Jump to content

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து: 27பேர் உயிரிழப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து: 27பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து: 27பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்ததில் குறைந்தது 27பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரு நாடுகளையும் பிரிக்கும் குறுகிய கடற்பரப்பில், புலம்பெயர்ந்தவர்கள் தொடர்புப்பட்ட சமீபத்திய ஆண்டுகளில் பதிவான மிக மோசமான விபத்து இதுவாகும்.

நேற்று (புதன்கிழமை) குளிரான நீரில் மூழ்கிய புலம்பெயர்ந்தவர்களின் சடலங்கள், பிரான்ஸின் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டன.

உயிரிழந்தவர்களில் ஐந்து பெண்கள் மற்றும் ஒரு சிறுமி அடங்குவதாக பிரான்ஸின் உட்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் அறிக்கை தெரிவிக்கின்றது. இரண்டு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டனர்.

புலம்பெயர்ந்தவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என ஜெரால்ட் டார்மான் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, பிரான்ஸ் அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 31ஆக கணக்கிட்டனர். ஆனால் பின்னர் அந்த எண்ணிக்கையை மறுபரிசீலனை செய்யப்பட்டது.

‘இந்த மரணத்தால் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்துள்ளதாக’ பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் கூறியுள்ளார். மேலும், கடக்க முயற்சிப்பதில் இருந்து மக்களைத் தடுக்க பிரான்ஸுக்கு மேலும் அழைப்பு விடுத்தார். கடத்தல் கும்பல்கள் ‘கொலையிலிருந்து தப்பித்துக் கொண்டிருக்கின்றன’ என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பிரித்தானியா உள்நாட்டு ஆதாயத்திற்காக இந்த பிரச்சினையை அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

ஆங்கில கால்வாய், உலகின் பரபரப்பான கப்பல் பாதைகளில் ஒன்றாகும் மற்றும் நீரோட்டங்கள் வலுவாக உள்ளன.

மனித கடத்தல்காரர்கள், மிகவும் உடையக்கூடிய, ஊதப்பட்ட படகுகள் மூலம் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்கின்றனர். இந்த படகுகள், அலைகளின் தயவில் பிரித்தானிய கரையை அடைய முயற்சிக்கின்றன. இது மிகவும் ஆபத்தான கடற்பயணமாகும்.

https://athavannews.com/2021/1252138

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இப்படி, பெரும்பாலும் இஸ்லாமிய கூட்டம், அலையலையாக தினமும்கிளம்பி போவது, பிரான்ஸ் போலீசாருக்கு தெரியாது என்று சொல்லவதில் அர்த்தம் இல்லை.

இது, பிரான்ஸ் அரசின் அனுசரனையுடன் நடக்கும், சுத்திகரிப்பு வேலை.

Link to comment
Share on other sites

நான் 2000 தொடக்கத்தில்  பிரித்தானியா வந்த போது ஓப்பீட்டளவில் மத்திய கிழக்கு அகதிகள் குறைவு அமேரிக்கா பிரித்தானியா கூட்டு தான் அகதிகளை உருவாக்கிறது உப்பு திண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில கால்வாய் ஊடாக நுழைபவர்களை தடுப்பதற்கான பிரித்தானியாவின் யோசனையை நிராகரித்தது பிரான்ஸ்!

ஆங்கில கால்வாய் ஊடாக நுழைபவர்களை தடுப்பதற்கான பிரித்தானியாவின் யோசனையை நிராகரித்தது பிரான்ஸ்!

பிரான்ஸிலிருந்து தங்கள் நாட்டுக்கு அகதிகள் ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்வதைத் தடுப்பதற்காக பிரித்தானியா முன்வைத்த யோசனைகளை பிரான்ஸ் நிராகரித்தது.

