Jump to content

மொழியால் ஒன்றுபட்ட தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் அரசியல் தளத்தில் ஒன்றுபடவேண்டும் : கனேடியவாழ் இலங்கை முஸ்லிம் மக்கள் மத்தியில் சுமந்திரன் உரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மொழியால் ஒன்றுபட்ட தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் அரசியல் தளத்தில் ஒன்றுபடவேண்டும் : கனேடியவாழ் இலங்கை முஸ்லிம் மக்கள் மத்தியில் சுமந்திரன் உரை

(நா.தனுஜா)

இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கின்ற, மொழியால் ஒன்றுபட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து செயலாற்றுவதன் ஊடாக மாத்திரமே பேரினவாதத்தின் அடக்குமுறைகளை வெற்றிகொள்ளமுடியும்.

தமிழ்பேசுபவர்கள் வாழ்கின்ற, 'தமிழ்' என்ற மொழி அடையாளத்தைக்கொண்ட பிரதேசத்தில்தான் நாங்கள் அதிகாரப்பகிர்வைக் கேட்கின்றோம். எனவே இவ்விடயத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைவதன் ஊடாக அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான வாய்ப்பு பன்மடங்காக உயரும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் இலங்கை முஸ்லிம் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசியக்ககூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோருக்கும் கனடாவில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் புதன்கிழமை கனடாவிலுள்ள அமானா நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்றது. 

அதில் கலந்துகொண்டு புலம்பெயர் இலங்கை முஸ்லிம்கள் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

எம்மால் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி, காத்தான்குடியை வந்தடைந்தபோது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் திரண்டுவந்து எம்மைச் சந்தித்தது. 

ஆனால் ஒரு அரசியல் தலைவர்கூட வரவில்லை. அதனைத்தொடர்ந்து ஓட்டமாவடி உள்ளடங்கலாக முஸ்லிம்கள் செறிந்துவாழும் அனைத்துப் பகுதிகளிலும் அதேபோன்ற வரவேற்பைப் பெற்றோம். கிண்ணியாவில் மாத்திரமே ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் துணிந்துவந்து எம்முடன் கலந்துரையாடினார்.

நாங்கள் இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுப்பதாகப் பாராட்டுகின்றார்கள். அந்தப் பாராட்டு எமக்கு மனநிறைவைத் தருகின்றது. அதேவேளை தமிழ்மக்களின் உரிமைகளுக்காக முஸ்லிம் குரல்கள் எப்போது எழும் என்று நாங்கள் ஏக்கத்தோடு காத்திருக்கின்றோம். 

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் ஒவ்வொரு கிராமங்களிலிருந்தும் எம்மை வந்து சந்தித்த முஸ்லிம் மக்கள் அவர்களது கிராமத்தின் எல்லையுடன் நின்றுவிட்டார்கள். 

அப்போது பேரணியில் மாத்திரமல்ல, அரசியல் பயணத்திலும் எம்மோடு இணைந்து கைகோர்த்து முழுத்தூரத்திற்கும் வரவேண்டும் என்று அவர்களிடம் கூறினேன். அப்போதுதான் எமது இரு சமூகங்களும் இலங்கையில் தலைநிமிர்ந்து வாழமுடியும்.

தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கென வௌ;வேறு அடையாளங்கள் இருக்கின்றன. முஸ்லிம் சமூகத்திற்கென தனித்த அடையாளங்கள் காணப்படுகின்றன என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். 

ஆனால் இலங்கையில் எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மையினராக இருக்கின்ற, மொழியினால் ஒன்றுபட்ட எமது இரு சமூகங்களும் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால் எமக்கு விடிவு கிடையாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

அதேவேளை குறித்த பேரணியில் உரையாற்றியபோது தமிழர்களை 'சிறுபான்மையினர்' என்று கூறவேண்டாம் என்றும் 'மக்கள்' என்று கூறுமாறும் நான் வலியுறுத்தியிருந்தேன். அது தற்போது பூதாகரமான பிரச்சினையாக மாறியிருக்கின்றது. 

கடந்த வாரம் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்திருந்தோம். அதுபற்றி அவர்கள் தமது டுவிட்டர் பக்கத்தில் செய்த பதிவில் 'இலங்கையின் சிறுபான்மையின தமிழர்களின் உரிமைகளை உறுதிசெய்வதற்காக அமெரிக்கா துணைநிற்கும்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். 

