Jump to content

‘கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’ என அரசாங்கத்திற்கு டயானா கமகே ஆலோசனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’என அரசாங்கத்திற்கு டயானா கமகே ஆலோசனை

‘கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’ என அரசாங்கத்திற்கு டயானா கமகே ஆலோசனை

கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2025 ஆம் ஆண்டளவில் கஞ்சாவுக்கான உலக சந்தை மதிப்பு $8.6 பில்லியன் முதல் $10.5 பில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பெரும்பாலான மருந்துவ பயிர்களை முறையாக பயிரிட்டு, ஏற்றுமதி செய்து, அந்நியச் செலாவணியைப் பெற முடியும். நாம் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்ல வேண்டியதில்லை.

யாரிடமும் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. தேயிலை, இறப்பர், தெங்கு போன்றவற்றுக்கு கடந்த காலங்களில் சர்வதேச அரங்கில் காணப்பட்ட கிராக்கி தற்பொழுது கிடையாது.

கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை.

இயற்கை வளங்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு பாரிய பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1250573

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் முழிக்கினம். இதில இவா வேற ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, satan said:

விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் முழிக்கினம். இதில இவா வேற ......

மாற்றுப் பயிரா பயிரிட சொல்றாவோ என்னவோ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’ என அரசாங்கத்திற்கு டயானா கமகே ஆலோசனை

‘கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’என அரசாங்கத்திற்கு டயானா கமகே ஆலோசனை

டயானாவுக்கு உடம்பு முழுக்க மூளை...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

‘கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’என அரசாங்கத்திற்கு டயானா கமகே ஆலோசனை

டயானாவுக்கு உடம்பு முழுக்க மூளை...😎

அப்ப  கனக்க மூளை இருக்கும் போல.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ சொல்கிற ஆலோசனை உங்களுக்கு இப்ப புரியாது, அது புரிய சில வருடங்கள் எடுக்கும்.....கனடாவுக்கே சமீபத்தில்தான் புரிஞ்சிருக்கு.....அரசாங்கம் சாராயத் தொழிற்சாலையை செய்வதுபோல் கஞ்சா,ஹொக்ரெய்ன், அபின் எல்லாவற்றையும் தயாரிக்கலாம்.....அவற்றில் சொக்கிலேட்டுகள் செய்து உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பும் கொடுத்து சங்கக்கடைகள் மூலம் மக்களுக்கும் விநியோகிக்கலாம்.....தக்கன பிழைக்கும் என்ற விதிக்கேற்ப பலவீனமானவர்கள் பரலோகம் போனாலும் ஆரோக்கியமானவர்கள் மட்டும் நாட்டில் வாழ்வார்கள்......காடு போல ......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கஞ்சாவை சட்ட ரீதியில் பயிரிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் அவர்களிடம் ஏற்கனவேயுண்டு. மிக  விரைவில் அது சட்டமாக்கப்படலாம். 

அதற்கான முன்னோட்டம்தான் இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

அவ சொல்கிற ஆலோசனை உங்களுக்கு இப்ப புரியாது, அது புரிய சில வருடங்கள் எடுக்கும்.....கனடாவுக்கே சமீபத்தில்தான் புரிஞ்சிருக்கு.....அரசாங்கம் சாராயத் தொழிற்சாலையை செய்வதுபோல் கஞ்சா,ஹொக்ரெய்ன், அபின் எல்லாவற்றையும் தயாரிக்கலாம்.....அவற்றில் சொக்கிலேட்டுகள் செய்து உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பும் கொடுத்து சங்கக்கடைகள் மூலம் மக்களுக்கும் விநியோகிக்கலாம்.....தக்கன பிழைக்கும் என்ற விதிக்கேற்ப பலவீனமானவர்கள் பரலோகம் போனாலும் ஆரோக்கியமானவர்கள் மட்டும் நாட்டில் வாழ்வார்கள்......காடு போல ......!  🤔

 

10 minutes ago, Kapithan said:

இலங்கையில் கஞ்சாவை சட்ட ரீதியில் பயிரிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் அவர்களிடம் ஏற்கனவேயுண்டு. மிக  விரைவில் அது சட்டமாக்கப்படலாம். 

அதற்கான முன்னோட்டம்தான் இது.

ஆப்கானிஸ்தானை வெல்ல முடியுமோ?

