Jump to content

காணாமல் போய் திரும்பி வந்த 3 சிறுமிகள் விவகாரம்.. நடந்தது என்ன என்பதை விளக்கமாக அறிவித்தார் போலிஸ் ஊடக பேச்சாளர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

8ஆம் திகதி காணாமல் போயிருந்து நேற்று (09) வீடு திரும்பிய 3 சிறுமிகளும்  நடன நட்சத்திரங்களாக ஆவதற்கு

   வீட்டை விட்டு சென்றதாக காவல்துறை வெளியிட்ட தகவல்களை மேற்கோள்காட்டி The Morning பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

The Morning பத்திரிகையிடம்  பேசிய போலீஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ, 3 சிறுமிகளுக்கு என்ன நடந்தது என்ற விவரங்களை  தெரிவித்துள்ளார்.

 

“ நடன நட்சத்திரம் ஆகும் ஆசையில் குறிப்பிட்ட சிறுமிகள்  நவம்பர் 8ஆம் தேதி அதிகாலையில்  ரகசியமாக வீட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் கையில் இருந்த 2 மோதிரங்களை அடகு வைத்து ரூ.60 ஆயிரம் பணம்  பெற்றுள்ளனர்.

 பின்னர் அவர்கள் ஃபேஷன் பக் என்ற ஆடை விற்பனை நிலையத்திற்குச் சென்று ஜீன்ஸ், டி-சர்ட்கள் மற்றும் பிற சாதாரண உடைகள் போன்ற ஆடைகளை வாங்கியுள்ளனர். ஏனென்றால், அவர்கள் அணிந்திருந்த உடையை அணிந்துகொண்டு நடனக் குழுவில் அல்லது வகுப்பில் சேர வாய்ப்பில்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். 

குறிப்பிட்ட சிறுமிகள் தமது  கனவுகள் மற்றும் லட்சியங்களை நிறைவேற்ற  தன்னிச்சையாக செயல்பட்டனர், ”என்று நிஹால்  தல்துவ மேலும்  கூறினார்.

 

அவர்கள் ஆடைகளை மாற்றிய பின்னர், வத்தளையில் உள்ள நடனக் குழுவில் சேர முயற்சித்ததாக அவர் கூறினார். அதேசமயம், முயற்சி தோல்வியடைந்ததால், 3 சிறுமிகளும் அனுராதபுரம் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளனர்.

 

 பஸ் நடத்துனர் சிறுமிகள் மைனர் என்பதால் சந்தேகத்தில்  உடனடியாக அவர்களை கொழும்புக்கு அழைத்து வந்துள்ளார்.

 

நடனக் குழுவில் இணைவதற்கான அவநம்பிக்கையான முயற்சியில், சிறுமிகள் பின்னர் சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் சஜித் பிரேமதாசவிடம் உதவி பெற முயன்றனர்.

 

“சிறிகொத்தாவில் உதவி கேட்டு சிறுமிகள் வந்துள்ளனர். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய யாரும் இல்லை என்று பாதுகாப்பு அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டபோது, பெண்கள் SJB தலைவர் அலுவலகத்திற்குச் சென்றனர், அங்கு பிரேமதாச பதவியில் இல்லாததால் அவர்கள் மீண்டும் நிராகரிக்கப்பட்டனர், ”என்று தல்துவா கூறினார்.

 

 பெண்கள் மிகவும் "கடுமையான மற்றும் பழமைவாத" வீடுகளில் இருந்து வருகிறார்கள், எனவே அவர்கள் இசையைக் கேட்கவோ அல்லது தொலைக்காட்சியைப் பார்க்கவோ அனுமதிக்கப்படவில்லை என்று நிஹால்  தல்துவ குறிப்பிட்டார்.

 

"இது வருத்தமாக இருக்கிறது, பெண்கள் நட்சத்திரங்களாக வேண்டும் என்ற தங்கள் கனவுகளைப் பின்பற்றுகிறார்கள். போலீசார் இப்போது அவர்களின் கதையை விசாரித்து வருகின்றனர், மேலும் சிறுமிகள் மன மற்றும் உடல் மதிப்பீட்டை நடத்த நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

 

சிறுமிகள் பாதிப்பில்லாமல் இருப்பதாகத் தெரிகிறது, ஆனால் நாங்கள் இன்னும் சிறுமிகளை  மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும், ”என்று SSP தல்துவ மேலும் தெரிவித்தார்.

https://www.madawalaenews.com/2021/11/3_10.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல்போன சிறுமிகள் மூவரும் வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர் !

கணாமல்போனதாக கூறி தேடப்பட்டு வந்த கொழும்பு - வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 

தமது அயல் வீடொன்றில்  இருந்த போது பொலிஸார் இவர்களை கண்டுபிடித்து மீட்டுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.  

Three-underage-girls-missing-from-Colomb

எவ்வறாயினும் இந்த சிறுமிகள் மூவரும்  நேற்று (9 )வீடு திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் ஊடக அறிக்கை வெளியிட்டு தெரிவித்தது.

