Jump to content

சீனாவின் பிரவேசத்தை தமிழர்கள் விரும்பவில்லை : அமெரிக்க சந்திப்புக்களில் எடுத்துரைத்தது தமிழ்த்தரப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் பிரவேசத்தை தமிழர்கள் விரும்பவில்லை : அமெரிக்க சந்திப்புக்களில் எடுத்துரைத்தது தமிழ்த்தரப்பு

(ஆர்.ராம்)

 

 பொறுப்புக்கூறலும் அரசியல் தீர்வும் சமாந்தரமாக நகர்த்தப்பட வேண்டும்

 தமிழர்களின் அபிலஷைகளைப் பெற வெளிச்சக்தியின் அழுத்தம் தேவை

 அனைத்து விடயத்திலும் எதிர்மறையான செல்கிறது ராஜபக்ஷ அரசாங்கம்

சீனாவின் ஆதிக்கமோ, பிரவேசமோ, தமது பகுதிகளுக்குள் நுழைந்துவிடக்கூடாது என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக என்பதை அமெரிக்காவின் இராஜாங்க, வெள்ளைமாளிகை பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது சுமந்திரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலகத்தமிழர் பேரவைத் தரப்பினரால் ஆணித்தரமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் மற்றும் நிர்மலா சந்திரகாசன் குழுவினருடன் பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியாக ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகத்தமிழர் பேரவையின் முக்கிஸ்தர்கள் உள்ளிட்ட குழுவினரும் இணைந்து அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம், வெள்ளைமாளிகை, அமெரிக்க காங்கிரஸ் ஆகிய கட்டமைப்பின் கீழ் செயற்பட்டு வரும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.

இந்தக் கலந்துரையாடல்களின்போதே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சந்திப்புக்களில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களின் மேலும் முக்கிய விடயங்கள் வருமாறு,

சீனாவின் ஆதிக்கம்

இலங்கையில் எந்த அரசாங்கம் இருந்தாலும் சீனாவின் ஆதிக்கத்தினை வலுப்படுத்துவதாகவே செயற்படவுள்ளன. ஏனென்றால் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது செய்து கொள்ளப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் பின்னர் மைத்திரி-ரணில் ஆட்சிக்காலத்தில் 99வருடங்களுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது.

அதோன்று துறைமுகநகர திட்டமும் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே பதவியில் உள்ள எந்த அரசாங்கங்களும் சீனாவுடன் இணைந்தே செல்லப்போகின்றன என்ற விடயம் அமெரிக்க பிரதிநிதிகளிடத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்போது அந்த யார்தத்தத்தினை அமெரிக்க தரப்பினர் உணர்ந்துகொண்டுள்ளமைக்கான பிரதிபலிப்பும் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் சீனாவின் பிரசன்னத்தினையோ, ஆதிக்கத்தினையோ தாம் செறிவாக வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஏற்படுத்தப்படுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. 

இதற்கு பிராந்தியத்தில் செல்வாக்குள்ள நாடாக இந்தியா இருப்பதும் அது தமிழர்களுக்காக குரல்கொடுத்து வரும் காரணமாகின்றது என்ற விடயமும் அமெரிக்க பிரதிநிதிகளிடத்தில் மிகவும் ஆணித்தனமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறலும் அரசியல் தீர்வும்

அத்துடன் தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கான நீதியையே எதிர்பார்க்கின்றார்கள். இதற்காக இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். 2012ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா இந்த விடயத்தில் எடுத்துவந்த முயற்சிகளின் காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

இருப்பினும் தற்போதைய அரசாங்கம் கடந்த அரசாங்கம் வழங்கிய உறுதி மொழிகளிலிருந்து விலகுவதாகவும்ரூபவ் ஒத்துழைப்புக்களை வழங்கமுடியாது என்றும் அறிவித்துள்ள நிலையில் 46.1தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இலங்கை குறித்த விசாரணைகள் இடம்பெற்று கலப்புபொறிமுறை மூலமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள போதும் இலங்கை அரசாங்கம் அதனை உள்ளக பொறிமுறையில் முன்னெடுக்க முனைகின்றது. இதனாலேயே சர்வதேச பொறிமுறையொன்று கோரப்படுகின்றது என்ற விடயமும் அமெரிக்கத் தரப்பிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனைவிடவும் நிலைமாற்று நீதிப்பொறிமுறையின் நான்காவது படிநிலையான மீளநிகழாமை உறுதிப்படுத்த வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்ற வகையிலான புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் தற்போதுள்ள அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக கூறினாலும் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தவில்லை. அதேபோன்றுரூபவ் அதிகாரப் பகிர்வு விடயத்தில் நேர் எதிரான நிலைப்பாட்டில் உள்ளது.மேலும் திடீரென சிங்கள, பௌத்த மேலாதிக்கவாதம் நிறைந்த அரசியலமைப்பொன்றை உருவாக்கி நிறைவேற்றிவிடும் என்ற சந்தேகமும் உள்ளது என்ற விடயமும் அமெரிக்கத் தரப்பிடத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிச்சக்திகளின் அழுத்தம் அவசியம்

தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கம் மக்களின் செல்வாக்கினை இழந்து வரும் நிலையில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இவ்விதமானதொரு சூழலில் வெளிச்சக்திகளின் அழுத்தங்களின் ஊடாக சில விடயங்களை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.

