Jump to content

தமிழ் இனமா? மொழியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

@tulpen உங்களின் இந்த விவாதம் சில விரிவான நோக்குகளை திறந்தாலும், உங்களிடம் உங்கள் கருத்து தொடர்பான ஒரு கேள்வி இருக்கிறது.

ஒரு மொழி மருவி இன்னொரு மொழி அடையாளம் உருவாகி ஒரு  இனம் உருவானதை சேர மன்னனின் உதாரணத்தை குறிப்பிட்டிருக்கிறீர்கள். 

இப்படி நடந்திருக்கிறதே தவிர இன்னொரு இனத்தின் அடையாளமாகிய மொழியை பேசுவதால் அந்த இனமாகிவிட முடியுமா. 

குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் புதிய மொழியை உருவாக்கவில்லை மாறாக இன்னொரு இனத்தின் மொழியை பேசுகிறார்கள். அதனால் அந்த இனமாகிவிடமுடியாது.

 ஜேர்மன் மொழி பேசுபவர்கள்  எல்லோரும் ஜேர்மனியர்கள் அல்லர்.  வாலி குறிப்பட்டது போல மரபுவழி தாயகமும் ஒரு இன அடையாளமாக தேவைப்படுகிறது. அதனால் தான் தமிழினத்தை தக்கவைக்க மரபுவழி தாயகம் வேண்டி போராடினார்கள். 

என்னைப்பொறுத்தவரை எத்தனை தலைமுறை சென்றாலும் எவனொருவன் தன்னை தமிழனாக அடையாளப்படுத்துகிறானோ, தன்னை தமிழனாக முன்னிலைப்படுத்துகிறானோ, தன்னை தமிழன் என்று சொல்வதில் பெருமிதப்படுகிறானோ அவனே தமிழன். 

இது புலம்பெயர் தமிழனுக்கும் பொருந்தும். 

Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply

@முதல்வன் நான் கூறுவது குறுகிய காலத்தை பற்றியதல்ல. நீண்ட கால நோக்கில் தமிழை மறந்த சந்ததியினர் தமிழர் என்ற அடையாளத்தை இழப்பர். வாழும் நாட்டின் அடையாளத்தையே கொண்டிருப்பர். 

தொடர்சியாக தமது சந்திதிக்கு தமிழ் மொழியைக்  கடத்தி அவர்கள் தமிழ் பேசினால்தமிழர் என்ற அடையாளத்தை தக்கவைப்பர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். ஒரு இனம் மொழி, கலாச்சாரம், மரபுவழி தாயகம் போன்றவற்றால் அடையாளப்படுத்தப்பட்டு அழியாமல் இருக்கிறது. 

பல்வேறு சந்த்ததிக்குப்பின்னரும் தம்மை தமிழராக அடையாளப்படுத்த விரும்பாவிட்டால் அவர்கள் தமிழராக மாட்டார்கள். 

இதுதான் தலைகீழாக தமிழ்நாட்டில் நடக்கிறது. தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழ்நாட்டில் நன்றாக தமிழ்பேசி தமிழிலேயே வாழ்க்கை நடத்தினாலும் தம்மை தமிழராக அடையாளப்படுத்த விரும்பாதவர்கள் தமிழராக மாட்டார்கள். 

 

Link to comment
Share on other sites

@முதல்வன் தம்மை தமிழராக அடையாளப்படுத்த விரும்பாத எவரும் தமிழராக மாட்டார்கள். அது எல்லா மொழிக்கும் பொருந்தும். அடையாளப்படுத்த விரும்புபவர்கள் தமிழர்களே. 

இதில்  ஒரு உண்மையை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். தமிழ் சினிமாவும் சினிமா பாடல்களும் இல்லை என்றால் இப்போதுள்ள இரண்டாம் தலைமுறையினரில் பெருமளவானோர் தமிழை விட்டு அந்நியப்பட்டிருப்பார்கள்.  நன்றி தமிழ் சினிமா பாடல்கள். 😂 நன்றி ரஹமான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான விசயமா இருக்கு.... கோசனை இன்னும் காணம்....

பிற்காயினோட மினக்கெடுறார் போல.... 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

@முதல்வன் நான் கூறுவது குறுகிய காலத்தை பற்றியதல்ல. நீண்ட கால நோக்கில் தமிழை மறந்த சந்ததியினர் தமிழர் என்ற அடையாளத்தை இழப்பர். வாழும் நாட்டின் அடையாளத்தையே கொண்டிருப்பர். 

