Jump to content

சீன தூதருடனான சந்திப்பிற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பு: தடுமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான சீன தூதரை, தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பதென எடுத்த முடிவால் இந்தியா கடுமையான அதிருப்தியடைந்துள்ளது. இந்தியா தனது கடுமையான அதிருப்தியை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் நேரில் தெரிவித்ததை தமிழ்பக்கம் அறிந்தது.

கூட்டமைப்பின் சார்பில் முடிவுகளை எடுக்கவல்ல இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கிய ஒரு பிரமுகர், தான் இந்த விவகாரம் குறித்து இந்திய தூதரகத்திற்கு விளக்கமளித்ததாக தமிழ்பக்கத்திடம் குறிப்பிட்டார்.

எனினும், அந்த விளக்கத்தினால் இந்திய திருப்தியடையவில்லை, தனது அதிருப்தியை நேரில் தெரிவித்தது என்பதை தமிழ்பக்கம் அறிந்தது.

இலங்கை அரசின் மீது இந்திய, அமெரிக்க பிடி இறுகி வரும் நிலையில், அந்த தரப்பை சமரசப்படுத்த, சீனா தொடர்பான சில எதிர்மறையான முடிவுகளை இலங்கை அரசு அண்மையில் எடுத்தது. இதனால் அதிருப்தியடைந்துள்ள சீனா, ஒரு அரசியல் நகர்வாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்தும் முயற்சியை ஆரம்பித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவுடன் பேச்சு நடத்த விரும்பவதாக, இலங்கையிலுள்ள சீன தூதரகம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தகவல் அனுப்பியது. சில நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் தொடர்பு கொண்டு, தமது விருப்பத்தை தெரிவித்து, சந்திப்பிற்கு அழைப்பு விடுத்தது.

முதலாவது சந்தர்ப்பத்திலேயே அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்திப்பிற்கு செல்வதை இந்தியா இரசிக்காது என்பதால், இரா.சம்பந்தன் மாத்திரம் சந்தித்து பேசுவதென கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

எனினும், இந்த சந்திப்பை இந்தியா விரும்பவில்லை.

தமது அதிருப்தியை, கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் நேரடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தெரியப்படுத்தியுள்ளது.

முன்னதாக, இந்திய தூதரை சந்திப்பதற்கு முன்பாக சீன தூதரை சந்திக்க கூட்டமைப்பு திட்டமிட்டிருந்தது. எனினும், இந்தியாவின் அதிருப்தியையடுத்து, சீன தூதரை சந்திப்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் குழப்பமான நிலைமை தோன்றியுள்ளது.

https://pagetamil.com/2021/11/11/சீன-தூதருடனான-சந்திப்பிற/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

கூட்டமைப்பின் சார்பில் முடிவுகளை எடுக்கவல்ல இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கிய ஒரு பிரமுகர், தான் இந்த விவகாரம் குறித்து இந்திய தூதரகத்திற்கு விளக்கமளித்ததாக தமிழ்பக்கத்திடம் குறிப்பிட்டார்.

 யாராயிருக்கும்? ஹீ...... ஹீ....... தமிழர் மீதான அக்கறையல்ல, அவர்களை பகடைக்காய்களாக பந்தாடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவுடன் பேச்சு நடத்த விரும்பவதாக, இலங்கையிலுள்ள சீன தூதரகம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தகவல் அனுப்பியது. சில நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் தொடர்பு கொண்டு, தமது விருப்பத்தை தெரிவித்து, சந்திப்பிற்கு அழைப்பு விடுத்தது.

எதோ சுத்து மாத்து  அரசியல் நடக்கபோகுது பணத்தை கண்டால் பல்லிளிக்கும் எமது முக்கிய அரசியல்வாதி தமிழரை விக்க இப்போ ரெடியாகி இருப்பார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும் அதன் RAW வும் அவருக்கு எதிராக களமிறங்கி வேலை செய்யும் போது இவருக்கு ஏன் இந்த கோள் சொல்லுற வேலை?

2 minutes ago, பெருமாள் said:

எதோ சுத்து மாத்து  அரசியல் நடக்கபோகுது பணத்தை கண்டால் பல்லிளிக்கும் எமது முக்கிய அரசியல்வாதி தமிழரை விக்க இப்போ ரெடியாகி இருப்பார் .

