Jump to content

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, இணையவன் said:

புலம்பெயர் தமிழர்களைத் தலைகுனிய வைத்த காட்டுமிராண்டித்தனமான இந்தக் குழப்பச் செயல் கண்டிக்கப்பட வேண்டியது. 

அடுத்த சில வருடங்களில் இந்த குழப்பவாதிகளின் தொகை இன்னும் குறைந்துகொண்டே போகும். அப்போது விசிலடிப்பதற்கு இப்போதிருக்கும் ஆட்களும் இருக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 469
  • Created
  • Last Reply

எவர் என்ன சொன்னாலும்,எழுதினாலும் இந்த அவலநிலை கவலைக்குரியதே.எம்மவரை நாமே அவமரியாதை செய்வது,எதிரிக்கு மிக்க மகிழ்ச்சி வழங்கும்.எதையும் பேசித்தீர்க்கும் பக்குவம் உள்ள நாடுகளில் வசிப்பவர்கள் அந்த நிலைக்கு மாறாமல் இருப்பது வேதனையே.தாயகத்திலுள்ள அரசியல்வாதிகளைத் தள்ளிவிட்டு தமிழருக்குத் தீர்வு எப்படி வர முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:
முன்னாள் யூனியன் கல்லூரி அதிபர்
கதிர் பாலசுந்தரம்:
 
கனடாவில் திரு. சுமந்திரன் உரையாற்றிய கூட்டத்துக்கு நானும் போயிருந்தேன். எனது சக்கர முதுகுப் பக்கத்தில் மண்டப பின்சுவர் நீளத்துக்குப் பல பொலிசார்கள் நின்றார்கள். மண்டப பாதுகாவலர்கள் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தனர். திரு. சாணக்கியனை அடுத்து சுமந்திரன் உரையாற்றிக் கொண்டிருந்தார். எதுவித சலசலப்பும் இல்லை. நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேலாகிவிட்டது. பேச்சு முடிகிற நேரம்.
சபையின் பின் வரிசையில் இருந்த ஓரூவர் எழுந்து நின்று ஏதோ கேட்டார். எனக்கு விளங்கவில்லை. இருக்கையில் இருந்த சபை முழுவதும் வினா எழப்பியவரை நோக்கியது. அவர் அருகே நின்ற இன்னொருவர் இரு கைகளையும் உயர்த்தி ஏதோ சத்தம் போட்டார். சபை முழுவதும் எழுந்து நின்று மௌனமாய் அவரை நோக்கியது. இன்னும் சிலர் கைகளை உயர்த்தி குரலெழுப்பினர்.
முதுகுச் சட்டையில் ஆங்கிலத்தில் பாதுகாவலர்கள் என்று எழுதியவர்களை நோக்கினேன். அவர்கள் மௌனமாய் நடப்பதை ரசித்துக்கொண்டு நின்றார்கள். பொலிசாரை நோக்கினேன். அழகான கருநீலச் சட்டைப் பொத்தான்களின் ஓளிவீச்சுகள் கண்களைக் கூசச் செய்தன. அவர்கள் அனைவரும் நட்டுவைத்த பாவைகள் போல பேசாமடைந்தைகளாய் காட்சி தந்தனர்.
அதுதான் கனேடிய ஜனநாயக பேச்சுச் சுதந்திரத்தின் பேரழகு. அதில் சில முதிய இளைஞர்கள் நஞ்சு பாய்ச்சுவதைப் பார்த்து இதயம் வலிபொறுக்காமல் ஓவென்றழுதது. இனவாத சிங்களவர்கள் செய்யத் துடிப்பதை இவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள்.

எங்கள் முட்டாள்தனத்தின் எல்லை, இலங்கையில் தமிழினத்தின் இருப்பை அடியோடு இல்லாதொழிக்கும். 

நாங்கள் இறக்கும்வரை, இதயத்தில் இரத்தம் வடிய அழவேண்டியதுதான்.

 

Link to comment
Share on other sites

4 minutes ago, குமாரசாமி said:

சுமந்திரனோ அல்லது கூட்டமைப்போ அன்று தொடக்கம் ஒழுங்காக நடந்திருந்தால் ஏனிந்த குழப்பங்கள் வருகின்றது?

சுமந்திரனோ கூட்டமைப்போ உத்தமர்கள் இல்லை, வெறும் அரசியல்வாதிகள்தான். 

வெளிநாட்டில் குடியேறிய சமுதாயம் நடந்துகொண்ட விதம் இதைவிட எவ்வளவோ கீழ்த்தரமானது. இதில் துளியளவும் பயனில்லை. மாறாக ஜனநாயக விரோதிகளாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். எங்களுக்கும் அங்குள்ளவர்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. 

