Jump to content

பார்ப்பனீயத்தால் பார்க்க முடியுமா? - ராஜன் குறை 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பனீயத்தால் பார்க்க முடியுமா?

ராஜன் குறை 

spacer.png

சென்ற வாரம் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்தன. ஒன்று ஜெய் பீம் என்ற திரைப்படம் ஓடிடி எனப்படும் வலைதளத் திரைப்பட சேவையில் நவம்பர் 2ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களைப் பார்வையாளர்களின் உணர்வு பொங்கும் எதிர்வினைகளால் மூழ்கடித்தது. நவம்பர் ஒன்றாம் தேதி ஓடிடியில் வெளியாகும் முன்பே இந்த படத்தின் பிரிவியூ காட்சிகள் அக்டோபர் இறுதியில் சென்னையில் திரையிடப்பட்டன. இருளர் பழங்குடி சமூகத்தினர் காவல் துறை அத்துமீறல்களால் பாதிக்கப்படுவதையும், பொய் குற்றச்சாட்டில் லாக் அப்பில் அடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு ஒருவர் கொலையுண்டதை காவல் துறை மறைத்ததையும், இடதுசாரி இயக்கங்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும், வழக்கறிஞர் சந்துருவும் இணைந்து உண்மையை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடும் பெற்றுத்தந்த உண்மை சம்பவத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு இணையாக நிஜ உலகில் ஒரு சம்பவம் இதே நாட்களில் நடைபெற்றது. அஸ்வினி என்ற நரிக்குறவப் பெண் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் வசிப்பவர். அவருக்கு அருகேயுள்ள தலசயன பெருமாள் கோயிலில் அன்னதானத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் தனது வருத்தத்தையும், கோபத்தையும் காணொலிக் காட்சி ஒன்றில் பதிவு செய்ய அது சமூக ஊடகங்களில் பரவலாகியது. அதைக் கண்ட அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தலசயன பெருமாள் கோயிலுக்குச் சென்று அந்தப் பெண்ணுடன் அன்னதான பந்தியில் அமர்ந்து உணவு உட்கொண்டார். இந்தக் காட்சியும் ஊடகங்களில் பரவலாகி வெகுவாக பாராட்டப்பட்டது. அந்த நேரத்தில் அந்தப் பெண் தங்களது நெடுநாள் பிரச்சினையான பட்டா வழங்கப்படாமை, வசிப்பிட, வாழ்வாதார பிரச்சினைகள் போன்றவற்றை குறித்து முறையிட்டார். அமைச்சர் மூலம் இதை அறிந்த முதலமைச்சர், அரசுத் துறைகளை இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க சொல்ல, துரித கதியில் அரசு இயந்திரம் அந்தக் கிராமத்தின் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயன்றது. நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி தினத்தன்று அங்கு சென்ற முதல்வர் அஸ்வினி உட்பட நரிக்குறவர், இருளர் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார். வேறு பல நல உதவிகளையும் வழங்கினார். அஸ்வினி தன் வீட்டுக்கு முதல்வரை அழைத்தபோது அவர் இல்லத்துக்கும் சென்றமர்ந்து உரையாடினார். இவையெல்லாமே ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மிகுந்த கவனத்தையும், வரவேற்பையும் பெற்றது.

