Jump to content

உடல் நலத்துக்கு நல்லது காஃபியா டீயா? மிகப் பழைய விவாதத்துக்கு புதிய தகவல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊரெல்லாம் மழை ஊற்றிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பள்ளிகள், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான வீடும், நிரந்தர வருவாயும், நல்ல உடையும் இருப்பவர்களுக்கு மழை இனிது. இப்படிப்பட்ட பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு, மழை நேரத்தில் ஒரு கோப்பை தேனீரோ, காஃபியோ அந்த இனிமையை இரட்டிப்பாக்கும்.

என்ன உங்கள் கோப்பையை ஏந்திவிட்டீர்கள்தானே? இனிமையை வழங்கும் இந்த காபியோ, டீயோ உடலுக்கு என்ன நன்மைகளை, தீமைகளை செய்கின்றன தெரியுமா? உங்கள் கோப்பையை உறிஞ்சிக்கொண்டே இதைப் படியுங்கள்.

ஆசிய நாடுகளில் டீயும், பிரிட்டனைத் தவிர்த்த பிற ஐரோப்பிய நாடுகளில் காஃபியும் ஆதிக்கம் செலுத்துவதாக ப்யூ ஆய்வு ஒன்று கூறுகிறது.

எந்த அடிப்படையில் மக்கள் காபியையோ டீயையோ தேர்வு செய்கிறார்கள்? பெரும்பாலான மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. இதை விட அது உடலுக்கு நல்லது என்றோ, குறைந்த அளவு தீங்கு விளைவிக்கக் கூடியதோ என்றோ அவர்கள் நம்புகிறார்கள். மன நிறைவு கிடைப்பதற்கு ஒன்றை விட மற்றொன்று சிறப்பாக இருக்கிறது என்று சிலர் கருதுகிறார்கள். வேறு பலருக்கு சுவையும் மணமும் காரணமாக இருக்கும். இப்படி தனிப்பட்ட விருப்பத்தைத் தவிர தேநீரையோ காஃபியையோ தேர்வு தேர்வு செய்வதற்கு ஏதேனும் "ஆரோக்கியமான" காரணம் இருக்கிறதா என்று பார்ப்போம்.

விழிப்பாக வைப்பது எது?

டீ அல்லது காஃபியில் உள்ள காஃபீன் அளவு, அதன் திடம், வகை மற்றும் பக்குவப்படுத்தும் முறை ஆகியவற்றால் மாறுபடுகிறது. ஆயினும் டீயை விட காஃபியில்தான் அதிக காஃபீன் இருக்கிறது. காஃபீன் அதிகமாக எடுத்துக் கொண்டால், விழிப்பாக இருக்க முடியும் என்று பலரும் ஓர் ஊகத்தின் அடிப்படையில் நம்புகிறார்கள்.

விழித்திருக்கும் பெண்ணும் கடிகாரமும்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்.

இதனால் விழிப்பாக இருக்க வைப்பதில் காஃபி வென்று விடுகிறது. அதற்காக காஃபி பிரியர்கள் இப்போதே கொண்டாடத் தொடங்கிவிட வேண்டாம். ஏனென்றால், இப்படி எளிதாக முடிவு செய்து விட முடியாது, வேறு சிலவற்றையும் கவனிக்க வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பொதுவாக ஒரு கோப்பை காஃபியில் உள்ள மிதமான அளவு (40-300mg) காஃபீன், விழிப்புணர்வு, கவனம், எதிர்வினையாற்றும் நேரம் ஆகியவற்றை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் நினைவாற்றல் மற்றும் முடிவெடுப்பதில் குறைவான தொடர் விளைவுகளையே காஃபி கொண்டிருக்கிறது.

ஒரு கோப்பை தேநீரில் உள்ள காஃபீனின் பண்புகள், எல் தியானைன் என்ற அமினோ அமிலத்தால் மேம்படுத்தப்படுகின்றன என்பதற்கு சான்றுகள் உள்ளன. "கவனத்தை மாற்றுதல், கவனச்சிதறல் ஆகியவற்றைக் குறைக்கும் வகையில் எல் தியானைன் காஃபினுடனுடன் இணைந்து செயல்படுகிறது" என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

அதிக விழிப்புடன் இருப்பது நாங்கள்தான் என தேநீர் குடிப்பவர்கள் நினைத்தால், அது சரியாக இருக்லாம். ஆனால் இதற்காக தேநீர் குடிப்பவர்களும் காலரை தூக்கி விட்டுக் கொள்ளக்கூடாது.

