Jump to content

கிரிப்டோகரன்சி முறைகேடுகள்: இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது?ஒளிந்திருக்கும் ஆபத்துகள் என?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிரிப்டோகரன்சி முறைகேடுகள்: இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது?ஒளிந்திருக்கும் ஆபத்துகள் என?

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
17 நவம்பர் 2021, 03:15 GMT
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்
பிட்காயின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிரிப்டோ கரன்சி குறித்த முறைகேடுகள், புகார்கள் இந்தியாவிலும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், அதனை ஒழுங்குபடுத்துவதற்கான கட்டுப்பாடுகள், விதிகள், சட்டங்கள் குறித்த விவாதம் எழுந்திருக்கிறது. கிரிப்டோ கரன்சிகளைக் கட்டுப்படுத்த முடியுமா? அதுவரை முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

2020ஆம் ஆண்டு நவம்பரில் ஸ்ரீ கிருஷ்ண ரமேஷ் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீகி என்ற நபரை பெங்களூர் நகர குற்றப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கைது செய்து விசாரித்தபோது, அதிர்ந்துபோனார்கள். பிட்காயின்களுக்கான நிழல் வலையமைப்பைப் (DarkNet) பயன்படுத்தி போதைப் பொருளை வாங்க முயன்றார் என்ற குற்றச்சாட்டில்தான் ரமேஷ் கைதுசெய்யப்பட்டார்.

ஆனால், காவல்துறை விசாரணையில் அவர் கூரிய தகவல்கள் தலையைச் சுற்றவைத்தன. பல்வேறு நபர்களின் க்ரிப்டோ அக்கவுன்ட்களில் நுழைந்து பிட்காயின்களை எடுத்ததாகவும் தற்போது தன்னிடம் 31 பிட்காயின்கள் இருப்பதாகவும் அந்த நபர் கூறினார்.

இன்றைய தேதியில் ஒரு பிட் காயினின் மதிப்பு சுமார் 44 லட்சத்து 83 மூன்றாயிரம் ரூபாய் என்ற நிலையில், மிகப் பெரிய ஹாக்கர் தங்கள் வசம் சிக்கிவிட்டதாக காவல்துறை கருதியது. மேலும் நடந்த விசாரணையில் பிட்ஃபைனெக்ஸ் என்ற பிட்காயின் எக்சேஞ்சை தான் இரண்டு முறை ஹாக் செய்ததாகத் தெரிவித்தார் ஸ்ரீகி.

அதில் கிடைத்த பணத்தை வைத்து ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்கி குடித்ததில் என ஒரு நாளைக்கு 3 லட்ச ரூபாய் வரை செலவழித்ததாகவும் ரமேஷ் தெரிவித்தார்.

இதுதவிர, 2019ல் கர்நாடக அரசின் இணைய தளங்களை ஹாக் செய்து பணம் பரிவர்த்தனை செய்ததாகவும் அவர் கூறியபோது, காவல்துறையினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதையடுத்து இந்த ஆண்டு ஏப்ரல் 28ல் சிபிஐக்கும் இன்டர்போலுக்கும் தகவல் கொடுத்தது. ஆனால், இதற்குப் பிறகுதான் உண்மையான அதிர்ச்சி காத்திருந்தது.

காவல்துறையினர் ரமேஷிடம் உன்னுடைய பிட்காயின் அக்கவுண்டை காண்பி என்றதும் ஏதோ ஒரு பிட்காயின் கணக்கை தன்னுடையதெனக் காண்பித்தார் ஸ்ரீரமேஷ். அந்த கணக்கில் 31.8 பிட்காயின்கள் இருந்தன. இதையடுத்து காவல்துறை விறுவிறுப்பாக தனக்கென ஒரு பிட்காயின் அக்கவுண்டைத் துவங்கியது. காரணம், ரமேஷின் பிட் காயின்களைக் கையகப்படுத்தினால், அதனை பரிமாற்றம்செய்ய ஒரு கணக்கு வேண்டுமென்பதற்காக இந்தக் கணக்குத் துவங்கப்பட்டது.

