Jump to content

கொரோனா வைரஸ்: தெற்காசியர்களிடம் அதிகம் காணப்படும் கொரோனா பாதிக்கும் ஜீன் - பாதுகாத்துக் கொள்வது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • ஸ்மிதா முண்டசாட்
  • சுகாதார செய்தியாளர்

நுரையீரல் செயலிழப்பது மற்றும் கொரோனாவால் மரணம் ஏற்படும் அபாயங்களை இரண்டு மடங்காக அதிகரிக்கும் ஒரு மரபணுவை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தெற்காசிய பின்புலம் கொண்டவர்களில் 60 சதவீதத்தினர், ஐரோப்பிய மூதாதையர்களைக் கொண்டவர்களில் 15 சதவீதத்தினருக்கு இந்த அபாயத்தை அதிகரிக்கக் கூடிய மரபணு உள்ளது.

இந்த அபாயத்தை கணிசமாக குறைக்க கொரோனா தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

கொரோனாவால் பிரிட்டனில் உள்ள சில சமூகங்கள் மற்றும் தெற்கு ஆசியா ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றன என்று 'நேச்சர் ஜெனடிக்ஸ்' ஆய்வு புதிய விஷயங்களை வெளிக் கொண்டு வந்துள்ளது. ஆனால் முழுமையான விளக்கங்களைக் கொடுக்கவில்லை.

அபாயங்களை அதிகரிக்கும் சரியான மரபணுவைக் கண்டுபிடிக்க, முந்தைய மரபணு ஆராய்ச்சிப் பணிகளோடு, ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் மூலக்கூறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினர். அந்த மரபணுவின் பெயர் LZTFL1. இது தான் கொரோனா தொடர்பான அபாயங்கள் அதிகரிக்க காரணம்.

 

இந்த மரபணு ஆப்பிரிக்க கரீபியப் பின்புலம் உள்ளவர்களில் இரண்டு சதவீதம் பேருக்கு இருப்பதாகவும், கிழக்கு ஆசிய மூதாதையர்களைக் கொண்டவர்களில் 1.8 சதவீதம் பேருக்கு இருப்பதாக விஞ்ஞானிகள் மதிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த அபாயகரமான மரபணு எல்லா மக்களையும் ஒரே போல பாதிப்பதில்லை என கண்டுபிடித்துள்ளதாக இந்த ஆய்வின் தலைவர் பேராசிரியர் ஜேம்ஸ் டேவிஸ் கூறியுள்ளார்.

குறிப்பாக வயது உட்பட பல சிக்கலான காரணிகள், ஒவ்வொரு நபரின் அபாய அளவுக்கு காரணமாக அமைகின்றன என்று அவர் கூறினார்.

"ஏன் சில சமூகங்கள் மட்டும் அதிகம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது என்பதை விளக்க, சமூக பொருளாதார காரணிகள் கூட முக்கியமாக இருக்கலாம்" என்று கூறினார்.

"நம்மால் மரபணுக்களை மாற்ற முடியாது, கொரோனாவால் பாதிப்பை அதிகப்படுத்தும் அபாயமுள்ள மரபணுவைக் கொண்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசியால் அதிக பலன் கிடைக்கலாம் என எங்கள் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன." என்கிறார்.

பாதுகாப்பு அவசியம்

கொரோனா வைரஸ் -கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கொரோனா வைரஸ் -கோப்புப் படம்

இந்த அதிக அபாயமுள்ள மரபணுவைக் கொண்ட மக்களின் நுரையீரல், கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த மரபணு, நுரையீரலை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் செல் வரிசையை செயல்படவிடாமல் தடுக்கிறது.

நுரையீரலை பாதுகாக்கும் செல் வரிசை, கொரோனா வைரஸை நேரடியாக எதிர்கொள்கிறது. அச்செல்கள் கொரோனா வைரஸை குறைந்த பிரத்யேகத் தன்மை கொண்டவைகளாக மாற்றி, வைரஸை எதிர்கொள்கிறது.

வைரஸை குறைந்த பிரத்யேக தன்மை கொண்டதாக மாற்றும் செயல்பாடு, ACE-2 என்கிற முக்கிய புரத பரப்பின் மீது படியும் செல்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. இந்த ACE-2 தான் கொரோனா வைரஸ் செல்களோடு இணைய முக்கிய காரணியாக இருக்கின்றன.

LZTFL1 என்கிற மரபணு கொண்டவர்களுக்கு இந்த செயல்பாடே நடப்பதில்லை என்பதால், நுரையீரல் செல்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் நோயெதிர்ப்பு மண்டலத்தில் எந்தவித தாக்கத்தையும் இது ஏற்படுத்துவதில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதாவது கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள் கூட, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் நோயெதிர்ப்பு பாதுகாப்பைப் பெறலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இந்த கண்டுபிடிப்பு, பிரத்யேகமாக நுரையீரலை இலக்கு வைத்து பாதுகாக்கும் மருந்துகளைத் தயாரிக்க வழிவகுக்கும். தற்போதுள்ள மருந்துகள் பெரும்பாலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை இலக்கு வைத்தே தயாரிக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ்: தெற்காசியர்களிடம் அதிகம் காணப்படும் கொரோனா பாதிக்கும் ஜீன் - பாதுகாத்துக் கொள்வது எப்படி? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.