spacer.png

சமூக மாற்றம் என்பது ஒரே நாளில் நடந்துவிடுவதில்லை. நரிக்குறவர் பெண் அஸ்வினி எப்படி அவரது தாத்தா காலத்திலிருந்து அவரது இனக்குழு வாழ்க்கை மாறி வந்துள்ளது என்பதை அழகாகப் பேசுகிறார். இனி வரும் தலைமுறை பிற சமூகங்களைப் போல கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் உரிய இடம்பெற வேண்டும் என்பதே அவர் கோரிக்கையாக இருக்கிறது. இதுவே கடந்த நூறாண்டுக் கால சமூக நீதி அரசியலின் கதையாடல்; திராவிட அரசியலின் கதையாடல். கதையாடல் என்றால் ஆங்கிலத்தில் நேரடிவ் (Narrative) எனப்படும் கலைச்சொல். தமிழகத்தின் வெகுஜன அரசியலின் கதையாடல் சமூக மாற்றம் குறித்த, முற்போக்கு இயக்கம் குறித்த கதையாடல். சினிமாவிலும் இதே போல முற்போக்கு சிந்தனைகள் அதிகம் இடம்பெற்றன. மரபுவழிப்பட்ட பார்வைகளுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும், முற்போக்கு சிந்தனைகளுக்கும், சமூக மாற்ற சிந்தனைகளுக்குமான உரையாடல் களமாக தமிழ்த் திரைப்படம் விளங்கியது. அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் திரைப்படத் துறையுடன் நெருக்கமான உறவு கொள்ளும் தளமாக அமைந்தது. அதன் பக்கவிளைவாக உருவான எம்.ஜி.ஆர். நாயக பிம்பம் எதிர்ப்புரட்சி (Counter-revolution – புரட்சிக்கு எதிராக இருப்பதுதான் எதிர்ப்புரட்சி) அரசியலுக்குப் பின்னாளில் துணைபோனாலும் அவரது பிம்பமும் முற்போக்கு வரலாற்று கதையாடலில் உருவானதே. அடித்தட்டு மக்களின் உரிமைக்குரலுக்கு வடிவம் கொடுப்பதில் உருவானதே. தமிழகத்தின் இந்த வெகுஜன அரசியல் மற்றும் சினிமாவின் முற்போக்கு சமூக நீதி கதையாடலைப் பார்க்க முடியாத ஒரு தன்மை பாப்பனீய மனோபாவத்துக்கு இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

பார்ப்பனீயம் என்பது என்ன? 

தமிழ் இலக்கியத்தில் பிராமணர்களுக்கு அந்தணர்கள், பார்ப்பர்கள் அல்லது பார்ப்பனர்கள் ஆகிய பெயர்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன. ஒரு பெயர் விளக்கம் என்னவென்றால் குறி பார்ப்பவர்கள், ஆரூடம் பார்ப்பவர்கள் என்பதால் பார்ப்பனர்கள் என்ற பெயர் வழங்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. பார்ப்பது என்பது அறிதலுடன் பிணைத்துக் காணப்படலாம் என்பதால் அவர்கள் அறிவார்கள் என்பதும் பொருள். பிராமணர் என்ற வர்ண அடையாளம் அவர்கள் பிரம்மனின் அம்சம் என்று அவர்களை உயர் பிறப்பாளர்கள் ஆக்குவதால், வர்ண முறைப்படி பிறர் சூத்திரர் என்பதை ஏற்பதாக முடியும் என்பதால், அவர்களை பார்ப்பனர் என்று தமிழ் சொல்லால் குறிப்பிடுகின்றோம். இதில் இழிவுபடுத்தும் நோக்கம் எதுவும் கிடையாது. அப்படி ஜாதீய மனோபாவத்துடன் ஏற்றத்தாழ்வு பார்ப்பதை பார்ப்பனீயம் என்று குறிப்பிடுகின்றோம்.

பார்ப்பனீய மனோபாவம் கொண்டவர்கள் பார்ப்பனர்கள் மட்டும் கிடையாது. ஜாதீய அடையாளத்தில் சிக்குபவர்கள், ஏற்றத்தாழ்வு பேணுதலை அனுசரிப்பவர்கள் எல்லோரும் பார்ப்பனீய மனோபாவத்தை ஏற்பவர்களே. அதே சமயம் பார்ப்பனர்கள் அனைவரும் பார்ப்பனீய மனோபாவம் கொண்டவர்கள் இல்லை என்பதும் அனைவரும் அறிந்ததே. பல முற்போக்கு சிந்தனையாளர்கள், சமூக நீதி நடைமுறை கொண்டவர்கள், முற்போக்கு உணர்வினை கொண்டவர்கள் பார்ப்பனர்களிடையே எப்போதும் இருந்து வந்துள்ளார்கள்.