தொடர்சியாக தமது சந்திதிக்கு தமிழ் மொழியைக்  கடத்தி அவர்கள் தமிழ் பேசினால்தமிழர் என்ற அடையாளத்தை தக்கவைப்பர். 

மொரீசியஸ் நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் தெரியாதாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, tulpen said:

@முதல்வன் தம்மை தமிழராக அடையாளப்படுத்த விரும்பாத எவரும் தமிழராக மாட்டார்கள். அது எல்லா மொழிக்கும் பொருந்தும். அடையாளப்படுத்த விரும்புபவர்கள் தமிழர்களே. 

நீங்கள் அடையாளப்படுத்த விரும்பாவிடினும்...... நீஙகள் யார் என்று புரிந்து கொள்ளப்படுவீர்கள்....👌

1 minute ago, ஏராளன் said:

மொரீசியஸ் நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் தெரியாதாமே.

அப்ப தமிழர் என்று எப்படி சொல்வீர்கள்......

அவர்கள் தமிழர்கள் என்பதை, அவர்கள் மறந்தாலும், அவர்கள் வாழும் சூழல் மறக்காது....

அவர்கள் தமிழ் கற்க வசதி இருக்கவில்லை என்பதே காரணம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

நீங்கள் அடையாளப்படுத்த விரும்பாவிடினும்...... நீஙகள் யார் என்று புரிந்து கொள்ளப்படுவீர்கள்....👌

அப்ப தமிழர் என்று எப்படி சொல்வீர்கள்......

அவர்கள் தமிழர்கள் என்பதை, அவர்கள் மறந்தாலும், அவர்கள் வாழும் சூழல் மறக்காது....

அவர்கள் தமிழ் கற்க வசதி இருக்கவில்லை என்பதே காரணம்....

வேறு ஏதோ ஒன்று அவர்களை தமிழர்களாக அடையாளப்படுத்துகிறது என நினைக்கிறேன். பெயர், வழிபாட்டு முறைகள்.

Link to comment
Share on other sites

19 minutes ago, ஏராளன் said:

மொரீசியஸ் நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் தெரியாதாமே.

நான் பல்லகலைக்கழக மாணவனாக இருந்த காலத்தில் கூட இருந்தவர் பிரித்தானியாவின் மொரிசியஸ் நாட்டு தூதுவரின் மகன் - ஒன்று,இரண்டு எண்ணத்தெரியும். அவர்களின் தாய்மொழி பிரெஞ்சு. அவர்களின் தமிழ் அடையாளம் சைவசமயம். ஆனால் அவர்களின் நாணயங்களில் தமிழும் இடம் பிடித்துள்ளது - அடையாளத்துக்காக. அவரிலும் பார்க்க எங்களோடு கூட இருந்த மலேசிய சீனன் நன்றாக தமிழ் பேசுவார் - மலேசியாவில் ஒரு பண்ணைக்கு சொந்தக்காரர். தமிழர்களை அடிமைகளாக வேலைக்கு வைத்திருப்பதால் தான் தமிழ் கற்றிருப்பதாக சொன்னார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஏராளன் said:

வேறு ஏதோ ஒன்று அவர்களை தமிழர்களாக அடையாளப்படுத்துகிறது என நினைக்கிறேன். பெயர், வழிபாட்டு முறைகள்.

நீஙகள் எந்த நாட்டுக்கு போனாலும்..... கேட்டே அறிந்து கொள்வார்கள்.... எமக்கு தெரியாமல் இருந்தாலும்... விலாவாரியா சொல்வார்கள்...

உதாரணமாக.......... ஊரில்.... கிழடுகள்.... தம்பி எவ்விடம்..... என்று ஆரம்பித்து...... நம்ம பூர்வீகத்தை அப்படியே ஒப்பிப்பார்கள்.

அதே போலவே..... நீஙகள் இலங்கையர் என்றால்..... தமிழரா, சிங்களவரா என்பார்கள்..... உங்களுக்கு தெரியவில்லை என்றால்.... விடமாட்டார்கள்..... வடக்கோ.... தெற்கோ, மத்தியோ என்று கேட்டு..... ஒரு முடிவுக்கு வந்து எமக்கும் அதை சொல்வார்கள்.

நாம் தமிழராய் இருந்து, அவர்கள் நம்மை சிங்களவர் என்றால்..... கதை கந்தல்.... ஆகவே... நமக்குள் தேடலை நடத்தி, விடையை கண்டு்ம் இருப்போம்.

