Jump to content

ஒரு பெயர் சொல்லுங்க - [உதவி]


Recommended Posts

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் ரதன்.

மலையாள உணவு என்பதால்

ஷகீலா சுவையகம்
ரேஷ்மா ருசியகம்

என்றும் வைக்கலாம்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செம்மீன் என்று வையுங்கள்..!

மலையாள வார்த்தை தான்…தமிழருக்கும் விளங்கும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2021 at 15:06, sivarathan1 said:

எல்லா பெயரும் நல்லா இருக்கு, நண்பரோட கதைச்சு என்ன பெயர் வைக்கிறன் எண்டு சொல்லுறன்,  தொடங்கினா பிறகு கட்டாயமா எல்லாரும் வாங்க, வந்து சாப்பிட்டு எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க,   

வந்து சாப்பிடுவதில் பிரச்சனையில்லை   யாழ் கள உறுப்பினர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா.  ?ஒரு நாள் இல்லை மாதக்கணக்கில் நிற்போம்  ஒவ்வொரு நாளும் நல்லாயிருக்கு...நல்லாயிருக்கு.....எனச்சொல்வோம்...😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

தனி சந்தர்ப்பம் கிடைத்தால் ஒன்றாக போய்ச் சாப்பிடுவம்.இப்ப நான் இலங்கையில் இல்லை.வந்தவுடன் தொடர்பு கொள்கிறேன்.இதெல்லாம் பாத்த பின்பும் அந்த மனுசன் கடை தொடங்குவார் என்று நம்புறீங்களா.😀

நான் சும்மா பகிடிக்காக போட்டது ஓ நாட்டை விட்டு போயாச்சா நல்லது சந்தர்ப்பம் கிடைத்தால் பார்ப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

மலையாள உணவு என்பதால்

ஷகீலா சுவையகம்
ரேஷ்மா ருசியகம்

என்றும் வைக்கலாம்

ஊசிப்போன பணியாரம் விக்கும் இடம் என்றல்லவா நினைக்கப்போகின்றார்கள்🙀

8 hours ago, புங்கையூரன் said:

செம்மீன் என்று வையுங்கள்..!

மலையாள வார்த்தை தான்…தமிழருக்கும் விளங்கும்..!

ஒன்லி 70ஸ் கிட்ஸுக்குத்தான் விளங்கும்😂

நமக்கு கடலின் அக்கரை போனோரே என்பதற்கு அங்கால் எதுவும் தெரியாது!

  • Haha 2
Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, MEERA said:

@sivarathan1  திறந்தாச்சா???

உருசிச்சட்டி...

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்து யூருப்பர்சுக்கு ஏன் இப்படி ஒரு பழக்கம்..நிறைய சாப்பாட்டை வாங்கி ஒருவரே உரிசி பார்த்துட்டு வைச்சால் மிகுதி எல்லாம் வீணாக போவதா..ஊரிலயே இன்னும் ஒருவேளை கூட உண்ண இயலாது இருக்கும் மக்களையும் யோசிங்கோ...தவறாக சொல்ல வர இல்லை.அவதானித்த விடையம்....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உருசிச்சட்டி...

 

காணொளியில் அடிக்கடி…. நாச்சியார் வீடு என்று சொல்கிறார். அது தவறு.
முற்றத்தில் நான்கு கூரைகளும் சார்ந்து இருப்பதை, நாற்சார் வீடு என்பார்கள்.

Edited by தமிழ் சிறி
  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த "வேறை லெவெல்.. வேறை லெவெல்.." அப்படீனு சொல்றீங்களே..? 😲

அப்படீனா எந்த "லெவெல்"..? 🤔

ஒரு இருபது அடி 'லெவெல்' இருக்குமா?

