Jump to content

ஏராளனுக்கு வாழ்த்துகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளனுக்கு வாழ்த்துகள்

ஊரில் புலர் எனும் அமைப்பை தொடங்கி, மாற்றுதிறனாளிகளுக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கும் ஏராளனுக்கும் அவரின் நண்பர்களுக்கும் வாழ்த்துகள்🙏🙏🙏

உங்கள் நல்ல மனதிற்கு உங்கள் குடும்பத்தினருடன் நீடூழி வாழ்க

உங்கள் உதவிகள் தொடர வாழ்த்துக்கள்

 

download.thumb.jpg.e571c64070a4c07525613a2069021c7c.jpg

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்+
36 minutes ago, உடையார் said:

ஏராளனுக்கு வாழ்த்துகள்

ஊரில் புலர் எனும் அமைப்பை தொடங்கி, மாற்றுதிறனாளிகளுக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கும் ஏராளனுக்கும் அவரின் நண்பர்களுக்கும் வாழ்த்துகள்🙏🙏🙏

உங்கள் நல்ல மனதிற்கு உங்கள் குடும்பத்தினருடன் நீடூழி வாழ்க

உங்கள் உதவிகள் தொடர வாழ்த்துக்கள்

 

download.thumb.jpg.e571c64070a4c07525613a2069021c7c.jpg

 

வாழ்த்துக்கள், ஏராளன் அவர்களே!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள், ஏராளன் …!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் அகரம் அமைப்பின் லிங் இணைத்திருந்தார்.அதைப் பார்த்துட்டு ஏதோ இதற்குள் இருக்கிறது என்று நினைத்தேன்நீங்கள் சொல்லீட்டிங்கள் உடையார் அண்ணா நன்றி.

வாழ்த்துக்கள் ஏராளன் மற்றும் அவர்களுக்கு உதவிடும் அனைவருக்கும் 🙏 காலக் கிரமத்தில் கவனிக்கிறன்.👋✍️☺️

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான செயல் செய்த... ஏராளனுக்கு பாராட்டுக்கள். 👍 :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@ஏராளன் மற்றும் அவரின் புலர் அமைப்பு நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

சேவை மனப்பான்மை அருகிவரும் இக்காலத்தில் அமைப்பைத் தொடங்கி உதவிகள் புரிவதற்கு நன்றிகள்🙏🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் அண்ணை அவசரப்பட்டு சொல்லிப்போட்டியளோ!🤔
இப்ப தான் 1 மாதம் தொடங்கி, விசேட தேவையுடையோருக்கு உதவியள் செய்வதோட நீண்ட கால நோக்கில விசேட தேவையுடையோருக்கான காப்பகம் அமைப்பது தான் நோக்கம்.
உடையார் அண்ணாவை தனிப்பட தெரியும், அவரிடம் அமைப்பின் யாப்பு எழுதுவது தொடர்பாக உதவி கேட்ட போது கோஷான் & கற்பகதரு இருவரிடம் கேட்டுப் பார்க்கச் சொன்னார். நான் கோசான் அண்ணரிடம் மட்டும் தனிமடலில் தொடர்பு கொண்டேன். சில ஆங்கில இணைப்புக்களை தந்தவர், தமிழில் மொழி மாற்றம் செய்து தர கேட்டேன். அதையும் செய்து தந்தார். மிக்க நன்றி கோசான் அண்ணை.

யாழின் நேசக்கரமும் எங்களுக்கு ஒரு வழிகாட்டி, அதன் ஊடாகவும் தம்பி சில உதவிகள்/ஒருங்கிணைப்புகள் செய்தவன் என்று நினைக்கிறேன்.
நாங்கள் இப்ப 8 கிராமசேவகர் பிரிவிற்குள் செயற்பட முடிவு செய்துள்ளோம். அதனால தான் யாழின் உதவியை நாடவில்லை. வேலைத்திட்டங்கள் கூடும்போது யாழின் துளித்துளியாய் பகுதியில் கட்டாயம் உதவிக் கோரிக்கை வைப்பேன். அப்போது யாழ் உறவுகள் உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கோ.

இப்போது இரண்டு விசேட தேவையுடைய பெண் பிள்ளைகள்(படுக்கையில் இருக்கிறார்கள்) 18,22 வயது. பெற்றோர் நாள் வேலைக்கு போறவர்கள். பிள்ளைகளுக்கு பம்பர்ஸ், மெத்தை  வாங்க உதவும்படி கேட்டார்கள். பம்பர்ஸ்  வாங்க மாதம் 2000 ரூபாய் தாய்மாரின் தபாலக சேமிப்புக் கணக்கிற்கு Standing order வங்கியில் போட்டிருக்கு. மெத்தையும் ரபர் சீற்றும் நேற்று வாங்கி கொடுத்திருக்கிறோம்.
மேலும் பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ள பயனாளிகளை தெரிவு செய்து வழங்க உள்ளோம்.

உடையார் அண்ணாவும் 75281 ரூபாயை நன்கொடையாக வழங்கி உதவியுள்ளார். மிக்க நன்றி அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள், ஏராளன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் தோழர்.. இன்னும் ஏராளமான உதவிகள் புரிய வாழ்த்துக்கள்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"காலத்தே செய்யும் உதவி ஞாலத்தின் மாளப் பெரிது"  பாராட்டுக்கள் புலர் புண்ணியவான்களுக்கு......!  💐

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஏராளன்
உங்கள் சேவைமனப்பான்மை பாராட்டுக்குரியது
வாழ்க வளமுடன் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலே இது சம்பந்தமாக சிந்தித்து செயல்பட முனைந்தது மட்டும் தான் என்னோட பணி. இச் செயற்பாடுகளுக்கான முழுப் பாராட்டும் என்னை ஊக்குவித்து நன்கொடை அளிக்கின்ற உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் மட்டுமே உரித்தானது. என்னுடைய பணி ஒருங்கிணைத்தல் மட்டுமே.

