Jump to content

இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் இலங்கையின் திட்டம் வெற்றிபெறாது; பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் இலங்கையின் திட்டம் வெற்றிபெறாது; பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார்

November 26, 2021
 

gajenrakumar parl இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் இலங்கைவின் திட்டம் வெற்றிபெறாது; பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார்இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் விதமான கொள்கைகளையே இலங்கை எப்போதும் வகுத்து வந்துள்ள நிலையில் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரே நாடாக தாம் இருக்க வேண்டும் என்பதையே இந்தியா விரும்புகின்றது. இந்நிலையில் இந்தியாவை சமாளிக்கலாம் என நீங்கள் நினைத்து அதற்கு ஏனைய வல்லரசுகளுக்கு சில பகுதிகளையும் இந்தியாவிற்கு சில பகுதிகளையும் வழங்கலாம் எனக் கருதினால் அது ஒருபோதும் வெற்றி பெறாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வெளிநாட்டு அமைச்சு,பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு,வெகுசன ஊடக அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் வெளிவிவகார கொள்கையில் தேசிய வேலைத்திட்டம் உள்வாங்கப்படுவது அவசியம்.ஆனால் இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் பெளத்த,சிங்கள கொள்கையில் பயணித்து, சிங்கள பெளத்த அடையாளத்தை வெளிப்படுத்தவே முனைகின்றனர். அதன் விளைவாக உள்நாட்டிலேயே எதிரிகளை உருவாக்கிக்கொண்டுள்ளன. இதற்கு தமிழர்கள் பிரதான இலக்காகியதுடன், இன்று முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொள்கையில் அரசு பயணிப்பதால் இந்த நாட்டின் தமிழர்கள், தென்னிந்திய தமிழர்களுடன் இணையும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் இலங்கையை இந்தியா ஆக்கிரமிக்கிறது என்ற நோக்கத்தில் பார்க்கும் மனநிலையும் உருவாக்கப்பட்டது. இவ்வாறான சூழலால் இந்தியாவையும் எதிரி என நினைக்கும் நிலை ஆரம்பத்திலேயே உருவாகிவிட்டது. ஆகவே இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் விதமான கொள்கைகளையே இலங்கை எப்போதும் வகுத்து வந்துள்ளது. ஒவ்வொரு அரசும் இதே கொள்கையில் தான் பயணிக்கின்றன.

1980களில் ஜெயவர்த்தன அரசின் காலத்தில், உலக பனிப்போர் காலத்தில் இந்தியா ரஷ்யாவுடன் நெருக்கமாக உறவை பின்பற்றிய சூழ்நிலையில், இலங்கை அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவை வெறுப்பேற்றியது.. இதன் விளைவாக இந்தியா தலையிட்டு இலங்கையை அமெரிக்காவுடன் நெருக்கமாக செயற்பட வேண்டாம் என வலியுறுத்தும் நிலைமை ஏற்பட்டது. பனிப்போர் முடிவுக்கு வந்த பின்னர் நிலைமைகள் மாறின.

தற்போது உலகை வல்லரசாக சீனா ஆக்கிரமித்து வருகின்ற நிலையில், இலங்கை மீண்டும் சிங்கள பெளத்த கொள்கையை கையில் எடுத்துக்கொண்டு தமது அதிகாரத்தை கையில் வைத்துக்கொள்ள சீனாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் சீனாவின் நலனுக்காக அவர்கள் நாட்டுக்குள் ஊடுருவவும் இடமளித்துள்ளனர். சீனாவும் இதனை உறுதிப்படுத்திக்கொண்டு இலங்கையில் அவர்களின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இது பூகோள அரசியலில் பாரிய நெருக்கடியை இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ளது.

வல்லரசுகளான இந்தியா, சீனா, அமெரிக்காவை நாட்டுக்குள் இடமளித்து இலங்கை நெருக்கடிக்குள் விழுந்துள்ளது. ஆனால் இந்த பூகோள அரசியலை இலங்கை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். அதற்கு முதலில் உள்நாட்டு கொள்கையில் மாற்றங்களை செய்தாக வேண்டும். அதன் மூலமாக நமது நலனுக்காக வல்லரசுகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் நாம் அவ்வாறான வெளிப்படை கண்ணோட்டத்தில் பார்க்க முயற்சிப்பதில்லை., சிங்கள பெளத்த பேரினவாதத்தையே ஆட்சியாளர்கள் கையில் தக்கவைத்துக்கொண்டுள்ளனர். இவர்கள் சிங்கள பெளத்த வாக்குகளில் ஆட்சிக்கு வந்ததாக கொண்டாடி வருகின்றனர். இது வெட்கப்பட வேண்டிய செயற்பாடு.

