Jump to content

அரிசிக்குத் தட்டுப்பாடா? மரவள்ளியை சாப்பிடுங்கள்! - சமல் ராஜபக்ச


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரிசிக்குத் தட்டுப்பாடா? மரவள்ளியை சாப்பிடுங்கள்!

சமல் ராஜபக்சவின் ஆலோசனை இது!

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது, கடந்த காலங்களில் கிராமங்களில் மரவள்ளிக்கிழங்கு, பாசிப்பயறு போன்றவற்றை உண்டனர் என்று நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற பூஜை ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாண் சாப்பிடுவதைவிட மரவள்ளிக் கிழங்கு, பாசிப் பயறு சாப்பிடுவதில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனவும் மரவள்ளி கிழங்கு புற்று நோய்க்கு சிறந்த மருந்து எனவும் அவர் தெரிவித்தார்.

எமது நிலங்களில் மரவள்ளி கிழங்கு சிறப்பாக வளரும். 60க்கும் மேற்பட்ட தேசிய கிழங்கு வகைகள் இருக்கின்றன. பாசிப்பயறு , கௌப்பி போன்ற பயிர்கள் இருக்கின்றன. இவற்றை உணவுக்காக எடுப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். – என்று மேலும் தெரிவித்தார்.

 

 

https://newuthayan.com/அரிசிக்குத்-தட்டுப்பாடா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது மாத்தையா மரவள்ளிக்கிழங்கு பாசிப்பயறுக்கு நாங்கள் எங்கை போறது. உங்கடை சுவிஸ் வங்கியில் இருக்கும் பணத்தில் சிறிது எடுத்து உதவலாமே?அது சரி உங்க்டை வீட்ட்டிலை இண்டைக்கு என்ன சாப்பாடு மரவள்ளிக்கிழங்கோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழனுக்கு மரவள்ளி கிழங்கு சாப்பிடுவதில் பிரச்சனையே இல்லை 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழனுக்கு மரவள்ளி கிழங்கு சாப்பிடுவதில் பிரச்சனையே இல்லை 😁

முருங்கை இலை போட்டு அவிச்ச மரவள்ளிக்கிழங்கும்  சம்பலையும்  நினைவுபடுத்தியதற்கு நன்றி 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Kapithan said:

முருங்கை இலை போட்டு அவிச்ச மரவள்ளிக்கிழங்கும்  சம்பலையும்  நினைவுபடுத்தியதற்கு நன்றி 😂

சொர்க்கம் ஐயா அது......இதை பலர் அனுபவித்திருக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஏராளன் said:

மரவள்ளிக் கிழங்கும்  60 ரூபா போகுதே!

நோர்மலாய் கிலோ கிழங்கு என்ன விலை?

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

முருங்கை இலை போட்டு அவிச்ச மரவள்ளிக்கிழங்கும்  சம்பலையும்  நினைவுபடுத்தியதற்கு நன்றி 😂

 

46 minutes ago, குமாரசாமி said:

சொர்க்கம் ஐயா அது......இதை பலர் அனுபவித்திருக்க மாட்டார்கள்.

சாமியாரே! மரவள்ளிக்கிழங்கைச் சுட்டுச் சாப்பிடும்போது ஆகா... அதை என்னவென்று சொல்வீர்கள் ஐயா.😋

Link to comment
Share on other sites

2 hours ago, Kapithan said:

முருங்கை இலை போட்டு அவிச்ச மரவள்ளிக்கிழங்கும்  சம்பலையும்  நினைவுபடுத்தியதற்கு நன்றி 😂

முருங்கையிலை போட்டு அவிப்பதை இன்றுதான் இதைக் கேள்விப்படுகின்றேன். 

ஒரு மாதத்தில் ஒருக்காலாவது வார இறுதி நாட்களில் காலைச் சாப்பாட்டாக அவித்த மரவள்ளியும், பச்சை மிளகாய் சம்பலும் சாப்பிடுவதுண்டு.

மரவள்ளிக் கிழங்கை அலுமினியத்தாளால் சுற்றி, BBQ செய்து சாப்பிடும் போதும் நன்றாக இருக்கும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

 

சாமியாரே! மரவள்ளிக்கிழங்கைச் சுட்டுச் சாப்பிடும்போது ஆகா... அதை என்னவென்று சொல்வீர்கள் ஐயா.😋

அதெல்லாம் ஒரு காலம் ஐயா.....இனி உதெல்லாம் எங்கை....? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

அதெல்லாம் ஒரு காலம் ஐயா.....இனி உதெல்லாம் எங்கை....? :(

மரவள்ளி இலையைச் சுண்டிச் சாப்பிடுவதாக நினைவு. சரியோ தெரியாது. 

