Jump to content

கலியாணத்தன்று மழை - Dr. T. கோபிசங்கர்


Recommended Posts

கலியாணத்தன்று மழை  

“இரவில அட்டை கிட்டை ஏதும் ஏறி இருக்கும் , கழுவிப்போட்டு அரை “எண்டு அம்மா சொன்னா. அம்மியையும் குழவியையும் கழுவீட்டு தண்ணியை வளிச்சு ஒரு பக்கம் தள்ளி விட்டிட்டு தண்ணி ஒரு பக்கமா காஞ்சும் சில இடம் காயாமை இருக்கிறதையும் தள்ளித்தள்ளி விளையாடீட்டு தட்டையும் வாங்குப்பலகையையும் தூக்கிக் கொண்டு எல்லாம் இருக்கா எண்டு check பண்ணிக்கொண்டு போனன். போய் நிண்டு கொண்டு உப்பைக்கொண்டா புளியைக்கொண்டா எண்டா சாமான் வராது, “ என்ன ஆட்டத்துக்கு இப்ப சம்பல் அரைக்கப் போனீ “ எண்டு பேச்சுத் தான் விழும். 

வீடு கட்டேக்க குசினீக்குள்ள அம்மியை வைக்கிறேல்லை , கொஞ்சம் தள்ளி அதுகும் நிலத்தோடயோ இல்லாட்டி கட்டு ஒண்டு கட்டித் தான் அம்மியை வைக்கிறது . கிணத்தடி மாதிரி அம்மியடிக்கும் விளக்கீட்டுக்கு ஒரு பந்தம் வைக்கிறது வழக்கம் . ஊர் வழியவும் தனிக்க கொட்டிலுக்க தான் அம்மி , உரல் ஆட்டுக்கல் எல்லாம் இருக்கும். ஒதுக்கபட்ட வாழ்க்கை சில உயர்திணைக்கு மட்டுமில்லை அஃறினைக்கும் வைச்சது ஏனெண்டு தெரியாது. 

“அம்மி பொழியிறது… கத்தி சாணை “ எண்டு ரோட்டால கத்திக்கொண்டு போனவனைப் பிடிச்சு போன மாசம் தான் அம்மி பொழிஞ்சது. நடுவில பூ design போட்டு பொழிஞ்சு தந்தவன். பொழிஞ்ச அம்மியை ரெண்டு தரம் பழைய தேங்காய்ப்பூ வைச்சு அரைச்சு பொழிஞ்ச தூசு மண் எல்லாம் தேச்சு கழுவோணும் , இருந்தாலும் ரெண்டு நாளைக்கு மண் கடிபடும். 

அம்மியோட குழவியையும் சேத்துத் தான் பொழியிறது. சில குழவிகள் ரெண்டு பக்கமும் முனை மழுங்கி இருக்கும். மற்றதுகள் ஒரு பக்கம் முனை மழுங்கி மற்றப்பக்கம் வட்டமாயும் இருக்கும். குழவியை பிடிச்சு அம்மியின்டை நீளத்துக்கு இழுத்து அரைக்கேக்க ,முதல்ல முழங்கையை நீட்டி குழவியைத் தள்ளி பிறகு நாரியால முன்னுக்கு சரிய குழவியை இன்னும் கொஞ்சம் முன்னுக்கு போகும் . 

திருப்பி இழுக்கேக்க இறுக்காமலும் அதேவேளை உருளாமலும் மெல்ல குழவியைப் பிடிச்சி தோள்மூட்டால இழுத்து நாரியை நிமித்த குழவி திருப்பி வர “சம்பல் அரைக்கயில என் மனசை அரைச்சவளே” எண்ட இளையராஜா பாட்டு ஓடும். குழவியை உருட்டி உருட்டி அரைக்கிறேல்லை ஆனாலும் ஒவ்வொரு இழுவைக்கும் அது கொஞ்சம் கொஞ்சமாத் திரும்பும் நல்லூர் சப்பறம் மாதிரி.  