ஒரே நாடு, ஒரே சட்டம் எனக் கூறி நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு அடிப்படைவாதியான ஞானசார தேரரை நியமித்துள்ளீர்கள், பல செயலணிகளில் இராணுவத்தை உள்நுழைத்துள்ளீர்கள். இந்த கொள்கை, ஒருபோதும் நலன்களுக்கு கைகொடுக்காது.

அரசியல் நிலைப்பாட்டில் எதுவாக இருந்தாலும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறித்து தனிப்பட்ட மரியாதையை நாம் கொண்டுள்ளோம். சட்ட வல்லுனராக மிகப்பெரிய மதிப்பை அவர்மீது கொண்டுள்ளேன். ஆனால் இப்போது அவர் வெளிவிவகார அமைச்சராக இத்தாலியில் கூறிய சில விடயங்களை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அதே மாநாட்டில் அவ்வாறான கருத்தை முன்வைத்தார். அவரது கொள்கை அதுவாகவே இருக்கும் என்பதில் ஆச்சரியப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பீரிஸும் இந்த நாட்டில் பல்லின சமூகம், மத கலாசார அடையாளங்களை வெளிப்பாடு வேண்டிய அவசியம் இல்லையென கூறியது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. இது பீரிஸின் நிலைப்பாடாக இருக்க கூடாது. சிங்கள பெளத்த பேரினவாத ஆட்சியில் இருக்கின்றோம் என அவரும் கூறுவது மதிப்புக்குரிய விடயம் அல்ல.

இன்று நாம் பல்வேறு பிரச்சினைகளில் சறுக்கி வருகின்றோம்.. இவ்வாறான நிலையில் உங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாத வரையில், பூகோள அரசியலில் வெற்றி கொள்ள முடியாது. குறிப்பாக இந்த வலயத்தில் இந்தியாவின் பங்களிப்பு அவசியம். அவர்களும் இங்கு வேறு வல்லரசுகளின் ஆதிக்கத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரே நாடாக தாம் இருக்க வேண்டும் என்பதையே இந்தியா விரும்புகின்றது. இந்தியாவை சமாளிக்கலாம் என நீங்கள் நினைத்தால் அதற்கு ஏனைய வல்லரசுகளுக்கு சில பகுதிகளையும் இந்தியாவிற்கு சில பகுதிகளையும் வழங்கலாம் என நீங்கள் கருதினால் அது ஒருபோதும் வெற்றிபெறாது.

இதற்கு எமக்கு இருக்கும் ஒரே வழிமுறை, இலங்கையை பன்மைவாத நாடாக்குவதுடன் ,தேசிய கொள்கையை மாற்றிக்கொள்வதும், புதிய அரசியல் அமைப்பின் மூலமாக அதனை உறுதிப்படுத்துவதும் மட்டுமேயாகும். பிரிவுகளுக்கு இடமளிக்காது பூகோள அரசியலை கையாளுவதுமே சகலருக்கும் சாதகமாக அமையும் என்றார்.

 

https://www.ilakku.org/இந்தியாவின்-செல்வாக்கை-க/

Link to comment
Share on other sites

சிங்களம் மாறும் என்பது நடக்காது. அழுத்தம் இல்லாதவரை அவர்கள் மாற மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

4 minutes ago, nunavilan said:

சிங்களம் மாறும் என்பது நடக்காது. அழுத்தம் இல்லாதவரை அவர்கள் மாற மாட்டார்கள்.

இந்தியாவும் தமிழர் வியத்தில் ஒரு போதும் தன் துரோக அரசியலில் இருந்து மாறப் போவதில்லை. 

தமிழர்கள் சீனா உட்பட பிற வல்லரசுகளுடன் தம் உறவை வளர்த்தால் மட்டுமே குறைந்த பட்ச தீர்வாவது கிடைக்கும். கஜேந்திரகுமார் இந்தியாவுக்கு வெள்ளை அடிப்பதை விட்டுவிட்டு இப்படியான விடயங்களில் இனியாவது ஈடுபட்டால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

பூகோள அரசியலில் வெற்றி கொள்ள முடியாது. குறிப்பாக இந்த வலயத்தில் இந்தியாவின் பங்களிப்பு அவசியம்.

