Jump to content

தமிழ் இனமா? மொழியா?


Recommended Posts

1 hour ago, குமாரசாமி said:

ஒரு சில கதையள்  சர்வதேச ரீதியிலை வராது.வரவும் கூடாது இருந்தாலும் நான் பொய் சொல்லுறவன் இல்லை. அவையள் எல்லாத்தையும் வெளிப்படையாய் சொல்லாயினம் ஏனெண்டால் இதுகள் அரசியல் சமாச்சாரம்.

ஆனால் என்னட்டை ஜேர்மன் மொழியிலை ஆதாரம் இருக்கு

ஜேர்மன்காரரிட்ட அடிவாங்காம இருக்க சொல்ஙியிருப்பார் - நான் இங்க யாழ் களத்தில எனது பழந்தமிழ் மரபுரிமை கோருர மாதிரி 😁

அமெரிக்காவிலும் மற்ற உலகெங்கும் ரம் இங்கிலிசு பேசும் அமெரிக்கன் - ஜேர்மன் இல்லை.

ஒபாமாவும் இங்கிலிசு பேசும் அமெரிக்கன் தான் - கென்யாவில ஏதோ குக்கிராமத்தில இவர் எங்க வீட்டுப்பிள்ளை என்று பள்ளிக்கூட பிள்ளைகள் ஆடி பாடினதுக்காக ஒபாமாவை உலகம் கென்யன் என்று ஏற்றுக்கொள்ளாது - ஒபாமாவும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

தமிழ்நாட்டில ஏதோ ஒரு குக்கிராமத்தில பால் காய்ச்சி ஊத்தி பலகாரம் கொடுத்தாப்போல கமலா ஹரிஸ் மீண்டும் தமிழராக மாட்டார். அவரும் இங்கிலிசு பேசும் அமெரிக்கர் தான்.

குமாரசாமியாரை எங்க கொண்டுபோய் விட்டாலும் அவர் ஊர் பனங்கொட்டை தமிழர் தான் - அதிலும் சந்தேகம் இல்லை 😜

Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply
4 hours ago, goshan_che said:

ரொம்ப சிம்பிளான விசயத்தை ரொம்ப போட்டு குழப்புறீங்களே மக்காள்.

எனது புரிதல் கீழே 

1. நாடுகளின் எல்லைகள், பேரினம் (race), இனம் (ethnicity), தேசிய அடையாளம் (nationality) இவை எல்லாமே social constructs எனப்படும் சமூக கற்பிதங்கள்.

சமூக கற்பிதம் என்றால் an idea that has been created and accepted by the people in a society. ஒரு சமூகத்த்தில் உள்ளோரால் ஏற்று கொள்ளபட்ட நடைமுறையில் உள்ள ஒரு கருத்தியல் என்கிறது மரியம் வெப்ஸ்டர்.

அதாவது ஒரு சமூக கற்பிதம் விஞ்ஞான ரீதியில் அமைய வேண்டியதில்லை. அது ஒரு சமூகத்தின் பார்வை மட்டுமே. மனிதனால் உருவாக்கபட்டது.

யூகேயின் class system உம் இந்தியாவின் caste system உம் சமூக கற்பிதத்துக்கு இலகுவில் புரிந்து கொள்ள கூடிய உதாரணங்கள்.

இதை போன்ற ஆனால் இலகுவில் விளங்க முடியாத ஒரு சமூக கற்பிதமே race உம் ethnicity யும் (கீழே கட்டுரைகளை காண்க).

விஞ்ஞான ரீதியாக பார்த்தால் நாம் எல்லோரும் Homo sapiens sapiens எனும் species (இதையும் தமிழில் இனம் என்கிறார்கள் குழப்பத்துக்கு பிறந்தவர்கள்🤦‍♂️) மட்டுமே. அதற்கு கீழே நம்மை தெளிவாக பிரிக்கும் உயிரியல் தரவுகள் இல்லை.

https://api.nationalgeographic.com/distribution/public/amp/culture/article/race-ethnicity

https://www.livescience.com/amp/difference-between-race-ethnicity.html

2. இரெண்டாவது குழப்பம். தமிழில் race, ethnicity, species மூன்றையும் இனம் என்கிறோம். மேலதிகமாக இந்தியாவில் சாதியையும் இனம் என்கிறார்கள். குழப்பத்தை தவிர்க்க, பேரினம் (race), இனம் (ethnicity), என்ற பதங்களை பாவிப்போம்.