Link to comment
Share on other sites

இது ஒரு நல்ல யோசனை தான். இலங்கை மொனராகலை, தனமல்வில எனும் இடத்தில் வளரும் கஞ்சா செடி உலக தரம் வாய்ந்தது( சிலோன் தேயிலை போல்),  பல்கலைகழகத்தில் படிக்கும் போது சுகர்ந்த அனுபவம்  உண்டு. அநேக  மேற்குலக நாடுகள் கஞ்சா பாவனையை சட்ட பூர்வமாக ஆக்கி உள்ளார்கள், அவர்களுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியை பெறமுடியும்.

24 minutes ago, ஏராளன் said:

 

ஆப்கானிஸ்தானை வெல்ல முடியுமோ?

 

ஆப்கானிஸ்தானில் விளைவது அபின் , அது ஒரு தடை செய்யப்பட்ட போதைப் பொருள் ஆகும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, zuma said:

இது ஒரு நல்ல யோசனை தான். இலங்கை மொனராகலை, தனமல்வில எனும் இடத்தில் வளரும் கஞ்சா செடி உலக தரம் வாய்ந்தது( சிலோன் தேயிலை போல்),  பல்கலைகழகத்தில் படிக்கும் போது சுகர்ந்த அனுபவம்  உண்டு. அநேக  மேற்குலக நாடுகள் கஞ்சா பாவனையை சட்ட பூர்வமாக ஆக்கி உள்ளது, அவர்களுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியை பெறமுடியும்.

 

ஆப்கானிஸ்தானில் விளைவது அபின் , அது ஒரு தடை செய்யப்பட்ட போதைப் பொருள் ஆகும் 
 

கஞ்சா தடை செய்யப்பட்ட போதைப் பொருள் இல்லையோ?!🤔
காவல்துறை ஏன் கைது செய்கிறது?🤭

Link to comment
Share on other sites

1 minute ago, ஏராளன் said:

கஞ்சா தடை செய்யப்பட்ட போதைப் பொருள் இல்லையோ?!🤔
காவல்துறை ஏன் கைது செய்கிறது?🤭

இலங்கையில் கஞ்சா ஆங்கிலேயர் காலத்தில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது, ஆனால் ஆங்கிலேயர்கள் தமது நாடுகளில் தடை யை நீக்கி உள்ளார்கள். 

Link to comment
Share on other sites

12 minutes ago, ஏராளன் said:

கஞ்சா தடை செய்யப்பட்ட போதைப் பொருள் இல்லையோ?!🤔
காவல்துறை ஏன் கைது செய்கிறது?🤭

இலங்கையில் கஞ்சா தடை செய்யப்பட்ட பயிர் என்பதால் கைது செய்கின்றார்கள். கனடாவில் இப்படித்தான் இருந்தது. ஆனால் தடையை நீக்கி சட்டபூர்வமாக்கி இப்பொழுது மதுக்கடைகள் போன்று பல இடங்களில் விற்கின்றார்கள். எதிர்காலத்தில் மது அருந்துவதைப் போன்று கஞ்சா அடிப்பதும் சாதாரணமான விடயமாகி விடும். 
அல்கஹோலால் உடலுக்கு நேரும் தீமையை விட கஞ்சாவினால் ஏற்படும் தீமைகள் குறைவு என்று சொல்கின்றனர். அத்துடன், மது அருந்தியவர்களால் இழைக்கப்படும் வன்முறைகள் மற்றும் பாலியல் அத்துமீறல்களை விட கஞ்சாவினால் குறைவு என்றும் சொல்கின்றனர். கஞ்சாவையும் அபின் போன்ற மோசமான போதைப் பொருட்களையும் ஒரே தராசில் வைத்து பார்க்க கூடாதாம்.

எனக்கு தனிப்பட்ட ரீதியில் கஞ்சாவை சட்டபூர்வமாக்கியதில் உடன்பாடில்லை. தற்போதைய லிபரல் அரசு மீதும் ருடோ மீதும் வெறுப்பு வரவழைத்ததில் கஞ்சாவை சட்டபூர்வமாக்கியது தான் முதன்மை காரணம் (ஆனால் இப்படி சட்டபூர்வமாக்கும் வேலையை முதலில் தொடங்கியது இன்றைய எதிர்க்கட்சியான கொன்சர்வேட்டிவ்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அல்கஹோலால் உடலுக்கு நேரும் தீமையை விட கஞ்சாவினால் ஏற்படும் தீமைகள் குறைவு என்று சொல்கின்றனர். அத்துடன், மது அருந்தியவர்களால் இழைக்கப்படும் வன்முறைகள் மற்றும் பாலியல் அத்துமீறல்களை விட கஞ்சாவினால் குறைவு என்றும் சொல்கின்றனர்.