ஒரு மகாயுகம் = 432 x 104 மனித ஆண்டுகள்.
ஒரு கல்பம் அல்லது பிரம்மாவின் ஒரு பகல் = 432 x 107 மனித ஆண்டுகள்.
ஒரு பகலும் ஓரிரவும் சேர்ந்தது = 864 x 107 மனித ஆண்டுகள்
இப்படி 360 நாட்கள் கொண்ட பிரம்மனின் ஓர் ஆண்டு = 360 x 864 x107 மனித ஆண்டுகள்
இப்படி 50 பிரம்ம-ஆண்டுகள் = 50 x 360 x 864 x 107 .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இந்தியாவும் தமிழர் வியத்தில் ஒரு போதும் தன் துரோக அரசியலில் இருந்து மாறப் போவதில்லை. 

தமிழர்கள் சீனா உட்பட பிற வல்லரசுகளுடன் தம் உறவை வளர்த்தால் மட்டுமே குறைந்த பட்ச தீர்வாவது கிடைக்கும். கஜேந்திரகுமார் இந்தியாவுக்கு வெள்ளை அடிப்பதை விட்டுவிட்டு இப்படியான விடயங்களில் இனியாவது ஈடுபட்டால் நல்லது.

கடைசீல, நான் சொன்னதை நீங்களும் சரி என்று ஏற்றுக் கொள்கிறீர்கள்.

கீரைக் கடைக்கும் எதிர்கடை வேணும்.... கஜன், கஜேந்திரன் கோஸ்ட்டி.... வேற வழி ராஜதந்திரத்தினை முன் எடுக்க வேண்டும்.

பிரித்து மேய வேண்டும். இல்லாவிடில் வேலைக்காகாது.

Link to comment
Share on other sites

50 minutes ago, Nathamuni said:

கடைசீல, நான் சொன்னதை நீங்களும் சரி என்று ஏற்றுக் கொள்கிறீர்கள்.

 

கடைசியில் அல்ல. ஆரம்பத்தில் இருந்தே இந்தியா ஒரு போதும் தமிழ் மக்களின் நலன்களுக்கு உதவியாக இருக்காது என்று எழுதி வருகின்றேன். இது யாழில் எழுதக் தொடங்கிய காலத்தில் இருந்து அல்ல, இலங்கையில் சரிநிகர் பத்திரைகையில் எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து.

Link to comment
Share on other sites

3 hours ago, நிழலி said:

இந்தியாவும் தமிழர் வியத்தில் ஒரு போதும் தன் துரோக அரசியலில் இருந்து மாறப் போவதில்லை. 

தமிழர்கள் சீனா உட்பட பிற வல்லரசுகளுடன் தம் உறவை வளர்த்தால் மட்டுமே குறைந்த பட்ச தீர்வாவது கிடைக்கும். கஜேந்திரகுமார் இந்தியாவுக்கு வெள்ளை அடிப்பதை விட்டுவிட்டு இப்படியான விடயங்களில் இனியாவது ஈடுபட்டால் நல்லது.

அமெரிக்காவில்  சுமந்திரன், சாணக்கியன் பங்குபற்றிய பேச்சுக்களிலும் இந்தியாவே பெரும் பங்கு  வகித்தது போலுள்ளது.  தமிழர்களுக்கான தீர்பு நிராசை ஆகி விடுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

இந்தியாவும் தமிழர் வியத்தில் ஒரு போதும் தன் துரோக அரசியலில் இருந்து மாறப் போவதில்லை. 

தமிழர்கள் சீனா உட்பட பிற வல்லரசுகளுடன் தம் உறவை வளர்த்தால் மட்டுமே குறைந்த பட்ச தீர்வாவது கிடைக்கும். கஜேந்திரகுமார் இந்தியாவுக்கு வெள்ளை அடிப்பதை விட்டுவிட்டு இப்படியான விடயங்களில் இனியாவது ஈடுபட்டால் நல்லது.

தாயகத்தில் சீனாவுடனான ஒரு தொடர்பாடலை ஏற்படுத்தத் தயங்குவதற்குக் கரணியமாக இருப்பது தமிழ் அரசியல்வாதிகள் தமது பாதுகாப்பு மற்றும் சொத்துகள் தொடர்பான அச்ச உணர்வாக இருக்கலாம். ஏன் புலத்திலே மொழியாளுமை மிக்க இளையோர் குழாமொன்றை இனங்கண்டு இருவாரப் பயணமாகச் சீனா சென்று சீன மக்கள் கட்சியின் இளையோரை சந்தித்தல் மற்றும் பண்பாட்டை அறிதல் என்று ஒரு நிகழ்ச்சிநிரலை உருவாக்கி அனுப்புவோமாயின் இந்தியா போன்ற நாடுகள் சிந்திக்க வாய்ப்புள்ளது. ஆனால் யார் பூனைக்கு மணிகட்டுவது. அதற்குமுன் சீனாவின் தூதரங்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி அவற்றை ஊடகங்களில் செய்தியாக்கவேண்டும். 

