Jump to content

''நந்தி ஒழிக, நீதி வாழ்க” இந்து மதத்தை இழிவுப்படுத்தும் நோக்கல் இல்லை - ஐக்கிய மக்கள் சக்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

எதிர்க்கட்சியினரின் இன்றைய பாராளுமன்ற ஆர்ப்பாட்டத்தில் ''நந்தி ஒழிக, நீதி வாழ்க” என  எழுதப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில்  இந்து மதத்தை முன்னிறுத்தி வெளிவரும் விமர்சனங்கள்  தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் விளக்கமளித்துள்ளனர். 

FEYCf7OXoAAC0cs.jpg

இந்து மதத்தை இழிவுபடுதும் எந்தவொரு நோக்கத்திலும் இவை முன்னெடுக்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சி தமிழ் உறுப்பினர்கள் வீரகேசரிக்கு தெரிவித்தனர்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் பேரணிக்கு  பொலிஸாரினால் ஏற்படுத்தபட்ட இடையூறுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற  உறுப்பினர்கள்  சபைக்குள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

FEYCimDXIAEZkN5.jpg

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்களினால் “நந்தி ஒழிக, நீதி வாழ்க” உள்ளிட்ட சிங்கள,ஆங்கில,தமிழ் மொழிகளில் எழுதப்பட்ட  வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் இந்துக்களினால் வழிபடப்படும் நந்தியை ஒழிக வென ஐக்கிய மக்கள் சக்தியினர்  பாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களை எழுப்பியதாக சமூக  ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு ஒரு சில அரசியல் சார் மத குருமார்களினால் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

FEYCkc_XMAIAFb1.jpg

எனினும் இதனை மறுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள், ''நந்தி மாதிரி குறுக்கே வராதே'' என்பது கிராமங்களில் கூறப்படும்  ஒரு வழக்காடு சொல். 

மக்கள் சார்ந்து நாம் முன்னெடுக்கும் போராட்டங்கள், நடவடிக்கைகளின் போதெல்லாம் அரசாங்கமும் பொலிஸாரும் குறுக்கீடுகளை ஏற்படுத்துகின்றனர். நாம் செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடத்திய மக்கள் சக்தி போராட்டத்தின் போதும் பொலிஸார் குறுக்கீடுகளை செய்தனர்.

FEYChXcWYAEOdS-.jpg

ஆகவே அரசாங்கத்தினதும் பொலிஸாரினதும் இவ்வாறான குறுக்கீடுகளை கண்டிக்கும் வகையிலேயே கிராமத்து வழக்காடு சொல்லான ''நந்தி மாதிரி குறுக்கே வராதே'' என சொல்லை உதாரணமாக கொண்டு அரசாங்கம் எமது போராட்டங்களுக்கு குறுக்கே வரக்கூடாது என்பதனை வலியுறுத்தி ''நந்தி ஒழிக நீதி வாழ்க ''என்ற பதாகையை பயன்படுத்தினோமே தவிர இந்து மதத்தை இழிவு  படுத்தும் நோக்கம் எமக்கோ கட்சிக்கோ சிறிதளவும் கிடையாது. 

இந்த காரணிகளை வைத்து மத விமர்சனங்களை செய்ய வேண்டாம், இது இந்து மதத்துடன் கடுகளவேனும் தொடர்புபடுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் அல்ல என்றனர்.

''நந்தி ஒழிக, நீதி வாழ்க” இந்து மதத்தை இழிவுப்படுத்தும் நோக்கல் இல்லை - ஐக்கிய மக்கள் சக்தி | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் பாதாகை அவ்வளவு தானா.? பாதாகையால் ஆவபோவதென்ன.? பழையபடி ஓம்லெற் போட முட்டை , தக்காளி , வெங்காயம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் ..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்த (நந்தசேன கொட்டாபய ராஜபக்ஷ) என்பது நந்தியாக வந்துவிட்டதோ ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்நிலையில் இந்துக்களினால் வழிபடப்படும் நந்தியை ஒழிக வென ஐக்கிய மக்கள் சக்தியினர்  பாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களை எழுப்பியதாக சமூக  ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு ஒரு சில அரசியல் சார் மத குருமார்களினால் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

''நந்தி மாதிரி குறுக்கே வராதே'' என்பது கிராமங்களில் கூறப்படும்  ஒரு வழக்காடு சொல்.]

குறுக்கே நிற்கும் நந்தியையா இந்துக்கள் வழிபட்டார்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

நந்த (நந்தசேன கொட்டாபய ராஜபக்ஷ) என்பது நந்தியாக வந்துவிட்டதோ ? 

"ககுஷரபரசுகமுழிகே " ஒழிக என்று வராத வரை சந்தோசம், நந்தி என்றாவது ஒழுங்காக எழுதினார்களே என்று சந்தோஷப்படுமையா  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

"ககுஷரபரசுகமுழிகே " ஒழிக என்று வராத வரை சந்தோசம், நந்தி என்றாவது ஒழுங்காக எழுதினார்களே என்று சந்தோஷப்படுமையா  

தமிழ் தெரிஞ்ச ஆளே முகம்மது சாணாக்கியன் எனவும் கண்ணுக்கு முன் நிற்கிற சிறிதரனை சுமந்திரன் எனவும் பாராளுமன்றத்தில் பேசுறாங்க இதுல இது வேற😛😛

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.