அதன் பிறகு நீதிமன்றத்தின் ஆணையைப் பெற்று, மீண்டும் ரமேஷின் பிட்காயின் கணக்கைப் போய்ப் பார்த்தால் அதில் 31.8 பிட்காயினுக்குப் பதிலாக 186.811 பிட் காயின்கள் இருந்தன. காவல்துறை குழம்பிப்போனது. பிறகு, சைபர் கிரைம் நிபுணர்களை வைத்து ஆராய்ந்தபோது, தன்னுடைய கணக்கு என ரமேஷ் சொன்னது உண்மையில், ஒரு பிட்காயின் எக்சேஞ்ச் என்பதும் அதற்கான தனிப்பட்ட திறவுகோல் ரமேஷிடம் இல்லை என்பதும் காவல்துறைக்குப் புரிந்தது.

மேலும் தொடர்ந்து நடத்திய தொழில்நுட்ப சோதனைகளில், ரமேஷ் சொன்னவற்றில் பல hacking சம்பவங்கள் பொய் எனத் தெரியவந்தது.

ஆனால், இதற்குள் எதிர்க்கட்சிகள் ஆளும் பா.ஜ.கவை வறுத்துஎடுத்துவிட்டன. பிட் காயின் முறைகேட்டில், பா.ஜ.க. தலைவர்களுக்கும் தொடர்பிருப்பதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டினார்.

இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் புரிந்தது என்னவென்றால், இந்தியாவில் கிரிப்டோ கரன்சி முதலீடுகள் மட்டுமல்ல, முறைகேடுகள் நடந்தால்கூட அவற்றை விசாரிப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன என்பதுதான். இந்த நிகழ்வுக்குப் பிறகு இந்திய அரசு, கிரிப்டோகரென்சி முதலீடுகளை ஒழுங்குபடுத்துவது குறித்து விரைவிலேயே முடிவுசெய்ய வேண்டுமென்பதை உணர்ந்திருக்கிறது.

கிரிப்டோகரென்சி என்றால் என்ன?

பிட்காயின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிரிப்டோகரன்சி என்பது டிஜிட்டல் வடிவிலான எக்சேஞ்ச். இங்கு கிரிப்டோ காயின்களை வைத்திருப்பவர்களின் விவரம் பாதுகாக்கப்படும். இந்த க்ரிப்டோ காயின்கள் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். புதிதாக காயின்களை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதாக இருக்காது. இவற்றை ஒருவகையில் fiat currency என்றும் அழைக்க முடியும். அதாவது, இந்த காயின்கள் தங்கம், டாலர்கள் போன்ற எதையும் அடிப்படையாகக் கொண்டவையல்ல.

2009ல் சடோஷி நகமோடோ (புனைப்பெயர்தான்) என்பவர் பிட்காயின் என்ற க்ரிப்டோ கரன்சியை உருவாக்கினார். இந்த பிட்காயினுக்குப் பிறகு பல கிரிப்டோகரென்சிகள் உருவாகி விட்டன. ஆனால், உலக நாடுகள் இந்த கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையை ஏற்பதில்லை.

இந்த பிட்காயின்களுக்கு மையப்படுத்தப்பட்ட அதிகாரம் என்று எதுவும் கிடையாது. புதிய பிட்காயின்கள் ஒரு ஒருங்கிணைந்த முடிவின்படியே உருவாக்கப்படும்.

பிறகு முதன் முதலாக இந்த ஆண்டு ஜூன் மாதம் எல்சல்வடார் பிட்காயினை சட்டரீதியான பணமாக ஏற்றுக்கொண்டது. அதற்குப் பிறகு ஆகஸ்ட்டில் க்யூபா இதனை ஏற்றது. ஆனால், பிட்காயின் பரிவர்த்தனை பெரிய அளவில் நடைபெறும் சீனா, செப்டம்பர் மாதத்தில் அனைத்து பிட்காயின் பரிவர்த்தனைகளையும் தடைசெய்தது.

