Jump to content

கொழும்பில் மண்ணெண்ணெய்க்காக நீண்டவரிசையில் காத்திருக்கும் மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில்  சமையல் எரிவாயு நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டுள்ளன. 

 

PHOTO-2021-11-02-13-53-07__1_.jpg

 

இந்நிலையில், நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு பாரிய தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தலைநகர் கொழும்பில் மக்கள் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.

 

(படப்பிடிப்பு ஜே.சுஜீவ குமார்)

 

PHOTO-2021-11-02-13-53-06__1_.jpg

PHOTO-2021-11-02-13-53-04.jpg

PHOTO-2021-11-02-13-53-05.jpg

PHOTO-2021-11-02-13-53-07.jpg

PHOTO-2021-11-02-13-53-08.jpg

PHOTO-2021-11-02-13-53-12.jpg

கொழும்பில் மண்ணெண்ணெய்க்காக நீண்டவரிசையில் காத்திருக்கும் மக்கள் | Virakesari.lk

சமையல் எரிவாயுவிற்கு மீண்டும் தட்டுப்பாடு ?

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அதனால் எழுந்த சர்ச்சையின் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது மீண்டும் கடந்த ஒருவார காலமாக சமையல் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதில் மக்களை நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

அதற்கமைய லாப் மற்றும் லிட்ரோ ஆகிய இரு சமையல் எரிவாயுவிற்கும் சந்தையில் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இவை இரண்டில் ஒன்றையேனும் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை மீண்டும் ஏற்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் , அவ்வாறான நிலைமைக்கு மத்தியிலும் நாளாந்தம் 300 - 400 தொன் எரிவாயு சந்தைகளுக்கு விநியோகிக்கப்படுவதாகவும் லாப் சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யு.கே.எச்.வேகபிட்டி தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் டொலர் பற்றாக்குறை காரணமாக எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது. கடன் சான்று பத்திரத்தை விடுவித்துக் கொள்வதற்காக வங்கிகளை தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் லாப் சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லாப் மற்றும் லிட்ரோ ஆகிய இரு சமையல் எரிவாயுவையும் பெற்றுக் கொள்வதில் சிக்கல் காணப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்ற போதிலும் , 'தாம் போதுமானளவு சந்தைக்கு எரிவாயுவை விநியோகிப்பதாகவும் , லாப் சமையல் எரிவாயு பற்றாக்குறையின் காரணமாக லிட்ரோ எரிவாயுவிற்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும்' லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கோத்தாவுக்கு நடக்கிற எதிர் போராட்டத்தை பத்தி.... மூச்சு விடப்படாது என்று அங்க மீடியாகாரருக்கு சொல்லிக்கிடக்கு....

உங்க இருக்கிற பிரச்சணைக்குள்ள, இந்தாள் அங்கை என்ன கிழிக்க... கிளம்பி போனவர்.... எண்டு ... சனம் கிழிக்கும் எண்ட பயம் தான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

உங்க கோத்தாவுக்கு நடக்கிற எதிர் போராட்டத்தை பத்தி.... மூச்சு விடப்படாது என்று அங்க மீடியாகாரருக்கு சொல்லிக்கிடக்கு....

உங்க இருக்கிற பிரச்சணைக்குள்ள, இந்தாள் அங்கை என்ன கிழிக்க... கிளம்பி போனவர்.... எண்டு ... சனம் கிழிக்கும் எண்ட பயம் தான்....

இது பரவாயில்லை, தமையனின் ஆட்சி காலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் நடத்த முற்பட்டவர்கள் என பலர் இரவோடு இரவாக கடத்தப்பட்டார்கள்.

Link to comment
Share on other sites

5 hours ago, பிழம்பு said:

இந்நிலையில், நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு பாரிய தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தலைநகர் கொழும்பில் மக்கள் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.

 

கனவான்களே, வீரகேசரி இவ்விடத்தில் தமிழில் இட்ட தவறை சுட்டிக்காட்ட அனுமதியுங்கள்.

“நீண்ட வரிசையில்” என்பது நீண்ட கியூ  வரிசையில் என்று வந்திருக்க வேண்டும். 😊

4 hours ago, Nathamuni said:

உங்க கோத்தாவுக்கு நடக்கிற எதிர் போராட்டத்தை பத்தி.... மூச்சு விடப்படாது என்று அங்க மீடியாகாரருக்கு சொல்லிக்கிடக்கு....

உங்க இருக்கிற பிரச்சணைக்குள்ள, இந்தாள் அங்கை என்ன கிழிக்க... கிளம்பி போனவர்.... எண்டு ... சனம் கிழிக்கும் எண்ட பயம் தான்....

