Jump to content

இன்று பிறந்தநாள் காணும் கமல்ஹாசனைப் பற்றி.....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

கமல்ஹாசனைப் பற்றி.....

 

spacer.png

நடிகர் கமல்ஹாசனின் 67ஆவது பிறந்தநாள் இன்று (நவம்பர் 7). இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கமல் பிறந்த நாள் சிறப்பு தொகுப்பு

1. பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி. சீனிவாசனுக்கும், ராஜலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் கமல்ஹாசன்.

2. இவருடன் பிறந்தவர்கள் சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி. இவர்களில் கமல்ஹாசன்தான் கடைசியாக பிறந்தவர்.

3. கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா.

4. களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர் கமல்ஹாசன்.

5.களத்தூர் கண்ணம்மாவில் ஜெமினி கணேசனுக்கு மகனாக நடித்தவர், அவ்வை சண்முகியில் மருமகனாகவும் தலைமுறை கடந்து நடித்தது கமல்ஹாசன் மட்டுமே.

6.கமல்ஹாசன் களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க காரணமாக இருந்தவர் அவரது குடும்ப மருத்துவர். அவர்தான் துறுதுறு என்று இருந்த கமலை ஏவி. மெய்யப்ப செட்டியாரிடம் அறிமுகபடுத்தியவர்.

7.முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தது கமல்ஹாசன் மட்டுமே.

8. கமல்ஹாசன் கதாநாயகனாக அறிமுகமானது 1974ல் வெளியான கன்னியாகுமரிஎன்கிற மலையாளப்படத்திலும், தமிழில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்திலும்.

9. கமல்ஹாசன் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது 1973-ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் திரைப்படம்தான்.

10.நடிப்பு பற்றி அனைத்து அடிப்படை நுணுக்கங்களையும் கமல்ஹாசன் கற்றது அவ்வை டி. சண்முகத்திடம் தான்.

11. 1970 களில் கமல்ஹாசன் ரஜினியுடன் இணைந்து நடித்த படங்கள் நினைத்தாலே இனிக்கும்,

16 வயதினிலே, அவர்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, இவை அனைத்தும் வெற்றி படங்கள்.

12. நினைத்தாலே இனிக்கும் படம்தான் கமலும் ரஜினியும் இணைந்து நடித்த கடைசிப் படம்.

13. ராஜபார்வை திரைப்படம் வெற்றிப்படமாக அமையாவிட்டாலும், கமல்ஹாசனுக்கு பாராட்டையும், விருதுகளையும் பெற்றுத் தந்தது இந்த திரைப்படம்.

14. கமல்ஹாசன் 1980களில் இந்தி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்த காலகட்டங்களில்தான் ஏக் து ஜே கே லியே, சாகர், ராஜ் திலக் ஆகிய படங்களில் நடித்தார். இவை வெற்றிப் படங்களாகவும் அமைந்தன.

15. நட்புக்கு எப்போதும் மரியாதை கொடுப்பவர் கமல். அதற்கு ஓர் உதாரணம், கமல்ஹாசன் தந்தை சீனிவாசனின் உடல் தகனத்திற்காக வைக்கப்பட்டு இருக்க, உடலை சுற்றி சந்திரஹாசன், சாருஹாசன், கமல்ஹாசன் ஆகியோர் நிற்கிறார்கள். சிதையின் அருகில் இருந்த ஆர்.சி.சக்தி, ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா இருவரையும் கமல்ஹாசன் அண்ணா... நீங்களும் வாங்க என்று கொள்ளி வைக்க அழைக்க, இருவரும் நெகிழ்ந்து விட்டார்கள்.

16. ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய முதல் இந்திய நடிகர் கமல்ஹாசன்.

17.கமல் ஹாசனுடன் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்தவர்கள் ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா.