சரியாக விளக்கினால், நாங்களும் அந்த "லெவெல்"லை அறிந்துகொள்வோம், ப்ளீஸ்..! 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, யாயினி said:

யாழ்பாணத்து யூருப்பர்சுக்கு ஏன் இப்படி ஒரு பழக்கம்..நிறைய சாப்பாட்டை வாங்கி ஒருவரே உரிசி பார்த்துட்டு வைச்சால் மிகுதி எல்லாம் வீணாக போவதா..ஊரிலயே இன்னும் ஒருவேளை கூட உண்ண இயலாது இருக்கும் மக்களையும் யோசிங்கோ...தவறாக சொல்ல வர இல்லை.அவதானித்த விடையம்....

 எனக்கு அந்த யூரியூப்பர் சாப்பிடும் முறையை பார்க்க,
அருவருப்பாக உள்ளதால் காணொளி பார்ப்பதை… இடையில் நிறுத்தி விட்டேன்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

 எனக்கு அந்த யூரியூப்பர் சாப்பிடும் முறையை பார்க்க,
அருவருப்பாக உள்ளதால் காணொளி பார்ப்பதை… இடையில் நிறுத்தி விட்டேன்.

திரிக்கு சம்பந்தமில்லையென்றாலும் ஒரு விடயத்தை இங்கே சொல்ல விழைகிறேன்.

பெரும்பாலும் சரியாக முகச்சவரம் செய்யாமல், இந்த தாடி வைத்த ஆட்களை பார்த்தாலே ஒரு அருவருப்பு உண்டு. 😂

எனது அலுவலகத்திற்கு வேலை தேடி வரும் 'சுய விவரணை'களில்(CVs) இம்மாதிரி தாடி வைத்த அல்லது எந்த ஸ்டைலில் தாடி(eg: French Beard etc) வைத்திருந்தாலும், முதல் சோதனையிலேயே கழித்து கட்டி ஒதுக்கிவிடுவோம் (உள்ளூர் இஸ்லாமியர்களை தவிர்த்து). சுயவிவரணைகள் அடுத்த கட்டத்திற்கே செல்லாது. 🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ராசவன்னியன் said:

இந்த "வேறை லெவெல்.. வேறை லெவெல்.." அப்படீனு சொல்றீங்களே..? 😲

அப்படீனா எந்த "லெவெல்"..? 🤔

ஒரு இருபது அடி 'லெவெல்' இருக்குமா?

சரியாக விளக்கினால், நாங்களும் அந்த "லெவெல்"லை அறிந்துகொள்வோம், ப்ளீஸ்..! 🙏

ராஜ வன்னியன்…. வேறை லெவல் என்றால்,
எதிர் பார்த்து போன சுவையை விட… அதிக சுவையாக உள்ளது என அர்த்தம்.
இருக்கிற லெவலை விட…. ஒரு ப(அ)டி மேலே… 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ராஜ வன்னியன்…. வேறை லெவல் என்றால்,
எதிர் பார்த்து போன சுவையை விட… அதிக சுவையாக உள்ளது என அர்த்தம்.
இருக்கிற லெவலை விட…. ஒரு ப(அ)டி மேலே… 🤣

அதற்கு "சுவை ரொம்ப நன்றாக இருக்கு..!" என சொல்லிவிட்டு செல்லலாமே! அதென்ன "வேறை லெவெல், புண்ணாக்கு லெவெல்"னு..? 😡 😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ராசவன்னியன் said:

திரிக்கு சம்பந்தமில்லையென்றாலும் ஒரு விடயத்தை இங்கே சொல்ல விழைகிறேன்.