நேற்றுமுன்தினம் 8 ஆம் திகதி திங்கள் முதல் இவர்கள் மூவரும் காணாமல் போயுள்ளதாக  வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

காணாமல்போன மூன்று சிறுமிகளில் இருவரின்  தாயார் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் நேற்று (9)கொழும்பு பிரதான நீதிவான் புத்திக்க சி ராகலவுக்கு  பி அறிக்கை ஊடாக அறிவித்திருந்தனர்.

 இந்த சிறுமியர் மூவரும் கொழும்பிலிருந்து அனுராதபுரத்துக்கு  நேற்றுமுன்தினம் 8 ஆம் திகதி சென்றுள்ளதாகவும், மீள அவர்கள்  கொழும்புக்கு திரும்பி தமது வீட்டுக்கு அருகே உள்ள வீடொன்றில் மறைந்திருந்தபோது பொலிஸாரால் மீட்கப்பட்டதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

 எவ்வாறாயினும்  இவ்வாறு அவர்கள் அனுராதபுரம் செல்ல காரணம்,  மீள அயல் வீட்டில் பதுங்கி இருக்க காரணம் உள்ளிட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை வெளிப்படுத்த பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

முன்னதாக  தனது கையடக்கத் தொலைபேசியுடன், இந்த சிறுமிகள் மூவரும்  நேற்றுமுன்தினம்  ( 😎 பயணப் பைகளையும் சுமந்த வண்ணம் முச்சக்கர வண்டியொன்றில் காலை 8.00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறுகின்றமை சி.சி.ரி.வி. காணொளிகள் ஊடாக  தெரியவந்துள்ள நிலையில், அவர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் இல்லை என  சிறுமிகளின் தாயார் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளன.  13 வயது, 14 வயது மற்றும் 15  வயதுடைய சிறுதிகளே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.
 

https://www.virakesari.lk/article/116902

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமிகளுக்கு நடனத்தில் ஆர்வம் ஆனால் பெற்றோர் கடும்போக்கு முஸ்லீம்கள் என்பதால் பவேறுதடைகள் இது இவர்களை வீட்டை விட்டு வெளியேர தூண்டுயுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போன சிறுமிகள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்கள்

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மார்டின் குறுக்கு வீதி கொழும்பு 12 சேர்ந்த மூன்று சிறுமிகள் காணாமல்போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் பல்வேறு அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளனர். 13 வயதான பாத்திமா மர்யம், 14 வயதான பாத்திமா கதீஜா, 15 வயதான பாத்திமா ரஷா ஆகியோரே இவ்வாறு காணாமல் போனதாக சிறுமிகளின் தாயரான மொஹமட் பாரிஸ் பாத்திமா நஸ்ரினா புகார் அளித்திருந்தார். 14,15 வயதான சிறுமிகள் தனது மகள் எனவும் 13 வயதான சிறுமி தனது அக்காவின் மகள் எனவும் புகாரில் கூறப்பட்டடுள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பான விசாராணையை மேற்கொண்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹாஸ் தல்துவ காணாமல் போன மூன்று சிறுமிகளும் பாதுகாப்பாக வீடு திரும்பியாதக தெரிவித்துள்ளார். இவ் விசாரணையில் மூன்று சிறுமிகளும் ஏன் வீட்டை விட்டு வெளியேறினார்கள் என்பது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து இவ் விசாராணையின் அடிப்படையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த கொழும்பு 12ஜச் சேர்ந்த மூன்று சிறுமிகளும் 42 மணி நேரத்தின் பின்னர்  வீடு திரும்பிய நிலையில் மூன்று சிறுமிகளும் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு அங்கு முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் நடனம் மற்றும் இசை பயில்வதற்கான ஆசையில் வீட்டை விட்டு இவ்வாறாக வெளியேறினாதாக பொலிஸாரிடம் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அம் மூவரும் தற்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சட்ட மருத்துவ அதிகாரியின் மருத்துவ அறிக்கையில் சிறுமிகளுக்கு எந்தவித உடல், உள ரீதியான பாதிப்புக்களும் இல்லை என உறுதி செய்யப்பட்டடுள்ளது. 

அத்துடன் வாழைத்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரி பிராதான பொலிஸ் பரிசோதகர் பமுனு ஆராச்சி, சிறு முறைப்பாட்டின் பொறுப்பாதிகாரி ரத்ன குமார, குற்ற விசாரணை பிரிவு பொறுப்பாதிகாரி உடுவெல்ல மற்றும் பிராதான பொலிஸ் பரிசோதகர் ஜி.பி. ரம்யசிறி ஆகியோர் உள்ளடங்கிய விஷேட குழுவினர் ஊடாக இந்த விசாராணைகள் ஆரம்பிக்கப்பட்டன, அத்துடன் மத்திய சிறுவர் மற்றும் மகளிர் விசாராணை பிரிவும் விசாரணையில் இணைந்தது.

