Jump to content

விடை பெறுகிறார் வில்லியர்ஸ்


Recommended Posts

விடை பெறுகிறார் வில்லியர்ஸ்

விடை பெறுகிறார் வில்லியர்ஸ்

 

தென்னாபிரிக்கா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஏபிடி வில்லியர்ஸ் ஓய்வை அறிவித்துள்ளார்.

அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் தெரிவித்தார்.

உலக கிரிக்கெட் அரங்கில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்கிறார் தென்னாப்பிரிக்காவின் 360 டிகிரி ஏபி டி வில்லியர்ஸ்.

இவர் இதுவரை 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,765 ஓட்டங்களை குவித்துள்ளார்.

228 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9,577 ஓட்டங்களை குவித்துள்ள அவர் 78 டி20 போட்டிகளில் விளையாடி 1,672 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

மேலும், ஐபிஎல் போட்டித் தொடரில் ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த டி வில்லியர்ஸ் 5,162 ஓட்டங்களை குவித்திருக்கிறார்.

மேலும் நான் விளையாட்டை முழு மகிழ்ச்சியுடனும், கட்டுக்கடங்காத உற்சாகத்துடனும் விளையாடினேன். இப்போது, 37 வயதில், அந்தச் சுடர் அவ்வளவு பிரகாசமாக எரிவதில்லை என பதிவிட்டுள்ளார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கவலைதான் ஆனாலும்  பை .....பை    சென்றுவாருங்கள்......!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான துடுப்பாட்டக்காரரும், சிறந்த களத்தடுப்பு வீரரும். 💐

The one and only 360 degree Batsman. Everything needs to end at one point. All the very best AB.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கட் வீரர்களில் கிறிஸ் கெயில் மாதிரி இவரும் ஒருவர்.

ஒரு காலத்தில் இவரைப் பார்க்கவே சனத்திரள் கூடும்.

அடித்தா  மொட்டை இல்லாவிட்டால் குடும்பி.

குடும்பத்துடன் ஓயவாக இருங்கள்.

தகவலுக்கு நன்றி நுணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துவிதமான கிரிக்கெட் என்று லீக் போட்டிகளையும் சேர்த்து சொன்னாரா தெரியவில்லை.

போன ஐபி எல்லில் வில்லியர்ஸ் ஜொலிக்கவில்லை  , ஆனாலும் அதற்கு முந்திய போட்டிகளில் எல்லாம் நொருக்கி தள்ளினார் மனுசன்.

தென்னாப்பிரிக்க அணியிலிருந்து உச்சக்கட்ட ஆடும் திறமையில் இருக்கும்போதே ஓய்வை அறிவித்தார் . பின்னர் அணிக்கு திரும்ப வாய்ப்பு கேட்டார் மறுத்துவிட்டார்கள் என்று சொன்னார்கள்.

இதுவும் ஒரு அவசர முடிவாயிருக்கலாம், இந்திய  அணியில்  சச்சின் தோனி டிராவிட்  சேவாக் உட்பட கழுத்தை பிடிச்சு வெளியில் தள்ளும்வரை கட்டையை போட்டுக்கொண்டு அணியில் அடம்பிடித்து நின்றார்கள்.

அந்த வகையில்  ஆட்டத்திலும் ஓய்விலும் எப்போதும் அதி உச்ச கெளரவத்தை கடைபிடிக்கும் வில்லியர்ஸ் மானஸ்தன்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

அனைத்துவிதமான கிரிக்கெட் என்று லீக் போட்டிகளையும் சேர்த்து சொன்னாரா தெரியவில்லை.

போன ஐபி எல்லில் வில்லியர்ஸ் ஜொலிக்கவில்லை  , ஆனாலும் அதற்கு முந்திய போட்டிகளில் எல்லாம் நொருக்கி தள்ளினார் மனுசன்.

தென்னாப்பிரிக்க அணியிலிருந்து உச்சக்கட்ட ஆடும் திறமையில் இருக்கும்போதே ஓய்வை அறிவித்தார் . பின்னர் அணிக்கு திரும்ப வாய்ப்பு கேட்டார் மறுத்துவிட்டார்கள் என்று சொன்னார்கள்.

