Jump to content

3 மாதங்களில் 1043 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டும் : நெருக்கடிக்கான தீர்வு என்ன ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் தற்போது 2.2 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி இருப்பே காணப்படுகிறது. இதில் 1.7 பில்லியன் டொலரை மாத்திரமே பயன்படுத்த முடியும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 1043 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது. இந்த நெருக்கடிக்கு என்ன தீர்வு? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பினார்.

அத்தோடு தற்போதைய அரசாங்கம் வருடாந்தம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பில்லியன் டொலர் கடனும் 2010, 2011 மற்றும் 2012 தனது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ பெற்றது என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நினைவுபடுத்துவதாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

harshade_silwa.jpg

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கப் பெறும் 5 பில்லியன் டொலர் தற்போது முற்றாக இல்லாமல் போயுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கையில் சுற்றுலாத்துறையின் ஊடாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 5 பில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றதில்லை.

கடந்த 2018 ஆம் ஆண்டில் மாத்திரமே சுற்றுலாத்துறை ஊடாக 4.5 பில்லியன் என்ற அதிகபட்ச அந்நிய செலாவணி கிடைக்கப் பெற்றது. மாறாக ஏனைய வருடங்களில் சராசரியாக 2.4 பில்லியன் மாத்திரமே சுற்றுலாத்துறை ஊடாகக் கிடைக்கப் பெறும்.

இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கப் பெறும் அதேவேளை இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது 1.6 பில்லியன் டொலர் செலவிடப்படுகிறது.

தற்போது சுற்றுலாத்துறை மூலமான அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்துள்ளமைக்கான காரணம் கொவிட் தொற்று அல்ல. அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகமேயாகும்.

கொவிட் தொற்றின் பின்னர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இலங்கையில் 0.7 வீதமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய நாடுகளில் 4.5 வீதமளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமின்றி தடுப்பூசி கொள்வனவு உள்ளிட்ட கொவிட் செலவுகளுக்காக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்டவற்றிடமிருந்து நிதி உதவிகள் கிடைக்கப் பெற்றன.

கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களையே தற்போது தாம் செலுத்திக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி கூறுவது உண்மைக்கு புறம்பானது. காரணம் கடந்த ஆண்டு செலுத்திய ஒரு பில்லியன் டொலர் 2010 இல் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெற்ற கடனாகும்.


விவசாயிகளின் கழுத்தை பிடித்து இறுக்கி சேதன உரத்தை பயன்படுத்துமாறு கூற முடியும் என்றும், எனினும் தான் அவ்வாறு செய்யவில்லை என்றும் ஜனாதிபதி கூறுகின்றார். 

 

அவர் நேரடியாக அவ்வாறு செய்யாவிட்டாலும் தற்போது விவசாயிகள் அவ்வாறானதொரு நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரை நியமித்து அவசரகால விதிகளை நடைமுறைப்படுத்திய போதிலும், அதன் ஊடாக எந்த செயற்றிட்டமும் வெற்றியளிக்கவில்லை என்பதை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

மக்களுக்கு தமது ஆட்சியில் நிவாரணம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி வாக்குறுதியளித்தார். ஆனால் இன்று அரிசி, சீனி, பால்மா, சமையல் எரிவாயு என அனைத்து அத்தியாவசியப் பொருட்களினதும் விலை பன்மடங்காக அதிகரித்துள்ளது. 
இதுவா ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள நிவாரணம்? விவசாயத்தை மேம்படுத்துவதாகக் கூறி அதனை முழுமையாக சீரழித்துள்ளனர். நாட்டில் வருட இறுதியில் விவசாயம் பாரிய வீழ்ச்சியடையும் என்று கடந்த ஜூலை மாதமளவில் 104 விவசாயத்துறை நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கை இன்று உண்மையாகியுள்ளது.

நாடு தற்போது பாரிய அபாயத்தில் உள்ளது என்பதை ஜனாதிபதி உணர வேண்டும். 
தாம் ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்தை நாடப் போவதில்லை என்றும், அஜித் நிவாட் கப்ரால் முஸ்லிம் நாடுகளிடம் கடன் பெறுவார் என்றும் ஜனாதிபதி செயலர் தெரிவித்துள்ளார். ஆனால் இங்கு நீதி அமைச்சர் அலி சப்ரி பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். அவ்வாறிருக்கையில் எவ்வாறு முஸ்லிம் நாடுகளிடமிருந்து உதவியை எதிர்பார்க்க முடியும்?
தற்போது மக்கள் ஒருவேளை உணவை மாத்திரமே உண்ண வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கு சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சியின் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்களுக்கான கொள்ளை திட்டங்கள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றார்.