வாங்குப்பலகையில குந்திக்கொண்டிருந்து நனையப் போட்ட எட்டு பெரிய செத்த மிளகாயை நடுவில வைச்சு அதோட சிரட்டையில இருக்கிற கல்லு உப்பை சேத்து குழவியை ரெண்டு பக்கமும் பிடிச்சு சத்தம் வாற மாதிர கடகட எண்டு தட்டி மிளகாயை சப்பையாக்கீட்டு மிளகாய் ஊறப்போட்டிருந்த தண்ணீல கையை நனைச்சிட்டு அந்த நுனி விரலால சொட்டிற தண்ணியை அதுக்க மேல விட்டிட்டு நாலு உரிச்ச வெங்காயத்தை வைச்சு நசிச்சுக்கொண்டு இழுத்து அரைக்கத் தொடங்கினன்.

நாலு தரம் கொஞ்சம் இழுத்து அரைக்க மிளகாய் அருவல் நொருவலா வந்திச்சுது. குழவியால நசிக்கேக்க பறந்த வெங்காயத்தை தேடி எடுத்து தண்ணீல அலசீட்டு திருப்பியும் நசிச்சு கருவப்பலையையும் சேத்து அரைச்சு எல்லாம் கலந்து வர அதை எதிர்ப்பக்கமாத் தள்ளிப்போட்டு ,தட்டில இருக்கிற தேங்காய்ப்பூவை தும்பில்லாம எடுத்து நடு அம்மீல வைச்சு மிளகாயோட சேத்து ரெண்டு இழுத்தரைக்க செம்மை வெண்மையை ஆட்கொண்டது.

தேங்காய் பூவை சேத்து அரைக்கேக்க அம்மிக்கும் நோகாம தேங்காய்ப் பூவுக்கும் நோகாம அரைக்க வேணும், இல்லாட்டி சம்பல் குழையலாத்தான் வரும். கடைசீல கொட்டை எடுத்த ரெண்டு பழப்புளியை சேத்து அரைச்சிட்டு குழவி அம்மி எல்லாம் வழிச்சு தட்டில போட்டுக் கொண்டு எழும்ப அண்ணா ரோஸ் பாணோட உள்ள வர, “ அண்ணலும் நோக்க அவளும் நோக்கினாள்” சந்தர்ப்பம் கூறி விளக்குக எண்டு படிச்சது தான் ஞாபகம் வந்திச்சிது. 

ரொலக்ஸ் பேக்கரீல போடுற அச்சுப் பாண் , ரோஸ் பாண் ( அதுக்கு நீங்க இங்கலீசில என்ன பேர் வைச்சாலும் நமக்கு ரோஸ் பாண் தான்) வெந்து வாற மணம் காலமை alarm அடிச்ச மாதிரி எழுப்பும் . சம்பலை விட்டா பாணுக்கு பழைய மீன் குளம்பு தான் பேரின்ப பெரு வாழ்வைத்தரும். 

“ சீலையை வித்தாவது சீலா வாங்கு எண்டு சொல்லிறவை “ எண்ட மீன் பெட்டிக்காரன்டை கதையைக் கேட்டு , வாங்கிக்கொண்டு வந்து மீன் bag ஐ வீட்டை குடுத்தன். அரிவாளில செதில் சீவி , துண்டறுத்து பிறகு கழுவி எடுத்துக் கொண்டந்து மண்சட்டீல வைக்கிற மீன்குழம்பு அடுத்த நாள் காலமை வரைக்கும் demand இல இருக்கும் . குழம்பின்டை ருசி அரைச்சுப்போடிற தேங்காய் கூட்டில தான் இருக்கு. 

அம்மம்மா ஒரு காலை மடக்கி மற்றதை நீட்டி சுளகில பிடைக்கிற மாதிரி இருந்து தான் அரைப்பா. மீன் குழம்புக்கு கூட்டரைக்குறதில அவ expert. தேங்காயை அரைக்கேக்க மிளகாயத்தூள் உப்புச்சேத்து குழவியை இறுக்கிப் பிடிச்சு தேங்காய்ப்பூவை அமத்தி அரைக்கப் பட்டுப்போல கூட்டு வரும் . 

