Jump to content

வேகமாக பரவும்... தன்மை வாய்ந்த, உருமாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!

வேகமாக பரவும்... தன்மை வாய்ந்த, உருமாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!

வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டடுள்ளது.

தென்னாப்பிரிக்க சுகாதாரத் துறை அமைச்சா் ஜோ பாஹ்லா இதனை உறுதி செய்துள்ளார்.

ஏற்கெனவே பி.1.1.529 என வகைப்படுத்தப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டதாக தேசிய தொற்றுநோய் நிறுவனம் உறுதிப்படுத்திய நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து தென்னாப்பிரிக்க சுகாதாரத் துறை அமைச்சா் ஜோ பாஹ்லா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே,

‘நாட்டில் கொரோனா 4ஆம் அலை வரும் டிசம்பா் அல்லது ஜனவரியில் தாக்கலாம். ஆனால் இந்த புதிய வகை வைரஸ் நோய்த்தொற்று பரவலை அதிகரித்து வருகின்றது.

கெளடெங் போன்ற மக்கள்தொகை நெருக்கம் மிகுந்த மாகாணங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்தாலும், அது டெல்டா வைரஸின் பிரிவுதான் என்பதால் அதை கட்டுப்படுத்திவிடலாம் என ஆரம்பத்தில் நாங்கள் நம்பிக்கையோடு இருந்தோம்.

ஆனால் இப்போது உருமாறிய புதிய வகை வைரஸ் பரவுவதை தெளிவாக அடையாளம் கண்டுவிட்டோம். நாம் எதிா்கொள்ளும் கண்ணுக்குப் புலனாகாத எதிரியை முன்கூட்டியே கணிப்பது மிகவும் சிரமம்.

பொருளாதார மையமான கெளடெங் நோக்கி தென்னாப்பிரிக்காவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் பயணம் மேற்கொள்கின்றனா். ஆகையால் அடுத்த சில நாள்களில் நோய்த்தொற்றுப் பரவலின் வீதம் அதிகரிக்க தொடங்கலாம்.

தென்னாப்பிரிக்க அரசும், கொரோனா கட்டுப்பாட்டு சபையும் வார இறுதி நாள்களில் சந்தித்து, உருமாறிய வைரஸின் உட்கூறுகள் குறித்தும், நோய்த்தொற்றுப் பரவல் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்நாட்டின் குவாசுலு நடால் ஆராய்ச்சி மற்றும் வகைப்படுத்துதல் மைய (கேஆா்ஐஎஸ்பி) இயக்குநா் பேராசிரியா் டுலியோ டி ஒலிவெய்ரா கூறுகையில், ‘‘ இன்று உலக சுகாதார அமைப்பின் பணிக்குழுவுடன் அமா்ந்து இந்த புதிய வகை வைரஸூக்கு கிரேக்க பெயரிடுவது குறித்து ஆலோசனை நடத்துவோம்.

தென்னாப்பிரிக்காவில் வெகு விரைவிலேயே இந்த வைரஸ் கண்டறியப்பட்டுவிட்டதால், இதன் தோற்றம் தென்னாப்பிரிக்காதான் என தீா்மானித்துவிட முடியாது.

கொரோனா வைரஸின் மரபணுவில் 30 இற்கும் மேற்பட்ட பிவுகள் காணப்படுகின்றன. ஆனால் ஏற்கெனவே கண்டறியப்பட்ட பிவுகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1252328

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொவிட் மாறுபாடு ஹொங்கொங்கிலும் கண்டுபிடிப்பு!

தென்னாபிரிக்காவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொவிட் மாறுபாடு ஹொங்கொங்கிலும் கண்டுபிடிப்பு!

தென்னாபிரிக்காவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாடு, ஆசிய நாடான ஹொங்கொங்கிலும் கண்டறியப்பட்டுள்ளது.

