Jump to content

போலீஸ் எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ஆடு திருடும் கும்பல் காரணமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போலீஸ் எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ஆடு திருடும் கும்பல் காரணமா?

7 மணி நேரங்களுக்கு முன்னர்
பூமிநாதன்.

பட மூலாதாரம்,HANDOUT

 
படக்குறிப்பு,

பூமிநாதன்

திருச்சி அருகே, ஆடு திருடும் கும்பல் என்று சந்தேகிக்கப்படுவோரை துரத்திச் சென்றபோது சிறப்பு போலீஸ் எஸ்.ஐ. பூமிநாதன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்கிறது போலீஸ்.

திருச்சி மாவட்டம், நவல்பட்டு சோழமாநகர் பகுதியில் வசித்து வந்தவர் பூமிநாதன்.  இவருக்கு கவிதா என்ற மனைவியும், குகன் என்ற மகனும் உள்ளனர்.

பூமிநாதன் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.

பூமிநாதன் நேற்று சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் இருந்தபோது நவல்பட்டு சாலையில் நள்ளிரவு 2 மணி அளவில் மூன்று இரு சக்கர வாகனங்களில் ஆடுகளுடன் வந்த நபர்களை இவர் தடுத்து நிறுத்தியதாகவும், அவர்கள் நிற்காமல் வேகமாக சென்றதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர்கள் ஆடு திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்துகொண்ட பூமிநாதன் இருசக்கர வாகனத்தில் அவர்களை விரட்டி சென்றுள்ளார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் ரயில்வே கேட் பகுதியிலுள்ள பள்ளப்பட்டி என்ற ஊரில் தப்பிச் சென்ற ஒரு பைக்கை மடக்கிப் பிடித்துவிட்டு, காவல் நிலையத்தை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

அப்போது மற்ற இரண்டு பைக்கில் வந்தவர்களும், பிடிபட்ட நபரை விட்டுவிடும்படி பூமிநாதனை மிரட்டியதாகவும், ஆனால், பூமிநாதன் அதற்கு மறுத்ததால், அவரை தலையில் வெட்டிவிட்டு தப்பிவிட்டதாகவும், காயம்பட்ட பூமிநாதன் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.

காலை 5 மணி அளவில், இயற்கை உபாதைக்காக அங்கே வந்த பள்ளப்பட்டி பொதுமக்கள் இறந்து கிடந்த பூமிநாதனைப் பார்த்துவிட்டு போலீசுக்குத் தகவல் கொடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை போலீசாரும், திருச்சி போலீசாரும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஜி பொறுப்பு கார்த்திகேயன், டிஐஜி சரவணன் சுந்தர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.

மேலும் இரண்டு டிஎஸ்பிக்கள், இரண்டு காவல் ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 14 பேர் கொண்ட 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

முதல்வர் அறிவிப்பு

திருச்சியில் திருடர்களை விரட்டி பிடிக்க முயன்றபோது வெட்டிக் கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-59361063

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்ஐ பூமிநாதன் கொலை: இரு சிறார்கள் உள்பட மூன்று பேர் கைது - என்ன நடந்தது?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
எஸ்ஐ பூமிநாதன்

பட மூலாதாரம்,BHOOMINATHAN FB

 
படக்குறிப்பு,

வெட்டிக் கொல்லப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் பூமிநாதன்

திருச்சியில் ஆடு திருடர்கள் என கருதப்படும் சிலரால் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடையதாக 10 வயது சிறார் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறை தரப்பு கூறியது:

திருச்சி மாவட்டம் திருவரம்பூருக்கு உட்பட்ட நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் (50) நேற்று முன்தினம் இரவு ரேந்துப் பணியின்போது பூலாங்குடி காலனி என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத மூன்று பேர் ஆடுகளை இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு வந்தவர்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்த முயன்றுள்ளார்.