இந்த கூடுதல் விழிப்புணர்வுக்கு நமது உடல் ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. 5-6 மணி நேரத்திற்குப் பிறகு, நீங்கள் குடித்த காஃபீனில் பாதி அளவு உங்கள் உடலிலேயே தேங்கியிருக்கும். 10-12 மணி நேரத்திற்குப் பிறகு, அதில் கால் பகுதி இன்னும் இருக்கலாம் என்று தூக்கம் தொடர்பான ஆராய்ச்சியாளர் மாட் வாக்கர் கூறுகிறார்.

இதன் பொருள் என்னெ? நீங்கள் தூங்கத் தொடங்குவதில் அல்லது ஆழமாகத் தூங்குவதில் டீயினால் சிக்கல் ஏற்படலாம். காஃபீன் உங்கள் ஆழ்ந்த உறக்கத்தின் அளவைக் குறைக்கும் என்கிறார் வாக்கர். "நீங்கள் மறுநாள் காலையில் எழுந்திருக்க முடியும், புத்துணர்ச்சியுடன் உணர முடியாது"

காபி

பட மூலாதாரம்,LUIS ALVAREZ

"நாள் முழுவதும் தேநீர் குடிப்பது காஃபீன் அளவுகள் குறைவாக இருந்தாலும், காஃபிக்கு ஒத்த விழிப்பு நிலையை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் தூக்கத்தை குலைக்கும் வாய்ப்பு குறைவு" என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

எப்படியிருந்தாலும், நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் காஃபீன் அதிகமாக இருக்கும் பானங்களை குடிப்பது நல்லது அல்ல.

மன அமைதிக்கு எது சிறந்தது?

சுறுசுறுப்பாக இருப்பதைக் காட்டிலும் சிலர் ஓய்வுக்காகவும் சூடான பானத்தை குடிக்கிறார்கள்.

யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன் (யுசிஎல்) நடத்திய ஓர் ஆய்வில்,பிளாக் டீ எனப்படும் பால் இல்லாத தேநீர் குடிப்பது "வாழ்க்கையில் அன்றாட மன அழுத்தங்களில் இருந்து விரைவாக மீள உதவும்" என்று தெரியவந்ததாக பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் மற்றும் பொது சுகாதாரத் துறையின் பேராசிரியர் ஆண்ட்ரூ ஸ்டெப்டோ கூறுகிறார். ஆனால், "மன அழுத்தத்தில் இருந்து விடபடவும் ஆசுவாசம் அடைவதற்கும் தேநீரில் உள்ள என்ன பொருட்கள் காரணம் என்று எங்களுக்குத் தெரியவில்லை" என்று அவர் கூறுகிறார்.

அழுத்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குறைந்த காஃபீன் கொண்ட கிரீன் டீ சிலருக்கு மன அழுத்தத்தைக் குறைக்கிறது என்றும் தெரியவந்திருக்கிறது.

மன அழுத்தம் மீது காஃபி ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து குறைவான ஆய்வுகளே நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் அதிக அளவு காஃபீன் மனப் பதற்றத்துக்கு காரணமாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

"அதிகமாக காஃபீன் குடிப்பதால் நீங்கள் இயல்பை விட அதிகமாக பதற்றமடையலாம்" என்கிறது பிரிட்டனின் சுகாதாரத் துறை.

பற்களில் கறையை ஏற்படுத்துவது எது?

காஃபியும் தேநீரும் பற்களைக் கறையாக்குகின்றன. ஆனால் காஃபியை விட தேநீர் பற்களை அதிகம் கறைப்படுத்துகிறது என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. பல் சிகிச்சை நிபுணரான அன்னா மிடில்டன் இந்த பாதிப்பைக் குறைப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறார்:

பற்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • தேநீர் மற்றும் காஃபியில் பால் அல்லது பாலுக்கான மாற்றுப் பொருளைச் சேர்க்கவும்
  • தேநீர் அல்லது காஃபி குடித்த பிறகு தண்ணீர் அல்லது ஃப்ளூரைடு கலந்த மவுத்வாஷ் மூலம் வாய் கொப்பளிக்கவும்.
  • குளிர்ந்த தேநீர் அல்லது காஃபி குடிக்கும் போது, ஸ்ட்ராவை பயன்படுத்தவும்
  • மின்சார பிரஷ்ஷை பயன்படுத்தவும்
  • பற்களுக்கு இடையில் பல்லிடை ஃபிரஷ்கள் அல்லது ஃப்ளோஸ் மூலம் சுத்தம் செய்யவும்

ஆரோக்கியத்துக்கு எது சிறந்தது? காஃபியா, டீயா?