ஆட்டுப்பட்டிக்குள் ஓநாயையும் அடைத்து விட்டு ஐயோ ஆடுகளை காணவில்லை என்று ஒப்பாரி வைப்பதால் பயனென்ன? இவரை நாம் ஒதுக்கினாலும் சிங்களத்தின், சம்பந்தரின் ஆசீரோடு இன்னும் பல சுமந்திரன்கள் உருவாக்கபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2021 at 06:58, satan said:

இந்தியாவும் அதன் RAW வும் அவருக்கு எதிராக களமிறங்கி வேலை செய்யும் போது இவருக்கு ஏன் இந்த கோள் சொல்லுற வேலை?

ஆட்டுப்பட்டிக்குள் ஓநாயையும் அடைத்து விட்டு ஐயோ ஆடுகளை காணவில்லை என்று ஒப்பாரி வைப்பதால் பயனென்ன? இவரை நாம் ஒதுக்கினாலும் சிங்களத்தின், சம்பந்தரின் ஆசீரோடு இன்னும் பல சுமந்திரன்கள் உருவாக்கபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 கருணா பிள்ளையான் டக்ளஸ் தேவானந்தா அவர்களை விட சுமந்திரன் பரவாயில்லை தானே சார்😉😉😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சன நாயக நாட்டில் யார் யாரையும் சந்திக்க உரிமை உள்ளது.

அவயளிடம் கையூட்டு, கொடுப்பனவு பெறாமல் இருந்தால் பயம் ஏன்.? 

IMG-20211115-122300.jpg

முக்காடு போட்டாவது என்னதான் கதைக்கினம் கேட்டு வாங்கப்பா.👍

டிஸ்கி

மீம் மட்டும் அல்ல அதோடு கருத்தும் எழுதி உள்ளேன்..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி சீனாவை அணுகும் ஒரு நகர்வை தமிழர் தரப்பு செய்ய வேண்டும் என யாழில் பல உறவுகள் எழுதி வந்துள்ளனர்.

அப்படி ஒரு வாய்ப்பை இதுவரை சீனா தரவில்லை என நான் பதில் எழுதி வந்துள்ளேன்.

இப்போ தந்துள்ளதாக தெரிகிறது (செய்தி உண்மையானால்).

இந்தியாவை பகைக்காமல் அதே வேளை சீனாவுடன் தொடர்பை ஏற்படுத்தும் நகர்வை மேற்கொள்ளும் வேலையை செய்யும் திறன் கூட்டமைப்பிடம் இருப்பதாக தெரியவில்லை.

ஆனால் இந்திய/மேற்கு சார்பு நிலையை கூட்டமைப்பும், சீனா சார்பு நிலையை முண்ணனியும் எடுக்கலாம். அப்படி எடுத்தால், இந்தியா ஒரு அளவுக்கு மேல் கூட்டமைப்பை மிரட்ட முடியாது போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

இப்படி சீனாவை அணுகும் ஒரு நகர்வை தமிழர் தரப்பு செய்ய வேண்டும் என யாழில் பல உறவுகள் எழுதி வந்துள்ளனர்.

அப்படி ஒரு வாய்ப்பை இதுவரை சீனா தரவில்லை என நான் பதில் எழுதி வந்துள்ளேன்.

இப்போ தந்துள்ளதாக தெரிகிறது (செய்தி உண்மையானால்).

இந்தியாவை பகைக்காமல் அதே வேளை சீனாவுடன் தொடர்பை ஏற்படுத்தும் நகர்வை மேற்கொள்ளும் வேலையை செய்யும் திறன் கூட்டமைப்பிடம் இருப்பதாக தெரியவில்லை.

ஆனால் இந்திய/மேற்கு சார்பு நிலையை கூட்டமைப்பும், சீனா சார்பு நிலையை முண்ணனியும் எடுக்கலாம். அப்படி எடுத்தால், இந்தியா ஒரு அளவுக்கு மேல் கூட்டமைப்பை மிரட்ட முடியாது போகும்.

இந்தியா கூட்டமைப்பை மிரட்டாது மாறாக 13ஐ ஆதரிக்கிறோம் வடகிழக்கை இணைகிறோம் என மீண்டும் ஒரு பழைய சோத்து கோப்பையை சுமந்திரரிடமும் சம்பந்தரிடம் போட்டுக் கொடுக்கும் போது கூட்டமைப்பு இந்தியா பக்கம் செக்கை இழுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்தியா கூட்டமைப்பை மிரட்டாது மாறாக 13ஐ ஆதரிக்கிறோம் வடகிழக்கை இணைகிறோம் என மீண்டும் ஒரு பழைய சோத்து கோப்பையை சுமந்திரரிடமும் சம்பந்தரிடம் போட்டுக் கொடுக்கும் போது கூட்டமைப்பு இந்தியா பக்கம் செக்கை இழுக்கும்.