பி.1.1.529 எனப்படும் புதிய மாறுபாடு, செக் லாப் கோக்கில் உள்ள ரீகல் எயார்போர்ட் ஹோட்டலில் தனித்தனியாக தனிமைப்படுத்தப்பட்ட இருவரிடம் இருந்து கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் 11ஆம் திகதி தென்னாபிரிக்காவிலிருந்து விமானத்தில் வந்த ஒருவரால் புதிய மாறுபாடு கொண்டுவரப்பட்டதாக சுகாதாரப் பாதுகாப்பு மையம் உறுதிப்படுத்தியது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது என்று வொஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

36 வயதான இந்த நோயாளி, ஹோட்டலில் பக்கத்து அறையில் தங்கியிருந்த மற்றொரு நபருக்கு வைரஸைக் கடத்தியதாக சுகாதாரப் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

62 வயதான இரண்டாவது நபர், கனடாவில் இருந்து வந்ததாக வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் B.1.1.529 திரிபு: 50 மரபணு பிறழ்வுகள், ஆபத்துகள் பற்றி அறிவியல் உலகம் கூறுவதென்ன?

  • ஜேம்ஸ் கலேகர்
  • சுகாதார மற்றும் அறிவியல் செய்தியாளர்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
கொரோனா வைரஸ் கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கொரோனா வைரஸ் கோப்புப் படம்

நாம் மீண்டும் நமக்கு பழக்கப்பட்ட இடத்திற்கே வந்துள்ளோம், கொரோனா வைரஸின் புதிய திரிபு குறித்த கவலை அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸின் இந்த புதிய திரிபு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட திரிபுகளிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான மரபணு பிறழ்வுகளைக் கொண்டது. இது மிகவும் அச்சுறுத்தக் கூடியது என ஓர் அறிவியலாளர் இதை விவரித்துள்ளார், மற்றொருவரோ தாங்கள் கண்ட திரிபுகளிலேயே இதுதான் மிகவும் மோசமான திரிபு என என்னிடம் கூறினார்.

இது இந்தத் திரிபு தொடர்பான விவரங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கும் ஆரம்ப நாட்களில் கூறப்பட்டவை. இத்திரிபால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் தென் ஆப்பிரிக்காவின் ஒரு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இந்தத் திரிபு மேற்கொண்டு பரவியிருக்கலாம் என்பதற்கான சில குறிப்புகளைக் காண முடிகிறது.

இந்தப் புதிய திரிபு எவ்வளவு வேகமாக பரவும், கொரோனா தடுப்பூசிகளால் மனிதர்களுக்கு கிடைத்திருக்கும் பாதுகாப்பு அம்சங்களை இது எப்படி கடக்கிறது, இந்த புதிய கொரோனா திரிபை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என பல கேள்விகள் இப்போது எழுகின்றன.

B.1.1.529 கொரோனா திரிபு குறித்து பல்வேறு ஊகங்கள் வலம் வருகின்றன, ஆனால் வெகுசில தெளிவான விடைகள் மட்டுமே இருக்கின்றன.

B.1.1.529 திரிபு குறித்து நமக்கு என்ன தெரியும்?

B.1.1.529 என்றழைக்கப்படும் இந்த புதிய கொரோனா திரிபுக்கு, உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை ஒரு புதிய கிரேக்க பெயரை சூட்ட உள்ளது.

"புதிய கொரோனா திரிபில் வழக்கத்துக்கு மாறாக பல்வேறு பிறழ்வுகள் உள்ளன. இது மற்ற கொரோனா திரிபுகளிலிருந்து மிகவும் வேறுபட்டதாக உள்ளது" என தென்னாப்பிரிக்காவில் உள்ள சென்டர் ஃபார் எபிடமிக் ரெஸ்பான்ஸ் அண்ட் இன்னொவேஷன் என்கிற அமைப்பின் இயக்குநர் பேராசிரியர் டுளியோ டி ஒலிவெரியா கூறினார்.

இந்த கொரோனா திரிபு எங்களை ஆச்சரியத்படுத்துகிறது. இத்திரிபு, அதன் பரிணாம வளர்ச்சியில் மிகப் பெரும் பாய்ச்சலை கண்டுள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவிலான பிறழ்வுகளை கொண்டுள்ளது என்றும் கூறினார்.

இந்த புதிய கொரோனா வைரஸ் திரிபில் 50 மரபணு பிறழ்வுகள் உள்ளன என்றும், ஸ்பைக் புரோட்டின் இடையில் 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் இருப்பதாகவும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டார் பேராசிரியர் டுளியோ டி ஒலிவெரியா.

கொரோனா வைரஸ் கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கொரோனா வைரஸ் கோப்புப் படம்

கொரோனா தடுப்பூசிகள் இந்த ஸ்பைக் புரத இழையைத்தான் இலக்கு வைக்கின்றன. அதேபோல மனிதர்களின் உடலுக்குள் ஊடுறுவ கொரோனா வைரஸ் இந்த ஸ்பைக் புரத இழையைத்தான் பயன்படுத்துகின்றது.