அந்நியர் என்றால் விலகிப் போகலாம்..... நன்கு வியாபார ரீதியில் தெரிந்தவர், வேலை யிடம் என்றால் கோபிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

நான் பல்லகலைக்கழக மாணவனாக இருந்த காலத்தில் கூட இருந்தவர் பிரித்தானியாவின் மொரிசியஸ் நாட்டு தூதுவரின் மகன் - ஒன்று,இரண்டு எண்ணத்தெரியும். அவர்களின் தாய்மொழி பிரெஞ்சு. அவர்களின் தமிழ் அடையாளம் சைவசமயம். ஆனால் அவர்களின் நாணயங்களில் தமிழும் இடம் பிடித்துள்ளது - அடையாளத்துக்காக. அவரிலும் பார்க்க எங்களோடு கூட இருந்த மலேசிய சீனன் நன்றாக தமிழ் பேசுவார் - மலேசியாவில் ஒரு பண்ணைக்கு சொந்தக்காரர். தமிழர்களை அடிமைகளாக வேலைக்கு வைத்திருப்பதால் தான் தமிழ் கற்றிருப்பதாக சொன்னார்.

தமிழர்கள்.... அடிமையாக வைத்திருகிறோம் என்று ஒரு கிறுக்கன் சொன்ன போது.... யூட்டருக்கு கோபம் வரவில்லையா?

நீங்கள் சொல்லும்....ஆண்டான்... அடிமைக்கதை.... முடிந்து பல காலம் ஆகிறதே.

உலகில் எந்த நாட்டிலும் அடிமைத்தனம் இல்லாதவாறு, ஜநா விதிமுறைகள் உள்ளதை அறியவில்லையா?

காலம் மாறி..... விலங்குகளை கூண்டில் வைத்திருப்பதே தவறு என்று சொல்லும் காலத்தில் அல்லவா, வாழ்கிறோம்.

தமிழர்கள் அடிமைகளாக அல்ல, குறைவாக இருந்தாலும், உழைப்புக்கு, ஊதியம் பெறும் கூலிகளாகவே சென்றார்கள்.

முக்கியமாக, தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்ற அவலத்தில் இருந்து விலகி ஓடவே..... கூலிகளாக சென்றார்கள்.

அவர்களுக்கே... கல்வி மறுக்கப்பட்டிருந்ததால்..... சென்ற நாடுகளில், அவர்கள் சந்ததிக்கு கடத்த முடியாத அவலம்...

ஆனாலும் தமது, மத, கலாச்சாரங்களை விடவில்லை.

என்றாவது ஒரு நாள், தமிழர்கள், தமிழ் கற்கலாம். அதற்கான தொழில் நுட்பம் வந்துள்ளது .

Link to comment
Share on other sites

5 minutes ago, Nathamuni said:

நீங்கள் சொல்லும்....ஆண்டான்... அடிமைக்கதை.... முடிந்து பல காலம் ஆகிறதே.

உலகில் எந்த நாட்டிலும் அடிமைத்தனம் இல்லாதவாறு, ஜநா விதிமுறைகள் உள்ளதை அறியவில்லையா?

காலம் மாறி..... விலங்குகளை கூண்டில் வைத்திருப்பதே தவறு என்று சொல்லும் காலத்தில் அல்லவா, வாழ்கிறோம்.

பேச்சு பல்லக்கு, தம்பி கால்நடை - கேள்விப்பட்டதில்லையா?

ஜநா விதிமுறைகள்’ ??? என்ன நாதம், பகிடிக்கு தானே ஐ.நா. பற்றி இவ்வளவு உயர்வான மதிப்போடு எழுதினீர்கள், இல்லையா? 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கற்பகதரு said:

பேச்சு பல்லக்கு, தம்பி கால்நடை - கேள்விப்பட்டதில்லையா?

ஜநா விதிமுறைகள்’ ??? என்ன நாதம், பகிடிக்கு தானே ஐ.நா. பற்றி இவ்வளவு உயர்வான மதிப்போடு எழுதினீர்கள், இல்லையா? 😃


December 2, international anti-slavery day (day of the abolition of slavery)

https://www.un.org/en/observances/slavery-abolition-day

யூட்டர், நிறைய தேடவேணும், வாசிக்க வேண்டும்.

நவீன அடிமைத்தனம், ஒரு மனிதனின் இயலாமை, இன்னும் ஒரு மனிதனின் சுயநலன் காரணமாக மறைமுகமாக நடந்தாலும்.... அரசுகள்அதை சட்டபூர்வமாக அனுமதிக்க முடியாது. பிடிபட்டால் தண்டணை....