Link to comment
Share on other sites

23 minutes ago, nochchi said:

 ஏன் புலத்திலே மொழியாளுமை மிக்க இளையோர் குழாமொன்றை இனங்கண்டு இருவாரப் பயணமாகச் சீனா சென்று சீன மக்கள் கட்சியின் இளையோரை சந்தித்தல் மற்றும் பண்பாட்டை அறிதல் என்று ஒரு நிகழ்ச்சிநிரலை உருவாக்கி அனுப்புவோமாயின் இந்தியா போன்ற நாடுகள் சிந்திக்க வாய்ப்புள்ளது. 

நல்லதொரு யோசனை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

கடைசியில் அல்ல. ஆரம்பத்தில் இருந்தே இந்தியா ஒரு போதும் தமிழ் மக்களின் நலன்களுக்கு உதவியாக இருக்காது என்று எழுதி வருகின்றேன். இது யாழில் எழுதக் தொடங்கிய காலத்தில் இருந்து அல்ல, இலங்கையில் சரிநிகர் பத்திரைகையில் எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து.

அப்போது..... சீனா களத்தில் இல்லையே ராசா .....

சீனாவுடன், கஜன், கஜேந்திரன் ..... தனி ஆவர்த்தனம் வாசிக்க வேண்டும் என்று இங்கே சொல்லி...... அதனால்.....பரிகாசம் செய்யப்பட்டேன்.....

அது தான்..... நீங்களும் அதை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றேன்.

இன்றும், இந்தியா.... இதயசுத்தியுடன் இல்லை என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும்.

******

இன்னும் ஒரு விசயமும் சொல்லி இருக்கிறேன்......

அதனையும் மீண்டும் சொல்கிறேன்....

சும்மாவாகினும்.... குட்டையை குழப்ப வேணும்..... கஜன்.... கஜேந்திரன் செய்யவேண்டிய இன்னும் ஒரு வேலை....

தமிழர்கள் சேர்ந்து, உங்களுக்கு ஜந்து பில்லியன் டொலர் தருகிறோம்..... உங்கள் கடனை அடைத்து நிம்மதியாக இருங்கள்.....

நாட்டை வெளியார் யாருக்கும் கொடுக்கத் தேவையில்லை.

நாட்டை தமிழருடன் பங்கு கொள்ளும் சட்டமூலத்தை நிறைவேற்றி, ஜநாவுக்கும் அறிவித்தது விடுங்கள்.

சிங்களவர் குழம்புவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கென்று ஒரு பலம் இருக்கும்வரை நான் ஏனையோர் தயவில் வாழ்வதைத் தடுக்க முடியாது. அந்தப் பலம் என்பது எமது ஒற்றுமையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆனால் இன்றுவரை தனித்தனியாகவே அரசியல் அரசியல் செய்துவருகிறோம். 

தலைவர் எம்மை ஒன்றிணைத்து வைத்திருந்த காலம் இனி வரப்போவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

எமக்கென்று ஒரு பலம் இருக்கும்வரை நான் ஏனையோர் தயவில் வாழ்வதைத் தடுக்க முடியாது. அந்தப் பலம் என்பது எமது ஒற்றுமையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆனால் இன்றுவரை தனித்தனியாகவே அரசியல் அரசியல் செய்துவருகிறோம். 

தலைவர் எம்மை ஒன்றிணைத்து வைத்திருந்த காலம் இனி வரப்போவதில்லை. 

புலம்பெயர் நாட்டிலிருந்து  ஒரு திறமையான தலைமையும் சிறந்த கட்டமைப்பும் தேவை. இதை வரலாறு தெரிந்தவர்களாலும் போர் நடந்த காலத்தில் வாழ்ந்தவர்களாலும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

புலம்பெயர் நாட்டிலிருந்து  ஒரு திறமையான தலைமையும் சிறந்த கட்டமைப்பும் தேவை. இதை வரலாறு தெரிந்தவர்களாலும் போர் நடந்த காலத்தில் வாழ்ந்தவர்களாலும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டிராதவராக  இருந்தால்... சிறப்பு....