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27பேர் உயிரிழந்ததையடுத்து இதுபோன்ற விபத்து நிகழாமல் இருக்க, தாம் எடுக்க விரும்பும் ஐந்து படிகளை கோடிட்டுக் காட்டி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் கடிதமொன்றை அனுப்பி வைத்தார்.

இதில், இதில், பிரான்ஸ் கடற்கரையிலிருந்து அதிகமான படகுகள் வெளியேறுவதைத் தடுக்க கூட்டு ரோந்து, சென்சார்கள் மற்றும் ரேடார் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், பரஸ்பர கடல் ரோந்துகள் ஒருவருக்கொருவர் பிராந்திய நீரில் மற்றும் வான்வழி கண்காணிப்பு, பிரான்ஸ் உடனான இருதரப்பு வருவாய் ஒப்பந்தத்தில் உடனடி வேலை, உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆனால், பிரித்தானியா வரும் அனைத்து அகதிகளையும் பிரான்ஸ் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்; அகதிகள் வருவதைத் தடுப்பதற்காக பிரான்ஸ் கடற்கரைப் பகுதிகளில் பிரித்தானியா படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று பொரிஸ் ஜோன்ஸன் வலியுறுத்தியிருந்தார்.

எனினும், அந்தத் திட்டங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று பிரான்ஸ் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் தெரிவித்தார்.

எனவே, இந்தப் பிரச்சினை குறித்து ஐரோப்பிய ஓன்றியம் நடத்தும் கூட்டத்துக்கு பிரித்தானிய உட்துறை அமைச்சர் பிரீத்தி படேலுக்கு அழைப்பு விடுக்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 25,700 பேர் இத்தகைய ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 3 மடங்கு அதிகமாகும்.

https://athavannews.com/2021/1252639

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/11/2021 at 23:44, தமிழ் சிறி said:

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து: 27பேர் உயிரிழப்பு!

ஐபிசி காணொளியில் இறந்த அனைவரும் தமிழர்கள் என்று சொன்னார்கள்.

உண்மையில் இறந்தவர்கள் அனைவரும் தமிழர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஐபிசி காணொளியில் இறந்த அனைவரும் தமிழர்கள் என்று சொன்னார்கள்.

உண்மையில் இறந்தவர்கள் அனைவரும் தமிழர்களா?

அப்படி தகவல் இல்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2021 at 11:33, London Ranjan said:

நான் 2000 தொடக்கத்தில்  பிரித்தானியா வந்த போது ஓப்பீட்டளவில் மத்திய கிழக்கு அகதிகள் குறைவு அமேரிக்கா பிரித்தானியா கூட்டு தான் அகதிகளை உருவாக்கிறது உப்பு திண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டும்

2 hours ago, Nathamuni said:

 

பிரான்ஸ் இப்ப அந்தமாதிரி வைச்சு செய்யுது....🤭

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பிரான்ஸ் இப்ப அந்தமாதிரி வைச்சு செய்யுது....🤭

 

பிரான்ஸ் நீண்ட காலத்துக்கு இதை செய்ய முடியாது.

ஒரு பேச்சுவார்த்தைக்கு செல்லும்முன்னர், முடிந்த வரை... பிரிட்டனுக்கு ஆட்களை அனுப்ப முனைகின்றனர்.

இருந்தாலும், எரிவதை பிடுங்கினால், கொதிப்பது நிக்கும் என்பது போல, ஒரு 100 பேரை திருப்பி அனுப்பினால், எல்லாம் நிற்கும்.

அது தவிர, லிவர்பூல் குண்டுபிடிப்பு, ஒரு எம்பி கொலை நிகழ்வுகளின் பின்னர், வருபவர்களை உள்ளே அடைத்து வைக்கிறார்கள். அவர்களை பேட்டி எடுத்த போது, இங்கே அடைந்து கிடைப்போம் என்றால், அங்கேயே இருந்திருக்கலாமே... அனுப்பி விடுங்கள் போகிறோம் என்று சொல்வதும்.... டிவியில் வந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.