Jump to content

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎11‎-‎2021 at 15:51, கிருபன் said:

அப்படி இல்லை. மற்றைய இயக்க, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எல்லோரும் தமிழீழம் என்ற தனியரசை அடையமுடியாது என்று கொள்கைகளில் இருந்து பின்வாங்கியபோது தனது இலட்சியத்தில் இருந்து இம்மியும் நகராமல் இருந்தார்.

தலைவர் உசுப்பேற்றப்பட்டும் இருக்கவில்லை. புகழ் விரும்பியாகவும் இருக்கவில்லை. கொண்ட கொள்கைக்காக குடும்பத்தையே பலிகொடுத்து தானும் தனது மண்ணில் மாய்ந்துபோனவர்.

அப்படி சொல்ல முடியாது ....எங்களுக்கு மற்ற  இயக்கங்களை பிடிக்காது  என்பதற்காக அவர்கள் செய்வது எல்லாம் பிழை என்றும் , தலைவரை பிடிக்கும் என்பதற்காக  அவர்  செய்வது எல்லாம் சரி என்று ஆகி விடாது .மற்றைய இயக்கத்து தலைவர்களுக்கு அரசியல் அறிவு அதிகம் இருந்தது ...எப்படித் தான் போராடினாலும் தமிழீழம் கிடைக்காது . அதற்கு இந்தியா விடாது என்று தெரிந்திருந்தது...வீணாய் போராடி உயிர் இழப்புகள் அழிவுகளை தமிழருக்கு மேலும் மேலும் ஏற்படுத்துவதை விட அரசுடன் இணைந்து போகலாம் என்று தீர்மானித்தார்கள் .
தலைவர் , கிடைக்காது என்று தெரிந்தும்  தேவையில்லாமல் தானும் மடிந்து , அத்தனை மக்களை அழித்ததும்  இல்லாமல் , முந்தி இருந்ததை விட பாரிய அழிவுக்கு தமிழரை கொண்டு வந்து விட்டு  உள்ளார் ...வடக்கில் தமிழருக்கு சொந்தமான இடங்கள் பறி போவதற்கு கூட அவர் தான் காரணம் .
மற்றைய இயக்கங்களுக்கு தலைவரை மாதிரி ஓர்மம் இல்லை என்பது உண்மை தான் ...ஆனால் , அதை விட உண்மை அவர்களுக்கு இப்படித் தான் நடக்கும் என்பது தெரிந்திருந்தது 
உண்மையையாய் தமிழ் மக்கள் மீது அக்கறையால்   போராட்டத்தை ஆரம்பித்த தலைவர் அதே தமிழ் மக்களுக்காய் நிறுத்தி இருக்கலாம் ...நிறுத்தி இருந்தால் இவ்வளவு அழிவுகள் ஏற்பட்டு இருக்காது .

Link to comment
Share on other sites

  • Replies 469
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎11‎-‎2021 at 15:58, கிருபன் said:

அப்படி நினைக்கவில்லை. ஒழுக்கமும், கட்டுப்பாடும், ஓர்மமும் உள்ள மக்களாக மாற்ற முனைந்தார். ஆனால் தமிழ் மக்களில் பலர் இயல்பிலேயே சுயநலம் பிடித்த, குறுக்குவழிகளில் வாழ்வில் முன்னேறலாம் என்ற சிந்தனையோடு இருந்தவர்கள். போராட்டம் மக்கள் மயப்படுத்தப்படாமல் இருந்ததால் நாட்டில் இருந்து வெளியேறி போராட்டத்தின் பார்வையாளர்களாகவே மாறினோம். 

நீங்கள் சொல்வது உண்மையாயிருந்தாலும்  இயக்கத்து போகாமல் ஓடி வந்தவர்களை விட இயக்கத்து போய் கடைசி வரை நின்று விட்டு வந்தவர்கள் பலரும் பொறுக்கிகளாய் தான் இருக்கினம் .
ஒரு நாளும் ஆயுத்தத்தாலோ அல்லது அதிகாரத்தாலோ ஒருவரையும் அடக்கி வைத்திருக்க முடியாது 
 

On ‎25‎-‎11‎-‎2021 at 17:12, கிருபன் said:

இப்ப எம்பெட் வீடியோவை நீக்கிவிட்டேன். இணைப்பை அழுத்திப் பாருங்கள். இவ்வளவு அழகான பெண்ணுக்கே இனவாதிகளால் தொல்லை என்பதைத் தாங்ங்கமுடியவில்லை!

 

அவவை பார்த்தால் சிங்கள பெட்டை மாதிரி இருக்குது ....போய் பிரண்ட் சிங்களவர் ...அவையள் சிங்களத்தில் தான் கதைத்து கொண்டு இருந்திருப்பினம் ..அவவை பார்த்து தமிழா என்று கேட்டது நம்ப கூடியதா இருக்குதா?...டிக்டொக்கில் பிரபல்யமாவதற்காகவும் விட்டு இருக்கலாம் ...இலங்கையில் அப்படி நடக்காது என்று சொல்லவில்லை ...இவக்கு நடந்தது நம்ம முடியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎11‎-‎2021 at 19:37, ஈழப்பிரியன் said:

 

நியூயோர்க் தாக்குதல் நடக்காம இருந்திருந்தால் நிலைமை மாறியிருக்கலாம்.

சிலவேளை தமிழீழம் பிறந்தும் இருக்கலாம்.