காரணம்...  நடுநிலைமை பேண முடியும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

பரிகாசம் செய்யப்பட்டேன்.....

நீங்கள் பரிகாசம் செய்யபடவில்லை. சீனாவிடம் இருந்து எந்த சமிக்ஞையும் வராதவிடத்து எப்படி சீனாவிடம் பேச முடியும் என்றே கேட்கப்பட்டது.

இப்போதும் என்னை மதிரயில கேட்டாக, மாயவரத்தில் கேட்டாக, மன்னார்குடியில் கேட்டாக என்று கதைதான் வருகிறதே ஒழிய சீனா உண்மையிலேயே தமிழர் தரப்பை அணுகியதாக? என்பது தெளிவில்லை.

 

6 hours ago, nunavilan said:

அமெரிக்காவில்  சுமந்திரன், சாணக்கியன் பங்குபற்றிய பேச்சுக்களிலும் இந்தியாவே பெரும் பங்கு  வகித்தது போலுள்ளது.  தமிழர்களுக்கான தீர்பு நிராசை ஆகி விடுமா?

வா என்று அணைக்கவும் முடியாது….

போ என்று துரத்தவும் முடியாது….

எம்மை பொறுத்தவரை இந்தியா ஒரு நித்திய-கோவிட். 

அதன் எம்மீதான தாக்கத்தை manage பண்ணத்தான் முடியும், eradicate பண்ண முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இப்போதும் என்னை மதிரயில கேட்டாக, மாயவரத்தில் கேட்டாக, மன்னார்குடியில் கேட்டாக என்று கதைதான் வருகிறதே ஒழிய சீனா உண்மையிலேயே தமிழர் தரப்பை அணுகியதாக? என்பது தெளிவில்லை.

அவையள் கூப்பிட தேவையில்லை, சந்திக்கோணும் உங்களை எண்டு போய் நிக்கவேணும்.... பீகிங்கில குளிராமே எண்டாவது கேட்டுப்போட்டு வர வேண்டியது தான்...

மிச்சம்... அதுவா... நடக்கும்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

புலம்பெயர் நாட்டிலிருந்து  ஒரு திறமையான தலைமையும் சிறந்த கட்டமைப்பும் தேவை. இதை வரலாறு தெரிந்தவர்களாலும் போர் நடந்த காலத்தில் வாழ்ந்தவர்களாலும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

புலம் பெயர் தேசத்தில் இருந்து வரும் தலைமைக்கு எப்போதும் ஒரு democratic deficit இருக்கும். தேர்தல்கள் எல்லாம் நடத்திய நாடு கடந்த அரசு கூட தமிழர்களில் குரல் தரவல்ல தலைமையாக ஏற்கபடவில்லை. புலம் பெயர் தேசங்களில் கூட.

தலைமை எப்போதும் தாயகத்தில்தான் இருக்கவேண்டும். தலைவர் நாட்டை விட்டு வெளியேறாமைக்கு இதுவும் ஒரு காரணம்.

அங்கே இருப்பவர்களுக்குத்தான் எதை கேட்கலாம், எதை அடையலாம் என்ற தெளிவு இருக்கும். 

அடக்குமுறைக்கு மத்தியில் இருந்தாலும் அவர்களால் முன்செல்ல முடியும். அதற்கான சப்போர்டிங் ரோலை புலம்பெயர் சமூகம் முதலில் தாம் ஒற்றுமையாகி செய்தாலே போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

அவையள் கூப்பிட தேவையில்லை, சந்திக்கோணும் உங்களை எண்டு போய் நிக்கவேணும்.... பீகிங்கில குளிராமே எண்டாவது கேட்டுப்போட்டு வர வேண்டியது தான்...

மிச்சம்... அதுவா... நடக்கும்.😎


காலதாமதமின்றி நகர்த்தப்பட வேண்டிய விடயம்.

6 minutes ago, goshan_che said:

புலம் பெயர் தேசத்தில் இருந்து வரும் தலைமைக்கு எப்போதும் ஒரு democratic deficit இருக்கும். தேர்தல்கள் எல்லாம் நடத்திய நாடு கடந்த அரசு கூட தமிழர்களில் குரல் தரவல்ல தலைமையாக ஏற்கபடவில்லை. புலம் பெயர் தேசங்களில் கூட.

தலைமை எப்போதும் தாயகத்தில்தான் இருக்கவேண்டும். தலைவர் நாட்டை விட்டு வெளியேறாமைக்கு இதுவும் ஒரு காரணம்.

அங்கே இருப்பவர்களுக்குத்தான் எதை கேட்கலாம், எதை அடையலாம் என்ற தெளிவு இருக்கும். 