கிரிப்டோகரன்சிகள் குறித்த அச்சம்

பிட்காயின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

செலாவணி என்பது எப்போதுமே அரசுக்கு உரிமையானது. இறையாண்மை பெற்ற அரசின் மையப் புள்ளியே அதுதான். ஆனால், க்ரிப்டோகரன்சிகளின் வருகை இந்த இறையாண்மையைக் கேள்விக்குட்படுத்துகிறது. உலகம் முழுவதும் உள்ள செலாவணிகளின் மதிப்பு (அதாவது டாலர்கள், ரூபாய் நோட்டுகள், பவுண்டுகள் எல்லாம் சேர்த்து) 80 ட்ரில்லியன் டாலர். ஆனால், அறிமுகமாகி 12 ஆண்டுகளில் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு 3 ட்ரில்லியன் டாலராக உள்ளது.

ஆகவேதான் உலகம் முழுவதும் உள்ள அரசுகளிடம் இந்த கிரிப்டோகரன்சிகளை எதிர்கொள்வது குறித்த அச்சம் தொடர்ந்து நீடித்து வருகிறது. யாருடைய கட்டுப்பாட்டிலும் இயங்காத இந்த செலாவணியை ஏற்பது குறித்து எல்லா நாடுகளுமே தயக்கம் காட்டுகின்றன.

தவிர, இந்த க்ரிப்டோகரன்சிகளில் இதுவரை நடந்த மோசடிகள், திருட்டுகள் ஆகியவையும் இதன் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. 2014ஆம் ஆண்டில், உலகின் மிகப் பெரிய பிட்காயின் எக்சேஞ்சான மெட்காக்ஸ் (Mt. Gox) திவாலானதாக அறிவித்தது.

காரணம், அதன் வசம் இருந்த 473 மில்லியன் டாலர் மதிப்புள்ள பிட்காயின்களை யாரோ திருடிவிட்டார்கள். இவையனைத்தும் வாடிக்கையாளர்களுக்குச் சொந்தமானவை. அப்போது இருந்த மொத்த பிட்காயின்களில் 7 சதவீதம் அந்தத் திருட்டில் பறிபோயிருந்தது.

வேறு சில தருணங்களில், பணத்தை முறைகேடாகப் பெற பலர் இந்த பிட்காயின்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். வேறு சிலர் இந்த கிரிப்டோகரன்சிகளை பொன்சி திட்டம், பிரமிட் திட்டம், எம்எல்எம் போன்ற மோசடித் திட்டங்களுடன் ஒப்பிடுகின்றனர்.

இந்தியாவில் கிரிப்டோகரன்சியின் நிலை என்ன?

பிட்காயின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவைப் பொருத்தவரை கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளோ அதில் செய்யப்படும் முதலீடுகளோ அரசால் அங்கீகரிக்கப்பட்டவையல்ல. அரசின் எந்த கண்காணிப்பும் அமைப்பும் அதனைக் கண்காணிக்கவில்லை. இதில் முதலீடு செய்பவர்கள் தங்கள் சொந்த ரிஸ்க்கிலேயே முதலீடுகளைச் செய்துவருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகவே இந்தியாவின் முன்னணி நாளிதழ்களில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யச்சொல்லிக் கோரும் விளம்பரங்கள் முழுப் பக்க வண்ண விளம்பரங்களாக தொடர்ந்து வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

பிரதானமான கிரிப்டோகரன்சியான பிட்காயினின் விலை மிக அதிகமாக இருப்பதால், அதனை பகுதி பகுதியாக பிரித்து முதலீடுகளைச் செய்யும்வகையில் இந்த விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. குறைந்தது நூறு ரூபாயிலிருந்து இந்த கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்யலாம் என இந்த விளம்பரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்தான் கிரிப்டோகரன்சியை ஒழுங்குபடுத்துவதன் அவசியம் குறித்து இந்திய அரசு உணர ஆரம்பித்திருக்கிறது. நவம்பர் 15ஆம் தேதி திங்கட்கிழமையன்று நிதிக்கான நிலைக்குழு க்ரிப்டோகரென்சி குறித்த முதல் கூட்டத்தை நடத்தியது. இன்டர்நெட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா, லட்சுமி காயின் போன்ற க்ரிப்டோ நிறுவனங்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றன.

