Jump to content

கலியாணத்தன்று மழை - Dr. T. கோபிசங்கர்


Recommended Posts

கலியாணத்தன்று மழை  

“இரவில அட்டை கிட்டை ஏதும் ஏறி இருக்கும் , கழுவிப்போட்டு அரை “எண்டு அம்மா சொன்னா. அம்மியையும் குழவியையும் கழுவீட்டு தண்ணியை வளிச்சு ஒரு பக்கம் தள்ளி விட்டிட்டு தண்ணி ஒரு பக்கமா காஞ்சும் சில இடம் காயாமை இருக்கிறதையும் தள்ளித்தள்ளி விளையாடீட்டு தட்டையும் வாங்குப்பலகையையும் தூக்கிக் கொண்டு எல்லாம் இருக்கா எண்டு check பண்ணிக்கொண்டு போனன். போய் நிண்டு கொண்டு உப்பைக்கொண்டா புளியைக்கொண்டா எண்டா சாமான் வராது, “ என்ன ஆட்டத்துக்கு இப்ப சம்பல் அரைக்கப் போனீ “ எண்டு பேச்சுத் தான் விழும். 

வீடு கட்டேக்க குசினீக்குள்ள அம்மியை வைக்கிறேல்லை , கொஞ்சம் தள்ளி அதுகும் நிலத்தோடயோ இல்லாட்டி கட்டு ஒண்டு கட்டித் தான் அம்மியை வைக்கிறது . கிணத்தடி மாதிரி அம்மியடிக்கும் விளக்கீட்டுக்கு ஒரு பந்தம் வைக்கிறது வழக்கம் . ஊர் வழியவும் தனிக்க கொட்டிலுக்க தான் அம்மி , உரல் ஆட்டுக்கல் எல்லாம் இருக்கும். ஒதுக்கபட்ட வாழ்க்கை சில உயர்திணைக்கு மட்டுமில்லை அஃறினைக்கும் வைச்சது ஏனெண்டு தெரியாது. 

“அம்மி பொழியிறது… கத்தி சாணை “ எண்டு ரோட்டால கத்திக்கொண்டு போனவனைப் பிடிச்சு போன மாசம் தான் அம்மி பொழிஞ்சது. நடுவில பூ design போட்டு பொழிஞ்சு தந்தவன். பொழிஞ்ச அம்மியை ரெண்டு தரம் பழைய தேங்காய்ப்பூ வைச்சு அரைச்சு பொழிஞ்ச தூசு மண் எல்லாம் தேச்சு கழுவோணும் , இருந்தாலும் ரெண்டு நாளைக்கு மண் கடிபடும். 

அம்மியோட குழவியையும் சேத்துத் தான் பொழியிறது. சில குழவிகள் ரெண்டு பக்கமும் முனை மழுங்கி இருக்கும். மற்றதுகள் ஒரு பக்கம் முனை மழுங்கி மற்றப்பக்கம் வட்டமாயும் இருக்கும். குழவியை பிடிச்சு அம்மியின்டை நீளத்துக்கு இழுத்து அரைக்கேக்க ,முதல்ல முழங்கையை நீட்டி குழவியைத் தள்ளி பிறகு நாரியால முன்னுக்கு சரிய குழவியை இன்னும் கொஞ்சம் முன்னுக்கு போகும் . 

திருப்பி இழுக்கேக்க இறுக்காமலும் அதேவேளை உருளாமலும் மெல்ல குழவியைப் பிடிச்சி தோள்மூட்டால இழுத்து நாரியை நிமித்த குழவி திருப்பி வர “சம்பல் அரைக்கயில என் மனசை அரைச்சவளே” எண்ட இளையராஜா பாட்டு ஓடும். குழவியை உருட்டி உருட்டி அரைக்கிறேல்லை ஆனாலும் ஒவ்வொரு இழுவைக்கும் அது கொஞ்சம் கொஞ்சமாத் திரும்பும் நல்லூர் சப்பறம் மாதிரி.  