அப்படியே நடந்தாலும்.

அந்த நேரத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இணைந்த வடகிழக்கில் ஒரு சமஸ்டி அரசை தருவது பற்றி சீனாவுடன் பேசி கொண்டிருந்தால் - கூட்டமைபுக்கு கொடுக்க வேண்டியதை கூட்ட வேண்டிய தேவை இந்தியாவுக்கு வரும் இல்லையா?

இல்லாவிடில் மக்கள் இந்தியாவையும், கூட்டமைப்பையும் உதறி விட்டு முண்ணனி/சீனா பக்கம் போய் விடுவார்கள் என்ற பயம் இருக்கும்.

ஆனால் சம்மந்தனும், சுமந்திரனும், சாணக்கியனும் கோமாளித்தனமாயாவது ஏதோ செய்கிறார்கள், எம் பி ஆகி ஒரு உரை, அதுக்கு பிறகு கஜன் சத்தமே இல்லை.

கூட்டமைப்பை கேள்வி கேட்கும் நாமும் முண்ணனியின் செயலற்றதன்மை பற்றி ஒரு கேள்வியும் கேட்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீரைக்கடைக்கும் எதிர்கடை இருந்தால் தான் பயனர்களுக்கு நல்லது.

வல்லரசுகள் ஆட்டத்தில் சிக்கி, சின்னாபின்னமாகாமல்..... லாவகமா வெட்டி ஆடும் திறமை, அனுபவத்தில் வந்திருக்க வேண்டும்... என்று எதிர்பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஏராளன் said:

இந்த செய்தி உண்மையோ தெரியவில்லை?

ஆமாம்  எனக்கும் அந்த சந்தேகம் உண்டு இருந்தாலும் இலவசமாக பல விடயங்களை கற்றுக்கொள்கிறோம்  மேலும் எவருடன்  கதைத்தாலும்....

ஆயுதப்போராட்ட வழியோ அல்லது அகிம்சைப்போர் வழியோ   எவ்வளவு ஆற்றலுடன். போராடினாலும்  இலங்கையில் தமிழினம் இருக்கும்போது தீர்வு கிடைக்கப்போவதில்லை   இலங்கையில் தமிழருக்கு தீர்வு வேண்டுமாயின் ஒரேயொருவழி. பெருன்பான்மை இனமாக மாறுவதே  அப்படி மாறினால் போராடவேண்டிய அவசியமில்லை இந்தியா போன்ற. நாடுகளின். உதவியும்  தேவையில்லை ...மாறுவார்களா....?.மாறமுடியுமா.....?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி உண்மையானால், சீன தூதுவரை சந்திப்பது நல்லது. எமக்குரிய புதிய பாதை திறக்க வாய்ப்புள்ளது.கடைசியாக எப்போது இந்திய கூட்டமைப்பை டெல்லிக்கு கூப்பிட்டு கதைத்தவை என்று யாருக்கும் ஞாபகம் இருக்கிறதா? வெளியாரின் அரசியல் பொருளாதார  பூகோள நலனில்தான் எமக்கான தீர்வு தங்கி உள்ளது, இது மறுக்க முடியாத உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அப்படியே நடந்தாலும்.

அந்த நேரத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இணைந்த வடகிழக்கில் ஒரு சமஸ்டி அரசை தருவது பற்றி சீனாவுடன் பேசி கொண்டிருந்தால் - கூட்டமைபுக்கு கொடுக்க வேண்டியதை கூட்ட வேண்டிய தேவை இந்தியாவுக்கு வரும் இல்லையா?

இல்லாவிடில் மக்கள் இந்தியாவையும், கூட்டமைப்பையும் உதறி விட்டு முண்ணனி/சீனா பக்கம் போய் விடுவார்கள் என்ற பயம் இருக்கும்.

ஆனால் சம்மந்தனும், சுமந்திரனும், சாணக்கியனும் கோமாளித்தனமாயாவது ஏதோ செய்கிறார்கள், எம் பி ஆகி ஒரு உரை, அதுக்கு பிறகு கஜன் சத்தமே இல்லை.

கூட்டமைப்பை கேள்வி கேட்கும் நாமும் முண்ணனியின் செயலற்றதன்மை பற்றி ஒரு கேள்வியும் கேட்பதில்லை.

எமக்குள்  அரசியல் கொள்கை வேறுபாடுகளை தவிர்த்து இன ரீதியான ஒற்றுமை அவசியம்.