3 மாதங்களில் 1043 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டும் : நெருக்கடிக்கான தீர்வு என்ன ? - ஜனாதிபதியிடம் ஐ.ம.ச. கேள்வி | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போல ..

memees.php?w=240&img=Z291bmRhbWFuaS9nb3V

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கடனை அடைப்பதுக்கு  மந்திரித்த தண்ணியை இலங்கையில் உள்ள ஆறுகளில் கலக்க வேண்டும் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலமையை பயன் படுத்தி இலங்கையை வாங்கலாமா.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்த நிலமையை பயன் படுத்தி இலங்கையை வாங்கலாமா.😄

ஆரிட்டையிருந்து? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

ஆரிட்டையிருந்து? 🤣

இதென்ன கேள்வி.அலிபாபாவில் போட்டிருக்கு பாக்க வில்லையா.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

ஆரிட்டையிருந்து? 🤣

நான் வேணுமெண்டால் ஒரு ஆயிரம் மில்லியன் தரலாம்....

வேற யாரும்..... எப்படியாவது.... கஸ்டப்பட்டு.... மிச்சத்தை சேர்த்தால்..... பாவம் கோத்தாவிடம் குடுத்து கரை சேர்த்து விடலாம்... 🥲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, சுவைப்பிரியன் said:

இதென்ன கேள்வி.அலிபாபாவில் போட்டிருக்கு பாக்க வில்லையா.😄

அலிபாபா முதலாளியையே காணேல்லை எண்டு தேடுறாங்களாம் நீங்கள் வேறை 😂

3 minutes ago, Nathamuni said:

நான் வேணுமெண்டால் ஒரு ஆயிரம் மில்லியன் தரலாம்...

ஆயிரம் மில்லியன் ஓகே..... இப்ப கேள்வி என்னவெண்டால் எந்த நாட்டு ஆயிரம் மில்லியன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

ஆயிரம் மில்லியன் ஓகே..... இப்ப கேள்வி என்னவெண்டால் எந்த நாட்டு ஆயிரம் மில்லியன்?

சிம்பாவே அல்லது சோமாலி தான் ....

43 மில்லியன் மட்டும் அமேரிக்கன்....

டீல் ஓகேயா....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

சிம்பாவே அல்லது சோமாலி தான் ....

43 மில்லியன் மட்டும் அமேரிக்கன்....

டீல் ஓகேயா....

கொஞ்சம் பொறுங்கோ சிறிலங்காவை வைச்சிருக்கிற ஆக்களிட்டை கேட்டுட்டு சொல்லுறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அனைத்து அரச, தனியார் ஊழியர்கள் சம்பளத்தை 2022ம் ஆண்டுக்கு 11 மாதங்களுக்கு மட்டும் வழங்கலாம். ஒரு மாத சம்பளத்தில் கடனை கட்டலாம்? அரச, தனியார் நிறுவனங்கள் தமது ஒரு மாதகால வருவாயை வழங்கலாம்? நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால்...

அது ஒரே நாடு ஒரே சட்டத்திற்குள் இருப்பவர்களது பிரச்சினை எங்களது பிரச்சினை அல்ல 
LPG விலை எவ்வளவு அதிகரித்தாலும் வாங்கக்கூடிய நிலைமையிலிருக்கும் எனது தாயாரே முழுமையாக  விறகடுப்புக்கு மாறி 6 மாதங்கள் கடந்துவிட்டன. வீட்டுத்தோட்டம் செய்து எனக்கனுப்பிய புகைப்படங்களை பார்த்து விறைத்துப்போய்விட்டேன் நம்மடை வளவுதானா இது என்று 
பெரிய வளவென்பதால் சுற்றியிருக்கும் அயலவர்களையும் ஒன்றிணைத்து பெரிய அளவில் சாகுபடி செய்து
அவர்களுக்கும் பகிர்ந்தளித்து வருகிறார், உடலுழைப்பு அவர்களுடையது கூலியாக தேங்காய்களும் சாகுபடி செய்யும் மரக்கறிகளில் பங்கும்...இவையனைத்தையும் மனிசி சத்தமில்லாமல் செய்துபோட்டு சிரித்துக்கொண்டே படம் பிடித்து அனுப்புது. எங்கடை சனம் எப்பவோ ரெடி 
அடுத்தவன் சொத்தை கொள்ளையடித்து வயிறு வளர்த்த பயல்கள் முழி தான் இப்போ பிதுங்கிப்போய் இருக்கிறது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ கொடுத்து காப்பாற்றி விட்டால் மறுபடி கடன் வாங்கமாட்டார்கள் என்பது என்ன நிட்சயம்? சும்மா இருந்து சொகுசு வாழ்க்கை வாழ யார் கொடுப்பார்? எங்களை சொந்த நாட்டிற்குள்ளேயே அகதியாய் அலைய வைத்து விட்டு, நமக்கு ஏது நாடு? ஓய்வு எடுக்க வருபவர்கள் நாட்டை மீளட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கை அனைத்து அரச, தனியார் ஊழியர்கள் சம்பளத்தை 2022ம் ஆண்டுக்கு 11 மாதங்களுக்கு மட்டும் வழங்கலாம். ஒரு மாத சம்பளத்தில் கடனை கட்டலாம்? அரச, தனியார் நிறுவனங்கள் தமது ஒரு மாதகால வருவாயை வழங்கலாம்? நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால்... 