அது எம்மை நாமே ஏமாற்ற சொல்லலாம் ...இந்தியா இருக்கும் வரை தமிழீழம் என்று ஒன்று கிடைக்காது ...அமெரிக்காவோ , மற்ற உலக நாடுகளோ இந்தியாவை, இலங்கையை  பகைத்து கொண்டு எங்களுக்கு தமிழீழம் எடுத்து தராது ...எடுத்து தர வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎11‎-‎2021 at 18:46, Kandiah57 said:

பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது   காலத்தை கடத்தவும்.  அந்தக் காலத்தில்  இராணுவத்தை தயார் செய்யவும் மாறாக தீர்வு வழங்கவல்ல. ...இது தலைவருக்கு நன்றாகவே தெரியும்     அவர்களிடம். தீர்வு இருந்தால் ஏன் மற்றவர்களால் பெற முடியவில்லை  ?அல்லது ஏன் அந்தத் தீர்வை அமுல் செய்யவில்லை  இலங்கை அரசியலில் அறிவு அற்றவர்களும். தலைவரைப்பற்றி  நன்றாக தெரியதவர்களும் தான் அவரை குறை சொல்லுகிறார்கள் 

ஆம் இராணுவமும்,  அரசும் தம்மை பலப்படுத்த யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தியது ...ஏன் புலிகளுக்கு அது தெரியாமல் இருந்ததா ?....1}ஏன் அவர்கள் தங்களை பலப்படுத்தவில்லை ?2} பேச்சு வார்த்தைக்கு போனால் இப்படி நடக்கும் என்று தெரிந்தால் ஏன் பேச்சு  வார்த்தைக்கு  போனார்கள்?...சிங்களவர்களை மொக்கன் ,மோடன்  என்று நினைத்தார்களா?

On ‎25‎-‎11‎-‎2021 at 21:25, nunavilan said:

டக்ளசின் காரைநகர் அடியோடு அவருக்கு தெரிந்து விட்டது .  இது வேலைக்கு ஆகாது என.😃

தலைவர் செயல் வீரராக இருந்தார். அதனால் புகழ் தேடி வந்திருக்கலாம்.

எம்மக்களை வைத்து போராட்டம் நடாத்த அவர் ஒருவரால் தான் முடிந்தது. முடியும்.

உண்மை ...மக்களை ஒன்றிணைக்க தலைவரால் மட்டும் தான் முடிந்தது ...அதே மக்களை அழிவுக்கு இட்டு செல்லவும் தலைவரால் மட்டுமே முடிந்தது .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அப்படி சொல்ல முடியாது ....எங்களுக்கு மற்ற  இயக்கங்களை பிடிக்காது  என்பதற்காக அவர்கள் செய்வது எல்லாம் பிழை என்றும் , தலைவரை பிடிக்கும் என்பதற்காக  அவர்  செய்வது எல்லாம் சரி என்று ஆகி விடாது .மற்றைய இயக்கத்து தலைவர்களுக்கு அரசியல் அறிவு அதிகம் இருந்தது ...எப்படித் தான் போராடினாலும் தமிழீழம் கிடைக்காது . அதற்கு இந்தியா விடாது என்று தெரிந்திருந்தது...வீணாய் போராடி உயிர் இழப்புகள் அழிவுகளை தமிழருக்கு மேலும் மேலும் ஏற்படுத்துவதை விட அரசுடன் இணைந்து போகலாம் என்று தீர்மானித்தார்கள் .
தலைவர் , கிடைக்காது என்று தெரிந்தும்  தேவையில்லாமல் தானும் மடிந்து , அத்தனை மக்களை அழித்ததும்  இல்லாமல் , முந்தி இருந்ததை விட பாரிய அழிவுக்கு தமிழரை கொண்டு வந்து விட்டு  உள்ளார் ...வடக்கில் தமிழருக்கு சொந்தமான இடங்கள் பறி போவதற்கு கூட அவர் தான் காரணம் .
மற்றைய இயக்கங்களுக்கு தலைவரை மாதிரி ஓர்மம் இல்லை என்பது உண்மை தான் ...ஆனால் , அதை விட உண்மை அவர்களுக்கு இப்படித் தான் நடக்கும் என்பது தெரிந்திருந்தது 
உண்மையையாய் தமிழ் மக்கள் மீது அக்கறையால்   போராட்டத்தை ஆரம்பித்த தலைவர் அதே தமிழ் மக்களுக்காய் நிறுத்தி இருக்கலாம் ...நிறுத்தி இருந்தால் இவ்வளவு அழிவுகள் ஏற்பட்டு இருக்காது .

அக்கா தன்ர அண்ணர் புத்திசாலி எண்டு சொல்லுறா....😂

1 hour ago, ரதி said:

1) நீங்கள் சொல்வது உண்மையாயிருந்தாலும்  இயக்கத்து போகாமல் ஓடி வந்தவர்களை விட இயக்கத்து போய் கடைசி வரை நின்று விட்டு வந்தவர்கள் பலரும் பொறுக்கிகளாய் தான் இருக்கினம் .
ஒரு நாளும் ஆயுத்தத்தாலோ அல்லது அதிகாரத்தாலோ ஒருவரையும் அடக்கி வைத்திருக்க முடியாது 
 

2) அவவை பார்த்தால் சிங்கள பெட்டை மாதிரி இருக்குது ....போய் பிரண்ட் சிங்களவர் ...அவையள் சிங்களத்தில் தான் கதைத்து கொண்டு இருந்திருப்பினம் ..அவவை பார்த்து தமிழா என்று கேட்டது நம்ப கூடியதா இருக்குதா?...டிக்டொக்கில் பிரபல்யமாவதற்காகவும் விட்டு இருக்கலாம் ...இலங்கையில் அப்படி நடக்காது என்று சொல்லவில்லை ...இவக்கு நடந்தது நம்ம முடியவில்லை 

1) கொண்ணரத் தவிர மிச்ச போராளிகள் எல்லாம் பொறுக்கிகள் எண்டு சொல்ல வாறா.... 

பொறாமை அப்பட்டமாகத் தெரிகிறது

2) 🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎11‎-‎2021 at 17:24, கிருபன் said:

சுமந்திரன் சிங்களவர்களுக்குச் சார்பாக அமெரிக்காவுடன் கதைக்கப் போகவில்லை. மகிந்தவுடன் சந்தித்தால் அவர் சொல்வதைக் கேட்டார் என்று அர்த்தமா? 