பெரும்பாலும் சரியாக முகச்சவரம் செய்யாமல், இந்த தாடி வைத்த ஆட்களை பார்த்தாலே ஒரு அருவருப்பு உண்டு. 😂

எனது அலுவலகத்திற்கு வேலை தேடி வரும் 'சுய விவரணை'களில்(CVs) இம்மாதிரி தாடி வைத்த அல்லது எந்த ஸ்டைலில் தாடி(eg: French Beard etc) வைத்திருந்தாலும், முதல் சோதனையிலேயே கழித்து கட்டி ஒதுக்கிவிடுவோம் (உள்ளூர் இஸ்லாமியர்களை தவிர்த்து). சுயவிவரணைகள் அடுத்த கட்டத்திற்கே செல்லாது. 🤗

அவர் சாப்பிடும் போது…. தாடியிலும், சில உணவுப் பண்டங்கள் தொங்கிக் கொண்டிருந்தது அருவருப்பின் உச்சம்.
இப்படியான வேலைகளுக்கு, தாடியை… ஷேவ் எடுத்து விட்டுப் போவது,
பார்ப்பவர்களுக்கு  சந்தோசமாக இருக்கும். 
முக்கியமாக உணவு விடயங்களில்…. தாடிக்காரரை தூர வைத்திருப்பது நல்லது.  😊

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை முதல்முறையாக பார்க்கும்போதே தோற்றத்தால் அல்லது ஏதோ ஒருவகையில் நம்மளை கவர்ந்துவிட வேண்டும். (First Impression is the best impression)

காணொளியில் வருபவரை தவிர்த்து, சுட்டியினால் காணொளியை தள்ளி சிலநொடிகள்தான் பார்த்தேன்.. இந்த "வேறை லெவெல்" என்றதுமே காணொளியை மூடிவிட்டேன்..!😊

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவரதன் பெயர் கெடுமாக இருந்தால் கரிச்சட்டி என பெயர மாத்திடுவாங்கள் 

மேலே கள உறவுகள் சொன்ன விடயங்களை கவனத்தில் கொள்ளவும் .  வியாபாரம் சிறக்கட்டும் வாழ்த்துக்கள்

3 minutes ago, ராசவன்னியன் said:

ஒருவரை முதல்முறையாக பார்க்கும்போதே தோற்றத்தால் அல்லது ஏதோ ஒருவகையில் நம்மளை கவர்ந்துவிட வேண்டும். (First Impression is the best impression)

காணொளியில் வருபவரை தவிர்த்து, சுட்டியினால் காணொளியை தள்ளி சிலநொடிகள்தான் பார்த்தேன்.. இந்த "வேறை லெவெல்" என்றதுமே காணொளியை மூடிவிட்டேன்..!😊

 

கோபம் வேண்டாம் இப்ப வந்து இங்க மெட்றாஸ் தமிழ் பேச தொடங்கிட்டாங்கள் அதனால் மன்னித்து அருள்க ராச வன்னியர் ஐயா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

ஒருவரை முதல்முறையாக பார்க்கும்போதே தோற்றத்தால் அல்லது ஏதோ ஒருவகையில் நம்மளை கவர்ந்துவிட வேண்டும். (First Impression is the best impression)

காணொளியில் வருபவரை தவிர்த்து, சுட்டியினால் காணொளியை தள்ளி சிலநொடிகள்தான் பார்த்தேன்.. இந்த "வேறை லெவெல்" என்றதுமே காணொளியை மூடிவிட்டேன்..!😊

 

நாங்கள் ஊரில் இருந்த காலங்களில்… “வேறை லெவல்” என்ற சொல் பாவனையில் இல்லை.
இப்போ அங்குள்ள இளையவர்கள் இதனை பொதுவாக பல இடங்களில் பாவிக்கின்றார்கள்.

எமது காலத்தில்…. அந்த மாதிரி இருக்கு, என்று சொல்வோம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

..கோபம் வேண்டாம் இப்ப வந்து இங்க மெட்றாஸ் தமிழ் பேச தொடங்கிட்டாங்கள் அதனால் மன்னித்து அருள்க ராச வன்னியர் ஐயா 

நாங்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு தமிழை சுத்தமாக, அதிலும் வெகு சரளமாக பேசுபவர்கள் ஈழத்தமிழர்கள்..!

