Jump to content

வயது முதிர்ந்த நிலையிலும் தம் மகன் வந்திடுவான் என்ற ஏக்கத்துடன் தனிமையில் காத்திருக்கும் பெற்றோர் – பாலநாதன் சதீஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வயது முதிர்ந்த நிலையிலும் தம் மகன் வந்திடுவான் என்ற ஏக்கத்துடன் தனிமையில் காத்திருக்கும் பெற்றோர் – பாலநாதன் சதீஸ்

November 26, 2021

வயது முதிர்ந்த நிலையிலும் தம் மகன் வந்திடுவான் என்ற ஏக்கத்துடன் தனிமையில் காத்திருக்கும் பெற்றோர்

 பாலநாதன் சதீஸ்

இலங்கை உள்நாட்டு  போர் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்றும் இறுதி யுத்தத்தில் கடத்தப்பட்டு, காணாமல் போனவர்களின் பிரச்சினை  வடக்கிலும், கிழக்கிலும் முடிவின்றித் தொடர்கிறது.

யுத்தம் நிறைவடைந்து பல தசாப்தங்களைக் கடந்த நிலையிலும், காணாமல் போனோர்தொடர்பில்  பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தும், இதுவரை  அதற்கான தீர்வு  கிடைக்கவில்லை. இந்நிலையில், வலிந்து காணாமல் போனோரின் உறவினர்கள் அன்று முதல் இன்று வரை தொடர் போராட்டங்களைப் பல்வேறு முறைகளில் முன்னெடுத்து வருகின்றனர். ஆனாலும் இவர்களைக் கண்டுகொள்ள த்தான் இங்கே யாருமில்லை.

spacer.png

இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்களின் சொந்தங்கள், தம் உறவுகளின் நீதிக்காக  வடக்கு, கிழக்கு பகுதிகளில் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள், இந்த நிலையில் தான் காணாமல் போனோர் அலுவலகம் பல மாவட்டங்களிலும் தாபிக்கப்பட்டது.  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகளைத் தேடித் தருமாறு கோரிக்கை விடுத்தும்கூட  அவர்களுக்கான தீர்வுகளை அந்த அலுவலகத்தினால்  வழங்க முடியவில்லை.

இந்நிலையிலும் தம் நம்பிக்கையைத் தளரவிடாது, காணாமல் போன  தம் உறவுகளுக்காகக் கால நேரம் பாராது பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக, தாம் ஆசையாக பெற்றெடுத்த ஒரே ஒரு மகனைத் தொலைத்த தாயும், தந்தையும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். தம் மகனை மீட்டுவிட வேண்டும் என்ற அவாவில்  அவர்கள் இருக்கும் நிலையை யாரறிவார்.

“எனது பெயர்  கிருஷ்ணபிள்ளை கணேசமூர்த்தி. என் மனைவி கணேசமூர்த்தி யோகராணி. நாங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியிலே வசித்து வருகின்றோம். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் தான்.  அதிலேயும் பல ஆசைகளுடன் பெற்றெடுத்த கடைசி மகன் தான் கணேசமூர்த்தி  கிஷாந்தன். இவர் தான் 2009.04.21 அன்று போர் தீவிரம் அடைந்த வேளையில்  எல்லோரும் இராணுவ கட்டுபாட்டுப் பகுதி நோக்கி வரும் போது முள்ளிவாய்க்கால் பகுதியில்  காணாமல் போய்விட்டார்.

எங்கு தேடியும் எங்கள் மகனைக் காணவில்லை. பின்னர் இராணுவத்தினர் பேருந்தில் எம்மை ஏற்றி  வவுனியா செட்டிகுளம்,  வலயம் – 4 (zone – 4) முகாமில் கொண்டுவந்து விட்டார்கள். ஒருவருடம் முகாமில் இருந்துவிட்டு 2010ஆம் ஆண்டு வவுனியா  நெளுக்குளம் உறவினர் வீட்டில் இருந்தனாங்கள்.

