Jump to content

உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி உரம் நாட்டுக்கு..!

உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி

இரசாயன உரம், பீடைக்கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று (புதன்கிழமை) முதல் இதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வெளியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரசாயன உரம், பீடைக்கொல்லி மற்றும் திரவ உரம் என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1251958

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதை முழுமையாக நீக்கிய உலகின் முதல் நாடாக இலங்கையை மாற்றும் சவாலை தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்”

சொன்னது என்னாச்சு????

இந்த மாதன முத்தாவினால் விவசாயிகள் நட்டமடைந்தது தான் மிச்சம்.

@ரதி இப்பவும் நாட்டை நல்லபடியாக ஆளுகிறார் என்ற வெள்ளையடிப்பா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, MEERA said:

“இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதை முழுமையாக நீக்கிய உலகின் முதல் நாடாக இலங்கையை மாற்றும் சவாலை தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்”

சொன்னது என்னாச்சு????

இந்த மாதன முத்தாவினால் விவசாயிகள் நட்டமடைந்தது தான் மிச்சம்.

@ரதி இப்பவும் நாட்டை நல்லபடியாக ஆளுகிறார் என்ற வெள்ளையடிப்பா?

இப்படியான விடயங்களில் ஜனாதிபதி தனியே முடிவு  மாட்டார்...துறை சார் நிபுணர்களின் முடிவின் படி தான் இரசாயன உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டது ...பொருளாதார நிபுணர்கள் நீண்ட கால நோக்கில் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதை எடுத்து சொன்னதால் தடை நீக்கப்பட்டது .
நீங்கள் சொல்லுங்கள் இரசாயன உரம் பாவிப்பது நல்லதா அல்லது கூடாதா?

Link to comment
Share on other sites

25 minutes ago, ரதி said:

இப்படியான விடயங்களில் ஜனாதிபதி தனியே முடிவு  மாட்டார்...துறை சார் நிபுணர்களின் முடிவின் படி தான் இரசாயன உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டது ...பொருளாதார நிபுணர்கள் நீண்ட கால நோக்கில் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதை எடுத்து சொன்னதால் தடை நீக்கப்பட்டது .
நீங்கள் சொல்லுங்கள் இரசாயன உரம் பாவிப்பது நல்லதா அல்லது கூடாதா?

கோத்தா எந்த விடயத்திலும் துறைசார் நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பதே இல்லை என்பது அவர் மீது ஏனைய எம் பிக்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளால் வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு. இது கொவிட் இரண்டாம் அலை தொடங்கியதில் இருந்து இரசாயன உரத்தை பயன்படுத்துவதை ஒரே அடியாக நிறுத்த சொன்னது வரைக்கும் தொடர்கின்றது. தன்னிச்சையாக, அனேகமான நேரங்களில் அவது பிரதர் பிரதமர் மகிந்தவுடன் கூட கலந்தாலோசிப்பது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இப்படியான விடயங்களில் ஜனாதிபதி தனியே முடிவு  மாட்டார்...துறை சார் நிபுணர்களின் முடிவின் படி தான் இரசாயன உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டது ...பொருளாதார நிபுணர்கள் நீண்ட கால நோக்கில் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதை எடுத்து சொன்னதால் தடை நீக்கப்பட்டது .
நீங்கள் சொல்லுங்கள் இரசாயன உரம் பாவிப்பது நல்லதா அல்லது கூடாதா?

அப்போ நாட்டை ஆள்வது துறைசார் நிபுணர்களா…? துறைசார் நிபுணர்களின் முடிவை ஏன் தனது சொந்த முடிவு போல் மக்களிடம் தெரிவித்தார் “நான் “ என்ற ஆணவத்துடன். 

துறை சார் நிபுணர்கள்,  பொருளாதார நிபுணர்கள் என்று மற்றவர்களை கைகாட்ட முடியாது. பொருளாதார நிபுணர்களின் முடிவை ஏன் தடை செய்ய முன்னர் கோரவில்லை.