18.ஃபிலிம் ஃபேர் பத்திரிகை விருதை அதிகமுறை(18) வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமல்ஹாசன்தான். இனி எனக்கு விருது தராதீர்கள், புதிய இளைஞர்களுக்கு தாருங்கள் என்று ஃபிலிம் ஃபேருக்கு கமல் கடிதம் எழுதியதால், இந்த எண்ணிக்கை இத்தோடு நின்றது.

19. எண்பதுகளின் மத்தியில் `மய்யம்` என்ற இலக்கிய இதழை சிறிது காலம் நடத்தினார் கமல்.

20.மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார் கமல்ஹாசன்.

21. தமிழ் சினிமாவின் மூன்று முக்கிய ஆளுமைகளுக்கு நடன மாஸ்டராக இருந்திருக்கிறார் கமல்ஹாசன் அவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, மற்றும் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்கு `நான் ஏன் பிறந்தேன்`, சிவாஜிக்கு `சவாலே சமாளி`, ஜெயலலிதாவுக்கு `அன்புத்தங்கை`.

22. தன் உடலை மருத்துவ கல்லூரி மாணவர்களுக்காக தானம் செய்திருக்கிறார் கமல்ஹாசன். தமிழ் திரை உலகத்தில் இதில் முன்மாதிரி இவர்தான்.

23.கமலின் விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏஷியன் இண்டர்நேஷனல் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

24. எட்டு முறை மாநில அரசின் விருதை பெற்று இருக்கிறார் கமல்ஹாசன். அதுபோல இரண்டு முறை ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்று இருக்கிறார்.

25. கமல்ஹாசன் இதுவரை ஐந்து மொழிகளில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.

26. கமல்ஹாசனின் ஆத்மார்த்தமான நண்பராக வழிகாட்டியாக இருந்தவர் மறைந்த அனந்து.

27. கமல்ஹாசன் 1980களிலேயே அரசியல் பேச தொடங்கிவிட்டார். இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டு, படுகொலைசெய்யப்பட்டபோதுதமிழகத்தில் பேரணி நடத்தியவர் கமல்.

38.கமல் குடும்பத்தில் இருந்து மட்டும் மூன்று பேர் தேசிய விருது பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கமல்ஹாசன், சாருஹாசன் மற்றும் சுஹாசினி.

29. 2005-ம் ஆண்டு சத்யபாமா நிகர்நிலை பல்கலைகழகம் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.

30. கமல்ஹாசன் நடிப்புத் திறமைக்காக 1990-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதுபோல, 2014-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

31. கமல்ஹாசன் முதன்முதலில் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றது அவர் கதாநாயகனாக அறிமுகமான மலையாளப் படமான கன்னியாகுமரி திரைப்படத்திற்காக.

32. அபூர்வராகங்கள் படத்தில் நாயகனாக கமல்ஹாசன் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது முதல் முறையாக வழங்கப்பட்டது.

33. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஃபிரஞ்ச் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடியவர் கமல்ஹாசன்.

34. தன் திரைப்படங்களுக்காக அதிக பிரச்சினைகளை சந்தித்தவர் கமல். இதில் நகைமுரண் என்னவென்றால், பிரச்சினையை சந்தித்த இவருடைய படங்கள் விருமாண்டி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், விஸ்வரூபம் அனைத்தும் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் சாதனை நிகழ்த்திய படங்களாகும்.

35. பாலுமகேந்திரா இயக்குநராக அறிமுகமான கோகிலா படத்தின் கதாநாயகன் கமல்ஹாசன்.

36. பாரதிராஜா இயக்குநராக அறிமுகமான 16 வயதினிலே திரைப்படத்தின் கதாநாயகனும் கமல்ஹாசன்.

37. கமல்ஹாசன் பல்வேறு சமூக பிரச்சனைகள் குறித்து எழுதி ஒரு கட்டுரை தொகுப்பை வெளியிட்டார். அந்த தொகுப்பின் பெயர் `தேடி தீர்ப்போம் வா’.

38. ரஜினிகாந்த் திரையுலக வாழ்க்கையில் முக்கியப்படம் முள்ளும் மலரும் அந்தப் படத்தின் படப்பிடிப்பை முடிப்பதற்கு காரணமாக இருந்தவர் கமல்ஹாசன்.