மனிதர்களின் உடலோடு முதலில் தொடர்பு கொள்ளும் ரெசப்டாரில் 10 பிறழ்வுகள் உள்ளன. உலகை உலுக்கிய கொரோனா வைரஸின் டெல்டா திரிபிலேயே ரெசப்டார்களில் இரண்டு பிறழ்வுகள் மட்டுமே இருந்தன.

கொரோனா வைரஸை தோற்கடிக்க முடியாத ஒரு நோயாளியின் உடலிலிருந்து இத்தனை அதிக பிறழ்வுகள் ஏற்பட்டிருக்கலாம்.

பொதுவாக அதிக பிறழ்வுகள் என்றாலே ஆபத்தானவை என்று பொருள் அல்ல, அந்த பிறழ்வுகள் என்ன செய்கின்றன என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

ஆனால் இங்கு பிரச்னை என்னவெனில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸிலிருந்து, இந்த திரிபு மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. அதாவது கொரோனா வைரஸின் ஒரிஜினல் ஸ்டரெயின் என்றழைக்கப்படும். ஆரம்பகால இழைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் B.1.1.529 கொரோனா திரிபுக்கு எதிராக அதிக செயல் திறனற்றுப் போகலாம்.

இந்த புதிய திரிபில் காணப்படும் சில பிறழ்வுகள், ஏற்கனவே வேறு சில பிறழ்வுகளில் காணப்பட்டுள்ளன. எனவே அந்த பிறழ்வுகள் எப்படி செயல்படலாம் என சில விவரங்களை நமக்கு வழங்குகின்றன.

"இந்த கொரோனா வைரஸ் திரிபு பரவும் தன்மையை அதிகரித்திருக்கலாம், ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு வேகமாகப் பரவம் திறனை அதிகரித்திருக்கலாம் என கவலை அளிக்கிறது, ஆனால் இத்திரிபு நோயெதிர்ப்பு மண்டலத்தின் சில பகுதிகளை வெற்றிகரமாக கடக்கலாம்" என தென்னாப்பிரிக்காவில் உள்ள க்வாசுலு நடல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சர்ட் லெஸ்செல்ஸ் கூறினார்.

கொரோனா வைரஸ் கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கொரோனா வைரஸ் கோப்புப் படம்

காகிதத்தில் மிகவும் அச்சுறுத்த கூடியதாக தோன்றும் பல கொரோனா திரிபுகள், எதார்த்தத்தில் ஒன்றுமில்லாமல் போய் உள்ளன. அதற்கு பல உதாரணங்கள் உள்ளன. கொரோனா வைரஸின் பீட்டா (beta) திரிபு இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகவும் அச்சுறுத்த கூடியதாக மக்களின் கவலைக்குரியதாக இருந்தது. அத்திரிபு மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் சிக்காமல் தப்பிப்பதில் சிறந்து விளங்கியது. ஆனால் எதார்த்தத்தில் அதிவேகமாக பரவக்கூடிய டெல்டா திரிபு உலகை தவிக்க வைத்தது.

"பீட்டா திரிபு நோயெதிர்ப்பு மண்டலத்தை கடப்பதில் மட்டுமே சிறந்து விளங்கியது, ஆனால் டெல்டா (delta) திரிபோ தொற்றுத்தன்மை மற்றும் ஓரளவுக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்திலிருந்து தப்பிக்கும் திறன் என இரண்டையும் கொண்டிருந்தது. இந்த இரு திறன்களும் கொரோனா வைரஸ் பரவலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றன" என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரவி குப்தா.

ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் இது தொடர்பான தெளிவுகளை வழங்கும், ஆனால் எதார்த்தத்தில் உலகில் பரவும் வைரஸை கண்காணிப்பதன் மூலம் இத்திரிபு தொடர்பான விடை விரைவாகக் கிடைக்கும். இது அரம்ப கட்டம் என்பதால், இப்போது எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாது.

தென்னாப்பிரிக்காவின் கெளடெங் மாகாணத்தில் 77 பேரும், போட்ஸ்வானாவில் நான்கு பேரும், ஹாங்காங்கில் ஒருவரும் இத்திரிபால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அனைவரும் தென்னாப்பிரிக்கா உடன் பயணத் தொடர்புடையவர்களாக உள்ளனர்.