தேங்காய் அரைச்சு பிறகு மிளகு ,சின்னச்சீரகம் ,உள்ளி எல்லாம் சேத்து அதையும் அரைச்சு எடுத்து வைச்சிட்டுத்தான் குழம்பு வைக்கத் தொடங்கிறது . கப்பிப்பாலில புளிவிட்டு வெங்காயம் ,மிளகாய் உப்புப் போட்டு மண்சட்டீல விட்டு கொதிக்கத் தொடங்க கச்சேரி தொடங்கும் . முதல் கொதியோட மீனையும் அரைச்ச கூட்டையும் போட்டு கடைசீல சீரக உருண்டையைப் போட்டு கொதிக்க விட மீனின் ஆத்மா சாந்தி அடைஞ்சு குழம்போட ஐக்கியமாகும் . 

அவசரத்துக்கு அம்மி உரலாயும் திரிகையாயும் மாறும். கை உரல் வர முதல் ஏலக்காயில இருந்து இஞ்சிவரை நசிச்சோ குத்தியோ போடிறதெண்டா அம்மீல தான் . குழவியை வைச்சு தட்டுப் பெட்டீல பழைய பேப்பரைப் போட்டிட்டு பயறு , உழுந்து கோது உடைக்கிறதும் சில வேளை அம்மீல வைச்சு மாவும் அரைக்கிறது . 

சாமத்திய வீட்டில மொம்பிளைக்கு , குழவியை வைச்சுக்கொண்டு நிக்க விடுறதாம் எண்டு ஆச்சி சொல்லிறவ. ஆலாத்தி முடியும் வரை அதைத் தாங்கிக்கொண்டு நிண்டா நாளைக்கு எதையும் தாங்குவாளாம் எண்டதுக்குத்தான் அப்பிடி எண்டும் சொல்லிறவ. அது பிறகு குடமாகி , பிறகு செம்பாகி இப்ப Make up காரர் குடுக்கிற bouquet ஆக மாறீட்டுது. 

சாமத்தியம் தாண்டி கலியாணத்திலேம் அம்மிக்கு இடம் இருக்கு மிதி படுறதுக்கு . மச்சாளின்டை கலியாண வீடண்டு விடாம மழை பெய்யேக்க , மாமி வருண பகவானுக்கு நேந்து தேங்காய் உடைச்சு வைச்சிட்டு ,” அப்பவும் உனக்குச் சொன்னான் அம்மீல வைச்ச தேங்காய்ப் பூவை எடுத்துச் சாப்பிடாதை எண்டு இப்ப பார் மழை விடமாட்டன் எண்டிது “ எண்டு மச்சாளைப் பேச , அண்டைக்கு நானும் சம்பல் அரைக்கேக் சாப்பட்டதை நெச்சு கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினன் நல்ல வேளை மனிசி அம்மிப்பக்கம் போகாத படியா மழை பெய்யேல்லை.

 

Dr. T. கோபிசங்கர்

யாழ்ப்பாணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை எல்லா வீட்டிலயும் நடந்திருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பையன் (டாகடர் )இவ்வளவுக்கு   விளக்கமாக எழுதுவது ஆச்சரியமாக உள்ளது. சமையல் விடயத்தில் டிப்ளோமா எடுத்தவர் போல  அல்லது தாயுடன் அதிக நேரம் சமையலில் ஈடுபடடவர் போல இருக்கிறார். நல்ல அவதானி. இதை அவருக்கு சொல்லி விடவும். சமையலிலும் டாகடர் படடம் கொடுக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மியில் அரைப்பதுவும், ஆட்டுக்கல்லில் உளுந்து ஆட்டுவதும், உரலில் மூசி மூசி கை மாத்தி இருவர் மூவராக உலக்கை போடுவதும் எங்களின் பாரம்பரிய கலையாகும் ........அதைக் கண்டா கடைசித் தலைமுறையும் நாங்களே......!  👍

பகிர்வுக்கு நன்றி நிழலி .......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, suvy said:

அம்மியில் அரைப்பதுவும், ஆட்டுக்கல்லில் உளுந்து ஆட்டுவதும், உரலில் மூசி மூசி கை மாத்தி இருவர் மூவராக உலக்கை போடுவதும் எங்களின் பாரம்பரிய கலையாகும் ........அதைக் கண்டா கடைசித் தலைமுறையும் நாங்களே......!  👍

பகிர்வுக்கு நன்றி நிழலி .......!  