இப்படி நாம் கவனமாக பிரித்துப் பார்க்கும்போதும், கணிசமான பார்ப்பனர்கள் பார்ப்பனீய மனோபாவத்தை சுமந்துகொண்டு இருப்பதைக் காணலாம். பார்ப்பனீயத்தின் பார்வைக் குறைபாட்டுக்கு அவர்களது பிளவுண்ட சுயம் ஒரு காரணம். உதாரணமாக ஒரு பார்ப்பனரை கேட்டால் அவர் நான் நவீனமானவன்; ஜாதி வேற்றுமை பார்க்க மாட்டேன். அந்த காலமெல்லாம் மாறிவிட்டது என்பார். என் முன்னோர்கள் செய்ததற்கு நான் பொறுப்பல்ல என்பார். ஆனால் பெரியார் பார்ப்பனர்களைத் திட்டுகிறார் என்பதால் அவரை பிடிக்கவில்லை என்பார். பெரியார் ஜாதி வேற்றுமை பார்த்த உன் முன்னோர்களைத் தானே திட்டுகிறார், அதை ஏன் நீ உன்னை திட்டுவதாக எடுத்துக்கொள்கிறாய் என்று கேட்டால் பதில் கூற வகையில்லாமல் திணறுவார்.

பார்ப்பனர்களெல்லாம் கூடி சமஸ்கிருதத்தில் ஒரு புதிய தர்மசாஸ்திரம் எழுதி இரு பிறப்பாளன் என்று யாரும் கிடையாது; எல்லோருக்கும் ஒரே பிறப்புதான், சமம்தான் என்று எழுதி அறிவித்தால் பிறகு எதற்கு பார்ப்பனர்களை திட்டப் போகிறார்கள். ஒருபுறம் ஆகமம், சாஸ்திரம், சம்பிரதாயம், மரபு என்ற பெயரில் சமத்துவத்திற்கு எதிரான அமைப்புகளைப் பாதுகாப்பது, இன்னொருபுறம் நாங்கள் நவீனமானவர்கள் எங்களை திட்டுவதால் திராவிட இயக்கத்தை ஏற்க மாட்டோம் என்பது என பிளவுண்ட சுயமாக இருப்பதுதான் சிக்கல். ரகசியமாக தங்களை உயர் பிறப்பாளர்களாக, பிறரை சுரண்டி உருவாக்கிக்கொண்ட தங்களுடைய கலாச்சார மூலதனத்தை தங்களுக்கு இயற்கையே வழங்கிய திறன் என்று இனவாத மனமயக்கம் கொள்வதும் இந்த மனோபாவத்தில் அடங்கும்.

spacer.png

அதற்கு அடுத்த பிரச்சினை என்னவென்றால் இவர்கள் முற்போக்கு, முன்னேற்றம் என்பதையெல்லாம் ஆங்கிலக் கல்வி, நவீனமாதல் ஆகியவற்றுடன் இணைத்துப் புரிந்துகொள்வதால் அதற்கேற்ற ஒரு ரசனை, அழகியலை உருவாக்கிக்கொள்கின்றனர். தமிழ் வெகுஜன இயக்கத்தில் கலையோ, அரசியலோ எடுக்கும் வடிவங்களை அருவருக்கின்றனர். இது ஒரு பிரச்சினையாகக் கூட அவர்களுக்குத் தோன்றுவதில்லை.

உதாரணமாக ஜெய் பீம் படத்தைப் பார்த்துவிட்டு பரத்வாஜ் ரங்கன் என்ற விமர்சகர் அவரது யூடியூப் சானலில் ஒரு விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார். தமிழில் வாசிப்பவர்கள், பொதுமக்கள் பரத்வாஜ் ரங்கனின் ஆங்கில விமர்சனத்தை அதிகம் பொருட்படுத்த மாட்டார்கள். புளூ சட்டை மாறனை அறிந்த அளவு அவர்கள் ரங்கனை அறிய மாட்டார்கள். என்னைப்போல திரைப்படக் கோட்பாட்டை ஆழமாகப் பயில்பவர்களும், லக்கான், தெல்யூஸ் போன்ற தத்துவ மேதைகளை பயில்பவர்களும் பரத்வாஜ் ரங்கனை பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் ஆங்கிலமே அறிவு என்று நினைக்கும் அரைவேக்காட்டு படிப்பாளிகளுக்கு அவர் முக்கிய விமர்சகராக இருக்கலாம். அப்படி பெரியதொரு மத்தியதர வர்க்கம் இந்தியாவில் உள்ளதல்லவா. “தி நேஷன் வாண்ட்ஸ் டு க்னோ” என்று அடித்தொண்டையில் கத்தி அலறவிடும் அர்னாப் கோஸ்வாமியை நினைவில் கொள்ளுங்கள். அவரையும் பார்க்கிறார்களல்லவா... அந்த வகை மாதிரி.