வாங்குப்பலகையில குந்திக்கொண்டிருந்து நனையப் போட்ட எட்டு பெரிய செத்த மிளகாயை நடுவில வைச்சு அதோட சிரட்டையில இருக்கிற கல்லு உப்பை சேத்து குழவியை ரெண்டு பக்கமும் பிடிச்சு சத்தம் வாற மாதிர கடகட எண்டு தட்டி மிளகாயை சப்பையாக்கீட்டு மிளகாய் ஊறப்போட்டிருந்த தண்ணீல கையை நனைச்சிட்டு அந்த நுனி விரலால சொட்டிற தண்ணியை அதுக்க மேல விட்டிட்டு நாலு உரிச்ச வெங்காயத்தை வைச்சு நசிச்சுக்கொண்டு இழுத்து அரைக்கத் தொடங்கினன்.

நாலு தரம் கொஞ்சம் இழுத்து அரைக்க மிளகாய் அருவல் நொருவலா வந்திச்சுது. குழவியால நசிக்கேக்க பறந்த வெங்காயத்தை தேடி எடுத்து தண்ணீல அலசீட்டு திருப்பியும் நசிச்சு கருவப்பலையையும் சேத்து அரைச்சு எல்லாம் கலந்து வர அதை எதிர்ப்பக்கமாத் தள்ளிப்போட்டு ,தட்டில இருக்கிற தேங்காய்ப்பூவை தும்பில்லாம எடுத்து நடு அம்மீல வைச்சு மிளகாயோட சேத்து ரெண்டு இழுத்தரைக்க செம்மை வெண்மையை ஆட்கொண்டது.

தேங்காய் பூவை சேத்து அரைக்கேக்க அம்மிக்கும் நோகாம தேங்காய்ப் பூவுக்கும் நோகாம அரைக்க வேணும், இல்லாட்டி சம்பல் குழையலாத்தான் வரும். கடைசீல கொட்டை எடுத்த ரெண்டு பழப்புளியை சேத்து அரைச்சிட்டு குழவி அம்மி எல்லாம் வழிச்சு தட்டில போட்டுக் கொண்டு எழும்ப அண்ணா ரோஸ் பாணோட உள்ள வர, “ அண்ணலும் நோக்க அவளும் நோக்கினாள்” சந்தர்ப்பம் கூறி விளக்குக எண்டு படிச்சது தான் ஞாபகம் வந்திச்சிது. 

ரொலக்ஸ் பேக்கரீல போடுற அச்சுப் பாண் , ரோஸ் பாண் ( அதுக்கு நீங்க இங்கலீசில என்ன பேர் வைச்சாலும் நமக்கு ரோஸ் பாண் தான்) வெந்து வாற மணம் காலமை alarm அடிச்ச மாதிரி எழுப்பும் . சம்பலை விட்டா பாணுக்கு பழைய மீன் குளம்பு தான் பேரின்ப பெரு வாழ்வைத்தரும். 

“ சீலையை வித்தாவது சீலா வாங்கு எண்டு சொல்லிறவை “ எண்ட மீன் பெட்டிக்காரன்டை கதையைக் கேட்டு , வாங்கிக்கொண்டு வந்து மீன் bag ஐ வீட்டை குடுத்தன். அரிவாளில செதில் சீவி , துண்டறுத்து பிறகு கழுவி எடுத்துக் கொண்டந்து மண்சட்டீல வைக்கிற மீன்குழம்பு அடுத்த நாள் காலமை வரைக்கும் demand இல இருக்கும் . குழம்பின்டை ருசி அரைச்சுப்போடிற தேங்காய் கூட்டில தான் இருக்கு. 

அம்மம்மா ஒரு காலை மடக்கி மற்றதை நீட்டி சுளகில பிடைக்கிற மாதிரி இருந்து தான் அரைப்பா. மீன் குழம்புக்கு கூட்டரைக்குறதில அவ expert. தேங்காயை அரைக்கேக்க மிளகாயத்தூள் உப்புச்சேத்து குழவியை இறுக்கிப் பிடிச்சு தேங்காய்ப்பூவை அமத்தி அரைக்கப் பட்டுப்போல கூட்டு வரும் . 