10 minutes ago, Kapithan said:

அடுத்த சில வருடங்களில் இந்த குழப்பவாதிகளின் தொகை இன்னும் குறைந்துகொண்டே போகும். அப்போது விசிலடிப்பதற்கு இப்போதிருக்கும் ஆட்களும் இருக்க மாட்டார்கள்.

எடுத்ததற்கெல்லாம் புலிக்கொடியைத் தூக்கிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எம்மவர்கள் இல்லாவிட்டாலும் கோத்தபாயாவின் ஆட்கள் செய்வார்கள். ஏற்கனவே ஆரம்பித்துவிட்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இணையவன் said:

எங்களுக்கும் அங்குள்ளவர்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. 

இந்த இடைவெளியை அதிகரிக்கவும், புலம்பெயர் தமிழர்கள் எல்லாரும் அடிப்படைவாத தலிபான் நிகர் முட்டாபீசுகள் என்பதை நிறுவவும் சிலர் அதி தீவிர தமிழ் தேசியவாதிகள் என்ற போர்வையில் அனுப்பட்டுள்ளனரோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, இணையவன் said:

சுமந்திரனோ கூட்டமைப்போ உத்தமர்கள் இல்லை, வெறும் அரசியல்வாதிகள்தான். 

வெளிநாட்டில் குடியேறிய சமுதாயம் நடந்துகொண்ட விதம் இதைவிட எவ்வளவோ கீழ்த்தரமானது. இதில் துளியளவும் பயனில்லை. மாறாக ஜனநாயக விரோதிகளாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். எங்களுக்கும் அங்குள்ளவர்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. 

எடுத்ததற்கெல்லாம் புலிக்கொடியைத் தூக்கிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எம்மவர்கள் இல்லாவிட்டாலும் கோத்தபாயாவின் ஆட்கள் செய்வார்கள். ஏற்கனவே ஆரம்பித்துவிட்டனர்.

நேற்றைய குழப்பத்தைப் பார்த்தபின்னர் இந்த்ச் சந்தேகம் எனக்கும் ஏற்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நாங்க யாரு..? 

அங்குள்ள  சனத்திற்கு ஏதாவது நன்மை நடைபெறுவது சிலருக்கு விருப்பமில்லை.

சுமத்திரன்  அரசியலுக்கு வந்து கடந்த பத்து வருடத்தில் பேருக்கு தன்னும் இலங்கைத்தமிழருக்கு நாலு நன்மை பெற்றுக்கொடுத்து இருந்தால் இதே சாணக்கியன் உரையாற்றலின் போது அமைதியாக இருந்து வரவேற்பு கொடுத்தது போல் சுமத்திரனுக்கும் மரியாதை கொடுத்து இருக்கும் என்பதை ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள் ?

முன்பே சொல்லியதுபோல் இவ்வளவு குழப்பத்துக்கும் காரணம் சுமத்திரனின் ஆதரவாளர்கள் தான் பிரச்சனை வரும் என்று தெரிந்தும் சுமத்திரனை பேச அழைத்தது யார் தவறு ?

சுமத்திரனை எதிர்பவர்களை ஒன்றுமே தெரியாத படிப்பறிவற்ற முட்டாள்கள் என்று எண்ணி சாதாரண கேள்விகள் ஒன்றுக்கும் விடையளிக்க திராணியற்று போனதால் தான் இவ்வளவு குழப்பமும் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துதானே மக்கள் கேள்வி கேட்க வருகிறார்கள் தமிழர்களுக்கு அரசியல் சேவை செய்ய என்று வந்தவர்கள் அந்த கேள்விகளுக்கு தகுந்த பதில் அளிப்பது சுமத்திரனின் கடமை அல்லவா ?

முதலில் மக்களுக்கு ஜனநாயகத்துக்கு ஏற்றமாதிரி அரசியல்வாதிகள் நடந்து கொள்ளணும் அதைவிட்டு பாதுகாவலர்கள் போலீஸ் அதிகாரிகள் மூலமாக மண்டபத்தை நிரப்பி கொண்டு அரசியல் செய்ய சொறிலங்கா என்று நினைத்து நடந்து கொண்டால் பிரச்சனை வரும்தானே அதன் பிறகு குத்துது குடையுது என்றால் தன்னும் பரவாயில்லை வந்தவர்கள் குண்டர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்று மேலும் மேலும் வெறுப்பை உமிழ்ந்து எண்ணத்தை அடையப்போகிறீர்கள் ? 

நல்ல அரசியல்வாதிக்கு அழகு தன்னை எதிர்க்க வந்தவனையும் தன்னுடைய  ஆதரவாளன் ஆக்குவது .