சுமந்திரனும், சாணக்கியனும் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகளின் வேலைத்திட்டத்துடன் இயங்குகின்றார்கள். புலம்பெயர்ந்த தமிழரின் அபிப்பிராயத்தை கேட்பது என்பதைவிட புலம்பெயர் தமிழர்களின் சிந்தனையை நாடிபிடிப்பதும், புலம்பெயர் தமிழர்களுக்கு மேற்குநாடுகளாலும், இந்தியாவாலும் கோடுகாட்டப்படும் தீர்வுக்கு ஆதரவைத் திரட்டுவதும் இவர்களின் பணி என்று கருதுகின்றேன். 

ஆனால் மேற்குநாடுகளும், இந்தியாவும் 13ம் திருத்தத் சட்டத்தில் உள்ள மாகாணசபைகளுக்கான மேலான தீர்வு எதையும் பரிந்துரைத்திருக்கமாட்டார்கள். வடக்கையும் கிழக்கையும் இணைப்பதுகூட தீர்வுத் திட்டத்தில் இருக்காது. இது இப்படி இருக்க சிங்கள அரசு மாகாணசபையை முற்றாக நீக்கி அல்லது நீர்த்துப்போகச் செய்யும் யாப்பை உருவாக்குவதில் மும்முரமாக நிற்கின்றது.

எனவே, சுமந்திரனை திட்டுபவர்கள் சிங்கள அரசு புதிய யாப்பின்மூலம் தமிழருக்கு கொடுக்கும் "தீர்வையும்" சுமந்திரன்தான் எழுதினார் என்று இப்பவே திட்டத் தயாராவது நல்லது!

 

இலங்கை பாராளுமன்றத்தில் சத்திய பிராமணம் எடுத்த இருவர்  இலங்கையரசினை மீறி உங்களுக்கு தீர்வு  பெற்றுத் தருவார்கள் ....வானம் பாத்துக்க கொண்டு இருங்கோ.
அவர்கள் இருவரையும் ஒரு மண்ணாங்கட்டி நாடும் அழைக்கவில்லை ...தங்கட சொந்த காசில் வந்து[அல்லது இலங்கையரசு அனுப்பிச்சசுதோ தெரியாது ...வந்து முஸ்லிம்களோடு கதைத்து விட்டு ] முக்குடைபட்டு கொண்டு போயினம் ...உண்மையாய் தமிழர்களோடு கதைத்து ,நாடி பிடித்து பார்க்க வந்திருந்தால் வெளிப்படையாய் கூட்டத்தை கூட்டி பொறுமையாய் மக்களது கேள்விகளுக்கு பதில் சொல்லி இருப்பினம்

Link to comment
Share on other sites

3 hours ago, ரதி said:

ஆம் இராணுவமும்,  அரசும் தம்மை பலப்படுத்த யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தியது ...ஏன் புலிகளுக்கு அது தெரியாமல் இருந்ததா ?....1}ஏன் அவர்கள் தங்களை பலப்படுத்தவில்லை ?2} பேச்சு வார்த்தைக்கு போனால் இப்படி நடக்கும் என்று தெரிந்தால் ஏன் பேச்சு  வார்த்தைக்கு  போனார்கள்?...சிங்களவர்களை மொக்கன் ,மோடன்  என்று நினைத்தார்களா?

உண்மை ...மக்களை ஒன்றிணைக்க தலைவரால் மட்டும் தான் முடிந்தது ...அதே மக்களை அழிவுக்கு இட்டு செல்லவும் தலைவரால் மட்டுமே முடிந்தது .

 

ஒரு கீறல் காயமும் படாமல் வானூர்தியில் ஏறி வந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தலைவரில் தான் பிழை என்று சொல்ல மனச்சாட்சி உள்ள எவராலும் சொல்ல முடியாது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே ருல்பென் சொல்ல முனையும் எதுவும் செவிடன் காதில் ஊதிய சங்கு தான்! இறுதி வரை வன்னிக்குள் இருந்து பின்னர் புனர்வாழ்வும் முடித்து வெளியே வந்த பல மட்டங்களிலும் இருந்த போராளிகள், செயல்பாட்டாளர்கள் பலர் மௌனமாக இருக்கின்றனர். சிலர் எழுத்தாளர்களாக மாறி விட்டனர்.

இந்த எழுத்தாளர்களிலும் இரு வகையினர்: தமிழ்க்கவி வகையினர் உண்மையைச் சொல்ல வெளிக்கிட்டு இன்று "சாகாத படியால் நீங்கள் துரோகிகளே!" என தூற்றல் வாங்கி கொண்டிருக்கின்றனர்.

இரண்டாம் வகை: வெற்றிச் செல்வி, நிலாந்தன் போன்றோர் தமிழ்க்கவி போன்றோர் சொல்லும் தகவல்களை மறுதலிப்பதுமில்லை, ஆதரிப்பதுமில்லை - எனவே இவர்களை தேசிய வீரர்கள் சும்மா விட்டு வைத்திருக்கிறார்கள்!

பெரிய நகைச்சுவை இந்த முன்னாள் போராளிகளைத் தூற்றுவதில் முன்னணி வகிப்போர் எப்போதோ புலம் பெயர்ந்து (புலிகளின் பாஸ் என்ன கலர் என்று கூட அறியாமல்!😎) செட்டிலாகி விட்டோர் தான்! அண்மையில் கூட ஒரு யாழ் பரிமாற்றத்தில் ஒரு "தேசிய வீரர்" , இந்திய இராணுவத்தோடு  சண்டையிட்ட சிறி பால் சாத்திரி "ஏன் இயக்கத்தை விட்டு வந்தவராம்?" என்று நக்கலாகக் கேட்டதைப் பார்த்து சிரிப்புத் தான் வந்தது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

ஒரு கீறல் காயமும் படாமல் வானூர்தியில் ஏறி வந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தலைவரில் தான் பிழை என்று சொல்ல மனச்சாட்சி உள்ள எவராலும் சொல்ல முடியாது.
 