பரத்வாஜ் ரங்கனுக்கு அவர் ரசனையைப் பொறுத்து ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்ய எல்லா உரிமையும் இருக்கிறது. அவர் எதை செயற்கையான திணிப்பு என்று பார்க்கிறார், எதை மேலோ டிராமா என்று நினைக்கிறார் என்பதெல்லாம் அவர் சுதந்திரம். ஆனால் அவரால் ஜெய் பீம் திரைப்படம் தமிழகத்தில் எழுப்பியுள்ள தார்மீக மன எழுச்சியைச் சிறிதும் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதுதான் வியப்பிற்குரியது.

ஜெய் பீம் படம் அப்படி ஒன்றும் புரிந்துகொள்ள கடினமான படம் அல்ல. அதில் பலவீனமான, எளிய, அப்பாவியான பழங்குடி மக்களின் வாழ்வியல் காட்டப்படுகிறது. அவர்களை மனிதர்களாகவே மதிக்காத ஜாதி சமூகத்தின் உளவியல் காட்டப்படுகிறது. அதன் காரணமாக காவல்துறை நிராதரவான பழங்குடி மக்களை இரக்கமே இல்லாமல் நடத்துவதைக் காண்பிக்கிறது. ஆனால் ஜாதி சமூகத்தில் மனசாட்சியுள்ள மனிதர்கள் சிலர், முற்போக்கு அரசியல் மனோபாவம் கொண்டவர்கள் அந்த எளிய மனிதர்களுக்காகப் போராடுகிறார்கள். காவல் துறை அரசின் துணையுடன் மூடி மறைக்கும் குற்றச்செயலை நீதி மன்றத்தின் துணையுடன் முறியடிக்கிறார்கள். வேலைக்காரி, பராசக்தி முதல் இன்றுவரை தமிழ் வெகுஜன சினிமாவின் முற்போக்கு சிந்தனைக்கு வடிவம் கொடுப்பதில் நீதிமன்றம் முக்கிய களமாக இருந்து வந்துள்ளது. ஜெய் பீம் படம் ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில், முன்னைவிட அதிக யதார்த்தத் தன்மையுடன் எடுக்கப்பட்டிருப்பதால் அது அனைவர் மனதையும் தொட்டுவிட்டது. தமிழக முதல்வர் படத்தைப் பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். அவர் படம் பார்த்து உறக்கம் வரவில்லை என்று சொன்னதே பரவலாக மக்கள் பலரின் அனுபவமாகவும் சமூக வலைதளங்களில் காண முடிகிறது.

ஆனால் பரத்வாஜ் ரங்கன் ஆங்கிலத்தில் படத்தை எள்ளி நகையாடுகிறார். அழுவாச்சி படம் என்கிறார். மனித உரிமை பேசுவதால் மட்டுமே ஒரு திரைப்படம் நல்ல படமாகிவிட முடியாது என்கிறார். வெற்றி மாறனின் விசாரணை யதார்த்தமான படம் என்று கூறுகிறார். ஆனால், ஜெய் பீம் செயற்கையாகப் புனையப்பட்டுள்ளது என்கிறார். மிகவும் வியப்பாக இருக்கிறது. ஒருவேளை ஜெய் பீம் என்ற தலைப்புதான் பிரச்சினையோ என்றெல்லாம் தோன்றத்தான் செய்கிறது. அதனால் சமூக வலைதளங்களில் பலரும் அவரை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்கள். தனிப்பட்ட முறையில் தாக்கியுள்ளார்கள். அதெல்லாம் தவறான போக்கு என்பதில் ஐயமில்லை. என்னைப் பொறுத்தவரை தனிநபர் தாக்குதலைக் கண்டிப்பதில் முன் நிற்பவன். ஆனால், இந்த சந்தர்ப்பத்தில் ஏன் பரத்வாஜ் ரங்கனின் உணர்வு நிலை இப்படி முற்றிலும் முரண்பட்டு நிற்கிறது என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