இங்கு நடப்பது அந்தக்கால இயக்க சண்டைகள் போன்றது பேருக்கு ஜனநாயகத்தை சொல்லி அழுவது ஒரு பேஷன் ஆகிவிட்டது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

சுமத்திரன்  அரசியலுக்கு வந்து கடந்த பத்து வருடத்தில் பேருக்கு தன்னும் இலங்கைத்தமிழருக்கு நாலு நன்மை பெற்றுக்கொடுத்து இருந்தால் இதே சாணக்கியன் உரையாற்றலின் போது அமைதியாக இருந்து வரவேற்பு கொடுத்தது போல் சுமத்திரனுக்கும் மரியாதை கொடுத்து இருக்கும் என்பதை ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள் ?

முன்பே சொல்லியதுபோல் இவ்வளவு குழப்பத்துக்கும் காரணம் சுமத்திரனின் ஆதரவாளர்கள் தான் பிரச்சனை வரும் என்று தெரிந்தும் சுமத்திரனை பேச அழைத்தது யார் தவறு ?

சுமத்திரனை எதிர்பவர்களை ஒன்றுமே தெரியாத படிப்பறிவற்ற முட்டாள்கள் என்று எண்ணி சாதாரண கேள்விகள் ஒன்றுக்கும் விடையளிக்க திராணியற்று போனதால் தான் இவ்வளவு குழப்பமும் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துதானே மக்கள் கேள்வி கேட்க வருகிறார்கள் தமிழர்களுக்கு அரசியல் சேவை செய்ய என்று வந்தவர்கள் அந்த கேள்விகளுக்கு தகுந்த பதில் அளிப்பது சுமத்திரனின் கடமை அல்லவா ?

முதலில் மக்களுக்கு ஜனநாயகத்துக்கு ஏற்றமாதிரி அரசியல்வாதிகள் நடந்து கொள்ளணும் அதைவிட்டு பாதுகாவலர்கள் போலீஸ் அதிகாரிகள் மூலமாக மண்டபத்தை நிரப்பி கொண்டு அரசியல் செய்ய சொறிலங்கா என்று நினைத்து நடந்து கொண்டால் பிரச்சனை வரும்தானே அதன் பிறகு குத்துது குடையுது என்றால் தன்னும் பரவாயில்லை வந்தவர்கள் குண்டர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்று மேலும் மேலும் வெறுப்பை உமிழ்ந்து எண்ணத்தை அடையப்போகிறீர்கள் ? 

இந்த  கூட்டத்தை குழப்பியதை நீங்கள்  ஏற்றுக்கொள்கிறீர்களா அல்லது கண்டிக்கிறீர்களா ? 

இதற்கு மிகவும் சுருக்கமாக ஏற்றுக்கொள்கிறேன் அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை என  பதிலைக் கூறுங்கள். மிகுதிக்கு பின்னர் வருகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

இந்த  கூட்டத்தை குழப்பியதை நீங்கள்  ஏற்றுக்கொள்கிறீர்களா அல்லது கண்டிக்கிறீர்களா ? 

இதற்கு மிகவும் சுருக்கமாக ஏற்றுக்கொள்கிறேன் அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை என  பதிலைக் கூறுங்கள். மிகுதிக்கு பின்னர் வருகிறேன். 

ஜனநாயகம் ஜனநாயகம் என்று சொல்பவர்கள் முதலில் ஜனநாயகவாதிகள் போன்றா நடந்து கொண்டீர்கள் ?

இதற்க்கு பதிலை  சொல்லுங்கள் உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

மத்திரன்  அரசியலுக்கு வந்து கடந்த பத்து வருடத்தில் பேருக்கு தன்னும் இலங்கைத்தமிழருக்கு நாலு நன்மை பெற்றுக்கொடுத்து இருந்தால் இதே சாணக்கியன் உரையாற்றலின் போது அமைதியாக இருந்து வரவேற்பு கொடுத்தது போல் சுமத்திரனுக்கும் மரியாதை கொடுத்து இருக்கும் என்பதை ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள் ?

2009 க்கு பின் நாடு வந்து மகிந்த கட்சியில் வாக்கு கேட்டவர் அல்லவா சாணாக்ஸ்?

அப்போ வெண்டிருந்தால் இப்போ இவர் மட்டகளப்பின் அங்கயன்?

இப்போதும் முழுக்க முழுக்க சுமந்திரனின் அரசியலை அடி ஒற்றியே நடக்கிறார்.

