Jump to content

மனிதர்களின் உயரம் அதிகரித்து கொண்டே போவதற்கான காரணம் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களின் உயரம் அதிகரித்து கொண்டே போவதற்கான காரணம் என்ன?

7 நவம்பர் 2021, 01:23 GMT
உயரம்

பட மூலாதாரம், GETTY IMAGES

மனிதர்கள் இதற்கு முந்தைய காலங்களில் இல்லாத அளவில் உயரமாக வளர்வதும் சீக்கிரமாக பருவமடைவதும் ஏன் என்பதை மூளையில் உள்ள சென்சாரின் மூலம் விளக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பிரிட்டனில் ஒரு மனிதனின் சராசரி உயரம் 20ஆம் நூற்றாண்டில் (3.9.இன்ச்) 10 சென்டிமீட்டராக அதிகரித்துள்ளது. இது பிற நாடுகளில் 7.8 இன்ச் வரையும் அதிகரித்துள்ளது. இதற்கு ஆரோக்கியமான உணவுகள் ஒரு காரணமாக உள்ளது.

இது எப்படி நிகழ்ந்தது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இது குறித்த ஆய்வு, தசைகள் வளரவும், தாமதமான வளர்ச்சிக்கான சிகிச்சையாகவும் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

பொதுவாக சத்தாண உணவை தகுந்த நேரத்தில் உண்பவர்கள் சீக்கிரம் உயரமாக வளர்வார்கள் என்பது விஞ்ஞானிகளுக்கு தெரியும். 

எடுத்துக்காட்டாக தென் கொரியாவை பொறுத்தவரை, அந்நாடு ஏழை நாடாக இருந்து வளர்ச்சியடைந்த நாடாக மாறியதால் மனிதர்களின் வளர்ச்சியும் அதிகரித்தது. இருப்பினும் தெற்காசியா மற்றும் ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தத்தைவிட குறைந்த அளவில்தான் உயரமாகியுள்ளனர்.

நிறைய குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள்"

உணவுகளிலிருந்து வரும் சமிக்ஞைகள் மூளையில் ஹைபோதாலமஸ் என்று அழைக்கப்படும் பகுதிக்கு சென்று உடலின் போஷாக்கான ஆரோக்கியம் குறித்து தெரிவித்து வளர்ச்சியை தூண்டுகிறது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு, லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகம், பிரிஸ்டல் பல்கலைக்கழகம், மிஷிகன் பல்கலைக்கழகம் மற்றும் வாண்டர்பில்ட் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த செயல்முறைக்கு பின்னால் உள்ள மூளையின் ரெசிப்டர் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நேச்சர் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

மருத்துவ பரிசோதனை

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, மருத்துவ பரிசோதனை

அதனை MC3R என்று அழைக்கிறார்கள். அதுதான் உணவு, பாலியல் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய இணைப்பாக உள்ளது.

 

"நமக்கு நிறைய உணவு கிடைத்துள்ளது எனவே வேகமாக வளர வேண்டும் வேகமாக பருவமடைய வேண்டும் அதேபோன்று சீக்கிரம் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உடலுக்கு சொல்கிறது." என்கிறார் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சர் ஸ்டீஃபன் ஓ ரஹிலி.

"இது வெறும் மாயஜாலம் மட்டுமல்ல - இது எப்படி நடைபெறுகிறது என்ற முழு வரைப்படம் எங்களிடம் உள்ளது."

மனிதர்களிடம் மூளை ரெசிப்டர் சரியாக வேலை செய்யவில்லை என்றால் அவர்கள் உயரம் குறைவாக வளருகிறார்கள். மேலும் தாமதமாக பருவமடைகிறார்கள்.

இதை உறுதி செய்ய பிரிட்டனின் பயோவங்கியிடம் 5 லட்சம் தன்னார்வலர்களால் வழங்கப்பட்ட மரபணு வகையை ஆய்வுக் குழு ஆராய்ந்தது. இது ஒரு மரபணு மற்றும் சுகாதாரம் சார்ந்த மிகப்பெரிய தரவு சேகரிப்பாகும்.

மூளையின் ரெசிப்டார்களை இடைமறிக்கும் மரபணு பிறழ்வை கொண்ட குழந்தைகள் பிற குழந்தைகளை காட்டிலும் எடை குறைந்தும், உயரம் குறைவாகவும் காணப்படுகின்றனர். 

MC3R மரபணுவிற்கான இரு மரபணுக்களிலும் பிறழ்வு ஏற்பட்ட ஒருவரை ஆய்வுக் குழுவினர் கண்டறிந்தனர். இது உடல் வளர்ச்சியை அதிகம் குறைத்துவிடும். அதேபோன்று அந்த நபர் உயரம் குறைந்தும் 20 வயதுக்கு மேற்பட்டே பருவமடைந்தும் காணப்படுவார்.

எதிர்காலத்திற்கான மருந்துகள்

மூளை

பட மூலாதாரம், GETTY IMAGES

இந்த ஆய்வுகள் தொடர் நோயால் வலுவற்று, தசைகள் வலுவிழந்து போனவர்களுக்கு உதவும்.