அதை வைத்து யோசிக்கும்போதுதான் பெரியாரைப் புரிந்துகொள்வதிலும், அண்ணாவை, கலைஞரைப் புரிந்துகொள்வதிலும் பார்ப்பனீய மனோபாவம் எவ்வளவு பின் தங்கியுள்ளது என்பது நினைவுக்கு வருகிறது. இடது சாரிகளையும் இவர்களில் பலர் ஏற்றவர்களல்ல. நல்ல சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள்கூட பெரியாரையோ, அண்ணாவையோ படிக்கவே முடியாதவர்களாக, அணுகவே முடியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களை படித்தால்தானே அடுத்து கலைஞரைப் படிக்க முடியும். இதையெல்லாம் ஒரு காலத்திலும் செய்யாமல், சமூக நீதி அரசியலில் வெகுஜன இயக்கத்தின் மாபெரும் வரலாற்று தடத்தை உணராமல் இவர்கள் தொடர்ந்து தமிழ் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் என்று வாழப் போகிறார்கள். அவர்களுடன் நானும் பண்புடனும், பொறுமையுடனும் உரையாட வேண்டும் என்று நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது.

அவர்கள் ரசனைக்கேற்றபடி இல்லையென்பதால் ஒரு சாரார் பராசக்தி படத்தை கலையென்று ஏற்கவில்லை. பேசாமொழியான சினிமா பக்கம் பக்கமாக வசனம் பேசலாமா என்று கேட்டார்கள். மூன்று தலைமுறையினர் பராசக்தியில் சிவாஜி கணேசன் நீதிமன்றத்தில் பேசிய வசனத்தைப் பேசியே வளர்ந்தார்கள் என்பதும், அந்த மக்களின் சமூக நீதி அரிச்சுவடியே அதுதான் என்பதையும் ஒரு நாளும் புரிந்துகொள்ள மாட்டார்கள். இன்று அப்படி வசனமெல்லாம் பக்கம் பக்கமாக பேசாமல் காட்சி அழகியலாகவே படம் வந்தாலும், தேவைக்கதிகமாக அழுவாச்சி காட்சி இருப்பதால் இது மோசமான படம் என்கிறார்கள். ரசனையின் எல்லைக்கோடுகளை அவர்கள் நகர்த்திக்கொண்டே செல்கிறார்கள். அந்தக் கோட்டுக்குக் கீழே பேரலையாய் உருக்கொள்ளும் ஒரு மாபெரும் சமூக இயக்கம், அதன் தார்மீகம் அவர்கள் கண்களுக்குப் புலனாவதேயில்லை.

அதனால்தான் நாம் கேட்கவேண்டியுள்ளது: பார்ப்பனீயத்தால் பார்க்க முடியுமா?

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.
 

https://minnambalam.com/politics/2021/11/08/5/what-is-brahmanism

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பேராசிரியர், முற்று முழுதாக திராவிடத்தை கரைத்துக் குடித்த ஒருவர் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிராமண வர்க்கங்களால் தான் சாதீயம் இன்னும்  உயிர்ப்புடன் இருக்கின்றது. பார்பனீயத்தை அடக்க ஒடுக்க பல்வேறு பிரச்சனைகள் தானாக ஒழியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

இந்த பிராமண வர்க்கங்களால் தான் சாதீயம் இன்னும்  உயிர்ப்புடன் இருக்கின்றது. பார்பனீயத்தை அடக்க ஒடுக்க பல்வேறு பிரச்சனைகள் தானாக ஒழியும்.

இணைப்புக்கு நன்றி. நான் படம் பார்க்கவில்லை.  திரைப்படங்களுக்கு நேரம் செலவழிப்பதில்லை. கட்டுரையைப் பார்த்தபின் பார்க்கவுள்ளேன்.