உங்கள் சீன நண்பர், வேலைக்கு வைத்திருந்த ஆட்களை, அடிமைகளாக நிணைத்து சொல்லி இருக்கிறார். நீஙகள் கோபமுறாமல் வந்து விட்டீர்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

மதம் மாறினால் அவர்கள் முன்னாள் தமிழர்கள் என்றீர்கள். அது எனக்குப் புரியவில்லை. அப்படியானால் தந்தை செல்வா முன்னாள் தமிழரா?  அன்ரன்  பாலசிங்கம் முன்னாள் தமிழரா? அப்படியல்லவே! 

ஆனால் மொழி மாறினால் அவர்களின் வழித்தோன்றல்கள் இனம் மாறுவர்

தந்தை செல்வா அன்ரன் பாலசிங்கம் போன்ற கிறிஸ்தவர்கள் ஒருபோதும் தங்களை தமிழர்கள் இல்லையென்று சொல்லிக்கொண்டதில்லை, இன்னும் சொல்லபோனால் தமிழர்களின் அரசியல் ஆயுத போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்களில் கிறிஸ்தவர்களின் பங்களிப்பு அளப்பரியது.

நான் இங்கே அர்த்தப்படுத்தியது தமிழை பேசிக்கொண்டு தமிழில் படித்துக்கொண்டு தமிழில் அன்றாட தமது காரியங்களை ஆற்றிக்கொண்டு தாங்கள் தமிழர்கள் இல்லையென்றும் தங்களை யாராவது தமிழர்கள் என்று அழைத்தால் அதி உஷ்ணமாகி கோபடும் இஸ்லாமியர்கள் பற்றியே.

மொழிமாறினால் இனம் ஒருபோதும் மாறாது, நீங்கள் என்னதான் வேற்றுமொழிக்கு மாறினாலும் அந்த இனத்தின் பூர்வீக மக்கள் உங்களை தமது இனமாக ஒருபோதும் பார்க்கமாட்டார்கள்.

உதாரணத்திற்கு ஜேர்மனியில் பல தலைமுறைகளாக வாழ்ந்தும் , ஜெர்மனிய மொழியை அட்சர சுத்தமாக பேசிகொண்டும் வாழும் துருக்கியர்களை ஜெர்மனின் பூர்வக மக்கள் ஒருபோதும் ஜெர்மனியர்கள் என்று  மனப்பூர்வமாக அழைக்கமாட்டார்கள், அவர்கள் பார்வையில் எப்போதும் அவர்கள் துருக்கியர்களே.

அதேபோல் பல வெள்ளையர்கள் நாடுகளில் சீன மொழி தெரியாமல் வாழும் நாட்டின் மொழியை மட்டுமே பேசிக்கொள்ளும்  ஒரு சில சீனர்களை நான் கண்டிருக்கிறேன், அதற்காக அவர்களை ஒருபோதும் அந்தநாட்டு பூர்வீக  மக்கள் தமது இனம் என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள் & ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

 

Link to comment
Share on other sites

43 minutes ago, valavan said:

நான் இங்கே அர்த்தப்படுத்தியது தமிழை பேசிக்கொண்டு தமிழில் படித்துக்கொண்டு தமிழில் அன்றாட தமது காரியங்களை ஆற்றிக்கொண்டு தாங்கள் தமிழர்கள் இல்லையென்றும் தங்களை யாராவது தமிழர்கள் என்று அழைத்தால் அதி உஷ்ணமாகி கோபடும் இஸ்லாமியர்கள் பற்றியே.

என்ன வல்லவன், நானொருத்தன் இங்கே இருப்பதை கண்டும் காணாத மாதிரி இசுலாமியர்களை குறைகூறுகிறீர்களே?      நித்தியானந்தம் அடைந்திருந்த நான் நாதமுனி சாட்சியாக 😃  எப்போதோ பேர்கராகி, பிறகு பௌத்தராகி சிங்களவனாகி இருக்கிறேன், நீங்கள் கண்டுகொள்ளவில்லையே? 🥲 என்னைப்போல எத்தனைபேர் 🤧

Link to comment
Share on other sites

35 minutes ago, valavan said:

தந்தை செல்வா அன்ரன் பாலசிங்கம் போன்ற கிறிஸ்தவர்கள் ஒருபோதும் தங்களை தமிழர்கள் இல்லையென்று சொல்லிக்கொண்டதில்லை, இன்னும் சொல்லபோனால் தமிழர்களின் அரசியல் ஆயுத போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்களில் கிறிஸ்தவர்களின் பங்களிப்பு அளப்பரியது.