தேங்காய் அரைச்சு பிறகு மிளகு ,சின்னச்சீரகம் ,உள்ளி எல்லாம் சேத்து அதையும் அரைச்சு எடுத்து வைச்சிட்டுத்தான் குழம்பு வைக்கத் தொடங்கிறது . கப்பிப்பாலில புளிவிட்டு வெங்காயம் ,மிளகாய் உப்புப் போட்டு மண்சட்டீல விட்டு கொதிக்கத் தொடங்க கச்சேரி தொடங்கும் . முதல் கொதியோட மீனையும் அரைச்ச கூட்டையும் போட்டு கடைசீல சீரக உருண்டையைப் போட்டு கொதிக்க விட மீனின் ஆத்மா சாந்தி அடைஞ்சு குழம்போட ஐக்கியமாகும் . 

அவசரத்துக்கு அம்மி உரலாயும் திரிகையாயும் மாறும். கை உரல் வர முதல் ஏலக்காயில இருந்து இஞ்சிவரை நசிச்சோ குத்தியோ போடிறதெண்டா அம்மீல தான் . குழவியை வைச்சு தட்டுப் பெட்டீல பழைய பேப்பரைப் போட்டிட்டு பயறு , உழுந்து கோது உடைக்கிறதும் சில வேளை அம்மீல வைச்சு மாவும் அரைக்கிறது . 

சாமத்திய வீட்டில மொம்பிளைக்கு , குழவியை வைச்சுக்கொண்டு நிக்க விடுறதாம் எண்டு ஆச்சி சொல்லிறவ. ஆலாத்தி முடியும் வரை அதைத் தாங்கிக்கொண்டு நிண்டா நாளைக்கு எதையும் தாங்குவாளாம் எண்டதுக்குத்தான் அப்பிடி எண்டும் சொல்லிறவ. அது பிறகு குடமாகி , பிறகு செம்பாகி இப்ப Make up காரர் குடுக்கிற bouquet ஆக மாறீட்டுது. 

சாமத்தியம் தாண்டி கலியாணத்திலேம் அம்மிக்கு இடம் இருக்கு மிதி படுறதுக்கு . மச்சாளின்டை கலியாண வீடண்டு விடாம மழை பெய்யேக்க , மாமி வருண பகவானுக்கு நேந்து தேங்காய் உடைச்சு வைச்சிட்டு ,” அப்பவும் உனக்குச் சொன்னான் அம்மீல வைச்ச தேங்காய்ப் பூவை எடுத்துச் சாப்பிடாதை எண்டு இப்ப பார் மழை விடமாட்டன் எண்டிது “ எண்டு மச்சாளைப் பேச , அண்டைக்கு நானும் சம்பல் அரைக்கேக் சாப்பட்டதை நெச்சு கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினன் நல்ல வேளை மனிசி அம்மிப்பக்கம் போகாத படியா மழை பெய்யேல்லை.

 

Dr. T. கோபிசங்கர்

யாழ்ப்பாணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை எல்லா வீட்டிலயும் நடந்திருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பையன் (டாகடர் )இவ்வளவுக்கு   விளக்கமாக எழுதுவது ஆச்சரியமாக உள்ளது. சமையல் விடயத்தில் டிப்ளோமா எடுத்தவர் போல  அல்லது தாயுடன் அதிக நேரம் சமையலில் ஈடுபடடவர் போல இருக்கிறார். நல்ல அவதானி. இதை அவருக்கு சொல்லி விடவும். சமையலிலும் டாகடர் படடம் கொடுக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மியில் அரைப்பதுவும், ஆட்டுக்கல்லில் உளுந்து ஆட்டுவதும், உரலில் மூசி மூசி கை மாத்தி இருவர் மூவராக உலக்கை போடுவதும் எங்களின் பாரம்பரிய கலையாகும் ........அதைக் கண்டா கடைசித் தலைமுறையும் நாங்களே......!  👍

பகிர்வுக்கு நன்றி நிழலி .......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, suvy said:

அம்மியில் அரைப்பதுவும், ஆட்டுக்கல்லில் உளுந்து ஆட்டுவதும், உரலில் மூசி மூசி கை மாத்தி இருவர் மூவராக உலக்கை போடுவதும் எங்களின் பாரம்பரிய கலையாகும் ........அதைக் கண்டா கடைசித் தலைமுறையும் நாங்களே......!  👍

பகிர்வுக்கு நன்றி நிழலி .......!  