இத்திரிபு இன்னும் பரவலாக பரவியிருப்பதற்கான குறிப்புகள் உள்ளன. இந்த திரிபை முழுமையான மரபணு சோதனை செய்யாமல், நிலையான பரிசோதனைகளிலேயே (Standard Test) இந்த திரிபை கண்டுபிடிக்க முடியும்.

கொரோனா வைரஸ் கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கொரோனா வைரஸ் கோப்புப் படம்

இச்சோதனையில் கெளடெங் மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களில் 90% பேர் இத்திரிபால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், மற்ற மாகாணங்களிலும் இத்திரிபு பரவியிருக்கலாம் என்றும் இச்சோதனை பரிந்துரைக்கிறது.

டெல்டா திரிபை விட இத்திரிபு அதிவேகமாக பரவக் கூடியதா, அதன் தீவிரத்தன்மை என்ன, தடுப்பூசிகளால் கிடைக்கும் பாதுகாப்பை இத்திரிபால் எந்த அளவுக்கு கடக்க முடியும் என்பதை எல்லாம் அச்சோதனை நமக்கு வெளிப்படுத்தாது.

மேலும், அதிகம் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள நாடுகளில் இத்திரிபு எப்படி பரவும் என்பது குறித்த தகவல்களையும் வெளிப்படுத்தாது. தென்னாப்பிரிகாவில் 24% பேர் மட்டுமே முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்றாலும், அந்நாட்டில் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரிபை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும், அதோடு என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என ஆழமாக கேள்விகளைக் கேட்க வேண்டும். நமக்கு எல்லா விடைகளும் கிடைக்கும் வரை நாம் காத்திருக்க முடியாது என்பது இந்த பெருந்தொற்றில் நாம் கற்றுக் கொண்ட பாடம்.

https://www.bbc.com/tamil/science-59426476

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒமிக்ரான்: கொரோனாவிலிருந்து மீண்டவர்களை புதிய திரிபு மீண்டும் தாக்குமா? முதற்கட்ட தரவுகள் சொல்வதென்ன?

  • ஜேம்ஸ் கலேகர்
  • சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
கொரோனா வைரஸ் - கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கொரோனா வைரஸ் - கோப்புப் படம்

ஒமிக்ரான் திரிபு சில நோயெதிர்ப்புகளைக் கடந்து மனிதர்களை பாதிக்கலாம் என தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள முதற்கட்ட தரவுகள் கூறுகின்றன.

ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் எண்ணிக்கை அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது விரைவாக மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு மற்றும் இறுதியானதல்ல என்றாலும், ஒமிக்ரான் திரிபு தொடர்பான கவலைக்கு இவ்வாய்வின் முடிவுகள் வலு சேர்ப்பதாகவே அமைந்துள்ளது.

மேலும் கொரோனா தடுப்பூசிகளால் கிடைத்த பாதுகாப்பு அம்சங்களை இத்திரிபு பாதிக்குமா என்பது குறித்தும் இன்னும் தெளிவாக எதுவும் தெரியவில்லை.

ஒமிக்ரான் திரிபு கண்டுபிடிக்கப்பட்டு ஒரு வார காலத்துக்குப் பிறகும், அதனால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து புரிந்து கொள்ள உலகம் பதற்றத்தோடு முயன்று கொண்டிருக்கிறது.

இப்போது தான் இத்திரிபு தொடர்பான புதிரின் முதல் பகுதி சரியான இடங்களில் பொருந்திப் போகத் தொடங்கியுள்ளது.

ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக தென்னாப்பிரிக்க அதிகாரிகள் முன்பே எச்சரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நம் முன்னிருக்கும் புதிரின் புதிய கேள்வி என்னவெனில், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒமிக்ரான் திரிபால் தொற்று ஏற்படுமா என்பது தான்.

இந்த பெருந்தொற்று காலம் முழுக்க, தென்னாப்பிரிக்காவில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 36,000 மாதிரிகளை விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்தனர்.