அதேபோன்று "எதிர்காலத்தில் MC3R-ஐ தூண்டிவிடும் மருந்து தசைகளுக்கு கலோரிகளை வழங்குமா என்று ஆராய வேண்டும். இதன்மூலம் நோயாளிகளின் உடல் வலுப்பெறும்" என பேராசிரியர் ஸ்டீஃபன் தெரிவிக்கிறார்.

இந்த ஆய்வை மனிதர்களிடத்தில் மட்டுமல்ல எலிகளிடத்திலும் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.

அதேபோன்று பசியை கட்டுப்படுத்தும் மூளை ரெசிப்டாரையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அது MC4R. அதில் குறைபாடு உடையவர்கள் பொதுவாக அதிக எடையுடன் காணப்படுவர்.

மனிதர்களால் தொடர்ந்து உயரமாக முடியுமா?

உயரம்

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, உயரம்

உயரத்திற்கு ஒரு வரம்பு உள்ளது. அது மனிதர்கள் தங்களின் மரபணு திறனை அடைந்தவுடன் நிகழ்கிறது. உடல்நலமும், உணவும் இதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஏழை குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு போதிய உணவும் கலோரிகளும் கிடைத்தால் அவர்கள், தங்களின் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி போன்றவர்களிடமிருந்து பெற்ற ஜீனுக்கு ஏற்ப வளர்ச்சியடைவர்

பொதுவாக உயரமானவர்கள் அதிக நாட்கள் உயிர்வாழ்வர். அதேபோன்று அவர்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்பும் குறைவு.

இருப்பினும் மனிதர்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்ல முடியாது. பல நாடுகளில் கடந்த தசாப்தத்தில்தான் மனிதர்களின் சராசரி உயரம் அதிகரித்துள்ளது.

அதேபோன்று தென் கொரிய பெண்களும் இரானிய ஆண்களும் கடந்த நூற்றாண்டில் அதிக உயரத்தை அடைந்துள்ளனர். 

நெதர்லாந்து ஆண்கள்தான் உலகின் உயரமான ஆண்கள். அவர்களின் உயரம் 71.8 இன்ச். குவாட்டமாலாவின் பெண்கள்தான் உலகளவில் உயரம் குறைந்த பெண்கள். அவர்களின் உயரம் 55.1 இன்ச்.

 

https://www.bbc.com/tamil/science-59193033

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

மனிதர்களின் உயரம் அதிகரித்து கொண்டே போவதற்கான காரணம் என்ன?

7 நவம்பர் 2021, 01:23 GMT
உயரம்

பட மூலாதாரம், GETTY IMAGES

மனிதர்கள் இதற்கு முந்தைய காலங்களில் இல்லாத அளவில் உயரமாக வளர்வதும் சீக்கிரமாக பருவமடைவதும் ஏன் என்பதை மூளையில் உள்ள சென்சாரின் மூலம் விளக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பிரிட்டனில் ஒரு மனிதனின் சராசரி உயரம் 20ஆம் நூற்றாண்டில் (3.9.இன்ச்) 10 சென்டிமீட்டராக அதிகரித்துள்ளது. இது பிற நாடுகளில் 7.8 இன்ச் வரையும் அதிகரித்துள்ளது. இதற்கு ஆரோக்கியமான உணவுகள் ஒரு காரணமாக உள்ளது.

இது எப்படி நிகழ்ந்தது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இது குறித்த ஆய்வு, தசைகள் வளரவும், தாமதமான வளர்ச்சிக்கான சிகிச்சையாகவும் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

பொதுவாக சத்தாண உணவை தகுந்த நேரத்தில் உண்பவர்கள் சீக்கிரம் உயரமாக வளர்வார்கள் என்பது விஞ்ஞானிகளுக்கு தெரியும். 

எடுத்துக்காட்டாக தென் கொரியாவை பொறுத்தவரை, அந்நாடு ஏழை நாடாக இருந்து வளர்ச்சியடைந்த நாடாக மாறியதால் மனிதர்களின் வளர்ச்சியும் அதிகரித்தது. இருப்பினும் தெற்காசியா மற்றும் ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தத்தைவிட குறைந்த அளவில்தான் உயரமாகியுள்ளனர்.

நிறைய குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள்"

உணவுகளிலிருந்து வரும் சமிக்ஞைகள் மூளையில் ஹைபோதாலமஸ் என்று அழைக்கப்படும் பகுதிக்கு சென்று உடலின் போஷாக்கான ஆரோக்கியம் குறித்து தெரிவித்து வளர்ச்சியை தூண்டுகிறது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு, லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகம், பிரிஸ்டல் பல்கலைக்கழகம், மிஷிகன் பல்கலைக்கழகம் மற்றும் வாண்டர்பில்ட் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த செயல்முறைக்கு பின்னால் உள்ள மூளையின் ரெசிப்டர் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நேச்சர் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

மருத்துவ பரிசோதனை

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, மருத்துவ பரிசோதனை

அதனை MC3R என்று அழைக்கிறார்கள். அதுதான் உணவு, பாலியல் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய இணைப்பாக உள்ளது.