இங்கே எழுதும்  அத்தனை வாய்களும் வெற்றியை   மட்டும் எதிர்பார்த்து காத்திருந்திருந்தவைகளே...
தோற்றவுடன் முந்திக்கொண்டு ஒருவரில் பழி போட்டுவிட்டு ஒப்பாரி வைக்கும்  கூட்டம் எதுக்கும்  உதவாது
நாம  தான்  இனியாவது புரிந்து  விலகி  நடந்து  கொள்ளணுமே  தவிர
இவர்களிடம் மனம்?  சாட்சி??  உண்மை??? தர்மம்??????? என்று????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இலங்கை பாராளுமன்றத்தில் சத்திய பிராமணம் எடுத்த இருவர்  இலங்கையரசினை மீறி உங்களுக்கு தீர்வு  பெற்றுத் தருவார்கள் ....வானம் பாத்துக்க கொண்டு இருங்கோ.
அவர்கள் இருவரையும் ஒரு மண்ணாங்கட்டி நாடும் அழைக்கவில்லை ...தங்கட சொந்த காசில் வந்து[அல்லது இலங்கையரசு அனுப்பிச்சசுதோ தெரியாது ...வந்து முஸ்லிம்களோடு கதைத்து விட்டு ] முக்குடைபட்டு கொண்டு போயினம் ...உண்மையாய் தமிழர்களோடு கதைத்து ,நாடி பிடித்து பார்க்க வந்திருந்தால் வெளிப்படையாய் கூட்டத்தை கூட்டி பொறுமையாய் மக்களது கேள்விகளுக்கு பதில் சொல்லி இருப்பினம்

இதில இன்னுமொரு பகிடி என்னெண்டா சீமான் இந்தியா அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சத்தியப்பிரமாணம் எடுத்தவர் அதை மீறி அவரால் எதையும் செய்யமுடியாது என்று உண்மையை முகநூலில் எழுதும் பலர் சுமந்திரனின் மிகப்பெரிய ஆதாரவாளர்கள்.. சுமந்திரனும் அதே வழியில் இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்தவர்தான்.. அட சுமந்திரனிலயாவது கொஞ்சம் உண்மை வெளிப்ப்டையா தெரியாது ஆனா இந்த சைக்கிள் கோஸ்ட்டி இருக்கு***** சனத்தையும் பப்பாவில ஏத்திவிட்டிட்டு அங்கால அரசாங்கத்தில பாளிமெண்டில எல்லா சலுகைகளையும் பெற்றுக்கொண்டு *****************..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

மற்றைய இயக்கத்து தலைவர்களுக்கு அரசியல் அறிவு அதிகம் இருந்தது ...எப்படித் தான் போராடினாலும் தமிழீழம் கிடைக்காது . அதற்கு இந்தியா விடாது என்று தெரிந்திருந்தது...வீணாய் போராடி உயிர் இழப்புகள் அழிவுகளை தமிழருக்கு மேலும் மேலும் ஏற்படுத்துவதை விட அரசுடன் இணைந்து போகலாம் என்று தீர்மானித்தார்கள் .

நான் தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியங்களை தொடராகப் படித்து வருகின்றேன். அதே மாதிரி வெற்றிச்செல்வனின் தொடரையும் படித்தேன். அரசியல் அறிவு கூடிய புளட்டில் என்ன நடந்தது என்று அறியலாம்!

மற்றைய இயக்கங்களில் நாபா ஒரு புரட்சிகாரன் என்ற பெயர் எடுத்தவர். ஆனால் இந்திய ஒட்டுக்குழுவாக மாறி மண்டையன் குழு கோரத்தாண்டவம் ஆட பார்த்துக்கொண்டிருந்தவர்!

எல்லா இயக்கங்களும்  சிங்களவர்களுடன் சமசரமாகப் போவது சில சலுகைகளுக்கு அப்பால் ஒன்றையும் தராது என்று விளங்கித்தான் இருந்தன. அவர்களால் நீண்ட போராட்டத்தை சரியாக நடாத்தக்கூடிய தலைமைத்துவம் இல்லை. தூர நோக்கும் இல்லை.

விலங்குப் பண்ணை நாவலில் இருந்து ஒரு மேற்கோள்:

“தோழர்களே, கிளர்ச்சி செய்வோம். புரட்சி எப்போது பொங்கும் என்று எனக்குத் தெரியாது. ஒரு வாரத்திலும் வரலாம், சில நூறு வருடங்களிலும் நடக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி. எப்படி என் காலடியில் இருக்கும் இந்த வைக்கோல் நிஜமோ, அப்படியே நியாயம் கிடைப்பதும் நிஜமாகும். உங்கள் பார்வையை அந்த உண்மையின்மீது வைத்திருங்கள். தோழர்களே, எல்லாவற்றுக்கும் மேலாக இந்தச் செய்தியை உங்களுக்குப் பின்னால் வரும் சந்ததிகளுக்குத் தெரிவியுங்கள். இனி வரும் தலைமுறையும் வெற்றி கிட்டும்வரை போராடட்டும்.

