Jump to content

கள்ளக்குறிச்சியில் குறவர் இனத்தவர் மூவர் கைதாகி துன்புறுத்தப்படுவதாக புகார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக்குறிச்சியில் குறவர் இனத்தவர் மூவர் கைதாகி துன்புறுத்தப்படுவதாக புகார்

2 மணி நேரங்களுக்கு முன்னர்
கள்ளக்குறிச்சி
 
படக்குறிப்பு,

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ள ஓம் பிரகாஷின் மனைவி புவனேஸ்வரி

கள்ளக்குறிச்சியில் குறவர் சமுதாயத்தை சேர்ந்த மூன்று பேர் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கில் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

1990களின் துவக்கத்தில் கடலூர் மாவட்டத்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ஜெய் பீம் திரைப்படம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மறுபடியும் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருட்டுக் குற்றங்களில் சட்டவிரோதமாக கைதுசெய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் தில்லை நகரைச் சேர்ந்த ஐந்து பேர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, அதில் மூன்று பேர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பிரகாஷ் என்பவரின் மனைவியான புவனேஸ்வரி தனது கணவரும் வேறு இரண்டு பேரும் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதரை சந்தித்து இது தொடர்பாக மனு ஒன்றையும் அளித்திருக்கிறார். அவர் அளித்திருக்கும் மனுவின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது நவம்பர் 14ஆம் தேதி இரவு சுமார் சுமார் 11.45 மணியளவில், புவனேஸ்வரியின் கணவர் பிரகாஷ் (25), அவரது உறவினரான தர்மராஜ் (35), செல்வம் (55) ஆகியோர் தங்களது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது, சீருடை அணியாத காவலர்கள் தூங்கிக் கொண்டிருந்தவர்களை அடித்து வேனில் இழுத்துச் சென்றதாகத் தெரிவித்திருக்கிறார்.

அப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில், திங்கட்கிழமையன்று சின்னசேலம் காவல் நிலையத்திற்குச் சென்று புவனேஸ்வரி விசாரித்தபோது அவர்கள் அங்கில்லை என்பதும் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் இருப்பதும் தெரியவந்திருக்கிறது.

இதனிடயே மீண்டும் ஊருக்குள் வந்த காவல் துறையினர் புவனேஸ்வரி - பிரகாஷ் தம்பதியின் உறவினர்களான பரமசிவம் (42), சக்திவேல் (29) ஆகிய மேலும் இருவரையும் வேனில் அழைத்துச் சென்றதாக புவனேஸ்வரி தெரிவித்திருக்கிறார்.

மாவட்ட ஆட்சியரிடம் மனைவி புகார்

தாங்கள் பட்டியலின குறவர் ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதாலும் படிப்பறிவில்லாத ஏழைகள் என்பதாலும் தங்களது சமூகத்தை காவலர்கள் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும் அந்த 15 காவலர்கள் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென புவனேஸ்வரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரியிருக்கிறார்.

குறவர் கைது

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவர்கள் எங்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பது தெரியாத நிலையில், நவம்பர் 16ஆம் தேதி இரவு 11 மணியளவில் செல்வம், பரமசிவம் ஆகிய இருவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் துறையினரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு கேட்டபோது, "கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராயபாளையம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பேரை வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் தொடர்பாக காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதில் வழிப்பறி, கொள்ளை மற்றும் வீடுகளுக்குள் புகுந்து திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகள் தொடர்பாக மூன்று பேரது கை ரேகைகள் ஒத்துப்போகின்றன. மீதமுள்ள இருவரை (செல்வம், பரமசிவம்) அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விட்டோம்.

இவர்கள் சின்ன சேலம், கீழ் குப்பம், கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல இடங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது," என தெரிவித்தனர்.

விசாரணையில் என்ன நடந்தது?

இதற்கிடையில் இந்த மூன்று பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் 22 குற்றங்களை ஒப்புக்கொண்டிருப்பாதாகவும் 12 வழக்குகளில் பொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இவர்கள் மூவரும் சின்ன சேலம் கூகையூர் ரயில்வே நிலையம் அருகில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

குறவர் கைது

பட மூலாதாரம்,GETTY IMAGES

கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட செல்வம் என்பவர் பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் பிரகாசையும் தர்மராஜையும் கட்டை விரலைக் கட்டித் தொங்கவிட்டதாகவும் அவர்கள் கத்தியதைத் தன்னால் காது கொடுத்துக் கேட்க முடியவில்லையென்றும் அந்த அளவுக்குக் காவல்துறை சித்ரவதை செய்ததாகவும் செல்வம் அந்த வீடியோவில் விவரிக்கிறார்.