நான் இங்கே அர்த்தப்படுத்தியது தமிழை பேசிக்கொண்டு தமிழில் படித்துக்கொண்டு தமிழில் அன்றாட தமது காரியங்களை ஆற்றிக்கொண்டு தாங்கள் தமிழர்கள் இல்லையென்றும் தங்களை யாராவது தமிழர்கள் என்று அழைத்தால் அதி உஷ்ணமாகி கோபடும் இஸ்லாமியர்கள் பற்றியே.

மொழிமாறினால் இனம் ஒருபோதும் மாறாது, நீங்கள் என்னதான் வேற்றுமொழிக்கு மாறினாலும் அந்த இனத்தின் பூர்வீக மக்கள் உங்களை தமது இனமாக ஒருபோதும் பார்க்கமாட்டார்கள்.

உதாரணத்திற்கு ஜேர்மனியில் பல தலைமுறைகளாக வாழ்ந்தும் , ஜெர்மனிய மொழியை அட்சர சுத்தமாக பேசிகொண்டும் வாழும் துருக்கியர்களை ஜெர்மனின் பூர்வக மக்கள் ஒருபோதும் ஜெர்மனியர்கள் என்று  மனப்பூர்வமாக அழைக்கமாட்டார்கள், அவர்கள் பார்வையில் எப்போதும் அவர்கள் துருக்கியர்களே.

அதேபோல் பல வெள்ளையர்கள் நாடுகளில் சீன மொழி தெரியாமல் வாழும் நாட்டின் மொழியை மட்டுமே பேசிக்கொள்ளும்  ஒரு சில சீனர்களை நான் கண்டிருக்கிறேன், அதற்காக அவர்களை ஒருபோதும் அந்தநாட்டு பூர்வீக  மக்கள் தமது இனம் என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள் & ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

 

வல்லவன், 

நான் இங்கு குறிப்பிட விடயம் மொழி இழக்கப்படும் போது அவர்களின் நிகழ்கால அடையாளம் மறையும் என்பதை மட்டுமே. அதற்கான உதாரணமாகவே சேர நாட்டை கூறினேன்.

எமது சந்ததி மொழியை கற்காமல் விட்டால் மூன்று அல்லது நான்கு தலைமுறை போக இலங்கை அல்லது ஆசிய பூவீகத்தை கொண்ட ஐரோப்பிய  நாட்டு மக்கள் என்றே அடையாளப்படுத்தப்படுவார்களே தவிர தமிழர் என்று அல்ல. சிறந்த உதாரணம் சூரிநாம். அங்கு வாழும் மக்களில் ஒரு பிரிவினர் இந்தியாவையும் ஆபிரிக்காவையும் பூர்வீகமாக கொண்ட சூரிநாம் பிரஜைகள் என்று தான் பதிவுகள் கூறுகின்றனவே தவிர அவர்கள் பேசிய மொழியோ இனமோ அடையாளப்படுத்தப்படவில்லை. 

எமது விருப்பம் வேறு ஜதார்ததம் வேறு.  மிக அண்மையில் அமைவிடத்தை கொண்ட துருக்கி என்ற நாட்டுடன் தொடர்ச்சியாக தொடர்பினை பேணும  மக்கள் துருக்கியராக அடையாளப்படுத்தப்படுவது இயல்பானதே. அந்தாலியா பகுதியுல் உள்ள பல உல்லாச ஹொட்டேல்கள் ஜேர்மனிய துருக்கியருக்கு  சொந்தமானவை. அங்குள்ள ஹொட்டேல்களில் வேலை செய்பவர களில் பலர் ஜேர்மனிய பிரஜைகள். நிலத்தொடர்பு அவர்களை இணைத்துள்ளது. 

நீர்கொழும்பு பகுதியில் மொழியை இழந்த நம்மவர் சிங்களவர்களாகி உள்ளனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினம் ஒரு இனம்  ஆனால் தமிழ் ஒரு மொழியாகும்.  

1...தமிழினம். 

2...தமிழ்   இது ஒரு தமிழ்  ஆசிரியர் சொன்ன கருத்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, tulpen said:

நீர்கொழும்பு பகுதியில் மொழியை இழந்த நம்மவர் சிங்களவர்களாகி உள்ளனர். 

சிங்களவர் ஆகி உள்ளனர்.... சிங்களவர் இல்லை.....

கண்டிச்சிங்களமே, கரையோர சிங்களத்தை ஏற்பதில்லையே...... பர்ணாடோ, டீ சில்வா..... சிங்களவர் இல்லை.

பெளத்தர் மட்டுமே சிங்களம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கற்பகதரு said:

ஆங்கிலம் பேசும் ரம்ப் ஆங்கிலேயரா?

2. ஜேர்மானிய பெற்றோருக்கு பிறந்ததால் ரம்ப் ஜேர்மானியரா?