இந்தக் கூட்டத்தில் க்ரிப்டோ சந்தையை ஒழுங்குபடுத்தலாமே தவிர, தடைசெய்யக்கூடாது என இந்த நிறுவனங்கள் கூறியதாகத் தெரிகிறது. ஆனால், நிலைக்குழுவின் உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு அடிப்படையான கேள்விகளுக்கு முழுமையான பதிலளிக்க கிரிப்டோ நிறுவனங்களின் பிரதிநிதிகளால் இயலவில்லையெனக் கூறப்படுகிறது.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது விரைவிலேயே கிரிப்டோகரன்சி குறித்த முடிவை இந்திய அரசு அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், க்ரிப்டோகரன்சியை ஒழுங்குபடுத்துவது என்பது இயலாத காரியம் என்கிறார் காங்கிரசைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

"இந்த கிரிப்டோகரன்சியே Greater fool கோட்பாட்டின் அடிப்படையில்தான் இயங்குகிறது. கூடுதல் விலை கொடுத்து வாங்கும் ஆட்கள் இருக்கும்வரை இது தொடர்ந்து நடக்கும். பிறகு விலை விழ ஆரம்பிக்கும். இதனை ஒழுங்குபடுத்துவது குறித்து பேசுகிறார்கள். எப்படி இதனை ஒழுங்குபடுத்துவார்கள்? யார் இதனை இயக்குகிறார்கள் என்று தெரியாதபோது யாரை இவர்கள் ஒழுங்குபடுத்துவார்கள்? அது நடக்காத காரியம்" என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

தவிர, பிட்காயின் மட்டும்தான் கிரிப்டோகரன்சி என பலரும் கருதுகிறார்கள். அதுபோல நூற்றுக்கணக்கான காயின்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் யார் இயக்குகிறார்கள், கட்டுப்படுத்துகிறார்கள் என்பதே உலகில் யாருக்கும் தெரியாது. ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட ஒரு கிரிப்டோகரென்சியில் முதலீடு செய்து, அது வீழ்ந்துவிட்டால் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும் என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

உதாரணமாக, சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ஸ்க்விட் கேமை மையமாக வைத்து, ஸ்க்விட் காயின் என்ற பெயரில் ஒரு க்ரிப்டோகரன்சி வெளியானதையடுத்து நடந்த சம்பவங்களைச் சுட்டிக்காட்டுகிறார் அவர். அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி துவக்கத்தில் ஒரு சென்டிற்கு விற்பனையானது. பிறகு கிடுகிடுவென விலை உயர்ந்து ஒரு காயினின் விலை 2,861 டாலருக்கு விற்பனையானது.

ஆனால், அன்றைய தினம் அந்த க்ரிப்டோவை உருவாக்கியவர்கள் அனைத்து காயின்களையும் விற்று, பணமாக மாற்றிக்கொண்டு வெளியேறிவிட ஸ்க்விட் காயினின் மதிப்பு ஒன்றுமே இல்லாமல் போனது.

ஆனந்த் ஸ்ரீநிவாஸன்

"இந்தியாவில் எத்தனை லட்சம் கோடி ரூபாய் இந்த கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறதென்பது யாருக்கும் தெரியாது. சிலர் ஆறு லட்சம் கோடி என்கிறார்கள். சிலர் 3 லட்சம் கோடி என்கிறார்கள். அரசு நினைத்தால், வங்கிகளில் இருந்து ஒரு அளவுக்கு மேல் க்ரிப்டோ முதலீடுகளுக்குச் செல்வதை கட்டுப்படுத்தலாம். அவ்வளவுதான் செய்ய முடியும்." என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

இதுதவிர, கிரிப்டோகரன்சிகளின் விலை ஏற்றம் இறக்கம் எல்லாம் மிக வேகமாக நிகழும். அதன் பின்னணிகளைச் சாதாரண முதலீட்டாளர் புரிந்துகொள்ளவே முடியாது என்பது இதனை மேலும் சிக்கலாக்குகிறது. உதாரணமாக, 2017ஆம் ஆண்டு ஒரு பிட்காயினின் விலை சுமார் 20,000 டாலராக இருந்தபோது, ஒரே நாளில் திடீரென மூன்றில் ஒரு பங்கு விலை குறைந்தது. 2018ல் இதன் விலை வெறும் 3,122 டாலர் அளவுக்கு வந்தது. கிரிப்டோசந்தையில் இருந்த பல லட்சம் கோடி ரூபாய் காணாமல் போனது.