தோழர்களே, நினைவு இருக்கட்டும். உங்கள் உறுதி எப்போதும் எதற்காகவும் தடுமாறக்கூடாது. எந்த எதிர்வாதமும் உங்கள் உறுதியைத் திசை திருப்பக்கூடாது. மனிதனுக்கும் நமக்கும் பொதுவான குறிக்கோள் உண்டு என்றோ, அதில் ஒருவர் சுபிட்சம் அடைந்தால் மற்றவரும் சுபிட்சம் அடைவார் என்றோ யாராவது சொன்னால் நம்பிவிடாதீர்கள். அதெல்லாம் சுத்தப் பொய். மனிதன் தன்னைத்தவிர ஏனைய விலங்குகள்மீது எவ்வித அக்கறையும் இல்லாதவன். நம் விலங்கினத்திடம் மிகச் சரியான ஒற்றுமையும் தோழமையும் இருக்கவேண்டும். எல்லா மனிதர்களுமே விரோதிகள்தாம்; எல்லா விலங்கினமும் தோழர்கள்தாம்.’”

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

ஆம் இராணுவமும்,  அரசும் தம்மை பலப்படுத்த யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தியது ...ஏன் புலிகளுக்கு அது தெரியாமல் இருந்ததா ?....1}ஏன் அவர்கள் தங்களை பலப்படுத்தவில்லை ?2} பேச்சு வார்த்தைக்கு போனால் இப்படி நடக்கும் என்று தெரிந்தால் ஏன் பேச்சு  வார்த்தைக்கு  போனார்கள்?...சிங்களவர்களை மொக்கன் ,மோடன்  என்று நினைத்தார்களா?

நான் சொல்ல வந்தது இலங்கை அரசு இதயபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதே...தெரியும்   1....  உலகநாடுகள். இலங்கையை பற்றி அறிய வேண்டும்  என்பதற்குக்கா. அமைதியாக இருந்தார்கள்     2...உலக நாடுகளுக்கும் தமிழரின் ஒரு பகுதியினருக்கும்.  உறுதியாக தெரியப்படுத்துவதற்க்கா   3.. சிங்களவன். மொக்கன் .   மோடன் என்பதில். எதாயினும்.  மற்றம் எற்பட்டுள்ளதா?. இல்லையே    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

தலைவர் , கிடைக்காது என்று தெரிந்தும்  தேவையில்லாமல் தானும் மடிந்து , அத்தனை மக்களை அழித்ததும்  இல்லாமல் , முந்தி இருந்ததை விட பாரிய அழிவுக்கு தமிழரை கொண்டு வந்து விட்டு  உள்ளார் ...வடக்கில் தமிழருக்கு சொ

எப்போது தெரியும் கிடைக்காது.  என்று....போராடத் தொடங்க முன்னால  ?போராட தொடங்கிய பிற்பாட.? ஓரு சுந்த மாக வீரன் தோல்வி வரும் என்று சொல்லி போரை ஒருபோதும் இடைநடுவில்  விட்டுட்டு வரமாட்டன்  அப்படி வருவது தான்  உண்மையான தோல்வியாகும்.  தலைவர் தோற்கவில்லை   அவரைப் பெறுத்தமட்டில் அவர் வெற்றி பெற்றுயிருக்கிறார். போராட்டம் முடியும் வரை களத்தில் நிற்கும் வீரன்...முடிவு அவனுக்கு சார்பாக வரவிட்டாலும்கூட  வெற்றியாளன் தான் களத்தை விட்டு ஒடிய வீரார்களுக்குத் தான் இது தோல்வியாகும் அவரகள் அதை   இன்றுவரை அனுபவித்துக்கொண்டு   இருக்கிறார்கள்  

போராட முதல் பல இனக்கலவரங்கள்  வந்து அழிவு எற்படவில்லையா.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

உண்மை ...மக்களை ஒன்றிணைக்க தலைவரால் மட்டும் தான் முடிந்த

பல இயங்கங்கள.....பலதலைவர்கள். ....இருக்கும் போதும் ஏன் இவரின்  கீழே ஒன்றிணைந்தார்கள்.   ?

10 hours ago, ரதி said:

அதே மக்களை அழிவுக்கு இட்டு செல்லவும் தலைவரால் மட்டுமே முடிந்தது .

இப்போது தலைவரும் அவரது குடும்பமும் சௌக்கியமாக வீடுகள்....கார்கள்.....சுற்றுலா...என்று வாழ்கிறார்கள்...மக்கள் மட்அழிந்துவிட்டார்கள்.  இல்லையா  ?

5 minutes ago, Kandiah57 said:

பல இயங்கங்கள.....பலதலைவர்கள். ....இருக்கும் போதும் ஏன் இவரின்  கீழே ஒன்றிணைந்தார்கள்.   ?

இப்போது தலைவரும் அவரது குடும்பமும் சௌக்கியமாக வீடுகள்....கார்கள்.....சுற்றுலா...என்று வாழ்கிறார்கள்...மக்கள் மட்அழிந்துவிட்டார்கள்.  இல்லையா  ?

மட்டும் 

Link to comment
Share on other sites

தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களன ம. ஆ. சுமந்திரனும் இராசமாணிக்கம் சாணக்கியனும் கனடாவில் கனடியத் தமிழ்க் காங்கிரசின் ஆதரவில் நடாத்திய கூட்டத்தில் கேள்விகள் கேட்க முற்பட்ட இளம் செயற்பாட்டாளர்களில் மூவரான நிருஜன், ஜெயந்தன் மற்றும் கார்த்திக் ஆகியோருடனான தமிழ்நெற்றின் பலகணி நேர்காணல்

Link to comment
Share on other sites

On 26/11/2021 at 20:35, Justin said:

புலிகள் இயக்கத்தினுள் தலைமைக்கு விரும்பியதைச் சொல்பவர்கள் மட்டுமே தலைமையின் செவிமடுத்தலுக்கு அருகில் இருக்கலாம்! 

புலிகள் இயக்கத்தில் மட்டுமல்ல உலகில் உள்ள எந்த அமைப்புக்களிலோ அல்லது நிறுவனங்களினிலோ முகாமையாளர்களாக உள்ளவர்கள் தங்களுடன் எதிர் முரண் கருத்துள்ளவர்களை அருகில் வைத்தபடி நிர்வாகம் செய்வது முடியாதது. சனனாயக தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தில் கூட ஒத்த கருத்துள்ளவர்களை மட்டுமே முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களில் வைத்திருப்பார்கள்.