உடலுழைப்புக்கான சந்தர்ப்பங்களை நவீனங்களின் வரவால் நாம் இழந்து விட்டோம்.

Link to comment
Share on other sites

28 minutes ago, suvy said:

அம்மியில் அரைப்பதுவும், ஆட்டுக்கல்லில் உளுந்து ஆட்டுவதும், உரலில் மூசி மூசி கை மாத்தி இருவர் மூவராக உலக்கை போடுவதும் எங்களின் பாரம்பரிய கலையாகும் ........அதைக் கண்டா கடைசித் தலைமுறையும் நாங்களே......!  👍

பகிர்வுக்கு நன்றி நிழலி .......!  

இங்கு கனடாவில் அம்மியும்,கல்லும் விற்கின்றார்கள் சுவி அண்ணா. அடுத்த கோடையில் வாங்குவமா என்று யோசனை இருக்குது. ஆனால் வாங்கி வந்த குற்றத்திற்காக, என்னையே அம்மியில் வைத்து அரைத்து விடுவார்களோ என்ற பயமும் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இங்கு கனடாவில் அம்மியும்,கல்லும் விற்கின்றார்கள் சுவி அண்ணா. அடுத்த கோடையில் வாங்குவமா என்று யோசனை இருக்குது. ஆனால் வாங்கி வந்த குற்றத்திற்காக, என்னையே அம்மியில் வைத்து அரைத்து விடுவார்களோ என்ற பயமும் இருக்கு.

அது இங்கும் விக்கிது நிழலி .......இப்ப அதை வாங்கி பரிசளிப்பதும் ஒரு பேஷனாகிப் போச்சுது.....பொம்பிளைகளும் ரெண்டு நாளைக்கு வச்சு அரைப்பினம் பின்பு அது சாமான்கள் வைக்கிற தட்டுபோலத்தான் பயன்படும்........!   😂

 

கட்டாயம் உங்களுக்கு தேவையென்றால் ஒரு டெக்னிக் இருக்குது கேட்டால் சொல்லுறன்.....அது எனக்கு ஒரு விடயத்தில் பயனளிச்சது .....! 

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

கட்டாயம் உங்களுக்கு தேவையென்றால் ஒரு டெக்னிக் இருக்குது கேட்டால் சொல்லுறன்.....அது எனக்கு ஒரு விடயத்தில் பயனளிச்சது .....! 

அந்த டெக்னிக்கை எங்களுக்கு சொல்லித் தாருங்கள் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

அம்மியில் அரைப்பதுவும், ஆட்டுக்கல்லில் உளுந்து ஆட்டுவதும், உரலில் மூசி மூசி கை மாத்தி இருவர் மூவராக உலக்கை போடுவதும் எங்களின் பாரம்பரிய கலையாகும் ........அதைக் கண்டா கடைசித் தலைமுறையும் நாங்களே......!  👍

பகிர்வுக்கு நன்றி நிழலி .......!  

நிழலியவர்களே, இணைப்புக்கு நன்றி. உண்மை சுவியவர்களே, எமது வாழ்வியலின் ஒவ்வொரு விடயங்களும் மனிதனது உடல் நலனைப்பேணும் பாங்காக உள்ளமையானது எங்களின் உணவுப் பண்பாட்டின் மேன்மையைக் காட்டுறது. 'அரைச்ச கறி' என்ற கறியை முதல்நாளவித்து வைத்து ஒடியல்புட்டோடு உண்பதும் அதன் சுவையும் எமது தலைமுறையோடு சரியென்றே நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

கட்டாயம் உங்களுக்கு தேவையென்றால் ஒரு டெக்னிக் இருக்குது கேட்டால் சொல்லுறன்.....அது எனக்கு ஒரு விடயத்தில் பயனளிச்சது .....! 

