Jump to content

மாவீரர் நினைவுநாளை மாற்றியமைப்பது துயிலுமில்லங்களைத் தகர்த்தமைக்கு ஒப்பாகி விடும்-பொ. ஐங்கரநேசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நினைவுநாளை மாற்றியமைப்பது துயிலுமில்லங்களைத் தகர்த்தமைக்கு ஒப்பாகி விடும்-பொ. ஐங்கரநேசன்

November 16, 2021

 

 

p.inkaranesan மாவீரர் நினைவுநாளை மாற்றியமைப்பது துயிலுமில்லங்களைத் தகர்த்தமைக்கு ஒப்பாகி விடும்-பொ. ஐங்கரநேசன்

மாவீரர் நினைவுநாளை மாற்றியமைப்பதும், எல்லோருக்குமான பொதுவான நினைவுநாளாகக் கடைப்பிடிப்பதும் மக்கள் மனங்களில் எஞ்சியுள்ள நினைவுகளையும் துடைத்தழிக்கும் வரலாற்றுத் திரிபுபடுத்திகளாக அமைந்துவிடும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கு ஆயர் மன்றம் போரால் உயிரிழந்தவர்களுக்கான நினைவுநாளாக நவம்பர், 3ஆவது சனிக்கிழமையைக் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக பொ. ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

‘இலங்கை இராணுவம் யுத்தம் முடிந்த கையோடு மாவீரர் துயிலும் இல்லங்களை இருந்த சுவடே தெரியாமல் அழித்தொழித்தது. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை, அதனூடாகப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை மக்கள் மனங்களில் பதியவைக்கும் வரலாற்றுக் கடத்திகளாக இவை அமைந்துவிடும் என்பதே இதற்கான காரணமாகும்.

இதேபோன்றே, மாவீரர் நினைவுநாளை மாற்றியமைப்பதும், எல்லோருக்குமான பொதுவான நினைவுநாளாகக் கடைப்பிடிப்பதும் மக்கள் மனங்களில் எஞ்சியுள்ள நினைவுகளையும் துடைத்தழிக்கும் வரலாற்றுத் திரிபுபடுத்திகளாக அமைந்துவிடும்.

அந்தவகையில், மாவீரர் நாளை ஆயர் மன்றம் மாற்றியமைப்பது படையினர் மாவீரர் துயிலுமில்லங்களைத் தகர்த்தமைக்கு ஒப்பானதாகிவிடும்.

வடக்கு – கிழக்கு ஆயர் மன்றம் போரில் ஈடுபட்டு இறந்தவர்களின் நினைவாகவும் போரால் இறந்த பொதுமக்களின் நினைவாகவும் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தின் 3ஆவது சனிக்கிழமையைப் பொது நினைவுநாளாகக் கடைப்பிடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

இறந்தோரை நினைவுகூரும் நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் வந்தாலும் அதற்குப் பலதடைகள் இருந்து வருகின்றமையே இதற்கான காரணமெனவும் தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் போராடி மடிந்த வீரமறவர்களின் நினைவாக நொவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளையும், போரில் இறந்த பொதுமக்கள் நினைவாக மே 18 இல் முள்ளிவாய்க்கால் தினத்தையும் படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் கடைப்பிடித்து வரும் நிலையில் ஆயர் மன்றத்திடமிருந்து இக்கோரிக்கை எழுந்துள்ளது.

கூட்டுப் பிரார்த்தனைகளைப்போன்று கூட்டு அஞ்சலிகளுக்கும் வலிமை மிக அதிகம். இதனாலேயே வெவ்வேறு காலப்பகுதிகளில் இறந்தாலும் போராடி மடிந்தவர்களுக்கான கூட்டு நினைவுநாளாக நவம்பர் 27ம், போரில் மடிந்த பொது மக்களுக்கான கூட்டு நினைவுநாளாக மே 18 ம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கூட்டு நினைவுநாளுக்கான இத்திகதிகள் எழுந்தமானமான தெரிவுகள் அல்ல. ஒவ்வொரு திகதியும் தன்னகத்தே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான வரலாறுகளைப் பொதிந்து வைத்திருக்கிறது. இத்தினங்கள் தமிழ்த் தேசிய இனத்தின் வலிமிகுந்த போராட்ட வரலாற்றை சந்ததிகள் தோறும் கடத்தும் வரலாற்றுக் கடத்திகளாகும்.

இலங்கை இராணுவம் யுத்தம் முடிந்த கையோடு மாவீரர் துயிலும் இல்லங்களை இருந்த சுவடே தெரியாமல் அழித்தொழித்தது. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை, அதனூடாகப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை மக்கள் மனங்களில் பதியவைக்கும் வரலாற்றுக் கடத்திகளாக இவை அமைந்துவிடும் என்பதே இதற்கான காரணமாகும்.