தற்போது இந்த விவகாரத்தை விட்னஸ் ஃபார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பு கையில் எடுத்துப் போராடிவருகிறது. இது குறித்து பிபிசியிடம் பேசிய அந்த அமைப்பின் செயல் இயக்குனர் ஜெயசுதா, "இன்று காலையில் பிரகாஷை அவரது வீட்டிற்கு வெள்ளை வேனில் அழைத்துவந்த காவல்துறையினர் அவரது மனைவி புவனேஸ்வரி முன்பாகவே அடித்து சித்ரவதை செய்துள்ளனர். திருட்டு நகையைக் கொடுத்துவிடும்படி கூறியே இவ்வாறு தாக்கியுள்ளனர். தங்களிடம் நகை ஏதும் இல்லையென புவனேஸ்வரி பல மணி நேரம் கதறிய பிறகு, உங்களிடமிருந்து எப்படி நகையை வாங்குவது என்பது எங்களுக்குத் தெரியும் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளனர். அதற்கு முன்பாகவே திருட்டுப்போன வீடுகளில் பிரகாஷ் மற்றும் தர்மராஜின் கைரேகைகள் பதிவாகியுள்ளன," என்கிறார்.

இந்த நிலையில், காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்ட தர்மராஜ், பிரகாஷ் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சக்திவேல் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-59319471

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக்குறிச்சியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட குறவர்களுக்கு நடந்தது என்ன?

  • நடராஜன் சுந்தர்
  • பிபிசி தமிழுக்காக
19 நவம்பர் 2021
புவனேஷ்வரி
 
படக்குறிப்பு,

புவனேஷ்வரி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஐந்து பேரில் மூவரை குற்ற ஆதாரங்கள் அடிப்படையில் கைது செய்ததாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மூலமாக கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் பகுதி நகைக்கடைகளின் 38 சவரன் நகையை மீட்டதாக காவல் துறை தரப்பில் வெளியிட்ட செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தர்மராஜ் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும் நவம்பர் 17ஆம் தேதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்‌. இதையடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்றாவது நபரான சக்திவேல் அன்றிரவு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை கள்ளக்குறிச்சி கொங்கராபாளையம் கிராமத்தில் சென்று பிபிசி தமிழ் சந்தித்தது.

கடந்த நவம்பர் 14ஆம் தேதி அன்று இரவு சுமார் 11.30க்கு மேல் வீட்டிற்கு திடீரென சென்ற காவல் துறையினர் கணவர் பிரகாஷ் மற்றும் உறவினர்கள் செல்வம் மற்றும் தர்மராஜ் ஆகிய மூவரை எந்த காரணமும் தெரிவிக்காமல் அடித்து அரை நிர்வாணத்துடன் இழுத்துச் சென்றதாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரகாஷின் மனைவி புவனேஸ்வரி கூறுகிறார்.

"அடுத்த இரண்டு நாட்கள் காவல் துறையினர் அவர்களை எங்கு வைத்து விசாரணை செய்கிறார்கள் என்பது தெரியாமல் சின்னசேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களை தேடி அலைந்தோம். பிறகு அவர்களை மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தோம்.

யாரிடம் உதவி கேட்பது என்பதும் தெரியவில்லை. யாரிடம் பேசுவது என்றும் தெரியவில்லை. எங்களுக்கு உதவி செய்யவும் எவரும் இல்லை," என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார் புவனேஸ்வரி.

`குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு வற்புறுத்தினர்`

கள்ளக்குறிச்சி

இந்த வழக்கில் கடந்த புதன்கிழமை (நவம்பர் 17) அன்று மூன்றாவதாக நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சக்திவேலை நகைகள் வேறொரு நபரிடம் கொடுத்ததாக ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தி காவல் துறையினரால் கடுமையாக தாக்கியதாக சக்திவேலின் மாமியார் இளஞ்சியம் தெரிவித்தார்.

"நிறைமாத கர்ப்பிணியான எனது மகள் ஒருசில நாட்களில் குழந்தை பெற்றெடுக்கபோகும் இந்த சூழலில் அவரின் கணவர் மீது தவறாக குற்றம் சாட்டி அவரை கைது செய்துள்ளனர்.

எதற்கு எங்கள் மீது வீண் பழி சுமத்துகிறார்கள்? குறவர்கள் என்றால் திருடர்களா? எந்த குற்றம் நடந்தாலும் குறவர்களை குற்றம் சாட்டுகின்றனர். எங்கு சென்றாலும் எங்களது ஆட்களை பிடிக்கின்றனர். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. நாங்களும் வியாபாரம் பார்த்து, கூலி வேலை செய்து தான் வாழ்கிறோம். தினமும் வேலைக்கு சென்றால் மட்டுமே எங்களால் வாழ்க்கையை ஓட்ட முடியும்," என்றார் இளஞ்சியம்.