3. சரி உலகின் பேரினங்கள் எவை? இது காலத்துக்கு காலம் மாறுபடுகிறது. இடத்துக்கு இடமும் (ஏனென்றால் இது ஒரு சமூக கற்பிதம்). ஒரு காலத்தில் European race, Asian race,  African race, Chinese race என்றும், இடையே Arab race என்றும், அண்மை காலத்தில் கோக்கசோயிட், மொங்கலோயிட், நீக்ரோயிட், அஸ்டிரலோயிட் என்றும் பிரிக்கிறார்கள்.

ஆனாலும் இது தெளிவான பிரிப்பல்ல. ஏனேன்றால் மனித வரலாறு ஒரு எல்லை பிரிப்பில் வளரவில்லை, அதில் எல்லா சோயிடும் கலந்துள்ளது. குறித்த அளவில் நியந்தாதால் கலப்பும் கூட. ஆனால் பேரினம் என்பது விஞ்ஞான பகுப்பு அல்லவே? ஆகவே காரியமில்லை.

இதில் பிரச்ச்னை என்னவென்றால் - இந்தியர்கள் கோக்கசோயிட், மொகலோயிட், நீக்கிரோயிட், அஸ்டிரலோயிட் எல்லாவற்ரின் கலவை என்கிறார்கள் பலர்.

சரி பேரினம் என்பதே ஒரு கற்பிதம்தானே? நாம் எம்மை தென்னாசிய பேரினம் (திராவிட என்ற தகாத வார்த்தையை தவிர்த்து 🤣) என அழைப்போம். இல்லை ஆசிய பேரினம், அல்லது ஆசியோ-அஸ்டிரலோயிட் என அழைத்தாலும் ஓகே.

சரி பேரினம் ஓகே. அப்போ எமது இனம் என்ன?

தமிழ்.

ஆனால் இதுவும் ஒரு கற்பிதம்தான். ஒரு தமிழனையும், சிங்களவனையும் கொலை செய்து விட்டு பிரேதங்களை கொடுத்து, விஞ்ஞான ரீதியாக யார் என்ன இனம் என காட்ட முடியாது.

ஆனால் பேரினம் (race) என்பது போல் உருவ தோற்றம், தோல் நிறத்தை போல மிகவும் பரந்த அடையாளங்களை அல்லாமல் இன அடையாளம் என்பது பெரும்பாலும் மொழியை சுற்றி, அந்த மொழிக்குரிய பண்பாட்டை சுற்றி உருவாகிறது. 

ஆனால் எப்போதும் ஒரு மொழியை பேசுவோர் எல்லாரும் ஒரு இனத்தை சேர வேண்டியதில்லை. 

அதேபோல் ஒரு இனம் என்பது கட்டாயம் மொழி அடிப்படையில்தான் அமையும் என்ற நியதியும் இல்லை. 

ஏன்? ஏனென்றால் - இனம் என்பதே ஒரு சமூகத்தின் பார்வை, கற்பிதம் -  ஆகவே ஒரு இனத்தை இணைக்கும் ஒற்றை புள்ளியாக மொழியோ, கலாச்சார ஒற்றுமையோ, மதமோ, வேறு எதுவுமோ இருக்கலாம். எல்லாம் அந்த சமூகத்யின் பார்வையில்தான் தங்கியுள்ளது.

ஆகவே மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். இனம் என்பது ஒரு சமூக கற்பிதம். 

தமிழர் என்ற இனத்தில் யார் யார் சேர்வார்கள் என்பதை - விஞ்ஞானமோ, கடவுளோ தீர்மானிப்பதில்லை. அந்த சமூகமே தீர்மானிக்கிறது.

இங்கே மரபு வழி தாயகத்தை போட்டு குழப்ப தேவையில்லை. ஒரு இனமாக நாம் இருக்க மரபு வழிதாயகம் தேவை இல்லை.

ஒரு இனம், தேசிய இனமாக (nation) ஏனையவர்களால் அங்கீகரிக்க படவே மரபு வழி தாயகம் தேவை. 

ஆகவே நாம் இப்போதைக்கு நமது race ஆக, தெற்காசியர் அல்லது சகல சோயிட் கூட்டு என்பதையும் இனமாக தமிழையும் கொள்கிறோம்.

3. சரி அப்போ யார் தமிழர் ? இது காலத்துக்கு காலம் மாறுபடும். ஏனென்றால் இந்த கேள்வியே ஒரு சமூக கற்பிதம் பற்றியது.