எங்கள அந்தரத்தில தொங்கவிடுறதே உங்கள் வேலையாப்போச்சு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

அந்த டெக்னிக்கை எங்களுக்கு சொல்லித் தாருங்கள் அண்ணா

 

சம்பவம் 1 ஒரு 2...3 வருசமா எனக்கு ஒரு "லாகோஸ்ட் lacoste " டீ -சேர்ட் வாங்கவேணும் என்று ஆசை....ஒவ்வொரு தடவை கடைகளுக்கு போகும்போதும் அந்தக் கடையைக் கண்டால் உடனே உள்ளே சென்று டீ - சேர்ட்டுகளை எடுத்து பார்த்திட்டு விலையை பார்த்ததும் வைச்சுட்டு வந்திடுவன்.  இந்த விலை குடுத்து உதை வாங்கவேணுமோ என்று....அந்தகாசுக்கு prixmax அல்லது zara வில் லோங்ஸ், ஷேர்டுடன் புள்ளோவரும் வாங்கி போடலாம்....பிள்ளைகளும் பெரியவர்களாகி விட்டனர், எனது பேரன் தோளளவு வளர்ந்து விட்டான்.....அவங்கள் போட்டால் நல்லாயிருக்கும் என்று நினைப்பன்.....ஆனால் என்னுடைய தவிப்பையும் தாகத்தையும்  தெய்வங்கள் கவனித்து வந்திருக்கு என்பது எனக்கு தெரியாது.......சென்ற 10 ம் தேதி எங்களுடைய திருமணநாள்( 36 வருடங்கள்)......பார்த்தால் அன்று எனக்கு பரிசாக அந்த டீ - சேர்ட் பரிசாக கிடைத்தது.......!

சம்பவம் 2 :  நான் இப்பொழுது அதிகம் மெக்கானிக் வேலை செய்வதில்லை.....லைட்டாக சின்ன சின்ன வேலைகள் செய்வதுண்டு....என்னிடம் இருப்பது பழைய வாகனங்களுக்கு உரிய ஆயுதங்கள்....இப்பொழுது உள்ள நவீன ஆயுதங்கள் இனி எனக்கு தேவையில்லை என்று நான் வாங்க வில்லை.ஆனாலும் வழமைபோல் பார்ட்ஸ் கடைகளுக்கு போனால் அந்தந்த சாவி பெட்டிகளை பார்த்துவிட்டு வருவேன்....சமீபத்தில் மகளின் வாகனத்தில் கிளட்ச் பிளேட் போய்விட்டது....அதை திருத்த அவ நிறைய இடம் விசாரித்தார்....நிறைய செலவு வரும் போல இருந்தது. அவளின் கவலையை பார்த்து விட்டு "வா நாங்கள் செய்வம்" என்று சொல்லி தேவையான சில சாவிகளை சில்லறையாக வாங்கி அதை செய்து குடுத்தேன். சோப்ரா சரஸ்வதி ஆயுதபூசைக்கு முன் எனக்கு இவற்றை வாங்கி பரிசளித்தார்கள்.....!

பலன் : நீங்களும் கடைகளுக்கு செல்லும்போது அடிக்கடி அம்மியை தடவி, தூக்கி அவர்கள் பார்க்கும்போது ஏக்கத்துடன் முகத்தை வைத்து கொண்டு வாருங்கள்....அது விரைவில் நல்ல பலனைக் கொடுக்கும்.......!  😂

20211117-085602-1.jpg

 

20211117-085947-1.jpg

9 hours ago, நந்தன் said:

எங்கள அந்தரத்தில தொங்கவிடுறதே உங்கள் வேலையாப்போச்சு 

அவசரக்குடுக்கை...அதுக்குள்ளே என்ன அவசரம்.......!  😂

20210927-131750-1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

பலன் : நீங்களும் கடைகளுக்கு செல்லும்போது அடிக்கடி அம்மியை தடவி, தூக்கி அவர்கள் பார்க்கும்போது ஏக்கத்துடன் முகத்தை வைத்து கொண்டு வாருங்கள்....அது விரைவில் நல்ல பலனைக் கொடுக்கும்.......!  😂

ஏக்கம் தலையில் விழாத வரைக்கும் ஓகே  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

 