 

"நமக்கு நிறைய உணவு கிடைத்துள்ளது எனவே வேகமாக வளர வேண்டும் வேகமாக பருவமடைய வேண்டும் அதேபோன்று சீக்கிரம் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உடலுக்கு சொல்கிறது." என்கிறார் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சர் ஸ்டீஃபன் ஓ ரஹிலி.

"இது வெறும் மாயஜாலம் மட்டுமல்ல - இது எப்படி நடைபெறுகிறது என்ற முழு வரைப்படம் எங்களிடம் உள்ளது."

மனிதர்களிடம் மூளை ரெசிப்டர் சரியாக வேலை செய்யவில்லை என்றால் அவர்கள் உயரம் குறைவாக வளருகிறார்கள். மேலும் தாமதமாக பருவமடைகிறார்கள்.

இதை உறுதி செய்ய பிரிட்டனின் பயோவங்கியிடம் 5 லட்சம் தன்னார்வலர்களால் வழங்கப்பட்ட மரபணு வகையை ஆய்வுக் குழு ஆராய்ந்தது. இது ஒரு மரபணு மற்றும் சுகாதாரம் சார்ந்த மிகப்பெரிய தரவு சேகரிப்பாகும்.

மூளையின் ரெசிப்டார்களை இடைமறிக்கும் மரபணு பிறழ்வை கொண்ட குழந்தைகள் பிற குழந்தைகளை காட்டிலும் எடை குறைந்தும், உயரம் குறைவாகவும் காணப்படுகின்றனர். 

MC3R மரபணுவிற்கான இரு மரபணுக்களிலும் பிறழ்வு ஏற்பட்ட ஒருவரை ஆய்வுக் குழுவினர் கண்டறிந்தனர். இது உடல் வளர்ச்சியை அதிகம் குறைத்துவிடும். அதேபோன்று அந்த நபர் உயரம் குறைந்தும் 20 வயதுக்கு மேற்பட்டே பருவமடைந்தும் காணப்படுவார்.

எதிர்காலத்திற்கான மருந்துகள்

மூளை

பட மூலாதாரம், GETTY IMAGES

இந்த ஆய்வுகள் தொடர் நோயால் வலுவற்று, தசைகள் வலுவிழந்து போனவர்களுக்கு உதவும்.

அதேபோன்று "எதிர்காலத்தில் MC3R-ஐ தூண்டிவிடும் மருந்து தசைகளுக்கு கலோரிகளை வழங்குமா என்று ஆராய வேண்டும். இதன்மூலம் நோயாளிகளின் உடல் வலுப்பெறும்" என பேராசிரியர் ஸ்டீஃபன் தெரிவிக்கிறார்.

இந்த ஆய்வை மனிதர்களிடத்தில் மட்டுமல்ல எலிகளிடத்திலும் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.

அதேபோன்று பசியை கட்டுப்படுத்தும் மூளை ரெசிப்டாரையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அது MC4R. அதில் குறைபாடு உடையவர்கள் பொதுவாக அதிக எடையுடன் காணப்படுவர்.

மனிதர்களால் தொடர்ந்து உயரமாக முடியுமா?

உயரம்

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, உயரம்

உயரத்திற்கு ஒரு வரம்பு உள்ளது. அது மனிதர்கள் தங்களின் மரபணு திறனை அடைந்தவுடன் நிகழ்கிறது. உடல்நலமும், உணவும் இதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஏழை குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு போதிய உணவும் கலோரிகளும் கிடைத்தால் அவர்கள், தங்களின் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி போன்றவர்களிடமிருந்து பெற்ற ஜீனுக்கு ஏற்ப வளர்ச்சியடைவர்

பொதுவாக உயரமானவர்கள் அதிக நாட்கள் உயிர்வாழ்வர். அதேபோன்று அவர்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்பும் குறைவு.

இருப்பினும் மனிதர்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்ல முடியாது. பல நாடுகளில் கடந்த தசாப்தத்தில்தான் மனிதர்களின் சராசரி உயரம் அதிகரித்துள்ளது.

அதேபோன்று தென் கொரிய பெண்களும் இரானிய ஆண்களும் கடந்த நூற்றாண்டில் அதிக உயரத்தை அடைந்துள்ளனர். 

நெதர்லாந்து ஆண்கள்தான் உலகின் உயரமான ஆண்கள். அவர்களின் உயரம் 71.8 இன்ச். குவாட்டமாலாவின் பெண்கள்தான் உலகளவில் உயரம் குறைந்த பெண்கள். அவர்களின் உயரம் 55.1 இன்ச்.

 

https://www.bbc.com/tamil/science-59193033

பொய்யான தரவுகள் தாய் தகப்பன் 5.1 5.55 மகன் 14 வயதில் 6 அடி  காரணம் தகப்பன் கோழிக்கடை கோழிகளுக்கு போடப்படும் ஆதீத  வளர்ச்சி ஊசியின்  தாக்கம் . 21 நாளில்  கோழி ரெடியாகும் விந்தை இங்கிலாந்தில் நடக்கும் அதிசயம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.