Jump to content

அவுஸ்திரேலியாவில் காணாமல்போன 4 வயது சிறுமி 18 நாட்களின் பின் உயிருடன் மீட்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் காணாமல்போன 4 வயது சிறுமி 18 நாட்களின் பின் உயிருடன் மீட்பு

மேற்கு அவுஸ்திரேலியாவில்  18 நாட்களாக காணாமல்போன 4 வயது சிறுமி நன்கு பூட்டப்பட்ட வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 16 ஆம் திகதி மேற்கு அவுஸ்திரேலியாவில் கார்னார்வோன் நகருக்கு அருகில் உள்ள ஒரு முகாம் பகுதியில்  கிளியோ ஸ்மித் என்ற சிறுமி  தனது குடும்பத்தின் கூடாரத்திலிருந்து காணாமல் போனார், 

Cleo Smith: Missing 4-year-old found alive in Australia - BBC News

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய நபர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டு  புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ஒக்டோபர் 16 ஆம் திகதி அன்று கிளியோ ஸ்மித் கூடாரத்தில் தனது தங்கையுடன் தூங்கி கொண்டு இருந்தாள். 

கூடாரத்தின் இரண்டாவது அறையில் உறங்கி கொண்டிருந்த அவரது தயார் காலையில் எழுந்தபோது, கிளியோவை காணவில்லை. கூடாரத்தின் கதவு திறந்திருந்தது.

இந்நிலையில் பொலிஸில் கிளியோ காணமல் போயுள்ளதாக பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டது. கிளியோ தானாக கூடாரத்தை விட்டு வெளியேறி இருக்க மாட்டாள் என தாய் கூறியதை அடுத்து  கடத்தல் அச்சம் ஏற்பட்டது.

இதனையடுத்து மாநிலத் தலைநகரான பேர்த்தில் இருந்து 100 அதிகாரிகள் கொண்ட பணிக்குழு பாரிய வான், தரை மற்றும் கடல் வழியாக தேடுதலில் ஈடுபட்டனர்.

சனத்தொகை குறைவாக உள்ள பகுதிகளில் தேடல் நடவடிக்கைக்கு  உளவு விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

கிளியோவின் இருப்பிடம் பற்றிய தெரிவித்தால் ஒரு மில்லியன்  7.5 இலட்சம் அமெரிக்க டொலர்  சன்மானம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Ellie Smith holds a picture of Cleo, sitting beside partner Jake Gliddon

இறுதியாக கிடைத்த தகவலுக்கமைய கிளியோ இருக்கும் இருப்பிடத்தை அறிந்து பொலிஸார் அங்கு சென்றனர். 

குறித்த வீட்டில் ஒரு அறையில் கிளியோ இருந்துள்ளாள். அவளை தூக்கி உனது பெயர் என்ன என்று கேட்டபோது அவள் கிளியோ என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவள் காப்பாற்றப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாள். கிளியோ மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறாள்.

கிளியோவை கடத்தி வைத்திருந்த வீட்டில் வசித்த ஒருவர் சமீபத்தில் நாப்கின் வாங்குவதை அண்டை வீட்டுக்காரர் பார்த்ததாக ஏபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Cleo Smith

இந்நிலையிலேயே கிளியோ கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளாள்.

கிளியோ கண்டுபிடிக்கப்பட்ட செய்தி அவுஸ்திரேலியல் மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

விளக்கமறியிலில் உள்ளவருக்கு கிளியோ ஸ்மித்  குடும்பத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

சுமார் 5,000 பேர் வசிக்கும் கார்னார்வோனில் உள்ள அவரது குடும்ப வீட்டிலிருந்து கிளியோ கண்டுபிடிக்கப்பட்ட வீடு ஆறு நிமிட பயணத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 

https://www.virakesari.lk/article/116537

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளை..... கொலிடே போன இடத்தில் இருந்தே கடத்துகிறார்கள்...

பிரிட்டனில் இருந்து போர்த்துகல் போன இடத்தில் மூன்று வயது சிறுமியை கடத்தினார்கள்.

இன்று வரை கிடைக்கவிலலை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளியோவை கடத்தியவர்… கடையில் “நாப்கின்” வாங்கியதையும், அயலவர்கள்  கவனித்துள்ளார்கள்.