பீட்டா திரிபின் போதோ, டெல்டா திரிபின் போதோ மறுதொற்று (ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுவது) ஏற்படவில்லை என்றது சோதனை முடிவுகள். ஆனால் தற்போது அப்பரிசோதனையில் மறுதொற்று ஏற்படுவதை விஞ்ஞானிகள் கண்டு வருகின்றனர். அவர்கள் மறுதொற்று ஏற்பட்ட அனைவரையும் ஆய்வு செய்து ஒமிக்ரான் திரிபு தான் என நிரூபிக்கவில்லை என்றாலும், ஒமிக்ரான் திரிபு தான் மறுதொற்றை அதிகரிப்பதாக தொற்று காலம் சுட்டிக்காட்டுகிறது என்கிறார்கள்.

ஒமிக்ரான் திரிபு
 
படக்குறிப்பு,

ஒமிக்ரான் திரிபு

இந்த ஆய்வுகளை சக விஞ்ஞானிகள் இதுவரை முறையாக பரிசீலனைக்கு உட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒமிக்ரான் திரிபு இதுவரையான திரிபுகளை விட இரண்டு மடங்கு அதிகம் மறுதொற்றுக்கு காரணமாகலாம் என விஞ்ஞானிகளின் மதிப்பீடுகள் கூறுகின்றன.

'ஒமிக்ரான் திரிபு, குறைந்தபட்சமாக, ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பரவும் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு பரவுகிறது என இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன" என ஸ்டெல்லன்போஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜூலியட் புல்லியம் மற்றும் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் கூறினர். இருப்பினும் இது புதிரின் ஒரேயொரு பகுதி மட்டுமே.

தடுப்பூசிகளால் கிடைத்த பாதுகாப்பு எவ்வளவு குறைந்தால் ஒருவர் உடலில் கொரோனா திரிபுகள் பரவும், எதுவரை பாதுகாப்பாக இருக்க முடியும் என பல கேள்விகள் எழுகின்றன.

இது ஒரு அதிவேக பகுப்பாய்வு, காலப்போக்கில் இன்னும் நமக்கு நிறைய தரவுகள் கிடைக்கும். உடலில் இருக்கும் எதிர்ப்பான்கள், இந்த வைரஸை எத்தனை சிறப்பாக தாக்கும் என்பது குறித்த ஆய்வக ஆராய்ச்சி முடிவுகள் அடுத்த வாரம் வெளியாக உள்ளன.

கொரோனா வைரஸ் - கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கொரோனா வைரஸ் - கோப்புப் படம்

"ஒமிக்ரான் திரிபால் மனித உடலின் இயற்கையான மற்றும் தடுப்பூசிகளால் தூண்டப்பட்ட நோயெதிர்ப்பு மண்டலத்தை கணிசமான அளவுக்கு கடக்க முடியும் என்பதை இந்த ஆய்வு கூறுகிறது.

"ஆனால் எந்த அளவுக்கு ஒமிக்ரானால் நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கடக்க முடியும் என தெளிவாகத் தெரியவில்லை. முழுமையாக நோயெதிர்ப்பு மண்டலத்தை கடக்க முடியுமா என்பது சந்தேகமே" என்று கூறியுள்ளார் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பால் ஹன்டர்.

ஒருவேளை கொரோனா தடுப்பூசிகளால் முழுமையாக தொற்று ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை என்றால் கூட, கொரோனாவால் மோசமான உடல் நலக்குறைவு ஏற்படுவதிலிருந்தும், கொரோனா உயிரிழப்புகளையும் தடுப்பூசிகள் தடுக்கும் என பெரும்பாலான விஞ்ஞானிகளின் உள்ளுணர்வாக இருக்கிறது.

அப்படி இருந்தால் கூட, ஒமிக்ரான் திரிபால் அதிக அளவில் தொற்று எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமென்றால், அது மருத்துவமனைகளின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு கூட இரு வாரங்கள் தேவை.

"ஓமிக்ரான் திரிபு அதிக மறுதொற்று ஏற்படுவதற்கான வல்லமை பொருந்தியது என்கிற மதிப்பீட்டில் அதிகம் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. அத்திரிபின் ஸ்பைக் புரோட்டீன் இழையில் காணப்படும் அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளால் அது எதிர்பார்த்த ஒன்றே. இதனால் அத்திரிபு, மனித உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலத்தை கடப்பதற்கான வலிமை அதிகமாகிறது" என லண்டன் கல்லூரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஃபரான்கோயிஸ் பல்லாக்ஸ் கூறினார்.

https://www.bbc.com/tamil/global-59537828

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.