அப்போ சாணாக்ஸ்சை குழப்பாமல், ஆபிரகாமை மட்டும் குழப்ப ஏதும் விசேட காரணங்கள் இருக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nunavilan said:
முன்னாள் யூனியன் கல்லூரி அதிபர்
கதிர் பாலசுந்தரம்:
 
கனடாவில் திரு. சுமந்திரன் உரையாற்றிய கூட்டத்துக்கு நானும் போயிருந்தேன். எனது சக்கர முதுகுப் பக்கத்தில் மண்டப பின்சுவர் நீளத்துக்குப் பல பொலிசார்கள் நின்றார்கள். மண்டப பாதுகாவலர்கள் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தனர். திரு. சாணக்கியனை அடுத்து சுமந்திரன் உரையாற்றிக் கொண்டிருந்தார். எதுவித சலசலப்பும் இல்லை. நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேலாகிவிட்டது. பேச்சு முடிகிற நேரம்.
சபையின் பின் வரிசையில் இருந்த ஓரூவர் எழுந்து நின்று ஏதோ கேட்டார். எனக்கு விளங்கவில்லை. இருக்கையில் இருந்த சபை முழுவதும் வினா எழப்பியவரை நோக்கியது. அவர் அருகே நின்ற இன்னொருவர் இரு கைகளையும் உயர்த்தி ஏதோ சத்தம் போட்டார். சபை முழுவதும் எழுந்து நின்று மௌனமாய் அவரை நோக்கியது. இன்னும் சிலர் கைகளை உயர்த்தி குரலெழுப்பினர்.
முதுகுச் சட்டையில் ஆங்கிலத்தில் பாதுகாவலர்கள் என்று எழுதியவர்களை நோக்கினேன். அவர்கள் மௌனமாய் நடப்பதை ரசித்துக்கொண்டு நின்றார்கள். பொலிசாரை நோக்கினேன். அழகான கருநீலச் சட்டைப் பொத்தான்களின் ஓளிவீச்சுகள் கண்களைக் கூசச் செய்தன. அவர்கள் அனைவரும் நட்டுவைத்த பாவைகள் போல பேசாமடைந்தைகளாய் காட்சி தந்தனர்.
அதுதான் கனேடிய ஜனநாயக பேச்சுச் சுதந்திரத்தின் பேரழகு. அதில் சில முதிய இளைஞர்கள் நஞ்சு பாய்ச்சுவதைப் பார்த்து இதயம் வலிபொறுக்காமல் ஓவென்றழுதது. இனவாத சிங்களவர்கள் செய்யத் துடிப்பதை இவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள்.

அண்மையில் தேர்தல் காலத்தில் தற்போதைய கனேடிய அரசின் பிரதமர் தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்றபோது அவரையே பேசமுடியாதபடி குழப்பினார்கள் ஒரு சில எதிர்ப்பாளர்கள். இந்த நிலைமையில்சு மந்திரன் எல்லாம் எந்த மூலைக்கு... 

என்னை பொறுத்தவரை எதிர்ப்பு காட்டியது தவறாக தெரியவில்லை. பேராசிரியர் பீரிஸ் மாவீரர் தினத்தை நினைவுகூறுவது நல்லிணக்கத்துக்கு முரணானது, சட்ட விரோதமானது என தெரிவிக்கின்றார். இப்படியான நிலையில் சுமந்திரன் வெளிநாட்டில் உள்ள எங்களுக்கு அரசியல் பாடம் எடுத்து என்ன புடுங்க முடியும்?

நாங்கள் என்னதான் ஐக்கிய இலங்கை என சென்றாலும் பெரும்பான்மை சிங்கள எண்ணம் இதய சுத்தியுடன் இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காடைத்தனமான செயலகள் கண்டிக்கபட வேண்டும். 
தலைவர் தன்னுடய விரோதியாக இருந்தாலும் நன்கு உபசரித்து அனுப்புவார்.
அவர்களது கருத்தையும் செவிமடுப்பர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

நாங்க யாரு..? 

அங்குள்ள  சனத்திற்கு ஏதாவது நன்மை நடைபெறுவது சிலருக்கு விருப்பமில்லை.

😔

கந்தையர்,

உங்களுக்கு சுமந்திரன் மீது பிரச்சனையா அல்லது இலங்கையில் இருக்கும் தமிழர்களுடன் பிரச்சனைய..?

இதே சிந்தனையோட்டத்தின் விளைவாக 2005ல் கிடைத்த மிக அருமையான சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு, இன்று நடுத்தெருவில் நிற்கிறோம். நினைவில் வைத்திருங்கள்.

😔

 

எதிர்ப்பு காட்டியவர்கள் கொஞ்சம் நாகரீகமாக நடந்து இருக்கலாம். தம்மை ரவுடிகளாக வெளிப்படுத்தி இருக்க தேவை இல்லை. தமிழ்வின் போன்ற சில செய்தி தளங்கள் இதை பிரபலப்படுத்தி மகிழ்வது நீங்கலாக ஒரு தரமான ஊடகம், கனேடிய ஊடகம் போன்றவை இப்படியான சம்பவத்தை ஜனநாயகம், பேச்சு சுதந்திரம், நாகரிகம் போன்றவற்றை மலினப்படுத்தும் சம்பவமாகவே பார்க்கும். இதனால் எதிர்ப்பாளர்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவானவர்கள் உரையாற்றியவர் மட்டும் நல்லவர் எனும் தோற்றப்பாடு ஏற்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

2009 க்கு பின் நாடு வந்து மகிந்த கட்சியில் வாக்கு கேட்டவர் அல்லவா சாணாக்ஸ்?