39. இதயம் பேசுகிறது வார இதழில் கமல் `தாயம்` என்ற தொடர்கதையை எழுதினார். இந்த தொடர்கதைதான் பின்பு ஆளவந்தான் திரைப்படமாக தயாரிக்கப்பட்டது.

40. மெட்ராஸ் பாஷையை சரளமாக பேச கூடியவர் கமல்ஹாசன். இதற்கு குருநாதர் நடிகர் லூஸ்மோகன்.

41.நெல்லைத் தமிழ்,கொங்குதமிழ் இரண்டையும் சரளமாக பேசக்கூடியவர் கமல்ஹாசன்.

42.சினிமா சம்பிரதாயங்களில் நம்பிக்கையற்றவர் கமல். ஹே ராம் படத்தின் முதல் வசனமே, "சாகேத்ராம்... திஸ் இஸ் பேக் அப் டைம்". `பேக் அப்` என்ற வார்த்தையை முதல் வசனமாக வைப்பது சினிமாவில் கெட்ட சகுணமாக பார்க்கப்படும்.

43. கமலின் நற்பணி இயக்கத்தினர், இதுவரை 10,000-க்கும் அதிகமான ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள்.

44. முறையாக நாட்டியம் பயின்று அரங்கேற்றம் செய்தவர் கமல்ஹாசன். மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபையில் அவரின் நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றுள்ளது.

45. சர்வதேச அரசியல்,உள்ளூர் அரசியலை சரளமாக பேசக்கூடியவர் தமிழ் நடிகர்களில் கமல்ஹாசன் மட்டுமே.

46. கமல்ஹாசன் தனது வீட்டில் மிகப்பெரிய வீடியோ லைப்ரரியை வைத்திருக்கிறார். அதில் உலக சினிமா தொடங்கி உள்ளூர் சினிமா வரை அனைத்து மொழி திரைப்படங்களும் உள்ளன.

47. சிறந்த ஆங்கிலப்படங்களை கமல்ஹாசனும் - கவுண்டமணியும் பரிமாற்றம் செய்து கொள்வது வழக்கம்.

48. கமல்ஹாசன் உற்சாகமான மூடில் இருந்தால், தான் எழுதிய கவிதைகளை லயத்தோடு நண்பர்களுக்கு பாடிகாட்டுவார்.

49. கமல்ஹாசனுக்கு பிடித்தமான தலைவர் காந்தியடிகள்.

50. கமல்ஹாசன் கோலிவுட் என்ற வார்த்தையை எப்போதும் உச்சரிக்கமாட்டார். எப்போதும் தமிழ் திரையுலகம் என்று அழுத்தி உச்சரிக்கும் தமிழ் நடிகர் கமல்ஹாசன்.

51. கமல்ஹாசன் முதன் முதலில் தொடங்கிய திரைப்பட நிறுவனத்தின் பெயர் ஹாசன் பிரதர்ஸ். இந்த நிறுவனத்தின் சார்பில் ராஜபார்வை திரைப்படத்தை தயாரித்தார்.

52. பின்னாளில் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் என்ற பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கி தற்போதுவரை படங்களை தயாரித்து வருகிறார்.

53. தசாவதாரம் திரைப்படத்தில் பத்து வேடங்களில் நடித்த முதல் இந்திய நடிகர் கமல்ஹாசன் .

54. ஆனந்த விகடனில் கமல் எழுதிய `என்னுள் மையம் கொண்ட புயல்` என்ற தொடர் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது

55. நடிகராக இருந்தாலும் திரைப்படங்கள் பார்ப்பதைவிட அதிக நேரம் புத்தகம் படிப்பதில்தான் கமல்ஹாசன் நேரத்தை செலவிடுவார்.

56. திரைப்பட தொழில் சம்பந்தமான புதிய தொழில்நுட்பங்களை, மாற்றங்களை உடனுக்குடன் அறிந்துகொள்வார்.