எனவே தமிழர்களை அமெரிக்கா 'சிறுபான்மையினர்' என்றே கூறுகின்றது என்றும் அதனை நாம் எதிர்க்கவில்லை என்றும் சிலர் விமர்சித்தார்கள்.

இந்நிலையில் மீண்டும் திங்கட்கிழமை அமெரிக்க இராஜாங்கத்திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்தோம். அதுகுறித்து அவர்கள் செய்திருக்கும் டுவி;ட்டர் பதிவில் 'சிறுபான்மையினர்' என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. அந்த சுருக்கமான டுவிட்டர் பதிவில் எமக்கு நம்பிக்கையளிக்கக்கூடிய பல்வேறு விடயங்கள் உள்ளடங்கியிருந்தாலும், அவையனைத்தையும் விட்டுவிட்டு வெளியக அழுத்தங்களின் விளைவாகவே தற்போது 'மக்கள்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது.

அவற்றைக் கருத்திலெடுக்காவிடினும், இவ்வாறானவர்கள் மத்தியிலேயே நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். மக்களுக்கு நன்மையளிக்கின்ற நியாயமானதும் நீதியானதுமான விடயங்களைச் செய்வதில் நாம் ஒருபோதும் பின்நிற்கமாட்டோம். 

அதேவேளை இலங்கைவாழ் சிங்களவர்கள் உள்ளடங்கலாக எந்தவொரு இனக்குழுமத்திற்கும் தீமையை ஏற்படுத்துகின்ற விடயங்களை நாங்கள் செய்யமாட்டோம். நாம் பெரிதாக எதனையும் கேட்கவில்லை. இலங்கையில் சமபிரஜைகளாக வாழ்வதற்கான உரிமையையே கோருகின்றோம்.

சமத்துவமான பிரஜைகளாக வாழ்வதென்பது 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கைக்கு அமைவானதல்ல. மாறாக 'இலங்கையர்கள்' என்ற பொதுவான அடையாளம் அனைவருக்கும் இருக்கலாம். ஆனால் அதற்குள்ளே இருக்கக்கூடிய தனித்துவமான, பிரத்யேகமான அடையாளங்கள் உறுதிசெய்யப்படவேண்டும். அதனூடாகவே இலங்கையர் என்ற அடையாளம் வலுவடையும்.

இவ்வாறானதொரு பின்னணியில் அடுத்த தேர்தலிலே இஸ்லாமிய சகோதரர்கள் எமக்கு வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகின்றேன். மக்கள் மத்தியிலே அவ்வாறானதொரு நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது. 

ஆயுதப்போராட்டத்திற்கு முன்னரான காலப்பகுதியில் தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான உறவு மிகநெருக்கமானதாகக் காணப்பட்டது. இருப்பினும் ஆயுதப்போராட்டத்தினால் இரு சமூகங்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டன. 

அப்போராட்டம் முடிவடைந்து தற்போது 12 வருடங்கள் கடந்துள்ளன. தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவை முன்னரைப்போன்று மாற்றியமைப்பதற்கு எமக்கு பன்னிரு வருடங்கள் தேவையா? மொழியால் ஒன்றுபடுவதென்பது மிகமுக்கியமானதாகும். மதம் சார்ந்த அடையாளங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டவையாகும். 

ஆனால் மொழிதான் எம்மை ஒன்றுபடுத்தியிருக்கின்றது. தமிழ்பேசுபவர்கள் வாழ்கின்ற, 'தமிழ்' என்ற அடையாளத்தைக்கொண்ட பிரதேசத்தில்தான் நாங்கள் அதிகாரப்பகிர்வைக் கேட்கின்றோம். எனவே தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து இதனை முன்னெடுக்கும் பட்சத்தில், அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான வாய்ப்பு பன்மடங்காக உயரும்.

இலங்கையிலே நாங்கள் ஒன்றாக வாழ்வதற்கான சவாலாக இருக்கின்ற ஒரேயொரு விடயம் பேரினவாதமாகும். ஆகவே அதனை எதிர்கொள்வதற்கு நாங்கள் நாளாந்தம் வசிக்கின்ற பகுதியிலே எமக்கென தீர்மானங்களை மேற்கொள்கின்ற, நிர்வகிக்கின்ற அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும். 

அவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் உச்சபட்சமானவையாக இருக்கவேணடும் என்ற இலக்கை முன்னிறுத்தி தமிழ், முஸ்லிம் சமூகங்கள் செயற்படுமானால், அது வெகுவிரைவில் எம்மை வந்தடையும். 

இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் மிகமோசமான அடக்குமுறையின் விளைவாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலேயே உருவாகியிருக்கக்கூடிய ஒற்றுமை அரசியல் தளத்தை நோக்கி விரிவடையவேண்டும் என்று வலியுறுத்தினார். 

 

https://www.virakesari.lk/article/117916

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

இந்நிலையில் மீண்டும் திங்கட்கிழமை அமெரிக்க இராஜாங்கத்திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்தோம். அதுகுறித்து அவர்கள் செய்திருக்கும் டுவி;ட்டர் பதிவில் 'சிறுபான்மையினர்' என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

மனித உரிமைக்கும் சமாதானத்துக்குமான அமைப்புகள், சிறீலங்காவில் உள்ள தமிழர்களை சிறுபான்மைக் குழு (Minority Groups) என்றே குப்பிட்டுள்ளதை, இந்த வீடியோவில் 4:44 வது நிமிடத்திலும், 4:56 வது நிமிடத்திலும் காணலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் கனடாவில போய் நின்று கத்திப்பிரயோசனம் இல்லை காரணம் கடந்த காலத்தை இவர் மறந்திட்டார் இல்லையேல் சம்பந்தரோட சேர்ந்து அவருக்கு இருந்த அறளை நோய் தொற்றுவியாதியாகி இவருக்கும் வந்திட்டுது.

கிழக்கில் மாகாணசபைத் தேர்தலில் ராவூப் கக்கீம் தலைமையிலான முஸ்லீம்காங்கிரஸ் கூடிய ஆசனங்களையும் தமிழர்தரப்பு அடுத்ததாகவு, சிங்களத்தரப்பு அதற்கு அடுத்ததாகவும் வந்தபோது சம்பந்தர் கக்கீமிடம் கேட்டுக்கொண்டார் நாம் கூட்டாகச்சேர்ந்து ஆட்சி அமைப்போம் முதல் அமைச்சர் பதவியையும் முக்கிய அமைச்சுக்களையும் நீங்கள் வைத்துக்கொள்ளுங்கோ என ஆனால் கக்கீம் என்ன செய்தார் எண்டால் மகிந்தவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துவிட்டார் 

இப்படியான தொப்பி பிரட்டியளிடம் சுமந்திரன் அரசியல் செய்கிறார்.

சிங்களம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மேற்குலகத்துக்கும் தண்ணிகாட்டுவதுபோல் 

இலங்கை முஸ்லீம்களும் சுங்களத்துக்கும் தமிழருக்க்கும் தண்ணிகாட்டி தங்கட காரியத்தைச் சரிவரக்கொண்டுபோவினம் இப்போது முஸ்லீம்களுக்கு சிங்களவனை மடக்க தமிழர் தரப்புத்தேவைப்படுகுது சுமந்திரன் வழக்கமான தனது தரகு வேலையை ஆரம்பித்துவிட்டார் அப்பதானே எதிர்வரும் சுதந்திர தினத் தேனீர் விருந்தில் கலந்துகொள்ள மகிந்ததரப்பு அழைப்புவிடுக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Elugnajiru said:

இப்படியான தொப்பி பிரட்டியளிடம் சுமந்திரன் அரசியல் செய்கிறார்

குணம் குணத்தோடுதான் சேரும். இவர் கெஞ்சினால் அவர்கள் மிஞ்சுவார்கள். போனால் போங்கள் என்று விட்டுப் பாருங்கள் தானாக வருவார்கள். நாங்களே சிங்களத்துக்கு தோள் கொடுத்து போரை வெற்றியடையச் செய்தோம் என்று பங்களிப்பார்கள். நாங்கள் தனிநாடு கேட்டால் தங்களுக்கும் வேண்டும் பங்கு என்று வரிஞ்சு கட்டிக்கொண்டு வருவார்கள். புலம் பெயர் நாட்டில் தாங்கள் தமிழரின் உரிமைக்காக போராடுகிறோம், உழைக்கிறோம் என்று கூவுவார்கள். உள்நாட்டிலோ ஏக்கய என்பார்கள். இரண்டு  கணக்கும் கூட்டிப்பார்த்தால் சரியாத்தான் வருது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எதிர்ப்பு வெளியிட்ட பின்தான் சிறு  குழுக்கள் தமிழ் மக்களாக மாறியிருக்கிறது என்பது ஐயாவுக்கு தெரியேல்லை. அதில் மாற்றம் தேவை என ஏற்றுக்கொண்டபடியாற்தான் மாற்றியிருக்கிறார்கள். இப்படித்தான் ஏக்கய என்கிற சொல்லையும் மாற்றி விளக்கம் கொடுத்துக்கொண்டு திரிந்தவர். அது சரி தங்களுக்கு காத்தான் குடியில் இரண்டு மாலை விழுந்ததாம் அதேன் அப்படி நடந்ததென்றால்! தாங்கள்தானாம் முஸ்லீம்களுக்காக குரல் கொடுக்கிறார்களாம். இருக்காதா? அவர்களுக்கு கதைப்பதற்கு அவர்களால் தெரிவு செய்யபட்ட தலைவர்கள் இருக்கிறார்கள்,  முஸ்லீம் நாடுகள் இருக்கின்றன. ஆனால் எங்கள் பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டு, வசதி வாய்ப்புகளை அனுபவித்துக்கொண்டு, எங்களை நடுவீதியில் அலையவிட்டு, கண்ட ஓநாய்களுக்கு பின்னால் ஓடவிட்டு சென்றால் இரண்டு மாலை என்ன ஆயிரம் மாலைகள் விழும். அதுசரி உங்களுக்கு முஸ்லீம்களோ அல்லது சிங்களவரோ வாக்கு அளிப்பதில்லையே! அல்லது உங்கள் கட்சியின் பெயரில் ஒரு சிங்களவரோ, முஸ்லீமோ தேர்தலில் நின்று வென்று தமிழ் மக்களுக்காக உழைப்பார்களா? அல்லது தங்கள் கட்சியிலே இருந்து கொண்டு ஒடுக்கப்பட்ட எமக்காக குரல் கொடுப்பார்களா?  உங்கள் பேச்சு கைத்தட்டலுக்கு நன்றாக இருக்கும், நடைமுறைக்கு  சாத்தியமில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2021 at 17:20, கிருபன் said:

மொழியால் ஒன்றுபட்ட தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் அரசியல் தளத்தில் ஒன்றுபடவேண்டும் : கனேடியவாழ் இலங்கை முஸ்லிம் மக்கள் மத்தியில் சுமந்திரன் உரை

கிழக்கு மாதிரியே வடக்கிற்கு முதல்வர் வேட்பாளராக முசுலீம் சமூகத்தை சார்ந்த ஒருவரை தெரிவு செய்யும் பட்சத்தில் ஒன்றுபட சான்ஸ் உள்ளது அதுவும் குறுகிய காலத்திற்கு..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி தெரிஞ்சுதான் இப்படி கூனி குறுகிப்போய் உள்ளோம். இதற்கு மேல் முதுகும் வளையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2021 at 12:50, கிருபன் said:

ஆனால் மொழிதான் எம்மை ஒன்றுபடுத்தியிருக்கின்றது. தமிழ்பேசுபவர்கள் வாழ்கின்ற, 'தமிழ்' என்ற அடையாளத்தைக்கொண்ட பிரதேசத்தில்தான் நாங்கள் அதிகாரப்பகிர்வைக் கேட்கின்றோம். எனவே தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து இதனை முன்னெடுக்கும் பட்சத்தில், அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான வாய்ப்பு பன்மடங்காக உயரும்.