இந்த வழக்கில் விசாரணைக்கு அழைத்து சென்று விடுவிக்கப்பட்ட செல்வம் மற்றும் பரமசிவத்தை பிபிசி தமிழ் சந்தித்து பேசியது.

`கண்ணை கட்டிவிட்டு காரில் கூட்டிச் சென்றனர்`

அப்போது பேசிய செல்வம், "நவம்பர் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சின்ன சேலத்தில் உள்ள எனது பேரனின் பிறந்தநாள் விழாவிற்காக மகள் புவனேஸ்வரி வீட்டிற்கு சென்றிருந்தேன். பிறந்தநாளை கொண்டாடிவிட்டு அன்று இரவு அங்கேயே தூங்கிவிட்டேன். அப்போது இரவு திடீரென கூட்டமாக வந்த காவல் துறையினர் என்னையும் மருமகன் பிரகாஷ் மற்றும் தர்மராஜ் ஆகிய மூவரையும் எதுவும் சொல்லாமல் தனி தனி காரில் ஏற்றினர்.

காரில் எங்களது கண்களை கட்டிவிட்டு அன்று இரவில் இருந்து காரில் வைத்து சுற்றிக்கொண்டே இருந்தனர். எங்கு அழைத்து செல்கிறார்கள் என்று எதுவுமே தெரியவில்லை. பிறகு காட்டுப் பகுதியில் எங்களை அடிப்பதற்காக அழைத்து சென்றனர். ஆனால் அங்கே மழை வரவும் எங்களை அங்கிருந்து வேறொரு பகுதிக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் எங்கள் மூவரை ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். அந்த திருமண மண்டபத்தில் எங்கள் மூவரையும் கட்டி வைத்து உதைத்தனர். நாங்கள் செய்யாத தவறை ஒப்புக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர். இதை ஒப்புக்கொண்டால் மட்டுமே உங்கள் அனைவரையும் விடுவோம் என்றனர். மறுத்தால் கொன்று விடுவோம் என்று மிரட்டினர். அவர்கள் அடித்த அடியை தாங்கிக்கொள்ள முடியவில்லை. மறுகணம் அவர்களை அடிக்கும் அடியை பார்க்க முடியவில்லை. இதைப்பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர்கள் சொல்வதை ஒப்புக்கொள்ளும் மனநிலைக்கு எங்களை ஆளாக்கினர்," என்றார் அவர்.

செல்வம்

"இதில் தர்மராஜ் என்பவரை தனியாக அழைத்துச் சென்று கடுமையாக தாக்கினர். அவர் கத்தும் அலறல் சத்தம் மட்டும் தான் எங்களுக்கு கேட்டது. கண்கள் கட்டப்பட்டு இருந்ததால் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை." என்றார்.

மேலும் அலறல் சத்தத்தைக் கேட்டுத் துடிதுடித்துப் போனதாக கூறுகிறார் செல்வம்.

"மேற்கொண்டு என்னுடன் இருந்தவர்கள் கையை சுவரில் வைக்கச் சொல்லி கேட்டுள்ளனர். அந்த கை ரேகையை வைத்து, அவர்கள் கொள்ளை அடித்ததாக கூறப்படும் வீட்டில் கை ரேகை இருந்ததாக அடித்தனர். இந்த கை ரேகையைக் கொண்டு மற்ற பகுதிகளில் உள்ள வழக்குகளையும் உங்கள் மீது போட்டு தலையெழுத்தை மாற்றுவோம். ஆகவே நாங்கள் சொல்வதை செய்யவேண்டும் என்று கூறி மிரட்டினர்.

இதனைத் தொடர்ந்து நாங்கள் நகை கடையை காட்டுவோம், நீ தலையை மட்டும் ஆட்டினால் போதும் என்றனர். நாங்கள் எதற்கு செய்யாத ஒன்றை செய்ததாக கூற வேண்டும் என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு நாங்கள் சொல்வதை தான் நீங்கள் செய்யவேண்டும். எங்களிடம் கேள்வி எழுப்பக்கூடாது என்று கூறி திட்டினர்." என்று வேதனையுடன் தெரிவித்தார் செல்வம்.

என்ன சொல்கின்றனர் காவல்துறையினர்?

நவம்பர் 14ஆம் தேதி இரவு மூன்று பேரை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் குடும்பத்தினர் கூறியது குறித்து கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலக்ஷ்மியிடம் பிபிசி தமிழ் தொடர்புகொண்டு கேட்டபோது, "ஞாயிற்றுக்கிழமை இரவு நாங்கள் அவர்களை அழைத்து செல்லவில்லை," என்று அவர் தெரிவித்தார்

"இந்த வழக்கு தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. நாங்கள் நவம்பர் 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 3 மணிக்கு பிரகாஷ், தர்மராஜ் மற்றும் செல்வம் ஆகிய மூவரை கள்ளக்குறிச்சி சின்னசேலம் ரயில்வே கேட் அருகே விசாரணைக்காக அழைத்து வந்தோம். இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அன்று இரவு சக்திவேல் மற்றும் பரமசிவம் ஆகிய இருவரையும் இரவு சுமார் 8 மணிக்கு விசாரணைக்காக அழைத்து வந்தோம். விசாரணைக்கு பிறகு இதில் இருவரை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தோம்," என்று தெரிவித்தார்.