உடலுழைப்புக்கான சந்தர்ப்பங்களை நவீனங்களின் வரவால் நாம் இழந்து விட்டோம்.

Link to comment
Share on other sites

28 minutes ago, suvy said:

அம்மியில் அரைப்பதுவும், ஆட்டுக்கல்லில் உளுந்து ஆட்டுவதும், உரலில் மூசி மூசி கை மாத்தி இருவர் மூவராக உலக்கை போடுவதும் எங்களின் பாரம்பரிய கலையாகும் ........அதைக் கண்டா கடைசித் தலைமுறையும் நாங்களே......!  👍

பகிர்வுக்கு நன்றி நிழலி .......!  

இங்கு கனடாவில் அம்மியும்,கல்லும் விற்கின்றார்கள் சுவி அண்ணா. அடுத்த கோடையில் வாங்குவமா என்று யோசனை இருக்குது. ஆனால் வாங்கி வந்த குற்றத்திற்காக, என்னையே அம்மியில் வைத்து அரைத்து விடுவார்களோ என்ற பயமும் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இங்கு கனடாவில் அம்மியும்,கல்லும் விற்கின்றார்கள் சுவி அண்ணா. அடுத்த கோடையில் வாங்குவமா என்று யோசனை இருக்குது. ஆனால் வாங்கி வந்த குற்றத்திற்காக, என்னையே அம்மியில் வைத்து அரைத்து விடுவார்களோ என்ற பயமும் இருக்கு.

அது இங்கும் விக்கிது நிழலி .......இப்ப அதை வாங்கி பரிசளிப்பதும் ஒரு பேஷனாகிப் போச்சுது.....பொம்பிளைகளும் ரெண்டு நாளைக்கு வச்சு அரைப்பினம் பின்பு அது சாமான்கள் வைக்கிற தட்டுபோலத்தான் பயன்படும்........!   😂

 

கட்டாயம் உங்களுக்கு தேவையென்றால் ஒரு டெக்னிக் இருக்குது கேட்டால் சொல்லுறன்.....அது எனக்கு ஒரு விடயத்தில் பயனளிச்சது .....! 

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

கட்டாயம் உங்களுக்கு தேவையென்றால் ஒரு டெக்னிக் இருக்குது கேட்டால் சொல்லுறன்.....அது எனக்கு ஒரு விடயத்தில் பயனளிச்சது .....! 

அந்த டெக்னிக்கை எங்களுக்கு சொல்லித் தாருங்கள் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

அம்மியில் அரைப்பதுவும், ஆட்டுக்கல்லில் உளுந்து ஆட்டுவதும், உரலில் மூசி மூசி கை மாத்தி இருவர் மூவராக உலக்கை போடுவதும் எங்களின் பாரம்பரிய கலையாகும் ........அதைக் கண்டா கடைசித் தலைமுறையும் நாங்களே......!  👍

பகிர்வுக்கு நன்றி நிழலி .......!  

நிழலியவர்களே, இணைப்புக்கு நன்றி. உண்மை சுவியவர்களே, எமது வாழ்வியலின் ஒவ்வொரு விடயங்களும் மனிதனது உடல் நலனைப்பேணும் பாங்காக உள்ளமையானது எங்களின் உணவுப் பண்பாட்டின் மேன்மையைக் காட்டுறது. 'அரைச்ச கறி' என்ற கறியை முதல்நாளவித்து வைத்து ஒடியல்புட்டோடு உண்பதும் அதன் சுவையும் எமது தலைமுறையோடு சரியென்றே நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

கட்டாயம் உங்களுக்கு தேவையென்றால் ஒரு டெக்னிக் இருக்குது கேட்டால் சொல்லுறன்.....அது எனக்கு ஒரு விடயத்தில் பயனளிச்சது .....! 