இதுவும் ஒரு அவசர முடிவாயிருக்கலாம், இந்திய  அணியில்  சச்சின் தோனி டிராவிட்  சேவாக் உட்பட கழுத்தை பிடிச்சு வெளியில் தள்ளும்வரை கட்டையை போட்டுக்கொண்டு அணியில் அடம்பிடித்து நின்றார்கள்.

அந்த வகையில்  ஆட்டத்திலும் ஓய்விலும் எப்போதும் அதி உச்ச கெளரவத்தை கடைபிடிக்கும் வில்லியர்ஸ் மானஸ்தன்தான்.

அவுஸ்ரேலியாவில் ந‌ட‌க்கும்  விக்வாஸ் விளையாட்டிலும் விளையாடினார் அங்கையும் பெரிசா சாதிக்க‌ வில்லை

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ பெரிசா சாதிக்காட்டியும் வ‌ங்ளூர் அணியின் ப‌ல‌ வெற்றிக்கு இவ‌ரே முக்கிய‌ கார‌ண‌ம்

கிறிஸ் கெயில‌ விட‌ இப்ப‌வே ஓய்வை அறிவித்து இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விடும் ஏபி வில்லியர்ச‌ பாராட்ட‌னும்

இவ‌ர் மைதான‌த்தில் நின்றால் அணி எவ‌ள‌வு ஓட்ட‌ம் எடுப்பார்க‌ள் என்று க‌ணிக்கிற‌து சிர‌ம‌ம்

ஜ‌பிஎல்ல‌ இர‌ண்டு அணிக்காக‌ ம‌ட்டுமோ விளையாடினார்
ஆர‌ம்ப‌த்தில் டெல்லி பிற‌க்கு வ‌ங்க‌ளூர்..................😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் நன்கு பிடித்த கிறிக்ட் வீரர் என்பதை விட மிகவும் நல்ல மனிதர் .உங்கள் ஓய்வு காலங்களில் வேறு விதங்களில் கிரிக்கற் உலகத்தில் பங்காற்றுவீர்கள் என்று எதிர் பாக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள விளையாட்டுக்களில் இருந்து ஒய்வு பெற்றாலும் தொடர்ந்தும் அணியைப் பலப்படுத்தும் வகையில் பயிற்றுனர் குழுவில் இடம்பெறும் வாய்ப்புக்கள் இருக்கின்றது

வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, வாத்தியார் said:

கள விளையாட்டுக்களில் இருந்து ஒய்வு பெற்றாலும் தொடர்ந்தும் அணியைப் பலப்படுத்தும் வகையில் பயிற்றுனர் குழுவில் இடம்பெறும் வாய்ப்புக்கள் இருக்கின்றது

வாழ்த்துக்கள் 

வாத்தி
தென் ஆபிரிக்கா அணியில் தேர்வுக்குழுவில் இருந்து வீர‌ர்க‌ளுக்குள் ஒற்றுமை இல்லை

இன‌ வெறி இப்ப‌வும் விளையாட்டில் இருக்கு..............எத்த‌னையோ திற‌மையான‌ வீர‌ர்க‌ளை சீக்கிர‌மே அணியில் இருந்து ஓர‌ம் க‌ட்டின‌வ‌ர்க‌ள்

ஓர‌ம் க‌ட்ட‌ ப‌ட்ட‌ வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் விளையாடின‌ம்

தென் ஆபிரிக்காவில் பிற‌ந்து
இங்லாந் நாட்டுக்காக‌ விளையாடின‌ வீர‌ர்க‌ள் ப‌ட்டிய‌ல் நீள‌ம் வாத்தி.....................😁😀
 