உண்மைதான் குமாரசாமியண்ணா. ஆனால்,  அவர்களை மிஞ்சும்வகையில் பார்ப்பனியரல்லாதோரும் இருக்கிறார்கள் என்பதற்கு எமது தாயகத்திலே சமகாலத்திலேயே பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ளன. (பொறி கொண்டு தேரிழுத்தமை....) முதலில் எமது அயலிலே இருக்கும் தன்னைவிடத் தாழந்தவனை ஏற்றுக்கொள்ளாத குமூகமாகத் தமிழினம் இருக்கும்வரை பார்ப்பனீயம் மேலெழுந்தே இருக்கும். கோவில்களின் தளகர்த்தர்கள்(தர்மகர்தாக்கள்) முதலில் மாறவேண்டும். அனைவரையும் பாரபட்சமின்றிக் கோவிற்பணிகளில் பங்கேற்கவைத்துப் பகிர்ந்தளித்துத் துணிவோடு நடைமுறை மாற்றங்களை சபைகள் ஏற்படுத்தி வழிகாட்டினால் மாற்றம் ஏற்படும். ஆனால், பார்பனீயர்களைக் காட்டி நம்மவரே முன்னிற்று உதவுவுதால் மாற்றங்களுக்கான வாய்ப்புகள் இல்லாதிருக்கிறது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nochchi said:

அவர்களை மிஞ்சும்வகையில் பார்ப்பனியரல்லாதோரும் இருக்கிறார்கள் என்பதற்கு எமது தாயகத்திலே சமகாலத்திலேயே பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ளன. (பொறி கொண்டு தேரிழுத்தமை....)

உண்மை

வெளிநாடுகளில் கூட கோவிலில் பூசை செய்பவர்களை தவிர பார்ப்பனியர் என்று யாரும் இருப்பதாக தெரியவில்லை ஆனால் சாதி பார்ப்பவர்கள் தமிழர்களில் இருக்கிறார்களே. தமிழ்நாட்டில் கூட சாதி கட்சி வைத்திருக்கும் இராமதாசு பார்ப்பனியர் இல்லை தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nochchi said:

இணைப்புக்கு நன்றி. நான் படம் பார்க்கவில்லை.  திரைப்படங்களுக்கு நேரம் செலவழிப்பதில்லை. கட்டுரையைப் பார்த்தபின் பார்க்கவுள்ளேன்.

உண்மைதான் குமாரசாமியண்ணா. ஆனால்,  அவர்களை மிஞ்சும்வகையில் பார்ப்பனியரல்லாதோரும் இருக்கிறார்கள் என்பதற்கு எமது தாயகத்திலே சமகாலத்திலேயே பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ளன. (பொறி கொண்டு தேரிழுத்தமை....) முதலில் எமது அயலிலே இருக்கும் தன்னைவிடத் தாழந்தவனை ஏற்றுக்கொள்ளாத குமூகமாகத் தமிழினம் இருக்கும்வரை பார்ப்பனீயம் மேலெழுந்தே இருக்கும். கோவில்களின் தளகர்த்தர்கள்(தர்மகர்தாக்கள்) முதலில் மாறவேண்டும். அனைவரையும் பாரபட்சமின்றிக் கோவிற்பணிகளில் பங்கேற்கவைத்துப் பகிர்ந்தளித்துத் துணிவோடு நடைமுறை மாற்றங்களை சபைகள் ஏற்படுத்தி வழிகாட்டினால் மாற்றம் ஏற்படும். ஆனால், பார்பனீயர்களைக் காட்டி நம்மவரே முன்னிற்று உதவுவுதால் மாற்றங்களுக்கான வாய்ப்புகள் இல்லாதிருக்கிறது.   

வணக்கம் நொச்சி!

நீங்கள் கூறிய கருத்தில் எனக்கு நூறுவீத உடன்பாடு உண்டு. இருந்தாலும் சாதீயம் கோவில் குளத்துடன் மட்டும் நிற்கவில்லை. பெரும்பாலும் தனிப்பட்ட விடயங்களிலையே அதிகமாக சாதி பார்க்கப்படுகின்றது. குறிப்பாக திருமண விடயங்களில் இது வெற்றிகரமாக நடந்தேறுகின்றது.இங்கு யாருமே தலையிட முடியாது. ஏனனில் இது அவரவர் தனிப்பட்ட விடயம். ஆனால் திருமண வைபவம் என்று வரும்போது ஒரு பார்ப்பனீய குருக்கள் தேவைப்படுகின்றார். கடவுள்/மதம் இல்லை என்பவர்களும் திருமணம் என்று வந்தால் ஐயர்மாரை தேடிச்செல்வது யாவரும் அறிந்த விடயமாகும்.

