Jump to content

ஆணுறுப்பு சின்னதா இருக்குனு நினைக்கிறீங்களா? அதை இப்படி அளவிடுங்க! - காமத்துக்கு மரியாதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெத்தவங்ககிட்ட சொல்ல முடியாம, கூடப்பிறந்தவங்ககிட்ட சொல்ல முடியாம, ஏன் நெருக்கமான நண்பர்கள்கிட்ட கூட சொல்ல முடியாம ஆணுலகம் தவிக்கிற ஒரு பிரச்னையைப் பத்திதான் இந்த வார காமத்துக்கு மரியாதை பேசப்போகுது. யெஸ், `என்னோட ஆணுறுப்பு சின்னதா இருக்கு/இருக்கோ' அப்படிங்கிற ஆண்களோட பயத்தைப் பற்றிதான் இந்த வாரம் பேசப் போறோம். ``இது உண்மையில் ஒரு பிரச்னையே இல்லை. இல்லாத பிரச்னையை மிகைப்படுத்திக்கிட்டு அவங்களே அவங்களை வருத்திக்கிட்டு இருக்காங்க'' என்ற பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரன் இதுபற்றி விரிவாகப் பேசினார்.

மருத்துவர் கார்த்திக் குணசேகரன்
 

``வெளிநாட்டுல ஆணுறுப்பு நீளம் தொடர்பான ஆராய்ச்சி ஒண்ணு நடந்துச்சு. அதுல கலந்துக்கிட்ட அத்தனை ஆண்கள்கிட்டேயும் `உங்க உறுப்பு சின்னதா இருக்கிறதா எப்பவாவது ஃபீல் பண்ணியிருக்கீங்களா'ன்னு ஒரு கேள்வி கேட்கப்பட, பத்துல எட்டு பேர் `ஆமா, எங்களோட உறுப்பு சின்னதாக இருக்கிறதா ஃபீல் பண்றோம்'னு சொல்லியிருக்காங்க. ஆண்களுக்கு அவங்களோட உறுப்பு பத்தி இருக்கிற தாழ்வு மனப்பான்மையைப் புரிய வைக்கிறதுக்காக இந்த ஆராய்ச்சி பத்தி சொல்லியிருக்கேன். மத்தபடி, பத்துல 8 பேருக்கு இப்படி இருக்கிறதுக்கு வாய்ப்பே கிடையாது.

தன் உறுப்போட அளவு பத்தி வருத்தப்படுறது கிட்டத்தட்ட எல்லா நாட்டு ஆண்கள்கிட்டேயும் இருக்கு. ஆணுறுப்போட அளவு நாடுகளைப் பொறுத்து மாறுபடும். உதாரணத்துக்கு, ஜப்பான் நாட்டு ஆண்களோட உறுப்பின் சராசரி அளவு 4 இன்ச்சிலிருந்து 4.5 இன்ச் வரை இருக்கும். இந்தியாவுல 5 முதல் 5.5 இன்ச் வரைக்கும் ஓகே. `டாக்டர் எனக்கு 4.8 இன்ச்தான் இருக்கு'ன்னாலும் நார்மல்தான். இந்த அளவுக்குள்ளேயே இந்தியாவுல இருக்கிற 90 சதவிகித ஆண்கள் வந்திடுவாங்க. இந்த உண்மை தெரியாமதான் பல ஆண்களும் `என் ஆணுறுப்பு சின்னதா இருக்கு டாக்டர். கல்யாணம் பண்ணிக்க பயமா இருக்கு டாக்டர்'னு பதற்றப்படுறாங்க.