ஆனால், அவர்கள் நிற்காமல் சென்றதால் பூமிநாதனும் தமது இரு சக்கர வாகனத்தில் அவர்களை பின்தொடர்ந்துள்ளார். கீரனூர் பள்ளத்துப்பட்டி மணிவிஜய் நகர் ரயில்வே பாலம் அருகே மூவரும் இருந்த வாகனத்தை மறித்து விசாரித்துள்ளார். அப்போது அவர்களில் 19 வயது மணிகண்டன் என்பவர் தன்னுடன் இருந்த இரு சிறார்களுடன் சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளால் பூமிநாதனை சரமாறியாக வெட்டிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஆடு திருடிய சம்பவம் குறித்து மற்றொரு சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் அவர்கள் பிடிபட்ட இடத்துக்கு வந்தபோது பூமிநாதன் கொல்லப்பட்டதை பார்த்துள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில் கீரனூர் காவல்நிலையத்தில் பூமிநாதன் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு கொலை செய்த நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களின் தேடுதல் நடவடிக்கையில், மணிகண்டன், இரண்டு சிறார்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிடிபட்ட மூன்று நபரில் ஒருவர் 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுவர் என்பதும், மற்றொருவர் 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் என்பதும் தெரியவந்துள்ளதாகவும் மற்றொருவர் மணிகண்டன் (19) என்பதும் அவர் மீது காவல் நிலையத்தில் மற்றொரு வழக்கு இருப்பதும் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் கூறினர்.

பிடிபட்டவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதிக அளவில் மைனர் குற்றவாளிகள்

சமீபத்தில் நடைபெறும் பெரும்பான்மையான குற்றங்களில் மைனர் குற்றவாளிகளே அதிக அளவில் இடம் பெறுகின்றனர்.

எஸ்ஐ கொலை

பட மூலாதாரம்,NAVALPATTU PS

 
படக்குறிப்பு,

நவல்பட்டு காவல்நிலையம்

திருச்சி மாவட்டத்தில் குறிப்பாக சமீபத்தில் நடந்த பல்வேறு கொலை சம்பவங்களில் கைது செய்யப்பட்ட நபர்கள் பாதிக்கு பாதி மைனர் குற்றவாளிகள் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு வருங்கால சமுதாயத்தையே குற்றப் பின்னணி கொண்ட சமூகமாக மாற்றுவதற்கு என்ன காரணம், இதன் மூலம் யார் பயன் அடைகிறார்? மைனர் குற்றவாளிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான பின்னணி என்ன, அதை தடுத்து நிறுத்துவதற்கு என்ன வழி என்பதை அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

மேலும் மைனர் குற்றவாளிகளை கூலிப்படைகளாகவும், ரவுடிகளாகவும் மாற்றுவது யார் அதை கொண்டு பயனடைவது யார் என்று கண்டறிந்து அவர்கள் மீது மிக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

முதல்வர் அறிவிப்பு

திருச்சியில் திருடர்களை விரட்டி பிடிக்க முயன்றபோது வெட்டிக் கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-59371261

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சா, மது போதைக்கு அடிமையாகி ஆடு திருடிய சிறுவர்கள்... - பூமிநாதன் கொலையில் வெளியான பகீர் தகவல்கள் ..

IMG-20211123-114723.jpg

திருச்சி: எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் கஞ்சா, மது போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது. மது போதைக்காக பணம் தேவைப்படவே ஆடுகளை திருடி விற்றுள்ளனர். போலீசில் சிக்கிய உடன் தப்பிப்பதற்காக கொலை செய்துள்ளனர். மது, போதை, திருட்டு கொலை என சிறுவர்களின் குற்றச்செயல்கள் தற்போது அதிகரித்து விட்டது.

திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றிவந்தவர் பூமிநாதன். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வழக்கம் போல் நவல்பட்டு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, நான்கு பேர் கொண்ட கும்பல் இரண்டு இருசக்கர வாகனங்களில் ஆடுகளுடன் அந்தப்பக்கமாக வந்தனர்.

இதைப் பார்த்த எஸ்.ஐ பூமிநாதன் அந்த நபர்களைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார். ஆனால், அவர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் செல்லவே, அவர்கள் ஆடு திருடர்களாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட பூமிநாதன் தனது வாகனத்தில் விரட்டி சென்றார்.