விடுதலைப் போராட்டம் தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து அதனை நோக்கி தமது உழைப்பை கொடுப்பதற்கு தயாராக இருந்தவர்களை புலிகள் இயக்கம் பல சந்தர்ப்பங்களில் தட்டிக் கொடுத்து வளர்த்திருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

அது எம்மை நாமே ஏமாற்ற சொல்லலாம் ...இந்தியா இருக்கும் வரை தமிழீழம் என்று ஒன்று கிடைக்காது ...அமெரிக்காவோ , மற்ற உலக நாடுகளோ இந்தியாவை, இலங்கையை  பகைத்து கொண்டு எங்களுக்கு தமிழீழம் எடுத்து தராது ...எடுத்து தர வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை

இந்தவிடயம். எப்போது தொடக்கம்...எப்படி உங்களுக்கு தெரியும்  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

மேலே ருல்பென் சொல்ல முனையும் எதுவும் செவிடன் காதில் ஊதிய சங்கு தான்! இறுதி வரை வன்னிக்குள் இருந்து பின்னர் புனர்வாழ்வும் முடித்து வெளியே வந்த பல மட்டங்களிலும் இருந்த போராளிகள், செயல்பாட்டாளர்கள் பலர் மௌனமாக இருக்கின்றனர். சிலர் எழுத்தாளர்களாக மாறி விட்டனர்.

இந்த எழுத்தாளர்களிலும் இரு வகையினர்: தமிழ்க்கவி வகையினர் உண்மையைச் சொல்ல வெளிக்கிட்டு இன்று "சாகாத படியால் நீங்கள் துரோகிகளே!" என தூற்றல் வாங்கி கொண்டிருக்கின்றனர்.

இரண்டாம் வகை: வெற்றிச் செல்வி, நிலாந்தன் போன்றோர் தமிழ்க்கவி போன்றோர் சொல்லும் தகவல்களை மறுதலிப்பதுமில்லை, ஆதரிப்பதுமில்லை - எனவே இவர்களை தேசிய வீரர்கள் சும்மா விட்டு வைத்திருக்கிறார்கள்!

பெரிய நகைச்சுவை இந்த முன்னாள் போராளிகளைத் தூற்றுவதில் முன்னணி வகிப்போர் எப்போதோ புலம் பெயர்ந்து (புலிகளின் பாஸ் என்ன கலர் என்று கூட அறியாமல்!😎) செட்டிலாகி விட்டோர் தான்! அண்மையில் கூட ஒரு யாழ் பரிமாற்றத்தில் ஒரு "தேசிய வீரர்" , இந்திய இராணுவத்தோடு  சண்டையிட்ட சிறி பால் சாத்திரி "ஏன் இயக்கத்தை விட்டு வந்தவராம்?" என்று நக்கலாகக் கேட்டதைப் பார்த்து சிரிப்புத் தான் வந்தது!

அப்போ நீங்கள் இலங்கையை விட்டு வெளியேறிய பின் அங்கு நடந்த சம்பவங்கள் பற்றி கதைப்பதே இல்லை?? சரியா?? 😎🤪
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

மேலே ருல்பென் சொல்ல முனையும் எதுவும் செவிடன் காதில் ஊதிய சங்கு தான்!

உண்மை கசக்கும் 😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

சீமான் இந்தியா அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சத்தியப்பிரமாணம் எடுத்தவர் அதை மீறி அவரால் எதையும் செய்யமுடியாது என்று உண்மையை முகநூலில் எழுதும் பலர் சுமந்திரனின் மிகப்பெரிய ஆதாரவாளர்கள்.. சுமந்திரனும் அதே வழியில் இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்தவர்தான்.

சுமந்திரன் தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாக பாரளும்மன்றம் சென்று இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்தவர். சீமான் தமிழக மக்களால் தேர்தல்களில்  தோல்வியை கண்டவர் எப்படி இந்தியா அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சத்தியப்பிரமாணம் எடுத்தவர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

அப்படி சொல்ல முடியாது ....எங்களுக்கு மற்ற  இயக்கங்களை பிடிக்காது  என்பதற்காக அவர்கள் செய்வது எல்லாம் பிழை என்றும் , தலைவரை பிடிக்கும் என்பதற்காக  அவர்  செய்வது எல்லாம் சரி என்று ஆகி விடாது .மற்றைய இயக்கத்து தலைவர்களுக்கு அரசியல் அறிவு அதிகம் இருந்தது ...எப்படித் தான் போராடினாலும் தமிழீழம் கிடைக்காது . அதற்கு இந்தியா விடாது என்று தெரிந்திருந்தது...வீணாய் போராடி உயிர் இழப்புகள் அழிவுகளை தமிழருக்கு மேலும் மேலும் ஏற்படுத்துவதை விட அரசுடன் இணைந்து போகலாம் என்று தீர்மானித்தார்கள் .
தலைவர் , கிடைக்காது என்று தெரிந்தும்  தேவையில்லாமல் தானும் மடிந்து , அத்தனை மக்களை அழித்ததும்  இல்லாமல் , முந்தி இருந்ததை விட பாரிய அழிவுக்கு தமிழரை கொண்டு வந்து விட்டு  உள்ளார் ...வடக்கில் தமிழருக்கு சொந்தமான இடங்கள் பறி போவதற்கு கூட அவர் தான் காரணம் .
மற்றைய இயக்கங்களுக்கு தலைவரை மாதிரி ஓர்மம் இல்லை என்பது உண்மை தான் ...ஆனால் , அதை விட உண்மை அவர்களுக்கு இப்படித் தான் நடக்கும் என்பது தெரிந்திருந்தது 
உண்மையையாய் தமிழ் மக்கள் மீது அக்கறையால்   போராட்டத்தை ஆரம்பித்த தலைவர் அதே தமிழ் மக்களுக்காய் நிறுத்தி இருக்கலாம் ...நிறுத்தி இருந்தால் இவ்வளவு அழிவுகள் ஏற்பட்டு இருக்காது .