துல்பென் சொன்னது போல் ஒரு காலத்தில் மலையாளிகள் தமிழர். அவர்கள் தனி இனமானது ஒரு நாளில் நடக்கவில்லை. ஆகவே ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அவர்கள் தமிழர் என்ற நிலையில் இருந்து தமிழர் அல்லாதோர் என மாறியுள்ளதாக, எமது சமுகமும், அவர்களது சமூகமும் கருதி, மலையாள இனம் என்ற ஒரு புதிய சமூக கற்பிதத்தை உருவாக்கி, ஏற்று கொண்டுள்ளன. இந்த புதிய கற்பிதம் உருவாக பிராமணிய சதி, சமச்கிருத ஆளுமை, மேற்கு தொடர்ச்சி மலை என்பன உதவின. 

அதே போல் இலங்கை முஸ்லீம்களும். தம்மை சோனகர் என்ற இனமாக கற்பித்து கொண்டுள்ளார்கள். அதை அந்த நாட்டு சட்டமும் ஏற்பதால். அவர்கள் தனி இனமாகிறார்கள். நாம் என்னதான் குத்திமுறிந்தாலும் சோனகர் இனம் என்பது அவர்கள் உணரும், அந்த நாட்டு சட்டம் ஏற்று கொள்ளும் ஒரு சமூக கற்பிதம்.

ஆகவே இலங்கை தமிழர் என்ற இன அடையாளத்துக்கும், சோனகர் என்ற இன அடையாளத்துக்கும் ஒரு வித்தியாசமுமில்லை. ஒரு மொழியை பேசும், இரு வேறு இனங்கள். 

தமிழ்நாட்டு முஸ்லீம்க்கள் மத்தியில் இன்னும் தாம் ஒரு தனி இனம் என்ற கற்பிதம் எழவில்லை.

அதை எழவைக்கவே ஜெய்னுலாப்தீன் பலகாலமாக முயல்கிறார்.

ஆகவே இன்றைக்கு வரைக்கும் தமிழ்நாட்டு சமூகத்த்தின் கற்பிதத்தின் படி, அங்கு வாழும் முஸ்லிம்களும் இனத்தால் தமிழர்களே.

ஆனால் இது காலப்போக்கில் மாறலாம்.

தமிழ்நாட்டில் அரங்கேறும் பலமுனை சதிகளின் பயனாக, எதிர்காலத்தில் சோனகர்கள் போல், மலையாளிகள் போல் அவர்களும் தம்மை ஒரு வேற்றினமாக கற்பிதம் செய்ய முனையலாம். 

முடிவாக,

இனம் என்பதற்கு ஒரு விஞ்ஞான வரைவிலக்கணமும் இல்லை, மானிடவியல் வரைவிலக்கணமும் இல்லை. அது ஒரு சமூக கற்பிதம்.

அதன் எல்லைகள் அந்த சமூகம், அதனை சூழ உள்ள சமூகத்யின் புரிதலின் அடிப்படையில் காலத்துக்கு காலமும், இடத்துக்கு இடமும் வேறுபடும்.

இதை புரிந்து கொண்டால் தமிழ், சோனகர், ஜேர்மன், அமெரிக்கன், டிரம்ப், ஒபாமா எல்லாரும் என்ன இனம், ஏன் அவ்வாறு கருதபடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். 

விரிவான விளக்கத்துக்கு நன்றி கோஷான். 👍👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ரம்ப் அவர்கள் தன்னில் ஓடுவது ஜேர்மன் ரத்தம் என பலமுறை கூறியுள்ளார்....ஆகையினால்.....

இருக்கலாம் ஆனால் ரம்ப்...க்கு  ஜேர்மன் உணரவு  1%கூட இலலை எங்கள் நாட்டின்     அதாவது ஜேர்மனியின் தலைவியை. பலர் மததியில். பகிங்கரமாக அவமானப்படுத்தியுவன். மேலும் ஜேர்மன்காரர் கள்வரெனறும்.  மெச்சிக்கோவில. கார்களை உற்பத்தி செய்து அமெரிக்காவில் விற்பனை செயவதாய் குற்றம் சாட்டினார் அதனை தடைசெய்ய. நடவடிக்கையும் எடுத்தார் மெர்க்கலுக்கு. கையே கொடுக்கவில்லை......இவரை சந்தித்த பின்னர் மெர்க்கல் சொன்னார் நான் இருதரப்பாரும் பயன் அடையும் கொளகையுடையவள்  இவரது ஒரு தரப்பு பயனடையும் கொள்கையை  எற்க்கமாட்டேனென்று  அந்த நிகழவைப் பார்த்த எனக்கே கவலை வந்து விட்டது  உங்களுககு எப்படி இருந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கற்பகதரு said:

எங்கே பலமுறை சொன்னார் ? சாமியாரின் கனவிலா? 💤🧐 😴

ரம்ப் அவர்கள் தன்னில் ஓடுவது ஜேர்மன் ரத்தம் என்று பலமுறை முழங்க வேண்டும் என்பது இவரது ஆசை.  தனது ஆசையை கனவாக காண்கின்றார்.