சனம் கிழிஞ்சதை மாத்திக்கட்ட வழியில்லாமல் இருக்க இங்க ஒருத்தர் மீடியாவை பார்த்து கோத்தாவை சனம் கிழிக்கும் எண்டு கனாக்காணுறார்… நாதம், கனவு கண்டது காணும் காணும், எழும்புற நேரமாச்சு… 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

சனம் கிழிஞ்சதை மாத்திக்கட்ட வழியில்லாமல் இருக்க இங்க ஒருத்தர் மீடியாவை பார்த்து கோத்தாவை சனம் கிழிக்கும் எண்டு கனாக்காணுறார்… நாதம், கனவு கண்டது காணும் காணும், எழும்புற நேரமாச்சு… 😄

யூட்டர்....

நீஙகள் தானே அய்யா கனவு காணகிறீர்கள் என உங்கள் எழுத்தில் தெரிகிறதே....

மாத்த உடுப்பில்லாமல் இருக்கிற சனம்...... வயலில் வேலை செய்ய வேண்டிய விவசாயிகள் உரம் இல்லாமல் தெருவில்.....வகுப்பறையில் படிப்பிக்க வேண்டிய வாத்தியார் தெருவில்....

இவர்.... காசை வீண் செலவு செய்து அங்க போய் சூழலியல் பிரசங்கம் செய்யிறதை கேட்டால் சனம் என்ன செய்யும்?

அதால தான் செய்தியை மறைக்கிறார்கள். 😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயல் விதைச்சபடி கிடக்கு.. உரம்தாறம் எண்டாங்கள்.. APSல நேத்தும் போய்கேட்டன் இன்னும் வரேல்லயாம்.. மழை வேற ஒரு பக்கம் கிழமைக்கணக்கா அடிச்சு ஊத்துது.. வெள்ளம் உயர உயர நெல்லும் உயர நெல்லுக்கு சத்து வேணும்.. உரம் போடோனும்.. இல்லாட்டி வெள்ளத்தில முளைச்ச நாத்து எல்லாம் அழுகிப்போம்.. அப்பர் புறுபுறுப்பு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

வயல் விதைச்சபடி கிடக்கு.. உரம்தாறம் எண்டாங்கள்.. APSல நேத்தும் போய்கேட்டன் இன்னும் வரேல்லயாம்.. மழை வேற ஒரு பக்கம் கிழமைக்கணக்கா அடிச்சு ஊத்துது.. வெள்ளம் உயர உயர நெல்லும் உயர நெல்லுக்கு சத்து வேணும்.. உரம் போடோனும்.. இல்லாட்டி வெள்ளத்தில முளைச்ச நாத்து எல்லாம் அழுகிப்போம்.. அப்பர் புறுபுறுப்பு..

உணவு பஞ்சத்துக்கான முதல் அறிகுறி உணவு இறக்குமதி செய்ய முடியாமை. இரெண்டாவது விளைச்சல் பிழைப்பது🙁.

Link to comment
Share on other sites

On 1/11/2021 at 08:43, பாலபத்ர ஓணாண்டி said:

வாழ்த்துக்கள் அண்ணை.. உங்களை போன்றவர்களை பார்க்கும்போது என்னைமாதிரி வெளிநாடுகளில் இருக்கும் இங்கு சம்பாதிச்சதை தாய்மண்ணிலபோய் ஏதாவது தொழிலில் முதலிடவேண்டும் என்று இருப்பவர்களுக்கு பெரிய உத்வேகமாக இருக்கு.. இவரை கண்டிப்பாக போய் பார்க்கவேண்டும் ஊருக்கு போகும்போது.. சாதனைத்தமிழர்கள் இவர்கள்தான்..

அது நேற்று!

5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வயல் விதைச்சபடி கிடக்கு.. உரம்தாறம் எண்டாங்கள்.. APSல நேத்தும் போய்கேட்டன் இன்னும் வரேல்லயாம்.. மழை வேற ஒரு பக்கம் கிழமைக்கணக்கா அடிச்சு ஊத்துது.. வெள்ளம் உயர உயர நெல்லும் உயர நெல்லுக்கு சத்து வேணும்.. உரம் போடோனும்.. இல்லாட்டி வெள்ளத்தில முளைச்ச நாத்து எல்லாம் அழுகிப்போம்.. அப்பர் புறுபுறுப்பு..

இது இன்றைக்கு!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கற்பகதரு said:
On 1/11/2021 at 11:43, பாலபத்ர ஓணாண்டி said:

வாழ்த்துக்கள் அண்ணை.. உங்களை போன்றவர்களை பார்க்கும்போது என்னைமாதிரி வெளிநாடுகளில் இருக்கும் இங்கு சம்பாதிச்சதை தாய்மண்ணிலபோய் ஏதாவது தொழிலில் முதலிடவேண்டும் என்று இருப்பவர்களுக்கு பெரிய உத்வேகமாக இருக்கு.. இவரை கண்டிப்பாக போய் பார்க்கவேண்டும் ஊருக்கு போகும்போது.. சாதனைத்தமிழர்கள் இவர்கள்தான்..

அது நேற்று!