ஆடு திருடர்கள்
 

போகும் வழியிலேயே தனது வாக்கி டாக்கியில் சக காவல்துறையினருக்கு தகவலைச் சொல்லிவிட்டு சென்றார் பூமிநாதன், திருச்சி - புதுக்கோட்டை, களமாவூர் ரயில்வே கேட் பகுதியிலிருக்கும் பள்ளப்பட்டி என்ற கிராமத்திற்கு அருகே இருசக்கர வாகனத்தில் இருந்த இருவரை மடக்கிப் பிடித்தார். இருவருமே சிறுவர்களாக இருக்கவே, இந்தத் தகவலை உடனே நவல்பட்டு காவல்துறையினருக்கும் தெரிவித்திருக்கிறார்.


பூமிநாதனை மிரட்டிய திருடர்கள்
 

அப்போது பின்தொடர்ந்து வந்த ஆடு திருடர்கள், இருவரையும் விட்டுவிடுமாறு எஸ்.ஐ பூமிநாதனை மிரட்டினர். அதற்கு பூமிநாதன் முடியாது என்று சொல்லிவிட்டு பிடிபட்ட இளைஞரின் பாட்டிக்கு செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தார் பூமிநாதன். தங்களின் திருட்டுச் செயல் வீட்டிற்கு தெரிந்து விடுமோ என பயந்த இளைஞர் தனது பைக்கில் இருந்த அரிவாளை எடுத்து சிறப்பு எஸ்.ஐ.யின் தலையில் சராமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த எஸ்எஸ்.ஐ பூமிநாதன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
IMG-20211123-114851.jpg
சிறுவர்கள் கைது

எஸ்.ஐயின் பின்தலையில் மண்டை ஓடு உடையும் அளவிலான கூர்மையாகவும், தடிமனான ஆயுதத்தால் தாக்கியதால் அவரின் மண்டை ஓடு உடைந்திருக்கிறது என்று மருத்துவர்கள் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள். பூமிநாதன் கொலை வழக்கில் தஞ்சை மாவட்டம் கல்லணை தோகூரைச் சேர்ந்த 19 வயது இளைஞர் மணிகண்டன் மற்றும் 4ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன், 9ம் வகுப்பு மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

கஞ்சா, மதுபோதை
போதைக்கு அடிமையான சிறுவர்கள்

இதனிடையே எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் கைதான மூவரும் கஞ்சா, மதுவிற்கு அடிமையானவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. போதைக்கு அடிமையானதால் ஆடுகளை திருடி விற்று அதில் வரும் பணத்தில் போதைப் பொருட்களை வாங்கி பயன்படுத்தியுள்ளனர். இதில் 4ம் வகுப்பு மாணவனின் சகோதரியைதான் மணிகண்டன் திருமணம் செய்திருக்கிறார். அவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறப்பு எஸ்எஸ்.ஐ.யை கொன்ற இந்த மூவர் மீதும் 302 பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கண்காணிப்பு தேவை

செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சரக டிஐஜி, கொலையில் ஈடுபட்ட சிறுவர்கள் சிசிடிவி காட்சிகள் உதவியால் கைது செய்யப்பட்டதாகவும் காவல் அதிகாரியை பின்புறமாக இருந்து மூவரும் தாக்கியதாகவும் தெரிவித்தார். சிறுவர்களை பெற்றோர்கள் கண்காணிப்புடன் வளர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மது, போதை, திருட்டு கொலை என சிறுவர்களின் குற்றச்செயல்கள் தற்போது அதிகரித்து விட்டது.
தற்காப்புக்காக சுடலாம்

துப்பாக்கியுடன் செல்லுங்கள்

இதனிடையே நவல்பட்டுவில் மறைந்த பூமிநாதன் படத்திற்கு டிஜிபி சைலேந்திரபாபு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திரபாபு, ரோந்து பணிக்கு செல்லும்போது துப்பாக்கியுடன் செல்ல காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார் . தேவைப்பட்டால் தற்காப்புக்காக ஆயுதத்தை பயன்படுத்தலாம் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சைலேந்திர பாபு கூறியுள்ளார்.

https://tamil.oneindia.com/news/trichirappalli/boominathan-murder-case-boys-addicted-to-cannabis-and-alcohol-and-stealing-goats-439996.html

டிஸ்கி

தூள் , சாராயகடை - திராவிட ஆட்சிகளின் மகிமைகள்.👌

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.