எங்கள அந்தரத்தில தொங்கவிடுறதே உங்கள் வேலையாப்போச்சு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

அந்த டெக்னிக்கை எங்களுக்கு சொல்லித் தாருங்கள் அண்ணா

 

சம்பவம் 1 ஒரு 2...3 வருசமா எனக்கு ஒரு "லாகோஸ்ட் lacoste " டீ -சேர்ட் வாங்கவேணும் என்று ஆசை....ஒவ்வொரு தடவை கடைகளுக்கு போகும்போதும் அந்தக் கடையைக் கண்டால் உடனே உள்ளே சென்று டீ - சேர்ட்டுகளை எடுத்து பார்த்திட்டு விலையை பார்த்ததும் வைச்சுட்டு வந்திடுவன்.  இந்த விலை குடுத்து உதை வாங்கவேணுமோ என்று....அந்தகாசுக்கு prixmax அல்லது zara வில் லோங்ஸ், ஷேர்டுடன் புள்ளோவரும் வாங்கி போடலாம்....பிள்ளைகளும் பெரியவர்களாகி விட்டனர், எனது பேரன் தோளளவு வளர்ந்து விட்டான்.....அவங்கள் போட்டால் நல்லாயிருக்கும் என்று நினைப்பன்.....ஆனால் என்னுடைய தவிப்பையும் தாகத்தையும்  தெய்வங்கள் கவனித்து வந்திருக்கு என்பது எனக்கு தெரியாது.......சென்ற 10 ம் தேதி எங்களுடைய திருமணநாள்( 36 வருடங்கள்)......பார்த்தால் அன்று எனக்கு பரிசாக அந்த டீ - சேர்ட் பரிசாக கிடைத்தது.......!

சம்பவம் 2 :  நான் இப்பொழுது அதிகம் மெக்கானிக் வேலை செய்வதில்லை.....லைட்டாக சின்ன சின்ன வேலைகள் செய்வதுண்டு....என்னிடம் இருப்பது பழைய வாகனங்களுக்கு உரிய ஆயுதங்கள்....இப்பொழுது உள்ள நவீன ஆயுதங்கள் இனி எனக்கு தேவையில்லை என்று நான் வாங்க வில்லை.ஆனாலும் வழமைபோல் பார்ட்ஸ் கடைகளுக்கு போனால் அந்தந்த சாவி பெட்டிகளை பார்த்துவிட்டு வருவேன்....சமீபத்தில் மகளின் வாகனத்தில் கிளட்ச் பிளேட் போய்விட்டது....அதை திருத்த அவ நிறைய இடம் விசாரித்தார்....நிறைய செலவு வரும் போல இருந்தது. அவளின் கவலையை பார்த்து விட்டு "வா நாங்கள் செய்வம்" என்று சொல்லி தேவையான சில சாவிகளை சில்லறையாக வாங்கி அதை செய்து குடுத்தேன். சோப்ரா சரஸ்வதி ஆயுதபூசைக்கு முன் எனக்கு இவற்றை வாங்கி பரிசளித்தார்கள்.....!

பலன் : நீங்களும் கடைகளுக்கு செல்லும்போது அடிக்கடி அம்மியை தடவி, தூக்கி அவர்கள் பார்க்கும்போது ஏக்கத்துடன் முகத்தை வைத்து கொண்டு வாருங்கள்....அது விரைவில் நல்ல பலனைக் கொடுக்கும்.......!  😂

20211117-085602-1.jpg

 

20211117-085947-1.jpg

9 hours ago, நந்தன் said:

எங்கள அந்தரத்தில தொங்கவிடுறதே உங்கள் வேலையாப்போச்சு 

அவசரக்குடுக்கை...அதுக்குள்ளே என்ன அவசரம்.......!  😂

20210927-131750-1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

பலன் : நீங்களும் கடைகளுக்கு செல்லும்போது அடிக்கடி அம்மியை தடவி, தூக்கி அவர்கள் பார்க்கும்போது ஏக்கத்துடன் முகத்தை வைத்து கொண்டு வாருங்கள்....அது விரைவில் நல்ல பலனைக் கொடுக்கும்.......!  😂

ஏக்கம் தலையில் விழாத வரைக்கும் ஓகே  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

 