இஞ்சை ...... கஞ்சா அடிச்சால் பிரசர் கூடாதோ எண்டொருக்கால் ஆரிட்டையும் கேட்டு சொல்லுறியளே? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

இஞ்சை ...... கஞ்சா அடிச்சால் பிரசர் கூடாதோ எண்டொருக்கால் ஆரிட்டையும் கேட்டு சொல்லுறியளே? 🤣

சிவ மூலிகை ஆச்சே ஒரு இழுப்பு இழுக்குறது

35 minutes ago, ஏராளன் said:

கஞ்சா ஆளை உருக்கிப் போடுமாமே

ஓமாமே ஆனாலும் ஓர் புத்துணர்ச்சியாம் உடலுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எல்லாரையும் நம்பி ஒரு இழுவை இழுத்து பாக்கலாம் என்டு இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

இஞ்சை ...... கஞ்சா அடிச்சால் பிரசர் கூடாதோ எண்டொருக்கால் ஆரிட்டையும் கேட்டு சொல்லுறியளே? 🤣

ஒரு காலத்தில் கொழுப்புத்தான் உடலுக்கு தீங்கானது, சீனி மிக நல்லது என்று அரசும் ஊடகங்களும் சொல்லி, சீனி அதிகமாக தம் உணவில்/ தின்பண்டங்களில் உள்ளது என்று விளம்பரம் செய்து வருமானம் ஈட்டினர். இப்ப சீனி மிகக் கொடியது கொழுப்பு பரவாயில்லை என்று சொல்லி கொழுப்பை மட்டுமே உண்ணும் டயட் முறைகளை கொண்டுவந்து வருமானம் ஈட்டுகின்றனர். 

இதே போன்றது தான் கஞ்சா. அரசும் ஊடகங்களும் இது கொஞ்சம் பரவாயில்லை என்று விற்கின்றனர். நாளைக்கே இதை விட மோசமானது ஒன்றும் இல்லை என்று சொல்லி இன்னொன்றை ஊக்குவிப்பினர். நாங்கள் தான் பகுத்தறிந்து செயல்படல் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்தவரையில், இஸ்லாத்தை தவிர்த்து பல கொடூரமான கொலை, பிற குற்றச் செயல் புரிந்தவர்களின் பின்னணியை வாசித்து தெரிந்து கொண்டதில் அவர்கள் கஞ்சா போன்ற போதைக்கு அடிமையானவர்கள்  என ஆராய்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதை பயன்படுத்தியவர்கள் அது இல்லாவிடில் மரணித்தவர்களாகின்றனர். அதை எடுத்தால் கொடியவர்களாகின்றனர். அதையும் விட சம்பந்தப்பட்டவரின் மூளையையும் பாதிக்கிறது என அறிந்தேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

***

புலிகளின் ஆட்சியில் போதைப்பொருள் என்ன மணம் என்று கூடத் தெரியாத ஒரு ஆட்சி தான் இருந்தது.

அனைத்துவித பயங்கரவாதிகளும் சிங்கள நாடாளுமன்றில் இருக்கிறார்கள். அது பயங்கரவாதிகளின் போதைப்பொருள் கடத்தல்காரர்களின்.. பாதாள உலகக் கோஷ்டியின் கோட்டை. அதற்கு தலைவர் கோத்தா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிகரெட் தீமையை சொல்லி பிராசாரம் செய்து கொண்டு அதை விட மோசமான கஞ்சாவை கொண்டுவருவது மோசமான செயல். சிகரெட் புகைப்பவராவது சுயநினைவுடன் இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, satan said:

நான் அறிந்தவரையில், இஸ்லாத்தை தவிர்த்து பல கொடூரமான கொலை, பிற குற்றச் செயல் புரிந்தவர்களின் பின்னணியை வாசித்து தெரிந்து கொண்டதில் அவர்கள் கஞ்சா போன்ற போதைக்கு அடிமையானவர்கள்  என ஆராய்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதை பயன்படுத்தியவர்கள் அது இல்லாவிடில் மரணித்தவர்களாகின்றனர். அதை எடுத்தால் கொடியவர்களாகின்றனர். அதையும் விட சம்பந்தப்பட்டவரின் மூளையையும் பாதிக்கிறது என அறிந்தேன். 