அதில் கலப்படம் செய்து ஈழத்தவர்கள் பேசுவது, சுத்தமாக சகிக்கவில்லை, மனம் பொறுக்கவும் இல்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

நாங்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு தமிழை சுத்தமாக, அதிலும் வெகு சரளமாக பேசுபவர்கள் ஈழத்தமிழர்கள்..!

அதில் கலப்படம் செய்து ஈழத்தவர்கள் பேசுவது, சுத்தமாக சகிக்கவில்லை, மனம் பொறுக்கவும் இல்லை.

தற்போது அதிகமானவர்கள் இங்கு பேசும் ஆங்கிலத்தை சேர்த்து  பேசத்தொடங்கி விட்டார்கள் இனி வரும் காலங்களில் நீங்கள் சொன்ன சுத்த தமிழை கேட் க முடியாது அவை அனைத்தும் பெரியவர்கள் , முதியவர்களுடன்  சென்றுவிடும் 

ஆனாலும் எங்கள் பகுதிகளிலும் இளம் தலைமுறை சினிமா பேச்சையே பேசிக்கொள்கிறார்கள் அது முகநூலிலும் , வட்ஸ் அப்களிலும்  என்ன மச்சான் என்று கூப்பிட்டது கூட இப்ப என்ன bro  என்றே கூப்பிடுகிறார்கள்

  • Thanks 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

நாங்கள் ஊரில் இருந்த காலங்களில்… “வேறை லெவல்” என்ற சொல் பாவனையில் இல்லை.
இப்போ அங்குள்ள இளையவர்கள் இதனை பொதுவாக பல இடங்களில் பாவிக்கின்றார்கள்.

எமது காலத்தில்…. அந்த மாதிரி இருக்கு, என்று சொல்வோம். 😁

இந்த சொல்லாடல்கள் எல்லாம் 90களின் பிற் பகுதயில் பிறந்தவர்களாலயே பேசப்படும் வார்த்தைகளாக காணப்படுகிற்து..'சட்டப்படி' இருக்கிறது என்றும் பேச்சு வழக்கில் இப்போ சொல்கிறார்கள்...இந்த வார்த்தையும் நாம் ஊரில் இருந்த காலத்தில் பேசப்பட வில்லைதானே அண்ண..

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

 எனக்கு அந்த யூரியூப்பர் சாப்பிடும் முறையை பார்க்க,
அருவருப்பாக உள்ளதால் காணொளி பார்ப்பதை… இடையில் நிறுத்தி விட்டேன்.

எனக்கென்னாவோ அவர்   சாப்பிடுவதை பார்க்க நானும் சாப்பிட வேண்டும் போல இருக்கின்றது
ம்ம்ம்( lecker)  (நாவுறுகின்றது ) 

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் உருசிசட்டி உணவகத்திற்கு சென்று உணவு உட்கொண்டேன். 

சிவரதன் தனது உணவகம் என்று குறிப்பிட்டமையால் அத்துடன் குத்து மதிப்பாக அதன் அமைவிடம் தெரிந்தமையால் ஒரு ஊகத்தில் அங்கு சென்றேன் வேறோர் இடம் செல்லும் வழியில். 

முன்னேற்றத்துக்கு நிறைய இடம் உண்டு. குறிப்பாக சுத்தம், நல்லதொரு சூழலை உருவாக்க்குதலில் கவனம் தேவை. உணவு பிழை இல்லை. மண் கோப்பையில் சாப்பிட்டோம். மண் சட்டியில் பரிமாறினார்கள். அதிகம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பிரசன்னம் காணப்பட்டது. 

நான் சென்ற தினம் சிவரதனின் தந்தை 31ம் நாள் நினைவு என்று கடையில் நின்ற ஒருவர் சொன்னார். இதனால் சிவரதன் கடையில் இல்லை. சிவரதனின் தந்தை இழப்பை பற்றி அறிய துயரம் ஏற்பட்டது. 

தொடர்ந்து முயற்சி செய்து முன்னேற எனது வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.