சம்பவம் 1 ஒரு 2...3 வருசமா எனக்கு ஒரு "லாகோஸ்ட் lacoste " டீ -சேர்ட் வாங்கவேணும் என்று ஆசை....ஒவ்வொரு தடவை கடைகளுக்கு போகும்போதும் அந்தக் கடையைக் கண்டால் உடனே உள்ளே சென்று டீ - சேர்ட்டுகளை எடுத்து பார்த்திட்டு விலையை பார்த்ததும் வைச்சுட்டு வந்திடுவன்.  இந்த விலை குடுத்து உதை வாங்கவேணுமோ என்று....அந்தகாசுக்கு prixmax அல்லது zara வில் லோங்ஸ், ஷேர்டுடன் புள்ளோவரும் வாங்கி போடலாம்....பிள்ளைகளும் பெரியவர்களாகி விட்டனர், எனது பேரன் தோளளவு வளர்ந்து விட்டான்.....அவங்கள் போட்டால் நல்லாயிருக்கும் என்று நினைப்பன்.....ஆனால் என்னுடைய தவிப்பையும் தாகத்தையும்  தெய்வங்கள் கவனித்து வந்திருக்கு என்பது எனக்கு தெரியாது.......சென்ற 10 ம் தேதி எங்களுடைய திருமணநாள்( 36 வருடங்கள்)......பார்த்தால் அன்று எனக்கு பரிசாக அந்த டீ - சேர்ட் பரிசாக கிடைத்தது.......!

சம்பவம் 2 :  நான் இப்பொழுது அதிகம் மெக்கானிக் வேலை செய்வதில்லை.....லைட்டாக சின்ன சின்ன வேலைகள் செய்வதுண்டு....என்னிடம் இருப்பது பழைய வாகனங்களுக்கு உரிய ஆயுதங்கள்....இப்பொழுது உள்ள நவீன ஆயுதங்கள் இனி எனக்கு தேவையில்லை என்று நான் வாங்க வில்லை.ஆனாலும் வழமைபோல் பார்ட்ஸ் கடைகளுக்கு போனால் அந்தந்த சாவி பெட்டிகளை பார்த்துவிட்டு வருவேன்....சமீபத்தில் மகளின் வாகனத்தில் கிளட்ச் பிளேட் போய்விட்டது....அதை திருத்த அவ நிறைய இடம் விசாரித்தார்....நிறைய செலவு வரும் போல இருந்தது. அவளின் கவலையை பார்த்து விட்டு "வா நாங்கள் செய்வம்" என்று சொல்லி தேவையான சில சாவிகளை சில்லறையாக வாங்கி அதை செய்து குடுத்தேன். சோப்ரா சரஸ்வதி ஆயுதபூசைக்கு முன் எனக்கு இவற்றை வாங்கி பரிசளித்தார்கள்.....!

பலன் : நீங்களும் கடைகளுக்கு செல்லும்போது அடிக்கடி அம்மியை தடவி, தூக்கி அவர்கள் பார்க்கும்போது ஏக்கத்துடன் முகத்தை வைத்து கொண்டு வாருங்கள்....அது விரைவில் நல்ல பலனைக் கொடுக்கும்.......!  😂

20211117-085602-1.jpg

 

20211117-085947-1.jpg

அவசரக்குடுக்கை...அதுக்குள்ளே என்ன அவசரம்.......!  😂

20210927-131750-1.jpg

இன்னொரு திருமணம் செய்வதற்கும் உந்த டெக்னாலஜி வேலை செய்யுமா ? உங்களுக்கு இதில் அனுபவம் உண்டா என்று சும்மா கேட்டுப்பார்த்தேன். அதிகம் யோசிக்க வேண்டாம் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

இன்னொரு திருமணம் செய்வதற்கும் உந்த டெக்னாலஜி வேலை செய்யுமா ? உங்களுக்கு இதில் அனுபவம் உண்டா என்று சும்மா கேட்டுப்பார்த்தேன். அதிகம் யோசிக்க வேண்டாம் 🤣

ஒருபோதும் கஷ்டங்கள் தானாக வருவதில்லை கந்தையா நாங்களாக தேடிபோனால்தான் உண்டு.....ஒரு கோப்பை பாலுக்கு ஒரு பசுவை வைத்து பராமரிக்கிறதே அதிகம் இதற்குள் இன்னொன்று தேவையா......!  😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.