ஆகவே, ஒரு முதலீட்டாளரைப் பொறுத்தவரை, எந்த அளவுக்கு பணத்தை இழக்கத் தயாராக இருக்கிறாரோ அந்த அளவுக்கு மட்டுமே அதில் முதலீடுசெய்ய வேண்டும் என ஆலோசனையும் வழங்கப்படுகிறது.

ஆனால், கிரிப்டோகரன்சிகளின் ஆதரவாளர்களைப் பொறுத்தவரை, குறைந்த காலகட்டத்தில் லாபம் சம்பாதிக்க சிறந்த வழி க்ரிப்டோகரன்சிதான் என்கிறார்கள். தவிர, எதிர்காலத்தில் பணவீக்கத்தை இதனால் கட்டுப்படுத்தவும் முடியும் என்கிறார்கள்.

ஆனால், முதலீட்டாளர்கள் கவனம் கொள்ள வேண்டியது, கிரிப்டோகரன்சி விளம்பரங்களின் கீழே சிறிய எழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எச்சரிக்கை வாசகத்தைத்தான். "க்ரிப்டோகரன்சிகள் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத டிஜிட்டல் சொத்துகள். சட்டபூர்வமாக எங்கும் பரிவர்ததனை செய்யத்தக்கதல்ல. கடந்தகால செயல்திறன் வருங்கால பலன்களுக்கு உத்தரவாதம் ஆகாது. முதலீடு செய்வதற்கு முன் கவனமாக இருங்கள்" என்கிறது அவ்வாசகம்.

https://www.bbc.com/tamil/business-59310181

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையின் கருது உருவாக்கம் சரியாக படவில்லை.


கிரிப்டோ ரெகுலேஷன் ஐ  ஒரு நாட்டல் செய்யமுடியாது.

ரெகுலேஷன் ஐ பற்றி எழுத வேண்டும் என்று நான் எண்ணிக்கொண்டு இருக்கும் போது, இந்த கட்டுரை வந்தது நல்லது. 

இது வங்கித்துறை Basel ரெகுலேஷன் போல, நாடுகள் ஒன்றிணைந்து செய்யப்பட வேண்டியது.

நேரம் இருக்கும் என்றால்,விரிவாக எழுதலாம்.

அனால், நேற்று, இந்த crypto இன் ஓர் பகுதிககி ரெகுலேஷன் ஐ  infrastructure bill உடன் இணைத்து US பிரகடப்படுத்தியது.

அதுவும், ஓர் காரணம் கிரிப்டோ மார்க்கெட் 7 - 10 % இழப்புக்கு இடையில்  நேற்று ஊஞ்சல் ஆடியதற்கு. 

உண்மையான பிரச்சனைகளும், கரிசனைகளும் இருக்கிறது, ரெகுலேஷன் செயப்படுவதத்திற்கு.

அந்த கரிசனசயை காட்டிக் கொண்டு, அரசாங்கங்களும், மத்திய வங்கிகளும், crypto ஐ ஏதோ ஓர் வழியில் மூடி விட வேண்டும் என்று கங்கணம் கடிக்க கொண்டு நிற்கின்றன.

அதற்கண, உந்துதலை பங்கு வர்த்தக திரியில் பதியப்பட்டு உள்ளது, cyrpto இன் அடிப்படை பொருளாதார நியாயப்பாடுகளை மேலோட்டமாக பார்த்த பொது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிட்காயின் பற்றி உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக லிங்க்டு இன்னில் அலெக்ஸ் லீ சங்க் மெங்க் என்பவரால் எழுதப்பட்டது இது. Thanks Alex Liew Chung Mung

கொஞ்ச காலத்துக்கு முன்பு ஒரு வியாபாரி ஒரு ஊருக்கு அருகே நிறைய குரங்குகள் இருப்பதைப் பார்த்தான். அவன் அந்த ஊருக்கு வந்தான். 