 

7 hours ago, கற்பகதரு said:

நான் இங்க யாழ் களத்தில எனது பழந்தமிழ் மரபுரிமை கோருர மாதிரி 😁

🤣

Link to comment
Share on other sites

Angela Merkel Snorts as Donald Trump Says He Has 'German in My Blood'

 

President Donald Trump has been mocked after remarking that he has German in his blood while expressing excitement over a proposed future trip to Germany.

Trump made the comments during a meeting with German Chancellor Angela Merkel, prompting the veteran leader to raise her eyebrows and seemingly laugh at the president's reference to his German ancestry.

Though the pair have never enjoyed a particularly warm relationship, Trump lavished the chancellor with praise during their meeting at the G7 conference being held in Biarritz, France this weekend, Deutsche Welle reported.

Trump said Merkel—who is no longer the leader of her party and plans to step away from political life when her fourth term ends in 2021—is a "brilliant woman" and "understands exactly where everything is, she knows it before most people."

Though Merkel has publicly ruled out remaining in politics after what will have been more than 15 years in office, Trump suggested the chancellor may surprise observers and be around "for a long time."

A reporter asked Merkel whether she had invited Trump for a bilateral visit to Germany, to which the chancellor said she had done so "on previous occasions."

Though the president has made brief stopovers in Germany to attend a G20 summit and on his way back from Iraq, Trump is yet to have made a full diplomatic visit to Europe's largest economic power. He has, however, visited both the U.K. and neighboring France twice.

Trump added, "We'll be there...we're very honored by the invitation—and that's true—and we will be there. Maybe soon." He then declared: "I have German in my blood," eliciting raised eyebrows and a snort of laughter from the chancellor.

Merkel is clearly very excited about the prospect of Trump visiting Germanypic.twitter.com/fXHa1YlnnN

— Marcel Dirsus (@marceldirsus) August 26, 2019

The president has often touted his European heritage in the past, though until the 1980s claimed his grandfather came from Sweden rather than Germany. According to The Telegraph, this may have been driven by a desire to hide the family's German links following World War II and the Holocaust.

 

He has since warmed to the idea of his European heritage, even falsely claiming that his father, Fred, was born in "a very wonderful place" in Germany. He was, in fact, born in the Bronx.

The president's ancestors were from the village of Kallstadt in the west of Germany. His grandfather Friedrich—later Frederick—came to the U.S. in 1885 and made his fortune during the Yukon gold rush in Alaska. He became rich by establishing a series of hotels that also served as brothels.

Though Friedrich tried to return to Germany as a rich man, he was denied residency because he failed to complete military service. He subsequently returned to the U.S. and settled in New York.

Reporters pressed the president on a possible timeline, suggesting he could visit Germany before his scheduled trip to Poland at the end of this week. Trump, however, said it may be too difficult to arrange a visit at such short notice.

But hints that Trump may soon visit Germany were met with opposition on Twitter, with the hashtag #TrumpNotWelcome trending just hours after his comments were broadcast, Deutsche Welle reported.

The president is not popular in Germany, and a 2018 Pew Research Center survey found that only around one in every 10 Germans had confidence in him between 2016 and 2018.

 

Angela Merkel, Donald Trump, G7, France, GermanGerman Chancellor Angela Merkel and President Donald Trump speak during a bilateral meeting at the G7 summit in Biarritz, France on August 26.NICHOLAS KAMM/AFP/GETTY IMAGES/GETTY

 

https://www.newsweek.com/angela-merkel-snorts-donald-trump-german-blood-visit-g7-ancestry-family-1456256

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

Angela Merkel Snorts as Donald Trump Says He Has 'German in My Blood'

President Donald Trump has been mocked after remarking that he has German in his blood while expressing excitement over a proposed future trip to Germany.