இப்போதெல்லாம்  ஒரு சிறிய கோட்டுக்கு முன்னால் பெரிய கோட்டை கீறுவது வழமையாகி விட்டது. இது  ஈழத்தமிழர் சிலரிடம் உள்ள ஒரு தொற்று நோய்.

சிங்களம் இதுவரை காலமும் செய்த இன அழிப்புகளையும் திட்டமிட்ட இன கொலைகளையும் கிந்தியம் செய்த ஈழ படுகொலைகளையும் மறந்து  தம்மைத்தாமே அண்ணார்ந்து துப்பிய வண்ணம் உள்ளனர்.

புலிகள் காலத்தில் ஏனைய இயக்கங்கள் பொதுமக்களை பாலூட்டி சீராட்டி பாதுகாத்தது போல் இன்றைய சீன்கள் தொடராக ஓடுகின்றது.

"பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி குதித்து காட்டினானாம்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சுமந்திரன் தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாக பாரளும்மன்றம் சென்று இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்தவர்.

சுமந்திரன் தேர்தலில் வெற்றி பெற்றவரா?  எப்படி?
அப்ப ஏன் போலிஸ்சு ஆமி சகிதம் சொந்த இடத்துக்கு விஜயம்? 🤪

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

இப்போதெல்லாம்  ஒரு சிறிய கோட்டுக்கு முன்னால் பெரிய கோட்டை கீறுவது வழமையாகி விட்டது. இது  ஈழத்தமிழர் சிலரிடம் உள்ள ஒரு தொற்று நோய்.

சிங்களம் இதுவரை காலமும் செய்த இன அழிப்புகளையும் திட்டமிட்ட இன கொலைகளையும் கிந்தியம் செய்த ஈழ படுகொலைகளையும் மறந்து  தம்மைத்தாமே அண்ணார்ந்து துப்பிய வண்ணம் உள்ளனர்.

புலிகள் காலத்தில் ஏனைய இயக்கங்கள் பொதுமக்களை பாலூட்டி சீராட்டி பாதுகாத்தது போல் இன்றைய சீன்கள் தொடராக ஓடுகின்றது.

"பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி குதித்து காட்டினானாம்"

அண்ணை, மன்னிக்கவேணும். அடிக்கடி உங்களைச் சாட்டிச் சிலபேருக்கு எழுதவேண்டியதாப் போகுது. 

உந்த மாற்றியக்கத்தாக்கள் இருக்கினமெல்லோ, அவையள் போராடி இனிப்பிரியோசனம் இல்லை, அரசோடு இணைஞ்சுதான் தமிழருக்கான தீர்வை எடுக்கலாம் எண்டு அறிவுபூர்வமாச் சிந்திச்சுத்தான் சேர்ந்தவையாம் கண்டியளோ. அதிலையும் உமா (வெற்றிச்செல்வன் போட்டுக் கிழி கிழியெண்டு கிழிக்கிறார் உமாவை, ஒருக்கால் உந்த புத்திசீவிகளைப் போய்ப் பாக்கச் சொல்லுங்கோ), டக்கிளஸ்  எண்டு தொடங்கி , கருணா பிள்ளையான், வியாழேந்திரன் எண்டு பலபேர் அரசோடு இணைஞ்சு தமிழருக்குத் தீர்வை எடுக்கப் போராடினவையாம். என்ன தீர்வெண்டு தெரியுமே? சொல்லுறன் கேளுங்கோ!

அவையின்ர தீர்வுகளின்ர பட்டியலில எனக்குத் தெரிஞ்சது மட்டும்....

1. போராட்டத்தைக் காட்டிக் குடுக்கிறது. இது ஒரு கலையண்ணை. பொடியள் எங்க நிக்கிறாங்கள், எங்க போய் வாறாங்கள் எண்டதில தொடங்கி, தலையாட்டுறது, அவங்களின்ர முகாம் எங்கயிருக்கெண்டு போட்டுக் குடுக்கிறது. பொடியள் எண்ட பேரில அப்பாவிகளைப் போட்டுக்குடுத்துச் சன்மானம் எடுக்கிறது. உப்பிடிக் கனக்கை இருக்கு. அதிலையும் அம்மாணும், அறிவுஜீவிப் பிள்ளையானும் இருக்கினமெல்லோ, அவையள் வேறை லெவெல். புலிகளின்ர குடும்பிமலை முகாமை அழிக்கிறதுக்கு ராணுவத்திற்கு முன்னோடியாப் போய் தாக்குதல் நடத்தப் போட்டி போட்டவையெண்டால் பத்துக்கொள்ளுங்கோ. 

2. உந்த டக்கிளஸ் மாமா இருக்கிறார் எல்லோ, அவர்  விசேஷம். மாநிலத்தில சுயாட்சி, மத்தியில கூட்டாட்சியெண்டு பேசிப்போட்டு தீவகத்திலை காட்டாசி நடத்துறவர். சின்னப் பெண்பிள்ளையளைக் கடத்திக்கொண்டு விபச்சாரத்துக்கு ஈடுபடுத்துறதிலையிருந்து, தீவகத்திலை குடும்பம் குடும்பமாய் சனத்தைக் கொண்டு போட்டவர். அனலை தீவிலையும், மண்டை தீவிலையும் வீடுகளுக்க உள்ளெட்டு கத்தியால வெட்டிக் கொண்டவர் எண்டால் பாத்துக்கொள்ளுங்கோ.