57. பிலிம் இல்லாமல் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படம் தயாரிக்கும் முறையை தமிழ் சினிமாவில் மும்பை எக்ஸ்பிரஸ் படம் மூலம் அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன்.

58. கணினி இந்தியாவில் அறிமுகமாகாத காலத்தில் விக்ரம் படத்தில் கணினியை பயன்படுத்தியவர் கமல்ஹாசன்.

59. இப்போது உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமலின் ஆரம்பகால அடைமொழி காதல் இளவரசன்.

60. டைம் இதழ் வெளியிட்ட உலகின் சிறந்த நூறு திரைப்படங்கள் பட்டியலில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் படம் இடம்பெற்றது.

61. பாலசந்தர் கமல்ஹாசனுக்கு எழுதும் கடிதங்கள் எல்லாம், "மை டியர் ராஸ்கல்" என்று தொடங்கும்.

62. ஆர்.எஸ்.மனோகரின் இலங்கேஸ்வரன் நாடகத்தைப் திரைப்படமாக மாற்றும் விருப்பம் இன்று வரை நிறைவேறாமல் உள்ளது.

63. பாலச்சந்தரை அப்பா என்றும் பாரதிராஜவை அண்ணன் என்றும் கமல்ஹாசன் அழைப்பது வழக்கம்.

64. சமூக ஊடகங்களில், குறிப்பாக ட்விட்டரில் சுறுசுறுப்பாக இயங்கிய முதல் தமிழ் நடிகர் கமல்ஹாசன்.

65.தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிகட்டு போராட்டத்தை தனது ட்விட்டர் பதிவின் மூலம் சர்வதேச தமிழ் சமூகத்திடம் சென்றடைய காரணமானவர்களில் கமல்ஹாசன் முதன்மையானவர்.

66.தனது 63-வது வயதில் மக்கள் நீதி மய்யம் எனும் பெயரில் அரசியல் கட்சியை துவங்கினார்.

67.ஒரே வருடத்தில் வெளியான ஐந்து வெள்ளிவிழா படங்களில் நடித்தவர் கமல்ஹாசன். இந்த சாதனை இதுவரை யாராலும் இந்திய சினிமாவில் முறியடிக்கப்படவில்லை. அந்த படங்கள் வாழ்வே மாயம், மூன்றாம்பிறை, தேரி கஸம், சகலகலாவல்லவன், தோ கமல் ஹோகயா

 

https://minnambalam.com/entertainment/2021/11/07/10/kamal-hasan-67-th-birthday

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வயதில்....நடிகை ஆண்ட்ரியா வுடன் லிவிங் டுகெதர் வாழ்வு....

சுத்தி.... திரத்திவிட முயல.... அவர்... அரசியல் கட்சி தலைவரும், நடிகரும் ஆன ஒருவர் தன்னை ஏமாத்தி விட்டதாகவும், அதனால் பெரும் மன அழுத்தில் உள்ளதாகவும், அதுகுறித்து ஒரு புத்தகம் வெளியிடப் போவதாகவும் சொல்ல.... திருப்பி சேர்த்துக்கிட்டார்...

ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க சான்ஸ்சும் கொடுத்து இருக்கிறார்.

ஆக... புத்தகம் வராது.   

Kamal Hassan Uttama Villain Telugu Movie Part 2 | Andrea Jeremiah | Pooja  Kumar - YouTube

இந்த படத்தில் இருக்கும் இருவரையுமே... கமல் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் வைத்திருந்தார்.... இதில்.... ஆண்டிரியாவுக்கு பின்னர்.... பூஜா குமார்...

பின்னர்... இப்போது.... இருவரும்...

Andrea and Pooja Kumar in Kamal Haasan's Thalaivan Irukkindraan? | Tamil  Movie News - Times of India

Link to comment
Share on other sites

24 minutes ago, Nathamuni said:

இந்த வயதில்....நடிகை ஆண்ட்ரியா வுடன் லிவிங் டுகெதர் வாழ்வு....

