Jump to content

தாலிபன் ஆட்சியில் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிய பிபிசி தொகுப்பாளரின் அனுபவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாலிபன் ஆட்சியில் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிய பிபிசி தொகுப்பாளரின் அனுபவம்

8 மணி நேரங்களுக்கு முன்னர்
யால்டா ஹக்கீம்

பிபிசி தொகுப்பாளர் யால்டா ஹக்கீம் ஆப்கானிஸ்தானில் பிறந்தவர். சோவியத் ஆக்கிரமிப்பின் போது 1980 களில் அவரது குடும்பம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது. ஆனால் அவர் ஆப்கானிஸ்தானில் இருந்து தொடர்ந்து செய்தி சேகரித்து அளித்து வந்தார். 100 நாட்களுக்கு முன்பு தாலிபான்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகு இப்போது அவர் முதல் முறையாக ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, நான் பிறந்த நாட்டுக்கு முதன்முறையாகத் திரும்புவது எனக்குள் பல கேள்விகளை எழுப்பும் என்பதை நான் அறிவேன்.

மேற்கத்திய நாடுகளின் ஆதரவு கொண்டிருந்த அரசை அகற்றிவிட்டு தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு நாடு எவ்வளவு மாறிப்போயிருக்கிறது? ஆப்கானிஸ்தான் மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருக்கும் அமைதி கிடைக்குமா? புதிய ஆட்சியாளர்களால் பொதுவாழ்வில் இருந்து வெளியேற்றப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் எதிர்காலம் இனி என்னவாகும்?

எனக்கு ஒரு கேள்வி இருந்தது. ஆனால் அதை எனக்கு நானே கேட்டுக்கொள்வேன் என்று எதிர்பார்க்கவில்லை.

நாளுக்கு நாள், வாரத்திற்கு வாரம், பல மாதத்திற்குப் பிறகு சம்பளம் வாங்காமல் வேலைக்கு வருவதற்கு எவ்வளவு மனவலிமை தேவை?

ஆனால் நான் அதைத்தான் நேரடியாகவே கண்டறிந்தேன். காந்தஹாரில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் முதல் காபூல் மருத்துவமனைகளில் உள்ள துப்புரவுப் பணியாளர்கள் வரை பொது சுகாதாரப் பணியாளர்கள் யாருக்கும் வெளிநாட்டு உதவி நிறுத்தப்பட்டதிலிருந்து ஊதியம் வழங்கப்படவில்லை.

ஆனாலும் இன்றும் அவர்கள் நாள்தோறும் வேலைக்குச் சென்று திரும்புகிறார்கள். தாங்களே துயரத்தின் விளிம்பில் இருக்கும்போது, நம்பிக்கையிழந்திருக்கும் மக்களையும் அவர்கள் கவனித்துக் கொள்கிறார்கள்.

ஊழியர்கள்
 
படக்குறிப்பு,

மருத்துவமனை ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை

தலைநகர் காபூலில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் நல மருத்துவமனையில் நஸ்ரின் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

"நாங்கள் வேலைக்கு வரவில்லை என்றால், இந்த குழந்தைகள் இறந்துவிடும். அவர்களை எப்படி கைவிடுவது?" என்று அவர் என்னிடம் கேட்கிறார்.

நோயாளிகளில் பெரும்பாலானோர் பலவீனமாக இருக்கிறார்கள். பலர் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்கள். எந்த தொற்றுநோய்களும் வராமல் இருக்க வேண்டுமெனில் வார்டு முடிந்தவரை சுத்தமாக இருக்க வேண்டும்.

போக்குவரத்துக்கு பணம் இல்லை என்று நஸ்ரின் கூறுகிறார். அதனால் நடந்தே வேலைக்குப் போகிறார். காலையில் மலையில் இருந்து கீழே இறங்கி வந்து, 12 மணி வேலைக்குப் பிறகு, மீண்டும் மலையேற வேண்டும்.

சுகாதாரப் பணியாளர்களின் நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும், அவர்கள் கவனிக்கும் நோயாளிகள் அதைவிட மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்.

கிட்டத்தட்ட 2.3 கோடி ஆப்கானியர்கள் பட்டினியால் வாடுகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 95 சதவீதம் பேருக்கு போதிய உணவு இல்லை.

நஸ்ரின் பணியாற்றும் வார்டுகளில், நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இளம் வயதினரைப் பார்க்கலாம். குல்னாராவுக்கு வயது மூன்று. மிகவும் பலவீனமாக இருப்பதால் அவளால் கண்களைத் திறக்க முடியவில்லை. கண்கள் குழிந்து தென்படுகின்றன. தலைமுடி மெல்லியதாக மாறிவிட்டது. எழுந்திருக்க முயலும்போது வலியால் அழுகிறாள்.

கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஆப்கானிஸ்தானின் குழந்தைகளுக்கு இதைத்தான் செய்து வருகிறது.

குழந்தை
 
படக்குறிப்பு,

ஆப்கானிஸ்தானில் பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாலிபன் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் சர்வதேச சமூகத்தின் சுட்டிகாட்டி பழிசுமத்துகிறார். மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளால்தான் ஆப்கானிஸ்தான் மக்களுக்குத் துயரங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் என்னிடம் கூறினார்.

"இந்த நாடு பேரழிவையும் மனிதநேய நெருக்கடியையும் நோக்கிச் செல்கிறது என்று கூறினால், இந்த அவலங்கள் அனைத்தையும் தடுக்க, சரியான நடவடிக்கை எடுப்பது அவர்களின் பொறுப்பு."

"மனித உரிமைகள் பற்றி பேசும் பிற நாடுகள்... ஆப்கானிஸ்தானில் மனிதநேய நெருக்கடிக்குக் காரணமான நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.

யாரைக் குறை கூறுவது என்பது குறித்த அவரது கருத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், இந்தப் பிரச்னைக்கான தீர்வு சர்வதேச நிதி உதவியில் இருந்து வரும் என்பதை பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

சர்வதேச உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டபோது நாட்டின் பொருளாதாரம் முடங்கியது.

"நான் செங்கல் சூளைகளில் வேலை செய்தேன்" என்று தெருவில் வேலைக்காக காத்திருந்த ஒருவர் என்னிடம் கூறினார். அப்போது எனது சம்பளம் மாதம் 25,000 ஆப்கானி ($270) ஆக இருந்தது. இப்போது என்னால் மாதம் 2,000 ($22) கூட சம்பாதிக்க முடியவில்லை." என்றார் ஒருவர்.

அவரது நான்கு குழந்தைகளும் வீட்டில் உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர், மருந்துக்கு வாங்குவதற்குப் பணமில்லை.

"எனக்கு எதிர்காலம் இல்லை, ஏழைக் குடும்பங்களுக்கு எதிர்காலம் இல்லை" என்று அவர் என்னிடம் கூறினார்.

https://www.bbc.com/tamil/global-59407479

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கிரமிப்பு மற்றும் அதிகாரப் போட்டிகளில் சிக்கிப்பலியாவது எப்போதும் அப்பாவி மக்களே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.