Link to comment
Share on other sites

வேறு நாடுகள் இவரை பயிற்சியாளராக நிச்சயமாக தேர்ந்தெடுப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்று நிம்மதியாக ஓய்வெடுக்க வாழ்த்துக்கள் 360..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரணில் "தனது  மினி"யை... வழமைபோல் வீட்டின்  பின்பக்கம் தான் பார்க் பண்ணுவார். 😂 🤣
    • முடிவுரை: நாங்கள் நின்றது ஸ்பெயின் நாட்டின் ஒரு தீவு. Majorque (Mallorca) 3600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு  தனித்தீவு என்பதால் எப்பொழுதும் மாறி மாறி (ரோமேனியர் போர்த்துகல் அராபியர்கள்....) ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. கிட்லரால் தம்மை பிடிக்க முடியவில்லை காரணம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம் தரும் மலைகள் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்த Majorque என்பதே அராபியர்கள் வைத்த பெயர் தான். அருகே சிறிய தீவுக்கு Minorque என்று பெயர் வைத்தனர்.  மலையும் கடலும் உள்ள தீவு என்பதால் ஆதி மனிதர்கள் கற்களை கொண்டே குடிசைகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்த மக்கள் முதன் முதலாக கற்களால் அரணமைக்கு வாழ்ந்த இடத்தையும் பார்வையிட்டோம். அந்த இடத்தை ஒரு காட்சியகமாக வைத்து இருக்கிறார்கள். அந்த அரணின் நுளைவாயிலில் 8 தொன் கல் ஒன்றை இரண்டு மீற்றர் உயரத்தில் வைத்து இருப்பதை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் பெருமையுடன் சொன்னார். நான் அவருக்கு தஞ்சாவூரை காட்டினேன். அதிசயித்தார்.  Majorque இன் சனத்தொகை கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆனால் அங்கு எப்பொழுதும் சனத்தொகையாக 3 மில்லியன் மக்கள் இருப்பார்கள். அதாவது 2 மில்லியன் மக்கள் சுற்றுலா வந்து போவார்கள்.  இதனுடைய விமான நிலையம் Palma. ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானம் ஏற ஒன்று இறங்கியபடி இருக்கும். இதன் வரலாற்றை பார்த்தால் மிகவும் வறண்ட பிரதேசம். குடிநீர் வசதி இல்லை. ஆனால் இன்று பச்சை பசேல் என்று இருக்கிறது. அநேகமாக அந்த மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகள் பழங்கள் இறைச்சி மீன் என்பன அங்கேயே கிடைக்கின்றன. ஸ்பெயின் நாட்டின் அதி கூடிய வசதியும் வருவாயும் வேலை வாய்ப்பும் பணச்செழிப்பும் கொண்ட பிரதேசமாக இத்தீவு இன்றுள்ளது. இது எம் போன்ற பலருக்கும் ஒரு நல்ல உதாரணமாகும். எனக்கு எங்கே போனாலும் என் நாடு என் ஊர் என்று தான் மண்டைக்குள் ஓடும். இங்கும் அப்படி தான். நானும் இவ்வாறான ஒரு வரட்சியான காலநிலை மற்றும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். ஆனால் என் தீவின் இன்றைய நிலைமை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியலை பார்க்கும்போது இத்தீவு என்னை மிகவும் பாதித்தது. ஆனால் நாங்கள் முக்கியமாக நான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இல்லை. எனது இனத்தின் சாபமோ என்னவோ நான்கு பேர் மட்டும் தான் எல்லாவற்றையும் செய்யட்டும் என்று தூங்கி விடுகிறது. நாங்கள் நின்ற இடம்: camp de mar நின்ற கோட்டல்:  alua camp de mar  நன்றி. 
    • ரணிலுக்கு... அழகிகளில் நாட்டம் இல்லை என்று கேள்விப் பட்டோம். 🤣 நீங்கள் இப்பிடி சொல்கிறீர்கள். வேணுமென்றால்... @விசுகுவிடம் கேட்டுப் பாருங்கள். 😂
    • இதுக்கே இந்த குதி…குதிக்கிறீங்களே… ரணில் தனது Austin Mini ஐ எங்கே பார்க் பண்ணுவார் என அறிந்தால் என்ன குதி குதிப்பீர்களோ🤣.
    • @தமிழன்பன், @விசுகு, @குமாரசாமி, @ஈழப்பிரியன் இந்தத் தலைப்புக்கு பொருத்தமான கவுண்டமணியின் காணொளி ஒன்றை  மேலே இணைத்துள்ளேன் தவறாமல் பார்க்கவும். 😂 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.