இந்த ஆய்வுகளில் சிலவற்றை இங்கே இணையுங்கள் சாத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கஞ்சா இலையை அரைத்து பாங் எனும் பெயரில் காசியில் இந்திய அரசின் அனுமதியுடன் விற்கிறார்கள் .

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

சிகரெட் தீமையை சொல்லி பிராசாரம் செய்து கொண்டு அதை விட மோசமான கஞ்சாவை கொண்டுவருவது மோசமான செயல். சிகரெட் புகைப்பவராவது சுயநினைவுடன் இருப்பார்கள்.

நமது நண்பரின் தகப்பன் மொன்றியலில் இப்பவும் இருக்கிறார் தொடர் புகை பிடிப்பாளர் அவரின் மணிசிகாரிக்கு கொரனோ  வந்து அருந்தப்பு அவருக்கு வரவில்லை வயது  89எப்ப பார்த்தாலும் புகையினுள் இருப்பார் யாருக்காவது விளக்கம் தெரிந்தால் சொல்லவும் .

 

5 hours ago, நிழலி said:

இதே போன்றது தான் கஞ்சா. அரசும் ஊடகங்களும் இது கொஞ்சம் பரவாயில்லை என்று விற்கின்றனர். நாளைக்கே இதை விட மோசமானது ஒன்றும் இல்லை என்று சொல்லி இன்னொன்றை ஊக்குவிப்பினர். நாங்கள் தான் பகுத்தறிந்து செயல்படல் வேண்டும்.

உங்களுக்கு நினைவு இருக்கும் இங்கு யாழில் பணம்காய் என்ற பெயரில் இருந்தவர் வீட்டில் கஞ்சா வளர்ப்பது பற்றி பாடமே எடுத்தவர் யாழில் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, zuma said:

இது ஒரு நல்ல யோசனை தான். இலங்கை மொனராகலை, தனமல்வில எனும் இடத்தில் வளரும் கஞ்சா செடி உலக தரம் வாய்ந்தது( சிலோன் தேயிலை போல்),  பல்கலைகழகத்தில் படிக்கும் போது சுகர்ந்த அனுபவம்  உண்டு. அநேக  மேற்குலக நாடுகள் கஞ்சா பாவனையை சட்ட பூர்வமாக ஆக்கி உள்ளார்கள், அவர்களுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியை பெறமுடியும்.

 

ஆப்கானிஸ்தானில் விளைவது அபின் , அது ஒரு தடை செய்யப்பட்ட போதைப் பொருள் ஆகும் 
 

பல்கலையில் படிக்கும்போது (பேராதனை)  நானும் ஒருநாள் இப்பிடித்தான் நண்பனனின் ஆக்கினையில் இழு இழு எண்டு இழுத்து கடும் இருமலை விட வேறு ஒண்டும் வராமல் போகுது சனி என்று விட்டது தான்,  பிறகு கிட்டவும் விடேல்லை. 

இடையில கொஞ்ச நாள் ஒளிச்சு சிகரெட் பிடிச்சு மனுஷியிட்டையும் மகள் மாரிட்டயும் ஒண்டாக பிடி பட்டு அதுவும் அம்பேல் --  இப்ப 100% நல்ல பொடியன் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

உங்கள் எல்லாரையும் நம்பி ஒரு இழுவை இழுத்து பாக்கலாம் என்டு இருக்கிறேன்.

காப்பாற்றுவார்கள் என்றா? நம்பிக்கை வீண் போகாது தெய்வமே! துணிந்து இழுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புகைபழக்கம் இருந்த காலத்தில் நண்பர்கள் கூட்டத்தினால் கஞ்சாவும் இழுத்து பழகியிருக்கிறேன்.

கஞ்சா என்பது தனியே புகைப்பதல்ல, சிகரெட்டை உதிர்த்து அதன் தூளுடன் சரிவர கஞ்சாவை கலந்து சுற்றிதான் புகைப்பார்கள்.

சிகரெட் தண்ணி எல்லாம் தொடர்ந்து பாவித்தால் பெரிதாக பசி எடுக்காது, ஆனால் கஞ்சா அப்படியல்ல இழுத்துக்கொண்டு போனால் ஒரு கட்டத்தில் கொலை பசியெடுக்கும்.

