Jump to content

கோட்டை வாசலில் ‘காலக்கண்ணாடி’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டை வாசலில் ‘காலக்கண்ணாடி’

அ. அச்சுதன்

இலங்கையின் சிறந்த அரணாக விளங்குவது திருகோணமலை; அன்று இலங்கையைப் பிடிக்கும் நோக்கமாக வந்த போர்த்துக்கேயர்,  டச்சுக்காரர்,  பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரும், முதன் முதலாகக் கால்பதித்த  இடம் திருகோணமலைதான். 

இலங்கையில் தமிழர்கள் முதல் முதலாகக் கால் பதிந்த பிரதேசம், வாழ்ந்த பிரதேசம் திருகோணமலைதான். இங்ஙனம், தமிழர் நாகரிகம் பரவியிருந்த பிரதேசத்தில், அதன் நடுநாயகமாக ஒரு சைவ நகரம் (கோவில்) இருந்திருத்தல் இயல்புதான்.

இத்தகைய புராதனப்பெருமை வாய்ந்த ஸ்தலத்தின் வரலாறு முமுவதும் கிடைக்கப் பெறாமை, தமிழர் தம் தவக்குறையென்றே சொல்லலாம். பண்டைய வரலாறு, காலத்திரையல் மூடப்பட்டுக் கிடக்கின்றது. ஆனாலும் கிடைத்த வரலாற்று விடயங்களை, கல்வெட்டுகளைக் கூட பாதுகாக்க முடியவில்லை என்பது மிகவும் கவலையான விடயம்.

ஈழத்தில் பாடல் பெற்ற சிவஸ்தலங்களாயிருப்பன திருக்கோணேஸ்வரம்,  திருக்கேதீஸ்வரம் என்னுமிரண்டுமாகும். தமிழ் நாட்டுத் திருத்தலங்களின் வரலாறுகள், பன்னெடுங்காலமாக அகில உலகச் சைவமக்களின் நெஞ்சில் நிலைபெற்றிருப்பது போன்று, ஈழ நாட்டுத் திருத்தலங்களும் இந்துக்களின் இதயத்தில் இருந்து வருகின்றன. 

image_a384fba93d.jpg

திருக்கோணேஸ்வரம்,  இலங்கையின் கிழக்கே, கிழக்கு மாகாணத்தில் உலகப் பிரசித்திபெற்ற இயற்கைத் துறைமுகமாகிய திருகோணமலைத் துறைமுகம் அமைவதற்குச் சாதகமாயுள்ள மலைகளொன்றின் உச்சியில் இருக்கின்றது.  

மூன்று மலைகளைக் கொண்டு முக்கோண வடிவில் அமைந்திருப்பதால் திருக்கோணமலை, திருகோணமலை என்று இந்த நகரம் பெயர் பெற்றது. இந்த நகரத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலம், கோணேஸ்வரம் ஆதலால் திருகோணமலை எனவும் இந்த நகரம் பெயர் பெறுகின்றது. 

இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இந்துக்களின் திருத்தலமாகிய திருக்கோணேஸ்வரம் புனித சேஷத்திரமாக இருந்து வந்ததைப் புராண, இதிகாச வரலாறுகள் கூறுகின்றன. 

எனவே இந்தத் தலத்தின் இயல்பான தெய்வீக விசேடத்தாலே, இந் நகரம் திருக்கோணமலை என்ற பெயரால் வழங்கி வருகின்றது. மேலும், இலங்கையை அரசாண்ட தேவனம்பியதீசன் காலத்தில், புனித வெள்ளரசு மரக் கன்றுடன் சங்கமித்தை இந்தத் தலத்தில் வந்திறங்கியதாயும் அப்பொமுது கோகர்ணம் என்று இதற்குப் பெயர் வழங்கி வந்ததென்றும் மகாவம்சத்திலிருந்து அறியக்கிடக்கிறது.

போர்த்துக்கேயர் 1505 ஆம் ஆண்டு இலங்கையில் கால்தடம் பதித்தனர். போர்த்துக்கேயரின் வருகையின் பொழுது, திருகோணமலை மாவட்டம் நான்கு பிரிவுகளாக இருந்து.  கொட்டியாரம்பற்று,  தம்பலகாமம் பற்று,  கட்டுக்குளப்பற்று, திருகோணமலை நகர் ஆகிய நான்கு பிரிவுகளாகும். இவற்றை தமிழ் வன்னிய குறுநில மன்னர்கள் ஆட்சி செய்தனர்.

யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆளுகைக்குள் திருகோணமலை உட்பட்டிருந்தது. ஆனாலும், கொட்டியாரம் பற்று காலத்துக்குக் காலம் கண்டிய மன்னர்களின் ஆட்சியிலும் இருந்தது. 1551 ஆம் ஆண்டில் சங்கிலியனின் ஆட்சி அஸ்தமிக்கத் தொடங்கிய பொழுது, கண்டி இராச்சியம் எமுச்சி பெற்றது.

இலங்கையின் கரையோரப் பகுதிகளை கைப்பற்றிய போர்த்துக்கேயரை அகற்றுவதற்காக, கண்டிய மன்னன் செனரத் விடாமுயற்சி கொண்டான். அதற்காக டச்சுக்காரருடன் ஒப்பந்தம் செய்து கொண்டான். இச் சூழ்நிலையில் டச்சுக்காரர் திருகோணமலையைப் பிடிக்க முடியாமல் தடுப்பதற்கு போர்த்துக்கேயர் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

கோட்டை ஒன்றை கட்டுவதற்கு போர்த்துக்கேய தளபதி கொன்ஸரன்ரைன் டி சா, கோணேஸ்வர ஆலயம் அமைந்திருந்த மலைப்பகுதியை தெரிவு செய்தான் என்பது வரலாறு.