கடந்த ஆண்டு மருத்துவப் பேராசிரியை நில்மினியுடனும் இது சம்பந்தமாக தனிமடலில் எழுதியிருந்தேன். விரைவாக பணிகளை ஆரம்பிக்க ஊக்கப்படுத்தினார். அக்காவுக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளனுக்கும் அவர் குழுவுக்கும் மிகுந்த பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

உடையார் அண்ணை அவசரப்பட்டு சொல்லிப்போட்டியளோ!🤔
இப்ப தான் 1 மாதம் தொடங்கி, விசேட தேவையுடையோருக்கு உதவியள் செய்வதோட நீண்ட கால நோக்கில விசேட தேவையுடையோருக்கான காப்பகம் அமைப்பது தான் நோக்கம்.
உடையார் அண்ணாவை தனிப்பட தெரியும், அவரிடம் அமைப்பின் யாப்பு எழுதுவது தொடர்பாக உதவி கேட்ட போது கோஷான் & கற்பகதரு இருவரிடம் கேட்டுப் பார்க்கச் சொன்னார். நான் கோசான் அண்ணரிடம் மட்டும் தனிமடலில் தொடர்பு கொண்டேன். சில ஆங்கில இணைப்புக்களை தந்தவர், தமிழில் மொழி மாற்றம் செய்து தர கேட்டேன். அதையும் செய்து தந்தார். மிக்க நன்றி கோசான் அண்ணை.

யாழின் நேசக்கரமும் எங்களுக்கு ஒரு வழிகாட்டி, அதன் ஊடாகவும் தம்பி சில உதவிகள்/ஒருங்கிணைப்புகள் செய்தவன் என்று நினைக்கிறேன்.
நாங்கள் இப்ப 8 கிராமசேவகர் பிரிவிற்குள் செயற்பட முடிவு செய்துள்ளோம். அதனால தான் யாழின் உதவியை நாடவில்லை. வேலைத்திட்டங்கள் கூடும்போது யாழின் துளித்துளியாய் பகுதியில் கட்டாயம் உதவிக் கோரிக்கை வைப்பேன். அப்போது யாழ் உறவுகள் உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கோ.

இப்போது இரண்டு விசேட தேவையுடைய பெண் பிள்ளைகள்(படுக்கையில் இருக்கிறார்கள்) 18,22 வயது. பெற்றோர் நாள் வேலைக்கு போறவர்கள். பிள்ளைகளுக்கு பம்பர்ஸ், மெத்தை  வாங்க உதவும்படி கேட்டார்கள். பம்பர்ஸ்  வாங்க மாதம் 2000 ரூபாய் தாய்மாரின் தபாலக சேமிப்புக் கணக்கிற்கு Standing order வங்கியில் போட்டிருக்கு. மெத்தையும் ரபர் சீற்றும் நேற்று வாங்கி கொடுத்திருக்கிறோம்.
மேலும் பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ள பயனாளிகளை தெரிவு செய்து வழங்க உள்ளோம்.

உடையார் அண்ணாவும் 75281 ரூபாயை நன்கொடையாக வழங்கி உதவியுள்ளார். மிக்க நன்றி அண்ணா.

ஏராளன் - நீங்கள் செய்வது செயற்கரிய செயல். வாழ்துக்கள்.

வெயிட் பண்ணாமல் துளிதுளியாயில் அமைப்பை அறிமுகம் செய்யுங்கோ.

யாழ்கள உறவுகள் எல்லாரும் முன் வருவார்கள்.

புலர்-ரட்டும்🙏🏾

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

ஏராளன் - நீங்கள் செய்வது செயற்கரிய செயல். வாழ்துக்கள்.

வெயிட் பண்ணாமல் துளிதுளியாயில் அமைப்பை அறிமுகம் செய்யுங்கோ.

யாழ்கள உறவுகள் எல்லாரும் முன் வருவார்கள்.

புலர்-ரட்டும்🙏🏾

 

நன்றி அண்ணை.
அப்பா அகலக் கால் வைக்காதே என்று எச்சரிக்கிறார், மெதுவாக வளருவம்.
புலர் அறக்கட்டளையாகவா(Trust)/தொண்டு நிறுவனமாகவா(Charity) பதிவு செய்வது என்ற தடுமாற்றம் இருக்கிறது. பதிவு செய்ய 6 மாத காலம் தாமதமாகும். எங்களுடைய பணிகளை பார்த்துத் தான் பதிவு செய்வார்கள். எல்லா ஒழுங்குகளையும் ஏற்படுத்திய பின் துளித்துளியாய் பகுதியில் போடுவம்.

மீண்டும் மீண்டும் உங்கள் எல்லோருக்கும் நன்றி. உங்கள் ஊக்கமும் உற்சாகப்படுத்தலும் எங்கள் பணியைத் தூண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்குரார்ப்பண கூட்டம் நடந்த போது எடுத்த வீடியோ, ஒலி வாங்கி(mic) இல்லாததால் ஒலித் தெளிவு குறைவு. வெளிப்படையாக இயங்குவது என்ற குறிக்கோளில் முதலாவதாக ஒளிப்பதிவை செய்தோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்வது இனிதே வளரட்டும், தேவை உள்ளோரை வளர்க்கட்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.