இதேபோன்றே, மாவீரர் நினைவுநாளை மாற்றியமைப்பதும், எல்லோருக்குமான பொதுவான நினைவுநாளாகக் கடைப்பிடிப்பதும் மக்கள் மனங்களில் எஞ்சியுள்ள நினைவுகளையும் துடைத்தழிக்கும் வரலாற்றுத் திரிபுபடுத்திகளாக அமைந்துவிடும். அந்தவகையில், மாவீரர் நாளை ஆயர் மன்றம் மாற்றியமைப்பது படையினர் மாவீரர் துயிலுமில்லங்களைத் தகர்த்தமைக்கு ஒப்பானதாகிவிடும்.

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளைச் சர்வதேசங்களுக்கு எடுத்துச்சென்ற வெள்ளாடைப் போராளிகளாகக் கத்தோலிக்க ஆயர்கள் மற்றும் குருவானவர்கள் பலர் இருந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் சார்ந்த அமைப்பிடமிருந்து கெடுபிடிகளைக் காரணங்காட்டி இக்கோரிக்கை எழுந்திருப்பது தமிழ் மக்களிடையே பெருங் கவலையைத் தோற்றுவித்துள்ளது. எனவே, ஆயர் மன்றம் தங்களது இந்த முடிவை மீள்பரிசீலனை செய்து, தென்னிலங்கையில் மக்கள் விடுதலை முன்னணியினர் இறந்த தங்கள் தலைவர்களின் நினைவுகளைக் கார்த்திகை வீரர்கள் தினமாக வெளிப்படையாகவே கடைப்பிடிப்பதைப்போன்று தமிழ்மக்களும் போரில் இறந்த போராளிகளினதும் பொதுமக்களினதும் நினைவுநாட்களைக் கடைப்பிடிக்கும் உரித்துடையவர்கள் என்பதை நிலைநாட்டுவதற்குத் தொடர்ந்து குரல்கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்

 

https://www.ilakku.org/changing-the-heros-memorial-would-be-tantamount-to-destroying-the-tires/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இவர்களாக எடுத்த முடிவா என்பதில் ஐயமுள்ளது. யாருடைய தூண்டுதலிலோ  அல்லது உத்தரவிலோ நடைபெற்றிருக்கலாம் என்றே நினைக்கின்றேன். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும், மக்களின் அவலங்களின்போதும் ஆலமரம்போன்று அசையாது நின்று குரல்கொடுத்தவர்கள் இப்படியொரு அர்த்தமற்ற சப்பைக்கட்டுகட்டும் முடிவுக்கு எப்படி வரமுடிந்தது. ஏதோவொரு பின்னணியில்லாது நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை, இந்திய படைகள், புலிகள், ஈ பி.ஆர்.எல்.எவ், புளட், இதர தமிழ், முஸ்லீம் ஆயுத குழுக்கள், சிங்கள குண்டர்கள் இவர்கள் கொலை செய்த தமிழ் மக்களை நினைவு கூறும் நாள் எப்போது? மே18, நவம்பர்26/27 பொருத்தம் இல்லையே.

Link to comment
Share on other sites

எந்த நாளை தேர்ந்தெடுக்கலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள்??

5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கை, இந்திய படைகள், புலிகள், ஈ பி.ஆர்.எல்.எவ், புளட், இதர தமிழ், முஸ்லீம் ஆயுத குழுக்கள், சிங்கள குண்டர்கள் இவர்கள் கொலை செய்த தமிழ் மக்களை நினைவு கூறும் நாள் எப்போது? மே18, நவம்பர்26/27 பொருத்தம் இல்லையே.

Link to comment
Share on other sites

58 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கை, இந்திய படைகள், புலிகள், ஈ பி.ஆர்.எல்.எவ், புளட், இதர தமிழ், முஸ்லீம் ஆயுத குழுக்கள், சிங்கள குண்டர்கள் இவர்கள் கொலை செய்த தமிழ் மக்களை நினைவு கூறும் நாள் எப்போது? மே18, நவம்பர்26/27 பொருத்தம் இல்லையே.

பங்குனி 08 2020 பொருத்தமான நாளாக இருக்கும் என எண்ணுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன் மறைமாவட்ட மன்றத்தின் அறிக்கையை இணைக்கமுடியுமா?

ஐந்கரநேசன் ஐயா ஏன் குழம்புகின்றார்?

பாகுபாடு, பாரபட்சம் இன்றி, அவர் அது இவர் இது என முத்திரை குத்தாமல் போரில் கொல்லப்பட்ட அனைத்து தமிழ் மக்களையும் ஓர் தினத்தில் நினைவு கூறுவது சிறப்பானதே.

Link to comment
Share on other sites

1 hour ago, Paanch said:

பங்குனி 08 2020 பொருத்தமான நாளாக இருக்கும் என எண்ணுகிறேன். 

எதற்காக பங்குனி 08 ? புரியவில்லை...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

@கிருபன் மறைமாவட்ட மன்றத்தின் அறிக்கையை இணைக்கமுடியுமா?

ஐந்கரநேசன் ஐயா ஏன் குழம்புகின்றார்?