அப்போ வெண்டிருந்தால் இப்போ இவர் மட்டகளப்பின் அங்கயன்?

இப்போதும் முழுக்க முழுக்க சுமந்திரனின் அரசியலை அடி ஒற்றியே நடக்கிறார்.

அப்போ சாணாக்ஸ்சை குழப்பாமல், ஆபிரகாமை மட்டும் குழப்ப ஏதும் விசேட காரணங்கள் இருக்குமா?

காரணம் சிம்பிள் திருவாளர் ஆபிரகாமின் வாயால் வந்த வினை இவ்வளவும் .

சுரேஷ் பிரேமசந்திரனை போட என்று பலர் காத்திருந்தவர்கள் ஆனால் தமிழரின் எதிர்கால நன்மை கருதி அதே சுரேசை கூட்டமைப்புக்குள் அதே காத்திருந்தவர்களால்  மாலை போட்டு வன்னிக்கு அழைத்தது வரலாறு .சாணக்கியர் அடுத்த சுரேஷ் ஆகலாம்தானே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

இந்த இடைவெளியை அதிகரிக்கவும், புலம்பெயர் தமிழர்கள் எல்லாரும் அடிப்படைவாத தலிபான் நிகர் முட்டாபீசுகள் என்பதை நிறுவவும் சிலர் அதி தீவிர தமிழ் தேசியவாதிகள் என்ற போர்வையில் அனுப்பட்டுள்ளனரோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

வோவ்..வோவ் ஹோல்ட் ஒன் கோசான்: முன் யோசனையற்ற தீவிர தமிழ்தேசியர்கள்  முட்டாபீசுகள் தான்! இதை சிங்களவன் "அண்டர்கவர் ஆட்களை" அனுப்பித் தான் தோற்றம் காட்ட வேணுமென்று நீங்கள் சந்தேகித்தால்..உங்களுக்கு யாழில் இவ்வளவு நாளும் கருத்தாடிய பிறகும் விசயம் விளங்கவில்லையோ என நினைக்க வைக்கிறது! 🤔

27 minutes ago, பெருமாள் said:

 

முதலில் மக்களுக்கு ஜனநாயகத்துக்கு ஏற்றமாதிரி அரசியல்வாதிகள் நடந்து கொள்ளணும் அதைவிட்டு பாதுகாவலர்கள் போலீஸ் அதிகாரிகள் மூலமாக மண்டபத்தை நிரப்பி கொண்டு அரசியல் செய்ய சொறிலங்கா என்று நினைத்து நடந்து கொண்டால் பிரச்சனை வரும்தானே அதன் பிறகு குத்துது குடையுது என்றால் தன்னும் பரவாயில்லை வந்தவர்கள் குண்டர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்று மேலும் மேலும் வெறுப்பை உமிழ்ந்து எண்ணத்தை அடையப்போகிறீர்கள் ? 

 

வந்தவர்களில் இப்படி நடந்து கொண்டோர் - இங்கேயும் சரி, அவுசிலும் சரி- குண்டர்களே, ரௌடிகளே! படிப்பு இருக்கா இல்லையா என்பது தெரியாது!

இதைச் சுட்டிக் காட்டி அடையப் போவது எதை: இந்த ரௌடிகளை அடுத்த தலைமுறைத் தமிழர்கள் மேல் மூச்சுக் காற்றே படாதவாறு ஒதுக்கி வைக்க வேண்டும்! இவர்களுக்கும் தமிழர் தீர்வுக்கும் தொடர்பேயில்லாமல் செய்ய வேண்டும்! இது மிக முக்கியம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்த உஷார் மடையர்கள் சுமந்திரனை பேசவிடாமல் செய்தது வெற்றி என்று குதிக்கின்றார்கள். ஆனால் இது ஒன்றுக்கும் உதவாது. 

ஜனநாயக முறையில் எதிர்ப்பைக் காட்டி கேள்விகளைக் கேட்டிருக்கவேண்டும். முக்கியமாக ஒரு தேசிய இனமான தமிழ் மக்கள் இப்போது வெறும் சிறுபான்மைக் குழுவாக அழைக்கப்படுவதை சுமந்திரனும், கூடச் சென்ற அரசியல் சட்ட நிபுணர்களும் ஏன் எதிர்க்கவில்லை என்று கேட்டிருக்கவேண்டும். ஆனால் “வீ வோன்ற் ரமிலீலம்” என்பதற்கு அப்பால் எதுவும் தெரியாதவர்கள் சண்டித்தனத்தை மட்டும்தானே காட்டமுடியும்!