சம்பவம் 1 ஒரு 2...3 வருசமா எனக்கு ஒரு "லாகோஸ்ட் lacoste " டீ -சேர்ட் வாங்கவேணும் என்று ஆசை....ஒவ்வொரு தடவை கடைகளுக்கு போகும்போதும் அந்தக் கடையைக் கண்டால் உடனே உள்ளே சென்று டீ - சேர்ட்டுகளை எடுத்து பார்த்திட்டு விலையை பார்த்ததும் வைச்சுட்டு வந்திடுவன்.  இந்த விலை குடுத்து உதை வாங்கவேணுமோ என்று....அந்தகாசுக்கு prixmax அல்லது zara வில் லோங்ஸ், ஷேர்டுடன் புள்ளோவரும் வாங்கி போடலாம்....பிள்ளைகளும் பெரியவர்களாகி விட்டனர், எனது பேரன் தோளளவு வளர்ந்து விட்டான்.....அவங்கள் போட்டால் நல்லாயிருக்கும் என்று நினைப்பன்.....ஆனால் என்னுடைய தவிப்பையும் தாகத்தையும்  தெய்வங்கள் கவனித்து வந்திருக்கு என்பது எனக்கு தெரியாது.......சென்ற 10 ம் தேதி எங்களுடைய திருமணநாள்( 36 வருடங்கள்)......பார்த்தால் அன்று எனக்கு பரிசாக அந்த டீ - சேர்ட் பரிசாக கிடைத்தது.......!

சம்பவம் 2 :  நான் இப்பொழுது அதிகம் மெக்கானிக் வேலை செய்வதில்லை.....லைட்டாக சின்ன சின்ன வேலைகள் செய்வதுண்டு....என்னிடம் இருப்பது பழைய வாகனங்களுக்கு உரிய ஆயுதங்கள்....இப்பொழுது உள்ள நவீன ஆயுதங்கள் இனி எனக்கு தேவையில்லை என்று நான் வாங்க வில்லை.ஆனாலும் வழமைபோல் பார்ட்ஸ் கடைகளுக்கு போனால் அந்தந்த சாவி பெட்டிகளை பார்த்துவிட்டு வருவேன்....சமீபத்தில் மகளின் வாகனத்தில் கிளட்ச் பிளேட் போய்விட்டது....அதை திருத்த அவ நிறைய இடம் விசாரித்தார்....நிறைய செலவு வரும் போல இருந்தது. அவளின் கவலையை பார்த்து விட்டு "வா நாங்கள் செய்வம்" என்று சொல்லி தேவையான சில சாவிகளை சில்லறையாக வாங்கி அதை செய்து குடுத்தேன். சோப்ரா சரஸ்வதி ஆயுதபூசைக்கு முன் எனக்கு இவற்றை வாங்கி பரிசளித்தார்கள்.....!

பலன் : நீங்களும் கடைகளுக்கு செல்லும்போது அடிக்கடி அம்மியை தடவி, தூக்கி அவர்கள் பார்க்கும்போது ஏக்கத்துடன் முகத்தை வைத்து கொண்டு வாருங்கள்....அது விரைவில் நல்ல பலனைக் கொடுக்கும்.......!  😂

20211117-085602-1.jpg

 

20211117-085947-1.jpg

அவசரக்குடுக்கை...அதுக்குள்ளே என்ன அவசரம்.......!  😂

20210927-131750-1.jpg

இன்னொரு திருமணம் செய்வதற்கும் உந்த டெக்னாலஜி வேலை செய்யுமா ? உங்களுக்கு இதில் அனுபவம் உண்டா என்று சும்மா கேட்டுப்பார்த்தேன். அதிகம் யோசிக்க வேண்டாம் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

இன்னொரு திருமணம் செய்வதற்கும் உந்த டெக்னாலஜி வேலை செய்யுமா ? உங்களுக்கு இதில் அனுபவம் உண்டா என்று சும்மா கேட்டுப்பார்த்தேன். அதிகம் யோசிக்க வேண்டாம் 🤣

ஒருபோதும் கஷ்டங்கள் தானாக வருவதில்லை கந்தையா நாங்களாக தேடிபோனால்தான் உண்டு.....ஒரு கோப்பை பாலுக்கு ஒரு பசுவை வைத்து பராமரிக்கிறதே அதிகம் இதற்குள் இன்னொன்று தேவையா......!  😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.