5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வயல் விதைச்சபடி கிடக்கு.. உரம்தாறம் எண்டாங்கள்.. APSல நேத்தும் போய்கேட்டன் இன்னும் வரேல்லயாம்.. மழை வேற ஒரு பக்கம் கிழமைக்கணக்கா அடிச்சு ஊத்துது.. வெள்ளம் உயர உயர நெல்லும் உயர நெல்லுக்கு சத்து வேணும்.. உரம் போடோனும்.. இல்லாட்டி வெள்ளத்தில முளைச்ச நாத்து எல்லாம் அழுகிப்போம்.. அப்பர் புறுபுறுப்பு..

இது இன்றைக்கு!!

மேலே உள்ளது ஓணாண்டி

கீழே உள்ளது அப்பரின் புறுபுறுப்பு.

இருவரும் வேறுவேறு இடங்களில் இருந்து புறுபுறுப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MEERA said:

இது பரவாயில்லை, தமையனின் ஆட்சி காலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் நடத்த முற்பட்டவர்கள் என பலர் இரவோடு இரவாக கடத்தப்பட்டார்கள்.

பொறுங்கோ! மாத்தையா பத்திரமாய் வந்திறங்கட்டும், உங்கள் ஆசையை நிறைவேற்றி வைப்பார். அண்ணன் காலத்திலும் கடத்தி, கப்பம் பெற்று பகிர்ந்தளித்தவர் இவரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கற்பகதரு said:

கனவான்களே, வீரகேசரி இவ்விடத்தில் தமிழில் இட்ட தவறை சுட்டிக்காட்ட அனுமதியுங்கள்.

“நீண்ட வரிசையில்” என்பது நீண்ட கியூ  வரிசையில் என்று வந்திருக்க வேண்டும். 😊

பகுத்தறிவுதான் இல்லையெண்டால் தமிழறிவு அதைவிட சுத்தம். Queue என்பதற்கான தமிழ் சொல்தான் வரிசை என்பது!! 

அப்படியில்லாட்டி சும்மா நக்கலோ !!

5 hours ago, ஈழப்பிரியன் said:

மேலே உள்ளது ஓணாண்டி

கீழே உள்ளது அப்பரின் புறுபுறுப்பு.

இருவரும் வேறுவேறு இடங்களில் இருந்து புறுபுறுப்பு.

இவற்றை புரிந்துகொள்ள கொஞ்சமாவது விளக்கம் வேணும்.

Link to comment
Share on other sites

2 hours ago, Eppothum Thamizhan said:

பகுத்தறிவுதான் இல்லையெண்டால் தமிழறிவு அதைவிட சுத்தம். Queue என்பதற்கான தமிழ் சொல்தான் வரிசை என்பது!! 

அண்ணோய், நான் சுத்தமான தமிழில் “கியூ வரிசை” என்று எழுத அதற்குள் உந்த இங்கிலிஷை கொண்டுவந்து “Queue” எண்டு தமிழறிவு காட்டினால் நான் எங்க போய் அழ? 🤧

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

அண்ணோய், நான் சுத்தமான தமிழில் “கியூ வரிசை” என்று எழுத அதற்குள் உந்த இங்கிலிஷை கொண்டுவந்து “Queue” எண்டு தமிழறிவு காட்டினால் நான் எங்க போய் அழ? 🤧

ஏன் கியூவும் வரிசையும் ஒன்றுதான் என்று உங்கள் தமிழறிவுக்கு எட்டவில்லையா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

அண்ணோய், நான் சுத்தமான தமிழில் “கியூ வரிசை” என்று எழுத அதற்குள் உந்த இங்கிலிஷை கொண்டுவந்து “Queue” எண்டு தமிழறிவு காட்டினால் நான் எங்க போய் அழ? 🤧

 

35 minutes ago, Eppothum Thamizhan said:

ஏன் கியூவும் வரிசையும் ஒன்றுதான் என்று உங்கள் தமிழறிவுக்கு எட்டவில்லையா!!

அய்யோ அய்யோ😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் எப்போதும் தமிழன்! இண்டைக்கு அவரின் மண்டையில இருக்கிற எல்லாமுடியும் இழப்புத்தான் போங்கோ!

விடிய விடிய இராமன் கதை. விடிந்தபின் இராமனுக்கு சீதை என்ன முறை? என்ற கேள்வியோடு கதையை முடிப்பார் கண்டியளோ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஆயுத போராட்டத்தை மீண்டும் ஒருங்கிணைக்க முயற்சி முன்னாள் போராளிகள் ஐவர் கைது.! "

"பெருமளவிலான ஆயுத குவியல் கண்டேடுப்பு "

"பயங்கரவாதத்தை மீண்டும் அனுமதியோம்"

"30 ஆண்டுகால தீவிரவாதத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தோம் "

நாளைக்கு காலையில் இப்படி செய்தி வரும் இல்லை நாளை மறுநாள் வரும் இல்லையா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.