அடக்குமுறைக்கு மத்தியில் இருந்தாலும் அவர்களால் முன்செல்ல முடியும். அதற்கான சப்போர்டிங் ரோலை புலம்பெயர் சமூகம் முதலில் தாம் ஒற்றுமையாகி செய்தாலே போதும்.

தாயகத்தில் உள்ள தலைமையோடு இணைந்து சமாந்திரமாக நகரும் தலைமை புலத்திலும் தேவை. பல்வேறு வேலைத்திட்டங்களை ஒருங்கிணைக்க உதிரிகளாக நின்று யாருமின்றி ஆளாளாளுக்கு நகர்வது தவிர்த்து புலத்திலும் தாய்நிலத்திலுமாக ஒருங்கிணைந்து செல்வதும் அவசியமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

அவையள் கூப்பிட தேவையில்லை, சந்திக்கோணும் உங்களை எண்டு போய் நிக்கவேணும்.... பீகிங்கில குளிராமே எண்டாவது கேட்டுப்போட்டு வர வேண்டியது தான்...

மிச்சம்... அதுவா... நடக்கும்.😎

இந்தியா, சீனா போன்ற நாடுகள் உலகில் ஒவ்வொரு நாட்டிலும் தமது கொள்கை என்ன என்பதை வகுத்து அதன்படியே செயல்படுகிறன. 

இந்தியாவின் இலங்கை கொள்கை - அங்காலேயும் பாடி, இங்காலேயும் பாடுவது.

சீனாவின் இலங்கை கொள்கை (இன்று வரைக்கும்) - இலங்கை அரசுக்கு மட்டுமே ஆதரவு. இந்த நிலைப்பாட்டில் மாற்றம் வருவதாக கதை ஒன்று வருகிறது. அப்படி ஒரு மாற்றம் வந்தால் - அதற்கான சமிக்ஞை தெரிந்தால் அதை கஜன் அல்லது டயஸ்போரா பயன்படுத்த வேண்டும்.

ஆனால் அப்படி ஒரு மாற்றத்துக்கான சமிக்ஞையே இன்றி பெய்ஜிங்கில் போய் அதிகம் சாதிக்க முடியாது. லண்டனிலாவது அகமட் சந்தித்தார். அது கம்யூனிஸ்ட் நாடு - பியோனையும் சந்திக்க முடியுமோ தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

புலம் பெயர் தேசத்தில் இருந்து வரும் தலைமைக்கு எப்போதும் ஒரு democratic deficit இருக்கும். தேர்தல்கள் எல்லாம் நடத்திய நாடு கடந்த அரசு கூட தமிழர்களில் குரல் தரவல்ல தலைமையாக ஏற்கபடவில்லை. புலம் பெயர் தேசங்களில் கூட.

தலைமை எப்போதும் தாயகத்தில்தான் இருக்கவேண்டும். தலைவர் நாட்டை விட்டு வெளியேறாமைக்கு இதுவும் ஒரு காரணம்.

அங்கே இருப்பவர்களுக்குத்தான் எதை கேட்கலாம், எதை அடையலாம் என்ற தெளிவு இருக்கும். 

அடக்குமுறைக்கு மத்தியில் இருந்தாலும் அவர்களால் முன்செல்ல முடியும். அதற்கான சப்போர்டிங் ரோலை புலம்பெயர் சமூகம் முதலில் தாம் ஒற்றுமையாகி செய்தாலே போதும்.

அப்படி சொல்ல முடியாதே...

யூதர்கள் உதாரணம், நம் முன்னே உள்ளதே. அவர்களுக்கு புலத்தில் தலைமை இருக்கவில்லை. ஆனால் உணர்வு இருந்தது.

நாடு அடைவதில் முடிந்தது. ஜெருசலேம் என்னும் கிறித்தவ முக்கிய தலத்தினை, இஸ்லாமியர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய மேற்கின் தேவைக்கூடாக, யூத மதத்தை சேர்ந்தவர்கள் நாடு அடைந்த கதை.

ஆக, இன்றும் உண்டாகியுள்ள ஒரு மேற்கின் தேவைக்கூடாக, நாம் நமது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nochchi said:

தாயகத்தில் உள்ள தலைமையோடு இணைந்து சமாந்திரமாக நகரும் தலைமை புலத்திலும் தேவை. பல்வேறு வேலைத்திட்டங்களை ஒருங்கிணைக்க உதிரிகளாக நின்று யாருமின்றி ஆளாளாளுக்கு நகர்வது தவிர்த்து புலத்திலும் தாய்நிலத்திலுமாக ஒருங்கிணைந்து செல்வதும் அவசியமானது.