முதலில் இலங்கை முழுவதும் உள்ள தமிழர்கள் ஒரு அணியில் சேர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு பலமுள்ள. அணியாக மாற முயற்சி செய்யுங்கள் தனியா வடக்கு கிழக்கு  மட்டும் தேர்தலில் போட்டி இடமால். நாடுமுழுவதும் போட்டியிடவும். மலையகத்தமிழர்...அமைப்புகளையுமிணைந்து...தமிழர்களிடம் ஆயிரம். பிரிவுகளை வைத்துக்கொண்டு முஸ்லிம்களை இணை என்றால்  எப்படி இணைவார்கள். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

முதலில் இலங்கை முழுவதும் உள்ள தமிழர்கள் ஒரு அணியில் சேர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு பலமுள்ள. அணியாக மாற முயற்சி செய்யுங்கள் தனியா வடக்கு கிழக்கு  மட்டும் தேர்தலில் போட்டி இடமால். நாடுமுழுவதும் போட்டியிடவும். மலையகத்தமிழர்...அமைப்புகளையுமிணைந்து...தமிழர்களிடம் ஆயிரம். பிரிவுகளை வைத்துக்கொண்டு முஸ்லிம்களை இணை என்றால்  எப்படி இணைவார்கள். ?

இல்லாத நாய் வாலை நிமிர்த்துவது எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2021 at 01:07, Elugnajiru said:

சுமந்திரன் கனடாவில போய் நின்று கத்திப்பிரயோசனம் இல்லை காரணம் கடந்த காலத்தை இவர் மறந்திட்டார் இல்லையேல் சம்பந்தரோட சேர்ந்து அவருக்கு இருந்த அறளை நோய் தொற்றுவியாதியாகி இவருக்கும் வந்திட்டுது.

கிழக்கில் மாகாணசபைத் தேர்தலில் ராவூப் கக்கீம் தலைமையிலான முஸ்லீம்காங்கிரஸ் கூடிய ஆசனங்களையும் தமிழர்தரப்பு அடுத்ததாகவு, சிங்களத்தரப்பு அதற்கு அடுத்ததாகவும் வந்தபோது சம்பந்தர் கக்கீமிடம் கேட்டுக்கொண்டார் நாம் கூட்டாகச்சேர்ந்து ஆட்சி அமைப்போம் முதல் அமைச்சர் பதவியையும் முக்கிய அமைச்சுக்களையும் நீங்கள் வைத்துக்கொள்ளுங்கோ என ஆனால் கக்கீம் என்ன செய்தார் எண்டால் மகிந்தவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துவிட்டார் 

இப்படியான தொப்பி பிரட்டியளிடம் சுமந்திரன் அரசியல் செய்கிறார்.

சிங்களம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மேற்குலகத்துக்கும் தண்ணிகாட்டுவதுபோல் 

இலங்கை முஸ்லீம்களும் சுங்களத்துக்கும் தமிழருக்க்கும் தண்ணிகாட்டி தங்கட காரியத்தைச் சரிவரக்கொண்டுபோவினம் இப்போது முஸ்லீம்களுக்கு சிங்களவனை மடக்க தமிழர் தரப்புத்தேவைப்படுகுது சுமந்திரன் வழக்கமான தனது தரகு வேலையை ஆரம்பித்துவிட்டார் அப்பதானே எதிர்வரும் சுதந்திர தினத் தேனீர் விருந்தில் கலந்துகொள்ள மகிந்ததரப்பு அழைப்புவிடுக்கும்.

 

தமிழ்தேசியக் கூட்டமைப்பே கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தது. அப்படியிருந்தும் ஆட்சியமைக்க அறுதிப் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் முஸ்லிம் காங்கிரசுக்கு முதலi;ச்சர் பதவியை விட்டுத்தருவதாக கேட்டும் முஸ்லிம் ;காங்கிரஸ் மகிந்தவின் கட்சியோடு சேர்ந்து ஆட்சி அமைத்துக் கொண்டது.அதே நேரம் பிள்ளையான் ஆதரவு தருவதாக கேட்டும் சம்பந்தர் இணங்கவில்லை. முஸ்லிம் காங்கிரசை முதலமைச்சர் பதவியை விட்டுத்தருவதாகக் கூறி ஆதரவு கேட்டவர்கள் புpள்ளையாhனின் ஆதரவை ஏன் மநறுத்தார்கள். அதுவும் கிழக்கு மாகாணம் வடக்கைப் போல அல்ல சில விட்டுக் கொடுப்புகளை செய்து ஆட்சி அமைத்திருந்தால் திட்டமிட்ட சிங்க முஸ்லிம் குடியேற்றங்களையும் தடுத்திருக்கலாம். அதே சேரம் வடக்கில் பல உள்ளூராட்சி சபைகளை டக்ளசுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைத்த கூத்தும் நடந்திருக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.