குறிப்பாக, கடந்த காலத்தில் பதவியில் இருந்த அரசாங்கங்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கும் விடயத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தன. சில நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தன. குறிப்பாக, சந்திரிகா அம்மையார் தீர்வுப்பொதியை உருவாக்கியிருந்தார். மஹிந்த ராஜபக்ஷ சர்வகட்சிக்குழுவியை நியமித்திருந்தார். மைத்திரி-ரணில் அரசு புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை தயாரித்திருந்தது. இந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார். இருப்பினும் இச்செயற்பாடுகள் அனைத்தும் முடிவுற்றவையாக இருக்கவில்லை. ஆகவே இவ்விடயங்கள் முறையாக முடிவுறுத்தப்பட வேண்டுமாக இருந்தால்ரூபவ் வெளிச்சக்தியொன்றின் அழுத்தம் அவசியம் அதனை வல்லரசாக இருக்கும் அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும் தமிழ்த் தரப்பினரால் கோரப்பட்டுள்ளது.

எதிர்மறையான பாதையில் ராஜபக்ஷ அரசாங்கம்

மேலும், தற்போதைய அரசாங்கம் எதிர்மறையான போக்கிலேயே அதிகமாகச் செல்கின்றது. குறிப்பாக, காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள், காணாமாலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள், அரசியல் கைதிகளின் விடுதலைகள், ஊடகவியலாளர்கள் விசாரணைகளுக்கு அழைக்கப்படுத்தல்ரூபவ் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது நீடித்துக்கொண்டிருக்கின்றன.

கடந்த ஆட்சிக்காலத்திற்கு முன்பு காணப்பட்ட ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்த அத்தனை ஜனநாயக விரோதமான செயற்பாடுகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இதனைவிடவும், இராணுவப்பிரசன்னம், பொருளாதார நெருக்கடிகளையும் இலங்கை சந்திக்கின்றது.

ஆகவே அனைத்து விடயங்களிலும் இலங்கை அரசாங்கம் எதிர்மறையான செயற்பாட்டினை ஆரம்பித்துள்ள நிலையில் தமிழர்களின் கோரிக்கைகளை தற்போதைய அரசாங்கம் சாதகமாக பரிசீலிக்கும் என்று கூறமுடியாது.தொடர்ந்தும் காலதாமதமாகிச் செல்கின்றமையானது மேலும் தமிழர்களை பலவீனப்படுத்தும் என்ற விடயமும் சுமந்திரன் தலைமையிலான கூட்டமைப்பு, உலகத்தமிழர் பேரவையின் உறுப்பினர்களால் எடுத்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/117543

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனான நான் நூறு விகிதம் விரும்புகிறேன். இதில் எனக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. எமக்கான உரிமை இடைக்கிறதோ இல்லையோ அல்லது இலங்கைத்தீவில் தமிழினம் முற்றிலுமாக இல்லாதொழிக்கபடுமோ இல்லையோ அதுபற்றியெல்லாம் எனக்குக்கவலையில்லை. தமிழர் விரோததேசமான இந்தியா சின்னாபின்னமாக்கபடல்வேண்டும் அதற்கு நாம் சீனாவை ஆதரிப்பதே நல்லது.

மகாபாரதப்போர் நடைபெற முதற்காரணமாக இருந்தது சகுனி,
இந்தச்சகுனியுடன் ஏழுவர் சகோதரர்கள் துரியோதனன் உட்பட்ட கெளரவர்களுக்கு மாமன் முறயான சிற்றரசர்கள் ஆனால் என்னதான் துரியோதனனும் அவன் சகோதரர்களும் பேரரசர்களது பிள்ளைகளாக இருந்தாலும் மாமன்மார் அரசசபைக்குள் நுளையும்போதோ அல்லது அவர்கள் வதியும் மாளிகைக்குள் நுளையும்போதோ எழுந்துநிண்டு வணக்கம் செலுத்தவேண்டும் சகுனிமட்டுமல்ல மிச்சமிருக்கும் ஆறு சகோதரர்களும் அடிக்கடி அக்காவைப்பார்க்க நுழைவார்கள் எல்லோருக்கும் எப்போதும் எழுந்து நின்று வணக்கம் சொல்லவேண்டும் இதை இல்லாதொழிக்க வழி கேட்டால் ஒருவன் கூறினான் அனைவரையும் ஏதாவது குற்றம் சொல்லி சிறையில போடு என சில்லறக்குற்றம் கூறமுடியாது தேச விறோதக்குற்றம் கூற்னால்தான் அக்காள்காறி ஏற்றுக்கொள்வார் என்பதால் பாரிய குற்றம் சொல்லி சிறையில் அடைத்துத் தண்டனையாக் அவாரத்தில் ஏழு நாதளில் ஒரு நாளிலொருவருக்கே உணவு கொடுக்கவேண்டும் என உத்தரவிடுகிறார்கள்.

சகுனுயும் மிச்ச அறுவரும் அன்றே சூழுரைக்கிறார்கள் நாம் இந்தப் கெளரவரை அழிக்கவேண்டும் வாரத்தில் ஒரு நாளொருவர் சாப்பிட்டால் ஒருத்தரும் உயிர்பிழைக்கமுடியாது ஆகவே ஒருத்தன் மட்டும் ஒவ்வொருநாளும் உணவை உண்டு உயிர் பிழைக்கட்டும் மிச்சமிருப்போர் இறந்து மடிவோம் உயிர்பிழைப்பவன் கெளரவர்கள் அழிக்கவேணுமென.

அந்த முடிவின்படி சகுனி உயிர் தப்புகிறான் மிச்சமிருப்பவன் ஒருத்தனே என்பதால் விடுதலை அடைந்து கெளரவரை ஒணிப்பிழைத்து ஈற்றில் அவர்கள் குருசேத்திரப்போரில் முன்னிறுத்தி அனைவரையும் இல்லாதொழித்துப் பழிதீர்கிறான்.

ஆகவே தமிழா நீ குருசேத்திரப்போரின் ஆரம்பகர்த்தாவாகிய சகுனியாக மாறு. 
தமிழர் விரோத தேசமாம் இந்தியாவை வேரறு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.