உங்களுக்கே இது நியாயமாக உள்ளதா?

ராஜபக்ச குடும்பம் ஆடிய ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டத்திற்கு அப்பாவி மக்கள் பலியா??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

அது ஒரே நாடு ஒரே சட்டத்திற்குள் இருப்பவர்களது பிரச்சினை எங்களது பிரச்சினை அல்ல 
LPG விலை எவ்வளவு அதிகரித்தாலும் வாங்கக்கூடிய நிலைமையிலிருக்கும் எனது தாயாரே முழுமையாக  விறகடுப்புக்கு மாறி 6 மாதங்கள் கடந்துவிட்டன. வீட்டுத்தோட்டம் செய்து எனக்கனுப்பிய புகைப்படங்களை பார்த்து விறைத்துப்போய்விட்டேன் நம்மடை வளவுதானா இது என்று 
பெரிய வளவென்பதால் சுற்றியிருக்கும் அயலவர்களையும் ஒன்றிணைத்து பெரிய அளவில் சாகுபடி செய்து
அவர்களுக்கும் பகிர்ந்தளித்து வருகிறார், உடலுழைப்பு அவர்களுடையது கூலியாக தேங்காய்களும் சாகுபடி செய்யும் மரக்கறிகளில் பங்கும்...இவையனைத்தையும் மனிசி சத்தமில்லாமல் செய்துபோட்டு சிரித்துக்கொண்டே படம் பிடித்து அனுப்புது. எங்கடை சனம் எப்பவோ ரெடி 
அடுத்தவன் சொத்தை கொள்ளையடித்து வயிறு வளர்த்த பயல்கள் முழி தான் இப்போ பிதுங்கிப்போய் இருக்கிறது  

உங்கள் அம்மா மிகவும் திறமைசாலி, நீண்ட காலம் நலமாக வாழ வாழ்த்துக்கள். அம்மாக்கள் எல்லாம் திரண்டால் எதையும் சாதிக்கலாம், 70 களை போல. எங்கள் வீட்டை சுற்றி இருந்த 5 பரப்பு காணி பச்சை பசேல் என்று இருந்தது ஒரு காலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, MEERA said:

உங்களுக்கே இது நியாயமாக உள்ளதா?

ராஜபக்ச குடும்பம் ஆடிய ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டத்திற்கு அப்பாவி மக்கள் பலியா??

போர் கண்ட பூமி இதையும் தாங்கும்  இதுவும் கடந்து போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, satan said:

இப்போ கொடுத்து காப்பாற்றி விட்டால் மறுபடி கடன் வாங்கமாட்டார்கள் என்பது என்ன நிட்சயம்? சும்மா இருந்து சொகுசு வாழ்க்கை வாழ யார் கொடுப்பார்? எங்களை சொந்த நாட்டிற்குள்ளேயே அகதியாய் அலைய வைத்து விட்டு, நமக்கு ஏது நாடு? ஓய்வு எடுக்க வருபவர்கள் நாட்டை மீளட்டும்.

இவர்களின் தியாகத்தை வைத்தே இப்போது சில நாடுகள் இயங்கிவருகின்றது…! 

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, MEERA said:

உங்களுக்கே இது நியாயமாக உள்ளதா?

ராஜபக்ச குடும்பம் ஆடிய ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டத்திற்கு அப்பாவி மக்கள் பலியா??

 

போர் கண்டது தமிழர், போரால் உயிர், உடைமை, நிலம் என அனைத்தையும் இழந்தது தமிழர். போரால் வாழ்ந்தது, சுருட்டியது சிங்களம். போரைச்சாட்டி சொகுசு வாழ்வு தேடி ஓடிய பல நம்மவர்களுக்கு ஈட்டிய பணத்தை சுகமாக இருந்து வயோதிபத்தை கழிக்க நாடு தேவைப்படுகிறது. இழந்தவனே மீட்டால் நன்றாக வந்து தங்கலாம் என துடிக்கின்றனர். நாட்டைவிட்டு ஓடும்போது நாடு தேவையில்லை, நாட்டுப்பற்று இருக்கவில்லை. இப்போ நாடு கடனில மூழ்கினால் தாங்கள் வந்து இளைப்பாற முடியவில்லை என ஏக்கம். நொந்தவன் கொடுத்து காப்பாற்றட்டும் இதுதான் சிலரின்  நிஞாயம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.