அங்குள்ள மக்களிடம் எனக்கு குரங்குகள் வேண்டும். ஒரு குரங்குக்கு 100 ரூபாய் தருகிறேன் என்றான். 

இவன் பைத்தியக்காரன் போல. 100 ரூபாய் கொடுத்து குரங்குகளை வாங்குகிறான் என்று பேசிக் கொண்டார்கள்.

கிராமத்தில் ஒரு சிலர் குரங்குகளைப் பிடித்து அந்த வியாபாரியிடம் விற்பனை செய்தனர். இந்தச்செய்தி கிராமம் எங்கும் காட்டுதீ போல பரவின. கிராமத்தார் பலரும் குரங்குகளைத் தேடிக் கண்டுபிடித்து வியாபாரியிடம் விற்பனை செய்தனர். இப்படியே பெரும்பான்மையான குரங்களை பிடித்து விற்று விட்டனர்.

சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்த வியாபாரி அந்தக் கிராமத்துக்கு வந்தான். எனக்கு மேலும் குரங்குகள் தேவை, இனி ஒரு குரங்கிற்கு 200 ரூபாய் கொடுக்கிறேன் என்று அறிவித்தான்.

இந்தச் செய்தி மீண்டும் காட்டுத் தீ போல பரவியது. மிச்சம் மீதி இருக்கும் குரங்குகளை மக்கள் தேடிப் பிடித்து அவனிடம் விற்றனர்.

சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்த வியாபாரி கிராமத்திற்கு வந்தான். 

அவனுக்கு மேலும் குரங்குகள் தேவை இருப்பதால் இப்போது ஒரு குரங்குக்கு 500 ரூபாய் தருவதாகச் சொன்னான்.

மக்களுக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான். பிடிபடாமல் இருந்த ஒரு சில குரங்குகளையும் பிடித்து அவனிடம் விற்று விற்றனர்.

சில நாட்களுக்குப் பிறகு அந்த வியாபாரி மீண்டும் அக்கிராமத்திற்கு வந்தான்.

கிராமத்தாரிடம் நான் வெளியூர் செல்லப் போகின்றேன் எனவும், நான் திரும்ப வரும் போது எனக்கு குரங்குகள் வேண்டுமென்றும், அக்குரங்குகளுக்கு 1000 ரூபாய் தருவதாகவும் சொன்னான். 

இங்கே எனக்குப் பதிலாக எனது வேலையாளை நியமித்திருப்பதாகவும், எனக்குப் பதிலாக நீங்கள் இவனிடம் தொடர்பு கொள்ளலாம் எனவும், நான் வந்ததும் 1000 ரூபாய் கொடுத்து குரங்குகளை வாங்கிக் கொள்கிறேன் எனவும் அறிவித்து விட்டுச் சென்று விட்டான்.

மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லாக் குரங்குகளையும் பிடித்து இவனிடம் விற்று விட்டோம். இனி குரங்குகளுக்கு எங்கே போவது? சுளையாக 1000 ரூபாய் கிடைக்குமே? என்ன செய்வது என்று புரியாமல் தத்தளித்தனர். இந்தச் செய்தியும் எங்கும் காட்டுத்தீ போல பரவியது.

அந்த நேரத்தில் வியாபாரியின் ஆள், ”என்னிடம் குரங்குகள் உள்ளன. அக்குரங்குகளை நான் உங்களுக்கு 700 ரூபாய்க்குத் தருகிறேன். வியாபாரி வந்தவுடன் நீங்கள் அதே குரங்குகளை 1000 ரூபாய்க்கு விற்றுக் கொள்ளலாம்” என்றுச் சொன்னான்.

ஆஹா, 300 ரூபாய் கிடைக்குமே என்ற ஆசையில் பணக்காரர்கள் நிறைய குரங்குகளை வாங்கினர். ஏழைகள் தங்களிடம் இருக்கும் பணத்துக்கு தக்கவாறு அவனிடம் இருந்து குரங்குகளை வாங்கி பாதுகாத்து வந்தனர்.

சிறிது நாட்கள் சென்றன. வியாபாரியின் வேலையாளைப் பார்க்கச் சென்றார்கள். அங்கு ஒருவரும் இல்லை. பின்னர் அந்த வியாபாரியும் வரவில்லை.