இணைப்பிற்கு நன்றி தம்பி நுணாவில்.👍🏽

இஞ்சை கொஞ்சப்பேருக்கு தாங்கள் தான் எல்லாத்தையும் கரைச்சு குடிச்சவை எண்ட  கெப்பர் நினைப்பு 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kandiah57 said:

இருக்கலாம் ஆனால் ரம்ப்...க்கு  ஜேர்மன் உணரவு  1%கூட இலலை எங்கள் நாட்டின்     அதாவது ஜேர்மனியின் தலைவியை. பலர் மததியில். பகிங்கரமாக அவமானப்படுத்தியுவன். மேலும் ஜேர்மன்காரர் கள்வரெனறும்.  மெச்சிக்கோவில. கார்களை உற்பத்தி செய்து அமெரிக்காவில் விற்பனை செயவதாய் குற்றம் சாட்டினார் அதனை தடைசெய்ய. நடவடிக்கையும் எடுத்தார் மெர்க்கலுக்கு. கையே கொடுக்கவில்லை......இவரை சந்தித்த பின்னர் மெர்க்கல் சொன்னார் நான் இருதரப்பாரும் பயன் அடையும் கொளகையுடையவள்  இவரது ஒரு தரப்பு பயனடையும் கொள்கையை  எற்க்கமாட்டேனென்று  அந்த நிகழவைப் பார்த்த எனக்கே கவலை வந்து விட்டது  உங்களுககு எப்படி இருந்தது?

ஜேர்மனிய  டொனால்ட் ட்ரம்பின் சந்ததியும் வம்சங்களும் ஹிட்லர் காலத்துக்கு முந்தியவை. அன்றைய ஜேர்மனி இன்றைய காலத்தைவிட முற்றிலும் வேறுபட்டது. எனவே ட்ரம்பிடமிருந்து மனித நேயத்தை எதிர்பார்க்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kandiah57 said:

இது எனக்கு தெரியும்  ட்ரம்பில் ஜேர்மன் இரத்தம் கலந்திருப்பது உண்மை தான் ஆனால் ஜேர்மன் உணர்வு இல்லை இவரின் ஆட்சியில் தான் ஜேர்மனிக்கும். அமெரிக்காவுக்கும் தொடரபு  முறுகல் நிலையில் இருந்தது  இவரை ஜேர்மனியன் என நீங்கள் எடுத்து கொளளலாம். அது உங்கள் பிரச்சனை ஆனால் உண்மையில் அவர் அமெரிக்கர் தான் 

 

நான் என்னை அப்படி நினைப்பதில்லை மாறாக இன்னும் அதிகம் படிக்க இருக்குது என்று நினைக்கிறேன் 

நீங்கள் என்னதான் மறுவழமாக சம்பாஷணைகள் செய்தாலும் எங்கேயாவது ஒரு கோணத்தில் மனிதனின் ஆதி மூலம் ஆராயப்பட்டுக்கொண்டேயிருக்கும்.

அமெரிக்காவில் ஒரு சிறிய இனப்பிரச்சனை வந்தாலும் அவ்ரோ அமெரிக்கர் என கறுப்பினத்தவர் அழைக்கப்படுவர்.

ஜேர்மனியில் கூட ஒரு பிரச்சனை என வரும்போது சம்பந்தப்பட்டவர் ஜேர்மன் பிரஜை ஆகினும் அவர் எந்த நாட்டு வழித்தோன்றல் என நிச்சயம் கூறுவார்கள்.

இப்போது இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இருக்கும் அமைச்சர்கள் பலரை இந்திய வழித்தோன்றல்கள் என குறியிட்டு சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2021 at 02:57, கற்பகதரு said:

அமெரிக்காவிலும் மற்ற உலகெங்கும் ரம் இங்கிலிசு பேசும் அமெரிக்கன் - ஜேர்மன் இல்லை.

உண்மை   ட்ரம் தனது  அப்பாப்பா ஜேர்மன்  என்று சொல்லியுள்ளார் நான் ஜேர்மனி யன் என்று ஒருபோதும் சொன்னது இல்லை அதவாது ட்ரம் இன் தகப்பனின  தகப்பன்  ஜேர்மனியன் பல தடவைகள் நான் அமெரிக்கன் என்று ட்ரம் சொல்லியுள்ளார் இப்படிப்பட்டவனை நாங்கள் ஏன ஜேர்மனியன் என்று விழிக்க வேண்டும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

 இங்கிலிசு தெரியாதெண்டது இண்டைக்கு உலகறிஞ்ச சங்கதியானது உண்மையோ இல்லையோ? 💃🤸‍♀️

யூட்டர்,

ஆங்கிலம் ஒரு மொழி..... அறிவல்ல.... நீங்கள் அப்படித்தான் நிணைக்கிறீர்கள் போலுள்ளது.

அப்படி நிணைப்பது சரியாக இருந்தால், பிரட்டனில், வெளிநாட்டவர் தேவையில்லை.... பள்ளிக்கூடம், பல்கலைகழகம் தேவையில்லை.....

ஆங்கிலம் தெரிந்தால், பேசினால் போதும்..... அறிவு கொட்டும்..... கரை புரண்டோடுமே....