எமது தமிழ் அரசியல்வாதிகளை ஒரே வரிசையில் இருக்க வைக்க பிரம்புடன் ஒரு சட்டாம்பியர் அவசியம் தேவை....இல்லையேல் கடிவாளம் இல்லாத குதிரைகள் தான் அவர்கள்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எமக்குள்  அரசியல் கொள்கை வேறுபாடுகளை தவிர்த்து இன ரீதியான ஒற்றுமை அவசியம்.

எமது தமிழ் அரசியல்வாதிகளை ஒரே வரிசையில் இருக்க வைக்க பிரம்புடன் ஒரு சட்டாம்பியர் அவசியம் தேவை....இல்லையேல் கடிவாளம் இல்லாத குதிரைகள் தான் அவர்கள்.😁

கஜன், கஜேந்திரன் கோஸ்டி, சீனாவோட மினக்கெட, கூட்டமைப்பு, இந்தியா, மேற்கு எண்டு பூந்து வெளாட வேணும்....

Link to comment
Share on other sites

இச்செய்தியில் எவ்வளவு உண்மை உள்ளது என தெரியவில்லை. சீனா இந்த விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை.
கூட்டமைப்பை ஒரு காலத்தில் தட்டிக்கழித்த இந்தியா இப்போ சீனாவிடன் பேச வேண்டாம் என்பது……
ஆனால் சீனாவுடன் பேசினால் இந்தியாவின் கொட்டம் சிறிதளவாவது அடங்கும்.
 பணத்துக்கு அடிமையாகாமல் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இதய சுத்தியுடன் செயற்படுவார்களா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

பணத்துக்கு அடிமையாகாமல் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இதய சுத்தியுடன் செயற்படுவார்களா???

இதை சொன்னால் பலருக்கு கோபம் வந்து குதிக்கினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா உண்மையில் இப்படி ஒரு அழைப்பை விடுத்திருப்பின் சீனாவோடு பேசுவதற்கு தயங்கக் கூடாது. அதை தமிழர்கள் பூகோள கேந்திர சக்திகளை தம் வசப்படுத்த பாவிக்க முடியும். 

வெறுமனவே ஹிந்தியாவை நம்பி விடுதலைப்புலிகளை அழிக்க உதவிய சம் கும்பல்.. அதன் பிராச்சித்தமாக இதனை செய்யலாம். ஏனெனில்.. புலிகளை அழித்தால் 13+ வாங்கித் தருவோம் என்ற ஹிந்தியா.. உப்புச் சப்பற்ற ஒரு மாகாண சபை தேர்தலைக் கூட நடத்த சொறீலங்காவுக்கு அழுத்தம்  கொடுக்கக் கூட வக்கற்ற நிலையில் இருக்கும் நிலையில்..

தமிழர்கள் தொடர்ந்தும்.. ஹிந்தியாவின் வாயை பார்த்து ஏமாந்து கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

தமிழர்கள் சீனாவை நெருங்குவது.. ஹிந்தியா.. மேற்குலகு தமிழர்களுக்கு ஏதாவது செய்தால் தான் அவர்களை தம் பக்கம் தக்க வைக்க முடியும் என்று சிந்திக்க செய்ய வேண்டும். மாறாக தமிழர்களை தட்டிக்கழிச்சு செல்லும் தற்போதைய இவர்களின் அணுகுமுறைக்கு முடிவு கட்ட சீன - தமிழர்கள் உறவை பாவிக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/11/2021 at 12:59, Nathamuni said:

கஜன், கஜேந்திரன் கோஸ்டி, சீனாவோட மினக்கெட, கூட்டமைப்பு, இந்தியா, மேற்கு எண்டு பூந்து வெளாட வேணும்....

என்னதான் இவர்கள் குத்தி முறிஞ்சாலும் உலக அரசியல் செய்ய முடியாமல் இருக்கின்றார்கள் என்பது தெளிவாகத்தெரிகின்றது.

Link to comment
Share on other sites

On 15/11/2021 at 03:59, Nathamuni said:

கஜன், கஜேந்திரன் கோஸ்டி, சீனாவோட மினக்கெட,

 

On 15/11/2021 at 00:50, goshan_che said:

, எம் பி ஆகி ஒரு உரை, அதுக்கு பிறகு கஜன் சத்தமே இல்லை.

