Jump to content

மிகமோசமடைந்துள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் - பிரிட்டன் தெரிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மிகமோசமடைந்துள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் - பிரிட்டன் தெரிவிப்பு

(நா.தனுஜா)

 

இவ்வாண்டின் முதல் ஆறுமாதகாலப்பகுதியில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகமோசமடைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நினைவுகூரல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு மட்டுப்பாடுகள் விதிக்கப்படல் உள்ளடங்கலாக சிறுபான்மையினரை ஓரங்கட்டும் வகையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளது.

http://cdn.virakesari.lk/uploads/medium/file/34081/Britain.jpg

இவ்வாண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் ஜுன்மாதம் வரையான முதல் அரையாண்டில் மனித உரிமைகள் நிலைவரம் மிகுந்த கரிசனைக்குரிய மட்டத்திலிருக்கும் நாடுகளை உள்ளடக்கியதாக பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தினால் நேற்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:

இவ்வாண்டின் முதல் ஆறுமாதகாலப்பகுதியில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்துள்ளது. இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில், மனித உரிமைகள் நிலைவரம் மிகமோசமடைந்து செல்வதைத் தெளிவாகப் புலப்படுத்தும் அதேவேளை எதிர்கால மீறல்கள் குறித்த அச்சுறுத்தலை வெளிப்படுத்தும் வகையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆழமான கரிசனை வெளிப்படுத்தப்பட்டிருந்தது. 

அதனையடுத்து இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் விசனத்தை வெளிப்படுத்தியும் கடந்த காலங்களில் இடம்பெற்ற அனைத்துவிதமான மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 46ஃ1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பாதுகாப்புத்தரப்பினரால் தொடர் கண்காணிப்பிற்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதுடன் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி தன்னிச்சையான கைதுகளும் இடம்பெற்றன. அதுமாத்திரமன்றி கைதுசெய்யப்பட்ட நபர்களை நீதிமன்ற மேற்பார்வையின்றி புனர்வாழ்வளித்தல் நிலையங்களுக்கு அனுப்புவதற்கான அதிகாரத்தை வழங்கக்கூடியவாறான புதிய வழிகாட்டல்களும் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டன.

மேலும் மரணதண்டனைக் கைதியொருவர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்டதுடன் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற சுயாதீன கட்டமைப்புக்களுக்குப் பொறுப்பாக 'சர்ச்சைக்குரிய' நபர்கள் நியமிக்கப்பட்டனர். அத்தோடு மிகமுக்கிய சில மனித உரிமைகள் வழக்குகள் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டன. பொலிஸ்காவலின் கீழ் சில மரணங்கள் பதிவானதுடன், அவற்றை 'சட்டத்திற்கு முரணான படுகொலைகள்' என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி தமிழ் மற்றும் முஸ்லிம் நலனோம்பு அமைப்புக்கள் உள்ளடங்கலாக சில அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டமை மற்றும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நினைவுகூரல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை உள்ளடங்கலாக சிறுபான்மையினரை ஒதுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்ந்தன என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 

https://www.virakesari.lk/article/117816

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பொலிசாருடனான ட்ரெயினிங் தொடர்புகளை துண்டிப்பதாக ஸ்காட்லாந்து போலீசார் அறிவிப்பு. 

https://www.dailymirror.lk/breaking_news/Scotland-Police-will-not-renew-training-contract-with-SL-Police/108-225520

Link to comment
Share on other sites

4 hours ago, கிருபன் said:

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நினைவுகூரல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு மட்டுப்பாடுகள் விதிக்கப்படல் உள்ளடங்கலாக சிறுபான்மையினரை ஓரங்கட்டும் வகையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழரை ஓரங்கட்டும் வகையிலான

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அண்ணர் என்னைப் போன்று ஏகபத்தினி விரதன் என்பதால், கட்டாயம் கால்களைத் தான் நீண்ட நேரம் களைத்து போகாமல் இருக்க தயார் செய்து இருப்பார்.
    • ஓம்... கரணவாய் மூத்த பிள்ளையார் கருணையால எல்லோரும் நலம். வாற வருசம் ஒரு பிளான் இருக்கு.பாப்பம் 😊
    • சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது.
    • இதே பொலுசன் பிரச்சனை தமிழ்  நாட்டில் அரியலூர், ஆலங்குளம் போன்ற பழைய சிமிண்ட் ஆலைகளிலும் உண்டு. ஊருக்குள் போனால் சாலை, மரங்கள், வீட்டு கூரைகளில் மணல் போன்ற தூசுகள் படிந்திருக்கும். இம்மாதிரி ஆலையின் மாசுகளால் அருகே வசிக்கும் பலருக்கும் உடலில் சுகாதாரக் கேடுகள் விளைகிறது என அறிந்துள்ளேன். என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்கள் (Classmates) இந்த ஆலைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டனர். தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி.🙏
    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.