இரசாயண உரம் பாவிப்பது நல்லம் கூடாது என்னபதல்ல இங்கு விடயம். இவ்வளவு நாளும் இருந்த தடையினால் பாதிப்பு விவசாயிகளுக்கே உங்களுக்கும் இல்லை கோத்தாவிற்கும் இல்லை.

Link to comment
Share on other sites

முதலில் துறைசார் நிபுணர்களின் முடிவால் உரம், பீடை கொல்லிகளுக்கு தடை விதிக்கப்பட்டதென்றால் இப்போ அதே துறைசார் நிபுணர்களால் தடை எடுக்கப்பட்டதா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nunavilan said:

முதலில் துறைசார் நிபுணர்களின் முடிவால் உரம், பீடை கொல்லிகளுக்கு தடை விதிக்கப்பட்டதென்றால் இப்போ அதே துறைசார் நிபுணர்களால் தடை எடுக்கப்பட்டதா?  

இல்லை நுணா, இப்போ பொருளாதார நிபுணர்கள்….

இது @ரதி அக்காக்கு மட்டும் தெரிந்த ரகசியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி தன்னிறைவு அடைவது என்பது ஸ்ரீமாவோ காலத்திலேயே தோல்வி அடைந்த ஒன்றுதான், இயற்கை விவசாய முயற்சி வடிவில் இது இரண்டாவது தடவை.

பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடையாத நாடுகள் இப்படியெல்லாம் முயற்சித்து பார்த்தால் மக்களின் வெறுப்பையும், ஆட்சிக்கு ஆபத்தையும்தான் உருவாக்கும் என்பதை மறுபடியும் உணர்ந்து கொண்டதால் கப்புனு சட்ட திட்டத்தை தளர்த்திவிட்டார்கள்,

அரசுக்கெதிரான போராட்ட சக்திகள் வலுப்பெறுவதை பார்த்து ஆடிபோனார்கள்.

இல்லாவிட்டால் கோத்தபாயவாவது யாருக்காச்சும் அடங்கி போறதாவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:

கோத்தா எந்த விடயத்திலும் துறைசார் நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பதே இல்லை என்பது அவர் மீது ஏனைய எம் பிக்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளால் வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு. இது கொவிட் இரண்டாம் அலை தொடங்கியதில் இருந்து இரசாயன உரத்தை பயன்படுத்துவதை ஒரே அடியாக நிறுத்த சொன்னது வரைக்கும் தொடர்கின்றது. தன்னிச்சையாக, அனேகமான நேரங்களில் அவது பிரதர் பிரதமர் மகிந்தவுடன் கூட கலந்தாலோசிப்பது இல்லை.

யாரோ உங்களுக்கு பொய்யான தகவல் கொடுத்து இருக்கினம் ...அவர் தனது அண்ணரிடம் கேக்காமல் காலையில் தேனீரே குடிப்பதில்லை 🤣

19 hours ago, MEERA said:

அப்போ நாட்டை ஆள்வது துறைசார் நிபுணர்களா…? துறைசார் நிபுணர்களின் முடிவை ஏன் தனது சொந்த முடிவு போல் மக்களிடம் தெரிவித்தார் “நான் “ என்ற ஆணவத்துடன். 

துறை சார் நிபுணர்கள்,  பொருளாதார நிபுணர்கள் என்று மற்றவர்களை கைகாட்ட முடியாது. பொருளாதார நிபுணர்களின் முடிவை ஏன் தடை செய்ய முன்னர் கோரவில்லை.

இரசாயண உரம் பாவிப்பது நல்லம் கூடாது என்னபதல்ல இங்கு விடயம். இவ்வளவு நாளும் இருந்த தடையினால் பாதிப்பு விவசாயிகளுக்கே உங்களுக்கும் இல்லை கோத்தாவிற்கும் இல்லை.

