Jump to content

தமிழ்ஈழ தேசியத் தலைவருக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா'

தமிழினத்தின் அடையாளம். எப்பவும்... எம் நெஞ்சங்களில், வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://2.bp.blogspot.com/_dHllxFwrm1Y/SS4B3IbRDNI/AAAAAAAAA8s/HJOyTmI6zVc/s320/Untitled-4.jpg

எம் இனத்தின் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......!  🙏

கார்த்திகையில் பூத்திருக்கும் நம்பிக்கைப் பூ! | எரிமலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and indoor

எம் இனத்தின் தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தானை தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்றும் நேசிக்கும் முதல் மனிதன் தேசியத்தலைவர் அவர்களுக்கு இனிய 67வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது தேசியத்தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!💐🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

 தமிழின தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத் தலைவரை இகழ்ந்து வசைபாடும் கூட்டம் உள்ள யாழ் களத்தில் உள்ளபோது, தெசியத்தலைவரது கொள்கைகள் மற்றும் தியாகம், கொண்டகொள்கையில் பிடிப்பு ஆகியவற்றைத் தூரக்கடாசிவிட்டு தடி எடுத்தனனெல்லாம் தண்டல்காரனாகவும் போலித் தமிழ்தேசியவாதிகளுக்குத் துதிபாடும்போது 

எப்படிப்பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லமுடியும் என்னால்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

6 minutes ago, Elugnajiru said:

 

எப்படிப்பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லமுடியும் என்னால்.
 

சிங்களமும் சிங்களத்தின் கைக்கூலிகளும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். 

தமிழீழ நிலம் விடிய என் உயிரையும் தருவேன் என
வெற்றுமொழி பேசாது வேங்கையென வாழ்ந்த திரு
ஆற்றலின் ஊற்றே  ஆழ்ந்த சிந்தனையே 
வேற்றவரும் போற்றும் வீரத்திரு நதியே
நின் புகழென்றும் புதைந்திடாது வாழும்!
வாழிய தலைவா வாழியவே! 
வரலாறாய் என்றும் வாழியவே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர் இறைவன் பிறந்தநாள் இன்று.
 
கடவுளுக்கு அடித்தால்
மக்களுக்கு வலிக்கும் கேட்டதுண்டு
எம்மைத்தொட்டால் உனக்கு வலிக்கும் பார்த்ததுண்டு
 
பேச்சை மூச்சாகக் கொண்டோர் முன் செயலை மூச்சாக்கி காட்டியவன் நீ
அதனால் இன்று அதிகம் தேவைப்படுபவனும்
தேடப்படுபவனும் நீ
 
எதற்கும் மாற்றீடு இல்லாமல் இல்லை உன்னை தவிர.
 
உன் காலத்தில்
நானும் வாழ்ந்தேன் என்பதே இப்பிறவியில் பெருமை எனக்கு.
 
எங்கிருந்தாலும் வாழ்க இறையே.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவா
எங்கிருந்தாலும் வாழ்க.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் இனத்தின் தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 என்றும் எம் மனதில் இறவாத தலைவன். விடியலுக்காய் பிறந்த விடுதலை வீரனுக்கு என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கர்மவீரருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தருணங்களை யார் வென்றாலும்
அவர்களுடைய புதை குழிகளின்மேல்
காலத்தை வெல்லுவாள் எனது ஆச்சி.
 

எந்த அன்னியருக்கும் நிலை இல்லை
எனது ஊர் நிலைக்கும் என்பதைத்தவிர
எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன்.
நாளை இந்தப் போத்துக்கீசரும் புதைய அங்கு
கரும்பனைத் தோப்பெழும் என்பதைத் தவிர
எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன்.

திசகாட்டியையும் சுக்கானையும்
பறிகொடுத்த மாலுமி நான்
நீர்ப் பாலைகளில்
கனவுகாண்பதுன் கரைகளே ஆச்சி

நீ நிலைத்திருப்பாய் என்பதைத் தவிர
எதனைக் கொண்டுநான்
மனம் ஆற என் ஆச்சி..
.🙏

-வ.ஜ.ச

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புராணங்களிலும் இதிகாசங்களிலும் வரலாறுகளிலும் கண்ட தமிழனத்தின் வீரத்தை தற்காலத்திலும் காட்டி யாதுமாகி நின்றவனுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்

தமிழ் உள்ளவரை வாழட்டும் நின் புகழ்.
 
 
#######   #######  #######  #######   #######  ####### 
 
 

May be an image of 1 person and standing

தமிழுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்.

இரா சேகர்

 

#######   #######  #######  #######   #######  ####### 

 

May be an image of 1 person, standing and fire

எங்கள் இனத்துக்கான தலைவா உமது பிறந்த நாளில் உம்மை வணங்குகிறோம்.