ஆனால் ஆடு மாடு இலையை சாப்பிட்டு தொண்டை அடைத்து இறப்பதாகவும் கதை. 

மரவள்ளித் தோல் சிப்ஸ் எப்படி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

மரவள்ளி இலையைச் சுண்டிச் சாப்பிடுவதாக நினைவு. சரியோ தெரியாது. 

ஆனால் ஆடு மாடு இலையை சாப்பிட்டு தொண்டை அடைத்து இறப்பதாகவும் கதை. 

மரவள்ளித் தோல் சிப்ஸ் எப்படி ?

 மரவள்ளி இலையை வறுத்து சாப்பிட்டதாக நான் இது வரைக்கும் அறியவில்லை.ஆடு மாடுகளுக்கு போட்டதுமில்லை. மரவள்ளி கிழங்கிலையே மிக அவதானமாக இருக்க வேண்டும். நஞ்சு ஊறிய கிழங்குகளும் உண்டு.

மரவள்ளி கிழங்கு சிப்ஸ் ஜேர்மனியில் தான் ஒரு முறை பார்த்திருக்கிறேன். ஒரு ஆபிரிக்க விழா ஒன்றில்....ஆனால் சாப்பிட்டு பார்க்கவில்லை.

Maniok Pommes

ஜேர்மனியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மரவள்ளி கிழங்கை இப்படியும் செய்து ரசித்து ருசித்து சாப்பிடுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 மரவள்ளி இலையை வறுத்து சாப்பிட்டதாக நான் இது வரைக்கும் அறியவில்லை.ஆடு மாடுகளுக்கு போட்டதுமில்லை. மரவள்ளி கிழங்கிலையே மிக அவதானமாக இருக்க வேண்டும். நஞ்சு ஊறிய கிழங்குகளும் உண்டு.

மரவள்ளி கிழங்கு சிப்ஸ் ஜேர்மனியில் தான் ஒரு முறை பார்த்திருக்கிறேன். ஒரு ஆபிரிக்க விழா ஒன்றில்....ஆனால் சாப்பிட்டு பார்க்கவில்லை.

Maniok Pommes

ஜேர்மனியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மரவள்ளி கிழங்கை இப்படியும் செய்து ரசித்து ருசித்து சாப்பிடுகின்றார்கள்.

உது அந்த மாரி இருக்கும். Mogo chips. கென்யா வழி இந்தியர்கள் மூலம் லண்டனில் சில தமிழ் உணவகங்களிலும் உண்டு. நம்ம பெருமாள் @பெருமாள்முந்தி இதை பற்றி கதைத்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

அரிசிக்குத் தட்டுப்பாடா? மரவள்ளியை சாப்பிடுங்கள்!

அப்போ மரவள்ளியை மஹிந்த குடும்பம் சாப்பிட ஆரம்பிச்ச்சாச்சா?

மரவள்ளிகிழங்கு என்பது உப உணவுபொருள், அரிசிபோன்று உற்பத்தி, இறக்குமதி செய்யப்படும் பிரதான உணவுபொருளல்ல.,

பிரதான உணவுபொருள் தட்டுப்பாடு என்று உப உணவுபொருளை எல்லோரும் சாப்பிட சொன்னால் அந்த உப உணவுபொருளுக்கு தட்டுப்பாடு ஓட்டமெட்டிக்கா வந்துவிடுமே சமல் ஐயா? அரிசிபோல அதனை உடனடியாக மெற்றிக் தொன்னில் இறக்குமதியும் செய்ய முடியாது.

மிக பெரும் போர், பஞ்சம் தலைவிரித்து ஆடும்போதுதான் இதை சாப்பிடாதீர்கள் அதை சாப்பிட்டு சமாளியுங்கள் என்று ஒரு அரசு தன்னோட குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும்,

இனபோர் நடந்த காலத்தில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரபட்டுவிட்டால் ஓரிரு வருடங்களில் இலங்கை பாரிய அபிவிருத்தி கண்டுவிடும், வளர்ச்சியில் சிங்கபூரை எட்டி தொட்டுவிடும் என்று காலம் காலமாக சிங்கள தலைமைகள் தமது மக்களுக்கு கப்சா விட்டார்கள், இப்போ என்னடா என்றால் யுத்த காலத்தில்கூட இப்படி பசி பட்டினி உணவு தட்டுப்பாடு  நெருக்கடி ஏற்பட்டதில்லை.