பாகுபாடு, பாரபட்சம் இன்றி, அவர் அது இவர் இது என முத்திரை குத்தாமல் போரில் கொல்லப்பட்ட அனைத்து தமிழ் மக்களையும் ஓர் தினத்தில் நினைவு கூறுவது சிறப்பானதே.

முன்னர் யாழில் இணைத்திருந்தேன்

👇🏾👇🏾👇🏾

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

3 hours ago, tulpen said:

எதற்காக பங்குனி 08 ? புரியவில்லை...............

 

 பங்குனி 08 என்றால் அது உலகத்திற்கு மார்ச்  21 தானே அது என்ன சிறப்பு நாள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

 

 

 பங்குனி 08 என்றால் அது உலகத்திற்கு மார்ச்  21 தானே அது என்ன சிறப்பு நாள் ?

பூமத்திய ரேகையில் சூரியன் உச்சம் பெறும் நாள்…!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புங்கையூரன் said:

பூமத்திய ரேகையில் சூரியன் உச்சம் பெறும் நாள்…!

ஓம் அவர் புரட்டாசியை விட்டுவிட்டு பங்குனி 08  தெரிவு செய்து இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2021 at 14:45, கிருபன் said:

முன்னர் யாழில் இணைத்திருந்தேன்

👇🏾👇🏾👇🏾

 

 

இணைப்பிற்கு நன்றி கிருபன்.

அறிக்கையில் தவறாக எதுவும் தென்படவில்லை. எனது ஆதரவு உண்டு.

 

On 16/11/2021 at 11:56, nunavilan said:

எந்த நாளை தேர்ந்தெடுக்கலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள்??

 

இலங்கை சுதந்திரம் பெற்றபின் இனவாதம் காரணமாக கொல்லப்பட்ட முதலாவது தமிழன் பலியாகிய நாளை கொல்லப்பட்ட அனைத்து தமிழ் மக்களிற்குமான நினைவு நாளாக கடைப்பிடிக்கலாம்.

மேற்கண்ட தரவு இல்லை என்றால் ஜனவரி ஒன்று ஆங்கில புது வருடம் கழிய ஜனவரி இரண்டாம் திகதி ஒவ்வொரு வருடமும். இலங்கையில் 365 நாட்களும் தமிழ் மக்கள் வெவ்வேறு தரப்பினரால் கொல்லப்பட்டதனால் வருட ஆரம்பத்தில் நினைவு நாள் பொருத்தம் என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீர் நாளை மாற்ற முடியாது. 😡

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை மாவீர் வாரத்தினுள் நினைவுகூரப்படுவதை பரிசீலிக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாள் பற்றி அறிக்கையில் ஏதும் இல்லையே. முழுமையாக வாசித்து விளங்காமலே பொங்கி எழுவதோ? 

அவர்கள் போரில் மடிந்தவர்களுக்கான பிரார்த்தனைக்கு ஓர் நாளை ஒதுக்கி உள்ளார்கள். அவ்வளவே. இவ்வாறே இலங்கையில் உள்ள இந்து அமைப்புக்களும் இந்து கோயில்களில் ஓர் நாளை ஒதுக்கி இலங்கையில் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு பிரார்த்தனை செய்யலாம், வழிபாடுகளில் ஈடுபடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை மாவீர் வாரத்தினுள் நினைவுகூரப்படுவதை பரிசீலிக்கலாம். 

 

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினால் உரிமை கோரியும், உரிமை கோராமலும் சுட்டும், சித்திரவதை செய்தும் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் ஆயிரக்கணக்கு..

உங்கள் அம்மாவோ, அப்பாவோ, சகோதரமோ, நெருங்கிய உறவினரோ, நண்பனோ, நண்பியோ, ஆசானோ.. இந்த பட்டியலில் அடங்கினால்.. இவர்களை மாவீரர் தினத்தில் நினைவுகூறல் செய்வதை நீங்கள் ஏற்று கொள்வீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

 

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினால் உரிமை கோரியும், உரிமை கோராமலும் சுட்டும், சித்திரவதை செய்தும் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் ஆயிரக்கணக்கு..

உங்கள் அம்மாவோ, அப்பாவோ, சகோதரமோ, நெருங்கிய உறவினரோ, நண்பனோ, நண்பியோ, ஆசானோ.. இந்த பட்டியலில் அடங்கினால்.. இவர்களை மாவீரர் தினத்தில் நினைவுகூறல் செய்வதை நீங்கள் ஏற்று கொள்வீர்களா?

தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, யுத்தத்தில் இறந்த, காணாமல் ஆக்கப்பட்ட, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்கையில் காணாமல் போன, இறந்துபோன....... ஒட்டுமொத்த தமிழரையும் நினைவு கூர வேண்டும். 

இதில் 2ம் கேள்விக்கே இடமில்லை. 

ஆனால் எதை எப்படி, எப்போ என்பதுதான் கரிசனைக்குரியது.

நிச்சயமாக  ஒருநாள் இது நடைபெறும். 

தமிழர் எல்லோரையும் இது ஒன்று சேர்க்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.