அட நம்ம வீட்டு குப்பைதொட்டியை திங்கள் காலை, சேகரித்து செல்ல வரும்..... வெள்ளையர்.

ஆள் பேசும் ஆங்கிலம்....... நீங்கள் கேட்கணுமே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kandiah57 said:

உண்மை   ட்ரம் தனது  அப்பாப்பா ஜேர்மன்  என்று சொல்லியுள்ளார் நான் ஜேர்மனி யன் என்று ஒருபோதும் சொன்னது இல்லை அதவாது ட்ரம் இன் தகப்பனின  தகப்பன்  ஜேர்மனியன் பல தடவைகள் நான் அமெரிக்கன் என்று ட்ரம் சொல்லியுள்ளார் இப்படிப்பட்டவனை நாங்கள் ஏன ஜேர்மனியன் என்று விழிக்க வேண்டும் ?

அமெரிக்கா, ஒரு குடியேறிகள் நாடு..... ஆகவே அங்கே குடியேறிய அணைவருமே, தம்மை அமேரிக்கர்கள் என்பர். அதே நிலையே.... கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து....

அங்கே இருந்த குறைந்தளவான சுதேசிகளை ஒடுக்கி..... அந்த நாடுகளை பிடித்தார்கள்.

அமெரிக்க ஜம்பது மாநிலங்களில், பதின்மூன்று மட்டுமே பிரித்தானிய ஆளுமையில் இருந்தது. மிகுதி, ஸபானிய, பிரஞ்சு ஆதிகத்தின் கீழ் இருந்தது. ஆயினும் சுதந்திர போராட்டத்தை, பிரிட்டிஸ் காலணிகள் ஆரம்பித்ததாலும், அதன் வெற்றியின் காரணமாக பலமுடன் இருந்ததால், ஏணைய மாநிலங்கள் ஜக்கியத்தில் இணைய, ஆங்கிலம் முக்கிய மொழியாகியது....

அங்கே இருந்த வேறு இனக்குழுக்கள் எதிர்ப்பை தவிர்க்க, அமெரிக்கர் என்ற பொது அடையாளம் தேவைப்படுகிறது.

அங்கே, டிரம்ப் தனது பூர்வீகம் ஜேர்மன் என்றோ, ஓபாமா தனது பூர்வீகம் கென்யா + அயர்லாந்து என்றோ, கென்னடி, கிளிங்டன், பைடன் அணைவருமே பூர்வீகம் அயர்லாந்து என்றோ ஜோர்ஜ் வாசிங்டன் இங்கிலாந்து என்றோ சொல்ல வேண்டிய தேவை இருக்கிவில்லை..... அணைவருமே அமெரிக்கர்கள்....

ஆனால் (வாசிங்டன் தவிர்ந்த) ஏணையோர் அந்தந்த நாடுகள் போகும் போது, தமது பூர்வீகத் தொடர்பு குறித்து சொல்ல தவறவில்லை. அதில் பெருமையும் அடைகிறார்கள்.

பிரிட்டிஸ் பிரதமர்.... அரை யூதர்.... அரை துருக்கியர்.... இஸ்லாமிய பெண்கள் முக்காடு குறித்து ஏதோ சொல்ல, அதை விவகாராமாக்க சிலர் முயன்ற போது, நான் இஸ்லாமிய பூர்வீகம் கொண்டவனாயிற்றே என்று சொல்லிவிட்டு கடந்து போனார்.

கனடாவில் பிரஞ்சு மாநிலம் உண்டு.

அவர்களுக்கு பிரிட்டிஸ் ராணியம்மா ....அரசு தலைவர் ஆக இருப்பதில் விருப்பம் இல்லை .... அதே வேளை.... இந்த பிரஞ்சு, ஆங்கில மொழி  வேறுபாடுகளைத் தவிர்க்க கனேடியர்... பொது அடையாளம்.... தேவைப்படுகிறது

அதே வேளை, பிரித்தானியா , நான்கு வேறு மொழி பேசும் நாடுகளின் கூட்டமைப்பு. அதுக்கும் பொதுவான பிரிட்டிஸ் எனும் பொது அடையாளம் தேவைப்படுகிறது.

ஆனால், பிரிட்டனில், ஜேர்மனியில்.... சுதேசிகள்.... நாடு அவர்களது..... நாம் வாழ வந்திருகிறோம்.... புகுந்த வீடு..... புகலிடம்....

இங்கே.... நாம் அந்நியர்..... எப்போதுமே....

Nationality, Citizenship கோசன் மேலே விளக்கி உள்ளார்.