சுத்தி.... திரத்திவிட முயல.... அவர்... அரசியல் கட்சி தலைவரும், நடிகரும் ஆன ஒருவர் தன்னை ஏமாத்தி விட்டதாகவும், அதனால் பெரும் மன அழுத்தில் உள்ளதாகவும், அதுகுறித்து ஒரு புத்தகம் வெளியிடப் போவதாகவும் சொல்ல.... திருப்பி சேர்த்துக்கிட்டார்...

ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க சான்ஸ்சும் கொடுத்து இருக்கிறார்.

ஆக... புத்தகம் வராது.   

Kamal Hassan Uttama Villain Telugu Movie Part 2 | Andrea Jeremiah | Pooja  Kumar - YouTube

இந்த படத்தில் இருக்கும் இருவரையுமே... கமல் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் வைத்திருந்தார்.... இதில்.... ஆண்டிரியாவுக்கு பின்னர்.... பூஜா குமார்...

பின்னர்... இப்போது.... இருவரும்...

Andrea and Pooja Kumar in Kamal Haasan's Thalaivan Irukkindraan? | Tamil  Movie News - Times of India

வாழ்க கமல். அவர் இரெண்டு இளசுகளுடன் வாழ்வது உங்களுக்கு ஏன் உரசுகிறது? முடியவில்லை என்ற பொறாமை தவிர வேறு என்ன காரணம் இருக்கும் …?🙂

Link to comment
Share on other sites

தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல தமிழ் அரசியல் உலகிலும் தீர்க்க தரிசனமிக்க ஆளுமைமிக்க ஒரு தலைவனாக கமல் இருக்கின்றார். தமிழினம் அவரது அரசியல் அறிவை முற்போக்குத்தனமான அவரது  தொலைதூர நோக்கு அணுகு முறையை அடையாளம் காணாதது தமிழினத்தின் இழப்பே.

தமிழினம் கண்ட ஒரு பெரும் சகலவலா வல்லவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கற்பகதரு said:

வாழ்க கமல். அவர் இரெண்டு இளசுகளுடன் வாழ்வது உங்களுக்கு ஏன் உரசுகிறது? முடியவில்லை என்ற பொறாமை தவிர வேறு என்ன காரணம் இருக்கும் …?🙂

பொறாமை 😁

ரஜனி கூட.... 55 மேல.... சாப்ட் ஆகிட்டாரு.....67 வயசில... ஒரு 25 வயசை பிடிச்சு காட்டுங்கோ ... 

பந்தயம்..... 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமலின் தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் என்பனவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை.  அவரை எனக்குப் பிடிப்பதில்லை. ஆனால் இந்திய (தமிழ்) சினமா கண்ட மிக ஒப்பற்ற நடிகர் கமல். நாடகத்தனம் இல்லாமல் இயல்பாக நடிப்பை வெளிப்படுத்துபவர் கமல். கமலின் நடிப்பு உலகத் தரம் வாய்ந்தது. கமலுக்கு நிகர் கமல்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!

Joyeux Anniversaire Fleurs Gif Anime - glayds

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

கமலின் தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் என்பனவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. 

தனிப்பட்ட வாழ்க்கையில்.... இவரை காதல் இளவரசன் என்பார்கள்...... உண்மையில் காதல் மன்னன் ஜெமினியை..... சிற்றரசர் ஆக்கியவர் கமல்.....

இவரது லிஸ்டில் இருந்த பெண்கள் மிக அதிகம்.....

அண்மையில், பயில்வான் ரங்கநாதன்..... அவரது அண்ணன் மகள் சுகாசினி இருவர் பேட்டியில் இது தெளிவானது.

