Jump to content

திருமண உறவின் வரலாறு: 'தேன் நிலவு' என்பது என்ன? ஏன் அந்தப் பெயர் வந்தது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருமண உறவின் வரலாறு: 'தேன் நிலவு' என்பது என்ன? ஏன் அந்தப் பெயர் வந்தது?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
தேனிலவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

புதிதாகத் திருமணமான தம்பதிகள் தங்கள் திருமண நாளுக்குப் பிறகு தங்களை நெருக்கமாக்கிக் கொள்வதற்காக ஒருவரையொருவர் கவனத்தை ஈர்க்க விரும்புவது இயற்கையானது. இதற்காக திருமணத்தைத் தொடர்ந்து ஒரு குறுகிய பயணம் நீண்ட காலமாகவே வழக்கத்தில் இருக்கிறது.

இது பெரும்பாலும் பணக்காரத் தம்பதிகளுக்கே உரியது. தொடக்க காலத்தில் திருமணத்திற்குப் பிந்தைய 'சுற்றுப்பயணத்தை' மேற்கொள்வது நண்பர்களையும் குடும்பத்தினரையும் சந்திக்க பணக்கார தம்பதிகளுக்கு வாய்ப்பாக அமைந்தது. ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்துகொள்ளவும் முடிந்தது.

இந்தத் தேனிலவு அல்லது ஹனிமூன் தொடர்பாக தொடர்பான வரலாறு பிரிட்டனில் இருந்து தொடங்குகின்றன. பிரிட்டன் மன்னர் எட்டாம் ஹென்றி தனது திருமணத்தைத் தொடர்ந்து அவரது மனைவியுடன் குளோசெஸ்டர்ஷையரில் உள்ள கோட்டையில் ஒரு வாரத்திற்கும் மேலாக கழித்ததாக கூறப்படுகிறது.

இரண்டாம் சார்லஸ் தனது புதிய மனைவியுடன் ஹாம்டன் கோர்ட் அரண்மனையில் தனியாக இருந்தார். அதற்கு வேறு காரணங்களும் இருந்தன. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செய்தித்தாள் ஒன்று, ராணுவ அதிகாரியும் ஒரு அரச வாரிசும் "நார்விச்சிற்குத் தங்கள் திருமணத்தை நிறைவு செய்யப் புறப்பட்டனர்" என்று எழுதியது.

19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில் மலிவு விலையில் ரயில் பயணத்தை மேற்கொள்ள முடிந்தது. அதனால் தொழிலாளர்களாக பணியாற்றியவர்கள்கூட புதுமணத் தம்பதிகளாக கடலோர நகரங்களுக்குச் ஒரு சிறப்புப் பயணத்தை மேற்கொண்டு வந்தார்கள்.

அதே நேரத்தில் அதிக வசதியான தம்பதிகள் வேறொரு கண்டத்துக்கே தப்பிச் சென்று புது வாழ்க்கையை அனுபவிக்க முடிந்தது. கோடையில் திருமணம் செய்து கொண்டால், குறைந்தபட்சம் அவர்களால் வெளியிடங்களுக்குச் செல்லலாம். ஆனால் குளிர்காலத்தில் திருமணம் செய்யும் மணப்பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டும் என்ற குறிப்புகள் இருக்கின்றன.

தேன் நிலவு என்ற பெயர் எப்படி வந்தது?

1800 களின் இறுதி வரை, 'ஹனிமூன்' என்ற சொல் உண்மையில் திருமணத்திற்குப் பிந்தைய உல்லாசப் பயணத்தைக் குறிக்கவில்லை. திருமணத்தின் முதல் மாதத்தை மட்டுமே குறிப்பதற்கு அது பயன்பட்டது.

1552 ஆம் ஆண்டின் ஒரு புத்தகத்தில் 'ஹனி மோன்' என்ற சொல்லானது புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்களைக் குறிக்கும் "கொச்சையான மக்கள்" என்பவர்களின் பயணத்தைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது.

18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், சாமுவேல் ஜான்சனின் அகராதி "திருமணத்திற்குப் பிறகு மென்மை மற்றும் மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றும் இல்லாத முதல் மாதம்" என்று இந்தக் காலகட்டத்தை வரையறுத்தது. இதன் உட்பொருள் என்னெவன்றால், சந்திரனுடனேயே அவர்களது நெருக்கமும் குறைந்துவிடும் என்பதுதான்.

இது 30 நாட்களுக்கு ஹனி-மீட் எனப்படும் தேன் மூலம் தயாரிக்கப்படும் மதுவைக் குடிக்கும் பழங்கால நடைமுறையுடன் தொடர்புடையது என்ற கூற்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திருமணத்துக்குப் பிந்தைய பயணத்திற்கு இந்தச் சொல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. 1881-இல் திருமணத்துக்குப் பிந்தைய சமூகத்தைத் தவிர்த்துச் செல்லும் பயண நடைமுறையானது அவசியமானது இல்லை என்றும் "குறுகிய காலத் தேனிலவு" நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும் ஒரு இதழ் குறிப்பிட்டிருக்கிறது.

சில பெண்கள் மூன்றே நாள்கள் பயணத்துடன் திருப்தியடைகிறார்கள் என்றும் அந்த இதழ் கூறியது. "முழுவதுமாக ஒரு மாதம் பயணம் மேற்கொள்வது பழைய பழக்கம்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. "இந்த வேகமான காலத்தில் வாழ்க்கையின் வேகமும் மிக முக்கியமானது" என்று அந்த இதழ் கூறியது.

தேனிலவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்த நூற்றாண்டின் தொடக்கத்தில், பாரம்பரிய விழாக்களின் கொண்டாட்டத்தின் நீளம் குறைக்கப்பட்டதால், விடுமுறை மிகவும் ஆடம்பரமாகவும் நீளமாகவும் மாறியது. 1900களின் முற்பகுதியில் பலூன்கள், கேரவன்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், மலைப் பயணம், தென் துருவப் பயணம் என சாகசமான தேனிலவு பயணங்களை மகிழ்ச்சியுடன் கழித்தனர். அதுவே உலகமெங்கும் பரவியது.

தேனிலவு செல்வதில் மற்ற நிகழ்வுகளைப் போலவே நாகரிக மாற்றங்கள் நடந்திருக்கின்றன. சில வந்து போயிருக்கின்றன. நவீன காலத் திருமணங்களில் செலவைச் சுருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதால், தேனிலவும் ஹனிமூனுக்குப் பதிலாக "மினி மூன்" என்பது போல் விலைகுறைந்து, குறைந்த நாள்களுடன் முடியக்கூடிய வகையில் மாற்றப்பட்டுவிட்டது.

https://www.bbc.com/tamil/global-59199564

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.