ஜனநாயக முறையில் கேள்வி கேட்டிருக்கலாம். சவாகச்சேரியில் கேள்வி கேட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினரை கேள்வி கேட்கவடாமல் உட்காரும் என்ற சோன்வர்தான். அதுமட்டுமல்ல வவுனியாவில் ஊடகவியலாளரை மிரட்டும் வகையில்  அதட்டி அடக்கியவர். மக்கள் தன்னைச்சூழ்ந்து நின்று கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக சிறிலங்காவின் அதிடிரப்படை சூழவர தேர்தல் பிரச்சாரம் செய்தவர்தான் சுமத்திரன். ஆகவே சுமத்திரனிடம் கேள்வி கேட்க விரும்பிபோது பேச்சு முடிந்தபின் கேள்விகளைக் கேட்கச்சொன்னார். எழுத்தில்தருமாறு கோரினார்.எழுத்தில் கேள்விகள் கெடுக்கப்பட்டால்சங்கடமான கேள்விகளைத் தவிர்த்து விட்டுப் பதில் சொல்லியிருப்பார்;அதுமட்டுமன்றி பேச்சு முடிந்ததும் நேரம் காணாது என்று எல்லோருக்கும் அல்வா கொடுத்து விட்டு போயிருப்பார். காலைக்கதிர் வித்தியாதரனை வைத்து கனடாப்பயணம் வெற்றிகரமாக முடிந்தது என்று தலைப்புச் செய்தியும் போடவைப்பார். சுமத்திரனின் இந்த்திருகுதாள சுத்துமாத்துகளை அறிந்த  மக்கள் அவரை கேள்விக்குப் பதில்சொல்லுமாறு வலியுறுத்தினர். இதே நிலையில் கஜேந்திரகுமாரோ அல்லது வேறு எந்த அரசியல்வாதியோ நின்றிருந்தால்  மக்கள் அமைதியாகப் பேச்சைக்கேட்டபின் கேள்விகளைக் கேட்டிருப்பர். நேற்றைய சம்பவத்தில் கூட சாணக்கியனை அமைதியாகப் பேசவிட்ட மக்கள் சுமத்திரனை பேசவிடாமல் தடுத்து கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள் என்றால்சுமத்திரனை மக்கள் நன்கு எடைபோட்டிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.அது சரி கேள்விகேட்டது  தமிழரசின் மாவை அணியா?சிறதரன் அணியா?அல்லது தமிழ்த்தேசியவாதிகளா?அல்லது எல்லோருமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புலவர் said:

ஜனநாயக முறையில் கேள்வி கேட்டிருக்கலாம். சவாகச்சேரியில் கேள்வி கேட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினரை கேள்வி கேட்கவடாமல் உட்காரும் என்ற சோன்வர்தான். அதுமட்டுமல்ல வவுனியாவில் ஊடகவியலாளரை மிரட்டும் வகையில்  அதட்டி அடக்கியவர். மக்கள் தன்னைச்சூழ்ந்து நின்று கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக சிறிலங்காவின் அதிடிரப்படை சூழவர தேர்தல் பிரச்சாரம் செய்தவர்தான் சுமத்திரன். ஆகவே சுமத்திரனிடம் கேள்வி கேட்க விரும்பிபோது பேச்சு முடிந்தபின் கேள்விகளைக் கேட்கச்சொன்னார். எழுத்தில்தருமாறு கோரினார்.எழுத்தில் கேள்விகள் கெடுக்கப்பட்டால்சங்கடமான கேள்விகளைத் தவிர்த்து விட்டுப் பதில் சொல்லியிருப்பார்;அதுமட்டுமன்றி பேச்சு முடிந்ததும் நேரம் காணாது என்று எல்லோருக்கும் அல்வா கொடுத்து விட்டு போயிருப்பார். காலைக்கதிர் வித்தியாதரனை வைத்து கனடாப்பயணம் வெற்றிகரமாக முடிந்தது என்று தலைப்புச் செய்தியும் போடவைப்பார். சுமத்திரனின் இந்த்திருகுதாள சுத்துமாத்துகளை அறிந்த  மக்கள் அவரை கேள்விக்குப் பதில்சொல்லுமாறு வலியுறுத்தினர். இதே நிலையில் கஜேந்திரகுமாரோ அல்லது வேறு எந்த அரசியல்வாதியோ நின்றிருந்தால்  மக்கள் அமைதியாகப் பேச்சைக்கேட்டபின் கேள்விகளைக் கேட்டிருப்பர். நேற்றைய சம்பவத்தில் கூட சாணக்கியனை அமைதியாகப் பேசவிட்ட மக்கள் சுமத்திரனை பேசவிடாமல் தடுத்து கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள் என்றால்சுமத்திரனை மக்கள் நன்கு எடைபோட்டிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.அது சரி கேள்விகேட்டது  தமிழரசின் மாவை அணியா?சிறதரன் அணியா?அல்லது தமிழ்த்தேசியவாதிகளா?அல்லது எல்லோருமா?