நிச்சயமாக. அதற்கு தாயகத்தில் குறைந்த பட்சம் பாராளுமன்ற அங்கதுவம் உள்ள கட்சிகள் யாவும் சேர்ந்து ஒரு minimum working plan ஐ உருவாக்க வேண்டும்.

அந்த plan அடிப்படையில் புலம்பெயர் அமைப்புகள் ஒன்றாகி தமக்கு ஒரு தலைமையை/கூட்டு தலைமையை தேருதல் வேண்டும்.

தாயக கட்சிகளின் குழுவும், புலம்பெயர் கூட்டு தலைமையும் சந்தித்து, ஒருமித்து, மேற்சொன்ன plan அடிப்படையில் செயல்பட வேண்டும்.

மேலே சொன்னபடி தாயகத்தில் இருப்பவர்கள், புலம் பெயர் அமைபுகளுடன் சேர்ந்து இயங்க முட்டுகட்டையாக இருக்கும் சில விடயங்களை புலம்பெயர் அமைப்புகள் தற்காலிகமாகவேனும் விட்டு கொடுக்க வேண்டும்.

அவை யாவை என எழுதினாலே என்னை இங்கே தோய்த்து தொங்க விடுவார்கள்.

ஒன்றில் நாம் தாயக அரசியல் தலைமைகளுடன் சேர்ந்து அடையகூடிய தீர்வுக்கு முயல வேண்டும். அல்லது தனியே புலம்பெயர் நாட்டில் இருந்து கொண்டு இலட்சிய தீர்வுக்காக குரல் (மட்டும்) கொடுத்தபடி இருக்க வேண்டும்.

 Don’t let the prefect be the enemy of the good என்ற வாக்கியம் எனது நிலைப்பாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நேற்று அல்ல, நான் இந்த தளத்தில் இணைந்த நாள் முதல் சொல்வது..... மீண்டும் சொல்கிறேன்.

ஆசியாவின் பொருளாதார பெருமையமான ஹொங்கொங்கினை, சீனாவிடம் இழந்த மேற்கு தேடும் புதிய தளம், தாய்வான், சிங்கப்பூர், தென் கொரியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா ஆகிய ஆசிய பொருளாதார புலி நாடுகளில் இல்லை.

மத்திய கிழக்கில், இஸ்ரேல் போல, ஆசியாவில் தனது கடவுசீட்டுக்களை கொண்ட, ஈழத்தமிழர் மீது நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரு பொருளாதார மையம் அமையக்கூடிய இடம், இலங்கைத்தீவில், தமிழர் பகுதி மட்டுமே.

அது நோக்கியே....சகலமும்.... இயல்பாக.... நடை போடும்... அதனை தடுக்கும் சக்தியை சிங்களம் இழக்கும்.

சீனாவின் உள்நுழைவு காரணமாக, இனி.... இது கொஞ்சம் வேகமெடுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

அப்படி சொல்ல முடியாதே...

யூதர்கள் உதாரணம், நம் முன்னே உள்ளதே. அவர்களுக்கு புலத்தில் தலைமை இருக்கவில்லை. ஆனால் உணர்வு இருந்தது.

நாடு அடைவதில் முடிந்தது. ஜெருசலேம் என்னும் கிறித்தவ முக்கிய தலத்தினை, இஸ்லாமியர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய மேற்கின் தேவைக்கூடாக, யூத மதத்தை சேர்ந்தவர்கள் நாடு அடைந்த கதை.

ஆக, இன்றும் உண்டாகியுள்ள ஒரு மேற்கின் தேவைக்கூடாக, நாம் நமது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

யூத வரலாற்றினதும், இஸ்ரேல் உருவாக்கத்தினதும் தவறான புரிதல் இது.

Aliyah என்பது சையோனிசத்தின் ஒரு அடிப்படை தத்துவம். அதாவது யூதர்கள் நாடு மீளல். 1882 இல் இருந்து பெருஎடுப்பிலான ஆலியா ஆரம்பமாகிவிட்டது. யூதர்கள் சிறுக சிறுக தமது பலத்தை நாட்டில் பெருக்கி கொண்டு வரும் போது 2ம் உலக யுத்தமும், பல்வோர் ஒப்பந்தமும் அவர்களுக்கு சாதகமாக அமைகிறது அல்லது அமையவைக்கிறார்கள்.