பிரிட்டன் சுகாதாரத் துறையின் அறிவுரையின்படி, சீரான உணவின் ஒரு பகுதியாக தேனீர் மற்றும் காஃபி குடிப்பது நல்லது. இருப்பினும், சில ஆராய்ச்சிகள் காஃபீன் கொண்ட பானங்கள் உடலில் சிறுநீரை விரைவாக உற்பத்தி செய்ய வைப்பதால், உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது என்று கூறுகின்றன.

தேநீர் மற்றும் காஃபி இரண்டிலும் பாலிபினால்கள் உள்ளன. அவை "நம் ஆரோக்கியத்திற்கு நல்லது" என்று உணவியல் நிபுணர் சோஃபி மெட்லின் கூறுகிறார். காஃபியில் தேநீரைக் காட்டிலும் அதிகமான பாலிபினால்கள் உள்ளன. அவை ஒரே மாதிரியானவை அல்ல என ஒரு ஆய்வு கூறுகிறது. டைப்-2 நீரிழிவு நோய்க்கான வாய்ப்பைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இரண்டு பானங்களிலும் உள்ளன. ஆனால் ஒரு நாளைக்கு நான்கு கோப்பை காஃபிக்கு மேல் குடிப்பது உங்கள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என பிரிட்டனின் NHS கூறுகிறது.

சிலருக்கு காஃபீன் ஒத்துக் கொள்ளாது. மேலும் சிலருக்கு செரிமான பிரச்சனைகள், பதற்றம் அல்லது தூக்கமின்மை போன்ற ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படலாம். அவர்கள் காஃபிக்கு பதிலாக தேநீரை தேர்வு செய்யலாம்.

காஃபினைக் குறைக்க நீங்கள் முடிவு செய்தால், அதைப் படிப்படியாகவே செய்ய வேண்டும். இல்லாவிட்டால் விலகல் நோய்க்குறிகள் தோன்றக் கூடும். நீங்கள் எவ்வளவு காஃபீன் குடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இந்த அறிகுறிகளின் தீவிரம் அதிகரிக்கிறது. தேநீர் குடிப்பவர்களைவிட காஃபி குடிப்பவர்களுக்கு கூடுதல் அறிகுறிகளைக் கொண்டிருப்பார்கள் என்று கூறலாம். ஆயினும் அது எவ்வளவு குடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது.

கர்ப்பிணிகள் "காஃபீன் இருக்கும் பானங்களைக் குடிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு காஃபீன் உள்ள பானங்கள் கொடுக்கக் கூடாது என என்.எச்.எஸ். கூறுகிறது.

உடல் நலத்துக்கு நல்லது காஃபியா டீயா? மிகப் பழைய விவாதத்துக்கு புதிய தகவல்கள் - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

காலையும், மாலையும் ஒரு கப் பால் ரீ அடித்தால் சுகம். சோர்வடையும் பின்மதியம் ஒரு பிளக் கோப்பி அடித்தால் உசார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

உடல் நலத்துக்கு நல்லது காஃபியா டீயா? மிகப் பழைய விவாதத்துக்கு புதிய தகவல்கள்

உதுகளை விட மெல்லிய சுடுதண்ணி எப்பவும் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் இளம் சூட்டு நீரின் மகிமை பெரிது. முக்கியமாக குளிர் நாடுகளில் வாழும் மக்களுக்கு.

Link to comment
Share on other sites

13 hours ago, குமாரசாமி said:

உதுகளை விட மெல்லிய சுடுதண்ணி எப்பவும் நல்லது.

ஒரு மனிதன் சராசரி 300 மில்லி அளவுக்கு மூன்று முறை சுடு நீரை குடிக்கலாம் உங்கள் உடம்பில் உள்ள கழிவுகள் நச்சுக் கிருமிகளை அது சுத்தப்படுத்தும் சமிபாட்டுப் போக்கை சரி செய்யும் தேவையில்லாத கொழுப்புகளை கரைக்கும் உடல் உறுப்புகளை தூண்டும் இதனால் உடம்பு புத்துணர்ச்சி பெறும் சுடுதண்ணீர் அளவோடு அருந்தலாம்.

 

எப்பொருள் எந்த வைத்தியரிடம் கேட்பினும் அப்பொருளில்

அனுபவம் கண்டவரிடம் கேட்பதே அறிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நானும் எவ்வளவு வெக்கை என்டாலும் சுடு தண்ணீர் தான் குடிப்பது ...குளிர் பானங்கள் குளிராய் குடிக்க முடிந்த என்னால் தண்ணீரை குடிக்க முடியாது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பி தேனீரில் உள்ள கபீன் பலருக்கு ஒத்துக்கொள்வதில்ல. உடலில்  ஏற்iபடும் inflammation க்கு இது ஒரு முக்கிய காரணம். 

அனுபவஸ்தன் சொல்லுறன் கேட்டுக்கொள்ளுங்கோ...👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.