ஆண் பிள்ளைங்க சின்ன வயசுல `எனக்கு பெருசா இருக்கு; உனக்கு ஏன்டா சின்னதா இருக்கு'ன்னு ஒருத்தருக்கொருத்தர் கலாட்டா பண்ணிக்கிறது மனசுல பதிஞ்சுட்டாலும், பின்னாள்ல `ஆமா, எனக்கு சின்னதாதான் இருக்கு'ன்னு நம்ப ஆரம்பிச்சிடுவாங்க. பிள்ளைங்க இப்படிப் பேசுறதை கண்டிக்கிறதைவிட, வயசுக்கேற்ற வளர்ச்சி பிள்ளைகளோட ஆணுறுப்புல இருக்காங்கிறதைச் தெரிஞ்சுக்கிறது முக்கியம். இந்தக் கடமை அப்பாக்களுக்கு அவசியம் இருக்கணும். சிங்கிள் பேரன்ட்டா இருந்தா அம்மா செய்யட்டும். அபூர்வமா ஒருசில ஆண் குழந்தைகளுக்கு ஹார்மோன் குறைபாடு காரணமா ஆணுறுப்பு வளர்ச்சி குறைவா இருக்கும். இதை 10 வயதுக்குள்ளேயே கண்டுபிடிச்சிட்டா ஹார்மோன் சிகிச்சை கொடுத்து சரி செஞ்சுடலாம்.

பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் ஆரம்பிக்கிற வயசு எப்படி ஒவ்வொருத்தருக்கும் மாறுபடுதோ, அதே மாதிரி ஆண் குழந்தைகளுக்கும் மாறுபடும். `நான் 15 வயசுல பெரிய மனுஷியானேன். என் பொண்ணும் அப்படித்தான் ஆவாள்னு நினைக்கிறேன்' என்று அம்மாக்கள் சொல்றதைக் கேட்டு வளர்ற வாய்ப்பு பெண் குழந்தைகளுக்குக் கிடைக்கும். அதனால, தன் கூட படிக்கிற பொண்ணுங்க பெரிய மனுஷியானது தெரியவரும் போதும், `அம்மா சொல்ற மாதிரி நான் லேட்டா வருவேன்போல'ன்னு புரிஞ்சுக்க வாய்ப்பிருக்கு. ஆனா, ஆண் குழந்தைங்களுக்கு இந்த வாய்ப்பு நம்ம வீடுகள்ல பெரும்பாலும் கிடைக்கிறதில்லை. ஓர் ஆண் குழந்தைக்கு பியூபர்ட்டி 13 வயசுல வரலாம். அப்போ, அவன் ஆணுறுப்புல 15 வயசுலேயே வளர்ச்சி இருக்கும். கொஞ்சம் தாமதமா பியூபர்ட்டி வர்ற ஆண் குழந்தைகளுக்கு அதன் பிறகு உடல் வளர்ச்சியும் ஆணுறுப்பு வளர்ச்சியும் வரும். இதையும் அப்பாக்கள்தான் ஆண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கணும். வாய்ப்பில்லைன்னா அம்மாக்களும் சொல்லித்தரலாம்.

Couple (Representational Image
 
Couple (Representational Image Image by Free-Photos from Pixabay

ஆணுறுப்பைப் பொறுத்தவரைக்கும் `Shower penis', 'Grower penis'னு இரண்டு வகைகள் இருக்கு. சிலருக்கு விறைப்புத்தன்மை அடையாத நிலையிலேயே பெருசா இருக்கும். அவங்களுக்கு விறைப்புத்தன்மை வந்தாலும் அளவுல பெரிய வித்தியாசம் தெரியாது. இது `Shower penis'. சிலருக்கு விறைப்படையாத நிலைமையில் சிறியதா இருக்கும். விறைப்படைஞ்ச பிறகு நார்மல் அளவுக்கு வந்துடும். இது `Grower penis'. அதாவது, விறைப்படையுறப்போ ரெண்டு பேருக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவுல வந்திடும். ஆனா, `அவனுக்கு விறைப்படையறதுக்கு முன்னாடியே பெருசா இருக்கேன்'னு ஓர் ஆணும், `விறைப்படைஞ்ச பிறகும் பெருசா வித்தியாசம் தெரியலையேன்'னு இன்னோர் ஆணும் பயந்திட்டிருப்பான். ஆபாசப் படங்களும் ஆணுறுப்பு தொடர்பா நண்பர்களுடனான உரையாடல்களும்தான் மேலே சொன்ன பிரச்னைக்கு பெரும்பாலும் காரணம். ஆபாசப் படங்கள்ல பெருசா தெரியறதுக்கு செயற்கையா ஏதாவது செய்யலாம். இல்லைன்னா நீளமா தெரியுற ஆங்கிள்ல கேமிரா கோணத்தை வைக்கலாம். நண்பர்களைப் பொறுத்தவரைக்கும் இமேஜ் பில்டப்புக்காக தன்னோட ஆணுறுப்போட நீளத்தை பெருசா சொல்லலாம். இதெல்லாம் தெரியாம, சில ஆண்கள் கல்யாணத்தைத் தள்ளிப்போடுறாங்க; சிலர் கல்யாணம் செஞ்சுக்கவே பயப்படுறாங்க.