இஸ்ரேல் என்ற நாடு உருவாக பல காலம் முன்னரே அவர்களின் தலைமை British mandated Palestine இல்தான் இருந்தது.

பென் கூரின் போன்ற தலைவர்கள் எல்லாம் பலஸ்தீனியத்யில் இருந்தபடிதான் நாட்டுருவாக்கத்தை, கலகங்களை, போர்களை முன்னேடுத்தனர். பென்கூரின் 1906 இல் நாடு திரும்பி, 1948 வரை அங்கிருந்து போராடி, இஸ்ரேலின் முதல் பிரதமராகினார்.

அதற்கான backup தான் புலம்பெயர் நாட்டில் இருந்தது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

யூத வரலாற்றினதும், இஸ்ரேல் உருவாக்கத்தினதும் தவறான புரிதல் இது.

Aliyah என்பது சையோனிசத்தின் ஒரு அடிப்படை தத்துவம். அதாவது யூதர்கள் நாடு மீளல். 1882 இல் இருந்து பெருஎடுப்பிலான ஆலியா ஆரம்பமாகிவிட்டது. யூதர்கள் சிறுக சிறுக தமது பலத்தை நாட்டில் பெருக்கி கொண்டு வரும் போது 2ம் உலக யுத்தமும், பல்வோர் ஒப்பந்தமும் அவர்களுக்கு சாதகமாக அமைகிறது அல்லது அமையவைக்கிறார்கள்.

இஸ்ரேல் என்ற நாடு உருவாக பல காலம் முன்னரே அவர்களின் தலைமை British mandated Palestine இல்தான் இருந்தது.

பென் கூரின் போன்ற தலைவர்கள் எல்லாம் பலஸ்தீனியத்யில் இருந்தபடிதான் நாட்டுருவாக்கத்தை, கலகங்களை, போர்களை முன்னேடுத்தனர். பென்கூரின் 1906 இல் நாடு திரும்பி, 1948 வரை அங்கிருந்து போராடி, இஸ்ரேலின் முதல் பிரதமராகினார்.

அதற்கான backup தான் புலம்பெயர் நாட்டில் இருந்தது.

 

நீங்கள் தரும் தகவல் எனக்கு தெரியாது.

ஆனால்... நான் சொன்னது தவறு இல்லை. 

மத்திய காலத்தில் இருந்து, பாப்பரசரின் வேண்டுகோளின் பெயரில் ஜெருசலம் என்னும் புனித தலத்துக்காக ஐரோப்பிய கிறிஸ்தவர்களும், மத்திய கிழக்கு இஸ்லாமியர்களும் The Crusade என்னும், தொடர் மோதலில் ஈடு பட்டார்கள் என்பது வரலாறு.

ஆக, மேலை நாட்டு, கிறிஸ்தவர்களின் ஜெருசலம் என்னும் புனித தலத்துக்காக, இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில், இஸ்ரேலியர்களை மேற்கு ஆதரித்தது, ஆதரிக்கிறது, ஆதரிக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

நீங்கள் தரும் தகவல் எனக்கு தெரியாது.

ஆனால்... நான் சொன்னது தவறு இல்லை. 

மத்திய காலத்தில் இருந்து, பாப்பரசரின் வேண்டுகோளின் பெயரில் ஜெருசலம் என்னும் புனித தலத்துக்காக ஐரோப்பிய கிறிஸ்தவர்களும், மத்திய கிழக்கு இஸ்லாமியர்களும் The Crusade என்னும், தொடர் மோதலில் ஈடு பட்டார்கள் என்பது வரலாறு.

ஆக, மேலை நாட்டு, கிறிஸ்தவர்களின் ஜெருசலம் என்னும் புனித தலத்துக்காக, இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில், இஸ்ரேலியர்களை மேற்கு ஆதரித்தது, ஆதரிக்கிறது, ஆதரிக்கும்.  

மேற்கு இஸ்ரேலை ஆதரிக்க மத, புவியியல், வள காரணங்கள் இருப்பது உண்மை.

ஆனால் இதற்கு முந்திய பதிவில் நான் தலைமை எப்போதும் தாயகத்தில்தான் அமையவேண்டும் என எழுதியதை மேற்கோள்காட்டி, இல்லையே என இஸ்ரேல் உதாரணத்தை எழுதினீர்கள்.

அதற்குத்தான் சொல்கிறேன். இஸ்ரேலின் தலைமையும் வெளிநாட்டில் இருக்கவில்லை, நான் சொன்னது போல் தாயகத்தில்தான் இருந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.