Jump to content

கனடா.. குழப்பம், தொடர்பில்... விளக்கம் கோரியுள்ள மாவை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடா குழப்பம் தொடர்பில் விளக்கம் கோரியுள்ள மாவை!

கனடா... குழப்பம், தொடர்பில்... விளக்கம் கோரியுள்ள மாவை!

கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு கட்சியின் கனடா கிளையின் கருத்தை கோரியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில்  நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பப்பட்ட போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர்  கடந்த வாரம் கனடாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது அங்கு வருகைதந்த சிலரால் குழப்பம் ஏற்படுத்தப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

குறித்த சம்பவம் யாரால், ஏன்  ஏற்படுத்தப்பட்டது என்பது தொடர்பில் கட்சியின் கனடா கிளையின் கருத்தை கோரியுள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1251684

Link to comment
Share on other sites

  • தமிழ் சிறி changed the title to கனடா.. குழப்பம், தொடர்பில்... விளக்கம் கோரியுள்ள மாவை!
  • கருத்துக்கள உறவுகள்

மாவைக்கு.... கொதி வந்திட்டுது போலை கிடக்குது....

எத்தனை தல உருளப்போகுதோ, தெரியவில்லையே! 🥴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

மாவைக்கு.... கொதி வந்திட்டுது போலை கிடக்குது....

எத்தனை தல உருளப்போகுதோ, தெரியவில்லையே! 🥴

இங்கிலீசில் சுமத்திரன் பதில் சொல்ல மாவை ஐய்யா  பனைவடழிக்குள் ஓடிப்போய் தலையை ஒட்டிக்கொண்டு நிற்பார் கதை அவ்வளவுதான் .

எல்லாம் பகிடிக்கு யாரும் சிரியஸாகவேண்டாம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னச் சம்பந்தர்.. சுமந்திரன்.. மாவையாரை கணக்கிலும் எடுக்கிறதில்லை. இதில.. இவர் விளக்கம் கேட்டுக்கிட்டு இருக்காராம்...

நடந்த சுத்துமாத்தே.. இவருக்கு தெரியுமோ தெரியாது. கூட உள்ள ஆக்களுக்கே தெரியாதாம். எல்லாம் ஸ்பொன்சரில தான் போயிருக்கினம். ஒன்றும் அதிகார பூர்வ அழைப்பும் இல்லை. இந்தக் கேவலத்தில் இதுக்கொரு விளக்கம் வேற.. தேவைப்படுகுது.

வந்து உழுத வயலில்.. வெள்ளம் வடிய விடக் கணக்கா இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியோட ஆலோசிக்காமல், அவர்களின் அபிப்பிராயத்தை கேட்க்காமல், சம்பந்தரோட மந்திராலோசனை, மகிந்தவின் ஆசீர்வாதத்தோட கிளம்பிப்போனவை கேட்டதற்கு ஒழுங்காய் பதில் சொல்லியிருந்தால் பிரச்சனையில்லை. இல்லை, அழைத்தவர்கள் வீட்டில் விருந்துண்டு கிளம்பியிருந்தால் இவ்வளவு தூரம் விளக்கம் கேட்க வேண்டி வந்திருக்குமோ? இப்ப யாரிட்டை? அந்த தங்கவேலிடம் கேட்கப்போறாராமே? இனிமேல் வெளிநாட்டில ஒன்று, உள்நாட்டிலே இன்னொன்று பேசும் சுமந்திரன் வெளிநாட்டுக்கு வெளிக்கிடுவதற்க்கு முதல் கொஞ்சம் யோசிப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவையின்ரை ஆவேசத்தைப் பார்த்தால் ..ஆள் இப்ப வந்து இறங்குவார் போலகிடக்கு..வந்தவுடனை சேட்டைபிடிச்சு இழுத்து செவிட்டைப் பொத்தி நாலு சாத்து சாத்துவார் போல கிடக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றுக்கொண்ட அறிக்கை/கருத்து அடிப்படையில் செயற்குழு கூடி விவாதிக்கும் , பிறகு பொருட்குழு விவாதிக்கும் , பிறகு உயர்மட்ட செயலனி விவாதிக்கும் பிறகு அடுத்த முறை கனடா போகலாமா/வேண்டாமா என்பதை தலைமை முடிவு செய்யும்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏம்பா மாவை! உங்களைக் கேட்காமலே வெளிக்கிட்டவைக்கு கனடாவில் நடந்தது உள்ளுக்கை உங்களுக்கு சந்தோசமாகத்தான் இருக்கும்.வெளியிலை  பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு சமாளிப்பான பதில். நீங்கள் கேட்ட கேள்விக்கு கனடா கிளை என்ன பதில் சொல்லும்/ அது உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் சுமத்திரன் வருகையை கண்டும் காணாமல் விட்டிருக்கும்.அதுதான் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.