செல்வம்

விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது கண்ணைக் கட்டி அழைத்துச் சென்றதாகவும், கடுமையாக தாக்கியதாகவும் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் கூறியது குறித்து அவரிடம் கேட்டபோது,

"விசாரணைக்கு அழைத்து சென்ற நபர்களை கண்ணை கட்டி அழைத்து செல்லவில்லை. மேலும் கண்ணை கட்டினால் அவர்களால் எப்படி நகை கடைகளை அடையாளம் காட்ட முடியும். அவர்களது கையில் லாக்கப் மட்டுமே செய்திருந்திருந்தோம். அழைத்து வரப்பட்ட நபர்கள் முக்கியம் என்பதால் விசாரணையின் போது குற்றவாளி தப்பித்து விடக்கூடாது என்பதற்காக மட்டுமே கைகளில் லாக்கப் போடப்பட்டது. காவல் நிலையத்தில் அவர்களது கைகளில் லாக்கப் செய்யப்படவில்லை. பொதுவாக விசாரணை கைதிகளுக்கு பின்பற்றப்படும் வழிமுறைகள் மட்டுமே பின்பற்றப்பட்டன. மேலும் அவர்கள் மீது எந்த விதமான துன்புறுத்தலும் காவல் துறை தரப்பில் கொடுக்கப்படவில்லை," எனக் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலக்ஷ்மி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தலைவர் ராஜா கூறுகையில், "இவர்கள் மீது வேண்டுமென்றே பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்று பேரையும், அடுத்ததாக செவ்வாய்க்கிழமை மீண்டும் இருவரை காவல் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து மாஜிஸ்ரேட் அன்று இரவு மூன்று காவல் நிலையங்களில் ஆய்வு செய்தார்.

பின்னர் அன்று நள்ளிரவு இரண்டு நபர்களை விட்டுவிட்டனர். அதில் மீதமிருந்த மூன்று நபர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது. ஆனால் மறுநாள் மூன்று பேரை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வது போல ஆவணங்களை தயார் செய்தனர். இந்த மூன்று நபர்களில் பிரகாஷ் மற்றும் தர்மராஜ் இருவரை பிற்பகலும், மூன்றாவது நபரான சக்திவேலை இரவும் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தினர். இவர்கள் உடம்பு முழுவதும் அடி இருக்கிறது. அதை நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளனர். அதை கவனத்தில்கொண்டு அவர்களுக்கு முதலுதவி அளித்து நீதிமன்ற காவல் வழங்க உத்தரவிட்டார்," என்று கூறினார்.

'பழங்குடி மக்கள் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் சுமத்தப்படுகின்றன'

இந்த விவகாரம் குறித்து சமூக செயல்பாட்டாளர் முருகப்பன் தெரிவித்ததாவது, "இதுபோன்ற குற்ற வழக்குகளில் காவல் துறையினர் பழங்குடியின மக்களைத்தான் உள்ளே கொண்டுவருகின்றனர். அதிலும் குறிப்பாக குறவர், இருளர், ஒட்டன் என்ற மூன்று பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர்களைதான் காவல் துறையினர் பொய் வழக்குகளில் கைது செய்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் இவர்கள் மிக மிக குறைந்த எண்ணிக்கையில் வாழ்கின்றனர். இவர்களை காவல் துறையினர் கொண்டு சென்று அடித்தாலோ, கொன்றாலோ இவர்களுக்காக கேட்க யாரும் வர மாட்டார்கள்.

இதனை சாதகமாக பயன்படுத்தி பொய்யான வழக்குகளை இவர்களை மீது போடுகின்றனர். பல திருட்டு வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளைக் காவல் துறையால் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும். மேலும் பல வழக்குகளில் யார் திருடியது, எவ்வளவு திருடியது என்று காவல் துறைக்குத் தெரியும். அதில் காவல் துறையினர் உண்மையான குற்றவாளிகளை மறைப்பதற்காக இதுபோன்று பழங்குடியின மக்களை அழைத்து சென்று பொய்யான வழக்குகளை அவர்கள் மீது போடுகின்றனர்," என்கிறார் முருகப்பன்.

உளுந்தூர்பேட்டை கிளை சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டவர்களில் ஒருவரான சக்திவேலுக்கு நவம்பர் 18ஆம் தேதி மாலை நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி காவல் துறையினர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு அங்கு போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லாத நிலையில் அவரை விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/india-59348646

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.