பத்து வருடங்களுக்கு முன்னாடி வரைக்கும் பெரும்பான்மை பெண்களுக்கு, அவங்களோட கணவரே `என் உறுப்பு சின்னதா இருக்கோ'ன்னு சொன்னாதான் தெரியும். இப்போ இருக்கிற பெண்களுக்கு இதுபற்றிய நாலெட்ஜ் இருக்கு. இருந்தாலுமே, பெண்களோட சிறிய மார்பகங்களை ஆண்கள் விமர்சிக்கிற அளவுக்கு, ஆண்களோட உறுப்பை பத்தி பெரும்பான்மை இந்திய பெண்கள் விமர்சிக்கிறதில்லை'' என்றவர், ஆணுறுப்பின் சரியான நீளத்தை எப்படி அளவிடுவது என்றும் சொல்லிக்கொடுக்கிறார்.

 

``சிலருக்கு ஆணுறுப்பு வளர ஆரம்பிக்கிற இடத்தில் கொழுப்பு அதிகமா இருக்கும். இந்தக் கொழுப்பே சிலருக்கு 2 இன்ச் அளவுக்கு இருக்கும். இது தெரியாம அந்தக் கொழுப்புக்கு கீழே இருந்து அளந்தா, ஆணுறுப்பு 2 அல்லது 3 இன்ச்தான் இருக்கும். இதுவே ஆணுறுப்பு ஆரம்பிக்கிற கொழுப்புப் பகுதியிலிருந்து அளந்து பார்த்தா 5 இன்ச் வரைக்கும் இருக்கும். இந்திய ஆண்களுக்கு இது நார்மல்தான். இன்னும் தெளிவா சொல்லணும்னா, ஆணுறுப்பின் மேலே முடி வளர ஆரம்பிக்கிற இடத்தை அழுத்தினா ஓர் எலும்பு விரலில் தட்டுப்பட்டும். அந்த எலும்பிலிருந்துதான் ஆணுறுப்பு தொடங்குது. இங்கிருந்துதான் அளக்கணும்.

 

இப்படி அளக்கிறதுக்கு எனக்குத் தெரியலை டாக்டர்னு சொன்னீங்கன்னா, `மிரரிங் டெக்னிக்'னு இன்னொரு வழியில உங்க உறுப்போட சரியான நீளத்தைத் தெரிஞ்சுக்கலாம். உறுப்பு மேல இருக்கிற ரோமங்களை அகற்றிட்டு கண்ணாடியில உங்க ஆணுறுப்பைப் பாருங்க. உண்மையான நீளத்தை நீங்களே கண்டுபிடிச்சிடலாம். `சின்னதா இருக்கோ'ன்னு நினைச்சிட்டிருக்கிற அத்தனை ஆண்களும் மிரரிங் டெக்னிக் செய்யுங்க. தன்னம்பிக்கை கொள்ளுங்க. மனசுக்குப் பிடிச்ச, உங்களை விரும்புற பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு தாம்பத்திய மகிழ்ச்சியை அனுபவியுங்க'' என்றார் டாக்டர் கார்த்திக் குணசேகரன்.

வாசகர் கேள்வி: எனக்கு விதைப்பை ஒன்றுதான் உள்ளது. என்னால் உடலுறவுகொள்ள முடியுமா, எனக்கு குழந்தை பிறக்குமா டாக்டர்?

டாக்டர் பதில்: ``உடலுறவு கொள்வதற்கும் குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் ஒரு விதைப்பை போதும். தைரியமாக இருங்கள்.''

ஆணுறுப்பு சின்னதா இருக்குனு நினைக்கிறீங்களா? அதை இப்படி அளவிடுங்க! - காமத்துக்கு மரியாதை - 5 | doctor breaks the myth about men-s fear on penis size - kamathukku mariyadhai - Vikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.