பல மொழிகள் கொண்ட, தமக்குள் மோதிக்கொண்டிருந்த பல சிறு நாடுகளை பிடித்து, இந்தியர் என்ற அடையாளத்துக்குள் அடக்கி, ஆங்கிலம் என்னும் மொழியால் தையல் போட்டு ஆண்டு கொண்டிருந்தார்கள் பிரிட்டிஷ் காரர்கள். இன்று, இந்தி திணிப்பு..... இந்தியா என்னும் அடையாளத்தினை பதம் பார்க்கும் நிலை.

இலங்கையில்.... சிக்கலுக்கு காரணம் இந்த பொது அடையாளம் இன்மை..... சிங்களவர், முழு நாடும் தமதே, நாம் மட்டுமே இலங்கையர் என்று நிணைப்பதால், நீஙகள் ஜேர்மனியிலும், நான் பிரித்தானியாவிலும் உள்ளோம்.

ஆக, அமெரிக்கர், கனேடியர், பிரிட்டிஷ், இந்தியர் இலங்கையர் என்ற பதங்கள் வேற்றுமையில் ஒற்றுமை காண உருவாகி இருக்க வேண்டும்.

இதில் முதலில் பிழைத்தது, இலங்கை.... இப்போது இந்தியாவும் அந்த பாதையில்.... 

****

நான், ஆங்கிலம் பேசினாலும், கடவுச்சீட்டு வைத்திருந்ததாலும் பிரிட்டிஸ் காரரோ, ஆங்கிலேயனோ அல்ல.

அதே போல, நீங்கள், ஜேர்மன் பேசினாலும், கடவுச்சீட்டு வைத்திருந்ததாலும் ஜேர்மன் காரரோ, ஜேர்மனியரோ அல்ல.

கடவுச்சீட்டை தந்தது, அவர்கள் மாண்பு.

மத்தியகிழக்கில் அந்த மாண்பு இல்லை. ஆகவே..... நீங்கள், அரபி பேசினாலும், இலங்கையர் தான்.

ஜரோப்பாவில்..... என்னையும், உங்களையும்.... எமது அடுத்த தலைமுறையையும் இணைக்கப்போவதும், பெருமையுடன் வைத்திருக்கப் போவதும், தமிழர் என்னும் இன அடையாளம்...

அந்த அடையாளம் இல்லாவிடில், பூர்வீகத்தை தொலைத்த, தமிழக நரிக்குறவர் போல.... ஜரோப்பாவிலுள்ள ரொமேனிய ஜிப்சி இன மக்கள் போலாவோம்.

எம்மைப் போலவே...... நாடு, நாடாக ஏதிலிகளாக திரிந்த யூதர்கள் தமது இன அடையாளத்தை காத்ததால்,இன்று அசைக்க முடியாத பெரும் சக்தி கொண்டேராக உள்ளனர்.

விக்டோரியா மகாராணி காலத்தில், அகதி, தாய், தந்தைக்கு பிறந்த முதல் யூத பிரிட்டிஸ் பிரதமர் பென்சமின் டிசரேலி....

ஆகவே.... தமிழர் இன அடையாளம் மிக முக்கியமானது. இல்லாவிடில்..... தகப்பன் யார் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவமானமடையும் ஒருவர் நிலையில் இருப்போம்.

***
சரி.... உங்கள் கேள்விக்கு பதில் இப்போது..... யூத பூர்வீகதை கொண்ட பெஞ்சமின் டிசரேலியை, போரிஸ் ஜோன்சனை..... யூத இனம் பெருமையாக கொண்டாடுவது போல.... டிரம்ப் குறித்து ஜேர்மனியரும், ஓபாமா குறித்து கென்யரும்..... கொண்டாடுவது போல..... பிரபாகரன், ராஜராஜன், ஏ ஆர் ரகுமான், சி வி ராமன் குறித்து தமிழர்கள் பெருமையுடன் கொண்டாட, பூர்வீக (இன) அடையாளம் மிக முக்கியமானது.

 

Link to comment
Share on other sites

@Nathamuni மிக சுருக்கமான விளக்கம். நீங்கள. கூறிய தமிழர் என்ற இன அடையாளத்தை பேண வேண்டுமானால் எமக்கு பின்னால் வரும் அனைத்து சந்ததியும் தமிழ் மொழியை கற்க வேண்டும். அவ்வாறு கற்காமல் அந்தந்த நாட்டு மொழியை  தாய் மொழியாக கொண்டால் தமிழர் என்ற இன அடையாளம் மறைந்து இலங்கை அல்லது தெற்காசிய பூர்வீகத்தை கொண்ட ஐரோப்பிய மக்கள் என்ற வரையறைக்குள்ளேயே வருவார்கள். அதாவது தமிழ் மொழி இழக்கப்பட்டால் தமிழர் என்ற இன அடையாளம் கட்டாயம் மறையும் என்பது வெளிப்படையானது. 

