Jump to content

தமிழர்களின் பூர்வீக நிலத்தையோ விவசாய பூமியையோ வலுக்கட்டாயமாக அபகரிக்கும் நோக்கம் எமக்கில்லை - விதுர விக்கிரமநாயக்க


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

தமிழ் மக்களின் பூர்வீக நிலத்தையோ, அவர்களின் விவசாய பூமியையோ  வலுக்கட்டாயமாக அபகரிக்கும் நோக்கம் எமக்கில்லை, தமிழர் பூமியில் சிங்கள மக்களை புதிதாக குடியேற்றவோ அல்லது விகாரைகளை உருவாக்கவோ நாம் முயற்சிப்பதாக தமிழர் தரப்பு சந்தேகங்கொள்ள வேண்டாம் என தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள், கிராமிய சிற்ப கலைகள் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தேசிய மரபுரிமைகள் ,அருங்கலைகள்,மற்றும் கிராமிய கலைநுட்ப ,மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அரசாங்க சேவைகள்,மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு,மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலைவிவாத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை சிங்கள பெளத்த மயமாக்குகின்றோம்  என்ற குற்றச்சாட்டை தமிழ் அரசியல் தரப்பினர் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். 

பாதுகாக்க வேண்டிய பகுதிகளை பாதுகாக்க நாம் தயாராக உள்ளோம். தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற நோக்கத்தில் இவற்றை பாதுகாக்கவில்லை. அல்லது இந்து பெளத்த, கிருஸ்தவ, முஸ்லிம் அடிப்படையிலும் அல்ல, இது இலங்கைக்கென்ற அடையாளம் என்ற அடிப்படையில் பாதுகாக்கப்படுகின்றது. இந்த நிகழ்காலத்தை நாம் எதிர்காலத்திற்கு கொண்டு சேர்க்கின்றோம்.

ஆக்கிரமிப்பு ரீதியில் இது முன்னெடுக்கப்படுகின்றது என்றோ, அல்லது மக்களை புதிதாக குடியேற்றவோ அல்லது விகாரைகளை உருவாக்கவோ நாம் முயற்சிப்பதாக தமிழர் தரப்பு நினைக்கலாம். 

ஆனால் அது இடம்பெறவில்லை. தமிழ் மக்களின் பூர்வீக நிலமோ, அவர்களின் விவசாய நிலங்களோ வலுக்கட்டாயமாக அபகரிக்கும் நோக்கம் எமக்கில்லை.

 இதனை மீண்டும் மீண்டும் நாம் தெரிவித்தும் அதனை தமிழர் தரப்பு நம்ப மறுக்கின்றது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம். சிதைந்த உறவினை மீளவும் கட்டியெழுப்புவோம் என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய செல்வம் அடைக்கலநாதன் எம்.பி ,

அமைச்சரின் கருத்துக்களை ஒரு பொதுவான கருத்தாக பார்த்தாலும் கூட,ஒரு சில பெளத்த குருமார்கள் மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கையில் எமக்கு அச்சம் ஏற்படுகின்றது என்றார்.

இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் ,

யாரும் எந்தக் கருத்தையும் கூறலாம், ஆனால் தீர்மானம் எடுப்பது நாங்களே. எனவே இது குறித்து நீங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. வடக்கு கிழக்கில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிந்துகொள்ள ஒரு விடயத்தை கூருகின்றேன்.

 கொழும்புக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட கலை, கலாசார மண்டபங்களை வடக்கு கிழக்கிற்கும் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் பாலமொன்றை கட்டியெழுப்ப உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தமிழர்களின் பூர்வீக நிலத்தையோ விவசாய பூமியையோ வலுக்கட்டாயமாக அபகரிக்கும் நோக்கம் எமக்கில்லை - விதுர விக்கிரமநாயக்க | Virakesari.lk

Link to comment
Share on other sites

இவ்வளவு நல்ல அமைச்சர்  இருக்க கூடியதாக எமது மக்கள் போராட்டம் நடாத்துவது  விசமத்தனமானது.🙃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.