Jump to content

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள்-மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள்-மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்

November 2, 2021

 

20211101192651 ogImage 13 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள்-மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்


 

தமிழகம்:வேலூரில், 3510 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்தை வேலூரில் இன்று முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்ட தொடக்க விழா மற்றும் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் வசிக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இவ்விழாவில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கலந்து கொண்டு மேல்மொணவூரில் வசிக்கும் 220 இலங்கை தமிழர் குடும்பங்கள் உள்பட 3,510 பேருக்கு குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

பின்னர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு பல இலட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இதில், அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,  உள்பட அரசுத்துறை உயர்அதிகாரிகள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிலையில், முதலமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில், இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்பதனை மாற்றி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

 

https://www.ilakku.org/sri-lankan-tamil-rehabilitation-camp-mk-stalin/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்கள் அனாதைகள் அல்ல: முதல்வர் ஸ்டாலின்

spacer.png

இலங்கை அகதிகள் முகாம், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் என்றும் இலங்கைத் தமிழர் மேம்பாட்டுக்காக 317 கோடி ரூபாயில் புதிய நலத் திட்டங்கள் தொடங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்டத்தின் தொடக்க விழா வேலூர் மாவட்டம் மேல்மொணவூரில் இன்று (நவம்பர் 2) நடைபெற்றது.

அப்போது, புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்காக 3,510 புதிய குடியிருப்புகள் மற்றும் 30 கோடி மதிப்பீட்டில் முகாம்களில் அடிப்படை திட்டப்பணிகளுக்காக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பிற மாநில முதல்வர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுப் பத்திரிகைகள் என பலரும் தமிழக முதல்வர் ஸ்டாலினை பாராட்டுவதாகப் புகழாரம் சூட்டினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “ ஒரு அடையாள சொல்லாகத்தான் இலங்கை தமிழர்கள் என்று நான் அழைத்தேன். மற்றபடி தமிழர்கள் அனைவரும் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் ஒருதாய் மக்கள் தான். தமிழக தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும் இனத்தால், மொழியால், பண்பாட்டால், நாகரிகத்தால் ஒன்றுபட்டவர்கள்.

நாம் அனைவரும் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள். கடல்தான் நம்மைப் பிரிக்கிறது. நீங்கள் விட்ட கண்ணீர் இன்று நம்மை இணைத்துக் கொண்டிருக்கிறது.

இலங்கைத் தமிழர்கள் தங்களுடைய தாயகத்தில் பாதிக்கப்பட்ட காலம் முதல் அவர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்கம்தான் திமுக. 1983 முதல் ஈழத்திலிருந்து இங்கு வந்தவர்களுக்காக முகாம்கள் அமைக்கப்பட்டன. சிலர் வெளியிலும் தங்கியிருந்தார்கள்.

இந்த முகாம்களுடைய நிலைமை மிக மோசமாக இருக்கிறது என்பதை உணர்ந்து பார்த்து கலைஞர் முதல்வராக இருந்தபோது 1997ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஏராளமான திட்டங்களை அறிவித்து அதைச் செயல்படுத்தினார்.

அதனால், முழுமையாக இல்லாமல் ஓரளவுக்கு முகாம் வாழ் தமிழர்கள் தன்னிறைவு அடைந்தார்கள். ஆனால் கடந்த 10 ஆண்டு காலமாக அதிமுக அரசு அவர்களுக்காக எந்த நன்மையையும் செய்யவில்லை. அவர்களைப் பற்றி கவலை படவே இல்லை.

இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற உடன் இலங்கைத் தமிழர் நல்வாழ்வு திட்டங்களை மீண்டும் நாம் தொடங்கி இருக்கிறோம். அவர்கள் அகதிகள் அல்ல, அனாதைகள் அல்ல அவர்களுக்கு நாம் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காக இத்திட்டங்களைத் தொடங்கியிருக்கிறோம்.