அவர் ஜனாதிபதி இப்படியான முடிவுகளை அவர் தான் அறிவிக்க வேண்டும் ...ஒவ்வொரு விடயத்தையும் அந்தந்த துறை சார் நிபுணர்கள் தான் அறிவிக்க வேண்டும் என்றால் பிறகு ஏன் நாட்டுக்கு ஜனாதிபதிtw_lol: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

இப்படியான விடயங்களில் ஜனாதிபதி தனியே முடிவு  மாட்டார்...துறை சார் நிபுணர்களின் முடிவின் படி தான் இரசாயன உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டது ...பொருளாதார நிபுணர்கள் நீண்ட கால நோக்கில் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதை எடுத்து சொன்னதால் தடை நீக்கப்பட்டது .
நீங்கள் சொல்லுங்கள் இரசாயன உரம் பாவிப்பது நல்லதா அல்லது கூடாதா?

உரம் கூடாதுதான் ஆனால் அப்புவுக்கு ஆட்சி மாறும் என்ற பயம் ஒரு பக்கம் மற்றது விவசாயிகளின் கடும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உள்ளக ஆட்களை கூப்பிட்டு அவசரக்கூட்டம் வைத்து கருத்து கேட்ட பின்னரே அனுமதி அளிக்கப்பட்டதாக பட்சி சொல்லுது.

சேதன பசளை தற்போதுள்ள நோய்த்தாக்கத்துக்கு  ஈடுகொடுக்காது அதே போல பல ஆயிரம் ,லட்சங்களை போட்டு விவசாயம் செய்பவர் லாபத்தை அடையமாட்டார்கள் நட்டம்தான் வரும்.

பதுக்கிய பசளை ஒரு அந்தர் யூரியா14000ரூபா 

சாதாரண நேரத்தில் 1700 ரூபா ஒரு அந்தர் இங்க சம்பாதிப்பது யாரு??

3 hours ago, valavan said:

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி தன்னிறைவு அடைவது என்பது ஸ்ரீமாவோ காலத்திலேயே தோல்வி அடைந்த ஒன்றுதான், இயற்கை விவசாய முயற்சி வடிவில் இது இரண்டாவது தடவை.

பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடையாத நாடுகள் இப்படியெல்லாம் முயற்சித்து பார்த்தால் மக்களின் வெறுப்பையும், ஆட்சிக்கு ஆபத்தையும்தான் உருவாக்கும் என்பதை மறுபடியும் உணர்ந்து கொண்டதால் கப்புனு சட்ட திட்டத்தை தளர்த்திவிட்டார்கள்,

அரசுக்கெதிரான போராட்ட சக்திகள் வலுப்பெறுவதை பார்த்து ஆடிபோனார்கள்.

இல்லாவிட்டால் கோத்தபாயவாவது யாருக்காச்சும் அடங்கி போறதாவது.

இதுதான் உண்மையானதும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

அவர் ஜனாதிபதி இப்படியான முடிவுகளை அவர் தான் அறிவிக்க வேண்டும் ...ஒவ்வொரு விடயத்தையும் அந்தந்த துறை சார் நிபுணர்கள் தான் அறிவிக்க வேண்டும் என்றால் பிறகு ஏன் நாட்டுக்கு ஜனாதிபதிtw_lol: 

சின்னப்பிள்ளைத்தனமான கருத்து. 

தடையை அறிவித்தவர் தடையை எடுக்கும் போது ஏன் விவசாயதுறை அமைச்சரை நாடினார்? இதிலிருந்தே தெரிகிறது கோத்தா மூக்குடைபட்டது….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Daily_News_5842663049698.jpg

"நாம் இருவர் - நமக்கு இருவர் " என்டு இருந்தால் இயற்கை உரமன்ன .. பச்சையாகவே காய்கறிகளை உண்டு வாழலாம்

☺️..😊

Link to comment
Share on other sites

14 hours ago, valavan said:

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி தன்னிறைவு அடைவது என்பது ஸ்ரீமாவோ காலத்திலேயே தோல்வி அடைந்த ஒன்றுதான், இயற்கை விவசாய முயற்சி வடிவில் இது இரண்டாவது தடவை.

பிரபாகரனின் நிழல் அரசானது தமிழ் ஈழத்தை ஆட்சிசெய்த காலத்தில் அங்குள்ள மக்கள், உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி மேற்கொண்ட, இயற்கை விவசாய முயற்சி தோல்வியடையவில்லை.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.