எழுதுகிறீர்கள் நீங்கள் திராவிட செம்பா? என எம்மையே கேட்பார்கள்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.