நடைமுறை ஊதாரணங்களை காட்டியுள்ளீர்கள்.
ஆங்கிலம் பேசும் ரம்ப் தன்னை யேர்மனியராக சொல்லவும் மாட்டார்.யேர்மனியர்கள் ஆராய்ச்சி செய்து அவர் எங்கள் ஆள் என்று சொல்லவும் மாட்டார்கள். அவர் அமெரிக்கர் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அவர் அமெரிக்கர் தான்.

உண்மையான கருத்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நடைமுறை ஊதாரணங்களை காட்டியுள்ளீர்கள்.
ஆங்கிலம் பேசும் ரம்ப் தன்னை யேர்மனியராக சொல்லவும் மாட்டார்.யேர்மனியர்கள் ஆராய்ச்சி செய்து அவர் எங்கள் ஆள் என்று சொல்லவும் மாட்டார்கள். அவர் அமெரிக்கர் தான்.

ரம்ப் அவர்கள் தன்னில் ஓடுவது ஜேர்மன் ரத்தம் என பலமுறை கூறியுள்ளார்....ஆகையினால்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

எமது விருப்பம் வேறு ஜதார்ததம் வேறு.  மிக அண்மையில் அமைவிடத்தை கொண்ட துருக்கி என்ற நாட்டுடன் தொடர்ச்சியாக தொடர்பினை பேணும  மக்கள் துருக்கியராக அடையாளப்படுத்தப்படுவது இயல்பானதே. அந்தாலியா பகுதியுல் உள்ள பல உல்லாச ஹொட்டேல்கள் ஜேர்மனிய துருக்கியருக்கு  சொந்தமானவை. அங்குள்ள ஹொட்டேல்களில் வேலை செய்பவர களில் பலர் ஜேர்மனிய பிரஜைகள். நிலத்தொடர்பு அவர்களை இணைத்துள்ளது. 

ஜேர்மனியில் மூன்றாவது சந்ததியாக வாழும் துருக்கிய இளம் சமுதாயத்தினர் என்றுமே தாம் ஜேர்மன் இனத்தவர்கள் என்று கூறுவதில்லை.அரசியல் ரீதியாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தாலும் தம் இனத்தை மறுக்க / மறக்க மாட்டார்கள்..

இங்கிலாந்து அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் மாற்று இனத்தவர் அரசியலில் முதன்மை வகித்தாலும் தமது இன மொழி தெரியா விட்டாலும்  அவர்களது பூர்வீகம் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும்.

ஒரு காலத்தில் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சராக  இராசரத்தினம் பதவி வகித்தார். இவர் சிங்கப்பூர் நாட்டவராக இருந்தாலும் தமிழினத்தவராகவே அனைவராலும் பார்க்கப்பட்டார்.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

ரம்ப் அவர்கள் தன்னில் ஓடுவது ஜேர்மன் ரத்தம் என பலமுறை கூறியுள்ளார்....ஆகையினால்.....

எங்கே பலமுறை சொன்னார் ? சாமியாரின் கனவிலா? 💤🧐 😴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கற்பகதரு said:

எங்கே பலமுறை சொன்னார் ? சாமியாரின் கனவிலா? 💤🧐 😴

ஒரு சில கதையள்  சர்வதேச ரீதியிலை வராது.வரவும் கூடாது இருந்தாலும் நான் பொய் சொல்லுறவன் இல்லை. அவையள் எல்லாத்தையும் வெளிப்படையாய் சொல்லாயினம் ஏனெண்டால் இதுகள் அரசியல் சமாச்சாரம்.

ஆனால் என்னட்டை ஜேர்மன் மொழியிலை ஆதாரம் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப சிம்பிளான விசயத்தை ரொம்ப போட்டு குழப்புறீங்களே மக்காள்.

எனது புரிதல் கீழே 

1. நாடுகளின் எல்லைகள், பேரினம் (race), இனம் (ethnicity), தேசிய அடையாளம் (nationality) இவை எல்லாமே social constructs எனப்படும் சமூக கற்பிதங்கள்.

சமூக கற்பிதம் என்றால் an idea that has been created and accepted by the people in a society. ஒரு சமூகத்த்தில் உள்ளோரால் ஏற்று கொள்ளபட்ட நடைமுறையில் உள்ள ஒரு கருத்தியல் என்கிறது மரியம் வெப்ஸ்டர்.

அதாவது ஒரு சமூக கற்பிதம் விஞ்ஞான ரீதியில் அமைய வேண்டியதில்லை. அது ஒரு சமூகத்தின் பார்வை மட்டுமே. மனிதனால் உருவாக்கபட்டது.