டக்கெண்டு மேலே எழும்புறமாதிரி இருக்கும், அடிக்கடி சிரிப்பு வரும், கஞ்சா பழக்கத்தில் இருக்கும்போது மது பழக்கம் பெரிதாக கேட்காது.

ஆனால் கஞ்சா அளவுக்கதிகமாக புகைத்தால் நரம்பு மண்டலங்கள் அளவுக்கதிகமாக பாதிக்கப்பட்டு தன்னிலை மறந்து வெட்டு கொத்து, கொலை, சட்டவிரோத செயல்கள் எல்லாம் செய்ய தயங்காது,

அதைதான் தாயகத்தில் சமூகவிரோதிகள் பலர் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன், கடல்கடந்து வரும் கேரள கஞ்சாவும் இதற்கு ஒரு காரணம் என்று அங்குள்ள சிலர் சொல்ல கேள்வி பட்டிருக்கிறேன்.

கஞ்சாவுக்கு அடிமையானவர்கள் அது கிடைக்காமல் போனால் திருட்டில் இறங்குவார்கள், ஒழுக்கா சாப்பிடா விட்டால் ஓமகுச்சி போல மெலிந்து போவார்கள். திருட்டில் இறங்குவார்கள் கண்டவனிடம் எல்லாம் அடி வாங்குவார்கள். பிளேட் வைச்சிருந்து ஆக்களை கீறுவார்கள்.

உதாரணமாக கொழும்பில் கொடியில் காயபோட்ட சாரம், ஜட்டி பிராவரை  குடு கோஷ்டி என்று சொல்லப்படும் இவர்கள் கஞ்சா வாங்க காசுக்கு இதைகூட திருடுவார்கள்.

பொலிசில் பிடித்துக்கொண்டுபோய் எவ்வளவு அடித்தாலும் அவர்களுக்கு வலிக்காது, தன்னிலை மறக்கும் அளவிற்கு கஞ்சா நரம்புகளை மரத்து போக பண்ணியிருக்கும்.

புற்றுநோயாளிகள் உட்பட்ட சிலருக்கு கஞ்சா மருத்துவ தேவை கருதி பயன்படும் என்று கூறுகிறார்கள், அதனால் சில நாடுகளில் இதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதாக அறிகிறோம்.

ஐரோப்பாவில் நெதர்லாந்து நாட்டில் மட்டுமே கஞ்சாவிற்கு தடையற்ற வியாபார சுதந்திரம் இருந்தது. அதனால் பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து நம்மவர்கள் உட்பட கஞ்சா புகைப்பதற்காக அங்கு போய் வருவார்கள்.

நம்மவர்கள் மீன் வாங்க அருகிலிருக்கும் நாடுகளிலிருந்து ஹொலண்டுக்கு போய் வருவது வழக்கம், வரும்போது மீன் பெட்டிகளுக்கிடையில் கஞ்சாவும் சேர்ந்து ஜேர்மனி பிரான்ஸ் பெல்ஜியம் சுவிசுக்கு வருவதுண்டு, மாட்டுபட்டவர்களில் சிலர் இப்போது நாட்டில் குடும்பம் குழந்தைகளுடன் இருப்பதும் உண்டு

14 hours ago, சாமானியன் said:

இப்பிடித்தான் நண்பனனின் ஆக்கினையில் இழு இழு எண்டு இழுத்து கடும் இருமலை விட வேறு ஒண்டும் வராமல் போகுது சனி என்று விட்டது தான்,  பிறகு கிட்டவும் விடேல்லை. 

கஞ்சா இழுக்கும்போது சிகரட் போல அல்ல, இழுத்தால் 30 வினாடிகளாவது புகையை உள்ளே வைத்திருக்கவேண்டும், இழுத்த உடனே விட்டதால் உங்களுக்கு இருமல் வந்திருக்கலாம்.

நரம்பு மண்டலங்களை பாதிக்கும் எந்த ஒரு பழக்கங்களும் சமுதாயத்துக்கு விரோதமானவை, அந்த தவறை நானும் ஒரு காலத்தில் செய்திருந்தேன் என்பதால் இது பற்றிய சிறிய விளக்கத்தை சொல்ல எனக்கும் தார்மீக கடமை உண்டு என்பதால் இதை பதிவிட்டேன்..

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.