சுகாசினி சொன்னார்..... நிணைத்தாலே இனிக்கும் படம் சூட்டிங் முடித்து சிங்கப்பூரில் இருந்து வாங்கி வந்த ரொம்ப ரைற்ரான சோர்ஸ்ட் போட்டுகிட்டு...... எதிராஜ்ல படித்த தன்னை.... டிரொப் பண்ணுவதாக..... டிரைவரிடம் கார் திறப்பை பறிச்சுக்கிட்டு..... வந்து..... வெளில விடாம.... உள்ள வந்து.... போற்றிக்கோவில், தடையிருந்தும் விட்டு... இறங்கி கதவை திறந்து..... இறக்க..... கெட் ரீச்சர், செக்கியூரிட்டி திட்டப் போறாங்க என்று பயந்திட்டே இறங்க.....

எல்லோரும்..... ஆ.... கமல்..... என்று ஓடி வந்து..... ஆட்டோகிராப் கேட்டாங்க....

தெரிஞ்சிட்டுது தான் பிளான் பண்ணி, வந்தீங்க.... இல்லையா என்று கேட்க.... சிரித்தார் கமல்....

மனிதர்.... பூந்து விளையாடி இருக்கிறார்....

அதன் காரணமாகவே.... அவரின் இரு திருமணங்கள்..... கெளதமியுடனான.... சேர்ந்த வாழ்வு... சரிவரவில்லை..... 🥺

இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனின் இந்த பராக்கிரமங்கள் குறித்து பொறைமைப்பட எதுவும் இல்லையே யூட்டர்....

 

1 hour ago, கற்பகதரு said:

வாழ்க கமல். அவர் இரெண்டு இளசுகளுடன் வாழ்வது உங்களுக்கு ஏன் உரசுகிறது? முடியவில்லை என்ற பொறாமை தவிர வேறு என்ன காரணம் இருக்கும் …?🙂

 

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

பொறாமை 😁

ரஜனி கூட.... 55 மேல.... சாப்ட் ஆகிட்டாரு.....67 வயசில... ஒரு 25 வயசை பிடிச்சு காட்டுங்கோ ... 

பந்தயம்..... 👍

உங்களால் முடியவில்லை என்றதால் மற்றவர்களாலும் முடியாது என்று நினைக்கலாமா? உங்களால் செய்ய முடியாதவை எவ்வளவோ உள்ளன, இல்லையா? இதற்கு சம்பந்தப்பட்ட உதாரணம் காட்ட முயன்றால் யாழ் களம் எனக்கு நிரந்தர தடை விதிக்கக்கூடும் என்று பயமாக இருக்கிறிது.😋

1 hour ago, Nathamuni said:

இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனின் இந்த பராக்கிரமங்கள் குறித்து பொறைமைப்பட எதுவும் இல்லையே யூட்டர்....

அப்படியா? பூனை கண்ணை மூடிக்கொண்டு தன்னை யாரும் பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டு பால்குடிக்குமாம் - நீங்கள் எதிராஜுக்கு கார் ஓடிப்போன கமலை விட கில்லாடியாக இருக்கவேண்டும் - அவர்தான் உங்களை பார்த்து பொறாமைப்பட வேண்டும். 😄

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

உங்களால் முடியவில்லை என்றதால் மற்றவர்களாலும் முடியாது என்று நினைக்கலாமா? உங்களால் செய்ய முடியாதவை எவ்வளவோ உள்ளன, இல்லையா? இதற்கு சம்பந்தப்பட்ட உதாரணம் காட்ட முயன்றால் யாழ் களம் எனக்கு நிரந்தர தடை விதிக்கக்கூடும் என்று பயமாக இருக்கிறிது.😋

அப்படியா? பூனை கண்ணை மூடிக்கொண்டு தன்னை யாரும் பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டு பால்குடிக்குமாம் - நீங்கள் எதிராஜுக்கு கார் ஓடிப்போன கமலை விட கில்லாடியாக இருக்கவேண்டும் - அவர்தான் உங்களை பார்த்து பொறாமைப்பட வேண்டும். 😄

 

ஒரு விவாதம் செய்வதானால்.... அதில்.... கருத்து செறிவு இருக்க வேண்டும்..... சும்மா விரல் இருக்கிறது.... கீ போட் இருக்கிறது என்று அலம்பறை பணணக் கூடாது யூட்டர்...