இந்த நிலையில், கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் புராதன வரலாற்றுச் சாசனங்கள் நிறையவே காணப்படுகின்றன. காலத்தால் இன்றும் பேசப்படும் ஒரு விடயத்தை பதிவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

சடையவர் மகன் வீரபாண்டியன், இலங்கை அரசனான முதலாம் புவனேகபாகுவை அடக்கித் திருகோணமலையில் தன் கயற்கொடியைப் பதின்மூன்றாம் நூற்றாண்டில் பொறித்தான் என்று தென்னிந்தியக் கோயில் சாசனங்களில் ஒன்றான குடுமியாமலைச் சாசனம் கூறுகின்றது.

image_2ed06650fe.jpg

இவ் வினைக் கயல் மீன்கள், திருகோணமலை பிரட்ரிக் கோட்டை நுழைவாயிலின் இரு மருங்கிலும் இப் பொமுதும் காணப்படுகின்றன. அத்துடன் அன்று ஆயிரங்கால் கோவில் என்று அழைக்கப்பட்ட கோணநாதர் கோவில் தூண் ஒன்றில் பொறிக்கப்பட்ட கல்வெட்டின் சிறு பகுதியொன்று, பிரட்ரிக் கோட்டை வாசல் தூணில் உள்ள மீன் சின்னத்துக்குக் கீழே இன்றும் சிதைந்த நிலைமையில் காணப்படுகின்றது. இக் கல் வெட்டானது குளக்கோட்ட மன்னன் காலத்து தீர்க்க தரிசன கல்வெட்டாகும்.

கல்வெட்டை போர்ச்சுக்கேய மூலத்துடன் ஒப்பிட்டு பிரபல தமிழ் பண்டிதர் ஒருவரின் உதவியுடன் முதலியார் ஸி. ராஜநாயகம் (யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற பிரபல நூலின் ஆசிரியர்) கீழ்க்கண்டவாறு திருத்தி எழுதினார். 

முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை
பின்னே பறங்கி பிடிக்கவே- மன்னாகேள்
பூனைக்கண், செங்கன், புகைக்கண்ணன் போனபின் 
மானே வடுகாய் விடும்.

குளக்கோட்டு மன்னன் இந்தக் கோவிலைக் கட்டுவித்த பொழுது, அதன் வரும் காலம் எப்படியிருக்கலாமென்ற சோதிடத்தை இப்படி கல்லில் எழுதி வைத்திருந்தார்கள். கோவிலை இடித்த போர்த்துக்கேயர்கள் இதைப்பார்த்து ஆச்சரியமடைந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது.

image_38234ad7ac.jpg

முன்னர், குளக்கோட்ட மகாராஜாவால்  கட்டப்பட்ட இந்தக் கோவிலை, பிறகு ஒரு சமயம் பறங்கிகள் பிடித்துக் கொள்வார்கள்; பிறகு பூணைக்கண்ணர்கள், சிவப்புக் கண்ணர்கள், புகைக் கண்ணர்கள் ஆகிய பல சாதியினர் ஆதிக்கத்திலிருந்து விட்டு, கடைசியாக வடுகர்கள் (தெலுங்கர்) ஆதிக்கத்துக்குப் போய்விடும் என்பது இதன் கருத்தாம் என குறிப்பிடப்படுகின்றது. 

காலவெள்ளத்தைக் கடந்து வந்த இந்தக் கல்வெட்டு,   கோட்டையின் முகப்பில் இன்றைக்கும் தென்படுகிறது  . எனவே திருகோணமலையின் வரலாற்றுடனும் ஈழத்தில் தமிழரின் அடையாள சின்னமாகவும் இவ் விடயம் திகழ்வதுடன்,  திருக்கோணேஸ்வரத்தின் வரலாறுகளை விவரிப்பதாகவும் காணப்படும் இச்சாசனங்களின் இன்றைய நிலை பற்றி பார்க்கின்ற போது மிகவும் கவலை அளிக்கின்றது.

image_e6359be9d1.jpg

வீதிகளுக்கு பூசப்படும் வர்ணங்கள், இச் சாசனக்கல் மீது பூசப்பட்டிருப்பதால், சாசனங்களின் தொன்மை சிதைக்கப்பட்டு இருப்பதுடன், அதன் சிறப்பும் அதன் அழகும் அழிக்கப்பட்டிருக்கின்றது. இச் சாசனம் அமைந்துள்ள பிரட்ரிக் கோட்டை வாசலின் ஊடாக தினமும் வாகனங்கள் பயணிப்பதால் அதன் அதிர்வுகளாலும், வாகனங்களின் புகைகளலும் சாசனங்கள் மேலும் சேதம் ஆவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு.

வரலாற்றை அழிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா எனும் சந்தேகமும் இதனால் ஏற்படுகின்றது. தொல்பொருள் திணைக்களம், இந்தப் புராதன வரலாற்று சின்னங்களைப் பாதுகாக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுகின்றது . இந்த நிலையில்,  இச்சாசனங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் திருக்கோணேஸ்வரத்தின் ஆலய பரிபாலன சபையினருக்கும்  திருகோணமலை மண்ணின் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இருக்கின்றது.  இவ் விடயத்தில்  இவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா......?

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கோட்டை-வாசலில்-காலக்கண்ணாடி/91-284957

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,LSG 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) LSG     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) CSK 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) PSK 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team LSG 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator LSG 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி   CSK 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறானபெயருக்கு -2 புள்ளிகள் Riyan Parag  11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Mustafizur Rahman 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) DC ——— @ஈழப்பிரியன் அண்ணா, @கிருபன் ஜி @பையன்26 அன்புக்காக🙏. டெம்பிளேட்டுக்கு நன்றி @வாதவூரான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.