😂நான்கு றௌடிகளை  "மக்கள்" என்று நீங்கள் லேபல் போட்டது ஆச்சரியமாக இருக்கிறது! மேலே இன்னொரு செய்தி இணைப்பிலும் "கனடாத் தமிழர் ஆர்ப்பாட்டம்" என்று கொமெடி விட்டிருக்கிறார்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

 

வந்தவர்களில் இப்படி நடந்து கொண்டோர் - இங்கேயும் சரி, அவுசிலும் சரி- குண்டர்களே, ரௌடிகளே! படிப்பு இருக்கா இல்லையா என்பது தெரியாது!

இதைச் சுட்டிக் காட்டி அடையப் போவது எதை: இந்த ரௌடிகளை அடுத்த தலைமுறைத் தமிழர்கள் மேல் மூச்சுக் காற்றே படாதவாறு ஒதுக்கி வைக்க வேண்டும்! இவர்களுக்கும் தமிழர் தீர்வுக்கும் தொடர்பேயில்லாமல் செய்ய வேண்டும்! இது மிக முக்கியம்!

உங்கள் கருத்துகள்  இன்னும் சுமத்திரனுக்கு எதிரான எதிர்ப்பு  முறையை தூண்டுமே  ஒழிய குறைக்காது .

இங்கு அங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் இங்குள்ளவர்களும் குறைந்தபட்சம் ஒரு லைனில் ஓடணும் ஆனல் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இங்குள்ள புலப்பெயர் மக்களை கோப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாய் இருக்கினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

காரணம் சிம்பிள் திருவாளர் ஆபிரகாமின் வாயால் வந்த வினை இவ்வளவும் .

சுரேஷ் பிரேமசந்திரனை போட என்று பலர் காத்திருந்தவர்கள் ஆனால் தமிழரின் எதிர்கால நன்மை கருதி அதே சுரேசை கூட்டமைப்புக்குள் அதே காத்திருந்தவர்களால்  மாலை போட்டு வன்னிக்கு அழைத்தது வரலாறு .சாணக்கியர் அடுத்த சுரேஷ் ஆகலாம்தானே ?

இல்லையே பெரும்ஸ்,

ஆபிரகாம் மேச்சல் தரைக்கு போனால் சாணாக்கியனும் போறா.

சாணாக்கியனை மகிந்தவிடம் இருந்து தமிழரசுக்கு கூட்டி வந்தவரும் ஆபிரகாம்.

இருவரும் சேர்ந்துதான் P2P நடத்தினார்கள்.

இப்போ வெளிநாட்டு பயணமும் இருவரும் சேர்ந்தே.

ஆகவே ஆபிரகாம் தமிழர் விரோத/துரோக அரசியல் செய்தால் அதில் தோள் கொடுத்து நிற்பவர் சாணாக்ஸ்.

ஆனால் அவரை மட்டும் ஏன் குறி வைக்க வில்லை.

பிகு

சாணக்கியனும் மதத்தால் கிறிஸ்தவர்தான். ஆனால் பெயரில் வித்தியாசம் இல்லை. எனவே பலருக்கு இது தெரியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

உங்கள் கருத்துகள்  இன்னும் சுமத்திரனுக்கு எதிரான எதிர்ப்பு  முறையை தூண்டுமே  ஒழிய குறைக்காது .

இங்கு அங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் இங்குள்ளவர்களும் குறைந்தபட்சம் ஒரு லைனில் ஓடணும் ஆனல் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இங்குள்ள புலப்பெயர் மக்களை கோப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாய் இருக்கினம் .

ஓம். நிகழ்ச்சி நிரல் கொடுக்கப் பட்டு, பிளான் போட்டு சிங்களவன் தான் எங்களுக்கு ஆப்பு வைக்க வேணும்! ஏனென்றால் எங்களிடம் இருக்கும் புலம்பெயர் கொடிபிடிக்கும் றௌடிகளால் எமக்கு ஒரு பாதகமும் இல்லை! - நம்புகிறேன்!😎

இன்றைக்கு சந்தோசமான நாள் உங்களுக்கோ , எனக்கோ இல்லை! கோத்தா போன்ற ஆட்களுக்கு மட்டும் தான்! இது புரிகிறதா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

நான்கு றௌடிகளை  "மக்கள்" என்று நீங்கள் லேபல் போட்டது ஆச்சரியமாக இருக்கிறது! மேலே இன்னொரு செய்தி இணைப்பிலும் "கனடாத் தமிழர் ஆர்ப்பாட்டம்" என்று கொமெடி விட்டிருக்கிறார்கள்! 