இரண்டு நேரம் சாப்பிடுகிறவர்கள் ஒருவேளை சாப்பிடுங்கள் என்கிறீர்கள், மரவள்ளிகிழங்கை போட்டு தாக்குங்கள் என்கிறீர்கள்... 

எல்லாம் கர்மா, பசி பட்டினி உடனடியாக மாற்றுவழிக்கு மாறுதல் என்பது தமிழர்களுக்கு புதிதல்ல, சிங்களவர்களுக்கு அது சுத்த சூனியம்.கொலையை தவிர வேறு எந்த அரச ஆற்றலும் இல்லாதவர்கள் நீங்கள் என்பதை நாங்கள் எப்போதோ தெரிந்துகொண்டோம், சிங்களவர்கள் இப்போது தெரிந்து கொள்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

உது அந்த மாரி இருக்கும். Mogo chips. கென்யா வழி இந்தியர்கள் மூலம் லண்டனில் சில தமிழ் உணவகங்களிலும் உண்டு. நம்ம பெருமாள் @பெருமாள்முந்தி இதை பற்றி கதைத்தவர்.

இங்கு மரவள்ளிக்கிழங்கு என்பது மேல்தட்டு மக்களின் உணவாக வீற்றிருக்கும் பெருமை வட இந்தியர்களையே சேரும் இப்பவும் பூஜா சுவீட் கடைகளில் வீக்கெண்டில் மட்டும் கசவோ சிப்ஸ் சனம் லைனில் நின்று வேண்டி சாப்பிடுதுகள் .

ஆனால் சரவணபவன்களில் ரெயினீர்ஸ் லேன் ஐ விட மற்றைய இடங்களில் Mogo chipsஎன்றால் அப்படி என்றால் என்ன என்பார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

பாண் சாப்பிடுவதைவிட மரவள்ளிக் கிழங்கு, பாசிப் பயறு சாப்பிடுவதில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனவும் மரவள்ளி கிழங்கு புற்று நோய்க்கு சிறந்த மருந்து எனவும் அவர் தெரிவித்தார்.

தங்களின் வசதிக்கேற்ப நோய்களையும், மருந்துகளையும் சொல்கிறார்கள்.  மரவள்ளி கிழங்கு நீரழிவு நோயுள்ளவர்கள் அதிகம் சாப்பிடக்கூடாது என்று கேள்விப்பட்டுள்ளேன். இரசாயன உரத்தை தடுக்கிறாராம் காரணம் விவசாயிகள் நீரழிவு நோயினால் பாதிக்கப்படுவதால். அப்போ மரவள்ளிக்கிழங்கு மூன்று வேளையும் சாப்பிடுவதால் நீரழிவு நோயோடு பித்தம் தலைக்கேறி தேரர் மாதிரி அலைய வேண்டியதுதான். காசில்லை என்பதை மறைக்க எத்தனை கண்டுபிடிப்புகள்? ராஜபக்க்ஷா குடும்பத்துக்கு வந்த சோதனையோ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

நோர்மலாய் கிலோ கிழங்கு என்ன விலை?

சராசரி 30/40 போகும். போன மாதம் நடுவில 80 ரூபாய் வித்தது. இப்ப மரக்கறி விலை, கிழங்கு கொஞ்சம் மலிவு.
தம்பியார் கொஞ்ச காசை போட்டு 500 தடி நட்டவர், கல்லு பூமி. சில தடில கிழங்கே இல்லையாம். 35-40 வியாபாரியள் வாங்குவினம். செலவு காசு வருமோ தெரியல.

Link to comment
Share on other sites

13 hours ago, Kapithan said:

மரவள்ளி இலையைச் சுண்டிச் சாப்பிடுவதாக நினைவு. சரியோ தெரியாது. 

ஆனால் ஆடு மாடு இலையை சாப்பிட்டு தொண்டை அடைத்து இறப்பதாகவும் கதை. 

மரவள்ளித் தோல் சிப்ஸ் எப்படி ?

மரவள்ளி இலையைச் சுண்டிச் சாப்பிடுவதாகக் கேள்விப்பட்டதில்லை, ஆனால் அதன் இலைக் காம்புகளை சிறு துண்டுகளாக வெட்டிக் கோர்த்து மாலை செய்து விளையாடியது ஞாபகத்தில் உள்ளது.