 இந்நிலையில் சி.சி.ரி.வி கானோளிகளை ஆராய்ந்து பார்த்ததில் குறித்த சிறுமிகள் 8ஆம் திகதி முற்பகல் கொழும்பு விகாரமாதேவி பூங்கா அருகிலுள்ள உணவகம் ஒன்றிக்கு சென்று உணவு அருந்தியமை தெரியவந்துள்ளது.

மேலும் சிறுமிகளின் கைகளில் இருந்த தாயாரின் கையடக்க தொலைப்பேசியை ஜி.பி.எஸ். தொழிநுட்பம் ஊடாக பின் தொடர்ந்து தேடிய போது 8 ஆம் திகதி காலி முகத்திடலில் இருந்தமை தெரியவந்ததுடன் அதன் பின்னர் அவர்களது கையடக்க தொலைப்பேசி செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

அதன் பின்பு  சிறுமிகளின் கைகளில் 1,800 ரூபா மட்டுமே பணம் இருந்துள்ளது. எனவே தாங்கள் அணிந்திருந்த சுமார் ஒரு பவுன் வரை நிறையுடைய இரு மோதிரங்களை அடகு வைத்துள்ளனர். அதனூடாக 60 ஆயிரம் ரூபாவைப் பெற்றுள்ளனர். அந்த பணத்தில் தமக்கு தேவையான ஜீன்ஸ் ரீ-சேட்டுக்களை கொள்வனவு செய்துள்ளனர்.

அத்துடன் ஆடைகளை கொள்வனவு செய்த சிறுமிகள் அவ்க ஆடைகளை அணிந்தவாறு வத்தளை பகுதிக்குச் சென்று அங்குள்ள நடன வகுப்பொன்றில் சேர முயற்சித்துள்ளனர். 

எனினும் அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில் அவர்கள் அநுராதபுரம் சென்றுள்ளனர். அநுராதபுர பஸ் நிலையத்தில் சிறுமிகளின் பின்னால் இளைஞர் குழுவொன்று வட்டமிடுதலை கண்ட பஸ் சாரதி ஒருவர் சிறுமிகளிடம் தாம் செல்ல வேண்டிய இடம் தொடர்பில் விசாரித்துள்ளார்

இதனையடுத்து மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி வரும் பஸ் வண்டியொன்றில் ஏற்றிவிட்டுள்ளார். அத்தோடு அவர்களை இடையில் எங்கும் இறக்காது கொழும்பில் இறக்கிவிடுமாறு கூறியுள்ளார். அத்துடன் கொழும்பை வந்தடைந்த சிறுமிகள் ஐ.தே.க தலையகமான சிறிகொத்தாவுக்கு சென்று அதிகாரிகளை சந்திக்க அனுமதி கோரியுள்ளனர்.

அதற்கு இடமளிக்கவில்லை பாதுகாப்பு அதிகாரி இதனையடுத்து அருகில் உள்ள ஜக்கிய மக்கள் சக்தி அலுவலகத்திற்கு சென்று அங்கு சஜித் பிரேமதாசவை சந்திக்க முயற்சித்துள்ளனர். அங்கு சஜித் பிரேமதாச இருக்காத நிலையில் அவர்கள் பின்னர் உறவினர் ஒருவரின் வீட்டை வந்தடைந்த சிறுமிகள் அங்கிருந்து வீட்டுக்கு சென்றனர்.

இதனையடுத்து இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கவே அவர்கள் சிறுமிகளிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த மூன்று சிறுமிகளும் பொலிஸாரால் கொழும்பு மேலதிக நீதிவான் சந்திக லியனகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போதே நீதிவான் இந்த  உத்தரவை பிறப்பித்துள்ளார். 

பொலிஸாரின் கோரிக்கையை ஏற்று பிணையம் ஒற்றின் கீழ் அம் மூன்று சிறுமிகளும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதன் பிறகு வீட்டுக்கு தெரியாமல் இரகசியமாக வெளியேறினால் இப்பிணையம் ரத்து செய்யப்பட்டு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்படுவார்கள் என்று இதன்போது நீதிவான் எச்சரித்தார். 

இந்நிலையில் இது குறித்து மேலதிக வழக்கு விசாராணைகள் நாளை 16 ஆம் திகதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/117249

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/11/2021 at 14:57, colomban said:

கடும்போக்கு முஸ்லீம்கள் என்பதால் பவேறுதடைகள் இது இவர்களை வீட்டை விட்டு வெளியேர தூண்டுயுள்ளது. 

அது தான் உண்மை.தனது தலைமயிரை காட்டமுடியாத ஒரு பரிதாபகரமான நிலைமை. சவுதிஅரேபிய இளவரசி அனுபவிக்கும் உரிமையை கூட அந்த நாட்டின் மதத்தை பின்பற்றும் இலங்கை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மறுப்பது ஏனோ ☹️

Prinzessin aus Saudi-Arabien räumt mit allen Vorurteilen auf!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இச் சிறுமிகளின் ஆசையை பெற்றோர் நிறைவேற்ற வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.