யூகேயின் class system உம் இந்தியாவின் caste system உம் சமூக கற்பிதத்துக்கு இலகுவில் புரிந்து கொள்ள கூடிய உதாரணங்கள்.

இதை போன்ற ஆனால் இலகுவில் விளங்க முடியாத ஒரு சமூக கற்பிதமே race உம் ethnicity யும் (கீழே கட்டுரைகளை காண்க).

விஞ்ஞான ரீதியாக பார்த்தால் நாம் எல்லோரும் Homo sapiens sapiens எனும் species (இதையும் தமிழில் இனம் என்கிறார்கள் குழப்பத்துக்கு பிறந்தவர்கள்🤦‍♂️) மட்டுமே. அதற்கு கீழே நம்மை தெளிவாக பிரிக்கும் உயிரியல் தரவுகள் இல்லை.

https://api.nationalgeographic.com/distribution/public/amp/culture/article/race-ethnicity

https://www.livescience.com/amp/difference-between-race-ethnicity.html

2. இரெண்டாவது குழப்பம். தமிழில் race, ethnicity, species மூன்றையும் இனம் என்கிறோம். மேலதிகமாக இந்தியாவில் சாதியையும் இனம் என்கிறார்கள். குழப்பத்தை தவிர்க்க, பேரினம் (race), இனம் (ethnicity), என்ற பதங்களை பாவிப்போம்.

3. சரி உலகின் பேரினங்கள் எவை? இது காலத்துக்கு காலம் மாறுபடுகிறது. இடத்துக்கு இடமும் (ஏனென்றால் இது ஒரு சமூக கற்பிதம்). ஒரு காலத்தில் European race, Asian race,  African race, Chinese race என்றும், இடையே Arab race என்றும், அண்மை காலத்தில் கோக்கசோயிட், மொங்கலோயிட், நீக்ரோயிட், அஸ்டிரலோயிட் என்றும் பிரிக்கிறார்கள்.

ஆனாலும் இது தெளிவான பிரிப்பல்ல. ஏனேன்றால் மனித வரலாறு ஒரு எல்லை பிரிப்பில் வளரவில்லை, அதில் எல்லா சோயிடும் கலந்துள்ளது. குறித்த அளவில் நியந்தாதால் கலப்பும் கூட. ஆனால் பேரினம் என்பது விஞ்ஞான பகுப்பு அல்லவே? ஆகவே காரியமில்லை.

இதில் பிரச்ச்னை என்னவென்றால் - இந்தியர்கள் கோக்கசோயிட், மொகலோயிட், நீக்கிரோயிட், அஸ்டிரலோயிட் எல்லாவற்ரின் கலவை என்கிறார்கள் பலர்.

சரி பேரினம் என்பதே ஒரு கற்பிதம்தானே? நாம் எம்மை தென்னாசிய பேரினம் (திராவிட என்ற தகாத வார்த்தையை தவிர்த்து 🤣) என அழைப்போம். இல்லை ஆசிய பேரினம், அல்லது ஆசியோ-அஸ்டிரலோயிட் என அழைத்தாலும் ஓகே.

சரி பேரினம் ஓகே. அப்போ எமது இனம் என்ன?

தமிழ்.

ஆனால் இதுவும் ஒரு கற்பிதம்தான். ஒரு தமிழனையும், சிங்களவனையும் கொலை செய்து விட்டு பிரேதங்களை கொடுத்து, விஞ்ஞான ரீதியாக யார் என்ன இனம் என காட்ட முடியாது.

ஆனால் பேரினம் (race) என்பது போல் உருவ தோற்றம், தோல் நிறத்தை போல மிகவும் பரந்த அடையாளங்களை அல்லாமல் இன அடையாளம் என்பது பெரும்பாலும் மொழியை சுற்றி, அந்த மொழிக்குரிய பண்பாட்டை சுற்றி உருவாகிறது. 

ஆனால் எப்போதும் ஒரு மொழியை பேசுவோர் எல்லாரும் ஒரு இனத்தை சேர வேண்டியதில்லை. 

அதேபோல் ஒரு இனம் என்பது கட்டாயம் மொழி அடிப்படையில்தான் அமையும் என்ற நியதியும் இல்லை. 

ஏன்? ஏனென்றால் - இனம் என்பதே ஒரு சமூகத்தின் பார்வை, கற்பிதம் -  ஆகவே ஒரு இனத்தை இணைக்கும் ஒற்றை புள்ளியாக மொழியோ, கலாச்சார ஒற்றுமையோ, மதமோ, வேறு எதுவுமோ இருக்கலாம். எல்லாம் அந்த சமூகத்யின் பார்வையில்தான் தங்கியுள்ளது.