Anbu Raj

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கிருந்தோ வந்து
நம் தெருவோர மரக்கிளையில் குந்தி
தேவதையின் கூந்தலெனத் தன் பூவால் அசைத்த
அந்தக் குருவியைப் போல்
காணாமல் போனதடி காலங்கள்

அந் நாளில்
பண்டார வன்னியனின்
படை நடந்த அடிச் சுவடு
இந்நாளும் இம்மணலில்

இருக்கவே செய்யும்
அவன்
தங்கி இளைப்பாறி
தானைத் தலைவருடன்
தாக்கு தலைத் திட்டமிட்டு

புழுதி படிந்திருந்த
கால்கள் கழுவி
கைகளினால் நீரருந்தி
வெள்ளையர்கள் பின் வாங்கும்
வெற்றிகளின் நிம்மதியில்
சந்றே கண்ணயர்ந்த
தரை மீது அதே மருது
இன்றும் நிழல் பரப்பும்… 

இனிச் சோழர்காலம் திரும்பாதுதான்
எனினும்.. 
வரலாற்றின் பாதையில்
கரைமாறும் கடல்மாறும்
காலங்களும் மாறுமடி...

 -வ.ஜ.ச

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலி ஆறு நகர்கிறது
அங்கும் இங்குமாய்
இடையிடையே வயல் வெளியில்
உழவு நடக்கிறது
இயந்திரங்கள் ஆங்காங்கு
இயங்கு கின்ற ஓசை
இருந்தாலும்
எங்கும் ஒரே அமைதி

ஏது மொரு ஆர்ப்பாட்டம்
இல்லாமல் முன் நோக்கி
பாலி ஆறு நகர்கிறது.

ஆங்காங்கே நாணல்
அடங்காமல் காற்றோடு
இரகசியம் பேசி

ஏதேதோ சலசலக்கும்.
எண்ணற்ற வகைப் பறவை
எழுப்பும் சங்கீதங்கள்.
துள்ளி விழுந்து
‘துழும்’ என்னும் வரால்மீன்கள்.

என்றாலும் அமைதியை
ஏதோ பராமரிக்கும்

அந்த வளைவை அடுத்து
கருங்கல் மறைப்பில்

அடர்ந்துள்ள நாணல் அருகே
மணற் கரையில் ஒரு மருங்கம்
ஓங்கி முகடு கட்டி

ஒளி வடிக்கும்
மருத மர நிழலில்

எங்கள் கிராமத்து
எழில் மிகுந்த சிறு பெண்கள்
அக்குவேறு ஆணிவேறாய்

ஊரின் புதினங்கள்
ஒவ்வொன்றாய் ஆராய்ந்து

சிரித்து
கேலி செய்து
சினந்து
வாய்ச் சண்டை யிட்டு
துவைத்து
நீராடிக் களிக்கின்றார்.

ஆனாலும்
அமைதியாய்ப்
பாலி ஆறு நகர்கிறது

அந் நாளில்
பண்டார வன்னியனின்*
படை நடந்த அடிச் சுவடு
இந்நாளும் இம்மணலில்

இருக்கவே செய்யும்
அவன்
தங்கி இளைப்பாறி
தானைத் தலைவருடன்
தாக்கு தலைத் திட்டமிட்டு

புழுதி படிந்திருந்த
கால்கள் கழுவி
கைகளினால் நீரருந்தி
வெள்ளையர்கள் பின் வாங்கும்
வெற்றிகளின் நிம்மதியில்
சந்றே கண்ணயர்ந்த
தரை மீது அதே மருது
இன்றும் நிழல் பரப்பும்

அந்த வளைவுக்கு அப்பால்
அதே மறைப்பில்
இன்னும் குளிக்கின்றார்
எங்களது ஊர்ப் பெண்கள்

ஏது மொரு
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
பாலி ஆறு நகர்கிறது.

பால்பத்திர ஓணாண்டி அவர்களுக்கு நன்றி
மீண்டும் இக்கவிதையை நினைவூட்டியதற்கு.

சில கவிஞர்களின் வரிகள் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியது, ஜெயா இதை எழுதியது தனது இளமைப்பிராயத்தில் எதிர்காலத்தில் ஈகவிதை இன்னுமொரு வரலாற்றுடன் பொருந்திப்போகும் என அவர் எழுதும்போது கனவுகூடக் கண்டிருக்கமாட்டார்.

இதே போல புதுவையரும் ஒரு முக்கியமான பாடலில் ஒரு வரியைச் சேர்த்திருப்பார் அது எதுவெனில்

"உருவாக்கி எம்மை வழிகாட்டும் தலவரின் வரலாறுமீதினில் உறுதி" என

இன்றைய நாளில் இவ்விரு  கவிதை வரிகளையும் தொட்டுப்பொவது உகந்ததே.

முதலாவது கண்களை நனைக்கும்

இரண்டாவது புதுவையரின் வரிகள் எம்மை உறுதிகொள்ளவைக்கும். 

அறம்சார்ந்து நாம் எந்தவிடயத்தையும் தன்னலமில்லாது செய்யத்துணிந்தால் தலைவரது சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கலாம். 

அதுவே அந்தக் காலப்பெருநதிக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்.

அண்ணர் நீங்கள் எப்போதும் என்னருகில் இருப்பதுபோல் உணருவதால் என்னால் அறத்துக்கு மாறாகச் சிந்திக்க முடியாதுள்ளது என்பதை எவர் உணருகிறாரோ அவரால், அண்ணர் விட்டுச்சென்ற செயல் முடிக்கப்படும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.