உலகம் உசாராகத்தான்… இருக்குது. 🙂

Link to comment
Share on other sites

கிளியோ அதிஸ்ட்டமானவள். நிறைய குழந்தைகள் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களாகவே உள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ குழந்தை காப்பாற்றப்பட்டு விட்டாள் அது போதும்.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

கிளியோவை கடத்தியவர்… கடையில் “நாப்கின்” வாங்கியதையும், அயலவர்கள்  கவனித்துள்ளார்கள்.

உலகம் உசாராகத்தான்… இருக்குது. 🙂

முதலில் நாப்கின் விற்ற பெண்தான் தகவல் கொடுத்தார்கள் என்றார்கள் இப்ப அயலவர் என்று கதை மாறுகிறது ஆனாலும் சிறுவர்களை கடத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கணும் அதுவும் மக்கள் முன்னிலையில் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூடாரம் அடித்து தங்கி இருக்கினம் . அங்கேயாவது பிள்ளைகளோடு ஒன்றாய் படுப்போம் என்று இல்லை...ஒரு பயமில்லாமல் அடுத்த அறைக்குள் படுத்து இருக்கினம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரதி said:

கூடாரம் அடித்து தங்கி இருக்கினம் . அங்கேயாவது பிள்ளைகளோடு ஒன்றாய் படுப்போம் என்று இல்லை...ஒரு பயமில்லாமல் அடுத்த அறைக்குள் படுத்து இருக்கினம் 

பிள்ளையளை தனிய விட்டு பழக்கவேணுமாம்......உங்கை  லண்டனிலை தானே ஆக மோசம். பிள்ளைக்கு ஒரு வயது ஆக முதலே தாய் வேலை வெட்டியெண்டு அலைய வெளிக்கிட்டுடுவினமாம்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nunavilan said:

கிளியோ அதிஸ்ட்டமானவள். நிறைய குழந்தைகள் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களாகவே உள்ளனர்.

உண்மைதான்.. பொலீஸாருக்குதான் முழுப்பாராட்டுதல்களும்..

இந்த விடயத்தில் மீடியா ஒரு பக்கம் உதவியது என்றாலும் கூட, தேவையில்லாத உண்மைக்கு புறம்பான செய்திகளையும் பரப்புவதை தடுக்க முடியவில்லை. இந்த 18 நாட்களும் ஒரு தவறும் செய்யாத பெற்றோர் கூட சந்தேகத்துடனேயே பார்க்கப்பட்டார்கள்.. 

இப்பொழுது அந்த சிறுமியை நிம்மதியாக இருக்கவிடாமல் பத்திரிக்கையாளர்கள் துரத்துகிறார்கள்.. 

அந்த சிறுமி இப்பொழுது சிரித்தபடி இருந்தாலும், இதனால் அந்த சிறு உள்ளத்தில் ஏற்பட்ட உளவியல் பாதிப்பையோ, எப்பொழுதும் மறக்கமுடியாத நிகழ்வாக இது இருக்கப்போகிறது என்பதை விளங்காமல் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றபடி செய்திகளை வெளியிடுகிறார்கள்.. அவ்வளவுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்  இதில் இணைக்கப்படட செய்தியைப் பார்த்தே என் கருத்து எழுதினேன்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/11/2021 at 00:39, பெருமாள் said:

முதலில் நாப்கின் விற்ற பெண்தான் தகவல் கொடுத்தார்கள் என்றார்கள் இப்ப அயலவர் என்று கதை மாறுகிறது ஆனாலும் சிறுவர்களை கடத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கணும் அதுவும் மக்கள் முன்னிலையில் .

காசுப் பரிசு  எண்ட படியால, நான், நீ எண்டு அடிபடுகினம்....

போர்த்துக்கலில் கடத்தி, காணாமலே போன, மடலீன் விடயத்தில் பார்த்தோமே..... பத்திரிகையாளர் தீரத்தை....

வர்ஜின் குறூப் ஓனர்.... ரிச்சட் ஒரு மில்லியன் பரிசு அறிவித்தார்.

அது மட்டுமல்ல..... ஊரில்.... மை போட்டு பார்கிற மாதிரி..... உங்கையும்.... உருளைக் கண்ணாடிக்குள்ள தேடலாம் என்ற நம்பிக்கை இருந்ததையும் பார்த்தோமே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.