உங்களது விவாதத்தைப் பார்த்தால்..... கமல் கட்டவுட் பால் ஊத்துற ரசிகர் மன்ற உறுப்பினர்போலுள்ளது.....

வாழ்த்துக்கள்.....

இல்லாவிடில்.... சீரியசாக இல்லாமல் நகைச்சுவையாகவே பதியுங்கள்..... நமக்கு புரியும்.

கமலின், தனிப்பட்ட வாழ்வில் நடிப்பத்திறமை சோபிக்கவில்லை.... அதாவது நடிக்கவில்லை. அவருடன் வாழ வந்த பெண்களுக்கு, மிகுந்த மனவலியே கொடுத்தார்.

இது அணைவருக்குமே ஒரு படிப்பினை.....

அதில் பொறாமைப்பட ..... அது ஒரு சாதனையே அல்ல.

பரிதாபகரமானது. இவரைப் போலவே வாழத்தலைபட்ட சரத்குமாருக்கு ஜெமினி கொடுத்த அட்வைஸ்..... என்ன ஆட்டம் போட்டாலும்.... வீட்டை ஒழுங்காக வைத்திரு.... நாளை நோயில் விழுந்தால், கவனிக்க ஆள் இருக்காது.

சரத், ராதிகாவை கட்டி, பையன் பெத்து.... அமைதியாக வாழ்கிறார்.

கமல்?

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

சரத், ராதிகாவை கட்டி, பையன் பெத்து.... அமைதியாக வாழ்கிறார்.

கமல்?

கமலுக்கு என்ன குறைச்சல்? இரெண்டு இளசுகள், தோற்றாலும் சளைக்காத அரசியல்கட்சி என்று ஓகோ என்றிருக்கிறார். அமைதியாக இருக்க விரும்புபவர்கள் அமைதியாக இருக்கட்டும் அதற்காக ஓகோ என்று வாழவிரும்புபவனை பார்த்து ஐயோ பரிதாபம் உனக்கு அமைதியான வாழ்வு கிட்டவில்லை என்பது ….. அறிவின் உச்சம் கடந்த ஞானம் 😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கற்பகதரு said:

கமலுக்கு என்ன குறைச்சல்? இரெண்டு இளசுகள், தோற்றாலும் சளைக்காத அரசியல்கட்சி என்று ஓகோ என்றிருக்கிறார். அமைதியாக இருக்க விரும்புபவர்கள் அமைதியாக இருக்கட்டும் அதற்காக ஓகோ என்று வாழவிரும்புபவனை பார்த்து ஐயோ பரிதாபம் உனக்கு அமைதியான வாழ்வு கிட்டவில்லை என்பது ….. அறிவின் உச்சம் கடந்த ஞானம் 😇

சரிங்க தலை.. 👍

நம்மளையும் ரசிகர் மன்றத்திலே சேர்த்துவிடுவீங்களா?  😇

பால்குடத்தோட வந்துடுறேன்... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

சுத்தி.... திரத்திவிட முயல.... அவர்... அரசியல் கட்சி தலைவரும், நடிகரும் ஆன ஒருவர் தன்னை ஏமாத்தி விட்டதாகவும், அதனால் பெரும் மன அழுத்தில் உள்ளதாகவும், அதுகுறித்து ஒரு புத்தகம் வெளியிடப் போவதாகவும் சொல்ல.... திருப்பி சேர்த்துக்கிட்டார்...

ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க சான்ஸ்சும் கொடுத்து இருக்கிறார்.

நன்றிகள்..👌ஒரு வழியா ஒரு தெளிவு கிடைத்தது தோழர் நான் உதயநிதி என்டு நினைத்தனன்.

தட்ஸ்தமிழ்-இல் கிசுகிசு போடுறவை .. கொமென்ற் செக்சனை ஒப் பண்ணிட்டு போட்டால் என்னை மாதிரி ஆட்களுக்கு எப்படி தெரியும்.?👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.