எனவே சாதீயத்தின் மூலவேரை முதலில் அறுத்தெறிய பக்கத்து வேர்கள் தானாக வழிக்கு வரும் என்பது என் கருத்து.

நிற்க...

இன்னொரு கதை சொல்கிறேன் கேளுங்கள்.

இது ஜேர்மனியில் நடந்த இருவார பழைய கதை.
எனக்கு  ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் எனக்கு பரீட்சயமான ஒரு குரல். டேய் என்னடா எப்பிடி இருக்கிறாய் என்ற நலன் விசாரிப்புகளுடன் சம்பாசணை ஆரம்பமாகியது.நானும் அந்த உறவும் இதுவரைக்கும் டேய் போட்டு கதைத்ததேயில்லை. நீங்கள் நாங்கள் என்று மட்டுமே உறவாடியிருந்தோம். ஆனாலும் அந்த உறவு திடீரென என்னை டேய் என்று விளித்ததும் எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை. ஏனெனில் இப்படியான சம்பவங்கள் எனக்கு புதிதல்ல.

சரி விடயத்திற்கு வருவோம்..
எனக்கு தொலைபேசி எடுத்த நண்பர் வழமையான சுக நல விசாரிப்புகளுடன் தொடங்கி தனது மகளின் திருமண விடயத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார். மாப்பிளை  வெள்ளாள மாப்பிளை. மின்னிணைப்பு தொழில் சம்பந்தமாக படிப்பு முடித்துவிட்டு வேலை தேடுகின்றாராம்.யார் மாப்பிளை எண்டு தெரியுமோ என என்னை கேட்டார்.நான் இல்லை என்றேன்.வேறை ஆர் உன்ரை -----   -----  ----  --- பொடியன் தான். இனி நாங்கள் ஒண்டு என புளகாங்கிதம் அடைந்தார்.


இறங்கி போனாலும் குத்தி காட்டுவார்கள்.
இறங்கி போகா விட்டாலும் குத்தி காட்டுவார்கள்.

 

இங்கே யார் முதலில் திருந்த வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இறங்கி போனாலும் குத்தி காட்டுவார்கள்.
இறங்கி போகா விட்டாலும் குத்தி காட்டுவார்கள்.

இங்கே யார் முதலில் திருந்த வேண்டும்?

வணக்கம் அண்ணா,

உண்மைதான். இவைபோன்ற சில குறைமதியிலான சிந்தனைகளும் மாற்றங்களை மறுதலிக்க வைக்கின்றன. சமயங்களை மதமென்றழைக்கத் தொடங்கியபோதே அவை வேறொரு பரிமாணத்துள் சென்றுவிட்டது. அகநிலைத் தெளிவுகளும், தெளிவான சிந்தனை மாற்றமுமே ஆரோக்கியமானது. ஆனால் இது உடனடிச் சாத்தியமாகாது. முழுமையான குமுகாய மற்றும் இனத்துவச் செயற்பாடாக மாற்றமடைய வேண்டும். இதனை யார் எங்கிருந்து.... விடைகாண தெளிவான தலைமையும் தற்துணிவும் தேவை.
 
சமூக நீதிக் கட்சிகள் தோன்றி 100 ஆண்டுகளைக் கடந்துவிட்டபோதும் இருளரின் நிலை.(!) இது பார்ப்பனீயரால் நிகழவில்லை. இதே சமூக நீதிக் கட்சிகளின் குழந்தைகளான தி.மு.கு, அ.தி.மு.க போன்ற கட்சிகளின் ஆட்சியியே இந்த அவலங்கள் நிகழ்ந்தன. 

இன்று முதல்வர் செய்வது அவரது கடமை. அவர் அனைவருக்குமான முதல்வர். அதைவிட இன்றைய மின்னியற் பொறிகளின் குமுகாயத் தகவற் பரவற்றிறன் கரணியமாக சிலமணித்துளிகளில் உலகப்பரப்பிலே வினாவெழுப்பப்படும் நிலை போன்றனவும் தாக்கத்தைச் செலுத்துகின்றன.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமூகவலைதளங்களின் செயற்பாடுகள் கடந்த 15 வருடங்களாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் கடந்த மூன்று நான்கு முதலமைச்சர்கள் செய்யாததை ஸ்டாலின் செய்துள்ளார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.