அகதிகள் முகாம் என்று இனி அழைக்க மாட்டோம், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று அழைப்போம் என சட்டமன்றத்தில் நான் அறிவித்தேன். அதனைச் செயல்படுத்தும் நாள் தான் இந்நாள். அதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம்.

spacer.png

கலைஞர் முதல்வராக இருந்த சமயத்தில் 1997-98 காலகட்டத்தில், முகாம்களில் வாழ்ந்தவர்களுக்காக 3,594 வீடுகள் கட்டித் தரப்பட்டன. 1998-99ஆம் ஆண்டு காலகட்டத்தில் 3,826 வீடுகள் கட்டித் தரப்பட்டன. 2009ஆம் ஆண்டு முகாம் வாழ் தமிழர்களுக்கு போதுமான வசதிகள் செய்து தர 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

தற்போது மீண்டும் திமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள 106 முகாம்களில் 19,046 குடியிருப்புகளில் மிகவும் பழுதடைந்த 7429 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.

முதல்கட்டமாக 290 சதுர அடி பரப்பளவில் 3510 வீடுகள் கட்டப்பட உள்ளன.

இலங்கைத் தமிழர் முகாம்களின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும். முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும். முகாமில் வாழும் தமிழர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் மூலம் தரமான ஆடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் நலவாழ்வு திட்டத்துக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முகாம் வாழ் தொழில் முனைவோர்களுக்காகத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

மேலும் இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல, என்னை உங்களின் உடன் பிறப்பாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார் முதல்வர் ஸ்டாலின்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து வேலூரில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இலங்கைத் தமிழர் குடும்பத்தினரிடம் வாழ்வாதாரம், அடிப்படை வசதி உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்த முதல்வர் அவர்களது குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி மகிழ்ந்தார்.


 

https://minnambalam.com/politics/2021/11/02/20/cm-mk-stalin-speech-in-vellore-sri-lankan-tamil-rehabilitation-camp

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் அறிக்கையில் குடியுரிமை என்ற வாதம் காணாமல் போயிட்டுது 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அவர்கள் அகதிகள் அல்ல, அனாதைகள் அல்ல அவர்களுக்கு நாம் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காக இத்திட்டங்களைத் தொடங்கியிருக்கிறோம்

தமிழக முதல்வருக்கு நன்றிகள்.

இலங்கை அரசாலும், புலம்பெயர் அமைபுக்களாலும், புலம்பெயர் தனி நபர்கள், புலம்பெயர் தனவந்தர்களாலும் முற்றிலும் புறக்கணிக்கபட்டுள்ள, கைவிடப்பட்டுள்ள இந்த மக்களுக்கு ஓரளவுக்காவது உங்கள் உதவிகள் பயன்கொடுக்கும். 

நாடு திரும்ப விரும்பாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க, உங்கள் அழுத்ததுக்கு அடிபடியகூடிய ஒரு மத்திய அரசு விரைவில் அமையட்டும் என பிரார்திக்கிறோம்.

இதை மட்டும் நீங்கள் சாதித்து விட்டால் - நாங்கள் பரம்பரை திமுக - என சொல்லும் மக்கள் கூட்டத்தில் இலங்கை ஏதிலிகளும் அவர்தம் சந்ததிகளும் சேர்ந்துகொள்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கல் நாட்டியதுடன், நிற்காது…

வீடுகள் விரைவில் கட்டி முடிக்கப் பட வேண்டும்.

தமிழக முதல்வருக்கு… அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நன்றி ஸ்டாலின். வெறுமனே அடிக்கல்லுடன் நிற்காமல், வீடுகள் நல்ல நிலையில் பூர்த்தி அடைந்தால் மகிழ்சி

1 hour ago, பெருமாள் said:

தேர்தல் அறிக்கையில் குடியுரிமை என்ற வாதம் காணாமல் போயிட்டுது 🤣

குடியுரிமைக்காக மத்திய அரசிடம் கோரிக்கை மட்டும் தான் மாநில அரசால் முன்வைக்க முடியும். மானில அரசுக்கு குடியுரிமை வழங்குவதற்கோ மறுப்பதற்கோ எந்தவிதமான அதிகாரங்களும் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக வினர் கட்டிய மாடி வீடுகள் போல இல்லாவிட்டால் சரி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நிழலி said:

குடியுரிமைக்காக மத்திய அரசிடம் கோரிக்கை மட்டும் தான் மாநில அரசால் முன்வைக்க முடியும். மானில அரசுக்கு குடியுரிமை வழங்குவதற்கோ மறுப்பதற்கோ எந்தவிதமான அதிகாரங்களும் இல்லை

எந்த துணிவில் அப்படியொரு தேர்தல் அறிக்கை வைத்தார்கள் ?