ஆகவே மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். இனம் என்பது ஒரு சமூக கற்பிதம். 

தமிழர் என்ற இனத்தில் யார் யார் சேர்வார்கள் என்பதை - விஞ்ஞானமோ, கடவுளோ தீர்மானிப்பதில்லை. அந்த சமூகமே தீர்மானிக்கிறது.

இங்கே மரபு வழி தாயகத்தை போட்டு குழப்ப தேவையில்லை. ஒரு இனமாக நாம் இருக்க மரபு வழிதாயகம் தேவை இல்லை.

ஒரு இனம், தேசிய இனமாக (nation) ஏனையவர்களால் அங்கீகரிக்க படவே மரபு வழி தாயகம் தேவை. 

ஆகவே நாம் இப்போதைக்கு நமது race ஆக, தெற்காசியர் அல்லது சகல சோயிட் கூட்டு என்பதையும் இனமாக தமிழையும் கொள்கிறோம்.

3. சரி அப்போ யார் தமிழர் ? இது காலத்துக்கு காலம் மாறுபடும். ஏனென்றால் இந்த கேள்வியே ஒரு சமூக கற்பிதம் பற்றியது.

துல்பென் சொன்னது போல் ஒரு காலத்தில் மலையாளிகள் தமிழர். அவர்கள் தனி இனமானது ஒரு நாளில் நடக்கவில்லை. ஆகவே ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அவர்கள் தமிழர் என்ற நிலையில் இருந்து தமிழர் அல்லாதோர் என மாறியுள்ளதாக, எமது சமுகமும், அவர்களது சமூகமும் கருதி, மலையாள இனம் என்ற ஒரு புதிய சமூக கற்பிதத்தை உருவாக்கி, ஏற்று கொண்டுள்ளன. இந்த புதிய கற்பிதம் உருவாக பிராமணிய சதி, சமச்கிருத ஆளுமை, மேற்கு தொடர்ச்சி மலை என்பன உதவின. 

அதே போல் இலங்கை முஸ்லீம்களும். தம்மை சோனகர் என்ற இனமாக கற்பித்து கொண்டுள்ளார்கள். அதை அந்த நாட்டு சட்டமும் ஏற்பதால். அவர்கள் தனி இனமாகிறார்கள். நாம் என்னதான் குத்திமுறிந்தாலும் சோனகர் இனம் என்பது அவர்கள் உணரும், அந்த நாட்டு சட்டம் ஏற்று கொள்ளும் ஒரு சமூக கற்பிதம்.

ஆகவே இலங்கை தமிழர் என்ற இன அடையாளத்துக்கும், சோனகர் என்ற இன அடையாளத்துக்கும் ஒரு வித்தியாசமுமில்லை. ஒரு மொழியை பேசும், இரு வேறு இனங்கள். 

தமிழ்நாட்டு முஸ்லீம்க்கள் மத்தியில் இன்னும் தாம் ஒரு தனி இனம் என்ற கற்பிதம் எழவில்லை.

அதை எழவைக்கவே ஜெய்னுலாப்தீன் பலகாலமாக முயல்கிறார்.

ஆகவே இன்றைக்கு வரைக்கும் தமிழ்நாட்டு சமூகத்த்தின் கற்பிதத்தின் படி, அங்கு வாழும் முஸ்லிம்களும் இனத்தால் தமிழர்களே.

ஆனால் இது காலப்போக்கில் மாறலாம்.

தமிழ்நாட்டில் அரங்கேறும் பலமுனை சதிகளின் பயனாக, எதிர்காலத்தில் சோனகர்கள் போல், மலையாளிகள் போல் அவர்களும் தம்மை ஒரு வேற்றினமாக கற்பிதம் செய்ய முனையலாம். 

முடிவாக,

இனம் என்பதற்கு ஒரு விஞ்ஞான வரைவிலக்கணமும் இல்லை, மானிடவியல் வரைவிலக்கணமும் இல்லை. அது ஒரு சமூக கற்பிதம்.

அதன் எல்லைகள் அந்த சமூகம், அதனை சூழ உள்ள சமூகத்யின் புரிதலின் அடிப்படையில் காலத்துக்கு காலமும், இடத்துக்கு இடமும் வேறுபடும்.

இதை புரிந்து கொண்டால் தமிழ், சோனகர், ஜேர்மன், அமெரிக்கன், டிரம்ப், ஒபாமா எல்லாரும் என்ன இனம், ஏன் அவ்வாறு கருதபடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.