Link to comment
Share on other sites

9 hours ago, Nathamuni said:

யூட்டர்,

ஆங்கிலம் ஒரு மொழி..... அறிவல்ல.... நீங்கள் அப்படித்தான் நிணைக்கிறீர்கள் போலுள்ளது.

அந்த “போலுள்ளது” - தவறானது … ஆங்கிலத்தில் உள்ளதை முற்றிலும் எதிர்மறையாக விளங்கிக்கொண்டு பதில் எழுதியவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றெழுதினேன் - அவ்வளவே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

@Nathamuni மிக சுருக்கமான விளக்கம். நீங்கள. கூறிய தமிழர் என்ற இன அடையாளத்தை பேண வேண்டுமானால் எமக்கு பின்னால் வரும் அனைத்து சந்ததியும் தமிழ் மொழியை கற்க வேண்டும். அவ்வாறு கற்காமல் அந்தந்த நாட்டு மொழியை  தாய் மொழியாக கொண்டால் தமிழர் என்ற இன அடையாளம் மறைந்து இலங்கை அல்லது தெற்காசிய பூர்வீகத்தை கொண்ட ஐரோப்பிய மக்கள் என்ற வரையறைக்குள்ளேயே வருவார்கள். அதாவது தமிழ் மொழி இழக்கப்பட்டால் தமிழர் என்ற இன அடையாளம் கட்டாயம் மறையும் என்பது வெளிப்படையானது. 

யூதர்களின் ஹீப்ரூ மொழி பேச்சு மொழி இல்லையே. அது இன்றளவும் எழுத்தில் மட்டுமே உள்ளது.

ஆனால் யூத இனம் உலகெங்கும் உள்ளது.... பிரிட்டிஷ் பிரதமர், நியூசீலாந்து பிரதமர்... யூதர்கள்...

இலங்கையின் 26வது பிரதம நீதியரசர் Sidney Abrahams ஒரு யூதர். 

இன்று நேற்று அல்ல. ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர்... அகதிகளாக ஓடியவர்கள் அவர்கள்.

நாடு அமைந்த பின்னர், இஸ்ரேவேலின் உத்தியோக மொழி ஹீப்ரு. உலகெங்கும், அகதிகளாக ஓடியவர்களின் வம்சாவளியை தேடி, இஸ்ரேலுக்கு குடிபெயர செய்கிறார்கள். இந்தியா, பங்களாதேஷ், இலங்கை என்று பலர் அங்கே போயுள்ளனர்.

ஆரிய பிராமணர்களின் சமஸ்கிருதமும் அவ்வாறே.... ஆனாலும் பிராத்தனை மொழியாக கோவில்களில் உள்ளது.

மொழி இல்லாத நிலையில், இனம் எப்படி காக்கப்பட்டது என்று யூத இன உதாரணத்துடன், விளங்கப்படுத்த முடியுமா?

****

மொழி இல்லாவிடினும், நாம் பெரும் வரலாற்றுப் பூர்விகம் மிக்க தமிழர்கள் என்று அடுத்த தலைமுறைக்கு, ஏதாவது மொழியில் சொல்லி, என்ன காரணத்துக்காக இங்கே வந்தோம் என்று சொல்லவிடில், நாம் ஒரு பூர்வீகம் இல்லா நாடோடிகள் ஆவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தமிழ் மொழி இழக்கப்பட்டால் தமிழர் என்ற இன அடையாளம் கட்டாயம் மறையும் என்பது வெளிப்படையானது. 

மறுக்க முடியா உண்மை.

கோஷான் சே  இங்கே ஒரு சமூகத்தில் உள்ள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட  நடைமுறையில் உள்ள இனம் ,தேசிய அடையாளம் பற்றி விளக்கமாக சொல்லியுள்ளார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

ஜரோப்பாவிலுள்ள ரொமேனிய ஜிப்சி இன மக்கள் போலாவோம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் தான் இந்த சிக்கோயினார்கள்.அவர்கள் வாழும் நாடுகளுக்கேற்ப அந்த கலாச்சாரங்களோடு ஒட்டியே வாழ்கின்றார்கள். இருந்தாலும் தங்களின் பூர்வீகம் இந்தியா என்றே கூறுவார்கள்.அவர்கள் எப்படித்தான் நாகரீகமாக வாழ்ந்தாலும் அவர்களை சிக்கோயினார் இனம் என்றுதான் கூறுவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.