3. இப்ப உந்த கருணா - பிள்ளையான், டக்கிளஸ் எண்ட மாற்றியக்கத் தலைவர் மாரின்ர இன்னொரு விஷயத்தையும் சொல்லவேணும். தமிழரின்ர உரிமைக்காகப் போராடின, பேசின அரசியல்வாதிகளுக்கு உவையள் செய்தவேலை தெரியுமே? வேறை என்ன மண்டைதான் ! ரவிராஜ், பராரஜசிங்கம், நடேசன், நிமலராஜன் எண்டு நியாயமான தொகையில போட்டவையள். ஏனென்டால், இந்த எல்லாருமே சனத்தின்ர அவலங்களைப் பேசினதால அரசாங்கத்துக்குப் பிரச்சினையாய் இருந்த ஆக்கள். 

4. அதிலையும் அவை இப்ப எடுக்கிற அரசியல் நிலைப்பாடு இருக்கெல்லோ, ஆகா, சொல்லி வேலையில்லை. தமிழருக்குத் தீர்வை வேண்டித்தாறம் எண்டுட்டு, அரசாங்கத்தோட சேர்ந்து தமிழரின்ர அரசியல் பிரதிநிதித்துவத்தை அழிக்கிறது, பலவீனப்படுத்துறது, தமிழருக்குப் பிரச்சினையில்லை எண்டு சட்டிபிக்கேட் குடுக்கிறதெண்டு சரியான அரசியல் வேலைதான் செய்யினம். இல்லாட்டி அம்மாண், எதுக்காக கிரானில நிக்காமல் அம்பாறை திகாமடுல்லையில நிண்டு வாக்குக் கேக்க வேணும் எண்டு கேக்கிறன்? எல்லாம் தமிழருக்குத் தீர்வைப் பெற்றுக் குடுக்கத்தான் எண்டால் பாத்துக்கொள்ளுங்கோவன் ? 

5. பக்கத்து நாட்டுக்காரர் எங்கட ஊரிலை வந்து திரியேக்க உந்த மாற்றியக்கத்தார் எண்டுறவை செய்த வேலை தெரியுமே? அதையேன் கேப்பான்? ஆனால், என்னண்ணை, உந்த த்ரீ ஸ்டாரும், ஈ பீ ஆர் எல் எப்பும், ஈ என் டி எல் எப்பும், புளொட்டும், டெலோவும், ராஸீக்கும், புளொட் மோகனும், மாணிக்கதாசனும் செய்ததெல்லாம் தமிழரின் அரசியல் நலனுக்காகத்தான் எண்டால் பாத்துக்கொள்ளுங்கோ. 

இது என்ர சின்ன மூளைக்கு தெரிஞ்ச விஷயம் மட்டும்தான். உங்களுக்கும் கொஞ்சம் தெரியும் தானே? மிச்சத்தை எடுத்து விடுங்கோ. 

ஆனால் ஒண்டண்ணை, இதெல்லாமே உவையள் தமிழருக்குத் தீர்வு வேணுமெண்டு அரசாங்கத்தோட சேந்து செய்யிற நல்ல விஷயங்கள் எண்டு நான் சொன்னால் நீங்களும் நம்பவேணும். அதுசரி, உவையள் அரசாங்கத்தோட சேரத் துவங்கி கிட்டத்தட்ட 35 வருஷமாச்சுது அண்ணை, இன்னும் தீர்வைக் கண்ணில காட்டுறாங்களில்லையண்ணை. உங்களுக்குத்தான் உந்த மாற்றியக்க அனுதாபிகளோட பேச்சுவார்த்தை இருக்கெல்லே, ஒருக்கால் கேட்டுச் சொல்லுங்கோ, குறை நெய்க்காமல் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விஷயம் சொல்லவேணும். உந்த மாற்றியக்கத்தார் தமிழரின்ர நலனில அக்கறை கொண்டுதான் போராட்டத்தைக் கைவிட்டு அரசாங்கத்தோட சேர்ந்து தீர்வுக்கு வேலை செய்யினம் எண்டு நான் சொல்லுறதுக்கும் ஒரு காரணம் இருக்கண்ணை. அப்படிப் பொதுவாச் சொன்னாத்தானே சைக்கிள் காப்பில என்ர அண்ணைமாரையும் நான் நியாயப்படுத்தலாம், என்ன நான் சொல்லுறது? 

10 hours ago, nunavilan said:

ஒரு கீறல் காயமும் படாமல் வானூர்தியில் ஏறி வந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தலைவரில் தான் பிழை என்று சொல்ல மனச்சாட்சி உள்ள எவராலும் சொல்ல முடியாது.
 

இல்லை, நுணா. இதற்கொரு காரணம் இருக்கிறது. அதாவது, போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து அழிக்கத் துணை நின்றவர்களைச் சரியானவர்கள் என்று நியாயப்படுத்த இருக்கும் ஒரே வழி, தலைவரையும் , போராட்டத்தையும் தவறென்று வாதிட்டு நிறுவுவதுதான். இதன் பின்னாலுள்ள சூட்சுமமும் இதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, kalyani said:

அப்போ நீங்கள் இலங்கையை விட்டு வெளியேறிய பின் அங்கு நடந்த சம்பவங்கள் பற்றி கதைப்பதே இல்லை?? சரியா?? 😎🤪
 

உங்களுக்கு ஒரு கருத்தின் "பின்னணி" என்பதை விளக்குவது கஷ்டம் தான்! தமிழர் யாரும் எந்தக் காலப் பகுதியையும் பற்றிக் கதைக்கலாம் - ஆனால் போராளியாக இருந்து தப்பி வந்தவனை போராடப் போகாமல் வெளியேறி வந்தவன் துரோகி எனும் போது எல்லாத் துவாரங்களாலும் சிரிக்க வேண்டியிருக்கிறது!

(விளங்கியுருக்காதே?😎 - பரவாயில்லை - நகருங்கள்!)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.