இந்தக் கதையில் குற்றவாளி யார்? யோசித்துப் பாருங்கள். இதற்கு ஒரு பெயர் உண்டு. இதைத்தான் An analogy in  Leyman's Terms என்பார்கள். நெட்டில் தேடிப் படித்துக் கொள்ளுங்கள்.

கதையைப் படித்து விட்டீர்களா? 

பிட்காயின் வியாபாரம் என்ன என்பதை விளக்கமாக இக்கதை உங்களுக்குச் சொல்லி இருக்கும்.

பிட்காயின் லாபகரமானது, பிளாக் செயின் டெக்னாலஜி மிகவும் பாதுகாப்பானது என்றெல்லாம் யூடியூப்பில் பலரும் பலவாறு தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். 

பிளாக்செயின் டெக்னாலஜி என்றால் ஏதோ பெரிய டெக் போல என பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை. 

டேட்டாபேஸ் தரவுகளை பகிர்ந்து கொள்ளும் தரவுகளின் பரவலாக்கம் ஒரே இடத்தில் இல்லாமல் பல இடத்திலும் பலராலும் மெயிண்டெயின் செய்வதை தான் பிளாக்செயின் டெக்னாலஜி நாளை உலகை ஆளப்போகிறது என்றெல்லாம் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பல நாடுகளிலும் பிளாக்செயின் டெக்னாலஜியை டிஜிட்டல் டிரான்சாக்ஸனுக்குப் பயன்படுத்துகிறார்கள். அவ்வளவுதான். ஒரு நாட்டின் கரன்சியை பிளாக்செயின் மூலம் காயினாக மாற்றுவதெல்லாம் தனக்குத் தானே தூக்கு மாட்டிக் கொள்வது போல. எந்த டெக்னாலஜி கான்செப்டாக இருந்தாலும் அது உடைக்கக் கூடியதே என்பதை எவரும் மறந்து விடாதீர்கள்.

பிட்காயின் முதலீடு மொத்தமாக உங்களிடம் இருக்கும் துட்டைத் துடைத்து எடுத்துக் கொண்டு சென்று விடும்.

https://thangavelmanickadevar.blogspot.com/2021/11/blog-post_23.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

பிட்காயின் பற்றி உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக லிங்க்டு இன்னில் அலெக்ஸ் லீ சங்க் மெங்க் என்பவரால் எழுதப்பட்டது இது. Thanks Alex Liew Chung Mung

கொஞ்ச காலத்துக்கு முன்பு ஒரு வியாபாரி ஒரு ஊருக்கு அருகே நிறைய குரங்குகள் இருப்பதைப் பார்த்தான். அவன் அந்த ஊருக்கு வந்தான். 

 

ஏற்கவே, பங்கு திரியில் சொல்லப்பட்டு உள்ளது, சிறிது மாற்றத்துடன்.

 

எல்லாமே எதிர்மறையாக இருந்தும் கூட, கிரிப்டோ சந்தை முரட்டுக் காளை தனமாக திமிறுகிறது.

 

7 hours ago, ஏராளன் said:

பிட்காயின் வியாபாரம் என்ன என்பதை விளக்கமாக இக்கதை உங்களுக்குச் சொல்லி இருக்கும்.

பிட்காயின் லாபகரமானது, பிளாக் செயின் டெக்னாலஜி மிகவும் பாதுகாப்பானது என்றெல்லாம் யூடியூப்பில் பலரும் பலவாறு தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். 

எந்த பொருளாயினும்,  வாங்க, விற்க உகந்த வேளை, தருணம் அறிந்து செய்தலால் தான் இலாபம்.

இது சாதாரண பெடிக் கடைக்கும் பொருந்தும், பலதேசியக் கம்பனிக்கு பொருந்தும். 

ஏனையவற்றை விளக்க என்னிடம் நேரம் இல்லை. அனால், பங்கு   திரியில் சிறிது விபரமாக உள்ளது.

அனால், இணைய இணைப்பையும் பார்க்கவும்.

https://ripple.com/customer-case-study/santander/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.