 

On 15/11/2021 at 02:47, குமாரசாமி said:

எமது தமிழ் அரசியல்வாதிகளை ஒரே வரிசையில் இருக்க வைக்க பிரம்புடன் ஒரு சட்டாம்பியர் அவசியம் தேவை....இல்லையேல் கடிவாளம் இல்லாத குதிரைகள் தான் அவர்கள்.😁

நீங்க பிரம்பு தந்தால் நான் சட்டாம்பி வேலை செய்யத்தயார் 😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/11/2021 at 19:37, Kandiah57 said:

  இலங்கையில் தமிழருக்கு தீர்வு வேண்டுமாயின் ஒரேயொருவழி. பெருன்பான்மை இனமாக மாறுவதே  அப்படி மாறினால் போராடவேண்டிய அவசியமில்லை இந்தியா போன்ற. நாடுகளின். உதவியும்  தேவையில்லை ...மாறுவார்களா....?.மாறமுடியுமா.....?

 

 

இரு கோடுகள் கான்செப்ட்டைச் சொல்கிறீர்களா  ...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதையெல்லாம் வாசிக்கும்போது சிரித்து சிரித்து  புரையேறி மேலேயே போய்விடுவோம் போல கிடக்கு. O/L பாஸ் பண்ணவே வக்கில்லாதவனை Harvard fullbright scholar ஆக்க முக்குவது போல் முக்குறினம் நமது உறவுகள். முதலில் பானையில் இருக்கவேண்டும் அகப்பையில் வருவதற்கு, வாத்தியார் பய மக்கு என்பதை போல இன்டர்நஷனல் பாலிடிக்ஸ் அடிநாதம் வரை துருவிப்போய் தூர் வாரி அலசோ அலசு என்று அலசுவதாலோ என்னவோ சொந்த அரசியல்வாதிகள் பூரா மக்குபிளாஸ்திரிகளும் proxy போக்கிரிகளுமாக வாய்த்திருக்கிறது ஈழ தமிழர்களுக்கு    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சாமானியன் said:

இரு கோடுகள் கான்செப்ட்டைச் சொல்கிறீர்களா  ...??

தமிழ் மக்களை விட சிங்கள மக்கள் எண்ணிக்கையில் கூட இதனால் தான் அவர்கள் ஆள்கிறார்கள் நாங்களும் எண்ணிக்கையில் கூடும் போது ஆட்சி புரியும் சந்தர்ப்பம் எமக்கும் கிடைக்கலாம் இதுவரை நடந்த பேச்சுவார்த்தை....போராட்டங்கள்....இருந்து நாங்கள் தெரிந்து கொண்டிருக்கிறோம்  இலங்கையில் தமிழர்களுக்குத் பூரண சுயாட்சி கிடைப்பதை   இந்தியா விரும்பாது. நாங்கள் பாராளுமன்றத்தில் எங்கள் பலத்தை அதிகரித்து  செல்லும் போது   சிங்களவரே   வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி தரும் வாய்ப்பு உண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kandiah57 said:

தமிழ் மக்களை விட சிங்கள மக்கள் எண்ணிக்கையில் கூட இதனால் தான் அவர்கள் ஆள்கிறார்கள் நாங்களும் எண்ணிக்கையில் கூடும் போது ஆட்சி புரியும் சந்தர்ப்பம் எமக்கும் கிடைக்கலாம்  நாங்கள் பாராளுமன்றத்தில் எங்கள் பலத்தை அதிகரித்து  செல்லும் போது   சிங்களவரே   வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி தரும் வாய்ப்பு உண்டு 

நாங்கள் பத்து மடங்கு பாய்ந்தால், ஏற்கெனவே நூறு மடங்கில் இருப்பவர்கள் சும்மா இருப்பார்களா? தவிரவும் இருக்கிற எமது விகிதாசாரத்தை மாற்றியமைக்க நாளும் பொழுதும் சட்டங்களும், திட்டங்களும் போட்டு இ எமது தொகையையே விழுங்கிக்கொண்டு இருக்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/11/2021 at 11:20, satan said:

நாங்கள் பத்து மடங்கு பாய்ந்தால், ஏற்கெனவே நூறு மடங்கில் இருப்பவர்கள் சும்மா இருப்பார்களா? தவிரவும் இருக்கிற எமது விகிதாசாரத்தை மாற்றியமைக்க நாளும் பொழுதும் சட்டங்களும், திட்டங்களும் போட்டு இ எமது தொகையையே விழுங்கிக்கொண்டு இருக்கிறான்.

நீங்கள் சொல்லும் தீர்வு என்ன....?அதை தமிழ் மக்கள் எப்படி அடைய முடியும்   ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.