மரவள்ளிக் கிழங்கோடு இஞ்சிக் கிழங்கும் சேர்ந்தால் அது நஞ்சாகி மனிதர்களும் இறப்பதாகக் கதை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Paanch said:

மரவள்ளி இலையைச் சுண்டிச் சாப்பிடுவதாகக் கேள்விப்பட்டதில்லை, ஆனால் அதன் இலைக் காம்புகளை சிறு துண்டுகளாக வெட்டிக் கோர்த்து மாலை செய்து விளையாடியது ஞாபகத்தில் உள்ளது.

மரவள்ளிக் கிழங்கோடு இஞ்சிக் கிழங்கும் சேர்ந்தால் அது நஞ்சாகி மனிதர்களும் இறப்பதாகக் கதை. 

மரவள்ளிப் புட்டு கேள்விப்பட்டதுண்டா ?

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க அண்ணர் தீபாவளிக்கு லட்டு சாப்பிடும் போது மக்கள் எப்படி மரவள்ளிக்கிழங்கு சாப்பிடச் சொல்ல முடியும்.. மிஸ்டர் சமல்..??!

Link to comment
Share on other sites

21 hours ago, Kapithan said:

மரவள்ளிப் புட்டு கேள்விப்பட்டதுண்டா ?

😉

அம்மா செய்துதந்து நாங்கள் சுவைத்துச் சாப்பிட்டது ஞாபகம் உள்ளது. எப்படி அவர் புட்டுச் செய்தார் என்பது தெரியாது.😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீமா அரசாங்கத்திலேயே வாரத்துக்கு இரண்டு நாட்கள் மரவள்ளி கிழங்கு சாப்பிடவேண்டும் என்றும் கட்டாயமாக உணவகங்களில் இருக்க வேண்டும் என்று சொன்னவர்கள்......!

Maravalli Kilangu Chips or tapioca chips or cassava chips or yucca chips -  YouTube

கிழங்கு பொரியல் சாதாரணமாக வீடுகளில் செய்வதுதான். உறைப்பை குறைத்து மெலிதாக சீவி எடுத்தால் சிப்ஸ்.......அவித்த கிழங்கும் சம்பலும் அந்த உறைப்புடன் சுடச்சுட  தேநீரும் அருமையாக இருக்கும்.......!

சிங்களவர்களுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாய்த்தான் இருக்கும். பின் அவர்கள் வழமைபோல தமிழர்கள் இஸ்லாமியர்களின் வீடுகள் கடைகளை சூறையாடி தங்கள் பஞ்சத்தைப் போக்கிக் கொள்வார்கள்.காலாகாலமாய் அதுதானே நடக்குது......!  😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

அம்மா செய்துதந்து நாங்கள் சுவைத்துச் சாப்பிட்டது ஞாபகம் உள்ளது. எப்படி அவர் புட்டுச் செய்தார் என்பது தெரியாது.😋

மரவள்ளியை காயவைத்து தூளாக்கி இடித்து மாவானதன் பின்னர் அதனை நீர்விட்டு சாதாரண பிட்டு அவிக்கின்றது போல அவித்த பின்னர் தேங்காய்ப் பூவுடன் தொட்டு/சேர்த்துச் (குழைத்து அல்ல ) சாப்பிடுவது.

பிலிப்பைன்ஸ் நாட்டவர்களது முக்கியமான உணவுகளில் இதுவும் ஒன்று.

அது ஒரு கனாக் காலம்

Link to comment
Share on other sites

2 hours ago, Kapithan said:

மரவள்ளியை காயவைத்து தூளாக்கி இடித்து மாவானதன் பின்னர் அதனை நீர்விட்டு சாதாரண பிட்டு அவிக்கின்றது போல அவித்த பின்னர் தேங்காய்ப் பூவுடன் தொட்டு/சேர்த்துச் (குழைத்து அல்ல ) சாப்பிடுவது.

பிலிப்பைன்ஸ் நாட்டவர்களது முக்கியமான உணவுகளில் இதுவும் ஒன்று.

அது ஒரு கனாக் காலம்

ஆமாம் ஞாபகம் வருகிறது, தேங்காய்பூவுடன் சீனியும் (தமிழ்நாட்டு வழக்கில் சர்க்கரை) சேர்த்து இனிப்பாக இருக்கும், சாப்பிட்டபின்பு அதிகம் தண்ணீர் குடிக்க அம்மா விடமாட்டார். அது கனாக்காலம் அல்ல, நாங்கள் கடந்துவந்த, மனிதரிடம் மனிதம் மிகுந்திருந்த காலம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.