அப்படிப்பார்த்தால் சுமத்திரனின் கூட்டத்திற்கு வந்திருந்தது 2 ஆதவாளர்களா?(மக்களா) கூடுதலான ஆரவாளர்களும் குறைந்தளவு உங்கள் கருத்தின்படியான ரவுடிகளும் என்றால்  பாதுகாலர்கள் இருந்த சூழலில் கூட்டம் குழப்பட்டிருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

சாணக்கியனும் மதத்தால் கிறிஸ்தவர்தான். ஆனால் பெயரில் வித்தியாசம் இல்லை. எனவே பலருக்கு இது தெரியாது. 

சாணக்கியர் கிறிஸ்துவம் என்பது பலருக்கும் தெரியும் பாஸ்  உங்களுக்கு நேரம் கிடைத்துவிட்டது போல் உள்ளது இன்று சண்டே இன்றும் வீட்டுக்குள் நில்லாமல் மொனிற்ரருக்குள் தலையை ஒட்டிக்கொன்று நிக்க முடியாது இந்த திரி ஆக்டொபஸ்  போல் பலப்பக்கமும்  பாய்ந்து பற்றிக்கொண்டு போகும் வாழ்த்துக்கள் மூன்றுகால் காரர்களுக்கும் நான்கு கால்காரர்களுக்கும் உங்களுக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

வோவ்..வோவ் ஹோல்ட் ஒன் கோசான்: முன் யோசனையற்ற தீவிர தமிழ்தேசியர்கள்  முட்டாபீசுகள் தான்! இதை சிங்களவன் "அண்டர்கவர் ஆட்களை" அனுப்பித் தான் தோற்றம் காட்ட வேணுமென்று நீங்கள் சந்தேகித்தால்..உங்களுக்கு யாழில் இவ்வளவு நாளும் கருத்தாடிய பிறகும் விசயம் விளங்கவில்லையோ என நினைக்க வைக்கிறது! 🤔

கொஞ்சம் உசார் மடையர்கள்தான். ஆனால் மனதால் இனத்துக்கு தீங்கு எண்ணாதவர்கள். 

👇இதை கூட விளங்கி கொள்ளமுடியாதவர்களா? ஆகவேதான் சில agent provocateurs இவற்றை தூண்டி விடுகிறார்களோ என எண்ணுகிறேன்.

5 minutes ago, Justin said:

இன்றைக்கு சந்தோசமான நாள் உங்களுக்கோ , எனக்கோ இல்லை! கோத்தா போன்ற ஆட்களுக்கு மட்டும் தான்! இது புரிகிறதா?  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, புலவர் said:

அப்படிப்பார்த்தால் சுமத்திரனின் கூட்டத்திற்கு வந்திருந்தது 2 ஆதவாளர்களா?(மக்களா) கூடுதலான ஆரவாளர்களும் குறைந்தளவு உங்கள் கருத்தின்படியான ரவுடிகளும் என்றால்  பாதுகாலர்கள் இருந்த சூழலில் கூட்டம் குழப்பட்டிருக்காது.

வீடியோக்களைப் பார்த்தாலே இது தெரியவில்லையா?  அவுசில் றௌடிகளின் அட்டகாசம், பிரான்சில் மாவையின் கூட்டத்தில் புகைக்குண்டு வீச்சு, இவற்றின் பிறகு தான் பாதுகாப்பு வைத்துக் கூட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையால், பல ஆர்வமுள்ள மக்களும் போவதைக் குறைத்துக் கொண்டனர். எஞ்சியிருப்பது சில ஆதரவாளர்களும், சில றௌடிகளும்! 

அப்ப றௌடிகள் கனடாத் தமிழர் என்பது கொமெடி தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

சாணக்கியர் கிறிஸ்துவம் என்பது பலருக்கும் தெரியும் பாஸ்  உங்களுக்கு நேரம் கிடைத்துவிட்டது போல் உள்ளது இன்று சண்டே இன்றும் வீட்டுக்குள் நில்லாமல் மொனிற்ரருக்குள் தலையை ஒட்டிக்கொன்று நிக்க முடியாது இந்த திரி ஆக்டொபஸ்  போல் பலப்பக்கமும்  பாய்ந்து பற்றிக்கொண்டு போகும் வாழ்த்துக்கள் மூன்றுகால் காரர்களுக்கும் நான்கு கால்காரர்களுக்கும் உங்களுக்கும் .

சந்திப்பம் பாஸ்.

சாணாக்கியனின் உறவுகள் சிலரை எனக்கு நெடுநாள் கொண்டு தெரியும். ஆகவே அவர்கள் மதம் எனக்கு இப்போ தெரிந்த விடயம் அல்ல. ஆனால் பெயரில் கிறிஸ்தவ சேர்க்கை இல்லாததால், சுமந்திரன் செய்யும் அதே அரசியலை செய்யும் அவர் குறிவைக்க படுவதில்லையோ என்பது என் சந்தேகம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.