அப்போது பிரதிப் பொலிஸ்மா அதிபர் வவுனியா காரியாலயத்திலும், ரெட் குறோஸ் நிறுவனம்,  காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP),  ஜனாதிபதி ஆணைக்குழு என எல்லா இடத்திற்கும் நேரடியாகப் போயும் கடிதம் எழுதியும், எங்கள் மகனைக் காணவில்லை என முறைப்பாடு செய்தனாங்கள். ஆனாலும் இதுவரை ஒரு தீர்வுமே கிடைக்கவில்லை.

spacer.png

என்ரை மகனை எங்கு தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. 2011 ஆண்டு எமது சொந்த இடமான புதுக்குடியிருப்பு, கோம்பாவிலுக்கு மீள்குடியேற்றத்தின்  போது வந்தோம்.  என்  மகன் காணாமல் போய் 12வருடங்கள் ஆகிட்டுது. என்ரை பிள்ளை காணாமல் போகேக்க 27 வயது இப்போ  எங்க எப்படி இருக்கிறான் எண்டு கூடத் தெரியல. எங்கள் இரண்டு பேருக்கும் வயது இப்போ 67. எங்கட இந்த வயது முதிர்ந்த காலத்திலாவது எங்கடை பிள்ளையோட இருக்கணும் எண்டு ஆசை. ஆனால் என்ரை பிள்ளை இப்போ எங்க கஸ்ரபட்டுக்கொண்டு இருக்கிறானோ தெரியல. எப்பிடியாவது எங்கட பிள்ளைய மீட்டுவிடுவோம் என்ற நம்பிக்கையில தான் இரண்டு பேரும் இப்ப வரை  காத்துக்கொண்டிருக்கிறம்”

வயது முதிர்ந்து தள்ளாடினாலும், முதுமையிலும் தம் பிள்ளையை மீட்டுவிடுவோம் என்ற நம்பிக்கை மட்டும்  சற்றும் அவர்களுக்கு குறையவில்லை. தாம் ஆசையாகப் பெற்ற ஒரே மகனைத்  தொலைத்துவிட்டு நாள்தோறும் தம் மகன் வந்துவிட மாட்டானா? என்ற நப்பாசையுடன்  தனியாகக்  காத்திருக்கும் அந்தப் பெற்றோரின் வலி, அவர்கள் படுகின்ற துன்பங்களைக்  கூற வார்த்தைகளால் முடியாது.
spacer.png

இவர்களைப் போல் இன்று எத்தனையோ பெற்றோர்கள், உறவுகள் நாள்தோறும் காணாமல் போன தம் உறவுகளின் வருகைக்காய் கண்ணீருடன் காத்திருக்கின்றார்கள். இவர்களுக்கான தீர்வுகளும் எட்டப்படுவதாய் தெரியவில்லை.

இறுதி யுத்தத்திற்குப் பின்னர் தமிழ் மக்கள்  இந்த வரலாறு முழுதும் மீள முடியாத இனமாக மாற்ற  நினைத்து, போரின் இறுதியில் சிறிதும், தயக்கமின்றி  சரணடைந்தவர்களையும், கடத்தப்பட்டவர்களையும் ,  கையளிக்கப்பட்டவர்களையும்  இன்று காணாமல் போய் விட்டனர் என்று கைவிரிக்கும் நிலைக்கு, கையறு நிலைக்கு தள்ளியிருக்கின்றது இந்த அரசு.

இந்நிலையில் காணாமல் போன தம் உறவுகளைத் தேடித் தரச் சொல்லி மக்கள் போராட்டம் செய்துவரும் நிலையில், அதற்கு எவ்வித தீர்வினையும் கூறாது தற்போது உருவாக்கி வெளியிடப்பட்ட பாதீட்டில் காணாமல் போனவர்களுக்காக 300 மில்லியன் நிதியினை இழப்பீடாக அரசாங்கம் அறிவித்து வெளியிட்டிருக்கின்றது. இது தான் எம் மக்களுக்கான நீதியா?

 

https://www.ilakku.org/parents-waiting-in-loneliness-with-nostalgia-son/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.