உங்களுக்கே தெரியுது  திமுக வின் தேர்தல் அறிக்கை சுத்துமாத்து என்று. இவ்வளவு காலமும் இருக்கிறார்கள் அகதி என்று திறந்தவெளி சிறைகளில் .

Link to comment
Share on other sites

Just now, பெருமாள் said:

எந்த துணிவில் அப்படியொரு தேர்தல் அறிக்கை வைத்தார்கள் ?

உங்களுக்கே தெரியுது  திமுக வின் தேர்தல் அறிக்கை சுத்துமாத்து என்று. இவ்வளவு காலமும் இருக்கிறார்கள் அகதி என்று திறந்தவெளி சிறைகளில் .

திமுக அறிக்கையிலும், பின்னர் சட்டசபைக் கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் நிகழ்ந்த கவர்னர் உரையிலும் தமிழக அரசு ஈழ அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுத்தர மத்திய அரசிற்கு கோரிக்கையும் அழுத்தமும் கொடுக்கும் என்றே கூறப்பட்டது. நான் அறிந்தவரைக்கும் தமிழக அரசு ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் என்று குறிப்பிடவில்லை

திமுக அரசு மட்டுமல்ல, தமிழகத்தில் ஆட்சி புரிந்த அனேகமான அரசுகளின் அறிக்கைகளும், இலங்கை, பாகிஸ்தான் போன்ற தென்னாசியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் அறிக்கைகளும் பெரும்பாலும் சுத்துமாத்துக்கள் கொண்ட அறிக்கைகள் தான். வெல்ல வேண்டும் என்பதற்காக நிறைய உளறிக் கொட்டியிருப்பார்கள். இந்த விடயத்தில் கோத்தா தான் இப்போதைக்கு முன்னிலை வகிக்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, பெருமாள் said:

எந்த துணிவில் அப்படியொரு தேர்தல் அறிக்கை வைத்தார்கள் ?

உங்களுக்கே தெரியுது  திமுக வின் தேர்தல் அறிக்கை சுத்துமாத்து என்று. இவ்வளவு காலமும் இருக்கிறார்கள் அகதி என்று திறந்தவெளி சிறைகளில் .

பெருமாள்,

திமுக தேர்தல் அறிக்கை “மத்திய அரசை வலியுறுத்துவோம்” என்றுதான் இருக்கிறது. நிழலி சொன்னது போல் அதைதான் அவர்கள் செய்யமுடியும். 

large.4B5E5F37-A005-4CAF-84BA-BA12A7B0605B.jpeg.5174e71f2f565566f566d71bc250513b.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய வீடுகள் கட்டி மீண்டும் திறந்தவெளி சிறைச்சாலையா?

ஏன் அவர்களை சுதந்திரமாக நடமாட நடவடிக்கை எடுக்கக் கூடாது.

இத்தனை காலமாக மனிதர் வாழ இயலாத கொட்டகையில் இருந்தவர்களை கொஞ்சம் வசதியாக மூச்சுவிட வைப்பது சற்று சந்தோசமாகவே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

தென்னாசியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் அறிக்கைகளும் பெரும்பாலும் சுத்துமாத்துக்கள் கொண்ட அறிக்கைகள் தான். வெல்ல வேண்டும் என்பதற்காக நிறைய உளறிக் கொட்டியிருப்பார்கள். இந்த விடயத்தில் கோத்தா தான் இப்போதைக்கு முன்னிலை வகிக்கின்றார்.

அது மோசமான  உண்மை.

ஸ்டாலின் சொன்ன மாதிரி இலங்கை தமிழர் மறுவாழ்வு திட்டங்களை செய்து காட்டி தென் கிழக்கு ஆசியன் நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள் போல இல்லை நான் என்று காட்ட வேண்டும்.

இலங்கை அகதிகளுக்கு நாங்கள் குடியுரிமை தருவோம் என்று பொய் பேசி தமிழ்நாட்டு தமிழர்களையும் இலங்கை தமிழர்களையும்  ஏமாற்றாமல் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கிடைக்க மத்திய அரசை திமுக வலியுறுத்தும் என்று உண்மை சொல்லி உள்ளார்கள் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூந்தமல்லி சிறப்பு முகாமை மூட வேண்டும் ; அதற்கு மேல் இஸ்கூல் புள்ளிங்கோ மாதிரி அட்னன்ஸ் முறையை ஒழிக்க வேண்டும் 😢

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.